Vanga blogalam in Facebook

22 September 2011

குறும்பட கார்னர் - பண்ணையாரும் பத்மினியும்


                  
       சிலு சிலுவென வீசும் தென்றல் , மழைக்கு முன் வரும் தூறல் ,  குழந்தையின் சிறு புன்னகை , மனக்க மனக்க குடிக்கும் பில்டர் காபி இவையெல்லாம் தரும் சுகத்தையும் , சிலிர்ப்பையும் குறும்படத்திலும் காண முடியும் ... அப்படிப்பட்ட  குறும்படங்களை பகிர்ந்து கொண்டால் என்ன என்று எனக்கு தோன்றிய எண்ணத்தின் விளைவே இந்த " குறும்பட கார்னர்"...

      என்ன தான் பணம் சம்பாதித்தாலும் ,  ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்  வகை வகையாய் தின்றாலும் அம்மா கைகளில் குவித்து குடுக்கும்
ஒரு பிடி சோறுக்கு ஈடாகுமா ? ...
   இந்த கேள்விக்குள்  புதியது வந்தாலும் பூர்வீகத்தை மறக்காத எத்தனையோ விஷயங்கள் உள்ளடக்கம் ...  இந்த மெசேஜை நேரடியாக சொல்லாமல் நகைச்சுவையாக சொல்லியிருக்கும் குறும்படமே " பண்ணையாரும் பத்மினியும் "

   பாரதிராஜாவிடம் பல  படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த "தேனீ" முருகன் பண்ணையாராகவும் , பாலா சரவணன் கார் ஒட்டுபவராகவும் நடித்திருக்கிறார்கள்... கிராமத்து மக்களின் வெள்ளந்தி மனதையும் , அவர்கள் எதன்  மீதும் காட்டும் அன்பையும் பிரதிபலிக்கும் குறும்படம்...

    தலைப்பை பார்த்தவுடன் வேறு மாதிரி நினைப்பவர்கள் பார்க்கும் போது விழுந்து , விழுந்து சிரிப்பதே இந்த குறும்படத்தின் முக்கிய சாராம்சம் ...

இயல்பான நடிப்பு , நேர்த்தியான ஒளிப்பதிவு , அருமையான இசை
இதன் மற்ற சிறப்பம்சங்கள்  ...  

இயக்கம் : எஸ் . யு .  அருண் குமார்



4 comments:

  1. Really a good one

    ReplyDelete
  2. Anonymous said...
    Really a good one

    Thanks ...

    ReplyDelete
  3. very nice.i want to know more about the director.standard film............girija raghavan

    ReplyDelete
  4. girijaraghavan said...
    very nice.i want to know more about the director.standard film............girija raghavan

    Thanks...Let you know the details...Awaiting for your Ladies Special Diwali malar ...

    ReplyDelete