" எங்கேயும் எப்போதும் " ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான FOX ஸ்டூடியோவுடன் ஏ . ஆர் . முருகதாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ... ஜெய் , அஞ்சலி , சரவ் , அனன்யா நடிப்பில் புது முக இயக்குனர் சரவணன் இயக்கியிருக்கிறார் ... எங்கேயோ எப்போதோ ( சமீப காலங்களில் அடிக்கடி ) கேள்விப்படும் பேருந்து விபத்தினை மையமாக வைத்து , இரண்டு காதல் ஜோடிகளின் கதைகளையும் இணைத்து ரசிக்கும்படியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ...
ஆம்னி பஸ்சும் , அரசு பஸ்சும் மோதிக்கொள்ளும் முதல் காட்சியே நம்மை உறைய வைக்கிறது ... பின்னர் பிளாஷ்பாக்கில் விறு விறுவென பயணப்படுகிறது படம் ... பிளாஷ்பாக் , கரண்ட் என மாறி மாறி வரும் சிக்கலான திரைக்கதையை சுவாரசியமாக கையாண்டிருக்கிறார்கள் ...
திருச்சியில் இருந்து இன்டர்வியு அட்டென்ட் பண்ண வரும் அப்பாவி பெண்ணாக அனன்யாவும் , சாப்ட்வேர் இஞ்சினியராக சரவும் அழகாக பொருந்துகிறார்கள் ... ஆட்டோவில் போவோம் என்றவுடன் அக்கா ஷேர் ஆட்டோவுல தான் போக சொன்னாங்க எனும் போதும் , நகரத்து பெண்களை பார்த்தவுடன் வயிற்றை எக்கிக் கொண்டு நடக்கும் இடத்திலும் அனன்யா அசத்துகிறார் ....
இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கும் பெண் அக்காவுடனே வந்திருக்கலாமே என்ற லாஜிக் இடையிடையே வந்தாலும் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கலாம் ... நகரத்து பையனை கண் முன் கொண்டு வரும் சரவ் சென்னையில் இருப்பவர்களுக்கு வக்காலத்து வாங்கும் போது கைதட்டல் பெறுகிறார் ...
சரவ் - அனன்யா ஜோடியை விட நம்மை அதிகம் ஈர்ப்பது ஜெய் - அஞ்சலி ஜோடியே ... அதிலும் குறிப்பாக அஞ்சலி நடிப்பு பசிக்கு நல்ல தீனி ... அவர் கேரக்டர் அசாதாரணமாக இருந்தாலும் அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது ... காதலை சொல்லும் ஜெய்யை சுத்த விடுவதும் , அவர் சம்பள பணம் முழுவதையும் செலவு செய்வதும் , திருமண பதிவு பத்திரமா என கேட்கும் ஜெயிடம் உடல் தான படிவத்தில் சைன் வாங்குவதும் என அஞ்சலி கைதட்டல் வாங்கும் இடங்கள் நிறைய ... அஞ்சலிக்கு அடங்கிப் போவபராக வரும் ஜெய் அட போட வைக்கிறார் ... ஆனால் படம் முழுவதும் அதையே செய்து வெறுப்பேற்றுகிறார் ...
முக்கிய கதாபாத்திரங்களை தவிர பேருந்தில் பயணம் செய்யும் இளஞ்சோடிகள் , தூங்கி வழிபவர் , ஐந்து வருடங்கள் வெளிநாட்டில் இருந்து விட்டு வீடு திரும்பும் நபர் , பயணத்திலேயே காதல் வயப்படும் இருவர் ( அந்த பெண் அழகாக இருக்கிறாள் ) என்று பிரயாணிகளையும் வைத்து திரைக்கதையை சுவாரசியமாக்கியது இயக்குனரின் சாமர்த்தியம் ..
" கோவிந்தா " பாடல் முனு முணுக்க வைக்கிறது ... மற்ற பாடல்களும் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் இருக்கின்றன ... குட் வொர்க் சத்யா ... விபத்து காட்சிகளில் தத்ரூபமான கேமரா கோணங்கள் அருமை ... " ச்சே இந்த கதைய யோசிக்காம விட்டுட்டமே " என சக இயக்குனர்களை நினைக்க வைக்கும்படியான கதையை தேர்வு செய்ததற்கே இயக்குனரையும் , தயாரிப்பாளர்களையும் பாராட்டலாம் ...
இருப்பினும் முதலிலேயே விபத்தைக் காட்டி விடுவதால் முடிவை ஓரளவு யூகிக்க முடிகிறது ... சர்வா - அனன்யா ஜோடி ஒரு நாள் சந்திப்பிலேயே காதல் வயப்படுவதும் , தொலை தொடர்பு சாதனங்கள் பரவிக் கிடக்கும் நிலையில் செல் பொன் நம்பரை கூட பரிமாறிக் கொள்ளாத லாஜிக்கும் , இவர்களை தவிர ஜெய் - அஞ்சலி ஜோடியின் தனி ட்ராக்கும் , இந்த ஜோடி ஒன்று சேர வேண்டுமென்ற ஆர்வத்தையோ , தவிப்பையோ நம்முள் ஏற்படுத்தவில்லை ...
அதுபோல ஒரு காட்சியில் இளம் ஜோடியாக வரும் மனைவி விபத்தில் சிக்கிய கணவனை மடியில் போட்டுக் கொண்டு அழும் காட்சியில் துளி கூட அடியில்லாமல் முழு மேக் அப்பில் இருக்கிறார் ... கன்டினியுட்டி பார்த்த உதவி இயக்குனர் யாரோ ? ...
சின்ன சின்ன குறைகள் இருப்பினும் படம் பார்க்கும் போது அவை பெரிதாக உருத்தாததும் , படம் முடிந்து வெளியேறும் போது நமது அடுத்த பேருந்து பயணத்தை பற்றிய பயத்தை நம்முள் ஏற்படுத்தியதும் இயக்குனரின் வெற்றி ....
ஸ்கோர் கார்ட் : 46
திருச்சியில் இருந்து இன்டர்வியு அட்டென்ட் பண்ண வரும் அப்பாவி பெண்ணாக அனன்யாவும் , சாப்ட்வேர் இஞ்சினியராக சரவும் அழகாக பொருந்துகிறார்கள் ... ஆட்டோவில் போவோம் என்றவுடன் அக்கா ஷேர் ஆட்டோவுல தான் போக சொன்னாங்க எனும் போதும் , நகரத்து பெண்களை பார்த்தவுடன் வயிற்றை எக்கிக் கொண்டு நடக்கும் இடத்திலும் அனன்யா அசத்துகிறார் ....
இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கும் பெண் அக்காவுடனே வந்திருக்கலாமே என்ற லாஜிக் இடையிடையே வந்தாலும் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கலாம் ... நகரத்து பையனை கண் முன் கொண்டு வரும் சரவ் சென்னையில் இருப்பவர்களுக்கு வக்காலத்து வாங்கும் போது கைதட்டல் பெறுகிறார் ...
சரவ் - அனன்யா ஜோடியை விட நம்மை அதிகம் ஈர்ப்பது ஜெய் - அஞ்சலி ஜோடியே ... அதிலும் குறிப்பாக அஞ்சலி நடிப்பு பசிக்கு நல்ல தீனி ... அவர் கேரக்டர் அசாதாரணமாக இருந்தாலும் அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது ... காதலை சொல்லும் ஜெய்யை சுத்த விடுவதும் , அவர் சம்பள பணம் முழுவதையும் செலவு செய்வதும் , திருமண பதிவு பத்திரமா என கேட்கும் ஜெயிடம் உடல் தான படிவத்தில் சைன் வாங்குவதும் என அஞ்சலி கைதட்டல் வாங்கும் இடங்கள் நிறைய ... அஞ்சலிக்கு அடங்கிப் போவபராக வரும் ஜெய் அட போட வைக்கிறார் ... ஆனால் படம் முழுவதும் அதையே செய்து வெறுப்பேற்றுகிறார் ...
முக்கிய கதாபாத்திரங்களை தவிர பேருந்தில் பயணம் செய்யும் இளஞ்சோடிகள் , தூங்கி வழிபவர் , ஐந்து வருடங்கள் வெளிநாட்டில் இருந்து விட்டு வீடு திரும்பும் நபர் , பயணத்திலேயே காதல் வயப்படும் இருவர் ( அந்த பெண் அழகாக இருக்கிறாள் ) என்று பிரயாணிகளையும் வைத்து திரைக்கதையை சுவாரசியமாக்கியது இயக்குனரின் சாமர்த்தியம் ..
" கோவிந்தா " பாடல் முனு முணுக்க வைக்கிறது ... மற்ற பாடல்களும் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் இருக்கின்றன ... குட் வொர்க் சத்யா ... விபத்து காட்சிகளில் தத்ரூபமான கேமரா கோணங்கள் அருமை ... " ச்சே இந்த கதைய யோசிக்காம விட்டுட்டமே " என சக இயக்குனர்களை நினைக்க வைக்கும்படியான கதையை தேர்வு செய்ததற்கே இயக்குனரையும் , தயாரிப்பாளர்களையும் பாராட்டலாம் ...
இருப்பினும் முதலிலேயே விபத்தைக் காட்டி விடுவதால் முடிவை ஓரளவு யூகிக்க முடிகிறது ... சர்வா - அனன்யா ஜோடி ஒரு நாள் சந்திப்பிலேயே காதல் வயப்படுவதும் , தொலை தொடர்பு சாதனங்கள் பரவிக் கிடக்கும் நிலையில் செல் பொன் நம்பரை கூட பரிமாறிக் கொள்ளாத லாஜிக்கும் , இவர்களை தவிர ஜெய் - அஞ்சலி ஜோடியின் தனி ட்ராக்கும் , இந்த ஜோடி ஒன்று சேர வேண்டுமென்ற ஆர்வத்தையோ , தவிப்பையோ நம்முள் ஏற்படுத்தவில்லை ...
அதுபோல ஒரு காட்சியில் இளம் ஜோடியாக வரும் மனைவி விபத்தில் சிக்கிய கணவனை மடியில் போட்டுக் கொண்டு அழும் காட்சியில் துளி கூட அடியில்லாமல் முழு மேக் அப்பில் இருக்கிறார் ... கன்டினியுட்டி பார்த்த உதவி இயக்குனர் யாரோ ? ...
சின்ன சின்ன குறைகள் இருப்பினும் படம் பார்க்கும் போது அவை பெரிதாக உருத்தாததும் , படம் முடிந்து வெளியேறும் போது நமது அடுத்த பேருந்து பயணத்தை பற்றிய பயத்தை நம்முள் ஏற்படுத்தியதும் இயக்குனரின் வெற்றி ....
ஸ்கோர் கார்ட் : 46



