Showing posts with label VIJAY. Show all posts
Showing posts with label VIJAY. Show all posts

20 October 2017

மெர்சல் - MERSAL - மொஃபசல் ...


ளைய தளபதியிலிருந்து தளபதியாய் விஜய்யும் , மௌனராகம் - ராஜாராணி, சத்ரியன் - தெறி , பல ரெண்டு , மூணு ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் - மெர்சல் என்று அட்லீயும் ப்ரோமோஷன் ஆகியிருக்கும் படம் மெர்சல் . சுமாரான படத்தில் வரும் மொக்கையான ஜி.எஸ்.டி பற்றிய வசனத்தை பற்றி விவாதித்தே தமிழக பா.ஜ.க படத்தை ஹிட் ஆக்கி விடும் போல . ஓகே நாம படத்துக்கு வருவோம் !!!

மருத்துவத்துறை யில் உள்ள சில நபர்கள் கடத்தப்படுகிறார்கள் . அதை துப்பு துலக்கும் போலீஸ் டாக்டர் மாறனை ( விஜய் ) கைது செய்கிறது . ஆனால் அந்த நபர்களை கடத்தி கொலை செய்தது மாறன் அல்ல மேஜிசியன் வெற்றி
( விஜய் ) என தெரிய வர அது ஏன் , எதற்கு , எப்படி என்பதை ஒரு நீ...ண்ட ஃபிளாஷ்பேக்கோடும்  இது வரை பார்த்த பல படங்களின் மலரும் நினைவுகளோடும்  சொல்வதே மெர்சல் ...

மூன்று என்ன முப்பது கெட்டப் போட்டாலும் எந்த மாற்றத்துக்கும் தன்னை உட்படுத்தாத விஜய்  இதில் அப்பா வேஷத்தில்  மீசையை முறுக்கி மட்டும் வித்தியாசம் காட்டுகிறார் . அதே துள்ளல் , அதே டேன்ஸ் , அதே துறுதுறு விஜய் கண்ணுக்கு குளிர்ச்சி . ஆக்ஸனோடு அழுகை காட்சிகளிலும் கவர்கிறார் . அப்பா எபிசோட் நீளமாக இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு விருந்து . தலைவா தர்மசங்கடத்திற்கு பின் மீண்டும் விஜய்க்கு அரசியல் ஆசை தலை தூக்கியிருக்கிறது . எத்தனை நாள் தான் அணிலாகவே இருக்க முடியும் ???


சமந்தா , காஜல் அகர்வால் படத்துக்கு சுத்த வேஸ்ட் . என்னடா தம்பி என்று விஜயை விளிக்கும் இடத்தில் சமந்தா சமத்து . வடிவேல் வாயை குழட்டி காமெடி செய்ய முயற்சிக்கிறார் . நமக்கு தான் சிரிப்பு வந்து தொலையவில்லை . எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நல்ல தேர்வு . ஹிந்திக்கார வில்லன்கள் வந்து பேசும் டப்பிங் சீரியல் எஃபக்ட்டில் இருந்து தப்பித்தோம் . நித்யா மேனன் மட்டும் தளபதி , மதுரைவாசி என்று கொஞ்சல் பேச்சில் கிறங்க வைக்கிறார் . ஜி.கே.விஷ்ணு வின் ஒளிப்பதிவு , ஏ.ஆர்.ஆரின் பின்னணி இசை
( குறிப்பாக முதல் பாதி ) மட்டும் வேற லெவல் மத்தபடி படம்லாம் அதே பழைய குருடி கதவை தெறடி லெவல் ...

மாஸ் ஹீரோ படத்துக்கு லாஜிக் பாக்க கூடாதுன்றத விட படம் நம்மள பாக்க விடக்கூடாது . அத மறக்கடிக்குற மாதிரி திரைக்கதை இருக்கணும் . அதுவும் கொஞ்சமாவது புதுசா யோசிச்சு எடுக்கணும் . இதுல மூணு பேரு  திரைக்கதை , ரெண்டு பேரு  வசனம் . பழைய டிவிடி பாத்து சீன் எழுத எதுக்கு மூணு பேரு தெரியல , வசனம் லாம் ஃபேஷ்புக் , வாட்ஸப் ல வந்தது தான் அதுக்கு எதுக்கு ரெண்டு பேரு  . முதல் பாதில என்ன நடந்திருக்கின்ற ஆர்வத்த வெச்சு ஒப்பேத்திடுறாங்க . ஆனா அதுக்காக பாரிஸ் கார்னர் ல வச்சு ஏதோ ஃபாரீன் அயிட்டம் வாங்கிட்டு வர மாதிரி நம்ம ஹீரோ எல்லோர் முன்னாடியும் ஒரு ஆள  போட்டு தள்ளிட்டு இந்தியாவுக்கு வரதெல்லாம் சாரி ப்ரோ ...

படத்தோட மெயின் ப்ளாட் எஸ்.ஜே .சூர்யா வ பழி வாங்கணும் அதுக்கு என்னவோ அத பண்றத விட்டுட்டு ஒரு ஆக்சிடென்ட் கேச சரியான டைத்துக்கு ட்ரீட்மெண்ட் பண்ணாததால் ஒரு சின்ன பொண்ணு சாகறதும் அதுக்கு ஹீரோ அவங்கள போட்டு தள்ளுறதும் னு  பொறுமைய சோதிக்குறாங்க . அதுவும் 6 லட்சம் கேட்டு ஆஸ்பத்திரில பண்ற அட்றாஸிட்டி எல்லாம் நெறைய படத்துல வாந்தி எடுத்த சீன்ஸ் . ரமணா , இந்தியன் ன்னு நெறையவே  நாஸ்டோலிஜியா மொமெண்ட்ஸ் . டாக்டர் சொல்லித்தான் அம்மாக்கே தன்  குழந்தை யாருன்னு தெரியும் அந்த அடிப்படை நம்பிக்கையையே சிதைக்குற மாதிரி டாக்டர்ஸ இவ்வளோ சீப் பா காட்டியிருக்க வேணாம் ...


படம் போறதே தெரியலேன்னு யாராவது சொன்னா ஒன்னு அவங்க தூங்கியிருக்கணும் இல்ல கண்ண செக் பண்ணனும் . கோவில் கட்டுறது விட ஆஸ்பத்திரி கட்டலாம் என்ற வசனத்துக்கு நிச்சயம் தன்னை ஜோசப் விஜய் என கலாய்ப்பார்கள் என்று  தெரிந்தோ என்னமோ அதற்கு பாவ மன்னிப்பாக வில்லனின் பெயர் டேனியல் ( எஸ்.ஜே.சூர்யா ) . பொதுவா படத்துல வரவங்க ஹீரோ டபுள் ஆக்ட பார்த்து குழம்புவாங்க அது பார்க்குறவங்களுக்கு சந்தோசமா இருக்கும் . இதுல ரெண்டு விஜய்யும் ஒரே மாதிரி இருக்காங்களா
( ஒரு மருவாவது வச்சுருக்கலாம்டா ) நம்ம தான் காளிதாசனா  ?. கண்ணதாசனா ? னு குழம்பிடுறோம் .

படத்துல பாசிட்டிவே இல்லையா ?. இருக்கே . விஜய் விக் வச்சாலும் ஸ்மார்ட் ஆக இருக்கார் . மேஜிக் ஷோ லாம் பண்றது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்,  விஜய் யோட பன்ச விட சூர்யா " 30 வருஷம் கழிச்சு நார்மல் டெலிவரி னா எல்லோரும் ஷாக் ஆகி பாப்பாங்க " ன்ற வசனம் , சமந்தா வர கொஞ்ச ஸீன் . நித்யா மேனன் , எஸ்.ஜே .சூர்யா நடிப்பு , நீ தானே பாடல் , ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் மற்றும் நடனம் , ஒரே டிக்கெட்டுல பல படங்களை காட்டின விதம் , எல்லோருக்கும் இலவச மருத்துவம் கொடுக்கணும்னு சொல்ற சமூக சிந்தனை அண்ட் தியேட்டர்ல சாப்புட்ட சாண்ட்விட்ச் ...

ஆக்ட்சுவலி  இந்த படத்துல தெரிஞ்சோ , தெரியாமலோ அட்லீ அண்ட் விஜய் நல்லா தான் சொல்லியிருக்காங்க . 1. சிஎம் , பிஎம் உட்பட எல்லோரும் அரசாங்க மருத்துவம் தான் பார்க்கணும் னு சொல்றாங்க . அப்போ அரசாங்க மருத்துவர்கள் தரமா இருக்கணும் . அதுக்கு காசு , சாதி பாக்காம சீட் கொடுக்கணும் , நீட் எழுதி பாசாகணும் . 2. சிங்கப்பூர்ல 7% ஜி.எஸ்.டி வாங்குறாங்க இலவசமா மருத்துவம் கொடுக்குறாங்க ( இது புருடா ) ஆனா நாம 28%  வாங்குறோம் ஏன் கொடுக்க முடில ? . நல்ல கேள்வி இங்க ஜி.எஸ்.டி வந்து நாலு மாசம் கூட ஆகல அங்க வந்து 20 வருஷம் மேலாக ஆச்சு . ஸோ இங்கயும் எல்லோரும் நியாயமா ஜி.எஸ்.டி கட்டி மருத்துவத்த இலவசமா கொடுக்க வைக்கணும் ...

மொத்தத்துல பழைய படங்களோட டிவிடி இல்லாதவங்க , இல்ல டவுன்லோட் பண்ணி பார்க்க முடியாதவங்க விஜய் க்காக ஒரு தடவ பார்த்துட்டு வரலாம் . ஏன்னா மெர்சல் மொஃபசல் பஸ் மாதிரி பழசா இருந்தாலும் அப்படியிப்படி கொண்டு போய் சேத்துரும் ...

ரேட்டிங்க்  : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 

(பின்குறிப்பு) :   மொதல்ல படத்த  படமா மட்டும் எடுங்க அப்புறம் சொல்லுங்க படத்த படமா மட்டும் பாருங்கன்னு ...




14 January 2017

பைரவா - BAIRAVAA - பலவீனம் ...


விஜய் க்கு இயக்குனர் பரதன் மேல் சாஃப்ட் கார்னெர்  என நினைக்கிறேன் . அதனால் தான் ஏற்கனவே ஏ.டி.எம் எதிர்பார்த்த பணம் தராத போதும் பைரவா வில் வா என்று கை கோர்த்திருக்கிறார் . பைரவா வை இயக்குனர் ஆங்காங்கே கமர்ஷியலாக குரைக்க வைத்தாலும் பை அண்ட் லார்ஜ் ஒன்ஸ் மோர் ஆவெரேஜ் அட்டெம்ப்ட் பை பரதன் ...

பேங்கில் ரெக்கவரி ஏஜெண்ட் ஆக பணிபுரியும் பைரவா ( விஜய் ) மேனேஜரின் மகள் கல்யாணத்தில் மலர்விழியை ( கீர்த்தி சுரேஷ் ) பார்த்தவுடன் மையல் கொள்கிறார் . சொந்த ஊர் திருநெல்வேலியில் அவளுக்கு காலேஜ் கரெஸ்பாண்டண்ட் பி.கே ( ஜெகபதி பாபு ) வால் பிரச்சனை என்று தெரியவர அதை தனது ஹீரோயிசத்தால் எப்படி தவுடுபொடியாக்குகிறார் என்பதே பைரவா ...

கில்லி போலவே ஹீரோயினுக்கு வரும் பிரச்சனையை தனி ஆளாக நின்று துவம்சம் செய்யும் துள்ளல் கேரக்டர் விஜய்க்கு . படத்தின் பல சுமாரான சீன்களை இவரது மாஸ் இமேஜ் தூக்கி நிறுத்தினாலும்  பல்லை
ஒவராகவே கடித்து இவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள் நம்மை பஞ்சர் ஆக்குகின்றன . விஜய் படங்களிலேய மிக சுமாரான ஓப்பனிங்க் சாங்க்  இதுவாகத்தான் இருக்கும் . காமெடியன் சதீஷ் கொடுத்து வைத்தவர் . விஜய்க்கு ஈக்குவலாக ஆடும் அளவுக்கு ஸ்லோவாக பாட்டு அமைந்தது அவர் அதிர்ஷ்டம் ...

கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நல்ல வேளை  அரை லூசாக நடிக்கவில்லை . அழகாக இருப்பதோடு அளவாகவும் நடித்து இம்சை செய்யாமல் இருக்கிறார் .
சதீஷ் சாவகாசமாக செய்யும் காமெடிகள் சிரிப்பை தரவில்லை . மாற்றாக விஜய் கொடுத்த ரெண்டு அறையில் இன்ஸ்பெக்டர் மனது மாறி குடும்பத்தோடு சேர்வது செம்ம காமெடி . தம்பி ராமையா வை வீணடித்திருக்கிறார்கள் . ஆரவாரம் இல்லாத வில்லனாக ஜெகபதி பாபு கவர்ந்தாலும் கேரக்டர் ஸ்கெட்ச்சில் டேனியல் பாலாஜி ஸ்கோர் செய்கிறார் ...

சுகுமாரின் ஒளிப்பதிவு , அனல் அரசு வின் ஸ்டண்ட் காட்சிகள் படத்துக்கு பலம் . வரலாம் வா பைரவா வில் மட்டும் தெரிகிறார் சந்தோஷ் நாராயணன் . மற்றபடி இதுவரை வந்த அவர் படங்களிலேயே படு சுமாராக இருக்கிறது பைரவா ...

மாஸ் ஹீரோ படம் , பொங்கல் ரிலீஸ் இதை மட்டும் மனதில் வைத்து எடுத்திருக்கிறார்கள் போல . எப்படியிருந்தாலும் முதல் மூன்று நாட்கள் கூட்டம் வந்துவிடும் என்பது கணக்கு . கில்லி கதையை அப்படியே கிள்ளி எடுத்து படம் பண்ணதில் தப்பில்லை . ஆனால் அதில் பாதியாவது திரைக்கதையில் இருக்க வேண்டாமா ? ! . எந்த காலத்திலாவது 64 லட்ச ரூவா பணத்த எந்த பேங்க் மேனேஜராவது டாக்குமெண்டெல்லாம் கொடுத்து அப்படியே காசா வாங்கிட்டு வருவானா ? . கந்து வட்டி காரனே ஆயிரம் ஃபார்மாலிட்டி வச்சிருக்கான் . இப்படி கீர்த்திக்காக ஊருக்கு போகும் போது கோயம்பேட்டிலேயே அனாதையாக நிற்கும் விஜய் யின் பைக்கை போல கேட்பாரற்றுக் கிடக்கிறது கதை ...

விஜய் இல்லாமல் 20 நிமிடங்களுக்கு மேல் பிளாஷ்பேக் வைத்தது இயக்குனரின் தைரியம் . விஜய் - வில்லன்களுக்கிடையே நடக்கும் சீன்களில் சுவாரசியம் கூட்டினாலும் ஏற்கனவே பழக்கப்பட்ட விஷயமாகவே படுவது சறுக்கல் . விஜய்க்கு இருக்கும் ஒப்பனிங்குக்கு அவரை நம்பி படமெடுத்ததில் தப்பில்லை . நிச்சயம் அவர் படத்துக்கு பலம் . ஆனால் அவரை மட்டுமே நம்பி மற்ற அம்சங்களில் அதிக கவனம் செலுத்தாமல் விட்டது பலவீனம் ...

ஸ்கோர் கார்ட் : 40 

ரேட்டிங் : 2.5 * / 5 * 

17 April 2016

தெறி - THERI - அபோவ் ஆர்டினரி ...


புலியின் தோல்விக்கு பிறகு  இளைய தளபதியை வைத்து பழைய படங்களை தூசு தட்டி புதுசாக எடுக்கும் அட்லி சத்ரியன் கதை  மாவில் கொஞ்சம் பாட்ஷா, என்னை அறிந்தால் உட்பட பல படங்களின் சீன்களை தெறித்து கொடுத்திருக்கும் சூடான மசாலா தோசை தெறி ...

வழக்கம் போல ஹீரோ எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக மகளுடன் வாழ , வழக்கம் போல ஒரு அழகான பெண் அவரை டாவடிக்க , வழக்கம் போல ஒரு லோக்கல் ரவுடி ஹீரோவை வம்பிழுக்க , வழக்கம் போல முதலில் அடி வாங்கும் ஹீரோ பிறகு அவனை பொலெந்துடுக்க , வழக்கம் போல அதை பார்க்கும் அந்த பெண் ஹீரோவின் பழைய வாழ்க்கையை தோண்டியெடுக்க , வழக்கம் போல ஹீரோ வின் குடும்பத்தை வில்லன் பிளாஷ்பேக்கில் குதறியிருக்க , வழக்கம் போல மீண்டும் அந்த வில்லனை மீண்டு வரும் ஹீரோ பழி தீர்க்க ( ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே ) இப்படி பல வழக்கம் போல இருந்தாலும் அது பார்க்கும் போது போரடிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் விஜய் ...


மூன்று கெட்டப்புகள் என்றெல்லாம் பில்டப்புகள் கொடுத்தாலும் வ....ல விஜய் விஜயாகவே வருகிறார் . இந்த முறை பவர் கண்ணாடியும் , பரட்டை குடுமியும் ப்ளஸ் . தெறி யில் அவர் ஆட்டத்தை விட ஆக்சன் பொறி பறக்கிறது . மகள் நைனிக்கா , அம்மா ராதிகா , மனைவி சமந்தா மூவருடனும் விஜயின் கெமிஸ்ட்ரி நன்றாகவே இருக்கிறது . வ ... ல சினிமா குழந்தை நைனிக்கா கொஞ்சம் ஓவராக பேசினாலும் ரசிக்க வைக்கிறார் இந்த மீனாவின் பேபி . முகத்தில் உணர்ச்சிகளை குறைவாக காட்டினாலும் கம்பீரமான குரல் , ஷார்ப்பான் கண்கள் இவற்றால் வில்லனாக மிரட்டுகிறார்  மகேந்திரன் ...

மொட்டை ராஜேந்திரனை நன்றாகவே யூஸ் செய்திருக்கிறார்கள் . பிரபுவின் சைசுக்கேற்ற வெயிட்டான ரோல்  படத்தில் இல்லை . படமே பழைய படங்களின் கலவை தானே என்பதாலோ என்னவோ ஜி.வி யின் பாடல்களில் எல்லாமே பழைய நெடி . ஜித்து ஜில்லாடி யில் தேவா வின் குரலும் , விஜயின் ஆட்டமும் கெத்து . படத்தின் வேகத்துக்கு எடிட்டிங் கை கொடுக்கிறது ...

விஜயை வைத்து ஆக்சன் படம் என்று முடிவான பிறகு கதைக்காக பெருசாக மெனெக்கெடாமல் இன்றைய இளம் தலைமுறை அதிகம் கேள்விப்பட்டிராத சத்ரியன் படத்தை மையமாக எடுத்திருந்தாலும் சீன்களுக்காகவாவது நிறைய யோசித்திருக்கலாம் . கஜினி , சலீம் , வேதாளம் என்று எந்த படத்தையும் விட்டுவைக்கவில்லை அட்லி . மாஸ் ஹீரோக்கள் படங்களில் லாஜிக் பார்ப்பது அரசியல்வாதிகள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா என்று  ஆராய்வதற்கு சமம் . எனவே அதை விட்டுவிடலாம் . மற்றபடி படம் தொய்வில்லாமல் செல்வதும் , ஆக்சன் சீன்களும் பலம் . விஜயின் ஆகச்சிறந்த  படங்களில் !ஒன்றாக தெறி இல்லாவிட்டாலும் அவர் ரசிகர்களையும் , கமர்சியல் விரும்பிகளையும்  திருப்திப் படுத்தும் வகையிலும் வந்திருக்கும் தெறி -  ஜஸ்ட் அபோவ் ஆர்டினரி ...

ரேட்டிங்   :    2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 


18 November 2015

அஜித் Vs விஜய் (5) - AJITH Vs VIJAY (5) - The Final Verdict ...


ஜித் Vs விஜய் இருவரில் யார் பெஸ்ட் என்கிற வரலாற்று சிறப்பு மிக்க ! கேள்வியின் பதிலைக் காண ஆவலுடன் அனைவரும் காத்திருப்பீர்கள் . உங்களைப் போல காத்திருந்த எனக்கும் சேர்த்து இந்த பதிவில் மக்களின் தீர்ப்பு வருகிறது . இதுவரை 4 பதிவுகளையும் தொடர்ந்து படித்த , படித்ததோடு நிற்காமல் அதைப் பற்றிய கமெண்டும் அடித்த , அதோடு விடாமல்  அஜித் , விஜய் இருவரில் யாருக்கோ வாக்கையும் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி . மீண்டும் சொல்கிறேன் . இது என்னமோ தமிழ் சினிமா நடிகர்களில் யார் பெஸ்ட் என்கிற வாக்கெடுப்பு அல்ல . அஜித் , விஜய் இருவருக்குமான வாக்கெடுப்பு மட்டுமே . இருவருமே இல்லை என்கிற ஆப்சனையும் சேர்த்திருக்கலாமே என்றும் சிலர் கேட்டிருந்தார்கள் . அதே போல் உங்களின் முடிவு என்ன என்றும் ஒரு நண்பர் கருத்திட்டிருந்தார் . மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எனும் போது இந்த சாதாரண மனிதனுக்கும் அது பொருந்தாதா ? . இதோ யார் பெஸ்ட் அஜித் Vs விஜய் ...

யார் பெஸ்ட்





அஜித் தான் ஜெயிப்பார் என்று யூகித்திருந்தாலும் இந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தது ஆச்சர்யம் . வேதாளம் தீபாவளிக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது அஜித் மேல் க்ரேஸ் அதிகமானதற்கான ஓர் காரணமாக இருந்தாலும் , அஜித் எந்த ஒரு வலைத்தளங்களிலும் இல்லாததும் , தன் படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாததும் , குறிப்பாக தன் படத்தை மட்டும் பேச விட்டு கருத்து  சொல்கிறேன் பேர்வழி என்று வேறு எதையாவது சொல்லாததும் , பொதுவாக
சக நடிகர்களாலாயே  தல என்று அழைக்கப்பட்டும் அந்த கனத்தை தனது தலைக்குள் தள்ளாததும் இவரின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக நான் கருதுகிறேன் . அதே போல அட்லி இயக்கத்தில் விஜய் படம் வந்து வெற்றியடைந்தால் இந்த நிலை மாறுமா ?. பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் இப்போதைக்கு இதுதான் ரசிகர்களின்  ரிசல்ட் ...

அஜித் எந்த நிகழ்ச்சிக்கும் வராததால்  ஒரு மேடை போட்டு அங்கே தல ய பாராட்ட டி .ஆர் வந்திருந்தால் என்ன என்று ஒரு சின்ன கற்பனை ...

இவன் தல

பணத்துக்கு ஆட்ட மாட்டான் வால
அன்புக்கு முன்னால பூமால

எதிரிகளுக்கு இவன் காள 
நட்புக்கு கொடுப்பான் தோள 

உட்டுப்பாக்காத நூல
ஊத்திருவான் பால

இவன் பைக் ஓட்டுறது ஈ.சி.ஆர் சால
ஜெயிச்சாலும் இருப்பான் எப்பயும் போல

நம்பி பணம் போட்டவன் ஆக மாட்டான் திவால
இவன் படம் பாக்குறவனுக்கு போகும் கவல

இராவணனுக்கு பத்து தல
தமிழ்நாட்டுக்கு இவன் தான் ஒரே தல ! ...

( அட்டாக் புலி , அட்டகாச புலி என்கிற டி.ஆர் மாடுலேஷனிலேயே படிக்கவும் )




13 November 2015

அஜித் Vs விஜய் (4) - AJITH Vs VIJAY (4) - THE CONCLUSION ...


ந்த பதிவை படிப்பதற்கு முன்னால் இது  தொடர்பான முந்தைய மூன்று பதிவுகளையும் படித்து விட்டு வருவது நல்லது . அதே போல இந்த பதிவு அஜித் , விஜய் இருவரில் யார் சிறந்த நடிகர் என்பதற்கானது அல்ல . அந்த வகையில் பார்த்தால் இது விக்ரம் , சூர்யா ( இவர் நடிப்பு சமீபகாலமாக  ஒரே மாதிரியாக இருந்தாலும் ) , தனுஸ் ஆகியோருக்கான பதிவாக இருந்திருக்கும். ஆனால் இவர்கள் மூவரை விட இன்றைய தேதியில் அதிக அளவு ரசிகர் பட்டாளத்தையும் , பிசினசையும் வைத்திருப்பது இவ்விருவர் மட்டுமே . இந்த தெளிவோடு பதிவை தொடரவும் ...

இதை எழுதும் அதே நேரத்தில் தீபாவளி அன்று ரிலீசான வேதாளத்தின் முதல் நாள் கலெக்சன் தமிழ்நாட்டில் மட்டும் 15.5 கோடி என்பது நிறைய பேருக்கு செய்திகள் வாயிலாக தெரிந்திருக்கும் . இதன் நம்பகத்தன்மையை ஆராய்வது ஒரு புறம் இருக்கட்டும் . ஆனால் நிச்சயமாக பெரிய வித்தியாசம் இருக்காது . ஏனெனில் படம் தமிழகத்தில் மட்டும் 530 ஸ்க்ரீன்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது. முதல் நாள் அதுவும் தீபாவளி என்பதால் சின்ன தியேட்டரிலேயே 4 ஷோக்களுக்கு குறைவாக இருக்காது . அதிலும் மாயாஜால்  போன்ற மல்டிப்ளெக்சுகளை கணக்கில் கொண்டால் குத்து மதிப்பாக 6 ஷோக்கள் வைத்துக்கொள்ளலாம் . இதை பெருக்கிப் பார்த்தல் மொத்தம் 3180 ஷோக்கள் வருகின்றன . தோராமயமாக ஒரு ஷோவை 500 பேர் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் . இதன் படி மொத்தம் 1590000 பேர் படத்தை முதல் நாள் பார்த்திருக்கிறார்கள் . டிக்கெட் விலை முதல் நாள் பெரிய ஹீரோ படத்துக்கு 120 க்கு குறைவாக நிறைய தியேட்டர்களில் இருக்காது . இருந்தாலும் ரூ .100 என்று  எடுத்துக்கொண்டால் மொத்தம் 15.9 கோடிகள் வருகிறது . இந்த படத்திற்கு அரசின் வரிச்சலுகை உண்டு என்பதால் மொத்தத்தையும் அப்படியே கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் . ( என்ன ரமணா விஜயகாந்த் ரேஞ்சுக்கு போய்க்கிட்டுருக்கு ! ) ...

இதை சொல்வதற்கு காரணம் எந்த ஒரு பெரிய ஸ்டார் படம் வந்தாலும் , குறிப்பாக அஜித் , விஜய் படம் வந்தால் அவர்களின் ரசிகர்கள் நெட்டில் அடித்துக்கொள்வது இந்த வசூலை வைத்துதான் . என்னை அறிந்தால் முதல் நாள் வசூலை புலி  முறியடித்தது என்று விஜய் ரசிகர்கள் சொன்னால் இப்போது வேதாளம் , விஜய் நடித்த கத்தி படத்தின் முதல் நாள் வசூலை ( 12.5 கோடி ) முறியடித்து விட்டது என்று அஜித் ரசிகர்கள் சொல்கிறார்கள் . ஆனால் எந்த ஒரு படமும் முழுமையான் வெற்றி பெறுவதற்கு முதல் நாள் வசூல் மட்டும் போதாது . 20 - 20 மேட்சில் முதல் பத்து ஓவருக்கு 120 ரன்கள் எடுத்து ஆள் அவுட் போலத் தான் இதுவும் . இதற்கு தனிஒருவன் , பாபநாசம் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம் . ஒப்பனிங்  குறைவாக இருந்தாலும் மவுத் பப்ளிசிட்டி மூலம் இரண்டு படங்களும் 50 நாட்களை கடந்து ஓடி நல்ல வசூலை குவித்தன . ( எல்லாம் குடும்பத்தோட போய் நம்ம எழுதுற 120 ரூவா மொய் தான் ) ...


சரி மேட்டருக்கு வருவோம் . படத்துக்கு மிக்சட் ரெஸ்பான்ஸ் இருப்பதால் அஜித்தின் வேதாளம் 100 கோடி வசூலை தாண்டி இந்த வருடத்தின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஆக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . ஆனால் தல படம் லிங்கா , கத்தி படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து விட்டது  என்பதே நிதர்சனம் . அதிலும் உலகநாயகனின் படத்தோடு ரிலீசாகி இந்த சாதனையை படைத்திருப்பது சத்தியமாக எதிர்பார்த்திராத ஒன்று . என்ன தான் வசூலை குவித்திருந்தாலும்  அஜித்துக்கு இருக்கும் மாஸுக்கு வேதாளம் படமாக சரியான தீனி அல்ல என்பதே என் கருத்து ...


மங்காத்தா படம் முடிந்து வரும் போது அஜித்துக்கு இருக்கும் ஒபெனிங்கை பார்த்து விட்டு ஒரு சினிமா நண்பரிடம் பேசினேன் . அவரோ ரொம்ப கேசுவலாக இதெல்லாம் கொஞ்ச நாள்ல காணாமல் போயிடும் என்றார் . அதோடு ஷங்கர் , ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் படங்கள்  வந்து விட்டால் அஜித்தை யாரும் சீண்ட மாட்டார்கள் என்றும் சொன்னார் . அவர் சொன்னதை ஈசியாக விட முடியாதற்கு காரணம் அவர் சினிமா வட்டாரத்தில் நல்ல தொடர்புள்ளவர் என்பதோடு கண்டிப்பாக விஜய் ரசிகர் இல்லை . ஆனால் அவர் சொன்னது போல் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று நான் ஆணித்தரமாக நம்பினேன் . அன்றிருந்த நம்பிக்கை பத்து வருடங்களுக்கு முன்னால் எனக்கு அஜித் மேல் இருந்ததில்லை . எங்கள் பேச்சிலர் ரூமுக்கு வரும் நண்பன் பக்கா அஜித் ரசிகன் . அதிலும் சிட்டிசன் படத்தின்  " நான் தனி ஆள் இல்ல " என்ற வசனத்தை அவன் அஜித் போலவே பேசுவான் . அஜித் மேல் எந்த ஈடுபாடும் இல்லாத நாங்களோ அவனை ஓட்டுகிற ஓட்டில் ரூம் பக்கம் வருவதையே நிறுத்திக்கொண்டான் . நாங்களும் " மாப்புள அத்திப்பட்டி மாதிரி அவனும் காணாம போயிட்டாண்டா " என்று சொல்லி சிரித்துக் கொள்வோம் ...

என் கல்லூரி காலங்களில் அஜித்தை விட விஜய்க்கு தான் கூடுதல் மாஸ் இருந்தது . அவரை போலவே ரிம்லெஸ் க்ளாஸ் , டிசர்ட் அதே ஸ்டைலுடன் நிறைய பேரை பார்க்க முடியும் . காதல் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த விஜய் மேல் பெண்களுக்கும் நிறைய கிரேஸ் இருந்தது , நானோ ஒன்ஸ்மோர் படம் முடிந்தவுடன் ஒன்ஸ்மோர் பார்க்கலாமா என்று கேட்ட நண்பனை செவுட்டில் அறையலமா என்று கேட்பது போல பார்த்தேன் .  ஆனால் என்னைத் தவிர அங்கிருந்த எல்லோரும் படத்தை என்ஜாய் பண்ணி பார்த்தார்கள் . இதே நிலைமை தான் விஜய் நடிப்பில் வந்த துள்ளாத மனமும் துள்ளும் பார்த்த போதும் . இப்படி விஜய் , அஜித் இருவருமே தனிப்பட்ட முறையில் பெரிதாக கவர்ந்ததில்லை . அதே சமயம் வாலி படத்தை பார்த்த பிறகு இயக்குனராக வேண்டுமென்கிற வெறி அதிமாகி  எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு சென்னை வந்தது இன்றும் நினைவிருக்கிறது . அது தனிக்கதை ...

இப்படி ஈக்குவலாக போய்க்கொண்டிருந்த ட்ராக் சொல்லப்போனால் அஜித்தை விட அதிக வெற்றிகளின் காரணமாக விஜயின் க்ராஃப் மேலே இருந்த நேரத்தில் பில்லா வின் வெற்றி ரஜினியின் ரசிகர்கள் பலரை அஜித் பக்கம் ஈர்த்தது . கடந்த ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் அமர்ந்திருந்த மேடையிலேயே தங்களை வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறார்கள் என்று அஜித் தைரியமாக சொன்னதும் ,  அதற்கு சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கை தட்டியதும் பலரை புருவம் உயர்த்த செய்தது . இந்த சம்பவம் நடுநிலையாளர்கள் பலரை அஜித் பக்கம் கொண்டு போனது  . நிஜத்திலும் லார்ஜர் தென் லைஃப் ஹீரோ போல அஜித் பார்க்கப்பட்டார் . விஜய் போல பிறந்த நாளுக்கு நலத்திட்ட உதவிகள் பெரிதாக எதுவும் செய்யாத போதும் அஜித் மேல் உள்ள ஈர்ப்பு அடிமட்ட ரசிகர்களுக்கு குறையவில்லை ...


குடும்பத்தோடு பார்ப்பதற்கு விஜய் படங்கள் தான் மினிமம் கேரண்டி . அதில் பாட்டு , டான்ஸ் , காமெடி என்று சாமானியனை கவரும் அம்சங்கள் நிறையவே உண்டு . விஜய்யிடம் எப்போதும் ஒரு துறுதுறுப்பு இருந்து கொண்டே இருக்கும் . அஜித் தை விட மூன்று வயதே( 41 )  சின்னவராக இருந்தாலும்  பார்ப்பதற்கு இன்னும் சின்னப்பையன் போல இருப்பது விஜய்க்கு ப்ளஸ் . அதனால் தான் ஏகன் படத்தில் கல்லூரிக்கு போன அஜித்தை அவர் ரசிகர்களே கிண்டல் செய்த போதும் விஜயை காவலனில் யாரும் கிண்டல் செய்ததில்லை . பலரால் கிண்டல் செய்யப்பட்ட வேலாயுதம் , புலி போன்ற படங்கள் கூட 60 , 70 கோடிக்கு மேல் வசூலை குவித்திருக்கின்றன ...

கிட்டத்தட்ட இருவருமே சம பலத்தோடு இருப்பது போல பட்டாலும் விஜய்யின் 50 வது படமான சுறா சுருட்டி வாரிக்கொள்ள அஜித்தின் 50 வது படமான மங்காத்தா சக்கை போடு போட்டது . அஜித்துக்கு இந்த வெற்றி மற்றுமொரு திருப்புமுனை . விஜய் ரசிகர்கள் அஜித்தின் மிகப்பெரிய ஹிட்டான மங்காத்தா, ஆரம்பம் இரண்டுமே அர்ஜுன் மற்றும் ஆர்யா இருந்ததால் அஜித்தின் தனிப்பட்ட வெற்றி கிடையாது என்றும் சொல்கிறார்கள் . இது ஒரு சப்பை காரணம் போல் பட்டாலும் விஜய் சோலோ ஹீரோ வாக நடித்த துப்பாக்கி , கத்தி இரண்டுமே மிகப்பெரிய ஹிட் என்பதையும் மறுக்க முடியாது . கத்தி , துப்பாக்கி இரண்டுமே விஜய் எனும் ஹீரோவையும் தாண்டி  படமாகவும் நல்ல படங்கள் . வேதாளத்தை நிச்சயம் அந்த வரிசையில் சேர்க்க முடியாது . ஆனாலும் அந்த படங்களை தாண்டி வேதாளம் வசூலைக் குவித்ததைத்  தான் அஜித் தின் பலம் என்கிறார்கள் . அதாவது விஜய் ஒரு படம் ஹிட் கொடுக்க கதை , திரைக்கதை , இயக்கம் எல்லாமுமே கை கொடுக்க வேண்டியிருக்கிறது , அதாவது அவர் மெனெக்கெட வேண்டியிருக்கிறது . ஆனால் தல ஸ்க்ரீனில் நின்னாலே போதும் படம் ஹிட் என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது . இது ஆரோக்கியமான விஷயமாக இல்லாமல் போனாலும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு தேவையான ஸ்க்ரீன் ப்ரெசென்சில் அஜித் முன்னே நிற்கிறார் . அதனால் தான் சக ஹீரோக்களே தல தல என்று அஜித்தை கொண்டாடுகிறார்கள் ...

இரண்டு ஹீரோக்களையும் இவ்வளவு  நேரம் அலசினாலும் இறுதி முடிவை மக்கள் கையிலே விட்டு விடுகிறேன் . மக்கள் தீரப்பே மகேசன் தீர்ப்பு . இந்த பதிவுக்கு கீழ் யார் பெஸ்ட் என்கிற தலைப்பில் அஜித் , விஜய் இருவரின் பெயரும் இருக்கும் . நீங்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அந்த புள்ளியை அழுத்தவும் . வருகிற 18 ஆம் தேதியோடு வாக்கெடுப்பு முடிவடையும் . இன்னும் ஐந்து நாட்களே இருகின்றன . யார் பெஸ்ட் ?...
தேர்ந்தெடுப்பதற்கு முன் கீழே உள்ள முந்தைய பதிவுகளையும் படிக்கவும் ...


அஜித் Vs விஜய் (1) - AJITH Vs VIJAY ...

அஜித் Vs விஜய் (2) - AJITH Vs VIJAY ...

அஜித் Vs விஜய் (3) - AJITH Vs VIJAY ...




23 October 2015

அஜித் Vs விஜய் (2) - AJITH Vs VIJAY ...



அஜித் 

மராவதியில் அறிமுகம் ஆகி ஆசைக்கு பிறகு இளம் பெண்கள் மனதில் ஆசை நாயகனாக உருமாறி காதல் கோட்டையில் தன் வெற்றிக் கொடியை  நட்டு , வாலிக்கு பிறகு தனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகை அமர்க்களப்படுத்தி வருபவர்  அஜித். இவரின் மங்காத்தா ஆட்டத்தை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை. இவரின் மேல் ரசிகர்களுக்கு இருக்கும் பேய்த்தனமான அன்பு தான் வேதாளம் என்று பேர் வைத்தாலும் டீசருக்கே யூ டியூபில் 48 லட்சம் ஹிட்ஸ்களும் , எல்லா படத்திற்கும் ஒபெனிங்கில் தல யாகவும்  இவரை வைத்திருக்கிறது ...


சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் வந்தவர் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்ததோடு  20 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்  .  சிவாஜிகமல் , விக்ரம் என மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் அஜித் இல்லையென்றாலும் எல்லா தரப்பிலும் இவருக்குள்ள ரசிகர்களால் இவர் படங்களுக்கு கிடைக்கும் முதல் வாரத்திற்கான வசூலையும்,வரவேற்பையும் யாரும் மறுக்க முடியாது . அதனால் தான் தோல்வி படங்கள் அதிகம் கொடுத்திருந்தும் வர்த்தக ரீதியாக இவர் படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள் ...

22 ஆண்டு கால கலை வரலாற்றில் முதல் படம் அமராவதி  தோல்விப் படம் . மூன்றாவது படமான ஆசை பெரிய வெற்றியை பெற்ற போதும் அதை தொடர்ந்து ஒரே வருடத்தில் உல்லாசம் ராசி உட்பட ஐந்து தோல்வி படங்கள்.  வேறு யாராவதாக இருந்திருந்தால் இவ்வளவு வருடம் நடித்திருப்பார்களா என்பது  சந்தேகமே .   ஆரம்ப காலங்களில் அஜித் பத்திரிக்கையாளர்களிடம்   அதிகமாக கோபப்படுகிறார்  என்ற சர்ச்சையும் இருந்தது. இவர் எடுத்த சில முடிவுகளும் தவறாகவே இருந்தன..திரை உலகில் இவரை வழி  நடத்த  காட் பாதர்  யாரும் இல்லாததும் காரணமாக இருக்கலாம் . ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிம்பு , ஆர்யா  போன்ற சம கால நடிகர்களே இவரை  காட் பாதர் என்று சொல்வதும் , சமீபமாக வரும் எல்லா படத்திலும் ஏதோ ஒரு வகையில் இவரது பெயர் இடம்பெறுவதும்
( மிக சமீபத்திய உதாரணம் 10 எண்றதுக்குள்ள ) தமிழ் சினிமா வரலாற்றில் அஜித்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ...                   

சிவாஜி , ரஜினி , கமல் வரிசையில் அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடித்திருக்கும் அஜித் அதில் வாலி , வரலாறு , வில்லன் , பில்லா உட்பட பெரும்பாலான படங்களில் வெற்றி பெற்றிருக்கிறார் . விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார் . அதில் சரண் , எஸ்.ஜே.சூர்யா , துரை போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் . ரெட் , ஜனா , ஆழ்வார் போன்ற புதியவர்களின் படங்கள் காலை வாரினாலும் முகவரி , கிரீடம் போன்றவை அஜித்துக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தன . விஜய் , சூர்யா போன்ற நடிகர்களை போல அஜித்தால் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் பிரகாசிக்க முடிவதில்லை , அவர் உடல் எடையை கவனிப்பதில்லை , ரொம்ப வருடங்களாக கெட்டப்பை மாத்தாமல் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே இருக்கிறார்  இப்படி சில குறைகள் அவரை பற்றி சொன்னாலும் அவர் தான் எங்க " தல " என்கிறார்கள் ரசிகர்கள் ...  

முன்னாள் முதல்வர் அமர்ந்திருந்த மேடையிலேயே தனக்கு சரியென பட்டதை தைரியமாக சொன்னது  , விளம்பர படங்களில் நடிக்காதது  , தான் நடிக்கும் படங்கள் உட்பட எந்த சினிமா விழாக்களுக்கும் போகாதது என்று ஒரு கோடு  போட்டுக்கொண்டு அதற்குள் தனியாக இருப்பது போல பட்டாலும் அவர் ரசிகர் மன்றங்களை கலைக்க சொல்லியும் அவர் கிழித்த கோட்டை தாண்டாத ரசிகர்கள் கிடைத்தது அவரது வரம் . பீக்கில் இருக்கும் போதே டக்கென்று ரேசிங் கிளம்புவது , செட்டில் உள்ள அனைவருக்கும் சுவையாக பிரியாணி சமைத்து தருவது , சின்ன நடிகர் அப்புக்குட்டி யை நிற்க வைத்து விதவிதமாக போட்டோ எடுப்பது என்று தல செய்யும் நிறைய விஷயங்கள் அவரது தனித்துவம் . அதனால் தான்  நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் தன் முயற்சி, உழைப்பு , துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் அசல்  நாயகனாகவே நம் கண் முன் தெரிகிறார்  அஜித் ...


அறிமுகம்       :  அமராவதி  
முதல் ஹிட்  :  ஆசை 
ப்ரேகிங் பாயிண்ட் : வாலி 
தல அவதாரம்         : தினா 
அறிமுக இயக்குனர் : செல்வா 
பேவரட் இயக்குனர்  : சரண் ,  இப்போது சிறுத்தை சிவா 
100 க்ரோர் கிளப் : மங்காத்தா , ஆரம்பம் 
அடுத்த ரிலீஸ் : வேதாளம் 

அடுத்த பதிவில் விஜய்  ...



20 October 2015

அஜித் Vs விஜய் (1) - AJITH Vs VIJAY ...




சினிமாவில் பார்க்கும் ஹீரோக்களை படம் முடிந்தவுடன் மறந்துவிடாமல் மனதோடு வைத்து பூஜிக்கும் பழக்கம் இன்று நேற்று என்றல்ல பாகவதர் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு நடந்து வருகிறது . எம்.கே.தியாகராஜ பாகவதர் - பி.யு.சின்னப்பா , எம்.ஜி.ஆர் - சிவாஜி , ரஜினி - கமல் இந்த வரிசையில் இன்று பாப்புலராக ரசிகர்களிடையே ஆராதிக்கப்படும் அதே சமயம் எதிர் குழுவினரால் கழுவி கழுவி ஊற்றப்படும் இரண்டு முன்னணி ஹீரோக்கள் அஜித் மற்றும் விஜய் . இவர்களுக்கு பிறகு தனுஷ் - சிம்பு என்றொரு அணி தோன்றினாலும் இன்றளவும் அஜித் - விஜய் இருவருமே கோலிவுட்டில் கோலோச்சி வருகிறார்கள் ...

ஏற்கனவே எதிரும் புதிருமாக இருக்கும் இவர்களின் ரசிகர்கள் ஆரம்ப காலங்களில் சிலேடையாக அடுத்த ஹீரோவை தங்கள் ஹீரோ தாக்கும் போது அந்த பக்க ரசிகர்கள் ஆத்திரப்படுவதை பார்த்து ஆரவாரம் செய்தார்கள் . உதாரணத்துக்கு தினா படத்துக்கு பின் தல என்று ரசிகர்களால் அஜித் அறியப்படுவது அனைவரும் அறிந்ததே . ஒரு படத்தில் ( புதிய கீதை என நினைக்கிறேன் ) விஜய் ' யாருடா உன் தல " என்று ஒரு அடியாளை பார்த்து கேட்டது அஜித் ரசிகர்களை சூடாக்கியது . அஜித் படங்களில் கூட இது போன்ற உதாரணங்களை சொல்லலாம் ., சமீபமாக என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்காவை பார்த்து " டாக்டரா நானா " என்று அஜித் தலையாட்டிய போதும் , சண்டைக்காட்சிக்கு முன்  அருன்விஜயை பார்த்து " என்னடா ஸ்பீச்சா கொடுக்கற " என்று கேட்ட போதும் அஜித் ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள் . விஜய்க்கு டாக்டர் பட்டம் கிடைத்திருப்பதும் , அவர் சில வருடங்களுக்கு முன்னாள் ஒரு கல்லூரியில் ஸ்பீச் கொடுத்ததும் அவர்களுக்கு தெரியாதா என்ன ?! . இப்படி அரசல் புரசலாக அவர்களுக்கிடையேயும் , நேரடியாக ரசிகர்களுக்கிடையேயும் இருந்த சண்டை சமீபத்தில் புலி ரிலீசுக்கு பிறகு இன்னும் அதிகமாகியிருக்கிறது...

புலி எதிர்பார்த்த அளவுக்கு போகாதது மட்டுமல்ல குருவி , சுறா வரிசையில் விஜய் ரசிகர்களே கிண்டல்  செய்யும் அளவுக்கு அமைந்துவிட்டது . படம் சரியாக ஓடவில்லை என்றவுடன் போஸ்டரில் விஜய் படத்தை சின்னதாக்கி ஒத்தக்கண்ணன் படத்தை பெரிதாக போடும் அளவுக்கு தியேட்டர்காரர்கள் இறங்கியும் , அது குழந்தைகளுக்கான படம் என்று பின்னர் கற்பூரம் அடித்து சத்தியம் செய்தும் குழந்தைகளே அதை நம்ப மறுத்துவிட்டார்கள் . அதோடு சேர்த்து ஒப்பனிங்  சீனில் வேதாளமாக வரும் அடியாளை விஜய் அடித்து நொறுக்குவார் என்று ரசிகர்கள் காத்திருக்க அவரோ அவன் காலை பிடித்துக் கொண்டு " நீங்க வேதாளம் , நாங்க பாதளம் " என்று டயலாக் பேசியது விஜய் படத்துக்கு வந்திருந்த அஜித் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்தது. தலைப்பிடப்படாமல் இருந்த தல படத்துக்கு வேதாளம் என்று பெயர் வைத்தது கோ இன்சிடன்டா இல்லை புலியின் காட்சியமைப்புகளை தெரிந்து கொண்டு வைக்கப்பட்ட  ப்ளாண்ட்  இன்சிடண்டா என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம் . இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அஜித் ரசிகர்கள் ஆன்லைனில் புலி படத்தையும் , விஜயை யும் ஓவராக கலாய்க்க விஜய் ரசிகர்கள் கமிஷனர் ஆபீசுக்கு சென்று கம்ப்ளைன்ட் செய்யும் அளவுக்கு போய் விட்டது ...


எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்திலேயே ஒருவரது படம் ரிலீசானால் மற்றொருவரின் ரசிகருக்கு அடி உதை  என்பது எழுத்தப்படாத விதியாக இருந்தது . அதே கதை தான் ரஜினி - கமல் ரசிகர்களுக்கும் . ஆனால் நிலைமை கை மீறிப் போகும் போது  அவர்கள் தலையிட்டு ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார்கள் . இன்றோ தல - தளபதி இருவரின் ரசிகர்களின் தலை மட்டுமே உருண்டு கொண்டிருக்கிறது . இப்படி இரண்டு தரப்பினரும் அடித்துக்கொள்ளும் அளவுக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருப்பதோடு ஒரு படத்தின் மூலம் கிட்டத்தட்ட  100 கோடி  க்கு பிசினசையும் கொடுக்கும் அஜித் - விஜய் இருவரைப் பற்றிய அலசல் அடுத்த பதிவில் ...




2 October 2015

புலி - PULI - பலி ...


ஜினிக்கு அடுத்தபடியாக குழந்தைகளால் அதிகம் ரசிக்கப்படும் மாஸ்  ஹீரோ விஜய் , முதல் படம் தவிர ஹிட் கொடுக்காத ஃபேண்டசி இயக்குனர் சிம்புதேவன்  இருவரும் குழந்தைகளுக்கான படமாக புலியை கொடுக்க நினைத்ததில் தப்பில்லை . ஆனால் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகும் பெரியவர்களின் நிலைமையை கொஞ்சமாவது யோசித்துப் பார்த்திருக்கலாம்...

வேதாளங்களின் ( அஜித் இல்லைங்கோ ! ) கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் மருதீரன் ( விஜய் ) , வேதாளங்களால் கடத்தப்பட்ட தன் காதலி பவளவள்ளி (ஸ்ருதிஹாசன் ) யையையும் , அடிமைப்பட்ட தனது  கிராமத்தையும் எப்படி மீட்கிறார் என்பதே கடைசி வரை எப்படா பாயும் என்று நம்மை நோகடித்த புலியின் கதை ...

தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் இது போன்ற ஃபேண்டசி டைப் படத்துக்கு ஓகே சொன்னதற்கு பாராட்டுக்கள் . ஆனால் அதோடு தன் வேலை முடிந்து விட்டது என்று நினைத்து விட்டாரோ என்னமோ ! கொஞ்சம் நடிங்க பாஸ் ! . ஸ்ருதி யோடு அவருக்கு என்ன பிரச்சனையோ ?! எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசுகிறார் . அப்பா புலியாக ஃப்ளாஷ்பேக்கில் சீரியசான  குரல் மாடுலேஷனில் அவர் பேசும் போது சிரிப்பு சிரிப்பாக வருகிறது . பிரச்சனை என்னவென்றால் குழந்தைகளுக்கான படத்தை தனது ரசிகர்கள் நிராகரித்து விடுவார்களோ என்கிற பயத்தில் நடப்பு அரசியல் , " நான் ஆளப்பிறந்தவன் இல்ல , மக்களுக்காக வாழப்பிறந்தவன் " என்றெல்லாம் டயலாக் பேசவிட்டு அப்பா புலியை சாகடித்து விடுகிறர்கள் . பரிதாபம் வரவேண்டிய இந்த இடத்தில் புலி மேக்கப் புடன் ஒரு மாதிரி பேசும் விஜயை பார்த்து நமக்கு பயம் வருகிறது . கத்தி , துப்பாக்கி என்று ஒரு ஸ்டைலிஷான ஹீரோவாக மாறிக்கொண்டிருந்தவர் மேல் யார் கண் பட்டதோ ?! . குருவி , சுறா வரிசையில் புலி யை பார்த்தால் விஜய்க்கு மிருக தோஷமா ?! . கொடுமை என்னவென்றால் அந்த சுறாவையே நிறைய இடங்களில் தின்று விட்டது புலி . இளைய தளபதி யின் பழைய படத்தை பார்த்த ஃபீலிங் ...


ஐ.பி.எல் மேட்ச் நடுவில் ஆடும் சீர் லீடர் வேலை தான் ஸ்ருதி ஹாசனுக்கு . இலியானாவுக்கு அடுத்து அதிகம் இடுப்பை ஆட்டியவர் இவராகத்தான் இருப்பார் . இவருக்கு யாராவது டப்பிங் கொடுத்தால் தேவல ! . விஜயிடம்
" இப்படிக்கூடவா காதுல சொல்லுவாங்க " னு ஒரு டயலாக் பேசுகிறார் . என்னடா ஏதாவது பலான ஜோக் தான் விஜய் சொல்லிட்டாரோ னு பாத்தா , அது "காதுல " இல்லேங்கின்னா " காதல " அதத் தான் அந்த அம்மணி அப்புடி சொல்றாங்கோ ! . ஸ்ருதியின் இடைக்கு ஒய்வு கொடுத்து இடைவேளைக்குப் பின் அந்த வேலையை எடுத்துக்கொல்கிறார் சாரி கொள்கிறார் ஹன்சிகா மோத்வானி . ஸ்ரீதேவி க்குல்லாம் வயதே ஏறாதா ?! வேதாளமாக அதீத மேக்கப்புடன் சில இடங்களில் பயமுறுத்தினாலும் நார்மாலாக நைஸ் டு வாட்ச். பெரிய ஹீரோ என்றவுடன் நடிக்க டப்பென்று ஒப்புக்கொண்டிருப்பார்  நந்திதா . கமல் , மணிரத்னம் படங்களிலாவது ஏதோ டயலாக் கொடுத்திருப்பார்கள் போல ! பாவம் ஒரு பாட்டுக்கு வரும் டேன்சர் அளவிற்கு கூட நந்திதா ஸ்க்ரீனில் இல்லை ...

அடிக்கடி வரும் பாடல்களை பொதுவாக ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்லாலம் . ஆனால் இந்த படத்தில் ஸ்பீடே  இல்லாததால் அப்படி சொல்ல முடியவில்லை . விஜய் சூப்பரா டேன்ஸ் ஆடுறத நாங்க சன் மியூஸிக் லையே பாத்துட்டு போறோம் . அதுக்காக இப்புடியா !? . மற்றபடி
 " ஜிங்கிலியா  " தாளம் போட வைத்தால் விஜய் குரலில் " ஏண்டி ஏண்டி " மெஷ்மெரிசம் செய்கிறது . படத்தின் ஹைலைட் நடராசன் எ நட்டுவின் ஒளிப்பதிவு . சும்மா நச்சுன்னு இருக்கு . சிஜி சில இடங்களில் பல்லிளித்தாலும் நிறைய இடங்களில் சூப்பர் . ஆர்ட் டைரக்ஷன் அமர்க்களம் ...


சக்சஸ்  ஹீரோ விஜய் , ஸ்ரீதேவி , சுதீப் என பெரிய நடிகர் பட்டாளாம் , 100 கோடியை தாண்டிய பட்ஜெட் இப்படி கிடைத்த மிக பிரம்மாண்ட வாய்ப்பை நழுவ விட்டாலும் பரவாயில்லை சிதைத்து விட்டார் சிம்புதேவன் . பரிசலில் வரும் ராஜவம்ச குழந்தை , கொடுங்கோல் ஆட்சி , அந்த ராஜ்யத்துக்குள் செல்லும் ஹீரோ என பாகுபலி டைப் கதை தான் புலி . ஆனால் திரைக்கதை ?!. 100 கோடிக்கு மேல் இயக்குனரை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் சுஜாதா வின்  " திரைக்கதை எழுதுவது எப்படி " என்கிற 100 ரூபா புத்தகத்தை முதலில் வாங்கிக் கொடுத்திருக்கலாம் . பதுங்கவும் இல்லாமல் , பாயவும் இல்லாமல் ஒரே ஃப்ளாட்டாக இருக்கிறது புலியின் திரைக்கதை . 150 வயது ஆமை , ஒத்தைக் கண்ணன் , தவளை போன்ற சில சுவாரசியங்களும் படத்தில் உண்டு . ஹன்சிகா வை கருஞ்சிறுத்தையிடமிருந்து காப்பாற்றும் சீன் , விஜய் தன்னை வேதாளம்  என்று நிரூபிக்கும் சீன் போன்ற  ஒன்றிரண்டை ரசிக்கலாம் ...

வேதாளத்திடமிருந்து ஊர் மக்களை காப்பாற்ற விஜய் ஓடி வரும் ஒப்பெநிங் சீனில் புலி வேதாளத்தை ( அஜித் ?! ) துவட்டி எடுக்கும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் கத்த அவரோ வேதாளத்தின் காலை இறுகப்பிடித்து ஊரை காப்பாற்றுகிறார் . ஹீரோவின் பயந்த கேரக்டருக்கு ஏற்றபடி இந்த ஸீன்  இருந்தாலும் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் அடங்கிப் போகிறார்கள். வேதாளம் பிரபு வை  கொன்று விட்டு ஸ்ருதி யை கடத்திப் போவதை ஸீனாக வைக்காமல் செய்தி போல் நரேன் சொல்வதைக் கேட்டு விஜய் ஆவேசமாக போவது ஏதோ " ஆடித்தள்ளுபடி முடியப்போகுதாம்மா அதுக்குள்ளே சேலை எடுத்தரலாம் " என்று போவதைப் போல இருக்கிறது . ஒரு இலையைக் காட்டி சங்கிலி முருகன் வேதாளம் கதையை சொல்லி முடிப்பதற்குள் நாம் முருங்கை மரமே ஏறி விடுவோம் . பொதுவாக பாட்டுக்கு வெளியே போகிறவர்களை பார்த்திருப்போம் . இதில் வெளியில் போனவர்கள் பாட்டுக்கு உள்ளே வருகிறார்கள் ...

படம் என்ன அவ்வளவு மொக்கையா ? அப்படின்னா நீங்க அஜித் ரசிகரா ?1 என்று சிலர் கேட்கலாம் . ஆழ்வார் , ஆஞ்சநேயா போன்ற அஜித் படங்களாலும் பாதிக்கப்பட்ட அபலைத் தமிழர்களில் நானும் ஒருவன் தான் . விவரம் தெரியாத குழந்தைகளுக்கு படம் பிடிக்கலாம் . அவர்கள் சந்தோஷத்துக்காக படத்துக்கு போகிற பெரியவர்கள் ஷாப்பிங் போகும் போது ப்ளே ஏரியாவில் குழந்தைகளை விட்டு விட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பது போல விலகி நிற்பது நலம் . பிரம்மாண்டத்தால் பாகுபலி யுடன் ஒப்பிடப்பட்ட புலி வரிசையாக வெற்றிகளை கொடுத்துக்கொண்டிருந்த விஜய்க்கு திருஷ்டி கழிப்பதை போல ரசிகர்களுக்கும் சேர்த்து போடப்பட்ட பலி ...

ஸ்கோர் கார்ட் : 37 

ரேட்டிங்      : 2* / 5*


24 October 2014

கத்தி - KATHTHI - ஷார்ப் ...


துப்பாக்கி வெற்றியை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டுமொரு தீபாவளி ரிலீஸில் இணைந்திருக்கிறார்கள் விஜயும் , ஏஆர்.முருகதாசும் . கதைக்காக கத்தி மேலெல்லாம் நடக்காமல கல் தோன்றா மண் தோன்றா காலத்து டபுள் ஹீரோ ஆள்மாறாட்ட கத்திக்கு சோசியல்
மெஸேஜ் என்னும் சானை பிடித்து பளபளப்பாக்கியிருக்கிறார்கள் ...

கொல்கொத்தா ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கைதி கதிரேசன் (எ) கத்தி
( மேக்கப் போட்ட விஜய் ) , தன்னூத்து கிராமத்தை கார்ப்பரேட் குளிர்பான கம்பெனியின் நில ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற நினைக்கும் ஜீவானந்தம்
( மேகப்பில்லாமல் எண்ணை வழியும் முக விஜய் ) இந்த இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையில் இடம் மாறுகிறார்கள் . இட மாற்றத்தால் மனம் மாறும் கத்தி தன்னூத்து கிராமத்தை எம்.என்.சி முதலாளி ( நீல் நிதின் முகேஷ் ) யிடமிருந்து காப்பாற்றினானா என்பதை கொஞ்சம் நீட்டி முழக்கினாலும் ( ரெண்டேமுக்கா மணிநேரம் ) ஃப்ரெஸ்ஸான திரைக்கதையால் திறம்பட சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

எத்தனை வேடம் போட்டாலும் கெட்டப்பில் ரிஸ்க் எடுக்கத் தயங்கும் விஜய்க்கு ஏற்றபடியான டபுள் ஹீரோ சப்ஜெக்ட் . டான்ஸ் , ஃபைட் என்று துள்ளி விளையாடியிருக்கும் கத்தி விஜய் எமோஷனல் சீன்களில் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார் . போலீசுக்கே கைதியை பிடிக்க ஸ்கெட்ச் போட்டு கொடுப்பது , ரூபாயை சுண்டி விட்டு 50 அடியாட்களை அடிப்பது , ஏரியை அபகரித்து சென்னை மக்களை ரெண்டு நாட்கள் தண்ணியில்லாமல் தவிக்க விடுவது , ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் பிரஸ் மீட்டில் புள்ளி விவரங்களை அள்ளி தெளிப்பது என்று லாஜிக் பார்க்காமல் இருந்தால் இந்த விறு விறு விஜய்யின் மேஜிக்கை நன்றாகவே ரசிக்கலாம் . ஆனாலும் ஒரு விஜய் கண்ணை மட்டும் சிமிட்டி வித்தியாசம் காட்டியிருப்பது உலக சினிமாக்களிலேயே இது தான் முதல்முறை ...


மூணு  பாட்டுக்கு விஜய்யோடு சேர்ந்து அரைகுறை ஆடையில் ஆட ஆள் வேண்டும் . அந்த வேலைக்கு சமந்தா சரியாக பொருந்துகிறார் .( இதுக்கு எத்தன கோடியோ ! ) . அதெப்படியோ  தமிழ் சினிமாவில் ஹீரோ மட்டும் யாராக இருந்தாலும் பக்கா ப்ளான் போடும் புத்திசாலியாக இருக்கிறார்கள் . ஆனால் ஹீரோயின்கள் மட்டும் லூசு போலவே சித்தரிக்கப்படுகிறார்கள் . என்று தணியும் இந்த ஆணாதிக்க மோகம் ?! . ( ஹி ஹி கொளுத்திப் போட்டாச்சு ) . சோலோ காமெடியனாக வரும் சதீசுக்கு இந்த படம் செம ப்ரேக் . ஆல் தி பெஸ்ட் ப்ரோ . வில்லன் முகேஷ் பல்லை காட்டியெல்லாம் பயமுறுத்தாமல் கூலாக நடித்து ஸ்கோர் செய்கிறார் . இவருக்கு டப்பிங் பேசியவர் சூப்பர் தேர்வு ...

அனிருத்தின் பி.ஜி.எம் சான்சே இல்ல . சாதாரண சீன்களை கூட இவருடைய இசை பிரம்மாண்டமாக்குகிறது . அஜித் படங்கள் போல விஜய்க்கும் பின்னணி இசை பேசியிருக்கிறது . " செல்பி புள்ள " தாளம் போட வைத்தால் , யேசுதாஸ் குரலில் " யார் பெற்ற " பாடல் தழுதழுக்க வைக்கிறது . ,ஆனால் வழக்கமான விஜய்யின் மாஸ பாடல்கள் இதில் மிஸ்ஸிங் . படத்தில் சண்டைக்காட்சிகளும் பிரமாதம் ...


" ஐயாயிரம் கோடி கடன் வாங்கி திரும்ப கொடுக்காதவன் தற்கொலை பண்ணிக்கல , ஆனா அஞ்சாயிரம் வாங்கின விவசாயி வட்டி கட்ட முடியாம சாகுறான் " போன்ற வசனங்கள் படத்திற்கு பெரிய பலம் . விவசாயிகள் தற்கொலையைப் பற்றி எந்த அக்கறையும் காட்டாமல் டி.ஆர்.பி க்காக மட்டும் நியூஸ் தேடி அலையும் மீடியாக்களையும் இயக்குனரின் வசனங்கள் விட்டு வைக்கவில்லை . ஆனால் அதே சமயம் 2 ஜி உட்பட எவ்வளவோ  பெரிய ஊழல்களை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நான்காம் தூண்களின்  செயல்களை மறந்து விட்டு அவற்றை வெறும் மூன்றாம் தரமாக மட்டும் சித்தரித்திருப்பதை தவிர்த்திருக்கலாம் . இன்று சிட்டியிலிருக்கும் முக்கால் வாசி பேர் கிராமத்திலிருந்து வந்து செட்டிலானவர்கள்  என்பதை தெளிவாக விட்டு  விட்டு நகரவாசிகளை வில்லன்கள் போலவும் , கிராமத்து வாசிகளை நல்லவர்கள்  போலவும் சித்தரிக்கிறது படம் ...

டபுள் ஹீரோ ஃபார்முலா கதை , பாண்டவர் பூமி உட்பட பல படங்களில் பார்த்த விவசாயிகள் பிரசசனை போன்ற குறைகளை , சொல்ல வந்த விஷயத்திற்காக இயக்குனர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்கள் மறக்கடிக்கின்றன . சின்ன ஏ.வி என்று சொல்லிவிட்டு ஜீவானந்தத்தின் முழுக் கதையையும் காட்டுவது முதலில் நெளிய வைத்தாலும் ஆறு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி நெகிழ வைக்கிறது . மொத்தத்தில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வந்திருக்கும் இந்த கத்தி கொஞ்சம் பழசாக இருந்தாலும் சொன்ன விதத்தில் நல்ல ஷார்ப் ...

ஸ்கோர் கார்ட் : 42

( பின்குறிப்பு ) : அரசியல்வாதிகள் , காவல்துறையினர் , அரசு அதிகாரிகள் , மீடியாக்கள் , ஆசிரியர்கள் , கார்பரேட்கள் என்று எல்லோரையும்  தோலுரிக்கும் நம்மூர் சினிமாக்காரர்கள் ஏன் இதுவரை சினிமாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் , வரி ஏய்ப்புகள் , அதிகார துஷ்பிரயோகங்கள்,
ஊழல்கள் , பிரபலங்களின் இருட்டு பக்கங்கள் போன்றவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களை தைரியமாக எடுக்க முன்வரவில்லை ? அப்படி எடுத்தால் நிச்சயம் அந்த படத்தை நல்ல சினிமா ரசிகர்களுக்கு சமர்ப்பணம் என்று போடலாம )


12 January 2014

ஜில்லா - JILLA - தீவிர விஜய் ரசிகர்கள் வசிக்கலாம் ...




ண்பன் , துப்பாக்கி என்று புது பாணியில் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த விஜய் தலைவா வின் தோல்விக்கு பிறகு தன் பழைய பாணிக்கு திரும்பியிருக்கும் படம் ஜில்லா . தனது தீவிர ரசிகர்கள் மட்டுமே கல்லாவை  நிரப்பி விடுவார்கள் என்கிற அதீத நம்பிக்கையில் ஜில்லாவில் நேசனுடன் இணைந்து களம் இறங்கியிருக்கிறார் விஜய் . நினைத்தது பலித்ததா ?. பார்க்கலாம் ...

மதுரையின் பெரிய தாதா சிவன் ( மோகன்லால் ) , அவரது வளர்ப்பு மகன் சக்தி ( விஜய் ) . போலீஸ் என்றாலே பிடிக்காத சக்தியை தன்னுடைய சவுகரியத்துக்காக ஏ.சி ஆக்குகிறார் சிவன் . வளர்த்த கடா மார்பில் பாய்வது போல போலீசானவுடன் சிவனுக்கு எதிராக திரும்புகிறார் சக்தி . ஜெயித்தது சிவனா ? சக்தியா ? என்பதே மூன்று மணி நேர படம் ...



விஜய் தன் வழக்கமான துள்ளல் நடிப்பில் மனதை அள்ளுகிறார் . அவர் குரலில் வரும் கண்டாங்கி பாடலுக்கும் , சிவனும் பாடலில் அவர் நடனத்துக்கும் தியேட்டரே அதிர்கிறது .  என்ன தான் மந்திரி சிபாரிசில் போலீசானாலும் முதல் நாளே ஏதோ  காலேஜுக்கு போவது போல கலர்  ட்ரெஸ்ஸில் வருவது , கமிசனருக்கு சல்யூட் போடாமல் சவடாலாய் பேசுவது எல்லாம் ர்ரொம்பவெ ஓவர்ங்கண்ணா . போக்கிரியாக மனதில் பதியும் விஜய் போலீசாக , சாரி பாஸ் ...

டைட்டிலில் விஜய்க்கு முன்னாள் பெயர் வருவதோடல்லாமல் படம் முழுவதும் " நான் சிவன்டா " என்று விஜய் பேசாத பஞ்ச் டயலாக்ஸ் பேசி ரணகளப்படுத்துகிறார் சேட்டன் மோகன்லால் . மலையாள வாடையில் பேசினாலும் இந்த மதுரை தாதாவை ரசிக்கலாம் . பொதுவாக ராஜ்கிரண் செய்யக்கூடிய சாதாரண தாதா பாத்திரமானாலும் அதற்கு மோகன்லாலை தேர்ந்தெடுத்தது சிறப்பு . ஆனால் தன் மகன் ( மகத் ) செய்த தவறால் ஊரே பற்றியெரிய அதற்காக ஒரு சிறு வருத்தம் கூட காட்டாத இவரது கேரக்டர் பெரிய சறுக்கல் ...

காஜல் அகர்வால் மசாலா படங்களில் வரும் வழக்கமான ஹீரோயினாக வந்து போகிறார் . சூரி சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் டபுள் மீனிங் வசனங்கள் நெளிய வைக்கின்றன . இவர் அபாய இடத்தில் அடி வாங்கி அடிக்கடி கதறுவதும் எரிச்சல் . சம்பத் போன்ற சிறந்த நடிகர் வில்லனாக வந்து உதை வாங்குவது வருத்தமாக இருந்தாலும் விஜயுடனான இவரது மோதல் படத்திற்கு பலம் . தம்பி ராமையா , அட்டாக் பாண்டி எல்லாம் வீணடிக்கப்பட்டிருக்கிரார்கள் . டி.இமானின் இசையில் பாடல்கள் ஹம்மிங் செய்ய வைத்தாலும் பின்னணி இசை இரைச்சல் ...



கேரளாவில் விஜய்க்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து இணைக்கப்பட்டிருக்கும் மோகன்லால் , இடைவேளையில் விஜய் எடுக்கும் போலீஸ் அவதாரம் , விஜயின் துள்ளல் , சம்பத் கொடுக்கும் ட்விஸ்ட் இப்படி ஜில்லாவில் சில விஷயங்கள் நல்லாவே இருக்கின்றன ...

அதரப்பழசான கதை தான் என்றாலும் புதிதாய் யோசித்து சீன்கள் பிடிக்காமல் போனதில் கோட்டை விடப்பட்ட திரைக்கதை , படத்தின் நீளம் , மோகன்லால் கேரக்டரின் சறுக்கல் , அதனால் விஜய் - மோகன்லால் பிரிவு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது , தங்கை சென்டிமெண்டிற்காக புகுத்தப்பட்ட ஆர்.கே எபிசோட் இவையெல்லாம் ஜில்லாவின் கல்லாவை ரொம்பவே பாதிக்கின்றன . கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் கில்லி , போக்கிரி வரிசையில் வந்திருக்க வேண்டிய படம் வில்லு , சுறா அளவிற்கு மோசமாக இல்லாததால் ஜில்லாவில் தீவிர விஜய் ரசிகர்கள் வசிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41


27 August 2013

தலைவா - THALAIVAA - TIME TO LEARN ...


ரு படம் சொல்லப்பட்ட தேதியில் ரிலீசாகாமல் ஏதோ ஒரு காரணத்தால் தடை செய்யப்படும் போது அதற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது . அதற்கு சமீபத்திய உதாரணம் விஸ்வரூபம் . தமிழகத்தை விடுத்து உலகமெங்கும் படம் ரிலீசானாலும் மற்ற இடங்களில் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்சாலும் , ரசிகர்களின் மனமார்ந்த ஆதராவலும் படம் இரண்டு வாரங்கள் கழித்து ரிலீசாகியும் தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது . ஆனால் அதே வரிசையில் பிரச்சனையில் சிக்கிய தலைவா ஏனோ திக்குமுக்காடி விட்டது ...

மும்பை வாழ் தமிழர்களின் நலனுக்காக பாடுபடும் தாதா அண்ணா (எ) ராமதுரை  ( சத்யராஜ் ) . வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மகன் விஷ்வா
( விஜய் ) வின் கண் முன்னாலேயே அண்ணா இறந்து விட அவர் விட்ட பணியை தொடர தலைமைப் பொறுப்பேற்கும் மகனின் கதையே தலைவா ...


விஜய் வழக்கம் போல ஆட்டத்திற்கு தவிர வேறெதற்கும் அதிகம் மெனக்கெடவில்லை . இவர் வெள்ளை சட்டை , தடிமன் மீசை யுடன் தலைவனாக வரும் பின்பாதியை விட ஆட்டம் பாட்டம் என முன் பாதியில் வரும் நார்மல்  விஜயாகவே அதிகம் கவர்கிறார் . இதுவே கூட படத்திற்கு பெரிய சறுக்கலோ என்று தோன்றுகிறது . அமலா பால் இயக்குனர் விஜய் படங்களில் கூடுதல் அழகாக இருக்கிறார் . அவர் என்ன தான் அடக்க ஒடுக்கமாக வந்தாலும் சிந்து சமவெளி சீன்கள் கண் முன் வந்து நம்மை சீழ் படுத்துகின்றன ...

சத்யராஜ் சண்டைக் காட்சிகளில் வாயை கோணிக் கொள்வதை இன்னும் விடவில்லை . மற்றபடி வயதான தாதா கதாபாத்திரத்தில் கவர்கிறார் . சந்தானம் ஜவ்வென்று இழுக்கும் முன்பாதியை ஜிவ்வென்று ஆக்குகிறார் . சாம் ஆன்டர்சன் அனாவசிய இடைசெருகல் . நாசர் , பொன்வண்ணன் போன்றோர் சரியான தேர்வு . வில்லன் விஷயத்தில் அப்படி சொல்ல முடியவில்லை . ஜி.வி யின் இசையில் " வாங்கன்னா " தாளம் போட  வைத்தாலும் பின்னணி இசை பின்னடைவு . ஒளிப்பதிவு , எடிட்டிங் இரண்டும் படத்திற்கு தேவையான அளவு இருக்கின்றன ...



டைட்டிலிலேயே மணிரத்னம் , ராம்கோபால் வர்மா , ப்ரியதர்சன்  போன்றோருக்கு நன்றி தெரிவித்து தனது முந்தைய படங்கள் போலல்லாமல் கொஞ்சம் நேர்மையை காட்டியதற்காக இயக்குனர் விஜயை பாராட்டலாம் . இன்ஸ்பைர் ஆகி படம் எடுக்கலாம் , அதற்காக சீன்களை கூட புதிதாய் யோசிக்காமல் ஈயடிச்சான் காப்பியா அடிப்பார்கள் ? சாரி விஜய்  . இன்டர்வெல் ப்ளாக் , டேப்பிற்காக வில்லனும் , விஜயும் அலையும் சீன் போன்ற சிலவற்றை தவிர பெரும்பாலும் படம் நீளமாக இழுத்து ஒருவித அயர்ச்சியை தருகிறது ...

ஆய் , ஊய் என்ற சத்தமில்லாமல் ஒரு நாயகன் ஸ்டைல் ஆக்சன்  படத்தை விஜயை  வைத்து இயக்குனர் விஜய் எடுக்க நினைத்ததில் தப்பில்லை . ஆனால் அதை செயல்படுத்தியதில் நிறைய கவனம் செலுத்தியிருக்க வேண்டும் . ஏனெனில் இது போன்ற தாதாயிச படங்களில் இருக்கும் விறுவிறுப்பு படத்தில் டோட்டலி மிஸ்ஸிங் . மணிரத்னம் காட் பாதர் இன்ஸ்பிரேஷனில் எடுத்திருந்தாலும் அடுத்த தலைமுறைக்கு ஒரு ட்ரென்ட் செட்டராக இருந்த படம் நாயகன் . அதே போல நடிகர் விஜய் நடிப்பை மட்டுமல்ல ஒரு பிரச்சனையை நேரடியாக சமாளிக்கும் தைரியத்தையும் கமல்ஹாசனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் . தலைவா இரண்டு விஜய்களுக்கும் டைம் டு லேர்ன் ...

ஸ்கோர் கார்ட் : 40


8 August 2013

தலைவா - THALAIVAA - கதை என்ன ? ...


இளைய தளபதி விஜய் , இயக்குனர் விஜய் இருவரும் இணைந்திருக்கும் தலைவா படத்தை எஸ்.ஆர்.எம். க்ரூப் சேர்மன் பாரி வேந்தரின் மகன் மதன் வேந்தர் மூவீஸ் சார்பில் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். நாளை படம் ரிலீஸ் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்   இருக்கும் நிலையில் இரண்டு காரணங்களுக்காக பட வெளியீடு தள்ளிப்போகும் என்று தெரிகிறது ...

முதலாவதாக , எஸ்.ஆர்.எம் க்ரூப்பை எதிர்க்கும் சில மாணவர் அமைப்புகள் தலைவா படம் வெளியிடப்படும் திரையரங்குகளில் பாம் வைப்போம்  என்று தியேட்டர்களுக்கு கடிதம் அனுப்பியதாகவும் , அதை தொடர்ந்து காவல்துறை தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் பட்சத்திலேயே படத்தை வெளியிடுவோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது . அடுத்ததாக தலைவா படம் மும்பை தாராவியில் உண்மையில் வாழ்ந்த எஸ்.எஸ்.கே மற்றும் அவரது புதல்வன் எஸ்.கே.ஆர் ஆகிய இருவரையும் தவறுதலாக சித்தரிப்பதாக சொல்லி அவர்களது வாரிசு படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருப்பதும் , அதற்கு பதில் விளக்கம் தருமாறு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருப்பதும் படம் நாளை  ரிலீஸ் ஆகாததற்கு காரணமாக அறியப்படுகிறது ...

வழக்கில் குறிப்பிட்டுள்ள படி படத்தின் கதை யாதெனில் மும்பையில் வாழும் தமிழர் தீய வழியில் சம்பாதித்தாலும் அங்கிருப்பவர்களுக்கு நல்லது செய்கிறார் . இது பிடிக்காத எதிரிகள் அவரை கொன்று விடுகிறார்கள் . வெளிநாட்டிலிருந்து வரும் அவரது மகன் தந்தையின் நற்பணியை தொடர்வதோடு அவரை கொன்றவர்களையும் பழி தீர்க்கிறார் .  உண்மையில் இந்த காரணத்துக்காக வழக்கு தொடரப்பட்டிருந்தால் அது மணிரத்னம்  , ராம்கோபால் வர்மா போன்றோர் மீதும் தொடரப்பட்டிருக்க வேண்டும் . ஏனெனில் இதே கதையை தான் அவர்கள் நாயகன் , சர்க்கார் என்று ஏற்கனவே எடுத்துவிட்டார்கள் . அதே கதையை கொஞ்சம் களத்தை மாற்றி கமல் தேவர்மகன் எடுத்துவிட்டார் . இவர்கள் அனைவரின் மீதும் உண்மையிலேயே ப்ரான்சிஸ் போர்ட் தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் . அவர் தான் இது போன்ற படங்களுக்கெல்லாம் அக்மார்க் காட் பாதர் . அவரின் இயக்கத்தில் வெளிவந்த காட் பாதர் தான் மற்ற இயக்குனர்களுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷன் ...

தனிப்பட்ட ஒரு நபரையோ , சமூகத்தையோ நேரடியாக படம் புண்படுத்தாத பட்சத்தில் மேலும் சிக்கல் இருக்காது  என்று எதிர்பார்க்கலாம் . இந்த பிரச்சனை படத்தின் பப்ளிசிட்டிக்காக செய்யப்பட்ட ஸ்டண்டாகவும்  இருக்கலாம் என்கிறார் விஷயமறிந்த உதவி இயக்குனர். அதே போல விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காக போடப்பட்ட  முட்டுக்கட்டை என்றும் சொல்கிறார்கள் .  எது  எப்படியோ 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பலரது உழைப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் வெளி வரவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு . இந்த வருட ஆரம்பத்தில் இதே போல சிக்கலில் மாட்டிய விஸ்வரூபம் பின்னர் விஸ்வரூப வெற்றியடைந்ததை போல தலைவா தடைகளை தாண்டி மாபெரும் வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ...


14 November 2012

துப்பாக்கி - ஏ. ஆர். 47...


மிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு விஜய்க்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று நினைக்கிறேன் , வேலாயுதம் , நண்பன் வெற்றிகளை தொடர்ந்து  துப்பாக்கியிலும் ;சரவெடி வெடித்திருக்கிறார். வழக்கமாக விஜய் படங்களில் வரும் பஞ்ச் வசனங்கள் , குத்துப்பாட்டு , ஏய் , ஊய் என்று கத்தும் வில்லன்கள் ,  டாடா சுமோவில் வரும் அடியாட்கள் இவைகளெல்லாம் இல்லாமலேயே துப்பாக்கியை நன்றாக சுட வைத்திருக்கிறார் ஏ . ஆர் .முருகதாஸ் ...

விடுமுறைக்கு தன் குடும்பத்தை  பார்க்க மும்பைக்கு வரும் ஆர்மி மேன் ஜகதீஷ் ( விஜய் ) அங்கு தொடர் குண்டுவெடிப்பு நடக்கவிருப்பதை அறிகிறார் . தன் விடுமுறை முடிவதற்குள் குண்டுவெடிப்புகளையும் , அதற்கு காரணமானவனையும் எப்படி அழிக்கிறார் என்பதே கதை . ஆக்சனுக்கு நடுவில் அவ்வப்போது விஜய் ரிலாக்ஸ் செய்வதற்காக நிஷாவை ( காஜல் அகர்வால் ) லவ்வுகிறார் கம் கவ்வுகிறார் ...

ஆக்சன படத்தில் விஜய் அடக்கி வாசித்திருப்பது தான் புதுசே ஒழிய குறுந்தாடி தவிர கெட்டப்பில் விஜய்க்கு நோ சேன்ச். படம் முழுவதும் விஜய் துறுதுறுப்பாக இருப்பது பெரிய ப்ளஷ் . படத்தின் ஆரம்பத்திலும் , முடிவிலும் மட்டுமே  ராணுவ உடையில் வந்து விஜய் நம்மை பெருமூச்சு விடவைத்திருப்பது மிகப்பெரிய  ப்ளஷ் . மனிதர் ஆட்டம் , பாட்டத்தோடு ஹிந்தி , ஆங்கிலம் என்று மற்ற மொழிகளிலும் பேசி புகுந்து விளையாடியிருக்கிறார் .


விஜயுடன் சேர்த்து ரசிகர்களையும் ரிலாக்ஸ் ! செய்வதாய் நினைத்து கடுப்பேற்றுகிறார் மணிபர்ஸ் உதட்டழகி காஜல் அகர்வால் . கலகலவென்று அறிமுகம் ஆகும் காஜல் கேரக்டர் அதை தக்கவைத்துக் கொள்ளாமல் போனது  அவர் குற்றமல்ல . படத்திற்கு ஸ்பீட்  பிரேக்கர் போல இவர் வந்து போவது பெரிய குறை ...நண்பனில் கலக்கிய சத்யனுக்கு இந்த படத்தில் பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார் . பில்லா 2 வில் அஜித்திடம் அடி வாங்கிய வில்லன் வித்யுத் இதில் விஜயிடம் அடி வாங்குகிறார் அவ்வளவே . ஜெயராம் கொஞ்சம் அறுத்தாலும் கிச்சு கிச்சு மூட்டுகிறார் ...

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமை . எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம் , இயக்குனரின் விருப்பப்படி விட்டுவிட்டார் போல . ஹாரிஸ் " அண்டார்டிகா " , " கூகிள் " போன்ற தன் டெம்ப்ளேட் பாடல்களால் தாளம் போட வைக்கிறார் . மற்ற பாடல்கள் படத்தில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது போல சலிப்பை தருகின்றன .  பின்னணி இசைக்காக கொஞ்சம் முயற்சி செய்திருக்கிறார் என்று சொல்லலாம் ...

சாதாரணமான கதைக்கருவை சுவாரசியமாக்கும் திரைக்கதை , ரமணா , ஏழாம் அறிவு போல நீள , நீளமாக இல்லாமல் தேசப்பற்றை சுருக்கென்று ஏற்றும் பளிச் வசனங்கள் ,  எதிர்பாரா  நேரத்தில் வைக்கப்படும் ட்விஸ்ட் , அடுத்து என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்க வைக்கும் காட்சிகள் போன்றவை துப்பாக்கியை தூள்பாக்கி என்று சொல்ல வைக்கின்றன .


செல்போன் டவரை வைத்தே விஜய் எங்கிருக்கிறார் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம் எனும்போது அதை விட்டுவிட்டு வில்லன் விஜயை தேடி அலைவது  திரைக்கதைக்கு உதவியிருந்தாலும் லாஜிக்கை பொறுத்தவரை பெரிய சொதப்பல் . படத்தின் நீளம் , விஜய் - காஜல் காதல் காட்சிகள் , " நம்ம பயலுக அமெரிக்காவே போனாலும் அண்ட்ராயர் தான் போடுவாங்க்ய " என்பது போல விஜய் - வித்யுத் இருவருக்குமிடையே நடக்கும் ஒண்டிக்கு ஒண்டி க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி (  அதிலும் சண்டை  என்ற பெயரில் விஜய் டான்ஸ் ஸ்டெப்ஸ் போடுவதெல்லாம் ஓவர் ) போன்ற குறைகள் துப்பாக்கியை தப்பாக்குகின்றன .

" ஒன் மேன் ஆர்மி " யாக விஜய் சுற்றி வந்தாலும் அவரை அன்டர்ப்ளே செய்யவிட்டு அனைவரையும் ரசிக்க வைத்த விதத்திலும் ,  மாஸ் ஹீரோவாக  இருந்தாலும் இயக்குனரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தால் தன் ரசிகர்கள் வட்டத்தையும் தாண்டி ஹீரோக்கள் ரீச் ஆக முடியும் என்பதை நிரூபித்த விதத்திலும் ஏ . ஆர் . முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி - ஏ .ஆர் . 47...

ஸ்கோர் கார்ட் : 43 

30 September 2012

தாண்டவம் - தடுமாற்றம் ...


தெய்வதிருமகள் வெற்றிக்கு பிறகு விக்ரம் - இயக்குனர் விஜய் இருவரும் அதே டீமுடன் மீண்டும் தாண்டவத்தில் கை கோர்த்திருக்கிறார்கள் ... படம் வருவதற்கு முன்பே கதை என்னுது என்று உதவி இயக்குனர் பொன்னுசாமி எழுப்பிய குற்றச்சாட்டும் , அதை தொடர்ந்து அவருக்கு நியாயம் வழங்க முடியவில்லை என்று அமீர் உட்பட எட்டு பேர் பதவி விலகியதும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் , படத்தை பார்த்த பிறகு இதுக்காகவா இப்படி அடிச்சுக்கிட்டாங்க என்கிற நினைப்பு மட்டுமே மேலோங்கி நிற்கிறது ...

2011 இல் லண்டனில் ஒரு குண்டு வெடிப்பு , அதை தொடர்ந்து வரிசையாக சில கொலைகள் , கொலைகளை துப்பறியும் வீரகத்தி பிள்ளை ( நாசர் ) பார்வையிழந்த கெனி ( விக்ரம் ) தான் இதற்கு காரணமென்று கண்டுபிடிக்கிறார் ... பிறகு பார்வையிழந்தவர் கெனி இல்லை , அவர் எக்ஸ் ரா ஆபீசர் சிவா என்பதையும் , எதற்கு கொலைகள் செய்தார் என்பதையும் எந்த வித ஆக்ரோஷமும் இல்லாமல் நீ .. ள .. தாண்டவமாய் சொல்லியிருக்கிறார்கள் ... கொலாட்ரல் , டேர் டெவில் போன்ற படங்களை நினைவு படுத்தும் கதை தான் என்றாலும் விஜய்க்கு இது ஒன்றும் புதிதில்லை என்பதால் விட்டு விடுவோம் ...


கண் பார்வையிழந்த கெனி , ரா ஆபிசர் சிவா என்று இரண்டு தோற்றத்தில் வரும் விக்ரம் உடல் மொழியாலும்  , உடற்கட்டாலும் நம்மை கவர்கிறார் , ஆனால் முகம் மட்டும் வயதை காட்டிக் கொடுக்கிறது ... இரண்டு , மூன்று அடிகளில் எதிரிகளை இவர் வீழ்த்தும் சண்டைக்காட்சிகள் அருமை ... அனுஷ்கா எனக்கு பிடித்த நடிகை , ஆனாலும் இந்த படத்தில் ஹோண்டா ஆக்டிவாவில் வரும் ஆன்டி  போல தழுக் , முழுக் என்று இருக்கிறார் ... இவர் நடிப்பதற்கு ஒன்றும் பெரிதாய் பிரயத்தனப்படவில்லை... டூயட்  காட்சிகளில் இளமை ததும்பவில்லை , மற்றவை ( சரி விடுங்க ) ...


எமி பார்வையிழந்த கெனிக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ... சமூக சேவை என்ற பெயரில் சர்ச்சில் இவருடன் சேர்ந்து போட்டோக்ராபர் செய்யும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன , மற்றபடி சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை ... கொலை நடக்கும் இடங்களில் தானாய் வந்து மாட்டிக்கொள்ளும் டாக்ஸி டிரைவர் வேடத்தில் சந்தானம் ... நகைச்சுவைக்கு நல்ல ஸ்கோப் இருந்தும் படத்தின் முடிவு முன்னமே தெரிந்து விட்டதோ என்னமோ மனிதர் டல்லாகவே இருக்கிறார் ...

துப்பறியும் இலங்கை தமிழர் வேடத்தில் வரும் நாசர் அந்த ஸ்லாங்கோடு ஒத்துப்போக முடிந்த வரை முயற்சித்திருக்கிறார் ... தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வை விக்ரமின் நண்பனாக இருந்து கொண்டே பணத்திற்காக வில்லனாக மாறுவதை போல காட்டியிருப்பது சலிப்பை தருவதை தவிர வேறொன்றும் செய்யவில்லை ... இவருக்கும் , விக்ரமிற்கும் இடையேயான க்ளைமேக்ஸ் சண்டைகாட்சி விறுவிறுப்பு ... விக்ரமின் அம்மாவாக சரண்யா , மாமாவாக எம்.எஸ்.,பாஸ்கர்  , சில சீன்களே வந்தாலும் " தப்பாச்சே " என்று சொல்லி சிரிக்க வைக்கும் தம்பி ராமையா , பாலாஜி , லக்ஷ்மிராய் போன்றோரும் படத்தில் இருக்கிறார்கள் ...

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் ... விஜய் - ஜி.வி  கூட்டணி வழக்கம் போல கிளிக் ஆகியிருக்கிறது ... 25 வது படத்திற்காக ஜி.வி மெனக்கட்டிருப்பது " ஒரு பாதி கதவு " , " உயிரின் உயிரே " போன்ற மெலடிகளில் நன்றாகவே தெரிகிறது ...


பழி வாங்கும் கதை என்றாலும் வன்முறையையும் , வழக்கமான ஹீரோயிஷத்தையும் தவிர்த்திருப்பது , பாடல் காட்சிகளை படமாக்கிய விதம், மெதுவாக கொண்டு  சென்றாலும் முதல் பாதியில் முடிந்தவரை சஸ்பென்ஷை தக்க வைத்தது , விக்ரம் - அனுஷ்கா திருமண காட்சிகள் , கண் பார்வை இல்லாவிட்டாலும் ஒலி எழுப்பி அது ஏற்படுத்தும் எதிரலைகள் மூலம் ( எக்கோலொகேஷன் ) எதிரில் இருப்பவர்களை அடையாளம் காணும் முறையில் விக்ரம் பயிற்சி எடுப்பது போன்றவை தாண்டவத்தில் நம்மை லயிக்க வைக்கின்றன ...

முந்தைய படமான  தெய்வதிருமகள் - திருட்டு தேவதை  என்ற போதும்  திரைக்கதையாலும் , விக்ரம் - சாரா நடிப்பாலும் நம்மை ரசிக்க வைத்த விஜய் பெரிதும் கவராத கதை , மிக நீளமான திரைக்கதை , விக்ரம் நண்பனையே துரோகியாக இனம் கண்டு கொள்ளும் காட்சிகள் , அரைகுறையாய் கொடுக்கப்பட்ட த்ரில்லர் , ஆங்காங்கே மட்டும் மனதை தொடும் காதல் , ரசிக்க வைக்காத நகைச்சுவை  இவற்றால் தாண்டவத்தில் நிறையவே தடுமாறியிருப்பது நன்றாக தெரிகிறது...

ஸ்கோர் கார்ட் : 40  


14 January 2012

நண்பன் - வெற்றியாளன் ...



முதல்வன் படத்திற்காக பத்து வருடங்களுக்கு முன்பாகவே சேர்ந்திருக்க வேண்டிய விஜய் - ஷங்கர் இருவரும் இப்போது நண்பனில் கை கோர்த்திருக்கிறார்கள் ... " 3 இடியட்ஸ் " ரீமேக் வாயிலாக அவர்கள் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாகவே நண்பன் ஜெயித்திருக்கிறான் ... அமீர்கான் நடிப்பில் சேத்தன் பகத்தின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட அருமையான படத்தை விஜய்யின்  இமேஜிற்காக கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் அப்படியே எடுத்ததே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ...

வெங்கட் ( ஸ்ரீகாந்த் ) , சேவற்கொடி செந்தில் ( ஜீவா ) இருவரும் குசும்பனின்
( சத்யன் ) உதவியுடன் தங்களின் வாழ்க்கையையே நல்ல படியாக மாற்றியமைத்து விட்டு திடீரென காணாமல் போய் விட்ட நண்பன் பாரிவேந்தனை ( விஜய் ) தேடி போகிறார்கள் ... தேடலுக்கிடையில் நண்பன் யார் ? என்ன செய்தான் ? என்பதை பிளாஷ்பேக் மூலம் அழகாக விளக்குகிறார்கள் ... தேடிய  நண்பன் இவர்களுக்கு கிடைத்தானா ? என்பதே மீதி கதை ...

கல்வியை உணர்ந்து படிக்க வைக்காமல் இயந்திரத்தனமாக மனப்பாடம் செய்ய வைக்கும் பயிற்றுவித்தல் முறையும் , அதை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்களும் , தங்களின் ஆசையை பிள்ளைகளின் மேல் திணிக்கும் பெற்றோர்களும் ,  பள்ளி - கல்லூரிகளில் இருக்கும் ரேங்கிங் சிஸ்டமும் மாணவர்களை தேர்வில் வெற்றி பெற செய்தாலும் வாழ்க்கையில் தோற்கடித்து விடுகின்றன என்பதை செவிட்டில் அறைவது போல சொல்கிறது படம் ...


போக்கிரிக்கு பிறகு பெரிய வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த விஜய்க்கு கடந்த வருடம் காவலன் நல்ல பெயரையும் , வேலாயுதம் கொஞ்சம் வசூலையும் வாங்கிக்கொடுத்தன ... ஆனால் இவையிரண்டையும் பெரிய அளவில் வாங்கிக்கொடுத்திருக்கிறான் நண்பன் ... வழக்கம் போல கெட் -அப்பை மாற்றாவிட்டாலும் , பஞ்ச் டயலாக் , சண்டை இவைகளில்லாத வித்தியாசமான கேரக்டரில் தன்னை முழுமையாக புகுத்தி படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் விஜய் ... கீப் இட் அப் விஜய் ... உங்ககிட்ட இருந்து இன்னும் இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம்  !


மற்ற இருவரை விட ஜீவா கல்லூரி மாணவனாக வெகு இயல்பாக பொருந்துகிறார். ஏழை மாணவன் என்பதை தன் நடிப்பாலும் , உடல்மொழியாலும் நன்றாக வெளிப்படுத்துகிறார்... தண்ணியடித்து விட்டு வகுப்பறையில் இவர் செய்யும் கலாட்டா கல கல ... மாதவன் இடத்தில் ஸ்ரீகாந்தை நினைத்து பார்ப்பது கஷ்டம் என்றாலும் தன் லிமிடேசனை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார் ... குறிப்பாக அப்பாவிடம் தன் எதிர்காலத்திற்காக மன்றாடும் காட்சி அற்புதம் ...


ஒல்லியான இலியானா தன் இடுப்பாலும் , நடிப்பாலும் நம்மை கவர்கிறார் ! இராணியின் இயல்பான நடிப்பை தன் ஓவர் ஆக்டிங்கால் கெடுத்து விடுவாரோ என்ற பயத்தை ஆங்காங்கே ஏற்படுத்தினாலும் , அனுபவம் வாய்ந்த நடிப்பால் சத்யராஜ் சபாஷ் போட வைக்கிறார் ...

தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி பெரிய காமெடி பண்ணியவர் சத்யன் , ஆனால் நண்பனை பார்த்த பிறகு " 4 இடியட்ஸ் " என்று கூட பெயர் வைக்கலாமென சொல்லுமளவிற்கு காமெடியனாக மட்டுமல்ல  நல்ல நடிகனாவும் தன்னை நிரூபித்திருக்கிறார் ... எஸ்.ஜே.சூர்யா வந்தவுடன் தியேட்டரில் பயங்கரமாக கை தட்டுகிறார்கள் ! ஹீரோ ஆசையையெல்லாம்  ஒதுக்கி வைத்துவிட்டு  கேரக்டர் ஆர்டிஸ்டாக மாறினால் அவருக்கு நல்ல எதிர்காலம் என்று நினைக்கிறேன் ...

ஹாரிஸ் ஜெயராஜ் " சைய்ய சைய்யா " வில் இருந்து " அஸ்க் அஸ்க் " , " சலே சலோ " வில் இருந்து " என் நண்பன் போல " இப்படி ஏ.ஆர்.ஆரின் மெட்டுக்களை உருவியிருந்தாலும் வழக்கம் போல பாடல்களை ஹிட் செய்து விட்டார் ... மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு   ஊட்டியின்  ஹேர்பின் வளைவுகளை டாப் ஆங்கிளில் காட்டி மிரள வைக்கிறது ...



ரீமேக் படங்களாக இருந்தாலும் ஈயடிச்சான் காப்பி செய்வதை பொதுவாக யாரும்  விரும்புவதில்லை , இருப்பினும் இந்த படம் பார்த்த பிறகு நல்ல வேலை எதையும் மாற்றவில்லையே என "  3  இடியட்ஸ் " பார்த்தவர்களையும் , கதை நன்றாக இருந்தால் எந்த ஹீரோவும் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என "  3 இடியட்ஸ் " பார்க்காதவர்களையும் சொல்ல வைத்ததே படத்தின் பெரிய பலம்...

பதினான்கு ஆண்டுகளுக்கு முந்தைய கல்லூரி வாழ்க்கையை காட்டும் போது சரளமாக செல்போனை பயன்படுத்துவது , இலியானாவின் திருமண காட்சியை ஹிந்தி படத்தை போல வட இந்திய ஸ்டைலில் வைத்திருப்பது , என்ன தான் ஆள் மாறாட்டம் செய்திருந்தாலும் நண்பர்களை மட்டுமின்றி காதலியையும் பத்து ஆண்டுகளாய் வேறெந்த விதமான அழுத்தமான காரணமும் இல்லாமல் விஜய் பிரிந்திருப்பது , நகைச்சுவையாகவே நகர்த்திக்கொண்டு போவதால்
" 3  இடியட்ஸ் " ஏற்படுத்தியதை போன்ற சீரியஸ் பாதிப்பை ஏற்படுத்த தவறியது போன்ற சிலவற்றையும் குறைகளாக சொல்லலாம்  ...

ரீமேக் படமாக இருந்தாலும் ஷங்கரின் முந்தைய வெற்றிப்படங்களின் வசூலுக்கு எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதை நிரூபிக்கும் நண்பன் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவரின் பார்வைக்கும் ஒரு வெற்றியாளன் ...

ஸ்கோர் கார்ட் : 45 

1 November 2011

வேலாயுதம் - ரைட்ஸ் வாங்காத ரீமேக் ...

   

      ரீமேக் படங்கள் மட்டுமே இயக்கிய ராஜா , கில்லி போன்ற ரீமேக் படங்களால் உச்சத்தை எட்டிய விஜய் இருவருடனும்  இணைந்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் ரைட்ஸ் வாங்காமல் தயாரித்திருக்கும்  ரீமேக் படமே
 " வேலாயுதம் " ... தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து கொண்டிருந்த விஜய்க்கு இந்த படம் சின்ன கமர்சியல் ப்ரேக் ...

    அக்கிரமம் செய்பவர்களை அழிப்பதற்கு " வேலாயுதம் " வருவான் என்று பத்திரிக்கையாளர் ஜெனிலியா கதை கட்டி விட , இதற்கிடையில் தான் உயிரையே வைத்திருக்கும் தங்கையின்  கல்யாண செலவுக்கு சீட் பணத்தை வாங்க சென்னைக்கு வருகிறார் உண்மையான  வேலாயுதம் விஜய் ...விஜய் அக்கிரமக்காரர்களை அழித்தாரா ? அவர் தங்கையின் கல்யாணம் நடந்ததா ? என்பதே மீதி கதை...

     பல வெற்றிப் படங்களின் சீன்களை ஒரு ஜாடியில் போட்டு குலுக்கி அதில் சிலவற்றை பொறுக்கி எடுத்ததே படத்தின் திரைக்கதை... விஜய்யின்  வழக்கமான பாட்டு , டான்ஸ் , பைட்டு , காமெடி , தங்கை சென்டிமென்ட் என போகிறது படம் ...
           
    விஜய் தனக்கேற்ற டெயிலர் மேட்   கதாபத்திரத்தில் ஜொலிக்கிறார் ... எண்ணை வழியும் கருப்பு முகத்தோடு சுற்றுபவர் பாடல்களில்  மட்டும் வெளுப்பாக இருக்கிறார் ... சூர்யா சிக்ஸ் பேக்கை வயிற்றில் காட்டினால் விஜய் த்ரீ பேக்கை விலா எலும்பில் காட்டி வெற்றுடம்புடன் எதிரிகளை அடிக்கிறார் ... தங்கை இறந்தவுடன் அழும் இடத்தில் கொஞ்சம் நன்றாகவே நடிக்கிறார் ...

     விஜய்யை சுற்றி சுற்றி வரும் அத்தை பெண்ணாக கொழுக் மொழுக் ஹன்சிகா ... ம்ம் எங்களுக்கும் தான் கிராமத்துல அத்தை பொண்ணு இருக்கு , ஏம்பா வயித்தெரிச்சலை கிளப்புறீங்க ... பாடல்களில் தொப்பையை காட்டுவதை தவிர இவருக்கு பெரிதாக வேறொரு வேலையுமில்லை ...

                                         
                                                                         
    பொதுவாக லூசு பொண்ணு போல நடிக்கும் ஜெனிலியாவுக்கு இதில் சீரியஸ் வேடம் ... அம்மணி முக பாவங்களில் ஸ்கோர் செய்கிறார் ... தங்கையாக சரண்யா பெர்பெக்ட் ... சூரி ஆரம்பித்து வைக்கும் காமெடியை சந்தானம் டேக் ஓவர் செய்த பிறகு படம் சூடு பிடிக்கிறது...

     சில படங்களில் நிறைய வில்லன்களை வைத்து வெறுப்பேத்துவார்கள் , ஆனால் இதில் உள்துறை அமைச்சராக வரும் வில்லனே குண்டு வைப்பது , கள்ள நோட் அடிப்பது , பெண்களை கடத்துவது என்று எல்லா அக்கிரமங்களையும் செய்வதாக  காட்டி வெறுப்பேத்துகிறார்கள்...காதெல்லாம் முடி வச்சுகிட்டு , கண்ண கண்ண உருட்டிக்கிட்டு வர கார்ட்டூன் கேரக்டரை எங்கப்பா புடிச்சீங்க ?  இது பத்தாதுன்னு பாகிஸ்தானிலிருந்து வந்து  சென்னையில் குண்டு வைக்கும் டெர்ரரிஸ்ட் வில்லன் வேற ... விஜயகாந்தும் , அர்ஜுனும் படங்களில் நடிக்காததால் விஜய் இவர்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்திருப்பார் போல ...

    விஜய் - விஜய் ஆண்டனி கூட்டணியில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன ... அதிலும் சரியான இடங்களில் பாடலை பொறுத்தி ரிலாக்ஸ் செய்ய வைக்கிறார்கள் ...



    பழைய காமெடி தான் என்றாலும் விஜய்யின் கோழி சேசிங் சீனில் ஆரம்பித்து சூரி , சந்தானம் உதவியில் விறுவிறுவென போகிறது முதல் பாதி படம் ... விஜய் கற்பனை வேலாயுதமாக இருந்த போது உள்ள பரபரப்பு இரண்டாவது பாதியில் உண்மையான வேலாயுதமாக மாறி பறந்து , பறந்து சண்டை போடும் போது புஸ்சென்று போய் விடுகிறது ...


     விஜய் பாணி படமென்றாலும் படம் ஆரம்பித்து பதினைத்து நிமிடங்கள் கழித்தே விஜய் வருவது ,அரைமணி நேரம் கழித்து  முதல் பாடலும் , முக்கால் மணி நேரம் கழித்தே முதல் பைட்டும் இருப்பது , விஜய் ஒரே ஒரு இடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசுவது , கடைசியில் குத்து பாடல் வைக்காமல் செண்டிமெண்ட் பாட்டு வைத்தது இப்படி சில வித்தியாசங்கள் காட்டியிருக்கிறார்கள் ... மற்றபடி பி ,சி சென்டர்களில் படம் ஒடுமென்றாலும் வேலாயுதத்தை நீளாயுதமாக இல்லாமல் கொஞ்சம் ட்ரிம் செய்து , புதிதாக யோசித்து விறுவிறுப்பான சீன்களை வைத்திருந்தால் கில்லி , போக்கிரி வரிசையில் விஜய்க்கு மிகப்பெரிய  வெற்றிப்படமாக அமைந்திருக்கும் ...  
" நண்பன் " கை கொடுப்பானா ? பொங்கலுக்கு பிறகு பார்க்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41 
Related Posts Plugin for WordPress, Blogger...