Showing posts with label SACHIN. Show all posts
Showing posts with label SACHIN. Show all posts

14 November 2011

நூறாவது நூறு ...

                      
    நம் நாட்டில் எவ்வளவோ மதங்கள் இருந்தாலும் கிரிக்கெட்டை தங்கள் மதமாகவும் , சச்சினை அதன் கடவுளாகவும் வழிபடும் ரசிகர்கள் கோடிக்கணக்கானோர் ...

    சச்சின் நூறாவது நூறை அடிக்க வேண்டும் என்ற நூறு கோடி இதயங்களின் வேண்டுதலே சாதாரணமான இந்தய - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை  அசாதரணமான எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது ... அதிலும் கடந்த முதல் டெஸ்டில் சச்சின் 76 ரன்களுக்கு அவுட் ஆனார் ... அவர் படபடப்புடன் இருந்தது அவருடைய சாட் செலக்ஷனில் நன்றாகவே தெரிந்தது.

    இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் சச்சின் பதட்டப்படாமல் தன்னுடைய  நேச்சுரல் கேமை ஆடினாலே தன் நூறாவது சதத்தை பூர்த்தி செய்வார் என்பது வல்லுனர்களின் கணிப்பு... அதிலும் போட்டி அவருக்கு லக்கியான ஈடன் மைதானத்தில் நடைபெறுவதும் , வீக்கான மேற்கிந்திய தீவுகளுடன் மோதுவதும் அவருக்கு சாதகமாக இருக்கும் மற்ற சிறப்பம்சங்கள். ஏற்கனவே சச்சின் ஈடன் மைதானத்தில் மூன்று முறை சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ...

                                     
    இந்த வருடம் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தன்னுடைய 99 வது அடித்த சச்சின் அதற்கு பிறகு மற்ற போட்டிகளில் நூறாவது சதத்தை அடிப்பார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க கடைசியில் மிஞ்சியது ஏமாற்றமே ...

    அதிலும் குறிப்பாக செமி பைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக 85 ரன்களுக்கு அவர் அவுட் ஆனதில் பலருக்கு பி.பி எகிறியது ... உலக கோப்பை வெற்றி தந்த மாபெரும் சந்தோசத்தில் அந்த ஏமாற்றம் சிறிது காலம் மறக்கப்பட்டது ...

    இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் அந்த பரபரப்பு தொற்றிக்கொண்டது ... இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் ஒட்டு மொத்த ஆட்டமும் சொதப்பலாக இருந்ததால் கடைசி டெஸ்டில் 9 ரன்களில் சச்சின் தவறவிட்ட சதம் பெரிய சத்தத்தை எழுப்பவில்லை ...இங்கிலாந்தை நாம் பழி தீர்த்த 5  ஒரு நாள் போட்டிகளிலும் காயம் காரணமாக சச்சின் இடம் பெறவில்லை ...

               
     சாதனையின் மறு பெயர் சச்சின் ... தன் பதினாறாவது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இன்று வரை அதிக டெஸ்ட் ரன்கள் , அதிக ஓ.டி,ஐ ரன்கள் , ஒரே வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் இப்படி எத்தனையோ சாதனைகள் அவருக்கு பின்னால் இருந்தாலும் கடந்த 8  மாதங்களில்  ஒ.டி.ஐ மற்றும் 5  டெஸ்ட் மேட்ச்கள் ஆடியும் தன் நூறாவது சதத்தை பூர்த்தி செய்யாததில்   அனைவருக்கும் வருத்தமே ...

     அவருக்கும் வருத்தம் இருக்காதா என்ன? .சாதனைகள் நிறைய படைத்த சச்சினுக்கு மற்றொரு நிறைவேறப்போகும் சாதனையே  நூறாவது சதம் என்றாலும் , அது இந்திய மண்ணில் , அதிலும் புகழ் பெற்ற ஈடன் மைதானத்தில் நிறைவேறுமானால் ரசிகனுக்கு அதை விட சிறந்த சந்தோசம் வேறொன்றும் இருக்க முடியாது ...

14 October 2011

இந்திய அணி பழி தீர்க்குமா ? பதுங்கி விடுமா ? ...


                                                   
    இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது ... இந்திய மண்ணில் போட்டி நடைபெறுவதும் , ஏற்கனவே இந்தியா இங்கிலாந்தை ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் சொந்த மண்ணில் தோற்கடித்திருப்பதும் நமக்கு சாதகமாக இருந்தாலும் , இங்கிலாந்தில் இந்திய அணி எட்டுக்கு பூஜ்ஜியம் என்று வாங்கிய உதையை யாரும் மறக்கவில்லை ... 


    உலககோப்பை வெற்றி தந்த மமதையில் மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பப்பட்ட கத்துக்குட்டி இந்திய அணி நன்றாக ஆடி வெற்றி வாகை சூடினாலும் வலிமையான இங்கிலாந்து அணிக்கு முன் அந்த ஜம்பம் எடுபடவில்லை...


     ஐ.பி.எல் போட்டிக்கு எல்லா நாட்டு வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆட வர அப்பொழுது கூட இங்கிலாந்து அணியினர் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளுக்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதன் பலன் வீண்போகவில்லை ... சவாலாக இருக்கும் என்று நினைத்த இந்திய அணி இப்படி சரண்டர் ஆகுமென்று அவர்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் ... 



    இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு எதிரான வியூகம் சரியில்லாததும் , காயம் காரணமாக ஜாகிர் , சேவாக் போன்றோர் ஆடாததும் , திராவிட் தவிர யாரும் பார்மில் இல்லாததும் தோல்விக்கான காரணங்களாக கூறப்பட்டாலும் , இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியன் பைசா லீக்  கிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை டெஸ்ட் போட்டிகளுக்கு கொடுக்காததே மிக முக்கிய காரணம் ... 
                                      
     இதற்கு நேர்மாறான போக்கே இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் நல்ல வெற்றிகளை தேடித்தந்தது ... இது போன்ற டூர்களில் வழிநடத்த கிறிஸ்டன் இல்லாததும் பெரிய இழப்பு ... டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதல் இடத்தை இழந்ததும் , நூறாவது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் அதை நிறைவேற்றாததும் பெரிய ஏமாற்றங்கள் ... கேப்டன் ஆனதிலிருந்து 11 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் கூட தோல்வியை கண்டிராத தோனிக்கும் இது மறக்க வேண்டிய தொடராகவே அமைந்திருக்கும் ... 

                                 
    டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து ட்வென்டி - ட்வென்டி , ஒரு நாள் தொடர் இவற்றிலும்  சச்சின் , சேவாக் , யுவராஜ் , ஜாகிர் போன்ற சீனியர்கள் ஆடா விட்டாலும் தோனியின் தலைமையிலான ரைனா , கோலி , பிரவீன் உள்ளிட்ட இளம் இந்திய அணி கிடைத்த ஒன்றிரண்டு வெற்றி வாய்ப்புகளையும் நழுவ விட்டது ...

   சீனியர் வீரர்களின் காயம் ஒருபுறம் , தோல்வி கொடுத்த பயம் மறுபுறம் இவையிரண்டிற்கும் இடையே தேர்வுக்குழு திராவிட மாயையில் சிக்கியதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை ... அவரும் இந்த ஒரு நாள் தொடருடன் நிம்மதியாய் நிறைவு பெற்றார் ... அறிமுக வீரர் அஜன்கிய ரஹானேவின் ஆட்டம் மட்டுமே ஓரளவு நிம்மதி கொடுத்தது ...


    ஆனால் இந்த முறை ஆட்டம் இந்திய மண்ணில் நடைபெறுவதால் அணியில் அரவிந்த் , வரோன் , ராகுல் ஷர்மா உள்ளிட்ட இளம் பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து இந்த பரீட்சார்த்த முயற்சி தொடருமா என்பது கேள்விக்குறியே ... பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச்களில் தங்களை நிரூபிக்க அவர்களும் போராட வேண்டியிருக்கும் ...  ஹர்பஜனுக்கு இது நல்ல பிரேக் ... சாம்பியன் லீக் இறுதி போட்டியில் மும்பையின் வெற்றிக்கு அவர் வழிவகுத்தது இதற்கு சான்று ...

    சச்சின் , சேவாக் இல்லாத நிலையில் குக் தலைமையின் கீழ் வலுவான இங்கிலாந்து அணியை தோனியின் இளம் இந்திய அணி சொந்த மண்ணில் பழி தீர்க்குமா ? இல்லை பதுங்கி விடுமா ? இரு வாரங்களில் தெரிந்து விடும் ...
Related Posts Plugin for WordPress, Blogger...