Showing posts with label THALAIVAA. Show all posts
Showing posts with label THALAIVAA. Show all posts

27 August 2013

தலைவா - THALAIVAA - TIME TO LEARN ...


ரு படம் சொல்லப்பட்ட தேதியில் ரிலீசாகாமல் ஏதோ ஒரு காரணத்தால் தடை செய்யப்படும் போது அதற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது . அதற்கு சமீபத்திய உதாரணம் விஸ்வரூபம் . தமிழகத்தை விடுத்து உலகமெங்கும் படம் ரிலீசானாலும் மற்ற இடங்களில் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்சாலும் , ரசிகர்களின் மனமார்ந்த ஆதராவலும் படம் இரண்டு வாரங்கள் கழித்து ரிலீசாகியும் தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது . ஆனால் அதே வரிசையில் பிரச்சனையில் சிக்கிய தலைவா ஏனோ திக்குமுக்காடி விட்டது ...

மும்பை வாழ் தமிழர்களின் நலனுக்காக பாடுபடும் தாதா அண்ணா (எ) ராமதுரை  ( சத்யராஜ் ) . வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மகன் விஷ்வா
( விஜய் ) வின் கண் முன்னாலேயே அண்ணா இறந்து விட அவர் விட்ட பணியை தொடர தலைமைப் பொறுப்பேற்கும் மகனின் கதையே தலைவா ...


விஜய் வழக்கம் போல ஆட்டத்திற்கு தவிர வேறெதற்கும் அதிகம் மெனக்கெடவில்லை . இவர் வெள்ளை சட்டை , தடிமன் மீசை யுடன் தலைவனாக வரும் பின்பாதியை விட ஆட்டம் பாட்டம் என முன் பாதியில் வரும் நார்மல்  விஜயாகவே அதிகம் கவர்கிறார் . இதுவே கூட படத்திற்கு பெரிய சறுக்கலோ என்று தோன்றுகிறது . அமலா பால் இயக்குனர் விஜய் படங்களில் கூடுதல் அழகாக இருக்கிறார் . அவர் என்ன தான் அடக்க ஒடுக்கமாக வந்தாலும் சிந்து சமவெளி சீன்கள் கண் முன் வந்து நம்மை சீழ் படுத்துகின்றன ...

சத்யராஜ் சண்டைக் காட்சிகளில் வாயை கோணிக் கொள்வதை இன்னும் விடவில்லை . மற்றபடி வயதான தாதா கதாபாத்திரத்தில் கவர்கிறார் . சந்தானம் ஜவ்வென்று இழுக்கும் முன்பாதியை ஜிவ்வென்று ஆக்குகிறார் . சாம் ஆன்டர்சன் அனாவசிய இடைசெருகல் . நாசர் , பொன்வண்ணன் போன்றோர் சரியான தேர்வு . வில்லன் விஷயத்தில் அப்படி சொல்ல முடியவில்லை . ஜி.வி யின் இசையில் " வாங்கன்னா " தாளம் போட  வைத்தாலும் பின்னணி இசை பின்னடைவு . ஒளிப்பதிவு , எடிட்டிங் இரண்டும் படத்திற்கு தேவையான அளவு இருக்கின்றன ...



டைட்டிலிலேயே மணிரத்னம் , ராம்கோபால் வர்மா , ப்ரியதர்சன்  போன்றோருக்கு நன்றி தெரிவித்து தனது முந்தைய படங்கள் போலல்லாமல் கொஞ்சம் நேர்மையை காட்டியதற்காக இயக்குனர் விஜயை பாராட்டலாம் . இன்ஸ்பைர் ஆகி படம் எடுக்கலாம் , அதற்காக சீன்களை கூட புதிதாய் யோசிக்காமல் ஈயடிச்சான் காப்பியா அடிப்பார்கள் ? சாரி விஜய்  . இன்டர்வெல் ப்ளாக் , டேப்பிற்காக வில்லனும் , விஜயும் அலையும் சீன் போன்ற சிலவற்றை தவிர பெரும்பாலும் படம் நீளமாக இழுத்து ஒருவித அயர்ச்சியை தருகிறது ...

ஆய் , ஊய் என்ற சத்தமில்லாமல் ஒரு நாயகன் ஸ்டைல் ஆக்சன்  படத்தை விஜயை  வைத்து இயக்குனர் விஜய் எடுக்க நினைத்ததில் தப்பில்லை . ஆனால் அதை செயல்படுத்தியதில் நிறைய கவனம் செலுத்தியிருக்க வேண்டும் . ஏனெனில் இது போன்ற தாதாயிச படங்களில் இருக்கும் விறுவிறுப்பு படத்தில் டோட்டலி மிஸ்ஸிங் . மணிரத்னம் காட் பாதர் இன்ஸ்பிரேஷனில் எடுத்திருந்தாலும் அடுத்த தலைமுறைக்கு ஒரு ட்ரென்ட் செட்டராக இருந்த படம் நாயகன் . அதே போல நடிகர் விஜய் நடிப்பை மட்டுமல்ல ஒரு பிரச்சனையை நேரடியாக சமாளிக்கும் தைரியத்தையும் கமல்ஹாசனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் . தலைவா இரண்டு விஜய்களுக்கும் டைம் டு லேர்ன் ...

ஸ்கோர் கார்ட் : 40


8 August 2013

தலைவா - THALAIVAA - கதை என்ன ? ...


இளைய தளபதி விஜய் , இயக்குனர் விஜய் இருவரும் இணைந்திருக்கும் தலைவா படத்தை எஸ்.ஆர்.எம். க்ரூப் சேர்மன் பாரி வேந்தரின் மகன் மதன் வேந்தர் மூவீஸ் சார்பில் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். நாளை படம் ரிலீஸ் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்   இருக்கும் நிலையில் இரண்டு காரணங்களுக்காக பட வெளியீடு தள்ளிப்போகும் என்று தெரிகிறது ...

முதலாவதாக , எஸ்.ஆர்.எம் க்ரூப்பை எதிர்க்கும் சில மாணவர் அமைப்புகள் தலைவா படம் வெளியிடப்படும் திரையரங்குகளில் பாம் வைப்போம்  என்று தியேட்டர்களுக்கு கடிதம் அனுப்பியதாகவும் , அதை தொடர்ந்து காவல்துறை தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் பட்சத்திலேயே படத்தை வெளியிடுவோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது . அடுத்ததாக தலைவா படம் மும்பை தாராவியில் உண்மையில் வாழ்ந்த எஸ்.எஸ்.கே மற்றும் அவரது புதல்வன் எஸ்.கே.ஆர் ஆகிய இருவரையும் தவறுதலாக சித்தரிப்பதாக சொல்லி அவர்களது வாரிசு படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருப்பதும் , அதற்கு பதில் விளக்கம் தருமாறு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருப்பதும் படம் நாளை  ரிலீஸ் ஆகாததற்கு காரணமாக அறியப்படுகிறது ...

வழக்கில் குறிப்பிட்டுள்ள படி படத்தின் கதை யாதெனில் மும்பையில் வாழும் தமிழர் தீய வழியில் சம்பாதித்தாலும் அங்கிருப்பவர்களுக்கு நல்லது செய்கிறார் . இது பிடிக்காத எதிரிகள் அவரை கொன்று விடுகிறார்கள் . வெளிநாட்டிலிருந்து வரும் அவரது மகன் தந்தையின் நற்பணியை தொடர்வதோடு அவரை கொன்றவர்களையும் பழி தீர்க்கிறார் .  உண்மையில் இந்த காரணத்துக்காக வழக்கு தொடரப்பட்டிருந்தால் அது மணிரத்னம்  , ராம்கோபால் வர்மா போன்றோர் மீதும் தொடரப்பட்டிருக்க வேண்டும் . ஏனெனில் இதே கதையை தான் அவர்கள் நாயகன் , சர்க்கார் என்று ஏற்கனவே எடுத்துவிட்டார்கள் . அதே கதையை கொஞ்சம் களத்தை மாற்றி கமல் தேவர்மகன் எடுத்துவிட்டார் . இவர்கள் அனைவரின் மீதும் உண்மையிலேயே ப்ரான்சிஸ் போர்ட் தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் . அவர் தான் இது போன்ற படங்களுக்கெல்லாம் அக்மார்க் காட் பாதர் . அவரின் இயக்கத்தில் வெளிவந்த காட் பாதர் தான் மற்ற இயக்குனர்களுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷன் ...

தனிப்பட்ட ஒரு நபரையோ , சமூகத்தையோ நேரடியாக படம் புண்படுத்தாத பட்சத்தில் மேலும் சிக்கல் இருக்காது  என்று எதிர்பார்க்கலாம் . இந்த பிரச்சனை படத்தின் பப்ளிசிட்டிக்காக செய்யப்பட்ட ஸ்டண்டாகவும்  இருக்கலாம் என்கிறார் விஷயமறிந்த உதவி இயக்குனர். அதே போல விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காக போடப்பட்ட  முட்டுக்கட்டை என்றும் சொல்கிறார்கள் .  எது  எப்படியோ 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பலரது உழைப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் வெளி வரவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு . இந்த வருட ஆரம்பத்தில் இதே போல சிக்கலில் மாட்டிய விஸ்வரூபம் பின்னர் விஸ்வரூப வெற்றியடைந்ததை போல தலைவா தடைகளை தாண்டி மாபெரும் வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ...


Related Posts Plugin for WordPress, Blogger...