Showing posts with label ஒரு கன்னியும் மூணு களவானிகளும். Show all posts
Showing posts with label ஒரு கன்னியும் மூணு களவானிகளும். Show all posts

10 April 2014

ஒரு கன்னியும் மூணு களவானிகளும் - OKMK - கன்னித் திருட்டு ...




மௌன குரு வெற்றிக்குப் பிறகு அவசரப்படாமல் கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் அருள்நிதி ஃபேண்டசி டைப் இயக்குனர் சிம்புதேவனுடன் கை கோர்த்திருக்கும் படம் ஒ.க.மூ.க . முந்தைய படம் பெரிய அளவில் போகாததால் வெற்றிக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் அருள்நிதி க்கு இப்படம் கை கொடுத்ததா ? பார்க்கலாம் ...

காதலியின் திருமணத்தை முறியடித்து அவளை சர்ச்சிலிருந்து தன் சகாக்கள் உதவியுடன் கடத்த திட்டமிடுகிறார் தமிழ் ( அருள்நிதி ) . இந்த சிம்பிளான கதையின் முடிவு ஒரு நிமிட  தாமதத்தால் எப்படி மாறுகிறது என்பதை மூன்று கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு மூன்று  விதமான பின்னணியில் 12பி பட பாணியில் சொல்வதே படம் ...

ஆறடி உயரம் என்றவுடன் ஆக்ஷன் அவதாரமெல்லாம் எடுக்காமல் வித்தியாசமான காமெடி படத்தை தேர்ந்தெடுத்தமைக்கு அருள்நிதி க்கு பாராட்டுக்கள் . பெரிதாய் ரியாக்ஷன் எதுவும் கொடுக்காமல் அண்டர்ப்ளே செய்தாலும் சின்ன சின்ன வசன உச்சரிப்புகளில் ரசிக்க வைக்கிறார் . " எதுக்கு சார் என்ன போய்  கடத்த சொன்னீங்க , போக வர கன்வேயன்ஸ் கொடுத்தா நானே வந்துடப் போறேன் " என்று நாசரிடம் அப்பாவியாய் சொல்லுமிடம் நைஸ் ...


பிந்துமாதவி படம் நெடுக பனியனை போட்டுக்கொண்டு நடித் ... சாரி ஓடியிருக்கிறார் . பெரிய கண்களை உருட்டிக் கொண்டு அவர் ஓடும் போது நமக்கு தான் கொஞ்சம் பி.பி ஏறுகிறது  . " இவரும் பார்ட்னரா " என்று படம் நெடுக பதட்டப்படும் பகவதிபெருமாள் தான் படத்திற்கு பெரிய ப்ளஸ் . அருள்தாஸ் , நரேன் உட்பட  படத்தில் வரும் எல்லா கேரக்டர்களும் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார்கள் . நாசர் , எம்.எஸ்.பாஸ்கர் இருவரையும் இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம் ...

பிரம்மா , நாரதர் என்று நாடக பாணியில்  கதை ஆரம்பித்தாலும் அருள்நிதி கடத்தல் ப்ளானை சொல்ல ஆரம்பிக்கும் போதே டேக் ஆஃப் ஆகி முதல் எபிசோட் வரை படு ஸ்பீடாக போகிறது . அதன் பிறகு அடுத்தடுத்த எபிசோட்கள் என்ன தான் சுவாரசியமாக இருந்தாலும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வதால் வரும் சலிப்பை தவிர்க்க முடியவில்லை . அதே சமயம் ஒரே ஆர்டிஸ்டுகளை வைத்துக்கொண்டு வேறு வேறு விதமாக கதை சொல்வது அவ்வளவு எளிதல்ல . ஆனால் வசனங்களிலும் , காட்சியமைப்புகளிலும் நல்ல வேறுபாடுகள் காட்டி திரைக்கதையை திறம்பட செதுக்கியிருக்கிறார் சிம்புதேவன் . குறிப்பாக நடுநடுவே வரும் அருள்நிதி - ஹர்ஷிதா ரெட்டி காதல் காட்சிகள் ரசிக்க வைக்கும் ஹைக்கூஸ் ...



தர்பூசிணி கடை வைத்திருக்கும் பெண் , கேக்குடன் ஊர்ந்து செல்லும் எறும்புகள் , ஃபோன் பேசும் பெண் என்று சின்ன சின்ன விஷயங்களிலும் கண்டினுட்டி மிஸ் ஆகாமல் உழைத்திருப்பவர்கள்  பெரிய பில்டப்புடன் ஒலிம்பிக்கில் ஓடுவது போல ஃபிளாட்டில் இருந்தே ஓட ஆரம்பிப்பவர்களை அதன் பிறகு வழி மறிப்பவர்களுடன் எல்லாம் சாகவாசமாக பேச வைப்பது பேத்தல் ...

முக்கியமாக மூன்றாவது எபிசோட  வரும் போதே நாம் பொறுமையை  இழக்க தொடங்கி விடுகிறோம் . இயக்குனருக்கும் இந்த எண்ணம் தோன்றியதலோ என்னவோ வி.எஸ்.ராகவனை " இவுங்கள நாம சேத்து வக்கலேனா அடுத்த கதைய ஆரம்பிச்சுருவாங்க " என்று சொல்ல வைத்து சமாளித்திருக்கிறார் . இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருந்தால் ந.கொ ப.கா அளவிற்கு  ஹிட் ஆகியிருக்க வேண்டிய வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார்கள் . படு ஸ்லோவான ப்ரொமோ , " ரன் லோ ரன் " படத்தை தழுவிய  கதை போன்ற சில குறைகள் இருந்தாலும் இரண்டரை மணி நேரம் நல்ல விதத்தில் நம் பொழுதைக் கடத்திய மூணு களவானிகளின் கன்னித் திருட்டை ரசிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 42 

Related Posts Plugin for WordPress, Blogger...