சிலு சிலுவென வீசும் தென்றல் , மழைக்கு முன் வரும் தூறல் , குழந்தையின் சிறு புன்னகை , மனக்க மனக்க குடிக்கும் பில்டர் காபி இவையெல்லாம் தரும் சுகத்தையும் , சிலிர்ப்பையும் குறும்படத்திலும் காண முடியும் ... அப்படிப்பட்ட குறும்படங்களை பகிர்ந்து கொண்டால் என்ன என்று எனக்கு தோன்றிய எண்ணத்தின் விளைவே இந்த " குறும்பட கார்னர்"...
என்ன தான் பணம் சம்பாதித்தாலும் , ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வகை வகையாய் தின்றாலும் அம்மா கைகளில் குவித்து குடுக்கும்
ஒரு பிடி சோறுக்கு ஈடாகுமா ? ...
இந்த கேள்விக்குள் புதியது வந்தாலும் பூர்வீகத்தை மறக்காத எத்தனையோ விஷயங்கள் உள்ளடக்கம் ... இந்த மெசேஜை நேரடியாக சொல்லாமல் நகைச்சுவையாக சொல்லியிருக்கும் குறும்படமே " பண்ணையாரும் பத்மினியும் "
பாரதிராஜாவிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த "தேனீ" முருகன் பண்ணையாராகவும் , பாலா சரவணன் கார் ஒட்டுபவராகவும் நடித்திருக்கிறார்கள்... கிராமத்து மக்களின் வெள்ளந்தி மனதையும் , அவர்கள் எதன் மீதும் காட்டும் அன்பையும் பிரதிபலிக்கும் குறும்படம்...
தலைப்பை பார்த்தவுடன் வேறு மாதிரி நினைப்பவர்கள் பார்க்கும் போது விழுந்து , விழுந்து சிரிப்பதே இந்த குறும்படத்தின் முக்கிய சாராம்சம் ...
இயல்பான நடிப்பு , நேர்த்தியான ஒளிப்பதிவு , அருமையான இசை
இதன் மற்ற சிறப்பம்சங்கள் ...
பாரதிராஜாவிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த "தேனீ" முருகன் பண்ணையாராகவும் , பாலா சரவணன் கார் ஒட்டுபவராகவும் நடித்திருக்கிறார்கள்... கிராமத்து மக்களின் வெள்ளந்தி மனதையும் , அவர்கள் எதன் மீதும் காட்டும் அன்பையும் பிரதிபலிக்கும் குறும்படம்...
தலைப்பை பார்த்தவுடன் வேறு மாதிரி நினைப்பவர்கள் பார்க்கும் போது விழுந்து , விழுந்து சிரிப்பதே இந்த குறும்படத்தின் முக்கிய சாராம்சம் ...
இயல்பான நடிப்பு , நேர்த்தியான ஒளிப்பதிவு , அருமையான இசை
இதன் மற்ற சிறப்பம்சங்கள் ...
இயக்கம் : எஸ் . யு . அருண் குமார்
