Showing posts with label ஸ்டாலின். Show all posts
Showing posts with label ஸ்டாலின். Show all posts

12 July 2011

மு.க.வின் குடும்ப அரசியல் தி.மு.க செயற்குழுவில் வெடிக்குமா ..?

                                               
    2 ஜி ஸ்பெக்டெர்ம் ஊழலில் ராஜா கைது ,தேர்தலில் படு தோல்வி, கூட்டணி தர்மம் கொஞ்சம் கூட இல்லாமல் சி.பி.ஐ யை வைத்து துரத்தி துரத்தி அடிக்கும் காங்கிரஸ், கனிமொழி கைது அதைத் தொடர்ந்து ஜாமீன் மறுப்பு,  தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்த நில அபகரிப்பு விவகாரங்களில் தற்போதைய அரசு காட்டி வரும் ஆர்வம் ,
2 ஜி ஸ்பெக்டெர்ம் விவகாரத்தால் தயாநிதி ராஜினாமா இப்படி தி.மு.க விற்கு அடுத்து அடுத்து விழுந்த அடிகளால் கொஞ்ச காலம் அடங்கியே இருந்தது மு.க.அழகிரி - ஸ்டாலின் இவர்களுக்கு இடையேயான பனிப்போர்.....

      ஆனால் கோவையில் 23 ஆம் தேதி நடக்கவிறுக்கும் தி.மு.க செயற்குழு கூட்டத்தில் குடும்ப அரசியல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... தேர்தல் தோல்விக்கு 2 ஜி விவகாரம் மட்டும் காரணம் அல்ல கட்சிக்குள் நிலவும் குடும்ப ஆதிக்கமே முழுக் காரணம் என்று ஸ்டாலின் தரப்பு நம்புவதோடு மட்டுமல்லாமல் அதை ஆதாரத்தோடு செயற்குழுவில் முன்வைக்கவும் முனைப்பு காட்டி வருவது அழகிரி தரப்பினரிடையே புகைச்சலை உண்டாக்கியிருக்கிறது...
                                      
           ஸ்டாலின் தரப்பு குடும்ப ஆதிக்கத்தை எதிர்ப்பதில் எந்த வித ஆச்சரியமும் இல்லை..பொதுவாக தி.மு.க வின் குடும்ப அரசியலை எதிர்ப்பவர்கள் கூட ஸ்டாலின் தி.மு.க வில் வளர்ந்த விதத்தை விமர்சிப்பதில்லை ..அவர் வலுக்கட்டாயமாகவோ , வேறு யாருடைய வளர்ச்சியைத் தடுப்பதற்கோ தி.மு.க விற்கு வரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே...கலைஞரின் மகன் என்பதையும் தாண்டி கட்சியினரிடையே அவருக்குள்ள செல்வாக்கையும், மதிப்பையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது ...
                                                   
     தென் தமிழ்நாட்டில் தி.மு.க கட்சி வளர்ந்ததற்கு அழகிரி முக்கிய காரணம் என்றாலும் கடந்த தேர்தலில் கட்சி வீழ்ந்ததற்கும் அவரின் நடவடிக்கைகள் தான் காரணம் என்பது கட்சியினரிடையே தற்போது பரவலாக நிலவி வரும் கருத்து...தயாநிதியின் வளர்ச்சியை தடுப்பதற்காக கவிதை எழுதிக் கொண்டிருந்த கனிமொழியை கட்சிக்குள் கொண்டு வந்தார் கலைஞர்.. இன்று அதுவே அவர் கண் கலங்குவதற்கு காரணமாகிவிட்டது                  
                                                                                  
                              அரசியலையும் தாண்டி சினிமா,ரியல் எஸ்டேட் , பத்திரிக்கை என்று குடும்ப அரசியலின் ஆதிக்கம் விரிவானது...உழைத்து பணம் அதிகம் சம்பாதித்தாலே ஊரில் கண் போடுவார்கள் என்று ஒரு வழக்கு உண்டு..இங்கோ ஊரையே அடித்து சம்பாதித்தால் மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா ?..தேர்தலில் தக்க பதிலடி கொடுத்தார்கள்..


     எம்.ஜி.ஆர் கட்சியை தன் குடும்பம் போல பாவித்தார்..அதுவே அவரின் வெற்றி...கலைஞரோ தன் குடும்பத்தையே கட்சியாக்கினார்..பொதுமக்களையும் விட தி.மு.க வின் உண்மையான தொண்டர்களையே இது அதிகம் பாதித்தது... கடந்த வருடம் கலைஞர் தன் பிறந்த நாள் விழாவில் தனக்கு அடுத்ததாய் முதல்வர் பதவிக்கு ஸ்டாலினை முன்மொழியப் போவதாக அறிவித்தார்.. ஆனால் அழகிரியின் தலையீட்டால் அது பாழாய்ப் போனது...

      ஒரு தகப்பனாக இரு மகன்களை மட்டுமல்ல ஒரு தலைவனாக கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கலைஞர் வைக்கவில்லை என்பதையே இது காட்டியது...பொதுவாக எந்த ஒரு கேள்வி கேட்டாலும் அதற்கு வேறு
ஏதாவது ஒரு பதிலை சொல்லி ( தி.மு.க வின் தேர்தல் தோல்விக்கு பிராமணர்களே காரணம் , பத்திரிக்கைகளின் தவறான சித்தரிப்பால் தான் தயாநிதி ராஜினாமா செய்தார் இப்படி சில உதாரணங்கள் ).
சமாளிக்கும் திறன் படைத்த கலைஞர் இந்த செயற்குழு கூட்டத்திலும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த ஏதாவது ஒரு அஸ்திரம் வைத்திருப்பாரா? மு.க வின் குடும்ப அரசியல் தி.மு.க செயற்குழுவில் வெடிக்குமா..? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ....


....
Related Posts Plugin for WordPress, Blogger...