Showing posts with label சூர்யா. Show all posts
Showing posts with label சூர்யா. Show all posts

15 November 2020

சூரரை போற்று | போற்றலாமா ? தூற்றலாமா ?!! I SOORARAI POTRU ...

சூர்யா தயாரிப்பு, நடிப்பில் சுதா கொங்குரா இறுதிசுற்று வெற்றிக்கு பிறகு நான்கு வருட இடைவெளியில் இயக்கியிருக்கும் படம் சூரரை போற்று . சாதாரணமான ஆட்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்கிற கனவை நிஜத்தில் நிஜமாக்கிய கேப்டன் கோபிநாத் எழுதிய அவரின் சுயசரிதை Simply fly புனைவை சினிமாவுக்காக மட்டுமில்லாமல் தனக்ககேற்றபடியும் சூர்யா - சுதா மாற்றியிருப்பதே சூரரை போற்று...

பெரியாரிய , கம்யூனிஸ சிந்தனைகளோடு வரும் சூர்யா பேசியே கொல்லப்போகிறார் என பயந்தால் நல்ல வேளை அடக்கி வாசித்திருப்பது ஆறுதல் . அதுவும் அபபாவை பார்க்கப் போக டிக்கட் காசில்லாமல் ஏர்போர்ட்டில் கெஞ்சும் இடம் அருமை.  பாரக்க ஊர்வசியின் தங்கை போலிருந்தாலும் நடிப்பிலும் , பாத்திரப் படைப்பிலும் அபர்ணா அசத்துகிறார் . பல கோடி ரூபாய் தேவைப்படும் இடத்தில் பதினோராயிரம் கொடுத்து விட்டு போதாதா என அப்பாவியாய் கேட்கும் கருணாஸ் கவனிக்க வைக்கிறார் ...

முகம் சாந்தமாய் இருந்தாலும் சகுனித்தனமான பார்வையில் வில்லத்தனத்தை காட்டத் தவறவில்லை பரேஷ் ராவத் . ஜி.வி.பிரகாஸ் குமாரின் இசையில் பின்ணணியும் , பாடல்களும் அருமை ...

சாதாரண மனிதன் பல போராட்டங்களை தாண்டி ஜெயிக்கும் தெரிந்த கதை தானென்றாலும் அதை திரைக்கதையில் சொன்ன விதத்தால் ஜெயிக்கிறார் சுதா . உண்மைக்கதையை அப்படியே எடுக்க முடியாது தான் அதற்காக அதை சொன்ன விதத்தில் கொஞ்சமாவது உண்மை வேண்டாமா ? சூர்யா அப்துல் கலாமை சந்திப்பது , ஊர் மக்கள் நிலத்தை அடமானம் வைத்து அவருக்கு பணம் அனுப்புவது , ஃப்ளைட்டை தரையிரங்க விடாமல் வில்லன் தடுப்பது என படத்தில் நிறைய பூ சுத்தல் ...

நிஜத்தில் இப்புத்தகத்தை எழுதியவர் ஐயங்கார் . ஆனால் அவர் கதாபாத்திரத்தை பிற்படுத்தப்பட்ட பெரியாரியவாதியாக காட்டுவதில் சுதா கொங்கரா , ஜுமித் மாங்கா என சாதியை பெயருடன் தாங்கியவர்களுக்கு என்ன அவசியமோ இல்லை அழுத்தமோ தெரியவில்லை . அமேசான் ப்ரைமுக்கும் , தொடர்  தோல்விகளால் தவித்த சூர்யாவுக்கும் இந்த சூரரை போற்று - சூர்யாவை தேற்று ...

ரேட்டிங்க்   : 3.25

ஸ்கோர் கார்ட்: 43

Pls Click below link to watch Video Review ...

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/1bFWGqPzCvI" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>






 



29 October 2011

ஏழாம் அறிவு - ஆறாம் அறிவே ...


     ஒரு படத்திலேயே இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் , சமீபத்தில் தோல்வியே கண்டிராத சூப்பர் ஹீரோ இருவரின் கூட்டணியில் ஆறு வருட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமே இல்லை ... அதிலும் பிரமோக்களை தாண்டி " போதி தர்மன் " என்ற பல்லவ இளவரசனை பற்றி ஏ.ஆர்..முருகதாஸ் எடுத்துக்கொண்ட கதைக்களம் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக்கியது ...

    வான சாஸ்திரத்தில்  இருந்து வயகரா வரை இங்கிருந்து மூல காரணிகளை வெளிநாட்டவர்கள்  சுருட்டி செல்ல நாமோ அந்த வரலாறு தெரியாமல் அயல்நாட்டு  மோகத்தில் இருக்கிறோம் என்பதை உரக்க சொல்வதால் வரலாற்றோடு கலந்து கட்டிய கற்பனையை நாம் கண்டுகொள்ளாமல் விடலாம் ...
                                  
     1600  வருடங்களுக்கு முன் காஞ்சிபுரத்திலிருந்து சீனா செல்லும் பல்லவ இளவரசன் போதி தர்மன் அங்கேயே தங்கி சீனர்களுக்கு மருத்துவத்தையும்  , தற்காப்பு கலையையும் கற்று தருவதோடல்லாமல் தன் வாழ்கையையும்  முடித்து கொள்கிறார் ...

    தற்காலத்தில் சீனர்கள் அந்த கலையை பயோ வார் மூலம் நம்மை அழிப்பதற்காகவும்  , போதி தர்மன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஸ்ருதியை கொல்வதற்காகவும் டோன் லீ என்பவனை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள் ... போதிதர்மன் பரம்பரையில் வந்த சூர்யாவை கொண்டு இந்த பயங்கரத்தை ஸ்ருதி எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை ...



     நடுவில் மானே தேனே போல ஆறு பாடல்கள் , காதல் , வில்லனின் ஹிப்னாடிச கொலைகள் , நீள , நீள வசனங்கள் , போதி தர்மன் பற்றிய போதனைகள் என போகிறது படம் ...

    முதல் பதினைந்து நிமிடத்திற்குள் கதை எதை நோக்கி செல்கிறது என்பதை பார்வையாளர்களுக்கு சொல்லி விடுவதே சிறந்த திரைக்கதைக்கு அடையாளம்  என்பார்கள் ... ஆனால் இந்த படத்தில் முதல் இருபது நிமிடங்களுக்குள் மொத்த கதையையும் சொல்லிவிட்டு பின் படம் முழுவதும் அந்த சுவாரஷ்யத்தை தக்க வைக்க தவறி விடுகிறார்கள் ...

                           
    சூர்யா சிக்ஸ் பேக்கிற்கு மெனக்கெட்ட அளவிற்கு நடிப்பில் மெனக்கெடவில்லை ... அவர் போதி  தர்மனாக பிரகாசித்தாலும்  அவருடைய அரவிந்தன் கேரக்டரை வில்லனும்  , ஸ்ருதியும் அமுக்கி விடுகிறார்கள் ... அதிலும் சூர்யா ஸ்ருதியை  விழுந்து , விழுந்து காதலித்து விட்டு பின் ஸ்ருதி ஏமாற்றி விட்டார் என்று சொல்லி " எம்மா , எம்மா " என வழக்கமான காதல் தோல்வி  பாட்டு பாடுவது செயற்கை திணிப்பு ...

    ஸ்ருதிக்கு தமிழில் அருமையான அறிமுகம் ... படத்தில் சூர்யாவை விட அவருக்கு தான் வசனங்கள் அதிகம் ... அதனால் தானோ என்னவோ அவர் கஜினி அசின் அளவிற்கு மனதில் ஒட்டவில்லை ... மற்ற படி கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ...

                    
    வில்லனை எதிபார்த்து படத்திற்கு  நிறைய பேர் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன் ... அவர் அறிமுகம் ஆகும் போது அவ்வளவு கைதட்டல்கள் ... பார்வையாலே கலக்கும் வில்லன் ... அதற்காக இவர் படம் நெடுக கண்களாலேயே ஹிபனாடிச கொலைகள் செய்து கொண்டிருப்பதும் கொடுமை... ஒருவனை ஹிப்னாடிசம் செய்யும் போது நடுவில் தடுப்பு இருக்க கூடாது என்பது நியதி , ஆனால் வில்லனோ சகட்டுமேனிக்கு லாரி , கார் ஓட்டுபவர் என்று ஒருவனை விடாமல் தொடர்ச்சியாக கொலை செய்யும் போது சலிப்பு தட்டுகிறது ...

    ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனுக்கு ஒரு சபாஷ் ... படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவு வரை அருமையான ஒளிப்பதிவு ... ஹாரிஸ்
" ஒ ரிங்கா " பாடலை " டாக்ஸி டாக்ஸி " யில் இருந்து சுட்டிருந்தாலும்    
              
" எம்மா எம்மா " பாடலிலும் " தோழா " பாடலிலும் ஒரிஜினாலிட்டி காட்டுகிறார் ... அதிலும் குறிப்பாக " எம்மா எம்மா " வில் எஸ்.பி.பி யின் குரலும் , கபிலனின் வரிகளும் மனதை வருடுகின்றன ... இருந்தும் பாடலுக்கான லீட் அழுத்தமாக இல்லாததால் அழகு குறைகிறது ...

                      
     ஏற்கனவே , தசாவதாரம் போன்ற படங்கள் பயோ வாரை தொட்டிருந்தாலும்  இதற்காக இயக்குனர் நிறைய மெனக்கட்டிருப்பது டீடைளிங்கில் தெரிகிறது ... ஆனால் அது ஓவர்டோஸ் ஆகாமல் தடுத்திருக்கலாம் ...

     " மஞ்சளே மொளைக்காத நாட்டுக்காரன் நம்ம ஊர் மஞ்சளுக்கு பேட்டர்ன் ரைட் வாங்குறான் " ,  " 800 வருசமா இருக்கற இங்கிலிஷ்ல நீங்க பேசலாம் பல்லாயிரம் வருசமா இருக்கற தமிழ்ல நான் பேச கூடாதா " போன்ற நச் வசனங்கள் நிறைய ... வசனங்களில் நாம் நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டு எதையோ தேடி அலைகிறோம் என்பதன் ஏக்கம் நன்றாக தெரிகிறது ... அதே போல தமிழ் , தமிழன் என்று வசனங்களில் பிரச்சார  நெடி ...
        
     போதி தர்மன் " தமிழன் "  என்று நிறைய இடங்களில் சொல்கிறார்கள் , ஆனால் பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் , அவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்து சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக கொண்டு ஆண்டவர்கள் என்கிறது தமிழர் வரலாறு ... அதே போல் போதி தர்மன் சீனாவில் பரப்பியது " ஜென் புத்திசம் " என்ற கோட்பாடே , தற்காப்பு கலைகள் அங்கு முன்பே இருந்தன என்கிறது உலக வரலாறு ...


     சீனாவில் கடவுளாக வணங்கப்படும் புத்தர் நம் நாட்டில் பிறந்தவரே ... அவரை போல போதி தருமனையும் 28 வது குரு மாராக சீனர்கள் ஏற்றுக்கொண்டதில் நமக்கெல்லாம் பெருமை , அந்த பெருமையை இந்த படம் மூலம் பறை சாற்றியதால் ஏ.ஆர்.முருகதாஸை கண்டிப்பாக பாராட்டலாம் ...

     ஆனால் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையை ஏதோ இருவர் மட்டும் சம்பந்தப்பட்டது போல எடுத்து சென்றது  , காட்சிகளால் சொல்ல வந்ததை விளக்காமல் வெறும் வசனங்களாலேயே நிரப்புவது , " கஜினி " யில் இருந்தது போல காதல் காட்சிகள் இதில் சுவாரஷ்யமாக இல்லாதது இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஏழாம் அறிவு - ஆறாம் அறிவே ...

ஸ்கோர் கார்ட் : 43
Related Posts Plugin for WordPress, Blogger...