Showing posts with label மின்சாரம். Show all posts
Showing posts with label மின்சாரம். Show all posts

13 May 2013

மின்வெட்டு கவிதைகள் ...



மின்கட்டணம் உயர்ந்தும்
பணம் செலவாகவில்லை
மின்வெட்டுக்கு நன்றி ...!

இப்பொழுதெல்லாம்
உணவை பார்த்தவுடன்
காக்கைகள் கரைவதில்லை
காக்கைதொகை கூடிவிட்டதோ
மின்சாரம் கசியாததால் ...!

பக்கத்து வீட்டுக்காரியுடன்
இனி சண்டையில்லை
இருவரும் துணி உலர்த்த
மின்கம்பிகளையே
பயன்படுத்திக் கொள்கிறோம் ...!

பாட்டிகளை மீண்டும்
கதை சொல்ல வைத்த
மின்சார வாரியத்திற்கு நன்றி ...!

காதலியே
ஏன் அடிக்கடி
காணாமல் போய்  விடுகிறாய்
நீ
மின்வாரிய  ஊழியரின் பெண்ணோ ...?!



Related Posts Plugin for WordPress, Blogger...