Showing posts with label விக்ரம். Show all posts
Showing posts with label விக்ரம். Show all posts

21 October 2015

10 எண்றதுக்குள்ள - 10 E - வேகமா எண்ணியிருக்கலாம் ...


கோலிசோடா ஹிட் டுக்கு பிறகு  இயக்குனர் விஜய்மில்டன் - ஐ ஹிட்டடித்த கையோடு நடிகர் சீயான் விக்ரம் இருவரும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் இணைந்திருக்கும் படம் 10 எண்றதுக்குள்ள . இவை தவிர படத்தின் எதிர்பார்ப்பு எகிறியதற்கு மற்றொரு காரணம் இளைஞர்களின் தற்போதைய சென்சேஸன்  சமந்தா . இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்பை விக்ரம் - சமந்தா காம்பினேஷனை வைத்து ஓரளவு மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று சொல்லலாம் ...

சொன்ன டயத்துக்கு எதையும் டெலிவரி செய்யக்கூடிய  ஃபாஸ்ட் டிரைவர் ஹீரோ விக்ரமுக்கு  ( படத்தில் அவருக்கே பெயரே இல்லை  )  முசெளரி க்கு காரை கொண்டு சேர்க்கும் அசைன்மெண்ட் வருகிறது . காருக்குள் அவருக்கு தெரியாமல் இருப்பது ஹீரோயின் ஷகீலா ( நோ டென்ஷன் அது சமந்தாவோட பேரு ) . பிறகு என்ன நடந்திருக்கும் என்கிற  கடைசி பெஞ்ச் ஆடியன்ஸ் வரை தெரிந்த கதையை ட்விஸ்டோடு சேர்த்து ஸ்பீட் ப்ரேக்கரும் வைத்து சொல்லியிருக்கிறார்கள் ...

படத்துக்கு நிறைய மெனக்கெட்ட விக்ரம் அதுக்கு மேல என்றெல்லாம் ரிஸ்க் எடுக்காமல் கேசுவலாக செய்திருக்கும் படம் . படத்தில் லேசி போல காணப்பட்டாலும் ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறார் . சமந்தாவிடம் இவர் மாட்டிக்கொண்டு படும்பாடு சுவாரசியம் . சமந்தாவுக்கு விக்ரமுக்கு ஈக்குவலாக ஏன் கொஞ்சம் தூக்கலாகவே வெயிட்டான ரோல் . டிரைவிங் கற்றுக்கொள்கிறேன் பேர்வழி என்று இவர் அடிக்கிற லூட்டி தனியாக காமெடியன் இல்லாத குறையை தீர்க்கிறது . முதலில் கண்ணாடி போட்டுக்கொண்டு அப்பாவி போல இருப்பவரிடம் போகப்போக கண்ணாடியையும் காணோம் , அப்பாவித்தனத்தையும் காணோம் . ஒருவேளை கண்ணாடியோடு சேர்த்து அதுவும் தொலைந்து விட்டதோ என்னமோ ?! ...


படத்தின் சர்ப்ரைஸ் எளிமென்ட் சீரியஸ் டானாக வந்து சிரிப்பு காட்டும் பசுபதி. முன்டாசுப்பட்டி மூலம் நம்மை கவர்ந்த ராமதாசை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம் . ஹிந்திக்கார மைதாமாவு வில்லன்கள் படத்தின் கதைக்கு பொருத்தம் . சார்மி குத்தாட்டம் போடும் அயிட்டம் சாங் படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் . விக்ரமின் ஒபெனிங் ஸீன் உட்பட படத்தின் சி.ஜி கவுத்தினாலும் பாஸ்கரனின் ஒளிப்பதிவும் , மாஸ்டர் விஜயனின் சண்டைக்காட்சிகளும் படத்தை காப்பாற்றுகின்றன . டி.இமான் இசையில் பாடல்கள் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படியில்லை ...

ஒரு பெண்ணை இந்தியாவின் இந்த கோடியிலிருந்து அந்த கோடிக்கு கொண்டு செல்லும் பையா டைப் கதை . அதில் எதற்கு ஹீரோயின் கடத்தப்படுகிறாள் என்கிற ட்விஸ்டை கலந்து கதையெனும் காரை ஓட்டியிருக்கிறார்கள் . கடைசியில் அதற்கு சொல்லப்படும் காரணம் கொஞ்சம் வித்தியாசமாகப் பட்டாலும் பெரிதாக ஒட்டவில்லை . முசெளரி க்கு போன பிறகு ஏதோ இங்கிருக்கும் முசிறிக்கு போவது போல டிக்கெட் எடுத்து சமந்தாவை பஸ் ஏற்றி விடுகிறார் விக்ரம் . இப்படி படத்தில் லாஜிக் எனும் வஸ்துவை தங்கள் தேவைக்கேற்ப பின்பக்கம் ஸ்டெப்னி போல மாட்டியிருக்கிறார்கள் ...

ஒரு ஸீன் வந்தாலும் விக்ரம் - தங்கை ஸீன் உருக்கம் .  வழக்கமான கதைக்கு  உத்ராகண்ட் வில்லன்கள் சமந்தாவை ஏன் கடத்துகிறார்கள் ? சமந்தாவுக்கு என்ன ஆகும் ? , விக்ரம் எப்படி காப்பாற்றுவார்?  என்று  க்யூரியாசிட்டி யை  ஸ்க்ரீன் ப்ளே யில் கொடுக்கத் தவறவில்லை  இயக்குனர் விஜய்மில்டன் . அதேசமயம் விக்ரம் - சமந்தா காம்பினேஷனில் ரோட் ட்ராவல் கதையை யோசித்து 10 எண்றதுக்குள்ள என்று கேட்சியாக தலைப்பிட்டவர்கள் ஒன்னு ... ஒன்னேமுக்கால் என்று நீட்டி முழக்காமல் டைட்டிலுக்கேற்ப  கொஞ்சம் வேகமாக எண்ணியிருக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 40

ரேட்டிங் : 2.5 * / 5 *




24 December 2011

ராஜபாட்டை - ரெண்டுங்கெட்டான் ...

                     
  கமல் பொதுவாக ஒரு சீரியஸ் படத்திற்கு பிறகு காமெடி படம் பண்ணுவார் , அந்த பாணியில் ஜாலியாக ஒரு படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் விக்ரமும், சுசீந்திரனும் கை கோர்த்திருக்கும் படம் " ராஜபாட்டை " ... காமெடி படமானாலும் அதையும் சீரியசாக திட்டமிட்டு எடுக்க வேண்டும் என்பதை ராஜபாட்டையில் ஏனோ கோட்டை விட்டிருக்கிறார்கள் ...

வில்லனாக வேண்டுமென்ற கனவோடு சினிமாவில் பைட்டராக வலம் வந்து கொண்டிருக்கும் அனல் முருகன் ( விக்ரம் ), அனாதை ஆஸ்ரம இடத்திற்காக தட்சிணா மூர்த்தியை ( கே.விஸ்வநாத் ) துரத்தும் நில மாபியா கும்பலிடமிருந்து அவரை காப்பாற்றுகிறார் ... கடைசியில் நில அபகரிப்பு மூலம் ஊரையே அடித்து உலையில் போடும் அரசியல்வாதி அக்காவிடமிருந்து விஸ்வநாத்தையும் , ஆஸ்ரமத்தையும் விக்ரம் மீட்டாரா என்பதே கதை ...


தெய்வதிருமகளில் நடித்தவரா இவர் என ஆச்சர்யப்பட வைக்கும் உடற்கட்டுடன் இருக்கிறார் விக்ரம் ... க்ளோஸ் அப் காட்சிகளில் வயது தெரிந்தாலும் கெட்அப்பில் மறைக்கிறார் ... முதல் காட்சியிலேயே காமெடி பைட் மூலம் அறிமுகமாகும் விக்ரம் பிறகு முப்பது , நாப்பது அடியாட்களை சீரியசாக அடிக்கும் போது கூட நமக்கு சிரிப்பு வருவது கேரக்டரைஷேஷன் கோளாறு ...

படத்தின் முதல் பாதியை நகர்த்தி செல்லும் இரண்டாவது ஹீரோ கே.விஸ்வநாத் ... கமலுக்கே நடிப்பு சொல்லி தந்தவர் என்பதை நிரூபிக்கிறார். இவர் கொடுக்கும் காதல் டிப்ஸ் எல்லாம் அதர பழசு என்றாலும் இவர் சொல்லும் போது அழகாக இருக்கிறது ... விக்ரமுக்கும் , இவருக்கும் இடையேயான நட்பில் அழுத்தம் இல்லாததால் வா , போ என்று விக்ரம் இவரை அழைக்கும் போது நெருடுகிறது ...


ஹீரோயினாக நடித்திருக்கும் தீக்ஷா சேத் உயரமாக இருக்கிறார் , முகத்தில் ஒரு பொலிவே இல்லை ... டூயட் தவிர படத்தில் அவருக்கு பெரிதாக வேலையும் இல்லை ... சொல்லப்போனால் ஹீரோயினை விட வில்லி அக்காவாக நடித்திருப்பவர்  முகத்தில் தெரிகிறது பொலிவு ... வில்லிக்கு பக்கபலமான வாப்பா கேரக்டரில் பிரதீப் பொருத்தமாக இருக்கிறார், விக்ரம் பல கெட்டப்களில் வந்து இவரிடம் குறுக்கு விசாரணை செய்யும் காட்சிகள் கல கல ...

" அசிங்கத்த பாத்தா அவார்ட் வாங்க முடியுமாப்பா " , " நான் கோ டைரக்டர் , கோ படத்தோட டைரக்டர் இல்ல " என்று சொல்லும் தம்பி ராமையாவின் காமெடியும் , விக்ரமிடம் பயந்து நடுங்கும் அருள்தாசின் காமெடியும் நம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் சமாச்சாரங்கள் ...

யுவனின் இசையில் " பொடி பையன் " , " பனியே " பாடல்கள் முனுமுனுக்க வைக்கின்றன ...யுவன் , மதி , ராஜீவன் இப்படி நிறைய டெக்னீஷியன்களின் உழைப்பும் வீணடிக்கப்பட்டிருக்கிறது ... பாஸ்கர் சக்தியின் வசனங்களும் பெரிதாக உதவவில்லை ...

       
விக்ரம்-விஸ்வநாத் நடிப்பு, விக்ரம் சாங் சீக்குவன்ஸ் யோசிக்கும் போது பைட்டர்கள் வந்தவுடன் சாங்கையே அவாய்ட் செய்வது  , பதிவாளர் அலுவகத்தில் புகுந்து புத்திசாலித்தனமாக இட பத்திர பதிவை நிறுத்துவது, வேகமாக செல்லும் இரண்டாம் பாதி , சில இடங்களில் தேவையில்லாத பைட்களை தவிர்த்திருப்பது போன்றவை படத்தின் ப்ளஸ் ...

விக்ரமின் கேரக்டரைஷேஷன் , இம்ப்ரெஸ் செய்யாத கதை , திரைக்கதை , என்ன தான் பைட்டராக இருந்தாலும் ஊரையே ஆட்டிப்படைக்கும் அரசியல்வாதி அனுப்பும் ஆட்களை கொட்டாவி விட வைக்கும் அளவுக்கு விக்ரம் அடித்துக் கொண்டேயிருப்பது , சப்பென்று முடிந்து விடும் க்ளைமாக்ஸ்  , லட்டு பிகர்களுடன் விக்ரம் ஆடியும் வீணடிக்கப்பட்ட " லட்டு லட்டு " பாடல் இவையெல்லாம் மைனஸ் ... மசாலா படம் எடுப்பது எவ்வளவு சீரியசான பிசினஸ் என்று இப்போது இயக்குனருக்கு புரிந்திருக்கும்...

இணை இயக்குனர் சீனுவிடம் இருந்து நடப்பு நிகழ்வான நில அபகரிப்பை வைத்து எழுதப்பட்ட கதை ! யை வைத்து முழு நீள ஆக்சன் மசாலாவாக எடுக்கலாமா ? அல்லது காமெடியாக எடுக்கலாமா ? என்ற குழப்பத்திலேயே படம் நெடுக சுசீந்திரன் இயக்கியிருப்பதால் ரசிகர்களுக்கு ராஜபாட்டை  ஒரு ரெண்டுங்கெட்டான் ...

ஸ்கோர் கார்ட் - 38 

8 July 2010

இராவணன் விமர்சனம்

                  
      இராவணன் பெயரிலியே இராமாயண கதை தான் என்றாலும் மணி படம் என்பதால் எதிர்பார்ப்புடன் சென்றேன். மகாபாரதத்தில் இருந்து தளபதி, சத்யவான் சாவித்திரியில் இருந்து ரோஜா என எடுத்திருந்தாலும் அவர் சொன்ன விதத்தில் நேர்த்தியும் , தரமும் இருக்கும் . ஆனால் மற்றபடங்களை போல இல்லாமல் இதில் நேரடியாக கதை சொல்வதில் சுவாரசியம் குறைகிறது ...

      படத்தின் முதல் காட்சியிலயே   தேவ் ( பிரிதிவிராஜ் ) மனைவி ராகினியை ( ஐஸ்வர்யா  ராய் ) வீரா ( விக்ரம் ) கடத்தி விடுகிறார் . விறுவிறுப்பாக ஆரம்பம் ஆகும் படம் சிறிது நேரத்திலயே மந்தம் ஆகி விடுகிறது ... எஸ்பி தேவை பழி தீர்க்க அவர் மனைவியை கடத்தும் விக்ரம் அவள் அழகில் மயங்குவது அமெச்சூர் தனம்....

     வழக்கம் போல விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். இருந்தும் அவர் பாத்திர படைப்பு நன்றாக இல்லை... படம் முழுவதும் ஐஸ்வர்யா   ராய் குழப்பமாக இருக்கிறார் அவர் கேரக்டர்  போல... நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் கச்சிதம்... பிரபு, பிரிதிவிராஜ் , ப்ரியாமணி அனைவரும் பொருத்தமாக இருக்கிறார்கள்....

     படப்பிடிப்பு  தளமும் அதை படம் பிடித்த விதமும் அற்புதம் . கிளைமாக்ஸ் சண்டை மனதில் நிற்கிறது.. . இசைப்புயல் பின்னணி இசையில் ஏமாற்றி விட்டார்... வசனமும் கிளைமாக்ஸ் தவிர மற்ற இடங்களில் மேம்போக்காக இருக்கிறது....

     கார்த்திக்கை அனுமார் போல மரத்திற்கு மரம் தாவ விட்டதை தவிர்த்திருக்கலாம் . முன்னா விபீஷணன் போல தூது போகிறார். பிரபு கும்பகர்ணன் ப்ரியாமணி சூர்பனகை என நான் சொல்ல தேவை இல்லை...நேர்த்தியாக எடுத்திருந்தாலும் பழக்கப்பட்ட கதை என்பதால் சலிப்பு தட்டுகிறது....

     வழக்கமாக மணி படத்தில் வரும் துறுதுறுப்பான காட்சிகள் இதில் இல்லாதது ஏமாற்றம். காட்சிகளில் போதுமான ஆளுமையும்  , ஆழமும் இல்லை... இராமாயண கதையை புது கோணத்தில் பார்த்திருந்தாலும் புதுமையாக எடுக்காததால் படம் மனதில் பதியவில்லை...எவ்வளவு குறை இருந்தாலும்    டெக்னிகல் விசயங்களில்   மணி படம் ஒரு அனுபவம் என்பதை மறுப்பதற்கு இல்லை .அனந்து,ராவணன்,விக்ரம்,
Related Posts Plugin for WordPress, Blogger...