14 November 2010

மைனா திரைவிமர்சனம்

              சிறு வயதில் இருந்தே மைனாவை காதலிக்கிறார் சுருளி , மைனாவிற்கும் அவள் அம்மாவிற்கும் எல்லா உதவிகளையும் செய்கிறார்...மைனா பெரியவள் ஆனவுடன் அவளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்கிறார் அவள் அம்மா ...இதனால் ஆத்திரம் அடையும் சுருளி மைனா அம்மாவை அடிக்க , கொலை முயற்சி குற்றத்தின் கீழ் போலீஸ் கைது செய்து 15 நாள் காவலில் வைக்கிறது ..மைனாவின் கல்யாண ஏற்பாட்டை தடுக்க காவலில் இருந்து தப்புகிறார் சுருளி...தலை தீபாவளிக்கு மனைவி வீட்டுக்கு கூட செல்ல முடியாமல் சுருளியை தேடி செல்கிறார் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் , அவருக்கு உதவியாக ராமையாவும்  உடன் செல்கிறார்  .   .சுருளியை போலீஸ் பிடிக்க அவர்களுடன் மைனாவும் வருகிறாள் ...இவர்கள் நால்வருடன் மலைகளுக்கு இடையில் நாமும் பயணம் ஆகிறோம் ...
         சுருளியாக விதார்த் , மைனாவாக அமலா இருவரும் கதைக்கு எளிதாக பொருந்துகிறார்கள் ..மைனாவை காதலிப்பதையே முழு நேர வேலையாக செய்யும் விதார்த் அவள் இல்லையென்று அம்மா சொன்னவுடன் ஆத்திரப்படும் இடத்திலும் , காதல் செய்வது தப்பா என்று போலீசிடம் கேட்கும் போதும் , மைனாவை தூக்கி கொண்டு காட்டுக்குள் ஓடும் போதும் கைதட்டல் வாங்குகிறார்....சில இடங்களில் பருத்திவீரனை ஞாபகபடுத்துகிறார் ...உணர்ச்சி வயப்படும் இடங்களில் யதார்த்தத்தை மீறுகிறார் ....                   அமலாவிற்கு வசனங்கள் குறைவு ..அதை கண்களிலேயே நிறைவு செய்கிறார்....கிளைமாக்ஸ் காட்சியில் மனதில் நிற்கிறார் ..இவர் சுருளியை காதலிப்பதற்கான காரணங்கள் அழுத்தமாக சொல்லப்படாதது ஒரு குறை ....
        இவர்கள் இருவரை தவிர படம் முழுவதும் நம்மை அழைத்து செல்லும் மற்ற இருவர் பாஸ்கர் மற்றும் ராமையா ...தலை தீபாவளியை கொண்டாட முடியாமல் இப்படி காட்டுக்குள் அலைய விட்டதற்காக சுருளியை கொன்று விடுவதாக மிரட்டும் பாஸ்கர் கடைசியில் அவர்களுக்காகவே தன் வாழ்கையை தொலைக்கும் போது மனதில் நிற்கிறார் ...சீரியசான கதையை ஜாலியாக எடுத்து செல்வதற்கு "தம்பி" ராமையா பெரிதும்  உதவி செய்கிறார்...ஆனாலும் ஒரே விதமான முக பாவங்களை தவிர்ப்பது நல்லது ...அவர் மனைவியாக வரும் செந்தாமரையை  நேரே காட்டா விட்டாலும் மனதில் பதிய வைத்தது இயக்குனரின் திறமை ....
               பாஸ்கரின் மனைவியாக வரும் சூசன் ஆரம்ப காட்சியிலும் , இறுதி காட்சியிலும் வந்து நம்மை அசர வைக்கிறார்....அவருடைய அண்ணன் ,அண்ணிகள்
 அனைவரும் கதாபதிரத்திற்கு ஒத்து போகிறார்கள் ... 
                  சுகுமாரின் ஒளிப்பதிவு நம்மை கதை நடக்கும் இடத்திற்கே கொண்டு செல்கிறது ...அதிலும் விபத்து காட்சியை கஷ்டப்பட்டு எடுத்து இருக்கிறார்கள் .... இமான் இதற்கு முன்னர் கிரி ,விசில் படங்களில் ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தாலும்
 இந்த படம் நல்ல திருப்புமுனை ...பின்னணி இசையில் பின்னி இருக்கிறார் ."மைனா பாடல் மனதிலயே நிற்கிறது ..... 
 ஒளிப்பதிவு,இசை இரண்டும் படத்திற்கு பெரிய பலம் ......
                  எளிமையான கதை , தெளிவான திரைகதை , யதார்த்தமான கதா பாத்திரங்கள் , மிரள வைக்கும் கிளைமாக்ஸ்,ஒரு கைதி தப்பி விட்டால் போலீஸ் காரனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஆழமாக காட்டியது  என எக்கச்சக்க பலங்கள் படத்திற்கு இருந்தாலும் , மெதுவாக நகரும் ஆரம்ப காட்சிகள் , பருத்திவீரனின் பாதிப்பு , மைனாவிற்கு சுருளி மேல் ஏற்படும் காதலை ஆழமாக காட்டாதது , சில இடங்களில் பைத்திய காரனோ என சந்தேகப்படும் அளவிற்கு சுருளியின்  காதல் என்று சில குறைகளையும் தவிர்த்திருந்தால் மைனா "பருத்திவீரன்" , "சுப்ரமணியபுரம்"  வரிசையில் மைல் கல்லாக அமைந்திருக்கும் ,,,,
            எனினும் "மைனா" மனதை உலுக்கும் படம்...
    இப்படத்தை  ரெட் ஜைன்ட் நிறுவனம் மார்கெடிங் செய்வதால் நல்ல ஒபெனிங் இருக்கிறது ...  ஒரு வகையில்இது சந்தோசமாக இருந்தாலும் சின்ன தயாரிப்பாளர்கள் நிலைமையை நினைக்கும் 
போது கவலையாக இருக்கிறது ....எந்த விதமான பின் பலமும் இல்லாமல் ரிலீஸ் ஆன "களவானி"   நல்ல பெயர் எடுத்தாலும் நான்கு மாதங்களுக்குள் டிவி யில் போட்டு விட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை ..

7 November 2010

கமல் - "நிஜ" நடிகன்

                                                               
         இன்று 56   வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்...கடந்த 50 வருடங்களாக  இவர் தமிழ் சினிமாவிற்கு ஆற்றி வரும் அளப்பெரும் பணியை யாரும் தமிழ் சினிமா இருக்கும் வரை மறக்கவோ , மறைக்கவோ முடியாது ..

        நடிப்பையும் தாண்டி தொழில்நுட்பம் , இயக்கம் , திரைக்கதை , வசனம் , தயாரிப்பு ,இலக்கியம்  என அவரின் பல்துறை திறன் அவரை உண்மையான "தசாவதாரி" என்று நிரூபிக்கிறது ..இத்தனை வருடம் ஆகியும் ஒவ்வொரு படத்திற்கும் முதல் படத்தை போல அவர் காட்டும் அர்பணிப்பு , தேடல் , உழைப்பு அனைவரையும்  வியக்க வைக்கிறது ...

        தன் ரசிகர்களை வெறும் ஆரத்தி காட்டுவதிற்கும் ,   பாலாபிஷேகம் செய்வதிற்கும் , வியாபார ரீதியாக மட்டும் பயன்படுத்தி  வரும் பல நடிகர்களுக்கு மத்தியில் தன்  ரசிகர் மன்றங்களை "நற்பணி" மன்றங்களாக மாற்றி  இன்று வரை  அதன் மூலம் பல இயலாதவர்களுக்கு நல்லுதவிகளை செய்து வருகிறார்...சினிமாவில் சம்பாதித்ததை எல்லாம் தெளிவாக பல இடங்களில் முதலீடு செய்து வருபவர்களுக்கு மத்தியில் தன் பணத்தை எல்லாம் நஷ்டம் ஏற்பட்டாலும் புது முயற்சிகளுக்காக சினிமாவிலேயே முதலீடு செய்யும் இவர் நிச்சயம் ஒரு கலை "ஞானி" .....

       நடிப்பில் இவர் "உலக நாயகன் " என எல்லோரும் அறிவோம் ...எனினும் "அபூர்வ சகோதரர்கள் " , " தேவர் மகன்" , " தசாவதாரம்" போன்ற படங்களில் இவரின் திரைகதை பலரால் பாராட்டபட்டதோடு நல்ல வசூலையும் பெற்று தந்தது கூடுதல் செய்தி ....
    " உனக்குள்ள முழிச்சிட்டு  இருக்கற அதே மிருகம் தான் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு " - தேவர்மகன் ... " நல்லவங்களுக்கு  கிடைக்கிற அதே மாலையும் மரியாதையும் கெட்டவங்களுக்கும் கெடைக்குதே " - மகாநதி ... " வீரம்ன்றது பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது " - குருதிபுனல் ..."கடவுள் இல்லேன்னு யார் சொன்னா இருந்தா நல்ல இருக்குக்ம்னு தானே சொன்னேன் " - தசாவதாரம் ..... கமலின் வசனங்கள் இன்றும் , என்றும் மனதில் நிற்பவை .....

             இப்படி கமல்ஹாசனிடம் எவ்வளவோ நிறைகள் இருந்தாலும் அவரின் குறைகளையும் சுட்டி காட்ட வேண்டியது நம் கடமை ...பொதுவாக அவரின் மேதாவி தனமான பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தும் , அதிலும் தீபாவளி அன்று விஜய் டிவி " காபி வித் அனு "  வில் அவர் பேசிய பேச்சு எரிச்சலையே ஏற்படுத்தியது ...அதன் விளைவே இந்த பதிவு....
                                            
           வழக்கம் போல தன்னை பகுத்தறிவு வாதி என்று காட்ட   கடவுள் எதிர்ப்பு கொள்கையை  கையில் எடுக்கும் கமல் இந்த பேட்டியுலும் அதையே செய்தார் ..அதிலும் ஒரு படி மேலே போய் கடவுள் பக்தியை செக்ஸ் போல வீட்டுக்குள் வைத்து  கொள்ளுங்கள் ஏன் வெளியே தெரியும் படி நடந்து கொள்கிறீர்கள்  என்று ஏதோ கள்ள காதலை பற்றி பேசுவது போல பேசினார்...

            செக்ஸ் இதை  எல்லோரும் தெரியாமல் வைத்து கொண்டாலும் இதன் மூலம் உருவாகிற மனைவி . மகன் , மகள் என எல்லா பந்தத்தையும் யாரும் தெரியாமல் வைப்பது இல்லை .திருமணத்திற்கு பின் கணவன் மனைவி உறவில் செக்ஸ் பிரதானமாக இருந்தாலும் யாரும் அதை கொச்சையாக பார்ப்பது இல்லை ...அடுத்த சந்ததியை உருவாக்கும் தளமாகவே பார்கிறார்கள் ....அதை போல தான் கடவுள் பக்தி அனைவருக்கும் தெரியும் படி நடத்து கொள்வது ஒன்றும் கொலை குற்றம் அல்ல. ..அது அவரவர் விருப்பம் ...என் குளியலறையை  யாரும் எட்டி பார்க்காதீர்கள் என்று அறைகூவல் விடுக்கும் கமல் அடுத்தவரின் தனி மனித உரிமையில் தலையிடுவது எந்த  விதத்தில் நியாயம் ?...
   
            ஆரம்ப காலத்தில் இருந்தே தன்னை கமல் பிராமணர்  அல்லாதவராகவும் , அக்குலத்தை வெறுப்பவராகவும் , அசைவ உணவை விரும்பி உண்பவராகவும் முனைந்து காட்டி கொள்வதில் ஒரு காரணம் இருப்பதாக படுகிறது .. எல்லா திறமைகள் இருத்தும் தன்னையும் "ஜெமினி கணேசன்  " போல " சாம்பார்" என்று ஒதுக்கி விடுவார்களோ என்ற பயமாக இருக்கலாம் ...எனவே தான்  தன்னை ஆர்யன் அல்ல எல்லோரையும் போல திராவிடன் என்று பிரகனப்படுத்துவதில் முனைப்பாக  இருக்கிறார்... கமல் கூட போலி ஆர்ய - திராவிட மாயையில் விழுந்தது ஆச்சர்யமாக இருக்கிறது ...

         தன்னுடைய குடும்ப புகைப்படத்தை பார்த்து அண்ணன் மனைவியை மன்னி என்று கூறி விட்டு பிறகு அண்ணி என்று திருத்தி கொண்டார் ...மன்னி என்று சொல்வதில் ஒரு தவறும் இருப்பது போல பட வில்லை ..அவர் குல வழக்கப்படி அப்படி கூறுவது வழக்கமாக இருந்தால் அதை ஏன் மழுப்ப வேண்டும் ?...

           கமல் அவர்களே சினிமாவில் மட்டும் உங்கள் நடிப்பை காட்டினால் மிகவும் நல்லது ...அதுவே அனைவரின் விருப்பமும் கூட. ...கடவுள் எதிர்ப்பு என்பது ஏதோ நேற்று இன்று ஏற்பட்டது அல்ல ... பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்து மதத்தில் இரு விதமான வாதம் இருந்திருக்கிறது ...கண்ணதாசனின் " அர்த்தமுள்ள இந்து மதம் " பத்மனின் "ஆண்டவன் மறுப்பும் ஆன்மீகமே" போன்ற புத்தகங்களை படித்தால் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கலாம் .

         "பார்ப்பானை  ஐயன் என்ற  காலமும் போச்சே " என்று பாடிய பாரதியையே பார்ப்பான்  என ஒதுக்கிய கூட்டத்திற்கு மத்தியில்
யாரிடம் தமிழன் என சான்றிதழ் தேடுகிறீர்கள் ?...கடவுளே இல்லை என்றாலும் உங்களின் சில படங்களில் வைணவ தாக்கம் அதிகமாக இருப்பது ஏன் ?..."அன்பே சிவம் ' படத்திலேயே கடவுள்  பற்றிய கேள்விக்கு பதில் இருப்பது தெரியவில்லையா ?....

       உங்கள் பேட்டியில் ஹிந்தி நடிகர் திலிப் குமார் தன்னுடைய இயற்பெயரான " யூசுப் கானை  "     வெளியில் சொல்ல முடியாத கால கட்டத்தில் இருந்ததை எண்ணி நீங்கள் பரிதாபபடுவதாகவும் , அவரின் இயற்பெயரை சொல்லியே அழைப்பேன் என்றும் கூறியிருந்தீர்கள் .

       இன்றோ ஷாருக் கான் , சல்மான் கான் , அமீர் கான் என எல்லா கான்களும் உண்மைனையான பேருடன் முன்னணியில்   இருக்கிறார்கள் ...நீங்களும் உங்களின் முகமூடியை  கழட்டி விட்டு    முன்னே வாருங்கள் .....
Related Posts Plugin for WordPress, Blogger...