3 December 2016

சைத்தான் - SAITHAN - Not much scary ...


விஜய் ஆண்டனி படங்களை பார்க்க வேண்டுமென்று தோன்றியதில்லை . பின்னர் நான் , சலீம் போன்ற படங்களை தாமதமாக பார்க்க நேர்ந்த போது சே மிஸ் பண்ணிட்டோமே என்று தோன்றாமலுமில்லை . அதுவும் இந்த தடவை எனது எழுத்து ஹீரோ சுஜாதா வின் ஆ வை சைத்தானாக்குகிறார்கள் என கேள்விப்பட்ட போது பார்க்க வேண்டுமென்ற ஆர்வமும் அதே சமயம் மற்ற நாவல்களை போல இதையும் சரியாக எடுக்காமல் சொதப்பி விடுவார்களோ என்கிற கவலையும் ஒரு சேரவே இருந்தது . படம் பார்த்த பிறகு பெரிதாக சொதப்பவில்லை என்றாலும் நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது ...

புது மாப்பிள்ளை தினேஷுக்கு ( விஜய் ஆண்டனி ) மண்டைக்குள் திடீரென ஏதேதோ குரல் கேட்கிறது . அவரை டோட்டலாக கண்ட்ரோல் செய்யும் குரல் ஒரு கட்டத்தில் ஜெயலட்சுமி என்பவரை கொல்ல சொல்கிறது . அது ஏன் ? எதற்கு ? எப்படி ? என்பதை அழகான சஸ்பென்ஸ் த்ரில்லராக கொண்டு சென்று இண்டெர்வெல்லுக்கு பிறகு க்ரிப்பை மெய்ன்டைன் பண்ண முடியாமல் வழக்கமான க்ளைமேக்ஸ் வைத்து கொஞ்சம் சொதப்பியிருப்பதே சைத்தான்...

விஜய் ஆண்டனி க்கு பெரிதாக நடிக்க வரவில்லை . அது அவருக்கே தெரிந்தும் நல்ல கதையை  தேர்வு செய்வதால் ஜெயித்து வருகிறார் . இதுவரை அவரை காப்பாற்றி வந்த திரைக்கதையே இதிலும் அவரை முதல் பாதியில் காப்பாற்றியிருக்கிறது . முகத்தில் அவர் காட்ட முடியாத ரியாக்சன்களை அவருடைய பி.ஜி.எம் சமன் செய்கிறது ...


அபர்ணா நாயர் அமலா பால் குண்டடித்தது போலிருக்கிறார் . ஜெயலட்சுமி எபிசோடில் இவரது நடிப்பு அருமை  . ஒய்.ஜி ஒரு சீசனல் ஆர்ட்டிஸ்ட் என்பதை நிரூபிக்கிறார் . தாமஸாக வரும் சித்தார்த்தா சங்கர் கவனிக்க வைக்கிறார் . பிரதீப்பின் கேமரா அபார்ட்மெண்ட்டையே பல ஆங்கிள்களில் காட்டி பயமுறுத்துகிறது . ஏதேதோ பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது.  படத்துக்கு பி.ஜி.எம் பெரிய ப்ளஸ் ...

சுஜாதா கைவண்ணத்தில் செம்ம இண்ட்ரஸ்டிங்  நாவல் . அதில் லீட் கேரக்டருட்க்கு நேரும் பிரச்சனைகள் படு சுவாரசியமாக இருக்கும் , இதில் அதை  திறம்படவே கையாண்டிருக்கிறார்கள் . ஆனால்  லீட் கேரக்டர்  விஜய் ஆண்டனிக்கு குருவி தலையில் பனங்காய் . ஃபளாஸ்பேக் சுவாரசியம் குறைவாக இருப்பதும் , க்ளைமேக்ஸ் வழக்கமான மாஸ் ஹீரோ ஃபைட்டோடும் , அவசர கதியில் முடிந்திருப்பதும் சறுக்கல் . ஆ நாவலை படித்தவர்களுக்கு எதிர்பார்ப்பின் காரணமாக படம் பிலோ ஆவெரேஜாக தான் இருக்கும் . புதிதாய் பார்ப்பவர்களுக்கு ஒரு முறை பார்க்கக் கூடிய ஓகே ரகம் தான் சைத்தான் ...

ரேட்டிங் : 2.75 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 42 

25 November 2016

கவலை வேண்டாம் - KAVALAI VENDAM - காம டி ...




எஸ்.எம்.எஸ் க்கு பிறகு சோலோ வெற்றி எதுவும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த ஜீவா வுக்கு அதே பாணியில் வெட்டியாக ஊர் சுற்றும் ஈஸி கோயிங் Guy கதையை குஜால் சாரி காஜல் அகர்வாலுடன் சேர்த்து காம டியில் குழைத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் டிகே . டைட்டிலுக்கேற்ற படி சீரியஸாக காமெடி யை கையாண்டு பெரும்பாலான இடங்களில் கவலையை மறக்க செய்திருக்கிறார்கள் ...

சின்ன வயதிலிருந்தே ஃப்ரெண்ட்ஸாக இருக்கும் அரவிந்த் ( ஜீவா ) - திவ்யா
( காஜல் ) இருவரும் லவ் பண்ணி கல்யாணம் கட்டி ஒரே நாளில் பிரிகிறார்கள் . மூன்று வருடங்கள் கழித்து டைவர்ஸுக்காக ஜீவாவை தேடி வரும் காஜலுக்கு அது கிடைத்ததா இல்லை இழந்த காதலன் கிடைத்தானா என்பதை எமோஷனலாய் இல்லாமல் வெறும் என்டெர்டைன்மெண்டாக சொல்வதே கவலை வேண்டாம் ...

ஜீவா வுக்கு ரசிகர் பட்டாளம் பெரிதாக இல்லாவிட்டாலும்   அவரை பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் மிக குறைவு . ஹீ இஸ் பக்கா நோ நான்சென்ஸ் கய் . இந்த படம் அவருக்கு டெய்லர் மேட் , அவரும் எந்த குறையும் வைக்கவில்லை . பிரிந்த மனைவியை சமாதானம் செய்ய எதுவுமே செய்யாமல் ஜாலியாக இருந்துவிட்டு அவர் வந்தவுடன் ஆஸ்பிடலில் வைத்து சென்டிமெண்டாக பேசுவது செயற்கை . மற்றபடி ஆர்.ஜே.பாலாஜி யுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டி செம்ம . காஜல் அகர்வால் காத்து வாங்கும் உடையை போட்டு நெறைய ஜொல்ஸ் விட வைக்கிறார் . இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் கொஞ்சம் குழப்பினாலும் ஜீவாவுக்கு ஈக்குவல் வெய்ட் . மயில்சாமி , மந்திரா  எல்லாம் ஃபிட் ஃபார் தி பில் ...

காஜலின் தோழியாக வரும் ஸ்ருதி ராமகிருஷ்ணன் சில ஆங்கிள்களில் சுருதி போடாமலேயே போதையை ஏற்றுகிறார் . ஆர்.ஜே வின் அட்ராஸிட்டி க்கு முன்னால் பால சரவணன் பச்சா சரவணன் . சுனைனா , பாபி சிம்ஹா இருவரும் ஜீவா - காஜல் போதைக்கு ஊறுகாய் போல பயன்பட்டிருக்கிறார்கள் . தேசிய விருது வாங்கிய பாபி சிம்ஹா வுக்கு இது போன்ற ரோல் தேவையா என அவர் யோசிக்க வேண்டும் . அபிநந்தன் ராமஜுனத்தின் ஒளிப்பதிவு நம்மை குன்னூருக்கே கூட்டி சென்று குளிரேற்றுகிறது . லியோன் ஜேம்ஸ் இசையில் ஆர்.ஆர் கச்சிதம் . பாடல்கள் சுமார் ரகம் ...

எஸ்.எம்.எஸ் வகையறா கதைக்கு த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா பாணி வயகரா வை தடவி அடல்டியிருக்கிறார்கள் . அடல்ட் காமெடி ஜெனரில் நல்ல அட்டெம்ப்ட் . சும்மா சீரியஸாக யோசிக்காமல் ரெண்டேகால் மணிநேர பொழுதுபோக்கை நம்பி சில மொக்கைகளையும் பொறுத்துக்கொண்டால் கவலையை மறக்கலாம் . படம் கோர்வையாக இல்லாமல் பிட்ஸ் அண்ட் பார்சலாக வருவதை தவிர்த்திருக்கலாம் . மொத்தத்தில் ஜீவா - காஜல் நடிப்பில் வந்திருக்கும் கவலை வேண்டாம் ஃபுல் அண்ட் ஃபுல் காம டி ...

ரேட்டிங்  : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 40


13 November 2016

அச்சம் என்பது மடமையடா - AYM - ஆயா சுட்ட வடையடா ...



ஞ்ச் டயலாக் , குத்து டேன்சால் பி,சி சென்டர்களில் பேர் பெற்ற  சிம்புவுக்கு
( இப்போ எஸ்டிஆர் ) ஏ சென்டர்களில் விடிவி மூலம் செம்ம இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தவர் கௌதம் மேனன் . அதன் பிறகு அதை சிம்பு தக்கவைத்துக் கொள்ள தவறியது போல  இப்பொழுது இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்திருக்கும் இருவருமே அந்த மேஜிக்கை தர தவறிவிட்டார்கள் என்றே சொல்லலாம் ...

எம்.பி.ஏ வில் இரண்டு அரியர் வைத்திருக்கும் எஸ்.டி.ஆர் அப்பா காசில் பைக் வாங்கி அதில் சேர்ந்து ஊர் சுற்ற நல்ல ஜோடியை தேடிக்கொண்டிருக்க அவர்  தங்கையின் தோழி ( மஞ்சிமா மோகன் ) வந்து தொக்காக மாட்டிக்கொள்கிறாள் . அதுவும் பழைய 500 , 1000 த்துக்கு ஈசியாக சேஞ்ச் கிடைத்தால் எப்படி இருக்குமோ அது போல சிம்பு வீட்டிலேயே தங்கி படிக்கிறாள் . ( எங்க  படிச்சா ?! விடிய விடிய சிம்புவோட கடலை போடுறா , ஏன்னா  அவுங்க வீட்ல அப்பா அம்மா டெய்லி செகண்ட் ஷோ போயிருவாங்க போல ! ) . இருவரும் ஒரு லாங்  ரோட் ட்ரிப் பைக்கில் கிளம்ப சனியனும் சேர்ந்து பின்னால் உட்கார்ந்து கொள்கிறது ...

நீண்ட வருடங்கள் படம் கிடப்பில் இருந்தது சிம்பு வின் வெயிட்டில் இருந்தே தெரிகிறது . முழு தாடி , தொப்பை யுடன் சில பாடல் காட்சிகளில் அப்பாவை நினைவு படுத்தினாலும் நடிப்பில் குறை வைக்கவில்லை . ரொமான்ஸ் , ஆக்சன் இரண்டிலும் தேவையான உடல்மொழியால் நல்ல வேறுபாடு காட்டுகிறார் . என்ன மனுஷன் நெறைய பேசுறார் , அது பரவாயில்ல . ஆனா கௌதம் மேனன் ஸ்டைலில் ஹீரோவின் மனசாட்சியும் பேசிக்கொண்டேயிருப்பது மேஜர் சுந்தர்ராஜனை மெமெரிக்கு கொண்டு வருகிறது ...

மஞ்சிமா மோகன் தமிழுக்கு நல்ல வரவு . முதல் பாதியில் சிம்புவோடு சேர்த்து நம்மையும் வசியம் செய்கிறார் . இரண்டாம் பாதியில் சோகமான முகத்தோடு இருப்பதை தவிர அம்மணிக்கு வேறு வேலையில்லை . சிம்பு வின் நண்பராக வரும் சதீஷ் காமெடி டைமிங்கால் ரசிக்க வைக்கிறார் . மொட்டைத்தலை பாபா சேகல் ஹிந்தியிலேயே பேசிக்கொண்டிருப்பதால் பெரிதாக கவரவில்லை . கொஞ்ச சீன்கள் வந்தாலும் டேனியல் பாலாஜி கவனிக்க வைக்கிறார் . சாதாரண படத்தை மேலே தூக்கி நிறுத்துகிறது ஏ.ஆர்.ஆரின் இசை . ராசாளி , தள்ளிப்போகாதே இரண்டும் ஏற்கனவே மெஸ்மெரிஸம் செய்திருக்க  அவளும் நானும் மேலும் அவர் இசைக்கு நம்மை அடிக்ட் ஆக்குகிறது ...


காதலியுடன் ரோட் ட்ரிப் போகும் போது எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சனை , போலீஸ்காரன் தொல்லை இதெல்லாம் உதயம் NH 4 கதையை ரீவைண்ட் செய்தாலும் முதல் பாதியில் கௌதம் மேனன் ஸ்டைல் மேக்கிங் , ஏஆர்.ஆர் இசை எல்லாமே சேர்ந்து நம்மை ரொமான்ஸில் நனைய வைக்கிறது . ரியலிஸ்டிக்கான டயலாக் , அதிலும் குறிப்பாக சிம்பு - தங்கை பேசிக்கொள்வது சிம்பலி சூப்பர் . வரிசையாக பாடல்களை வைத்து இண்டெர்வெல் வரை ஒப்பேற்றியிருந்தாலும் அந்த குறை தெரியாமல் காப்பாற்றுகிறது பாடல்களும் , அதை படமாக்கிய விதமும் ...

ஃபீல் குட் டாக போய்க்கொண்டிருக்கும் படம் சடனாக ஆக்சிடெண்டுக்கு அப்புறம் ஆக்சன் அவதாரம் எடுத்து ஜெர்க் கொடுக்கிறது . அட என்று செகண்ட் ஆஃ பில் வந்து உட்கார்ந்தால் மாறி மாறி சுட்டு தீபாவளி இன்னுமா முடியல என்று நினைக்க வைக்கிறார்கள் . ஹீரோ எஸ்கேப் ஆகுறதுக்காகவே ஒரு பைக் அதுவும் ஹீரோ ஓட்டுற ராயல் என்ஃ பீல்டே நிற்பது , மூணு மாசம் முன்னாடி போட்டாலும் டிக்கெட் கிடைக்காம அவன் அவன் தண்ணி  குடிச்சுட்டு இருக்கான் ரெண்டு பேரும் என்னடான்னா அந்த அவசரத்துலயும் ஹாயா ஏ.ஸி கோச் ல ட்ராவல் பண்றது இப்படி சின்ன சின்ன லாஜிக் மிஸ்டேக்ஸ் கூட மன்னிச்சுக்கலாம் . அதுக்காக ஹீரோ ரெண்டரை வருஷம் காணாம போயிட்டு திடீர்னு ஐ.பி.எஸ் ஆறது , அதுவும் வில்லன் போலீஸ் ஸ்டேசனுக்கே சுப்பீரியரா வந்து பழி வாங்குறது எல்லாம் கடவுளே இது கௌதம் மேனன் படம் தானா என்று கிள்ளிப்பார்க்க வைக்கிறது . நாம் பல வருடங்களாக கேட்டுக்கொண்டேயிருக்கும் ஆயா வட சுட்ட கதை போல கௌதம் மேனன் ஏற்கனவே சொன்ன ரொமான்ஸ் , ஆக்சன் கதைகளை மிக்ஸ் பண்ணி கொடுத்திருக்கும் புது வடை அ.எ.ம . அதை காதலில் கசிந்துருகிக் கொண்டிருக்கும் இளைஞர்களை மட்டும் குறி வைத்து சுட்டிருக்கிறார் ஜி.வி.எம் ...

ரேட்டிங் : 2.75 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 41 


30 October 2016

காஷ்மோரா - KASHMORA - காய்ச்சிய காக்டைல் ...


கார்த்தி யை பொறுத்தவரை காஷ்மோரா  அவரது வியாபாரத்தை தாண்டிய பெரிய பட்ஜெட் படம் . ஆனால் சின்ன பட்ஜெட்டில் பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் கோகுலோ  காமெடியில் கலக்கியிருந்தாலும் மெகா பட்ஜெட்டிற்கு ஏற்ற தீனி போட முடியாமல்  தடுமாறியிருக்கிறார் ...

ஆவி , அமானுஷ்யங்களை வைத்து கப்ஸா விட்டு  காசு அள்ளுவதே காஷ்மோரா ( கார்த்தி ) வின் குடும்ப தொழில் . ஒருநாள் இவர் குடும்பத்தோடு உண்மையான பேய் பங்களாவுக்குள் மாட்டிக்கொள்கிறார் . பிறகு என்ன நடந்தது என்பதை ஒன்ஸ்மோர் கேட்காமலேயே மோர் மோராக சொல்வதே காஷ்மோரா ... 


கார்த்தி க்கு பேய் பேரை சொல்லி ஆட்டய போடும் கான்மேன் ரோல் ப்ளஸ் ஃப்ளாஷ்பேக்கில் காம வெறியாட்டம் ஆடும் தளபதி ரோல் . இரண்டில் முதலாவதில் ஆவி களை வைத்து கள்ளாட்டம் செய்து  கலக்குபவர் , இரண்டாவதில் முரட்டு பார்வையில் மிரட்டினாலும் நீ...ளமான எபிசோடால் கொட்டாவியை வரவைக்கிறார் . பேயை வைத்து தீஸிஸ் செய்யும் பெண்ணாக வரும் ஸ்ரீதிவ்யா பேங்கில் வேலை செய்வதாய் சொல்கிறார் . நடுவில் காணாமல் போனவர் கொஞ்சம் வேலை பார்த்துவிட்டு க்ளைமேக்ஸ் போது  வந்து தலை காட்டுகிறார் . கோலிவுட் க்யூன் நயன்தாரா இதிலே க்யூனாகவே வந்து கிளுகிளுப்பூட்டுகிறார் . மொட்டை கார்த்தியை சட்டை செய்யாமல் பார்க்கும் இவர் பார்வை அட அட ...

விவேக் , முருகானந்தம் , சரத் என எல்லோருமே தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள் . அதிலும் கிட்ட வாங்க ஜீ என்று கூவும் முருகானந்தம் சூப்பர் ஜீ . பாடல்களில் பெரிதும் கவராத சந்தோஷ் நாராயணன் பி.ஜி.எம் இல் ஸ்கோர்  செய்கிறார் . ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் . சி.ஜி யை பொறுத்தவரை பட்ஜெட்டை கணக்கில் கொண்டு பொண்ணை வைக்க வேண்டிய இடத்தில் பூவை வைத்திருக்கிறார்கள் ...


முதல் பாதி முழுவதும் கார்த்தி & குடும்பம் அடிக்கும் லூட்டிகள் சிறுத்தை , சதுரங்க வேட்டை சாயலில் இருந்தாலும் நல்ல டைம் பாஸ் . அதிலும் கார்த்தி இண்டெர்வெல்லுக்கு முன்னாள் பேய் பங்களாவுக்குள் நுழைந்தவுடன் நடத்தும் பேச்சுவார்த்தை படத்துக்கு ஹைலைட் . இண்டெர்வெல்  ப்ளாக்க்கை நல்ல டெம்போவோடு முடிப்பவர்கள் திரும்ப வந்தவுடன் " படம் எப்போ சார் போடுவாங்க " என்று கேட்க வைத்தது கொடுமை . கோகுல் தனது  ஃபேவரட் பிட்சில் ஃபன் கொடுக்கிறார் . புதுசாக ட்ரை பண்ணும் ஃ பேண்டசி பிட்சில் பொறுமையை சோதிக்கிறார் .

நீண்ட வருடங்களாகவே தமிழில் ட்ரெண்டாக இருக்கும் ஹாரர் - காமெடி வகையறா படத்தில் பிரம்மாண்ட ஃபேண்டசியை புகுத்தி  காய்ச்சிய காக்டைல் கொடுத்திருக்கிறார் கோகுல் . அந்த எபிசோடில் நீளத்தை குறைத்து க்ரிப்பாக சொல்லியிருந்தால் காஷ்மோரா  செய்த செலவுக்கு மேலே காசு பார்த்திருப்பான் . காஷ்மோராவை காஸ்ட்லி மிஸ்டேக் என்று சொல்லாமல் தடுப்பது கார்த்தி செய்யும் காமெடி மட்டுமே ...

ரேட்டிங் : 2.75 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 

29 October 2016

கொடி - KODI - பறக்கும் ...


னுஷ் - வெற்றிமாறன் கூட்டணி என்றாலே  அந்த படைப்பில் ஒரு தரம் இருக்கும் . இந்த முறை அவர்கள் இருவரும் எஸ்.கே வை வைத்து இரண்டு வெற்றிகளை கொடுத்த இயக்குனர் துரை செந்தில்குமாருடன் சேர்ந்து தீபாவளிக்கு  பொலிட்டிகல் கொடியை  படைத்திருக்கிறார்கள்  . தனுஷ் - த்ரிஷா என்று தீபாவளிக்கு சரவெடியாக வெடித்திருக்க வேண்டியது சுமாரான  ஸ்க்ரீன்ப்ளே வால் ஜஸ்ட் பறந்திருக்கிறது  ...

இரட்டைப்பிறவிகள் கொடி  , அன்பு வாக தனுஷ் . இதில் கொடி சின்ன வயதிலிருந்தே அப்பாவின் கனவுப்படி கட்சி ஆபீசில் அரசியல் படிக்க , அன்புவோ கல்லூரியில் பாடம் எடுக்கிறார் .  அரசியல் களத்தில் கொடி யின் காதலி ருத்ரா ( த்ரிஷா ) வே அவருக்கு எதிராக வர அதன் பின் கொடி - அன்பு வாழ்க்கை என்ன ஆனது என்கிற சாலிட் பொலிட்டிக்கல் கதையை கொஞ்சம் சாவகாசமாக எடுத்திருக்கிறார்கள் ...

தனுஷ் படத்துக்கு படம் நடிப்பில் மெருகேறிக்கொண்டேயிருக்கிறார் . இரண்டு வேடங்களுக்கு இடையே எந்த மருவும் இல்லாமல் உடல்மொழியாலேயே மிகுந்த வித்தியாசம் காட்டுகிறார் . த்ரிஷா வோ இல்ல நயன்தாராவோ காதல் காட்சிகளில் கமலுக்கு பிறகு  தனுஷ் அளவுக்கு தத்ரூபமாக நடிக்க தமிழில் ஆளில்லை . த்ரிஷாவால் ஏமாற்றப்படும் போது முகத்தில் இவர் காட்டும் உணர்ச்சிகள் புது நடிகர்களுக்கு பாடம் . மிக அபூர்வமாக த்ரிஷா வுக்கு மட்டுமல்ல ஹீரோயின்களை லூசுகளாக மட்டும் காட்டிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில்  ருத்ரா கேரக்டர் செம்ம பவர்ஃபுல் . த்ரிஷா எனும் ஸ்டார் கேரக்டருக்கு வலு சேர்த்த அளவுக்கு அவரது நடிப்பு சேர்க்கவில்லை . ஒருவேளை  தனுஷ் நடிப்புக்கு முன்னாள் அது மட்டுப்பட்டிருக்கலாம் . ஆனாலும் அவர் சரியான தேர்வு ...


எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வயதுக்கேற்ற அரசியல்வாதி ரோல் . காளி வெங்கட் , சரண்யா , மாரிமுத்து என எல்லா கேஸ்டிங்குமே பொலிடிக்கலி ரைட் . ப்ரேமம் புகழ் அனுபமா  முட்டை மாலதியாக வந்து கண்களாலேயே ஆம்லெட் போடுகிறார் . சந்தோஷ் நாராயணன் இசையில் " கொடி பறக்கும் " , "ஏய் சூழலி" பாடல்கள் ஹம்மிங்க் செய்ய வைத்தாலும் ஒரே மாதிரியான இசை சலிப்பை தர ஆரம்பித்து விட்டது ...

தனுஷ் - த்ரிஷா , சின்ன சின்ன சஸ்பென்ஸுடன் படத்தை கொண்டு சென்ற விதம் , இண்டெர்வெல் ட்விஸ்ட் , ருத்ராவின் வில்லத்தனம் , மாஸ் ஹீரோவை வைத்து அரசியல் படம் என்றவுடன் ரத்தமும் , சகதியுமாக சண்டை , பக்கம் பக்கமாக டயலாக் எல்லாம் வைக்காமல் தனுஷின் நடிப்பை போலவே அண்டர்ப்ளே செய்தது என எல்லாமே கொடியை உயரத்தில் ஏற்றுகின்றன ...

தனுஷ் போல த்ரிஷா வின் அரசியல் அதிகார கனவுக்கு டீட்டைலிங் வைக்காதது மைனஸ் . " நான் இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கேன் தெரியுமா " என்கிற டயலாக்கும் , நாற்காலியை தடவிப் பார்த்து உட்கார்வதுமே ருத்ரா கேரக்டருக்கு போதுமென  இயக்குனர் நினைத்துவிட்டது துரதிருஷ்டம் . பெரிய ஆக்டர்ஸ் , கையில் நல்ல பொலிட்டிக்கல் கதை இதையெல்லாம் வைத்துக்கொண்டு இயக்குனர் ஒரு விறுவிறு படத்தை கொடுத்திருக்க வேண்டாமோ ?! . அதுவும் ப்ராமிசிங்காக ஆரம்பிக்கும் படம் பாதரச கழிவு , சிசிடிவி கேமரா பதிவு என வழக்கமான ட்ராக்கில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது . சமீபத்தில் வந்த முத்தின கத்திரிக்கா , கத்துக்குட்டி , புகழ் மாதிரியான  அரசியல் படங்கள் போல கடந்து போயிருக்க வேண்டிய கொடி யை  தனுஷும் , த்ரிஷா வும் சேர்ந்து பறக்க விட்டிருக்கிறார்கள் ...

ரேட்டிங்க் : 3.25 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 43



11 October 2016

தேவி - DEVIL - தரிசிக்கலாம் ...



விஜய் யை வைத்து போக்கிரி ஹிட்டடித்த பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரிப்பாளராக , நடிகராக இயக்குனர் விஜய்யுடன் இணைந்திருக்கும் படம் தேவி . மூன்று மொழிகளுக்கும் ஏற்ற பிரபுதேவா - தமனா ஜோடியின் உதவியுடன் சில தோல்விகளால் சறுக்கியிருந்த விஜய் ஃபார்முக்கு வந்திருக்கும் ஹாரர் - காமெடி படம் ...

மும்பையில் வேலை பார்த்தாலும் 34 வயதில் மாடர்ன் கேர்ளுக்காக பயோ டேட்டாவுடன் அலைந்து கொண்டிருக்கும் பிரபுதேவா பாட்டியின் சொல்லை தட்ட முடியாமல் கிராமத்தில் மாட்டுப்பொண்ணை ( அதாவது மாடு மேய்க்கிற பொண்ணை ) கல்யாணம் செய்து கொண்டு வருகிறார் . மும்பையில் இழுத்துப்போர்த்திக் கொண்டிருந்த தமனா தீடீரென ஒரு பார்ட்டியில் அவுத்துப்போட்டு ஆட  ஆட்டநாயகன் பிரபுதேவா வே ஆடிப்போகிறார் . அதற்கு காரணம் பேய் என்பதை கொஞ்சம் கூட பயமுறுத்தாமல் ( அப்பாடா ) நீட் எண்டெர்டைன்மெண்டாக சொல்லியிருக்கும் படமே தேவி ...

இன்றைக்கு தமிழில்  விஜய் அளவுக்கு நளினமாக ஆடும் ஹீரோக்கள் யாரும் இல்லாத சூழலில் பிரபுதேவாவின் வரவு வரப்பிரசாதம் . மனுஷனுக்கு வயசு மூஞ்சில லைட்டா ஏறினாலும் உடம்பு அதே ரப்பர் . முதல் பாட்டுலேயே மிரட்டிட்டார் . காமெடி சென்ஸில் இப்போதிருக்கும் தனுஷ் , சிவகார்த்திகேயன்  எல்லோருக்கும் தான் அண்ணா என்பதை மீண்டும் நிரூபிக்கிறார் . பேயிடமே அக்ரீமெண்ட் போடுவது , அப்பாவை பார்த்தவுடன் பல்டியடிப்பது என கலக்கும் பிரபுதேவா தனக்கேற்ற கதைகளை தேர்ந்தெடுத்து ஒரு ரவுண்ட் வர வாழ்த்துக்கள் ...


இந்த வருடம் தோழா , தர்மதுரை யை தொடர்ந்து தமனா வுக்கு வெற்றிபெறப் போகும் படம் . வில்லேஜ் , மாடர்ன் என இரண்டு கெட்டப்புகளிலும் உடல்மொழியில் நல்ல வித்தியாசம் காட்டுகிறார் . ஆர்,ஜே.பாலாஜி வெறும் கவுன்டர்களில் மட்டுமல்லாமல்  முகபாவத்திலும் கிச்சுகிச்சு மூட்டி முதல்பாதி வேகமாக நகர உதவுகிறார் . சோனுசூட் , அவர் உதவியாளர் இருவரும் கச்சிதம் . நாசர் , சதீஷை  சின்ன ரோலில் வீணடித்திருக்க வேண்டாம் . முதல் பாடல் தாளம் போட வைத்தாலும் இசை இந்தி படம் பார்க்கும்  உணர்வையே கொடுக்கிறது . எடிட்டிங் க்ரிப் ...

படம் வழக்கமான ஹாரர் - காமெடி ஜெனரில் இருந்தாலும் கடைசிவரை பேயையே காட்டாமல் என்கேஜிங்காக கொண்டு சென்ற விதத்தில் வித்தியாசப்படுகிறார் விஜய் . பொறக்கப்போற குழந்தை க்ராமர் பிழையில்லாமல் இங்கிலிஷ் பேசுவதற்காக  பிரபுதேவா மாடர்ன் பொண்ணை தேடுவது , சாகக்கிடக்கும் பாட்டிக்காக தமனா வை கட்டிக்கொண்டு வருவது என ஆர்.ஜே பாலாஜி கூட்டுடன் முதல்பாதியை போரடிக்க விடாமல் கொண்டு சென்ற விதம் அருமை . பயமுறுத்துறேன் பேர்வழி ன்னு வழியாமல் படத்தை ஃபீல் குட்டாக கொண்டு போய் சின்ன சின்ன சி.ஜி மூலம் ரசிக்க வைத்த விதம் சூப்பர் ...

என்ன தான் குறைந்த வாடகை என்றாலும் ஒட்டடை கூட அடிக்காமல் பேய் வீடு போல இருக்கும் வீட்டுக்கு பிரபுதேவா குடி போவது , புதுசாக இருந்தாலும் பேயுடனேயே அக்ரீமெண்ட் போடுவது எல்லாம் கொஞ்சும் ஓவர் . யார் அந்த பேய் என்று தெரிந்தவுடன் இரண்டாம் பாதி  கொஞ்சம் சவ சவ . படம் ஹிந்தியிலும் வரலாம் , அதுக்காக பிரபுதேவா வை வச்சுக்கிட்டு நச்சுன்னு நாலு பாட்டு போடாம கஜல் வாசிச்சிருப்பது கொடுமை . மற்றபடி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் 2.10 மணிநேரம் பெரும்பாலும் போரடிக்காத தேவி யை நிறுத்தி நிதானமாக ஒருமுறை நிச்சயம் தரிசிக்கலாம் ...   

ரேட்டிங்  : 3 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 42


8 October 2016

ரெமோ - REMO - சைனா மேக் ...


ந்த திரையுலக பின்னணியும் இல்லாமல் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய ஓப்பனிங்குக்கு சொந்தக்காரராக ஆகியிருப்பவர் சிவகார்த்திகேயன் . மெரினா தவிர இவருடைய எந்த படத்தையும் இதுவரை நான் தியேட்டரில் சென்று பார்த்ததில்லை . பார்க்கத் தோன்றியதுமில்லை . அதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் தான் காரணமே தவிர அவரில்லை . ரெமோ வில்  எஸ்.கே  ( அப்படித்தான் டைட்டிலில் போடுகிறார்கள் , நல்ல வேளை இன்னும் எந்த பட்டமும் கொடுக்கவில்லை ) பெண் வேடத்தில் நடித்திருப்பது
மட்டுமே படத்தை உடனே பார்க்கத்தூண்டியது . தொடர் விடுமுறைகளால் ரெமோ வணிக ரீதியாக லாபம் கொடுக்கும் . ஆனால் படமாக ? பார்க்கலாம் ...

வேலை வெட்டியில்லாம ( எந்த படத்துல இவர்  அதெல்லாம் பாத்துருக்காருன்றீங்களா ?! ) ஸ்டாராகணும்னு  முயற்சிக்கிறார் எஸ்.கே . ஆனா லவ்  மேட்டர் மட்டும் இவரிடமிருந்து எஸ்கேப் ஆகிக்கொண்டேயிருக்கிறது . ஒரு நாள் ரோட்டில் போகும் அழகான பெண்ணை ( கீர்த்தி சுரேஷ் ) பார்த்தவுடன் இவருக்கு லவ் பற்றிக்கொள்ள , நிச்சயமான பொண்ணுன்னு தெரிஞ்சும் பெண் வேஷம் போட்டு எப்புடி அந்த ஃபிகர அய்யா கரெக்ட் பண்றாருன்றது தான் படம் . ( அப்புறம் காவிரியை கொண்டு வர வேலையையா கொடுக்க முடியும் ?! ) ...

மிமிக்ரி , காமெடி சென்ஸால் பெண்களையும் , குழந்தைகளையும் கவர் செய்து வைத்திருக்கிறார் எஸ்.கே . இவர்கள் தான் குடும்பத்தோடு தியேட்டருக்கு  வருவதற்கு முக்கிய காரணிகள் . வழக்கம் போல அவர்களை இவர் ஏமாற்றவில்லை . நிறைய இடங்களில் கீர்த்தியை விட பெண்ணாக வரும் இவர் ரொம்ப அழகாக இருக்கிறார் . ( தேங்க்ஸ் டு மேக்கப் டீம் ) . கண்ணை சிமிட்டிக்கொண்டு பேசும் நேரங்களில் இன்னும் க்யூட் . பெண்ணாக உடல்மொழியும்   பெர்ஃபெக்ட் . கயித்தை பிடிச்சுக்கிட்டு இவர் தாவி தாவி சண்டை போடுறத கூட சகிச்சுல்லாம் ஆனா சீரியஸா லவ்வுக்காக அழும் போது தான்  சாரி ப்ரோ ...


படிக்காத கிராமத்துப் பொண்ணா இருந்தாலும் சரி , படிச்ச டாக்டரா இருந்தாலும் சரி ஹீரோயின் அரை லூசா தான் இருக்கணும்ன்ற கோலிவுட் விதிக்கு லேட்டஸ்ட் வரவு கீர்த்தி . அப்பாவி போல குணஷ்டைகள் செய்யும் நேரம் தவிர நார்மலாக நல்ல அழகாக இருக்கிறார் . பொண்ணா வர எஸ்கே விடம் இவர் காட்டும் நெருக்கத்தை பாத்தா இவர் லூசு மட்டும் தானா இல்ல அந்த மாதிரியா ன்னு நமக்கே டவுட் வருது . பொண்ணுங்கள புத்திசாலியாவே இந்த டைரக்டருங்க காட்ட மாட்டங்களான்னு நமக்கு கோவம் வருது , ஆனா அதுக்கு விழுந்து விழுந்து சிரிக்கற பொண்ணுங்கள பாக்கும் போது அடப்பாவமே னு வந்த கோவம் தானா போயிருது ...

சதீஷ் ஹீரோ ஃ ப்ரெண்டாக நல்லா பண்ணியிருக்கார் .அட்லீஸ்ட் இவரை வெச்சாவது பொண்ணா நடிச்சு ஃபோர்ஜரி பண்றது தப்புன்னு சொல்ல வச்சது ஆறுதல் . யோகி பாபு சிறிதாக வந்தாலும் நிறைவு . சூரி - எஸ்.கே காம்பினேஷன் மச் பெட்டர் என்றே தோன்றுகிறது . கல்யாணம் ஆகப்போகும் பொண்ண ஹீரோ உஷார் பண்ணலே அந்த மாப்பிளையை வில்லனாவோ , மொக்கையாவோ ஆக்கிருவாங்க . இதுலயும் அப்படித்தான் அந்த செகப்பு தம்பி பாவம் . அடுத்து ஒரு சேஞ்சுக்கு இந்த ஹீரொல்லாம் கல்யாணம் ஆன பொண்ணையே ட்ரை பண்ணலாமே ?! . அதுக்கும் ஏதாவது லாஜிக் வச்சுட்டா போச்சு ! . பி.சி ! யின் ஒளிப்பதிவு பளிச் . அனிருத் ரெண்டு பாடல்களை ஹம் செய்ய வைக்கிறார் ...

அவ்வை சண்முகி , காதல் மன்னன் , மான் கராத்தே என்று பல படங்களின் தழுவல்களாக படம் இருந்தாலும் எஸ்.கே வை அழகான பெண்ணாக காட்டி அதை சரியாக மார்க்கெட் செய்த விதத்தில் ஸ்கோர் செய்கிறார் பாக்யராஜ் கண்ணன் . பட வாய்ப்புக்காக நர்ஸ் வேஷம் போட்டு அப்படியே அத வச்சு ஹீரோயின கரெக்ட் பண்ற ஐடியா , கலகலவென போகும் முதல் பாதி எல்லாமே ஓ.கே . ஆனா அந்த டாக்டர் பொண்ணுக்கு கொஞ்சம் கூட தலையில் எதுவுமே கிடையாதா ? நர்ஸ் சொல்றதெல்லாம் அப்படியே நம்புது. அடுத்தடுத்த சீன்ல கூட அதுக்கு சந்தேகம் வராதா  ? இவ்ளோ மொக்க பொண்ணு எப்படி பாஸ் படிச்சு டாக்டர் ஆச்சு ? டக் னு பொண்ணு வேசத்துல இருந்து மாறி நார்மலாக வரும் போது ஒரிஜினல் மீச , தாடி யோட வர்றாரு நம்ம ஹீரோ ( தேவுடா ) . அவ்வை சண்முகி ல கமல் மழுங்க ஷேவ் பண்ணி ஒட்டு மீசையோட தான் வருவாரு . அந்த படத்துல இருந்து எவ்வளவோ சுட்டீங்க , அப்படியே கொஞ்சம் லாஜிக்கையும் சுட்டுருக்கலாமே  ?! ...


ஓடுற குதிரை மேல சவாரி பண்ற வாய்ப்பு டைரக்டருக்கு கெடைச்சுருக்கு . அந்த குதிரை என்ன பண்ணாலும் கெக்க , பிக்க ன்னு சிரிக்க கூட்டமிருக்கு அப்பறம் எதுக்கு புதுசா இந்த கத , திரைக்கதை எழவெல்லாம்னு நினைச்சுட்டாங்க போல . அவங்கள  மட்டும் குத்தம் சொல்லி எந்த பிரயோஜனமுமில்லை . சிவகார்த்திகேயன் படங்களுக்கு பொழுதுபோக்கு தவிர வேறெதையும் எதிர்பார்த்து போவது முட்டாள்தனம் தான் . ஆனா எஸ்.கே வ நர்ஸ் வேஷம் போட்டு அப்படி இப்படி நடக்க விட்டாலே அந்த சோ கால்ட் என்டர்டெயின்மெண்ட் வந்துரும்னு படக்குழு நெனைச்சது தான் சோதனை . ஒருதலைக் காதலால் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும்  வன்முறைகள் ஒருபுறம் ( அதிலயும் இந்த படத்துல பொண்ணு மேல லவர் ஆசிட் வீசல , ரவுடி வீசினான்னு ஒரு சப்பைக்கட்டு ஸீன்  வேற ) , காதல் திருமணங்களால் பெருகி வரும் விவாகரத்துகள் மறுபுறம் என சமுதாயம் போய்க்கொண்டிருக்க இன்னமும் ஹீரோ ஒரு பொண்ண கரெக்ட் பண்ணாலே லைஃப்ல  எல்லாம் செட்டில் ன்றது மாதிரி படங்கள் தொடர்ந்து வருவது வேதனை . பட் அகைன் இதுக்கு சினிமாக்காரங்கள மட்டும் குத்தம் சொல்ல முடியாது ...

சமுதாய கருத்துக்களை புறம்தள்ளி விட்டு ஒரு சினிமாவாக மட்டும் ரெமோ வை பார்க்கும் போது தனிப்பட்ட முறையில் நடிகனாக சிவகார்த்திகேயனுக்கு இதுவரை வந்த படங்களிலேயே இது முதன்மையான படம் . ஆனா டோட்டல் பேக்கேஜாக  பாக்கும் போது எஸ்.கே வுக்கு இது கடைசிப்படம் . மான் கராத்தே மாதிரி லவ்வுக்காக இவர் வில்லன் கால்ல விழுந்து அழாதது ஆறுதல் . பார்த்தவுடன் மயக்கும் எஸ்.கே வின் மேக் அப் போல வெளித்தோற்றத்தில் கும்மென்று இருக்கும் ரெமோ லாங்குவிட்டி இல்லாத சைனா மேக் .  பட் ஸ்டில் ப்ராஃபிட் டு தி மேனுஃபேக்சரர் ...

ஸ்கோர் கார்ட் : 2.25 * / 5 * 

ரேட்டிங்      : 39   


29 September 2016

ஆண்டவன் கட்டளை - AANDAVAN KATTALAI - ஆசுவாசமான ஆஸம் ...


காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் மூன்றாவதாக , இந்த வருடத்தில் இரண்டாவதாக வந்திருக்கும் படம் ஆண்டவன் கட்டளை . சிம்பிளான ஸ்டோரி , ஷார்ப்பான வசனங்கள் , ஸ்மார்ட்டான ஆக்டிங் , ஸ்லோவான திரைக்கதை இவற்றின் மொத்த கலவையே ஆ.க . ப்ரதர் என்று சொல்வதற்கே சோம்பேறித்தனப்பட்டு ப்ரோ என சுருக்கமாக கூப்பிடும் இந்த காலத்தில் நீட்டி முழுக்கும் திரைக்கதை தவிர ( 2.31 மணி நேர படம் ) வேறெந்த குறையுமில்லை ...

கடனை அடைக்க பாஸ்போர்ட்டில் சில குளறுபடிகள் செய்து லண்டனுக்கு சென்று சம்பாதிக்க நினைக்கிறார் காந்தி ( விஜய் சேதுபதி ) . அவரின் ஆசை நிறைவேறியதா ? என்பதை ஸ்லோவாக இருந்தாலும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் . விஜய் சேதுபதி யின் மூவீ கலக்சனில் ஆண்டவன் கட்டளைக்கு நிச்சயம் முக்கிய இடமுண்டு ...

யதார்த்தமான நடிப்பென்றால் விஜய் சேதுபதிக்கு பதார்த்தம் சாப்பிடுவது போல . தனக்கென்று ஒரு ஸ்டார் அந்தஸ்து வந்தும் இது போன்ற படங்களை தேர்ந்தெடுப்பது அவரது தனித்துவம் போலும் . தனக்கு விசா கிடைக்காமல் பாண்டிக்கு ( யோகி பாபு ) கிடைத்தவுடன் இவர் காண்டாகுமிடம் சூப்பர் . வீட்டை காலி செய்யும் போது ஓனரை கலாய்க்கும் இடத்தில் வெளியூரிலிருந்து வந்து தங்கி வாடகை வீட்டில் லோல்படும் பல பேச்சிலர்களின் வயிற்றில் பீரை சாரி பாலை வார்க்கிறார் ...


ரித்திகா சிங் கிற்கு இறுதி சுற்று க்குப் பிறகு வித்தியாசமான கேரக்டர் . படம் ஆரம்பித்து நீண்ட நேரம் கழித்து வந்தாலும் நிறைவு . விஜய் சேதுபதி காதலை சொன்னவுடன் வெட்கப்படுவது நல்ல நடிப்பு ( இப்போல்லாம் யாருங்க உண்மையிலேயே வெட்கப்படுறா?!) . யோகி பாபு ஆவரேஜ் ஸ்பீடில் நகரும் முதல் பாதியில் அரங்கத்தை அதிர வைக்கிறார் .  ஓனரிடம் " நாங்க மூடிக்கிறோம் அங்கிள் " என்று சொல்லுமிடம் அப்லாஸ் . ரூபா , நாசர் . எஸ்.எஸ்.ஸ்டான்லி என நிறைய பேர் நிறைவாக நடித்திருந்தாலும் இலங்கை தமிழர் நேசனாக நடித்திருப்பவர் நெஞ்சை தொடுகிறார் . ப்ராட் வேலை செய்து கைது  செய்யப்படுவர் போட்டோவை போட்டு " போராளி கைதா " என செய்தித்தாளில் வரும் சின்ன ஷாட் ஈழத்தை வைத்து இங்கு நடக்கும் பெரிய அரசியல் வியாபாரத்தை கச்சிதமாக காட்டுகிறது ...

வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆசையில் உள்ளவர்களிடம் ஏஜென்ட் செய்யும் திகிடுதித்தங்கள்  , இடைத்தரகர்களின் ஏமாத்து  வேலைகள் , சென்னையில் பத்துக்கு  பத்து வீட்டை வைத்துக்கொண்டு ஓனர்கள்  செய்யும் பம்மாத்துக்கள் , அதிகரித்து வரும் டைவர்ஸ் கேஸுகள் என படம் போகிற போக்கில் நிறைய விஷயங்களை தோலுரித்துக் காட்டுகிறது . ஒரு தவறை நேரடியாக திருத்திக் கொள்வதை விட்டுவிட்டு சுற்றி வளைப்பதில் உள்ள சிக்கல்களை சொல்கிறது படம் . என்ன கொஞ்சம் அதிகமாகவே சுற்றி வளைத்துவிட்டார்கள் . படம் யதார்த்தமாக இருப்பது நல்லது தான் . ஆனால் ஹீரோ நிற்பது , நடப்பது , போறது என எல்லாத்தையும் ஸ்லோவாக காட்டுவதை தவிர்த்திருக்கலாம் . விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்படும் படம் வெகுஜன ரசனைக்கு சற்று தொலைவில் இருப்பதன் முக்கிய காரணம் ஹீரோவுக்கு பிரச்சனை அதை எப்படி தீர்க்கிறான் என்கிற ஒன்லைனை பரபரப்பான திரைக்கதையாக்காமல் கொஞ்சம் ஆசுவாசமாக எடுத்திருப்பதே . நடுவுல  கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் இதை நன்றாகவே கையாண்டிருப்பார்கள் ...

ரேட்டிங் : 3.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 44


24 September 2016

தொடரி - RAIL - தடுமாறினாலும் ஓடும் ...


சில தோல்விகளுக்கு பிறகு மைனா வால் உயர பறந்த பிரபு சாலமன் அதை தக்க வைக்கும் முயற்சியில் மீண்டும் தடுமாறியிருக்கும் படம் தொடரி . ஆனாலும் கும்கி யையே காதல் காவியமாக்கிய தமிழ் ரசிகர்கள் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது என்று நம்பலாம் ...

டெல்லி டூ சென்னை ஓடும் ரயிலில் பேன்ட்ரி பையனுக்கும் ( தனுஷ் ) , அதில் பயணம் செய்யும் நடிகையின் டச்சப் பொண்ணுக்கும் ( கீர்த்திசுரேஷ் ) ரொமான்ஸ் , அதுவும் எப்படின்னா 160 கிமீ வேகத்துல தறி கெட்டு ஓடுற ட்ரெயின்ல டாப்ல தனுஷ் ஆடிப் பாடுற அளவுக்கு லவ் . இப்போ இந்த ட்ரெயின்ல இருக்குற 700 த்து சொச்சம் பயணிகளோட சேர்த்து நம்மளும் தப்பிச்சோமான்றது தான் கதை ...

சினிமா ல ஹீரோஸ் பொதுவா பணக்காரங்ககிட்ட கொள்ளையடிச்சு ஏழைகளுக்கு தருவாங்க . அதையே தான் தனுஷ் இந்த மாதிரி படங்கள்ல நடிச்சு சம்பாதிச்சு காக்காமுட்டை , விசாரணை மாதிரி படங்கள எடுக்குறாப்ல போல . க்ளைமேக்ஸ்ல மட்டும் கொஞ்சம் நடிக்க வுட்ருக்காங்க . மத்தபடி தம்பி ராமையாவையும் , கீர்த்தி யையும் ஓட்டறத தவிர பார்ட்டிக்கு பெருசா வேலையில்ல . ரசிகர்களுக்காக உத்தமன் கூட ஒரு சண்டை போடறாரு . கீர்த்தி சுரேஷ் நல்லா அறிமுகமாகி அப்புறம் பாடுறேன் பேர்வழி ன்னு வழிஞ்சு கடைசியா ஜெனிலியாவையே மிஞ்சுற அளவுக்கு அளவுக்கு பக்கா லூசாயிடுறாங்க . பாலச்சந்தர் ஆவி கூட பிரபு சாலமனை சும்மா விடாது ...


தம்பி ராமையா இயக்குனரை கைவிடல . நடிகை சிரிஷா வுக்காக இவர் விடும் காதல் தூதெல்லாம் அதர பழசுன்னாலும் முடிந்தவரை தனது முகபாவங்களால் சிரிக்க வைக்கிறார் . இவர் தனுஷ் & கோ வுடன் அடிக்கும் லூட்டிகள் ப்ரெண்ட்ஸ் வடிவேலுவை நினைவு படுத்துகின்றன . We Miss You Vaigaipuyal . கவிஞராக வரும் கருணாகரன் மொக்கை போட்டாலும் கிச்சுகிச்சு மூட்டுகிறார் . அமைச்சராக ராதாரவி வரும் ஸீன்களெல்லாம் அடடா . பிகினிங்கில் படத்தின் டெம்போ வை ஏற்றும் உத்தமன் கேரக்டர் போக போக சவசவ . அதிலும் தேவையில்லாமல் மலையாளிகளை சீண்டிப் பார்ப்பது போல வரும் சீன்கள் இயக்குனரின் வீண் குசும்பு ...

இமான் இசையில் மூன்று பாடல்களில் கடைசி பாடல் ரசிக்கவைக்கிறது . ஆனால் படம் முடியும் நேரத்தில் வந்து வெறுப்பேற்றுகிறது . சிஜி நிறைய இடங்களில் பல்லிளித்தாலும் ஒளிப்பதிவு பளிச் . வேகமா ஓடுற ரயில்ல உச்சா போறதே கஷ்டம் ஆனா இதுல பாட்டு , பைட் னு பின்னி எடுக்குறாங்க . காமெடியோட ஆரம்பிச்சு அத வச்சே ஒப்பேத்தி பேசெஞ்சர் வேகத்துல போற படம் போகப்போக எக்ஸ்பிரஸ் வேகம் பிடிப்பது பலம் . நிறைய கேரக்டர்கள் வந்தாலும் எல்லோரையும் கவனிக்க வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . சீரியசாக போகும் காட்சிகளில் கூட காமெடியை சரியாக சொருகியிருக்கும் விதம் அருமை ...


படத்தில் எத்தனையோ லாஜிக் ஓட்டைகள் இருந்தும் மீடியாவை கலாய்க்கும் சீன்கள் கைத்தட்டல் வாங்க தவறவில்லை . ஐடியா கொடுக்க ஹாலிவுட் படம்லாம் பாக்க தேவையில்லை என்று வசனம் வருகிறது . பாவம் பிரபு சாலமன் Speed , Unstoppable படங்களையெல்லாம் பார்க்கவில்லையென்றோ , ரயில்ல வச்சு Titanic மாதிரி ஒரு படம் பண்ணணும்னெல்லாம் நினைக்கவில்லையென்றோ நம்பித் தொலைப்போமாக  . ட்ரெயின் திடீர்னு படு வேகமா ஓடுறப்போ முதல்ல  அந்த ட்ரைவர் என்ன ஆனான்னு பாக்காம தீவிரவாதி , விவாத மேடை அது இதுன்னு சுத்தி வளைச்சு கடைசியில க்ளைமேக்ஸ் ல அந்த மேட்டருக்கு வராங்க . அதுவும் கம்பார்ட்மெண்ட் மேல உக்காந்துக்கிட்டு குரங்கு சேட்டை பண்ணிக்கிட்டு இருக்கற தனுஷ முதல்லயே அனுப்பிச்சு ட்ரெயின நிப்பாட்டியிருக்கலாம் . பட் என்ன செய்ய படம் முடிஞ்சிருமே ?! ...

தனது தயாரிப்பில் வந்த விசாரணை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தொடரி மாதிரி படங்கள் தனுஷுக்கு திருஷ்டிக்கழிப்பு தான் . அதே நேரம் அப்படியிப்படி தடுமாறினாலும் காமெடி , ரொமான்ஸ் , த்ரில்லிங் என ஆடியன்ஸ் பல்ஸை கணித்து சரியான கலவையில் படத்தை பிரபு சாலமன் கொடுத்திருப்பதால் தொடரி ஓடும் ...

ரேட்டிங் : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 40


11 September 2016

இருமுகன் - IRUMUGAN - Technically Sound But Logically Weak ...


ஹிட் கொடுத்த இயக்குனர்  ஆனந்த் ஷங்கர் சீயான் விக்ரம் , கோலிவுட்டின் no.1 ஹீரோயின் நயன்தாராவுடன் கை கோர்த்திருப்பதால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாத படம் இருமுகன் . ஆனால் படம் அதை பூர்த்தி செய்ததா ? பார்க்கலாம் ...

சுஜாதா கதையில் கமல் நடித்த விக்ரம் படத்தை கொஞ்சம் கெமிக்கல் கலந்து வில்லனாக வும் விக்ரமை நடிக்க வைத்திருப்பதே இருமுகன் . மனைவி கொலை செய்யப்பட்ட பிறகு வேலையை விட்டுவிட்டு தனி வாழ்க்கை வாழ்கிறார் ரா ஏஜென்ட் அகிலன் ( விக்ரம் ) . தன் மனைவியை ( நயன்தாரா ) கொன்ற லவ் ( விக்ரம் ) சம்பந்தப்பட்ட   கேஸுக்கு ரா அவரது உதவியை நாட மீண்டும்  களத்தில் குதிக்கிறார் விக்ரம் . அதில் அவர் ஜெயித்தாரா என்பதை லாஜிக் என்கிற வஸ்துவை சுத்தமாக மறந்து விட்டு கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் , கொஞ்சம் நீளமாகவும்  சொல்வதே இருமுகன் ...


விக்ரம் எந்த ஒரு கேரக்டருக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் . அகிலன் , லவ் என்று இரண்டு வேடங்களிலும் உடல்மொழிகளில் வித்தியாசம் காட்டும் விக்கிரமின் நடிப்பு இதிலும் தொடர்கிறது . ஆனால் தனது மேனரிசம் மூலம் முதலில் கவரும் லவ் கேரெக்டர் போகப்போக படம் ஜவ்வாக இழுப்பதால் போரடிக்கிறது . நயன்தாரா வின் உடை குறைய குறைய சம்பளம் ஏறிக்கொண்டே போகிறது போல . இடைவேளையில் அவர் கொடுக்கும் ட்விஸ்ட் ரசிக்கவைக்கிறது . அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் நம் பசிக்கு தீனி போடவில்லை . ரா ஆபீஸராக வரும் நித்யா மேனன் விபச்சாரியாக வேஷம் போடுவதும் அதற்கு தம்பி ராமையாவின் கவுண்டரும் ரணகளம் . ரித்விகா கபாலியின் கன்டினியூட்டி போல மலேசியா வில் நடக்கும் படத்தில் வந்து போகிறார் ...

மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தனி மனிதனாக ஒரு கிழவன் வந்து அட்டாக் செய்வதும் , ஸ்பீட் என்கிற கெமிக்கல் வஸ்துவே அந்த கிழவரின் ஆக்ரோஷத்துக்கு காரணம் என்பதும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன . அகிலன் இந்த கேஸை கையில் எடுப்பதும் , அதை தொடர்ந்து மலேசியாவில் நடக்கும் சம்பவங்களும் ரசிக்கவே வைக்கின்றன . இறந்துவிட்டதாக நினைத்த நயன்தாரா இண்டெர்வெளில் ஆஜராவது ட்விஸ்ட்டாக இருந்தாலும் அதற்கு சொல்லப்படும் காரணங்கள் நம்பும்படியாக  இல்லை . ஸ்பீட் கெமிக்கலை இன்ஹேள் செய்த ஐந்து நிமிடங்களுக்கு நடக்கும் ஆக்சன் காட்சிகள் அதிரடி . ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அதை எடுத்துக்கொண்டவர்கள் மயங்கி விட விக்ரம் மட்டும் கேசுவலாக இருப்பது குளறுபடி . அதே போல காவல்நிலையத்தையே காலி செய்து விட்டு எஸ்கேப் ஆகும் லவ் விக்ரம் மாடல் போல மெதுவாக அங்குமிங்கும் உலாத்திக் கொண்டிருப்பது காதில் பூக்கூடை ...


ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது . இரண்டு பாடல்கள் ரசிக்க வைத்தாலும் மற்றவை ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் . ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் . கொஞ்சம் லாஜிக் சொதப்பல்கள் இருந்தாலும் முதல் படம் அரிமா நம்பி யின் வேகமான திரைக்கதையை இதில் மிஸ் செய்திருக்கிறார் இயக்குனர் . விக்ரமின் நடிப்பு , ஆர்டி யின் ஒளிப்பதிவு , ஹாரிஸ் ஸின் இசை , ஆக்சன் என டெக்கனிகளாக சவுண்டாக இருக்கும் இருமுகன் லாஜிக்கலாக வீக்காக இருக்கிறான் ...

ஸ்கோர் கார்ட் : 41

ரேட்டிங் : 2.5 * / 5 * 

30 August 2016

ஆகஸ்ட் மாத படங்கள் - AUGUST TAMIL MOVIES ...



டுத்தடுத்த சொந்த வேலைகள் காரணமாக ஜோக்கர் , தர்மதுரை இரண்டையுமே தாமதமாக இப்பொழுது தான் பார்க்க முடிந்தது . இதில் ஜோக்கர் பார்க்க வேண்டிய படம் , தர்மதுரை பார்த்தால் பாதகமில்லை ரக படம் ... 

ஜோக்கர்

வட்டியும் முதலும் மூலம் வசீகரித்த ராஜு,முருகன் , குறைவான படங்களே நடித்திருந்தாலும் ஒவ்வொன்றிலும் நடிப்பில் அவ்வளவு வித்தியாசம் காட்டும் குரு சோமசுந்தரம் இருவரின் காம்பினேஷனில் கழிப்பறை கட்டுவதில் கூட நடக்கும்  ஊழலை  சீரியஸாக கலாய்க்கிறான் ஜோக்கர் . ஷங்கர் கையில் இந்த கதை கிடைத்திருந்தால் மாஸ் ஹீரோவை வைத்து மிரட்டியெடுத்து பக்காவாக கல்லா காட்டியிருப்பார் . அது போலல்லாமல் யதார்த்தமாக நிகழ்கால அரசியல் நடப்புகளை கொஞ்சம் மெதுவாக கடந்து போனாலும் நெகிழ வைக்கிறான் ஜோக்கர் . " பகத்சிங்கை அவுத்து விட்டுடுவேன் பாத்துக்க " என்று குரு சொல்லும் போதெல்லாம் அதிகார வர்க்கம் மேல் ஒரு இனம் புரியாத கோபம் வந்து போகிறது . " வாழறது தான்  கஷ்டம்னா இனி பேளரதும் கஷ்டமா " போன்ற ஷார்ப் வசனங்களால் படம் நெடுக விளாசுகிறார் இயக்குனர் . ஜோக்கர் செய்யும் குளறுபடிகள் முதல் பாதியில் ஒரு லெவெலுக்கு மேல் சலிப்பை கொடுக்க ஆரம்பிக்கும் போது அவர் ஏன் அப்படி ஆனார் என்பதற்கான பிளாஷ்பேக் நம்மை உறைய வைக்கிறது . குறிப்பாக மனைவிக்காக போலீசிடம் மன்றாடும் இடங்களில் ஜோக்கர் அழ வைக்கிறான் . நேரில் நடக்கும் அநியாயங்களை பார்த்து தட்டிக் கேட்க முடியாமல் மனதுக்குள் பொங்கும் பெரும்பான்மை மக்களுக்கு அதை ஹீரோ திரையில் செய்யும் போது ஒரு அற்ப சந்தோசம் கிடைக்கிறது . அப்படி ஒரு சந்தோசம் இந்த படத்தில் கிடைக்காவிட்டாலும் ஓவர் செண்டிமெண்ட் போட்டு பிழியாமல் அளவோடு அதை கையாண்டிருப்பது மகிழ்ச்சி . படத்தை இப்படி முடித்திருக்க வேண்டாமோ என்ற எழும்பும் கேள்வியை  பில்டர் காபி குடித்து முடித்தவுடன் நாக்கில் ஒட்டிக்கொள்ளும் கசப்பை போல படம் முடிந்தும் மனதில் நிற்கும் க்ளைமேக்ஸ் நீக்குகிறது .  எல்லா அரசியல் கட்சிகளையும் சாடுவது போல காட்டினாலும்  இயக்குனர் செலெக்ட்டிவாக இருந்தது போலவே படுகிறது . " நாளை மீண்டும் ஒரு போராட்டம் வாருங்கள் தோழரே " என்று விளக்கு வெளிச்சத்தில் இசை அழைக்கும் போது  பல போராட்டங்கள் நடத்திய தோழர்களே  அரசியல் களத்தில் அதிகார வர்க்கத்தோடு கை கோர்த்ததை பார்த்துப் பழகிப் போன நமக்கு புளிக்கத்தான் செயகிறது . தையிரியமாக அரசியல் பேசி முடிவில் நம்மை நெகிழ வைக்கும் ஜோக்கர் ஒரு ஹீரோ ...

தர்மதுரை 

தான் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர்  இன்று பெரிய ஹீரோவானவுடன் அவரை வைத்து மறுபடியும் படம் எடுப்பது என்பது கயிறு மேல் நடப்பது போலத்தான் . தனது ஸ்டைலில் இருந்து மாறுபடாமல் அதே சமயம் ஹீரோவையும் விட்டுக்  கொடுக்காமல்  அதை தர்மதுரை யில் திறம்படவே செய்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி . கிராமத்திலிருந்து படித்து முதல் தலைமுறை டாக்டராகும் தர்மதுரை ( விஜய்சேதுபதி ) குடிகாரனாக அலைந்து அண்ணன் தம்பிகளை ஊரிலே அசிங்கப்படுத்துகிறார் . அதற்கான காரணத்தை காதல் கலந்து உணர்வுகளோடு சொல்வதே படம் . விஜய்சேதுபதி ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கான காரணம் நம்மை ஒன்ற செய்யும் அளவுக்கு திரைக்கதையில் வேகம் இல்லை . குடும்பம் , கல்லூரி இவற்றில் நடக்கும் சம்பவங்களை நேட்டிவிட்டியோடு பதிய வைத்ததில் வெற்றி பெறுகிறார் இயக்குனர் . கல்லூரியில் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் தமனா & கோ கைபேசி யில் உலகம் இருக்கும் இந்த காலகட்டத்தில் தொடர்பே  இல்லாமலிருப்பது என்ன தான் சாக்கு போக்கு சொன்னாலும் மழுப்பல் . ராஜேஷ் மூலம் சொல்லப்படும் கருத்துக்கள் ஆரோக்கியம் . அண்ணே என்று கூறி விட்டு விஜய்சேதுபதி பெண் பார்க்க வந்தவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் மாமா வுக்கு தாவுவது யதார்த்தம் . பெரிய பெண் எழுத்தாளர் என்று பில்டப் செய்து விட்டு அவரை அந்த முடிவுக்கு தள்ளியிருப்பது அபத்தம் . கிராமத்து அம்மாவாக ராதிகா நிறைவு . யுவன் இசையில் பாடல்கள் அருமை . மொத்தத்தில் திரைக்கதையில் அப்படியிப்படி தள்ளாடும் தர்மதுரை மகா பிரபுவுமில்லை , கஞ்சனுமில்லை ...


23 July 2016

கபாலி - KABALI - Not A Complete Man ...


டிசம்பர் வெள்ளத்துக்கு பிறகு தமிழகத்தை மட்டுமல்ல  , உலகத்தையே உலுக்கியிருக்கிறது இந்த கபாலி சுனாமி . சூப்பர் ஸ்டார் னாலே சும்மா அதிரும் , அதோட பணத்த தெறிக்க விடுற தயாரிப்பாளர் தாணு கெடைச்சா கேக்கவா வேணும் ? . ஆனா இது ரெண்டையும் தாண்டி படத்த பார்க்கத் தூண்டிய முக்கிய நபர் இயக்குனர்  ரஞ்சித் . மூணாவது படத்துலயே சூப்பர் ஸ்டார இயக்கற வாய்ப்பு கெடைச்சாலும் அதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்காம தன் பாணியிலேயே படம் எடுக்கிறார் என்பதும் , தனது வழக்கத்திலிருந்து மாறி சூப்பர் ஸ்டார் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிப்பதுமான அந்த மாஸ் ப்ளஸ் க்ளாஸ் கூட்டணி டிக்கெட் விலை என்ற பெயரில் நடந்த பகல் கொள்ளையையும் தாண்டி நிச்சயம் வெற்றி பெறுமென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது . ஆனா கபாலி A Costly Mistake  
( அவுங்களுக்கில்லை நமக்கு ) என்று பொட்டில் அடித்தது போல சொல்லாமல் லேசாக தடுப்பது சூப்பர் ஸ்டார் மட்டுமே ...

மலேசிய சிறையிலிருந்து 25 வருடங்கள் கழித்து வெளியே வரும் கபாலீஸ்வரன் ( ரஜினிகாந்த் ) தன் பழைய பகையை தீர்ப்பதும் , பிரிந்த மனைவியை தேடி கண்டுபிடிப்பதுமே கபாலி . ஒரு பக்கா ரிவென்ஜ் ஆக்ஸன் படமாக இருந்திருக்க வேண்டியது தடம் மாறி ஸ்லோ மோஷன் பிட்சர் ஆகிவிட்டது . சுருக்கமா சொல்லனும்னா சதாப்தில எக்ஸ்டரா ரூவா ல தட்கல் டிக்கட் எடுத்து அவசரம் அவசரமா போகணும்னு ஏறி உக்காந்தா ட்ரெயின் பேசஞ்சர் வேகத்துல போனா எப்புடி இருக்குமோ அதே கதி நிறைய இடங்களில் ...

சூப்பர் ஸ்டாரை ஒரு சூப்பர் ஆக்டராக நீண்ட வருடங்கள் கழித்து அடையாளம் காட்டியிருக்கும் படம் .   மனுஷன் நடிப்புல சும்மா பின்னி பெடலெடுத்திருக்கார் . மனைவியை தேடி அலைவதிலாகட்டும் , ரித்விகா அப்பா என கூப்பிட்டவுடன் காட்டும் ரியாக்ஸனிலாகட்டும் , உண்மை மகளை கண்டவுடன் உருகுவதிலாகட்டும் என படம் முழுவதும் அவரது பன்ச் , ஸ்டைல் இதையெல்லாம் தாண்டி நம்மை கட்டிப்போடுகிறது அவரது நடிப்பு . ஆனால் கதைக்களம் ஒரு சூப்பர் ஹீரோ கையில் சோன்  பப்புடியை கொடுத்தது போலாகிவிட்டது . ரஜினியை தவிர நம்மை ரசிக்க வைத்த மற்றொரு நபர் ராதிகா ஆப்டே . அம்பிகா , மீனா வுக்கு பிறகு ரஜினிக்கு நல்ல ஆப்டான நடிகை . அவர் கண்கள் காட்டும் எஸ்ப்ரஷன் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் . கிஷோர் நன்றாக நடித்திரிந்தும் ரஜினிக்கு முன் பெரிதாக எடுபடவில்லை . அதிலும் மெயின் வில்லனாக வரும் டோனி லீ ஜெட் லீ போல  இருப்பார் என்று பார்த்தால் சரியான பிம்பிலி ...


ரஞ்சித் தனது சகாக்களுக்கெல்லாம் இந்த படத்திலும் வாய்ப்பளித்திருப்பது சந்தோசம்  . ஆனால் தினேஷ் தவிர மற்றவர்கள் எல்லாம் வெறும் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவியிருக்கிறார்கள் . தினேஷை வில்லன் கோஷ்டி காலி பண்ணும் காட்சி கபாலியில் ஹைலைட் .  மற்றபடி படத்தில் எல்லோரும் பேசுகிறார்கள் , பேசுகிறார்கள் , பேசிக்கொண்டே இருக்கிறார்கள் . தாவி தாவி சண்டை போடும் தன்ஷிகா நல்ல தேர்வு . ஓப்பெனிங் பிஜிஎம் இல் நிமிர்ந்து உட்கார வைக்கும் சந்தோஷ் நாராயணன் நடுவில் தூங்கி விட்டார் போல . நெருப்புடா சவுண்ட் வரும் போது தான்  நாம் எந்திரிக்க முடிகிறது . சீரியஸான சண்டைக்காட்சிகளில் இவரது ஸ்லோ மியூசிக் சவ சவ . முரளியின் ஒளிப்பதிவு டாப் ஆங்கிள் ஷாட்களில் மலேசியாவை மனதில் பதிய வைக்கிறது ...

படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள் நம்மை கட்டிப் போடுகின்றன . சிம்பிளான ஆனால் பவர்ஃபுல்  ஹீரோயிசம் ஆஸம் . அடுத்தது ஸ்லோவாக இருந்தாலும் ரஜினியின் பழைய வாழ்க்கையை பற்றி டீட்டையிலிங்காக படம் போகிறது . ஆனால் போய்க்கொண்டேயிருக்கிறது . ஒரு கட்டத்தில் இந்த தியேட்டர்ல பப்ஸ் நல்லா இருக்கும்ல என்று பக்கத்து சீட்காரர் கேட்கும் அளவுக்கு போனது தான் கொடுமை . கோட் சூட் போட்டதற்குள் இருக்கும் அரசியலை ரஜினி பேசுவது திணிக்கப்பட்டது போலிருந்தாலும் வில்லனுக்கு முன் கெத்தாக அமர்ந்தபடி " ஏன் நான் கோட் சூட் போடக்கூடாதா ? கால் மேல கால் போட்டு உக்காரக்கூடாதா ? என்று கேட்கும் இடம் கைத்தட்டல் வாங்கும் சில இடங்களில் முக்கியமான ஒன்று . அதேபோல வில்லன் வீட்டு பார்ட்டியில் இருந்தபடியே அவன் சாம்ராஜ்யத்தை காலி பண்ணுவது கபாலி டா ...

படத்தின் முதல் பத்து நிமிடங்கள் , இண்டெர்வெல் பிளாக் , க்ளைமேக்ஸ் என எல்லாமே மகிழ்ச்சி . ரஜினியின் ஃப்ளாஷ்பேக் அவரது விக்கை போலவே கவராமல் கடந்து போகிறது . ரஜினியை இந்த மாதிரி ஒரு பாத்திரத்தில் நடிக்க வைத்த ரஞ்சித்தின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் . ஆனால் டானாக இல்லாமல் ஒரு மாறுபட்ட கதாபாத்திரமாக    ( பாபநாசம் போன்ற கதையம்சம் கொண்ட படத்தை உதாரணமாக சொல்லலாம் ) இருந்திருந்தாலோ, திரைக்கதை க்ரிப்பாக இருந்திருந்தாலோ நிச்சயம் எழுந்து நின்று சல்யூட் அடித்திருக்கலாம் . ஆனால் தனது சொந்த சித்தாந்தங்களை  திணிப்பதற்கு ரஜினியை ஒரு மீடியமாக பயன்படுத்தியது போலவே படுகிறது ...


சூப்பர் ஸ்டாரை  வைத்து நாயகன் போல ஒரு படத்தை ரஞ்சித் எடுக்க நினைத்ததில் தப்பில்லை , ஆனால் அதை ரஜினி படம் போல எடுக்காமல் கமல் படம் போல எடுத்ததில் தான் பிரச்சனை . தன்  எண்ணத்தில் உள்ளதை அப்படியே படமாக்கும் விதத்தில் சறுக்கியிருக்கிறார் . மெட்ராஸ் படத்திலிருந்த ஒரு வாழ்வியல் இதில் டோட்டலி மிஸ்ஸிங் . அடித்தட்டில் இருக்கும் மக்களை மேம்படுத்தும் மெஸ்ஸையாவாக ரஜினி நடித்திருக்கும் படத்தை அந்த மக்களே குடும்பத்துடன் பார்க்க முடியாதபடிக்கு கார்பரேட்களுக்கு டிக்கெட்டுகளை தாரை வார்த்திருக்கும் தயாரிப்பாளரை என்ன சொல்ல ?. கபாலி - கடுப்புடா என்று நெட்களில் வரும் விமர்சனத்தை போல படத்தை நிச்சயம் அப்படி ஒதுக்கி தள்ளி விட முடியாதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டார் , ஒரு புதியவருக்கு அவர் கொடுத்திருக்கும் வாய்ப்பு மற்றும் மாறுபட்ட நடிப்பில் சூப்பர் ஸ்டாரை நமக்கு காட்டிய விதம் ...

ரஜினிக்காக கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் சேர்க்காமல் ரியலிசமாக எடுக்க முற்பட்டிருக்கும் படத்தில் அவர் ஒரு சின்ன கன்னை வைத்துக்கொண்டு எதிரிகளை சுடுவதும் , கிட்டத்தட்ட ஐந்து குண்டுகள் பாய்ந்து சரிந்தவர் ஏதோ பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டேன் என்பது போல ப்ளாஸ்டரோடு  வருவதும் என்ன சாரே நியாயம் ? .  அளவுக்கதிகமான மார்கெட்டிங் நிச்சயம் படத்தின் வியாபாரத்திற்கு உதவியிருக்கலாம் , ஆனால் இது பக்கா ரஜினி ரசிகனுக்கான படமில்லை நாங்கள் வித்தியாசமா ட்ரை  பண்ணியிருக்கோம் அப்படின்னு ஒரு சின்ன கண்டிஷன்  அப்ளை ஆஸ்ட்ரிச் ஆவது போட்டிருக்கலாம் . மொத்தத்தில் கோட் , சூட் , கூலர்ஸ் என்று ஸ்டைலாக இருந்தாலும் ரஜினி ரசிகர்களை எண்டெர்டைன் பண்ணும் பக்கா மாஸாகவும் இல்லாமல் , ஒரு புது முயற்சியை எழுந்து நின்று பாராட்டும் க்ளாஸாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட புள்ளியில் நிற்கும் கபாலி - Not A Complete Man ...


ரேட்டிங் : 2.75 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 42



8 July 2016

அரையாண்டு தமிழ் சினிமா 2016 - TAMIL CINEMA 2016 HALF YEARLY REVIEW ...


2016 இல் ஜுன் மாதம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் வழக்கம் போல பத்து சதவிகிதத்துக்கும் குறைவான படங்களே ஹிட் ஆகியிருக்கின்றன . ஒருபக்கம் மாஸ் ஹீரோ விஜய் படம் தெறி ப்ளாக்பஸ்டர் என்றால் , இன்னொரு பக்கம் விசாரணை தேசிய விருதுகளோடு மக்களிடையேயும் நல்ல வரப்பேற்பை பெற்றிருக்கிறது. இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியம் . மொத்தத்தில் சூப்பராகவும் இல்லாமல் , மொக்கையாகவும் இல்லாமல் போதையேறியும் , ஏறாத ஒருவித நிலையில் ஆறு மாதங்கள் போனது என்றே சொல்லலாம் ...

இசைஞானியின் ஆயிரமாவது படம் என்பதோடு குரு - சிஷ்யன் பாலா - சசிகுமார் கூட்டணியில் வந்த தாரை தப்பட்டை பாலாவின் வழக்கமான வன்முறை வெறியாட்டத்தால் தாறுமாறாகிப் போனது . கொடுத்த காசுக்கு வரலட்சுமியின் தொடைகள் மட்டுமே ஆறுதல் . சிவகார்த்திகேயன் தவிர்த்து யார் நடித்திருந்தாலும் சுமார் மூஞ்சி குமாராகியிருக்க வேண்டிய ரஜினி முருகன் பொங்கல் ரிலீஸின் சூப்பர் ஸ்டார் . விஷால் கதகளி யில் வித்தியாசமாக ட்ரை பண்ணியிருந்தாலும் ஆட்டம் எடுபடவில்லை . அரண்மனை அளவிற்கு வெற்றி பெறாமல் ஆவெரேஜாக போனது சுந்தர்.சி யின் அரண்மனை 2 . ஜனவரி மாதக்கடைசியில் வந்தாலும் இறுதிச்சுற்று வசூல் , விமர்சனம் இரண்டிலும் முதலிடம் பெற்றது . 2015 இல் தனிஒருவன் அரவிந்த்சாமி கலக்கல் கம்பேக் என்றால் இந்த வருடம் இறுதிச்சுற்று மேடி ...

ஆனந்தவிகடன் விசாரணை படத்தின் முஸ்லீம் இளைஞன் கேரக்டரை வைத்து கொஞ்சம் குசும்பாக விமர்சனம் செய்திருந்தாலும் இரண்டாவது அதிகபட்ச மார்க்குகள் வழங்கி படத்தை கவுரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட வருடம் கழித்து கனத்த இதயத்துடன் வெளியே வரவைத்த படம் விசாரணை . நானும் ரவுடி தான் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி ஆக்சன் அவதாரம் எடுத்த சேதுபதி பேசப்பட்டதோடு வசூலையும் பெற்றது. ஒவ்வொரு படத்திலும் புது ஜெனரை கையில் எடுக்கும் அறிவுமதி ஈரம் அறிவழகனோடு சேர்ந்து கொடுத்த ஆறாது சினம் கொஞ்ச நாட்களில் ஆறிப்போனது துரதிருஷ்டம் . ஒரிஜினலில் இருந்த டச் ரீமேக் பெங்களூரு நாட்களில் இல்லாததால் ஜஸ்ட் கடந்து போனது . மிருதன் போட்ட காசுக்கு மேலே எடுத்தது என சொல்லப்பட்டாலும் கழுத்து வலிக்கும் அளவுக்கு கடித்தே அனுப்பி வைத்தார்கள் ...

பெயர் பிச்சைக்காரனாக இருந்தாலும் வசூலில் தமிழ் , தெலுகு இரண்டிலும் விஜய் ஆண்டனியை மேலும் கோடீஸ்வரனாக்கியது படம் . காதலும் கடந்து போகும் பெரிய வசூலை அள்ளா விட்டாலும் மனதை விட்டு கடந்து போக நாட்கள் ஆனது . புகழ் பட பாடல்கள் பேசப்பட்ட அளவிற்கு படம் புகழ் பெறவில்லை . தோழா நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக்கு வசூல் ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் தோள் கொடுத்த படம் . டார்லிங் 2 , ஹலோ பேய் பேசுறேன் , ஜித்தன் 2 எல்லாமே பேய் பட சீஸன் இன்னும் முடியவில்லை என்கிற ரீதியில் வந்த எண்ணிக்கைக்கான படங்களே . இந்த அரையிறுதி ஆண்டின் அதிகம் வசூலித்த படம் தெறி . புலி க்கு பிறகு துவண்டிருந்த விஜய் ரசிகர்களை தெறிக்க வைத்திருக்கிறது தெறி யின் வெற்றி.  மனித நேயத்தை பேசிய விதத்தில் கவர்ந்தான் மனிதன் ...

சூர்யா நடிப்பில் டைம் மிஷினை மையப்படுத்தி வந்த 24 அர்பன் சென்டரில் கவர்ந்த அளவிற்கு ஆல் சென்டரில் ஓடவில்லை . நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் ஒரு பெரிய வெற்றியை தக்க வைக்க செய்யும் முயற்சியில் மீண்டும் சறுக்கியிருக்கும் படம் மருது . சிம்பு ரசிகர்கள் சொன்ன அளவிற்கு இது நம்ம ஆளு என்று அனைவரும் சொல்லவில்லை . ஐடி வேலையை விட்டுவிட்டு தனது சொந்த பணத்தை போட்டு உச்சக்கட்ட ரிஸ்க் எடுத்த விஜய் குமாரின் முயற்சிக்கு உறியடி உழைப்புக்கேற்ற தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது ...

முதல் இரண்டு படங்களிலேயே மிகப்பெரிய அளவிற்கு பேசப்பட்ட கார்த்திக் சுப்பாராஜின் இறைவி நெட்டிசன்களால் கொண்டாடப்பட்ட அளவிற்கு ரியலில் வசூலை குவிக்கவில்லை . ஆனாலும் எஸ்.ஜே சூர்யா என்கிற நடிகனை அறிமுகப்படுத்தியதற்கு இயக்குனருக்கு நன்றி . வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் நீண்ட நாட்கள் கழித்து வயிறு வலிக்க வைத்தான் . சில குறைகள் இருந்தாலும் ஒரு நாள் கூத்து மோர் தென் ஓகே ரகம் . மெட்ரோ செயின் ஸ்னாட்சிங்கை வைத்து தையிரியமாக எடுக்கப்பட்ட படம் . கொஞ்சம் காஸ்டிங் கில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் அடுத்த லெவலுக்கு போயிருக்கும் . உறியடி , மெட்ரோ என சீரியஸ் படங்களுக்கு நடுவே முதல் படத்திலேயே சிம்பிள் அன்ட் சென்ஸிபிளாக ராஜா மந்திரி யை கொடுத்திருக்கிறார் பெண் இயக்குனர் உசா கிருஷ்ணன் . இது மாதிரி ஃபீல் குட் படங்களுக்கான ஆடியன்ஸ் டிவி சீரியல்களுக்குள் மூழ்கிப் போனதும் , பார்த்தே ஆக வேண்டுமென தூண்டும் வகையில் ப்ரமோ இல்லாததும் சறுக்கல்கள் . இப்பொழுது குழந்தை முதல் கிழவர் வரை உச்சரிக்கும் பெயர் கபாலி . தலைவா எப்போ வர ?...


தில்லுக்கு துட்டு - DHILLUKKU DHUDDU - வேஸ்டாவாது ...


காமெடியனாக பீக்கில் இருக்கும் போதே மேலும் காலம் தாழ்த்தாமல் ஹீரோ வாக தில்லாக களம்  இறங்கியவர் சந்தானம் . அவரின் முடிவு அவருக்கு பெரிதாக கை கொடுத்ததோ இல்லையோ நிச்சயம் சூரி , சதீஷ் போன்ற சக காமெடியன்களுக்கு நிறையவே கொடுத்திருக்கிறது . சோலோ ஹீரோவாக தனது மூன்றாவது படத்தில் " லொள்ளு சபா " ராம்பாலா வுடன் கை கோர்த்து தமிழ் சினிமாவின் கரெண்ட் ட்ரெண்ட் ( இன்னுமா முடியல ! ) ஹாரர் காமெடியில்  சேஃபாக கால் பதித்திருக்கும் படம்  தில்லுக்கு துட்டு ...

ஹீரோ வென்று களம் இறங்கியவுடன் சும்மா இராமல் உடலை எடையை குறைத்து ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி ஸ்மார்ட்டாக இருக்கிறார் சந்தானம் . ஆனால் என்ன சிவகார்த்திகேயன் போலல்லாமல் பத்து வருடமாய் சினிமாவில் பக்கா காமெடியனாக பார்த்தவரை காதல் , ஆக்சன் காட்சிகளில் பார்க்கும் போது லேசாக நெருடுகிறது . அதை தவிர்த்து பார்த்தால் தனது வழக்கமான ஒன் லைனர்களில் படம் நெடுக கலாய்த்து நம்மை கிடுக்கி பிடி போடுகிறார் சந்தானம் . ஹீரோயின் கேரக்டர் சேட் பொண்ணு என்பதால் செவப்பாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்து விட்டார்கள் போல . சனயா சின்ன வயது கோவை சரளா போல இருக்கிறார் . இவர் வரும் க்ளோஸ் அப் காட்சிகள் Zee டி வி யில் ஹிந்தி டப்பிங் சீரியல் பார்ப்பது போல இருக்கிறது ...



மொட்டை ராஜேந்திரன் வரும் போது சந்தானம் அளவுக்கு கை தட்டுகிறார்கள் . அவரும் தனது கட்டை குரலில் பேசி கூலாக நடிக்கிறார் . இவர் டீமுடன் அடிக்கும் பேய் ரகலைகளை ரசிக்க முடிந்தாலும்  ஒரே மாதிரியான மேனரிசம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்து விட்டது . சிறந்த நடிகர் சவுரப் சுக்லா வை முடிந்தவரை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள் . ஆனந்தராஜ் மற்றும் கார்த்திக் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் . தமன் இசையில் " சிவன் மகன் டா " மட்டும் முணுமுணுக்க வைக்கிறது . கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் , தீபக் குமார் பாடி யின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் ...

படத்தில் வரும் காதல் காட்சிகள் ஹீரோயினின் லிப் மூவ்மெண்ட் போல படத்தோடு சரியாக சிங்க் ஆகாமல் தனியாக ஓடுகிறது . முதல் பாதி சுமாராக போனாலும் பேய் பங்களாவுக்குள் நுழையவதற்கு முந்தைய சீன்களில் இருந்து படம் சூடு பிடிக்கிறது . அதன் பிறகு ரியல் பேய் - ரீல் பேய் என்று சுத்த விட்டு நம்மை சிரிக்க வைக்கிறார்கள் . சந்தானம் - ராம்பாலா கூட்டணி யில் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தாலும் சந்தானம் ஹீரோ , ஹாரர் காமெடி ஜெனர் படத்தில் புதுசாக என்ன செய்து விட முடியும் ? என்றே தோன்றுகிறது . பொழுதுபோக்காக சினிமாவுக்கு செல்லும் யாருக்கும் இந்த தில்லுக்கு துட்டால் துட்டு வேஸ்டாவாது ...

ரேட்டிங்  :   2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 


26 June 2016

அம்மா கணக்கு - AMMA KANAKKU - இன்னும் நல்லா படிச்சிருக்கலாம் ! ...


சின்ன பட்ஜெட்டில் தரமான கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து வரும்  தனுஷ் ஹிந்தியில் சமீபத்தில் ஹிட்டடித்த " நில் பேட்டி சன்னட்டா " வை அதே இயக்குனரை வைத்து அப்படியே ரீ மேக்கியிருப்பது தான் அம்மா கணக்கு . அவார்டுகளை அள்ளியதோடு வணிக  ரீதியாகவும் வெற்றி பெற்ற காக்காமுட்டை  , விசாரணை வரிசையில் இந்த படமும் இடம்பெறும் என்கிற தனுஷின் கணக்கு சாத்தியமாகுமா ? பார்க்கலாம் ...

எவ்வளவு  கஷ்டப்பட்டாலும் மகளை  பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டுமென்று கனவு காணும் சிங்கிள் மதர் சாந்தி ( அமலா பால் ) , பத்தாவது படித்தாலும் படிப்பை பற்றி எந்த கவலையும் படாமல் சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் போடும் டீன் ஏஜ் மகள் அபி ( யுவஸ்ரீ ) யை எப்படி மாற்றுகிறாள் என்பதே அம்மா கணக்கு ...

அழகான அமலா பாலை வீட்டு வேலைக்காரியாகவும் , 15 வயது மகளுக்கு அம்மாவாகவும் ஏற்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது . தன் மகளுக்காக அவர் படும் கஷ்டங்கள் உருக்கினாலும் கலெக்டர் எபிசோட் நாடகத்தனமாகவே படுகிறது .  டீன் ஏஜ் பெண்ணிற்கே உரிய குறும்பு , கோபம் இவற்றோடு யுவஸ்ரீ நல்ல தேர்வு . வீட்டில் அம்மா - மகள் இருவருக்குமிடையேயான உரையாடல்கள் யதார்த்தம் . ரேவதி - அமலா பால் இடையேயான சந்திப்புகள் ஒரே மாதிரி இருந்து போரடிப்பதை தவிர்த்திருக்கலாம் . தேசிய விருது க்கு பிறகு வித்தியாசமாக ஏதாவது பண்ண வேண்டுமென்று நினைத்த ! சமுத்திரக்கனி நடிப்பால் மேஜர் சுந்தர்ராஜனை நினைவுபடுத்துகிறார் ...


இசைஞானி தேவையான இடங்களில் மட்டும் பின்னணி இசையமைத்து கவர்கிறார் . ஆனால் ஒரே ஆர்.ஆரை வைத்து படம் முழுவதும் ஒப்பேற்றி ரசிகர்களை ஏமாற்றுகிறார் . மகளுக்காக அமலா பால் அவள் வகுப்பிலேயே சென்று படிப்பது புதுமையாக இருந்தாலும் ப்ராக்டிகலாக அது சாத்தியமா என்பதற்கான எந்த லாஜிக்கல் ஆன்சரும் இல்லாதது சறுக்கல் . மகள் அம்மாவை சந்தேகப்படுவது , பிறகு சக மாணவன் சொல்லி திருந்துவது , கடைசியில் ஒரு கண்ணாடியை போட்டுக்கொண்டு கலெக்டருக்கான நேர்முகத்தேர்வில் அமர்வது என படத்தில் நிறைய ஆஸ் யூஸுவல் சீன்கள் ...

ஆவரேஜ் ஸ்டூடண்ட்ஸோட அம்மாக்கள் எல்லாம் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தால் அரசு தாங்குமா ? இப்படி  சில கேள்விகள் மற்றும் குறைகளால் பசங்க , ஹரிதாஸ் அளவுக்கு படம் நம்மை கவராமல் போனாலும்  பெண் கல்வி யை வலியுறுத்தும் வகையில் படத்தை எடுத்திருக்கும் பெண் இயக்குனர் அஸ்வினி அய்யர் திவாரியை நிச்சயம் அப்ரிசியேட் செய்வது நம் கடமை  . பள்ளிப் பருவத்தின் முக்கிய கட்டத்தில் படிப்பை பற்றிய அக்கறையில்லாமல் ஜாலியாக சுற்றும் மாணவர்களும் , அவர்களை திருத்த கஷ்டப்படும் பெற்றோர்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் . மொத்தத்தில் கதைக்கரு  கவர்ந்த அளவிற்கு படத்தின் மேக்கிங் கவராததால் கணக்கை இன்னும் நல்லா படித்திருக்கலாமோ என்றே தோன்றுகிறது ... 


ரேட்டிங் : 2.75 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 42 







5 June 2016

இறைவி - IRAIVI - வணங்கலாம் ...


ள்ளிரவில் ஒரு இளம்பெண் நிறைய நகைகள் அணிந்து வீதியில் தனியாக என்று செல்ல முடிகிறதோ அன்றே இந்தியாவிற்கு முழு சுதந்திரம் அடைந்ததாய் ஒத்துக்கொள்வேன் என்றார் மகாத்மா . ஆனால் இன்றும் ஆணாதிக்க சமுதாயத்தில் பட்டப்பகலில் ஒரு பெண் தனது வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியாத சூழலில் தான் நாம் இருக்கிறோம் . ஆண்கள் உலகத்தில் பெண்கள் ஒரு பகுதி ஆனால் அவர்களுக்கு ஆண்கள் தான் உலகமே . இப்படி தனது சுயநலம் , ஈகோ இவற்றால் தன்னை  நம்பி வந்த இறைவிகளை கைவிட்ட இரண்டு இறைவைன்களை பற்றிய கதையே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வந்திருக்கும் இறைவி ...

தயாரிப்பாளருடனான தகராறால் தன்  படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் பிரபல இயக்குனர் அருள் ( எஸ்.ஜே.சூர்யா ) , ரிலீசுக்கு தேவைப்படும் பணத்துக்காக தனது மூதாதையர் செய்த பூர்வீக சிலைகளை திருடும் அவர் தம்பி ஜகன் ( பாபி சிம்ஹா ) , அவர்களுடைய பால்ய நண்பன் மைக்கேல்
 ( விஜய் சேதுபதி ) , எஸ்.ஜே.எஸ் சுக்கு மனைவியாக கமாலினி முகர்ஜி , விஜய் சேதுபதியின் மனைவியாக அஞ்சலி இந்த ஐவரோடு சேர்த்து நம்மையும் சிரிக்க , கவலைப்பட , சிந்திக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ...

இயக்குனராக சம்பாதித்த பெயரை முழு நேர நடிகரான பிறகு செலவு செய்தவர் எஸ்.ஜே.சூர்யா . ஆனால் அவருக்குள் இருக்கும் நடிப்புப்பசிக்கு நிச்சயம் நல்ல தீனி இந்த படம் . நல்ல கலைஞனுக்கே உண்டான கர்வம் , படத்தை வெளியிட முடியாத விரக்தி , காதல் மனைவி பிரிந்த சோகம் என எல்லாவற்றையும் இயக்குனராக இருப்பதாலோ என்னவோ  மனுஷன் நம் கண் முன்னே நிறுத்துகிறார் . இவரிடம் இந்த அளவு வேலை வாங்கியதுக்காகவே கார்த்திக் சுப்பராஜுக்கு ஒரு சல்யூட் . இறைவி க்குப் பிறகு எஸ்.ஜே.எஸ் வழக்கம் போல வியாபாரி , திருமகன் வகையறா படங்களுக்கு திரும்பி விடாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பது உத்தமம் ...


சோலோ ஹீரோவான பிறகும் இது போன்ற கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி க்கு வாழ்த்துக்கள் . குடும்பத்தை பற்றி யோச்கிக்காமல் ஒரு நிமிட உணர்ச்சிவயத்தில் குற்றம் புரிந்து விட்டு உள்ளே போன பல இளைஞர்களை நடிப்பால் நினைவு படுத்துகிறார் . நீண்ட இடைவெளிக்கு பிறகு அஞ்சலிக்கு பேர் சொல்லும் ஒரு படம் . " என்ன அவன் கூட படுத்தேனான்னு கேக்குறியா " என்று ஆவேசப்படும் இடத்தில் தனது அலட்டிக் கொள்ளாத நடிப்பால் மார்க் அள்ளுகிறார் அஞ்சலி  . என்ன தான் போல்டாக இருந்தாலும் கடைசியில் கணவனுக்குள் கட்டுப்படுவது யதார்த்தம் ...

அப்பா உட்பட யாருமே பெண்களை ஒழுங்காக நடத்தவில்லை என்று ஆதங்கப்படும் பாபி சிம்ஹா வை இது போன்ற சப்போர்டிங் காஸ்டிங்கில் பார்ப்பது ஆறுதல் . வாயால் பேச வேண்டிய வசனங்களை கமாலினி யின் கண்களே பேசி விடுகிறது . விஜய் சேதுபதியின் நண்பி ?! மலராக வரும் பூஜா போல்ட் அண்ட் பியூடிபுள் . Blessing in Disguise என்று சொல்வார்கள் . அது  நடிகர் சங்க பதவியை இழந்ததிலிருந்து நல்ல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராதாரவிக்கு பொருந்தும் . சந்தோஷ் நாராயணின் பி.ஜி.எம் படத்துக்கு உயிர் கொடுக்கிறது . " கண்ணை காட்டி " பாடல் நன்றாக இருந்தாலும் யதார்த்தமான படத்துக்கு கொஞ்சம் ஆர்டிபீசியலாக படுகிறது ...


முக்கிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு `இரண்டரை மணி நேரத்துக்கு மேல் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்ற விதம் , சின்ன சின்ன ட்விஸ்டுடன் கூடிய திரைக்கதை , சிம்பிள் பட் சார்ப்பான வசனங்கள் , இயல்பாக நடிக்கும் நடிகர்கள் , வசனங்களாக மட்டுமில்லாமல் காட்சிகளாக விரியும் சிம்பாலிக் ஷாட்கள் , மனித உணர்வுகளை கசிக்கிப் பிழியாமல் மேம்போக்காக அதே சமயம் அழுத்தமாகவும் பதியும் விதத்தில் சொன்ன ஸ்டைல் இவற்றால் இறைவி சாதாரண படங்களிலிருந்து தனித்து மேலே நிற்கிறாள் ...

புதுசு என்று புகழ முடியாத கதை ,  குறிப்பிட்ட ஆடியன்சை டார்க்கெட் செய்து எடுக்கப்பட்டது போன்ற படம் , இயக்குனரின் முந்தைய படங்களை நினைவு படுத்தும் சில சீன்கள் , இறைவி என்று டைட்டில் வைத்து விட்டு பெண்களின் பலத்தை காட்டாமல் ஆண்களின் பலவீனத்தை மட்டும் காட்டிய விதம் இவையெல்லாம் இறைவியை ஒருபடி இறக்குகின்றன  . டைட்டில் கார்டில் கே.பி , பாலு மகேந்திரா , சுஜாதா ஆகியோருக்கு நன்றி தெரிவித்த இயக்குனரின் நேர்மைக்கு பாராட்டுகள் . அதே போல மணிரத்னம் , செல்வராகவன் இருவரின் பெயரையும் சேர்த்திருக்கலாமோ என்றே தோன்றுகிறது . வணிக ரீதியான வெற்றியை மட்டும் கணக்கில் வைத்து ஒரே மாதிரியான படங்களை எடுக்காமல் புதுப்புது ட்ராக்கில் பயணிக்கும் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வந்திருக்கும் இறைவியை இறுக்கமாக நம்மை ஒன்ற செய்த விதத்துக்காக வணங்கலாம் ...

ரேட்டிங்      : 3.25 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 44

28 May 2016

உறியடி - URIYADI - உரத்த அடி ...


" நீங்க என்ன சாதி " - இந்த கேள்வி ஏதோ கல்யாணத்திற்கு ஜோடி தேடுபவர்களால் கேட்கப்படும் சம்பிரதாயமான கேள்வியாக இல்லாமல் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களிடம் கேட்கப்படும் முக்கிய கேள்வியாக இருக்கும் அளவிற்கு இன்றைய அரசியலில் சாதி இரண்டறக் கலந்துவிட்டது. ஆனால் ஒரு மாணவன் சாதி பார்த்து சக நண்பனையோ , காதலியையோ தேர்ந்தெடுப்பதில்லை .  அப்படி சாதி பார்க்காத மாணவர்களை பலியாடாக்க நினைக்கும் சாதி அரசியலை தான் இயக்கி , நடித்து , தயாரித்த முதல் படத்திலேயே  தோலுரித்துக் காட்டிய விஜய் குமாருக்கு வாழ்த்துக்கள் ...

கல்லூரி விடுதியில் தங்கி சரக்கடிக்கும் சாரி படிக்கும் நான்கு மாணவர்கள் சாதிய அரசியலுக்குள் விழுந்து ரத்தமும் , சகதியுமாய் எழுவதே உறியடி . இந்த சின்ன ஒன்லைனை வைத்து இரண்டு மணி நேர படத்தை சஸ்பென்சோடும் , சென்சிபிலான ஸ்க்ரீன்ப்ளே வோடும் சேர்த்து நம்மை ஒன்ற வைத்த விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் . அதே சமயம் வெளியூரில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் பற்றிய எந்த சிந்தனையுமே இல்லாமல் சரக்கடிப்பது இல்லை ஆளை அடிப்பது இந்த இரண்டை மட்டுமே முழு நேர வேலையாக செய்வது போல காட்டியதை தவிர்த்திருக்கலாம் ...

விஜய் குமார் செய்யும் ஆக்சன்களுக்கு தடையாக இருப்பது அவர் அமுல்பேபி முகம் . ஆனாலும் முதல் படம் என்பது தெரியாமல் இயல்பாக நடித்திருப்பதோடு நிறைய புது முகங்களையும் அதே போல நடிக்கவும்  வைத்திருக்கிறார் . நண்பர்களாக வருபவர்களுள் குவாட்டர் கவர்கிறார் . படத்தில் தெரிந்த ஒரே முகம் மைம்கோபி நம்மை ஏமாற்றவில்லை . ஆனால் இவருடைய எண்ணம் நமக்கு முன்பே தெரிந்து விடுவதால் பெரிய ட்விஸ்டை கொடுக்கவில்லை ...


சாதியை சொல்லி ஒரு பெரியவரை கடைக்குள்  அனுமதிக்க மறுப்பதும் அதை அந்த மாணவர்கள் எதிர்ப்பதுமான அந்த சீன் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது . அதை  தொடர்ந்து வரும் சீன்களும் விறுவிறுப்பை கூட்டுகின்றன .  பைத்தியம் மேட்டர் சஸ்பென்சாக இருந்தாலும் குழப்பத்தையும் , சில கேள்விகளையும் எழுப்புகிறது . நடக்கப் போவதை கேரக்டர்கள் நினைத்துப் பார்ப்பது போன்ற சீன்கள் க்ளைமேக்ஸில் கை கொடுத்த அளவிற்கு மற்ற இடங்களில் கொடுக்கவில்லை ...

நடிகர்ளை வேலை வாங்கிய விதம் , திரைக்கதை போன்றவற்றில் முதிர்ச்சி தெரிந்தாலும் மேக்கிங் வைஸ் ஒரு அமெச்சூர்னஸ் தெரிவதை மறுப்பதற்கில்லை . காதல் , காமெடி இதெற்கெல்லாம்  தனி  ட்ராக் வைக்காமல் ஒரு அளவோடு நிறுத்தியதற்கு பாராட்டுக்கள் . அதுவும் பஸ்ஸில் வாந்தியெடுக்கும் சீனில் கைதட்டல் அடங்க நேரமாயிற்று . இன்டர்வெலுக்கு முந்தைய லீட் சீன் வளர்ந்து வரும்  மாஸ் ஹீரோவுக்கு அல்டிமேட் ...

படம் சீரியசாக போனாலும் ஒரு கம்ப்ளீட்னஸ் இல்லாதது குறை . கொஞ்சம் பிசகினாலும் சுப்ரமணியபுரம் , மெட்ராஸ் மாதிரி ஒரு புதுப்பையன் எடுத்த்திருக்கான்பா என்று சொல்லக்கூடிய அபாயம் உள்ள கதையை கமர்சியல் காம்ப்ரமைஸ் எல்லாம் செய்து கொள்ளாமல் அடுத்தடுத்து ஆடியன்சை யோசிக்க வைத்து வேறு மாதிரி சீனை முடித்தததோடு , தன் மேல் உள்ள நம்பிக்கையில் சொந்த காசை போட்டு ரிஸ்க் எடுத்து கொடுத்ததுக்காக  இயக்குனருக்கு ஒரு சல்யூட் . யோசித்த அளவுக்கு சில இடங்களில் எக்ஸிக்யூஷன் இல்லையே என்கிற குறை இருந்தாலும்
சின்ன பட்ஜெட்டில்  புதுமுகங்களை வைத்துக்கொண்டு முதல் படத்திலேயே விஜய் குமார் அழுத்தமாக கொடுத்திருக்கும் உறியடி உரத்த அடி ...

ரேட்டிங்    : 3.5 * / 5 *

ஸ்கோர் கார்ட்  : 45

13 May 2016

தெருக்கூத்து - வாக்காளப் பெருமக்களே ! ...


2016 தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே  இருக்கின்ற நிலையில் அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும் என சில ஊடகங்களும்  , திமுக வுக்கு தான் அதிக வாய்ப்பு என்று சில ஊடகங்களும்  எதிரும் , புதிருமான  தகவல்களை முன்வைத்து ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் வாக்காளனை மேலும் குழப்புகின்றன . எல்லா வாக்காளர்களும் எந்த கட்சிக்கு ஓட்டுப் போட  வேண்டுமென்பதை இந்த  கருத்துக்கணிப்புகள்  தீர்மானித்து விட முடியாதென்றாலும் தீர்க்கமான முடிவெடுக்காத வாக்காளர்களை நிச்சயம் இது இன்ப்லுயன்ஸ் செய்யும் ...

வாக்கு வங்கி 



என்ன நடந்தாலும் திமுக வுக்கு தான் எனது வாக்கு என்று ஒரு சாரரும் , அதிமுக வுக்கு தான் என மற்றொரு கும்பலும் இருக்கின்றன . இந்த இரண்டு கட்சிகளுக்கான அடித்தளமே இந்த வாக்கு வங்கிகள் தான் . சமீப காலமாக விலையில்லா நலத்திட்டங்கள் ( அதாங்க இலவசம் ) மூலம் அதிமுகவின் வாக்குவங்கியும் , தொழில் வளர்ச்சி பெரிதாக இல்லாத அதிருப்தியால் ( அந்த வளர்ச்சியால் அதிகம் பலனடைந்தது கட்சி சார்ந்த குடும்பங்கள் எனும் போதிலும் ) திமுக வின் வாக்குவங்கியும் அதிகரித்திருக்கின்றன . இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து 50 லிருந்து 65 சதவிகிதம் இந்த வாக்கு வங்கி இருக்கும். ஆனால் இவற்றை சாராத தேர்தலுக்கேற்ற படி சிந்தித்து ஓட்டு போடும் மற்ற 35 சதவிகிதத்தினர் இந்த முறை நிறைய இடங்களில் கட்சிகளின் வெற்றி தோல்விக்கான காரணிகளாக இருக்கப் போகிறார்கள் . அதற்கு முக்கிய காரணம் ஒரு  கோடிக்கு மேல் புதிய வாக்காளர்களை தமிழகம் பெற்றிருப்பது . அதிலும் கூட எனது தாத்தா காலத்திலிருந்தே நாங்க திமுக தான் என்றோ அல்லது அதிமுக என்றோ சொல்லும் வகையினரும் நிச்சயம் இருக்கலாம்  ...

புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவிலை , திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் கூட செயல்படுத்தப்படவில்லை , முதல்வர் மக்களை தேர்தல் நேரம் தவிர சந்திக்கவேயில்லை , தொழில் வளர்ச்சி இல்லை , மதுவால் சமூகம் சீரழிந்து விட்டது என்று எவ்வளவோ அதிமுக ஆட்சி பற்றி குறை சொன்னாலும் அப்போ திமுக மட்டும் ஒழுங்கா என்று இவர்கள் ஒப்பீடு செய்வார்களே தவிர உண்மையை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  2ஜி உட்பட காங்கிரஸ் உடன் ஆட்சியில் இருந்த போது நடந்த ஊழல் , வளர்ச்சி என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டும் கல்லா கட்டியது , ஊருக்கு ஒன்று என்று இயங்கும் அதிகார மையங்களால் சொத்து அபகரிப்பு உட்பட பல இன்னல்களுக்கு பொது மக்கள் ஆளாகியது , மின்வெட்டு , சினிமா உட்பட பல துறைகளில் அரசாங்க தலையீடு போன்ற குறைபாடுகளை எடுத்துவைத்தால் திமுக ஆதரவாளர்கள் அதற்கு செவிமடுக்க  மாட்டார்கள் . ஆகவே  இந்த இரண்டு கட்சிகளால் அதிகம் பலனடையாத அல்லது இரண்டையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கின்ற வகையினருக்கான பதிவாக கூட இதை சொல்லலாம் ...

மாற்றமா ? ஏமாற்றமா ? 

இப்படி இரண்டையும் தவிர்த்து நம் கண் முன் நிற்கும் மாற்று கட்சிகளில் வாக்கி சதவிகிதத்தின் அடிப்படையில் முன்னாள் நிற்பது தேமுதிக தலைமையில் இருக்கும் மக்கள்நலக்கூட்டணி . தன்னை விட அதிக அரசிய அனுபவம் வாய்ந்த வைகோ , திருமா போன்ற தலைவர்களை தனது தலைமையின் கீழ்  கொண்டு வந்த வகையில் இது கேப்டனுக்கு தனிப்பட்ட வெற்றி . மற்றபடி குறைந்தபட்ச செயல்திட்டத்தின் மூலம் நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்  என்று என்ன தான் சொன்னாலும் இது அரசியலுக்கான கூட்டணி தான் . அதிலும் எப்போது முதல்முறை காங்கிரசுடன் கூட்டணி வைத்தார்களோ அப்போதே கம்யூனிஸ்டுகளின் கொள்கையெல்லாம் காலாவதியாகிவிட்டது . அதற்கு சமீபத்திய உதாரணம் இங்கேயும் , கேரளத்திலும் காங்கிரசை எதிர்க்கும் கம்யுனிஸ்ட் மேற்கு வங்காளத்தில் கை கோர்த்திருப்பது . மக்கள் நல போராட்டங்களை முன் வைத்து நடத்திய வகையில் வைகோ , திருமாவளவன் இருவருக்கும் நன்மதிப்பு உண்டு . ஆனாலும் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி கூட்டணி வைத்த  வகையில் அவர்களின் நம்பகத்தன்மை போய்விட்டது . அரசியலில் தங்களை விட இளையவரான விஜயகாந்தின் வருகைக்காக இவர்கள் வாசலில் காத்திருந்ததன் மூலம் அது மேலும் சிதைந்துவிட்டது . இவர்கள் முன் வைக்கும் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் சாத்தியமா என்பது பெரிய கேள்விக்குறி . ஊழலுக்கு எதிராக இவர்கள் இருப்பார்கள் என வைத்துக்கொண்டாலும் கம்யுனிஸ்டுகள் இருக்கும் இடத்தில் நிச்சயமாக  எந்தவிதமான தொழில் வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது . ஆனால் பல இடங்களில் இவர்கள் திமுக வுக்கு போகக்கூடிய ஓட்டை பிளப்பார்கள் என்று மட்டும்  எதிர்பார்க்கலாம் ...

தேசிய அளவில் வெறும் இரண்டு சீட்களுடன் தனது கணக்கை துவக்கிய பாஜக இன்று தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு 30 வருடங்களில் வளர்ந்திருந்தாலும் தமிழகத்தில் அவர்களால் வலுவாக காலூண்ட  முடியவில்லை . தமிழிசை , ராஜா , பொன்னார் என்று நிறைய பிரபலமான தலைவர்கள் இருந்தும் கூட  கட்சியை பட்டி தொட்டிக்கெல்லாம் கொண்டு செல்லக்கூடிய தொண்டர்படை இல்லாதது பெரிய குறை . மோடியின் சாதனையை மட்டும் வைத்து இங்கே ஓட்டு வாங்கிவிட முடியாது என்பதே நிதர்சனம் . இவர்களும் கூட்டணி கட்சிகள் ஒன்று கூட மதிக்காத நிலையில் தேமுதிக , பாமக எல்லாமே எங்கள் கூட்டணியில் தான் இருக்கின்றன என்று ரொம்ப நாட்கள் கச்சேரி செய்ததை நிறுத்தி விட்டு தனித்து போட்டி என்கிற முடிவை முன்பே எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . நிறைய மாநிலங்களில் ஆளும் அனுபவமும் , இரண்டு ஆண்டுகளில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லாமல் மோடி ஜி ஆண்டு வருவதும் இவர்களுக்கு பலம் . அண்டைய கேரளாவில் காங்கிரஸ் , கம்யூனிஸ்ட்களுக்கு மாற்றாக முதல் முறையாக இவர்கள் மூன்றாவது அணியாக உருவெடுத்திருப்பது நல்ல மாற்றம் . தமிழகத்தில் சென்ற நாடாளுமன்ற தேர்தல் போலல்லாமல் இந்த முறை தனித்து விடப்பட்டது துரதிருஷ்டம் . சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மீட்பு நடவடிக்கை , ஜல்லிக்கட்டு திரும்ப நடைபெற முயற்சி போன்றவற்றால் இவர்களின் செல்வாக்கு  தென்தமிழகத்தில் கொஞ்சம் கூடியிருக்கிறது என்பது உண்மை . இப்பொழுது இவர்கள் தங்களுக்கென்று ஓரளவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்திவருவது புத்திசாலித்தனம் . சீட்டு பெரிதாக கிடைக்கிறதோ இல்லையோ தங்களுக்கான ஓட்டு சதவிகிதத்தை அதிகரித்துக் கொள்வது அடுத்த தேர்தலுக்கு நன்மை பயக்கும் . தென் சென்னை , கன்னியாகுமரி , கோவை உட்பட சில இடங்களில் அதிமுக வின் வாக்கு  இவர்கள் பால் சாய்வதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது  ...

பேச்சு மட்டும் போதுமா ?

மருத்துவரான அன்புமணி ராமதாஸ் யின் பிரச்சார உத்தி , இலவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கை , வேட்பார்களாக படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு போன்றவை நிச்சயம் கவராமல் இல்லை . இன்று எல்லா கட்சிகளுமே சாதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது இவர்கள் மேல் மட்டும் சாதி முத்திரை குத்துவது தவறு . அதே சமயம் ஏற்கனவே அதிகரித்து வரும் ஆணவக்கொலைகள் இவர்கள் வந்தால் மேலும் அதிகரிக்கும் என்று ஒரு சாராரிடையே உள்ள அச்சத்தை முற்றிலும் புறந்தள்ளி விட முடியாது . மற்றவர்களை விட மது ஒழிப்பில் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுக்கும் இவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என நம்பலாம் . ஆனால் அதன் மூலம் ஏற்படப்போகும் வருமான இழப்பிற்கு இவர்கள் வேறெந்த உகந்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை . அதிகார துஷ்பிரயோகம் , குடும்ப அரசியல் , அடக்குமுறை போன்றவற்றுக்கு எதிராக இவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் . வட  மாவட்டங்களில் திமுக , அதிமுக இருவரின் ஓட்டுக்களையும் இவர்கள் பிரிப்பார்கள் என்ற போதும் தென் மாவட்டங்களில் இவர்களுக்கு வேலை பார்க்க எல்லா தொகுதிகளிலும் ஆள் இருக்கிறார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ...

அரிசி , கைபேசி வாங்கக்கூட வக்கில்லாதவனா  தமிழன் என்று தொண்டை புடைக்க சீமான் கேட்கும் கேள்விகள் நம்மை புல்லரிக்க வைக்கின்றன . ஆனால் ஒருவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க அது மட்டும் போதுமா ? கர்நாடகாவை  கன்னடன் ஆள்கிறான் , கேரளாவை  மலையாளி ஆள்கிறான் தமிழ்நாட்டை ஏன் தமிழன் மட்டும ஆளக்கூடாது என்று அவர் கேட்கிற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை . ஆனால் கிட்டத்தட்ட 25 சதிவிகிதம் பிற மொழி பேசுபவர்கள் ( குறிப்பாக தெலுங்கு ) பேர் ஆண்டாண்டு காலமாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர்களை தவிர்த்து விட்டு இவர் பேசும் அரசியல் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்காது ...

யாருக்கு ஓட்டு ?



இந்த தேர்தலில் நோட்டா வுக்கு சென்ற தேர்தலை அதிக ஓட்டு விழும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன . ஆனால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் . உதரணத்துக்கு ஒரு தொகுதியில் நோட்டா அதிக வாக்கு வாங்கியிருந்தால் கூட அதற்கடுத்து அதிக வாக்கு வாங்கிய வேட்பாளர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதே இப்போதைய நடைமுறை . இதை எதிர்த்து ஒரு பொதுநல வழக்கு சமீபத்தில் போடப்பட்டிருக்கிறது . மொத்தத்தில்  நமது ஒட்டு வீணாகி விடுமோ என்றெல்லாம் யோசிக்காமல் கட்சிகளின் செயல்பாடு , நிறை குறை, கடந்த கால வரலாறு ,  வேட்பாளர்களின் தகுதி , தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தேர்தல் அறிக்கை , சமூக , பொருளாதார , சுகாதார வளர்ச்சிக்கான பார்வை இவற்றின் அடிப்படையில் ஓட்டளிப்பதே சிறந்தது . பிடிக்காத கட்சிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து ஐந்தாண்டுகள் அவஸ்தைப்படுவதை விட பிடித்த கட்சிக்கு ஓட்டுப் போட்டு அது தோற்றாலும் மன நிறைவோடு இருப்பதே மேல . பல்முனைப் போட்டி நிலவும் இந்த தேர்தலில் பணம் , சாதி , இலவசத்துக்காக ஓட்டுப் போடாமல் சிந்தித்து போடப்படும் ஒவ்வொரு ஓட்டும் மிக மிக முக்கியமானது ...

வாழ்க ஜனநாயகம்

9 May 2016

24 - CUTE BUT NOT SHORT ...


ரண்டு தோல்விகளுக்கு பிறகு தானே தயாரிப்பாளராகவும் களத்தில் சூர்யா இறங்கியிருக்கும் பெரிய பட்ஜெட் படம் 24 . தொடர் வெற்றிகளை கொடுத்த விக்ரம் குமார் இந்த டைம் மிஷின் படம் மூலம் சூர்யாவுக்கு டைம் பீயிங் கை கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம் ...

டைம் மிசினை கண்டுபிடிக்கும் தம்பிக்கும் , அதை அபகரிக்க நினைக்கும் கொடுமைக்கார அண்ணனுக்கும் இடையே நடக்கும் போராட்டமும் , அப்பா இறந்து விட& ;26 வருடங்கள் கழித்து கையில் கிடைத்த டைம் மிசினை பெரியப்பாவிடமிருந்து காப்பாற்றும் தம்பி மகனின் யுத்தமுமே 24 . இதில் அப்பா , மகன் , பெரியப்பா என மூன்று முகங்களில் சூர்யா ...

தன் திறைமையை காட்டி நடிப்பதற்கு கஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு இது நல்ல வாய்ப்பு . நிறைய இடங்களில் சிவாஜியின் இமிடேசன் தெரிந்தாலும்
( தெரிந்தோ தெரியாமலோ ) கிடைத்த வாய்ப்பில் நன்றாக விளையாடியிருக்கிறார் சூர்யா . " ஐயம் எ வாட்ச் மெக்கானிக் " என்று சமந்தாவிடம் ஓவராகவே வழிந்து வெறுப்பேற்றினாலும் குறும்பு மணியாகவும் , கொடுமைக்கார வில்லன் ஆத்ரேயா வாகவும் நம்மை நன்றாகவே கவர்கிறார் சூர்யா ...


சமந்தா நிறைய முதுகையும் , கொஞ்சம் நடிப்பையும் காட்டியிருக்கிறார் . கொஞ்சமே வந்தாலும் நித்யா மேனன் நிறைவு . பாசக்கார தாயாக தற்கால பண்டரிபாய் சரண்யா . ( இவருக்கெல்லாம் கின்னஸ் ரெக்கார்ட் எதுவும் கெடையாதா ) . திருவின் ஒளிப்பதிவு , படத்தின் சிஜி , ஸ்டண்ட் , ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை எல்லாமே தரம் . பாடல்கள் தான் பாவம் தியேட்டரில் கொஞ்சம் கூட்டத்தை குறைக்கின்றன ...

வாட்ச் சைஸ் டைம் மிசினை வைத்துக்கொண்டு ரெண்டரை மணிநேர படத்தை ஓட்டியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் . ஷாட்ஸ்களில் விக்ரமின் ரிச்னெஸ் தெரிகிறது . இண்டர்வெலுக்கு பிறகு வரும் சின்ன சின்ன ட்விஸ்ட் படம் முடியும் வரை நம்மை ஒன்ற செய்கிறது . சின்ன திடுக் சம்பவங்களும் , அதை டைம் மிசின் கொண்டு கரக்ட் செய்வதும் க்லெவர் ...


இதே பாணியில் வந்த இன்று நேற்று நாளையில் டைம் மிசினை வைத்து அவர்கள் அடிக்கும் விறுவிறுப்பான லூட்டி இதில் மிஸ்ஸிங் . சமந்தாவை கரெக்ட் செய்வதற்கே பெரும்பாலும் சூர்யா டைம் மிசினை உபயோகப்படுத்துவது சறுக்கல் . டைம் மிசினே லாஜிக் இல்லை பிறகு இந்த படத்தில் லாஜிக் பார்ப்பது வெட்டிவேலை . இருந்தாலும் டைம் மிசினை ப்ரீஸ் செய்து விட்டு தோனியுடன் செல்பீ எடுப்பதெல்லாம் ஓவரோ ஓவர் . டைட்டிலை போலவே சுருக்கமாக விறுவிறுவென்று போயிருக்க வேண்டிய படம் சூர்யா - சமந்தா காதல் காட்சிகளால் நிறையவே தொங்குகிறது . யாரோ பெற்ற பிள்ளைக்காக சரண்யா வாழ்வையே தியாகம் செய்வதெல்லாம் எம்.ஜி.ஆர் காலத்து தாய் சென்டிமெண்ட் ...

யாவரும் நலம் , மனம் போன்ற படங்களை கொடுத்த இயக்குனருக்கு இது ஒரு மாற்று கம்மி தான் . ஆனால் தோல்வியில் துவண்டிருந்த சூர்யாவுக்கு இந்த படம் நிச்சயம் ஏ சென்டர்களில் கை கொடுக்கும் . படத்தின் நீளத்தால் நேரம் போவது நமக்கு நன்றாகவே தெரிந்தாலும் சூர்யாவின் நடிப்பு , மேக்கிங் போன்றவை நிறைவை தராமலில்லை ...

ரேட்டிங்   : 3 * / 5*

ஸ்கோர் கார்ட் : 43

17 April 2016

தெறி - THERI - அபோவ் ஆர்டினரி ...


புலியின் தோல்விக்கு பிறகு  இளைய தளபதியை வைத்து பழைய படங்களை தூசு தட்டி புதுசாக எடுக்கும் அட்லி சத்ரியன் கதை  மாவில் கொஞ்சம் பாட்ஷா, என்னை அறிந்தால் உட்பட பல படங்களின் சீன்களை தெறித்து கொடுத்திருக்கும் சூடான மசாலா தோசை தெறி ...

வழக்கம் போல ஹீரோ எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக மகளுடன் வாழ , வழக்கம் போல ஒரு அழகான பெண் அவரை டாவடிக்க , வழக்கம் போல ஒரு லோக்கல் ரவுடி ஹீரோவை வம்பிழுக்க , வழக்கம் போல முதலில் அடி வாங்கும் ஹீரோ பிறகு அவனை பொலெந்துடுக்க , வழக்கம் போல அதை பார்க்கும் அந்த பெண் ஹீரோவின் பழைய வாழ்க்கையை தோண்டியெடுக்க , வழக்கம் போல ஹீரோ வின் குடும்பத்தை வில்லன் பிளாஷ்பேக்கில் குதறியிருக்க , வழக்கம் போல மீண்டும் அந்த வில்லனை மீண்டு வரும் ஹீரோ பழி தீர்க்க ( ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே ) இப்படி பல வழக்கம் போல இருந்தாலும் அது பார்க்கும் போது போரடிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் விஜய் ...


மூன்று கெட்டப்புகள் என்றெல்லாம் பில்டப்புகள் கொடுத்தாலும் வ....ல விஜய் விஜயாகவே வருகிறார் . இந்த முறை பவர் கண்ணாடியும் , பரட்டை குடுமியும் ப்ளஸ் . தெறி யில் அவர் ஆட்டத்தை விட ஆக்சன் பொறி பறக்கிறது . மகள் நைனிக்கா , அம்மா ராதிகா , மனைவி சமந்தா மூவருடனும் விஜயின் கெமிஸ்ட்ரி நன்றாகவே இருக்கிறது . வ ... ல சினிமா குழந்தை நைனிக்கா கொஞ்சம் ஓவராக பேசினாலும் ரசிக்க வைக்கிறார் இந்த மீனாவின் பேபி . முகத்தில் உணர்ச்சிகளை குறைவாக காட்டினாலும் கம்பீரமான குரல் , ஷார்ப்பான் கண்கள் இவற்றால் வில்லனாக மிரட்டுகிறார்  மகேந்திரன் ...

மொட்டை ராஜேந்திரனை நன்றாகவே யூஸ் செய்திருக்கிறார்கள் . பிரபுவின் சைசுக்கேற்ற வெயிட்டான ரோல்  படத்தில் இல்லை . படமே பழைய படங்களின் கலவை தானே என்பதாலோ என்னவோ ஜி.வி யின் பாடல்களில் எல்லாமே பழைய நெடி . ஜித்து ஜில்லாடி யில் தேவா வின் குரலும் , விஜயின் ஆட்டமும் கெத்து . படத்தின் வேகத்துக்கு எடிட்டிங் கை கொடுக்கிறது ...

விஜயை வைத்து ஆக்சன் படம் என்று முடிவான பிறகு கதைக்காக பெருசாக மெனெக்கெடாமல் இன்றைய இளம் தலைமுறை அதிகம் கேள்விப்பட்டிராத சத்ரியன் படத்தை மையமாக எடுத்திருந்தாலும் சீன்களுக்காகவாவது நிறைய யோசித்திருக்கலாம் . கஜினி , சலீம் , வேதாளம் என்று எந்த படத்தையும் விட்டுவைக்கவில்லை அட்லி . மாஸ் ஹீரோக்கள் படங்களில் லாஜிக் பார்ப்பது அரசியல்வாதிகள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா என்று  ஆராய்வதற்கு சமம் . எனவே அதை விட்டுவிடலாம் . மற்றபடி படம் தொய்வில்லாமல் செல்வதும் , ஆக்சன் சீன்களும் பலம் . விஜயின் ஆகச்சிறந்த  படங்களில் !ஒன்றாக தெறி இல்லாவிட்டாலும் அவர் ரசிகர்களையும் , கமர்சியல் விரும்பிகளையும்  திருப்திப் படுத்தும் வகையிலும் வந்திருக்கும் தெறி -  ஜஸ்ட் அபோவ் ஆர்டினரி ...

ரேட்டிங்   :    2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 


6 March 2016

தெருக்கூத்து - தமிழக சட்டசபை தேர்தல் 2016 ...



மிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் நடைமுறை விதிகளையும் அமல்படுத்தி விட்டது தேர்தல் ஆணையம் . கடந்த தேர்தல்களை விட இந்த முறை தமிழக அரசியல் களம் பெரிய சூடு பிடிக்காமல் ஒரு குழப்பமாக இருப்பது போலவே படுகிறது . இப்போதிருக்கும் சூழ்நிலையில் நடுநிலை வாக்காளனுக்கு நிறைய சாய்ஸ் இருப்பது போல பட்டாலும் எந்த கட்சிக்கு ஒட்டு போடுவது என்பதில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாத சூழ்நிலையே நிலவுகிறது . கடந்த 50 ஆண்டுகளாகவே தி.மு.க , அ .தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கின்றன . ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்து மாற்று வரவேண்டும் என்று பேச்சுக்கள் எழுந்தாலும் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது அவை நீர்த்துப் போய் விடுகின்றன . மாற்று என்று தங்களை கூறிக்கொள்ளும் கட்சிகள் மேல் மக்களுக்கு நம்பிக்கை இல்லாததும் , அப்படி சொல்லிக்கொள்ளும் கட்சிகள் கூட கடைசி நேரத்தில் ஏதோ ஒரு கழகத்துடன் கூட்டு சேர்வதுமே வாடிக்கையாகி வருகிறது . ஆனாலும்  2014  நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி தலைமையில் அமைந்த அணி 18 சதவிகித வாக்குகளை பெற்று பல இடங்களில் திமுக வையே பின்னுக்கு தள்ளியிருந்தாலும் இப்போது தனித்தனியே இருந்து அந்த வெற்றிடத்தை நிரப்பாமல் விட்டது துரதிருஷ்டம். தனிப்பட்ட வாக்கு வங்கிகளை பொறுத்தவரை திமுக , அதிமுக இரண்டுமே கிட்டத்தட்ட சமபலத்துடன் இருப்பதை சமீபத்திய கருத்துக் கணிப்புகளும் ஊர்ஜிதம் செய்கின்றன . இருப்பினும் ஒரு கட்சி ஆட்சி முடியும் போது அடுத்த முறை மக்கள் அடுத்த கட்சிக்கு வாய்ப்பளித்து வருகிறார்கள் . 1996 - 2001 திமுக ஆட்சி , 2001 - 2006 அதிமுக ஆட்சி இரண்டும்  ஓரளவு  சிறப்பாக செயல்பட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன . 2004 இல் அரசு ஊழியர்களை கைது செய்தது அதிமுக ஆட்சிக்கு எதிராக போனாலும் மற்றபடி பொது மக்களிடையே பெரிய அதிருப்தி இல்லை .  இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு கட்சிகளின் வாய்ப்பு எப்படியிருக்கும் என்பதை அலசலாம்...

அ.தி.மு.க 

தொழில் வளர்ச்சியின்மை , நிர்வாக மந்தம் போன்ற குறைகள் இந்த ஆட்சியில் பரவலாக பேசப்பட்டாலும் அம்மா உணவகம் , மருந்தகம் என பல நலத்திட்டங்கள் மக்களிடையே  ஏற்படுத்திய நல்ல பெயரை சமீபத்தில் வந்த வெள்ளம் அடித்துக் கொண்டு போனது என்றே சொல்லலாம் . ஆனால் வெள்ளம் வந்த நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஆளுங்கட்சியின் மேல் பெரிய அதிருப்தி இல்லாதது போலவே படுகிறது .
 " வளர்ச்சிய விடுங்க ரவுடிங்க பிரச்சனை இல்லாம  நிம்மதியா இருக்கோம் " என்று பலர் பேசுவதை காண முடிகிறது . அதே போல மின்வெட்டு பிரச்சனை பெரிய அளவு குறைக்கப்பட்டிருப்பதையும் பலர் நினைவு கூர்கிறார்கள் . ஊழல்  குற்றச்சாட்டுக்கள் ஆங்காங்கே சொல்லப்பட்டாலும் கடந்த ஆட்சியைப் போல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு அது பெரிய எதிரலையாக வீசவில்லை . எதிரணிகள் பிரிந்து கிடப்பது பலமாக இருப்பினும் 2014 நாடாளுமன்ற  தேர்தலை போல நாளை நமதே நாற்பதும் நமதே என்று முழங்கக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை .  தொடர்ந்து ஒரே கட்சிய ஆள விட்டா  சரிப்படாது என்பது போன்ற கருத்துக்கள் நிலவுவதை அவர்களாலும் உணர முடியும் . தேமுதிக எந்த பக்கம் போகிறது என்பதை பொறுத்து கூட்டணிக்கான நிர்பந்தம் இங்கே அதிகரிக்கும் என நம்பலாம் . கிடைக்கிற கேப்பில் எல்லாம் அம்மா ஸ்டிக்கரை ஒட்டிய கட்சிக்கு திரும்பவும் மக்கள் ஓட்டு குத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ...

தி.மு.க 

மக்களின் நியாபக மறதி மேலுள்ள நம்பிக்கையில் " என்னம்மா இப்புடி பன்னுறீங்கலேம்மா " என்பது போன்ற விளம்பரங்களை கட்சி செய்தாலும் அடுத்து என்ன நம்ம தானே என்கிற தன்னம்பிக்கையை கட்சிக்காரர்களிடம் அதிகம் பார்க்க முடிகிறது . தலைவர் ஒரு வழியாக குடும்ப சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதும் , தளபதியின் நமக்கு நாமே ஊர்வலமும் அந்த நம்பிக்கையை மேலும் கூட்டியிருக்கின்றன. 2 ஜி விவகாரத்துக்காக ஈழத் தமிழர்களின் பெயரை சொல்லி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி விட்டு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அதனோடு கூட்டு வைத்திருப்பது திமுக மீது கட்சிக்காரர்களுக்கே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது . அதிலும் ஏற்கனவே கட்சியே உடைந்து பலம் குன்றிப் போயிருக்கும் காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்தது சந்தர்ப்பவாதமாகவே இருந்தாலும் அவர்களுக்கு சறுக்கல் . ஸ்டாலினை முன்னிருத்தினால் பிஜேபி + திமுக + தேமுதிக கூட்டணி ஏற்படலாம் என்று சுப்ரமணியசுவாமி போட்ட குண்டில் காங்கிரஸ் அலறியடித்துக்கொண்டு வந்து கலைஞரை பார்த்ததும் அவர் உடனே கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் மகனாகவே இருந்தாலும் தன்னைத் தவிர  வேறொருவரையும் அரியணையில் ஏற்றி அழகு பார்க்கும் பெருந்தன்மை அவருக்கு இல்லாததே . ஏற்கனவே சில கருத்துக் கணிப்புகள் முதல்வர் பதவிக்கு ஜெயலலிதாவுக்கு அடுத்து ஸ்டாலினை முன் வைத்ததும் கலைஞரின் உடனடி முடிவுக்கு காரணமாக இருக்கலாம் . மேயராக , துணை முதல்வராக இருந்த அனுபவமும் , குளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வாக சிறப்பாக  செயல்பட்டதோடு நமக்கு நாமே மூலம் மக்களிடையே நேரடித் தொடர்பை அதிகப்படுத்தியன் மூலமும் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியிருப்பதை மறுப்பதற்கில்லை . 2ஜி விவாகரத்தால் பிஜேபி திமுக வுடன் சேர்வதற்கு தயக்கம் இருந்தாலும் இந்த கூட்டணி அமைந்திருந்தால் திமுக வின் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கும் ...

தே.மு.தி.க 

சினிமாவில் ரஜினி , கமலுக்கு அடுத்து இருந்தாலும் வருகிறேன் , வரமாட்டேன் என்றெல்லாம் இழுக்காமல் 2006 இல் கட்சியயை ஆரம்பித்து எந்த கூட்டணியும் இல்லாமல் முதல் தேர்தலிலேயே தில்லாக விருத்தாலச்சத்தில் வெற்றி பெற்றவர் விஜயகாந்த் . ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக வருவார் என ஒட்டு போட்டவர்கள் எதிர்பார்த்த நிலையில் 2011 இல் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததில் இருந்து ஆரம்பித்தது அவரது இறங்குமுகம் . சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சட்டசபையில் நாக்கை துருத்தி அவர் காட்டிய வேகம் அவரை ஹீரோவாக பார்த்தவர்களுக்கே காமெடியனாக ஆக்கியது . அடுத்தடுத்து அவர் பேச்சுக்கள் , பேட்டிகள் எல்லாமே மீம்ஸ் பிரியர்களுக்கு இலவச ஆந்திரா மீல்ஸ் ஆகின . கோபமோ , சோகமோ எங்கள் தலைவருக்கு மறைக்க தெரியாது என்று அவர்கள் ஆதரவாளர்கள் மழுப்பினாலும்  கேட்பார் யாருமில்லை . ஆனால் இப்படி நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பாட்டாலும் இவரது துணையில்லாமல் பெரிய கட்சிகள் ஆட்சியமைக்க முடியாது என்கிற சூழல் உருவாகியிருப்பதையும் மறுப்பதற்கில்லை . 2014 இல் மோடி அலை நாடு முழுவதும் வீசியும் இவரால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாதது மேலும் சரிவை ஏற்படுத்தியிருக்கும் . இன்னும் இவர் ஒரு முடிவுக்கு வராமல் கிங்கா - கிங் மேக்கரா என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருப்பது மீடியாக்களுக்கு பாப்கார்ன் . திமுக , அதிமுக அல்லாத மாற்று அணியுடன் கை கோர்க்க தயக்கம் காட்டுவது அரசியலுக்கு வந்த போது இருந்த தையிரியம் கேப்டனுக்கு இப்போது இல்லாததற்கு சான்று ...

பா.ஜ.க 

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இருந்தது போலல்லாமல் இப்போது தமிழகத்தில் கட்சி வலுப்பெற்றிப்பினும் அது  யானைப்பசிக்கு சோளப்பொறி போலத்தான் . நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து  விட்டு இந்த முறை விஜயகாந்தை எதிர்பார்த்து கூட்டணி வரும் ஆனா வராது என்பது போல இவர்கள் தேவுடு காத்துக் கொண்டிருப்பது பகல் கனவு . பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஊழல் குறைவாக இருப்பதும்   , வளர்ச்சி பெற்றிருப்பதும்  , மத்தியில் இவர்கள் ஆட்சி  இருப்பதால்  அதை பயன்படுத்தி தமிழகத்துக்கு நிறைய நலத்திட்டங்களை கொண்டு வரமுடியும் என்பதும் பலம் . தேமுதிக , பாமக இரண்டையும் கூட்டணிக்கு இழுப்பதோ அல்லது தேமுதிக திமுக பக்கம் போகும்  பட்சத்தில் அதிமுக கூட்டணியில் சேர்வதோ தான்  இவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு . பிஜேபி யுடன்  சேர்வது வெள்ளத்தால் வெறுப்பில் இருக்கும் சென்னை நகர  வாக்களர்களை ஒன்று சேர்ப்பதற்கு அதிமுக வுக்கும் உதவும் . மேலும் இந்த இரண்டு கட்சிகள் ஒன்று சேர்வதில் கொள்கை(!) ரீதியாகவும் எந்த சிக்கலும் இருக்காது ...

பா.ம.க 

ஓவர் கான்பிடென்ஷ்  போல பட்டாலும் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் கேப்டனை விடவும் , கூட்டணியின் பெயரில் மக்களை வைத்து விட்டதால் ஜெயித்து விடுவோம் என்பது போல நினைப்பில் இருக்கும் மக்கள் நலக் கூட்டணி யை விடவும் கார்பரேட் பாணியில் தனது பிரசார வேலையை செய்து கொண்டிருக்கும் அன்புமணி ராமதாஸ் தேவலாம் என்றே தோன்றுகிறது . ஆனால் அது மட்டும் அவரை ஆட்சிக்கட்டில் ஏற்றுவதற்கு பத்தாது . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்த அதிமுக அல்லாத இரண்டு எம்பிக்களில் அன்புமணி யும் ஒருவர் . ஆனால் அதற்கு உண்மையான காரணம் யார்  என்று அவர்களுக்கே தெரியும் . வன்னியர்களின் வாக்கு எண்ணிக்கை இவர்களுக்கு பலமாக இருந்தாலும் அவர்கள் மற்ற கட்சிகளிலும் நிறைய இருப்பதும்  ,  வெறும் சாதிக்கட்சியாக பொதுமக்கள் மத்தியில் பார்க்கப்படுவதும் கட்சிக்கு பலவீனம் . தனியாக நிற்பதால் ஓட்டு கிடைக்கலாமே தவிர சீட்டு கிடைப்பது கஷ்டம் . ஈகோக்களுக்கு இடம் கொடுக்காமல் பிஜேபி - தேமுதிக வுடன் கை கோர்ப்பது  கட்சிக்கு பலம் சேர்ப்பதோடு பெரிய கட்சிகளுக்கு பயத்தையும் கொடுக்கும் ...

மக்கள் நலக் கூட்டணி 

இந்த தேர்தலுக்கு முதல் கூட்டணியை அமைத்தது இவர்கள் தான் . மதிமுக , கம்யூனிஸ்டுகள் , விடுதலைசிறுத்தைகள் கட்சி மூன்றும் இணைத்து அமைத்திருக்கும் கூட்டணிக்கு மக்கள் நலம் செய்வார்களே என்பது சந்தேகமே . இரண்டு திராவிட கட்சிகளுடனும் மாறி மாறி இருந்து விட்டு இப்போது நாங்கள் கொள்கை ரீதியாக சேர்ந்த கூட்டணி என்று சொல்வதெல்லாம் பிம்பிளிக்கோ பிலேப்பி . அதிமுக வுக்கு எதிரான ஓட்டு இப்படி சிதறுகிறதே என்கிற கடுப்பில் இவர்களை அதிமுக 2 என்று திமுக திட்டுவது " இன்னுமா நம்பள நம்புராய்ங்க " என்பது போன்ற தன்னம்பிக்கையை இவர்களுக்கு கொடுத்திருக்கும் . மற்றபடி முதல் முறை எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் எங்களை விட அதிக வாக்குகளை பெற்று விட்டால் கட்சியை கலைத்து விட்டு உங்களுடன் சேர்ந்து விடுகிறேன் என்று ஓப்பனாக கலாய்க்கும் நிலைமையில் தான் இந்த கூட்டணி இருக்கிறது . முன்னரே சொன்னது போல இப்படி ஆளாளுக்கு சிதறிக் கிடப்பது " இவிங்க எடுக்குற முடிவெல்லாம் நமக்கு சாதகமாத்தான் இருக்கு " என்று அதிமுக தலைமையை சொல்ல வைக்கிறது ...

NOTA 

எந்த கட்சிக்கும் தங்களை ஆட்சி செய்யும் தகுதியில்லை என்று நினைக்கும் வாக்களார்களுக்கு தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சாதனம் NOTA ( None of the above ) . இந்த முறை இது சின்னத்துடன் வந்திருப்பது மகிழ்ச்சி . இந்த தேர்தலில் இது அதிக வாக்குகளை பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை ...











Related Posts Plugin for WordPress, Blogger...