30 September 2018

செக்க சிவந்த வானம் - CCV - விசுவல் ட்ரீட் ...


ரிவியூ விற்கு போவதற்கு முன்னால்  ஒன்றை சொல்லியே ஆக  வேண்டும் . பல ஹீரோக்களை சேர்த்து வைத்து படம் எடுக்கும் போது ( குறிப்பாக சிம்பு ) புது இயக்குனருக்கே நெஞ்சு வலி வரும் . ஆனால் 62 வயதில்  இரண்டு முறை ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து இத்தனை ஸ்டார் ஸை வைத்து அதுவும் ஈக்குவல் ஸ்பேஷ் கொடுத்து ஸ்க்ரீன்பிளே வை பாதிக்காமல் படமெடுப்பது என்பதெல்லாம் மணிரத்னம் மாதிரி ஆள்களுக்கு மட்டும் தான் சாத்தியம் ...

செக்க சிவந்த வானம் ( CCV ) படத்தின் தலைப்பை போலவே ரத்த சிவப்பான கேங்ஸ்டர் கதை . சேனாதிபதி ( பிரகாஸ்ராஜ் ) மறைவுக்கு பிறகு அவர் இடத்துக்கு யார் வருவது என்று மூன்று மகன்களுக்கும் ( அரவிந்த்சாமி, அருண்விஜய் , STR ) இடையே குடும்ப நண்பன் ரசூல் ( விஜய்சேதுபதி) உதவியுடன் நடக்கும் அதிகார போட்டியே  CSV . இது 2013 கொரியன் மூவி நியூ வேர்ல்ட் இல் இருந்து சுட்டது என்கிறார்கள் , நான் அந்த படம் பார்த்ததில்லை . ஆனால் மஹாபாரதம் , பொன்னியின் செல்வன் படித்திருக்கிறேன் ...

சினிமாவுக்கு வந்து 26 வருடங்கள் கடந்த பிறகும் அரவிந்தசாமி மெயின்டென் செய்யும் ஃபிட்னெஸ் பிரமிக்க வைக்கிறது . இவருக்கான பிரத்யேக ஃபைட் ஸீன் படத்துக்கு ஹைலைட் . மூத்தவனாக அப்பாவின் இடத்திற்கு வர நினைக்கும் இவரது ஏக்கம் புரிகிறது ஆனால்  அதற்காக செய்யும் கொலைகள் அதிர்கிறது . துபாய் ஷேக்குகளுடன் பிசினெஸ் ( என்ன எழவு பிசினெஸ்  வெளங்கல ) செய்யும் இரண்டாவது மகன் அருண்விஜய் . தாவி வந்து அப்பாவின் சேரில் உட்காரும் ஒரு ஸீன் இவரது கேரக்டருக்கு ஒரு சோறு பதம் . கடைக்குட்டி STR மூவரில் அதிகம் கவர்கிறார் , அப்லாஸ் அள்ளுகிறார் .


மூன்று பேரையும் போலீசாக வரும் விஜய் சேதுபதி தூக்கி சாப்பிட்டு விடுகிறார் . தாதாவோ , போலீசோ டயலாக் டெலிவரி ஒரே மாதிரி இருந்தாலும் உடல்மொழி யில் வித்தியாசம் காட்டுகிறார் . இவரது ஓப்பனிங்க் ஸீன் அண்ட் க்ளைமேக்ஸ் இரண்டுமே படத்துக்கு பெரிய ப்ளஸ் . மணி படம் என்றாலே விசுவல் ட்ரீட் . படத்தின் பட்ஜெட் பற்றாக்குறை அதிதி , டயானா உடைகளில் நன்றாக தெரிகிறது . இதிலும் சந்தோஷ் சிவன் கேமரா கழுகு போல சுத்தி நம்மை சொக்க வைக்கிறது . ஏ.ஆர்.ஆர். பாடல்களை தனியாக ஒலிக்க விடாமல் படத்தோடு சேர்த்து ஆர்.ஆர். ஆக பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம் ...

நேரத்தை  வீணடிக்காமல் பிரகாஸ்ராஜை கொல்லப்போகும் முதல் சீனிலேயே கதையை துவக்கி விடுகிறார் மணி . அடுத்து மூன்று மகன்களையும் , நண்பன் ரூசலையும் அவர்கள் தோரணையுடன் உடனே அறிமுகப்படுத்தி விடுகிறார் . இடைவேளை வரை யார் பிரகாஸ்ராஜை கொல்ல ஆள் அனுப்பினார்கள் என்கிற சஸ்பென்ஸை மெயின்டென் செய்திருக்கிறார்கள்  . மூன்று மணி நேரம் இழுக்காமல் இரண்டரை மணிக்குள் படத்தை முடித்தது நலம் . ஆனால் டீட்டைலிங் இல்லாமல் படம் ஜம்ப் ஆவது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை ...


சகோக்கள் கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் மோதிக்கொள்வது நெருடுகிறது . அப்பா எல்லோரையும் சுயநலமாக அவரைப்போலவே வளர்த்து விட்டார் என்று சின்ன டயலாக்குகளால் அதை சமன் கட்ட நினைப்பது சறுக்கல் . மணி படம் என்றாலே செயற்கையாக சிலர் பேசுவார்கள் . இதில் வாலே , போலெ என்று தியாகராஜன் பேசுவது , சபரிமலைக்கே பெண்கள் போகலாம் என்று தீர்ப்பு வந்துவிட்ட நிலையில் புருஷன்  கீப் வைத்திருந்தும் ஜோதிகா உருகுவது இதெல்லாம் ஓட்டவேயில்லை . எல்லா அடியாட்களையும் அருண்விஜய் ஒரே டயலாக்கில் தன்  பக்கம் இழுப்பது , ஹைடெக் துபாய் அபார்ட்மெண்டில் யாரோ வந்து போதை மருந்தை வைப்பதெல்லாம் பூ சுத்தல் ...

காட்ஃ பாதர் நினைவுக்கு வந்தாலும் கடல் , காற்று வெளியிடை சறுக்கலுக்கு பிறகு ஓரளவு நிறைவான படம் கொடுத்த இயக்குனருக்காகவும் , தனி ட்ராக் வைக்கலாமல் எல்லா கேரக்டர்களையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்த திரைக்கதை யுக்திக்காகவும் , எத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் இது மணிரத்னம் படம் என நிரூபித்ததற்காகவும் . நடிகர்களின் பங்களிப்பு , டெக்கனிகள் ஆஸ்பெக்ட்ஸ் க்காகவும் செக்க சிவந்த வானத்தை ஒரு முறை அண்ணாந்து பார்க்கலாம் ...

ரேட்டிங்க் : 3.25 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 43 



Related Posts Plugin for WordPress, Blogger...