"மன்" மன்னாராக கமல் , "மதன்" மதன கோபாலாக மாதவன் , "அம்பு" அம்புஜம் ( எ) நிஷாவாக த்ரிஷா இவர்கள் மூவரை பற்றிய கதையே "மன் மதன் அம்பு"
கோடீஸ்வரன் மாதவன், நடிகை த்ரிஷா இருவரும் காதலிக்கிறார்கள் ...நிச்சயதார்த்தம் வரை செல்லும் காதல் மாதவனின் சந்தேக புத்தியாலும் ,இருவரின் ஈகோவாலும் விரிசல் அடைகிறது ...த்ரிஷா ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார் ..அவருடன் அவர் தோழி கீதா ( சங்கீதா) வும், அவளின் இரண்டு குழந்தைகளும் சேர்ந்து கொள்கிறார்கள் ...அங்கு த்ரிஷாவை வேவு பார்க்க மாதவனால் நியமிக்கப்படுகிறார் மேஜர் மன்னார் ( கமல் )...வேவு பார்க்க வந்த இடத்தில் இருவருக்கும் பரஸ்பர நட்பு ஏற்பட்டு அதுவே காதலாக மலர்கிறது ...முடிவில் யார் யாருடன் சேர்கிறார்கள் என்பதே மீதி கதை ...
முதல் காட்சியிலேயே மாதவனுக்கும் ,அவர் அம்மாவுக்கும் த்ரிஷா நடிகை என்பதால் ஏற்படும் சந்தேகத்தையும் , அதை தொடர்ந்து வரும் கார் பயணத்தில் மாதவன், த்ரிஷா இருவருக்கும் ஏற்படும் ஈகோ பிரச்சனையையும் தெளிவாகவும் , புத்திசாலித்தனமாகவும் சொல்லி இருக்கிறார்கள் ....அதே தெளிவும் , புத்திசாலித்தனமும் படம் முழுவதும் இல்லாதது பெரிய குறை ..........
மன்னார் கமல் தன் வழக்கமான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் ...அவர் அறிமுகமே அசத்தல் ..மேஜர் என்றவுடன் விறைபபுடன் அலையாமல் யதார்த்தமாக இருக்கிறார் ...தகிடத்த்தம் பாடலுக்கு அவர் ஆட்டம் இளமையாக இருந்தாலும் தொப்பை இடிக்கிறது .."ப்ளாஷ்பாக்" என்றாலும் இவர் மனைவி சம்பத்தப்பட்ட காட்சிகளை இழுக்காமல் ஒரு பாடலுடன் முடித்திருப்பதை பாராட்டலாம் ....
தன் நண்பன் ( ரமேஷ் அரவிந்த் ) ஆபரேஷன் செலவிற்கு பணம் புரட்டவே வேவு பார்க்கும் வேலைக்கு வந்திருக்கிறார் என தெரியும் போது மனைதை தொடுகிறார் ..பணத்திற்காக இவர் மாதவனிடம் கெஞ்சும் போதும், பணம் தர மறுக்கவே அதை பெற குறுக்கு வழியை கையாளும் போதும் கைத்தட்டல் பெறுகிறார் ...
மாதவனுக்கு காமெடி, சீரியஸ் இரண்டும் எளிதாக வருகிறது ..த்ரிஷாவை பிரியும் இடத்தில நல்ல முகபாவம் ...குடிபோதையில் உலறும் போதும், கழிவறையில் கைபேசியை தவற விட்டு பின் அதை கையில் எடுத்து அலம்பி, ஸ்ப்ரே அடித்து பேசும் போதும் கல ...கல....ஆனால் படம் முழுவதும் மாதவனை ஏதோ மயில்சாமி போல போதையிலேயே உலவ விட்டிருப்பது அபத்தம் ..த்ரிஷாவை சந்தேகப்படுகிறார் என்பதற்காக அவரை முட்டாள் போலவும் , அம்மா பேச்சை அப்படியே கேட்கும் அசடாகவும் , கடைசியில் பணத்திற்காக விவாகரத்து வாங்கி இரண்டு பசங்களுடன் இருக்கும் சங்கீதாவுடன் சேருவதாக காட்டுவதும் அவரின் கதாபாத்திரத்திற்கே பெரிய சறுக்கல் .......
த்ரிஷா நடிகையாகவே வருவதால் இயல்பாக வந்து போகிறார் ..ஒரு காட்சியில் கமல் த்ரிஷாவிடம் இவ்வளவு அழகாக தமிழ் பேசும் நீங்கள் உங்கள் படங்களில் இது போல பேசுவதில்லையே என்று ஆதங்கப்படுகிறார் ..அனால் இந்த படத்திலேயே ஏதோ ஆங்கில படத்திற்கு வந்து விட்டோமோ என்று சந்தேகப்படும் அளவிற்கு எக்கச்சக்க ஆங்கில வசனங்கள் .......
சீமான் , ஆகாஷ் சிறிது நேரமே வந்தாலும் கிச்சு ...கிச்சு ...களவானி படத்தில் மனதை திருடிய ஓவியா இதில் ஏதோ வேலைக்காரி போல வந்து போவது துரதிருஷ்டம் ... இப்படத்தின் கதை ,திரைக்கதை , வசனம் , சில பாடல்கள் என நிறைய பொறுப்புகள் கமலின் தலையில் ..கதை மின்சார கனவு ,குரு என ஆளு போன்ற படங்களின் கலவை ..அதற்கு காமெடி சாயம் பூச பார்த்திருக்கிறார்கள் ஆயினும் வெளுத்து விட்டது ..ஆள் மாறாட்ட கட்சிகளில் இவர்கள் செய்யும் காமெடி பெரிய குழப்பம் ..கிரேசி மோகன் வசனம் எழுதாது ஏமாற்றம் ...
படத்தின் சில ஆறுதல்கள் சங்கீதாவின் பையனாக வரும் சிறுவன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை.. குறிப்பாக பாடல்கள் ....
மாதவன் அம்மா பேசுவது வலிய திணிக்கப்பட்ட பிராமண வசனங்கள் ...ஒரு நடிகை தன் மருமகளாக வருவதை விரும்பாத தாய் பிராமணராக தான் இருக்க வேண்டுமா ? ??..
"வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை " , " நேர்மையானவனுக்கு திமிர் தான் ஆயுதம் " போன்ற வசங்கள் அருமை ...கமல் அதே நேர்மையை இந்த படத்திலும் காட்டி இருக்கலாம் ..ஏனெனில் ஒரு காட்சியில் கமல் தனக்கும் வழி பிறக்கும் எனும் போது சர்ச் மணி ஒலிக்கிறது ...காவி உடை தரித்த கள்ளகாதலன் என்று கமல் மாதவனிடம் காவியையும் , கள்ளகாதலையும் இணைத்து பேசுவது போல காட்சி வருகிறது ...கடவுளே இல்லை என்று பகுத்தறிவு வாதம் பேசும் கமலிடம் ஏன் இந்த முரண்பாடு ?...
கள்ள காதலுடன் சம்பத்தப்பட்டவரும் ஒரு நடிகை தான் என்பதை ஏனோ மறந்து விட்டார் ....செலக்டிவ் அம்னீசியா போலும் ....
கமல் அவர்களே உங்கள் கருத்துக்களை திணிப்பதற்கும் , மக்களை குழப்புவதற்கும் , பதவியில் இருப்பவர்களை குஷி படுத்துவதற்கும் தான் டிவி பேட்டி இருக்கிறதே .. அதை விட்டு விட்டு ஏன் காசு கொடுத்து படத்தை பார்க்க வரும் ரசிகர்களை கொல்கிறீர்கள்....
திரைப்பட விமர்சனங்களில் பொதுவாக தனிப்பட்ட எவரையும் நான் விமர்சிப்பதில்லை ...இருந்தும் இந்த படத்தை விமர்சிப்பதற்கு பெரிதாக எதுவும் இல்லை என்பதாலும் , சமீப காலமாகவே உங்கள் படங்களில் கருத்து திணிப்பு அதிகமாக இருப்பதே இந்த தனிப்பட்ட விமர்சனத்திற்கு காரணம்....
மொத்தத்தில் வலுவில்லாத கதை , திரைக்கதையாலும் வலுக்கட்டாய வசன திணிப்புகளாலும் மண்ணை கவ்வியது - " மன் மதன் அம்பு "
26 December 2010
மன் மதன் அம்பு - விமர்சனம்
லேபிள்கள்:
சினிமா,
சினிமா விமர்சனம்,
திரை உலகம்,
திரைப்படம்,
திரைவிமர்சனம்
18 December 2010
ஈசன் திரைவிமர்சனம்
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு இயக்குனர் சசிகுமார் அவர்களின் இயக்கத்தில்
வந்திருக்கும் இரண்டாவது படம் ..முதல் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகர பின்னணியில்
எடுத்திருக்கிறார் ..முதல் பட கூட்டணி இதிலும் தொடர்கிறது ...
அரசியலில் பெரும் புள்ளியாக இருக்கும் அமைச்சர் தெய்வநாயகமாக அழகப்பன் , அவரின் ஒரே பையன் செழியனாக வைபவ், நேர்மையான துணை ஆணையர் (ACP ) சங்கையாவாக சமுத்திரகனி நடித்திருக்கிறார்கள் ..
பணக்கார இளைஞர்,இளைஞிகள் இடையே உள்ள போதைபழக்கம் , இரவு நேர விடுதி (பப்) கலாச்சாரம் , சட்ட திட்டங்களை மதிக்காத ஆணவம் , அரசியல் பலம் , இதற்கு மத்தியில் நேர்மையான காவல் துறை அதிகாரியின் தைரியம் என்று இதை வைத்து அடுத்தடுத்து பின்னப்பட்ட
சுவாரஸ்யமான காட்சிகள் முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றன ..திடீரென காணாமல் போகிறார் வைபவ் ..இரண்டாவது பாதியில் அவரை தேடி விசாரணை மேற்கொள்கிறார் சமுத்திரக்கனி ...முடிவில் கொலையாளியை கண்டு பிடிப்பதோடு அவனை அழகப்பனிடம் இருந்தும் காப்பாற்றுகிறார் ....வைபவ் ஏன் கடத்தப்பட்டார் ? அவர் நண்பன் வினோத் ஏன் கொல்லப்பட்டான் ? இதனை விளக்க சற்று நீண்ட ப்ளாஷ்பாக்.... இதற்கு காரணம் பழி வாங்கல் எனும்போது ஏமாற்றம் ... நிறைய ரத்த சிதறல்களோடு முடிகிறது கிளைமாக்ஸ்
.நண்பர்களுடன் இரவு நேர விடுதிகளில் கூத்தடிக்கும் வைபவ் ஒரு பெண்ணின் கொலைக்கு காரணம் ஆகி விடும் தன் நண்பர்களை ACP யின் காவலில் இருந்து தன் அப்பாவின் உதவியோடு வெளியே கொண்டு வருகிறார் ....
நண்பர்களுடன் ஊரை சுற்றுவதோடு தனக்கு பிடித்த பெண்ணையும் காதலிக்கிறார் ...இதை தவிர இவருக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை ...இரவு நேர விடுதியில் ஒரு பெண்ணை முதல் முறையாக பார்த்து விட்டு அவளை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று நண்பரிடம் சொல்லும் போது சிரிப்பு வருகிறது ......
நேர்மையான காவல் துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி கட்சித பொருத்தம்... விறைப்புடனே இருக்கும் இவர் கொஞ்சம் உடற்கட்டையும் ஏற்றி இருந்தால் கன கச்சிதம் ஆகி இருக்கும்.. அமைச்சர் வீட்டிற்கே சென்று அவர் மகனை மிரட்டும் இடம் அற்புதம் .. கமிசனர் இவரிடம் அரசியல்வாதிகளுக்கு பணிந்து போக சொல்லி அறிவுரை வழங்கும் காட்சி யதார்த்தம் ... கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் இவர் நடிப்பு அருமை ...
தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல அறிமுகம் அரசியல் வில்லன் அழகப்பன்.... .கண்களில் .கருப்பு கண்ணாடி ,வெள்ளை வேட்டி சட்டை , வட்டார பேச்சு என அமைச்சர் தெய்வ நாயகமாகவே கண் முன் நிற்கிறார் ...இட பிரச்சனைக்காக ஒரு பெண்ணையும் , அவள் குழந்தையையும் கொலை செய்து விட்டு காவல் துறையிடம் கள்ள காதல் என்று சொல்லி வழக்கை முடித்து விடுங்கள் என்று சொல்லும் இடம் குரூரம் ...
கோடிஸ்வர பெண்ணாக வரும் அபர்ணா வைபவை காதலிப்பதோடு நிறுத்தி கொள்கிறார் ...இவர் இன்னும் அழகாக இருந்திருந்தால் பார்த்தவுடன் காதலிக்கும் வைபவின் செயலிற்கு நியாயம் கிடைத்திருக்கும் ... நமோ நாராயனாவிற்கு நல்ல வாய்ப்பு நன்றாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார் ..இவர் பிரமாதம் சொல்லும் இடம் உண்மையிலேயே பிரமாதம் .... ஏசி வண்டிக்குள்ளேயே ஏசி இல்லையா என்று நக்கல் செய்யும் போது கைதட்டல் ....
சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் அபிநயா, இவர் தம்பியாக வரும் ஈசன் நல்ல தேர்வு....தோற்றத்தில் அப்பாவியாக இருந்தாலும் கண்களில் கொலை வெறி ...என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு பள்ளி சிறுவன் ஈ மெயில் ஹாக் செய்வதாக காட்டுவது கொஞ்சம் ஓவர்...அபிநயாவின் தோழியாக வரும் பெண் , விபச்சாரம் செய்யும் அக்கா, அதிகாரி நீதிராஜன் , பெண் ப்ரோக்கர் என அனைவரும் கவனிக்க வைக்கிறார்கள் ....
பின்னணி இசை பிரமாதம் , படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் அதில் மூன்று மட்டுமே முனுமுனுக்க வைக்கின்றன...குறிப்பாக கடற்கரை கானா பாடலில் அக்காவின் ஆட்டம் அருமை ...கதிரின் ஒளிப்பதிவிற்கு ஒரு கைகுலுக்கல் ....
சுப்ரமணியபுரம் வெற்றிக்கு பிறகு அதன் பாணியில் பலர் படம் எடுத்து கொண்டிருக்க அதன் பாதிப்பே இல்லாமல் படம் எடுத்திருக்கும் இயக்குனர் சசிகுமாருக்கு பாராட்டுக்கள் ... வசனங்களாக மட்டும் இல்லாமல் இல்லாமல் காட்சிகளில் நேர்த்தி , பாத்திர தேர்வு , முதல் பாதியில் இருந்து சற்றும் எதிபாராமல் திரைகதையில் திருப்பம் என ஒவ்வொன்றிலும் இயக்குனரின் டச் ...
இவை எல்லாம் இருந்தும் பழிவாங்கும் கதை அதிலும் ஒரு பெண்ணிற்காக பழி வாங்குகிறான் என்னும் போது பெரிய சறுக்கல் ...பழிவாங்குவதற்கு என்ன தான் நியாயம் கற்பித்தாலும் இதை எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் செய்கிறான் என்று தெரியும் போது நெருடல் ..தொடர்ந்து வரும் பப் காட்சிகள் போர் ..விசாரணைக்காக தோழியின் வீட்டிற்கு செலும் சமுத்திரக்கனியை யார் என்று அவள் கணவன் விசாரிப்பதும் பின்னர் போலீஸ் என்று தெரிந்தவுடன் பம்முவதும் , வேலைக்கு செல்லும் அந்த பெண் வீட்டில் அடக்கமாக இருந்து விட்டு வேலைக்கு சென்றவுடன் முடியை விரித்து விட்டு பரவலாக பழகுவதாக காட்டுவதும் , தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் நடுத்தர வர்க்கத்தையும் , பொருளாதார நெருக்கடிக்காகவும் , முன்னேற்றத்திற்காகவும் வேலைக்கு செல்லும் பெண்களையும் இழிவு படுத்துவது போல உள்ளது .....
காவல்துறை சம்பத்தப்பட்ட காட்சிகளை நேர்மையாக எடுத்திருக்கும் இயக்குனர் செல்வாக்குள்ள ஒரு குடும்பம் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருவதற்கு பேஷன் டெக்னாலஜி படிப்பை காரணமாக காட்டுவது நம்பும் படியாக இல்லை ...சம்பத்தப்பட்ட காட்சிகளை தெளிவாக சேர்த்திருக்கலாம் ...
சுப்ரமணியபுரம் படம் முடிந்தவுடன் ஏற்பட்ட பிரமிப்பு நிச்சயம் இல்லை ...இந்த படத்தை அப்படத்தோடு ஒப்பிடுவது நியாயம் இல்லை....இரண்டும் வெவ்வேறு களம் ...சுப்ரமணியபுரம் படத்தை பார்த்து விட்டு எல்லோருக்கும் போன் செய்து போய் பார்க்க சொன்னதும், படம் நிச்சயம் பெரிதாக ஓடும் என்று சான்றிதழ் கொடுத்ததும் நினைவிற்கு வருகிறது ....
அந்த படத்தை நினைவில் வைத்து கொள்ளாமல் இப்படத்தை புதிதாக பார்த்தால் நன்றாக இருக்கும் ......
,
வந்திருக்கும் இரண்டாவது படம் ..முதல் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகர பின்னணியில்
எடுத்திருக்கிறார் ..முதல் பட கூட்டணி இதிலும் தொடர்கிறது ...
அரசியலில் பெரும் புள்ளியாக இருக்கும் அமைச்சர் தெய்வநாயகமாக அழகப்பன் , அவரின் ஒரே பையன் செழியனாக வைபவ், நேர்மையான துணை ஆணையர் (ACP ) சங்கையாவாக சமுத்திரகனி நடித்திருக்கிறார்கள் ..
பணக்கார இளைஞர்,இளைஞிகள் இடையே உள்ள போதைபழக்கம் , இரவு நேர விடுதி (பப்) கலாச்சாரம் , சட்ட திட்டங்களை மதிக்காத ஆணவம் , அரசியல் பலம் , இதற்கு மத்தியில் நேர்மையான காவல் துறை அதிகாரியின் தைரியம் என்று இதை வைத்து அடுத்தடுத்து பின்னப்பட்ட
சுவாரஸ்யமான காட்சிகள் முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றன ..திடீரென காணாமல் போகிறார் வைபவ் ..இரண்டாவது பாதியில் அவரை தேடி விசாரணை மேற்கொள்கிறார் சமுத்திரக்கனி ...முடிவில் கொலையாளியை கண்டு பிடிப்பதோடு அவனை அழகப்பனிடம் இருந்தும் காப்பாற்றுகிறார் ....வைபவ் ஏன் கடத்தப்பட்டார் ? அவர் நண்பன் வினோத் ஏன் கொல்லப்பட்டான் ? இதனை விளக்க சற்று நீண்ட ப்ளாஷ்பாக்.... இதற்கு காரணம் பழி வாங்கல் எனும்போது ஏமாற்றம் ... நிறைய ரத்த சிதறல்களோடு முடிகிறது கிளைமாக்ஸ்
.நண்பர்களுடன் இரவு நேர விடுதிகளில் கூத்தடிக்கும் வைபவ் ஒரு பெண்ணின் கொலைக்கு காரணம் ஆகி விடும் தன் நண்பர்களை ACP யின் காவலில் இருந்து தன் அப்பாவின் உதவியோடு வெளியே கொண்டு வருகிறார் ....
நண்பர்களுடன் ஊரை சுற்றுவதோடு தனக்கு பிடித்த பெண்ணையும் காதலிக்கிறார் ...இதை தவிர இவருக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை ...இரவு நேர விடுதியில் ஒரு பெண்ணை முதல் முறையாக பார்த்து விட்டு அவளை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று நண்பரிடம் சொல்லும் போது சிரிப்பு வருகிறது ......
நேர்மையான காவல் துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி கட்சித பொருத்தம்... விறைப்புடனே இருக்கும் இவர் கொஞ்சம் உடற்கட்டையும் ஏற்றி இருந்தால் கன கச்சிதம் ஆகி இருக்கும்.. அமைச்சர் வீட்டிற்கே சென்று அவர் மகனை மிரட்டும் இடம் அற்புதம் .. கமிசனர் இவரிடம் அரசியல்வாதிகளுக்கு பணிந்து போக சொல்லி அறிவுரை வழங்கும் காட்சி யதார்த்தம் ... கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் இவர் நடிப்பு அருமை ...
தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல அறிமுகம் அரசியல் வில்லன் அழகப்பன்.... .கண்களில் .கருப்பு கண்ணாடி ,வெள்ளை வேட்டி சட்டை , வட்டார பேச்சு என அமைச்சர் தெய்வ நாயகமாகவே கண் முன் நிற்கிறார் ...இட பிரச்சனைக்காக ஒரு பெண்ணையும் , அவள் குழந்தையையும் கொலை செய்து விட்டு காவல் துறையிடம் கள்ள காதல் என்று சொல்லி வழக்கை முடித்து விடுங்கள் என்று சொல்லும் இடம் குரூரம் ...
கோடிஸ்வர பெண்ணாக வரும் அபர்ணா வைபவை காதலிப்பதோடு நிறுத்தி கொள்கிறார் ...இவர் இன்னும் அழகாக இருந்திருந்தால் பார்த்தவுடன் காதலிக்கும் வைபவின் செயலிற்கு நியாயம் கிடைத்திருக்கும் ... நமோ நாராயனாவிற்கு நல்ல வாய்ப்பு நன்றாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார் ..இவர் பிரமாதம் சொல்லும் இடம் உண்மையிலேயே பிரமாதம் .... ஏசி வண்டிக்குள்ளேயே ஏசி இல்லையா என்று நக்கல் செய்யும் போது கைதட்டல் ....
சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் அபிநயா, இவர் தம்பியாக வரும் ஈசன் நல்ல தேர்வு....தோற்றத்தில் அப்பாவியாக இருந்தாலும் கண்களில் கொலை வெறி ...என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு பள்ளி சிறுவன் ஈ மெயில் ஹாக் செய்வதாக காட்டுவது கொஞ்சம் ஓவர்...அபிநயாவின் தோழியாக வரும் பெண் , விபச்சாரம் செய்யும் அக்கா, அதிகாரி நீதிராஜன் , பெண் ப்ரோக்கர் என அனைவரும் கவனிக்க வைக்கிறார்கள் ....
பின்னணி இசை பிரமாதம் , படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் அதில் மூன்று மட்டுமே முனுமுனுக்க வைக்கின்றன...குறிப்பாக கடற்கரை கானா பாடலில் அக்காவின் ஆட்டம் அருமை ...கதிரின் ஒளிப்பதிவிற்கு ஒரு கைகுலுக்கல் ....
சுப்ரமணியபுரம் வெற்றிக்கு பிறகு அதன் பாணியில் பலர் படம் எடுத்து கொண்டிருக்க அதன் பாதிப்பே இல்லாமல் படம் எடுத்திருக்கும் இயக்குனர் சசிகுமாருக்கு பாராட்டுக்கள் ... வசனங்களாக மட்டும் இல்லாமல் இல்லாமல் காட்சிகளில் நேர்த்தி , பாத்திர தேர்வு , முதல் பாதியில் இருந்து சற்றும் எதிபாராமல் திரைகதையில் திருப்பம் என ஒவ்வொன்றிலும் இயக்குனரின் டச் ...
இவை எல்லாம் இருந்தும் பழிவாங்கும் கதை அதிலும் ஒரு பெண்ணிற்காக பழி வாங்குகிறான் என்னும் போது பெரிய சறுக்கல் ...பழிவாங்குவதற்கு என்ன தான் நியாயம் கற்பித்தாலும் இதை எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் செய்கிறான் என்று தெரியும் போது நெருடல் ..தொடர்ந்து வரும் பப் காட்சிகள் போர் ..விசாரணைக்காக தோழியின் வீட்டிற்கு செலும் சமுத்திரக்கனியை யார் என்று அவள் கணவன் விசாரிப்பதும் பின்னர் போலீஸ் என்று தெரிந்தவுடன் பம்முவதும் , வேலைக்கு செல்லும் அந்த பெண் வீட்டில் அடக்கமாக இருந்து விட்டு வேலைக்கு சென்றவுடன் முடியை விரித்து விட்டு பரவலாக பழகுவதாக காட்டுவதும் , தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் நடுத்தர வர்க்கத்தையும் , பொருளாதார நெருக்கடிக்காகவும் , முன்னேற்றத்திற்காகவும் வேலைக்கு செல்லும் பெண்களையும் இழிவு படுத்துவது போல உள்ளது .....
காவல்துறை சம்பத்தப்பட்ட காட்சிகளை நேர்மையாக எடுத்திருக்கும் இயக்குனர் செல்வாக்குள்ள ஒரு குடும்பம் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருவதற்கு பேஷன் டெக்னாலஜி படிப்பை காரணமாக காட்டுவது நம்பும் படியாக இல்லை ...சம்பத்தப்பட்ட காட்சிகளை தெளிவாக சேர்த்திருக்கலாம் ...
சுப்ரமணியபுரம் படம் முடிந்தவுடன் ஏற்பட்ட பிரமிப்பு நிச்சயம் இல்லை ...இந்த படத்தை அப்படத்தோடு ஒப்பிடுவது நியாயம் இல்லை....இரண்டும் வெவ்வேறு களம் ...சுப்ரமணியபுரம் படத்தை பார்த்து விட்டு எல்லோருக்கும் போன் செய்து போய் பார்க்க சொன்னதும், படம் நிச்சயம் பெரிதாக ஓடும் என்று சான்றிதழ் கொடுத்ததும் நினைவிற்கு வருகிறது ....
அந்த படத்தை நினைவில் வைத்து கொள்ளாமல் இப்படத்தை புதிதாக பார்த்தால் நன்றாக இருக்கும் ......
,
லேபிள்கள்:
ஈசன்,
சினிமா,
சினிமா விமர்சனம்,
திரைவிமர்சனம்
14 November 2010
மைனா திரைவிமர்சனம்
சிறு வயதில் இருந்தே மைனாவை காதலிக்கிறார் சுருளி , மைனாவிற்கும் அவள் அம்மாவிற்கும் எல்லா உதவிகளையும் செய்கிறார்...மைனா பெரியவள் ஆனவுடன் அவளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்கிறார் அவள் அம்மா ...இதனால் ஆத்திரம் அடையும் சுருளி மைனா அம்மாவை அடிக்க , கொலை முயற்சி குற்றத்தின் கீழ் போலீஸ் கைது செய்து 15 நாள் காவலில் வைக்கிறது ..மைனாவின் கல்யாண ஏற்பாட்டை தடுக்க காவலில் இருந்து தப்புகிறார் சுருளி...தலை தீபாவளிக்கு மனைவி வீட்டுக்கு கூட செல்ல முடியாமல் சுருளியை தேடி செல்கிறார் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் , அவருக்கு உதவியாக ராமையாவும் உடன் செல்கிறார் . .சுருளியை போலீஸ் பிடிக்க அவர்களுடன் மைனாவும் வருகிறாள் ...இவர்கள் நால்வருடன் மலைகளுக்கு இடையில் நாமும் பயணம் ஆகிறோம் ...
சுருளியாக விதார்த் , மைனாவாக அமலா இருவரும் கதைக்கு எளிதாக பொருந்துகிறார்கள் ..மைனாவை காதலிப்பதையே முழு நேர வேலையாக செய்யும் விதார்த் அவள் இல்லையென்று அம்மா சொன்னவுடன் ஆத்திரப்படும் இடத்திலும் , காதல் செய்வது தப்பா என்று போலீசிடம் கேட்கும் போதும் , மைனாவை தூக்கி கொண்டு காட்டுக்குள் ஓடும் போதும் கைதட்டல் வாங்குகிறார்....சில இடங்களில் பருத்திவீரனை ஞாபகபடுத்துகிறார் ...உணர்ச்சி வயப்படும் இடங்களில் யதார்த்தத்தை மீறுகிறார் .... அமலாவிற்கு வசனங்கள் குறைவு ..அதை கண்களிலேயே நிறைவு செய்கிறார்....கிளைமாக்ஸ் காட்சியில் மனதில் நிற்கிறார் ..இவர் சுருளியை காதலிப்பதற்கான காரணங்கள் அழுத்தமாக சொல்லப்படாதது ஒரு குறை ....
இவர்கள் இருவரை தவிர படம் முழுவதும் நம்மை அழைத்து செல்லும் மற்ற இருவர் பாஸ்கர் மற்றும் ராமையா ...தலை தீபாவளியை கொண்டாட முடியாமல் இப்படி காட்டுக்குள் அலைய விட்டதற்காக சுருளியை கொன்று விடுவதாக மிரட்டும் பாஸ்கர் கடைசியில் அவர்களுக்காகவே தன் வாழ்கையை தொலைக்கும் போது மனதில் நிற்கிறார் ...சீரியசான கதையை ஜாலியாக எடுத்து செல்வதற்கு "தம்பி" ராமையா பெரிதும் உதவி செய்கிறார்...ஆனாலும் ஒரே விதமான முக பாவங்களை தவிர்ப்பது நல்லது ...அவர் மனைவியாக வரும் செந்தாமரையை நேரே காட்டா விட்டாலும் மனதில் பதிய வைத்தது இயக்குனரின் திறமை ....
பாஸ்கரின் மனைவியாக வரும் சூசன் ஆரம்ப காட்சியிலும் , இறுதி காட்சியிலும் வந்து நம்மை அசர வைக்கிறார்....அவருடைய அண்ணன் ,அண்ணிகள்
அனைவரும் கதாபதிரத்திற்கு ஒத்து போகிறார்கள் ...
சுகுமாரின் ஒளிப்பதிவு நம்மை கதை நடக்கும் இடத்திற்கே கொண்டு செல்கிறது ...அதிலும் விபத்து காட்சியை கஷ்டப்பட்டு எடுத்து இருக்கிறார்கள் .... இமான் இதற்கு முன்னர் கிரி ,விசில் படங்களில் ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தாலும்
இந்த படம் நல்ல திருப்புமுனை ...பின்னணி இசையில் பின்னி இருக்கிறார் ."மைனா பாடல் மனதிலயே நிற்கிறது .....
ஒளிப்பதிவு,இசை இரண்டும் படத்திற்கு பெரிய பலம் ......
எளிமையான கதை , தெளிவான திரைகதை , யதார்த்தமான கதா பாத்திரங்கள் , மிரள வைக்கும் கிளைமாக்ஸ்,ஒரு கைதி தப்பி விட்டால் போலீஸ் காரனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஆழமாக காட்டியது என எக்கச்சக்க பலங்கள் படத்திற்கு இருந்தாலும் , மெதுவாக நகரும் ஆரம்ப காட்சிகள் , பருத்திவீரனின் பாதிப்பு , மைனாவிற்கு சுருளி மேல் ஏற்படும் காதலை ஆழமாக காட்டாதது , சில இடங்களில் பைத்திய காரனோ என சந்தேகப்படும் அளவிற்கு சுருளியின் காதல் என்று சில குறைகளையும் தவிர்த்திருந்தால் மைனா "பருத்திவீரன்" , "சுப்ரமணியபுரம்" வரிசையில் மைல் கல்லாக அமைந்திருக்கும் ,,,,
எனினும் "மைனா" மனதை உலுக்கும் படம்...
இப்படத்தை ரெட் ஜைன்ட் நிறுவனம் மார்கெடிங் செய்வதால் நல்ல ஒபெனிங் இருக்கிறது ... ஒரு வகையில்இது சந்தோசமாக இருந்தாலும் சின்ன தயாரிப்பாளர்கள் நிலைமையை நினைக்கும்
போது கவலையாக இருக்கிறது ....எந்த விதமான பின் பலமும் இல்லாமல் ரிலீஸ் ஆன "களவானி" நல்ல பெயர் எடுத்தாலும் நான்கு மாதங்களுக்குள் டிவி யில் போட்டு விட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை ..
சுருளியாக விதார்த் , மைனாவாக அமலா இருவரும் கதைக்கு எளிதாக பொருந்துகிறார்கள் ..மைனாவை காதலிப்பதையே முழு நேர வேலையாக செய்யும் விதார்த் அவள் இல்லையென்று அம்மா சொன்னவுடன் ஆத்திரப்படும் இடத்திலும் , காதல் செய்வது தப்பா என்று போலீசிடம் கேட்கும் போதும் , மைனாவை தூக்கி கொண்டு காட்டுக்குள் ஓடும் போதும் கைதட்டல் வாங்குகிறார்....சில இடங்களில் பருத்திவீரனை ஞாபகபடுத்துகிறார் ...உணர்ச்சி வயப்படும் இடங்களில் யதார்த்தத்தை மீறுகிறார் .... அமலாவிற்கு வசனங்கள் குறைவு ..அதை கண்களிலேயே நிறைவு செய்கிறார்....கிளைமாக்ஸ் காட்சியில் மனதில் நிற்கிறார் ..இவர் சுருளியை காதலிப்பதற்கான காரணங்கள் அழுத்தமாக சொல்லப்படாதது ஒரு குறை ....
இவர்கள் இருவரை தவிர படம் முழுவதும் நம்மை அழைத்து செல்லும் மற்ற இருவர் பாஸ்கர் மற்றும் ராமையா ...தலை தீபாவளியை கொண்டாட முடியாமல் இப்படி காட்டுக்குள் அலைய விட்டதற்காக சுருளியை கொன்று விடுவதாக மிரட்டும் பாஸ்கர் கடைசியில் அவர்களுக்காகவே தன் வாழ்கையை தொலைக்கும் போது மனதில் நிற்கிறார் ...சீரியசான கதையை ஜாலியாக எடுத்து செல்வதற்கு "தம்பி" ராமையா பெரிதும் உதவி செய்கிறார்...ஆனாலும் ஒரே விதமான முக பாவங்களை தவிர்ப்பது நல்லது ...அவர் மனைவியாக வரும் செந்தாமரையை நேரே காட்டா விட்டாலும் மனதில் பதிய வைத்தது இயக்குனரின் திறமை ....
பாஸ்கரின் மனைவியாக வரும் சூசன் ஆரம்ப காட்சியிலும் , இறுதி காட்சியிலும் வந்து நம்மை அசர வைக்கிறார்....அவருடைய அண்ணன் ,அண்ணிகள்
அனைவரும் கதாபதிரத்திற்கு ஒத்து போகிறார்கள் ...
சுகுமாரின் ஒளிப்பதிவு நம்மை கதை நடக்கும் இடத்திற்கே கொண்டு செல்கிறது ...அதிலும் விபத்து காட்சியை கஷ்டப்பட்டு எடுத்து இருக்கிறார்கள் .... இமான் இதற்கு முன்னர் கிரி ,விசில் படங்களில் ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தாலும்
இந்த படம் நல்ல திருப்புமுனை ...பின்னணி இசையில் பின்னி இருக்கிறார் ."மைனா பாடல் மனதிலயே நிற்கிறது .....
ஒளிப்பதிவு,இசை இரண்டும் படத்திற்கு பெரிய பலம் ......
எளிமையான கதை , தெளிவான திரைகதை , யதார்த்தமான கதா பாத்திரங்கள் , மிரள வைக்கும் கிளைமாக்ஸ்,ஒரு கைதி தப்பி விட்டால் போலீஸ் காரனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஆழமாக காட்டியது என எக்கச்சக்க பலங்கள் படத்திற்கு இருந்தாலும் , மெதுவாக நகரும் ஆரம்ப காட்சிகள் , பருத்திவீரனின் பாதிப்பு , மைனாவிற்கு சுருளி மேல் ஏற்படும் காதலை ஆழமாக காட்டாதது , சில இடங்களில் பைத்திய காரனோ என சந்தேகப்படும் அளவிற்கு சுருளியின் காதல் என்று சில குறைகளையும் தவிர்த்திருந்தால் மைனா "பருத்திவீரன்" , "சுப்ரமணியபுரம்" வரிசையில் மைல் கல்லாக அமைந்திருக்கும் ,,,,
எனினும் "மைனா" மனதை உலுக்கும் படம்...
இப்படத்தை ரெட் ஜைன்ட் நிறுவனம் மார்கெடிங் செய்வதால் நல்ல ஒபெனிங் இருக்கிறது ... ஒரு வகையில்இது சந்தோசமாக இருந்தாலும் சின்ன தயாரிப்பாளர்கள் நிலைமையை நினைக்கும்
போது கவலையாக இருக்கிறது ....எந்த விதமான பின் பலமும் இல்லாமல் ரிலீஸ் ஆன "களவானி" நல்ல பெயர் எடுத்தாலும் நான்கு மாதங்களுக்குள் டிவி யில் போட்டு விட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை ..
லேபிள்கள்:
சினிமா,
சினிமா விமர்சனம்,
திரைப்படம்,
திரைவிமர்சனம்,
மைனா
7 November 2010
கமல் - "நிஜ" நடிகன்
இன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்...கடந்த 50 வருடங்களாக இவர் தமிழ் சினிமாவிற்கு ஆற்றி வரும் அளப்பெரும் பணியை யாரும் தமிழ் சினிமா இருக்கும் வரை மறக்கவோ , மறைக்கவோ முடியாது ..
நடிப்பையும் தாண்டி தொழில்நுட்பம் , இயக்கம் , திரைக்கதை , வசனம் , தயாரிப்பு ,இலக்கியம் என அவரின் பல்துறை திறன் அவரை உண்மையான "தசாவதாரி" என்று நிரூபிக்கிறது ..இத்தனை வருடம் ஆகியும் ஒவ்வொரு படத்திற்கும் முதல் படத்தை போல அவர் காட்டும் அர்பணிப்பு , தேடல் , உழைப்பு அனைவரையும் வியக்க வைக்கிறது ...
தன் ரசிகர்களை வெறும் ஆரத்தி காட்டுவதிற்கும் , பாலாபிஷேகம் செய்வதிற்கும் , வியாபார ரீதியாக மட்டும் பயன்படுத்தி வரும் பல நடிகர்களுக்கு மத்தியில் தன் ரசிகர் மன்றங்களை "நற்பணி" மன்றங்களாக மாற்றி இன்று வரை அதன் மூலம் பல இயலாதவர்களுக்கு நல்லுதவிகளை செய்து வருகிறார்...சினிமாவில் சம்பாதித்ததை எல்லாம் தெளிவாக பல இடங்களில் முதலீடு செய்து வருபவர்களுக்கு மத்தியில் தன் பணத்தை எல்லாம் நஷ்டம் ஏற்பட்டாலும் புது முயற்சிகளுக்காக சினிமாவிலேயே முதலீடு செய்யும் இவர் நிச்சயம் ஒரு கலை "ஞானி" .....
நடிப்பில் இவர் "உலக நாயகன் " என எல்லோரும் அறிவோம் ...எனினும் "அபூர்வ சகோதரர்கள் " , " தேவர் மகன்" , " தசாவதாரம்" போன்ற படங்களில் இவரின் திரைகதை பலரால் பாராட்டபட்டதோடு நல்ல வசூலையும் பெற்று தந்தது கூடுதல் செய்தி ....
" உனக்குள்ள முழிச்சிட்டு இருக்கற அதே மிருகம் தான் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு " - தேவர்மகன் ... " நல்லவங்களுக்கு கிடைக்கிற அதே மாலையும் மரியாதையும் கெட்டவங்களுக்கும் கெடைக்குதே " - மகாநதி ... " வீரம்ன்றது பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது " - குருதிபுனல் ..."கடவுள் இல்லேன்னு யார் சொன்னா இருந்தா நல்ல இருக்குக்ம்னு தானே சொன்னேன் " - தசாவதாரம் ..... கமலின் வசனங்கள் இன்றும் , என்றும் மனதில் நிற்பவை .....
இப்படி கமல்ஹாசனிடம் எவ்வளவோ நிறைகள் இருந்தாலும் அவரின் குறைகளையும் சுட்டி காட்ட வேண்டியது நம் கடமை ...பொதுவாக அவரின் மேதாவி தனமான பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தும் , அதிலும் தீபாவளி அன்று விஜய் டிவி " காபி வித் அனு " வில் அவர் பேசிய பேச்சு எரிச்சலையே ஏற்படுத்தியது ...அதன் விளைவே இந்த பதிவு....
வழக்கம் போல தன்னை பகுத்தறிவு வாதி என்று காட்ட கடவுள் எதிர்ப்பு கொள்கையை கையில் எடுக்கும் கமல் இந்த பேட்டியுலும் அதையே செய்தார் ..அதிலும் ஒரு படி மேலே போய் கடவுள் பக்தியை செக்ஸ் போல வீட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள் ஏன் வெளியே தெரியும் படி நடந்து கொள்கிறீர்கள் என்று ஏதோ கள்ள காதலை பற்றி பேசுவது போல பேசினார்...
செக்ஸ் இதை எல்லோரும் தெரியாமல் வைத்து கொண்டாலும் இதன் மூலம் உருவாகிற மனைவி . மகன் , மகள் என எல்லா பந்தத்தையும் யாரும் தெரியாமல் வைப்பது இல்லை .திருமணத்திற்கு பின் கணவன் மனைவி உறவில் செக்ஸ் பிரதானமாக இருந்தாலும் யாரும் அதை கொச்சையாக பார்ப்பது இல்லை ...அடுத்த சந்ததியை உருவாக்கும் தளமாகவே பார்கிறார்கள் ....அதை போல தான் கடவுள் பக்தி அனைவருக்கும் தெரியும் படி நடத்து கொள்வது ஒன்றும் கொலை குற்றம் அல்ல. ..அது அவரவர் விருப்பம் ...என் குளியலறையை யாரும் எட்டி பார்க்காதீர்கள் என்று அறைகூவல் விடுக்கும் கமல் அடுத்தவரின் தனி மனித உரிமையில் தலையிடுவது எந்த விதத்தில் நியாயம் ?...
ஆரம்ப காலத்தில் இருந்தே தன்னை கமல் பிராமணர் அல்லாதவராகவும் , அக்குலத்தை வெறுப்பவராகவும் , அசைவ உணவை விரும்பி உண்பவராகவும் முனைந்து காட்டி கொள்வதில் ஒரு காரணம் இருப்பதாக படுகிறது .. எல்லா திறமைகள் இருத்தும் தன்னையும் "ஜெமினி கணேசன் " போல " சாம்பார்" என்று ஒதுக்கி விடுவார்களோ என்ற பயமாக இருக்கலாம் ...எனவே தான் தன்னை ஆர்யன் அல்ல எல்லோரையும் போல திராவிடன் என்று பிரகனப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்... கமல் கூட போலி ஆர்ய - திராவிட மாயையில் விழுந்தது ஆச்சர்யமாக இருக்கிறது ...
தன்னுடைய குடும்ப புகைப்படத்தை பார்த்து அண்ணன் மனைவியை மன்னி என்று கூறி விட்டு பிறகு அண்ணி என்று திருத்தி கொண்டார் ...மன்னி என்று சொல்வதில் ஒரு தவறும் இருப்பது போல பட வில்லை ..அவர் குல வழக்கப்படி அப்படி கூறுவது வழக்கமாக இருந்தால் அதை ஏன் மழுப்ப வேண்டும் ?...
கமல் அவர்களே சினிமாவில் மட்டும் உங்கள் நடிப்பை காட்டினால் மிகவும் நல்லது ...அதுவே அனைவரின் விருப்பமும் கூட. ...கடவுள் எதிர்ப்பு என்பது ஏதோ நேற்று இன்று ஏற்பட்டது அல்ல ... பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்து மதத்தில் இரு விதமான வாதம் இருந்திருக்கிறது ...கண்ணதாசனின் " அர்த்தமுள்ள இந்து மதம் " பத்மனின் "ஆண்டவன் மறுப்பும் ஆன்மீகமே" போன்ற புத்தகங்களை படித்தால் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கலாம் .
"பார்ப்பானை ஐயன் என்ற காலமும் போச்சே " என்று பாடிய பாரதியையே பார்ப்பான் என ஒதுக்கிய கூட்டத்திற்கு மத்தியில்
யாரிடம் தமிழன் என சான்றிதழ் தேடுகிறீர்கள் ?...கடவுளே இல்லை என்றாலும் உங்களின் சில படங்களில் வைணவ தாக்கம் அதிகமாக இருப்பது ஏன் ?..."அன்பே சிவம் ' படத்திலேயே கடவுள் பற்றிய கேள்விக்கு பதில் இருப்பது தெரியவில்லையா ?....
உங்கள் பேட்டியில் ஹிந்தி நடிகர் திலிப் குமார் தன்னுடைய இயற்பெயரான " யூசுப் கானை " வெளியில் சொல்ல முடியாத கால கட்டத்தில் இருந்ததை எண்ணி நீங்கள் பரிதாபபடுவதாகவும் , அவரின் இயற்பெயரை சொல்லியே அழைப்பேன் என்றும் கூறியிருந்தீர்கள் .
இன்றோ ஷாருக் கான் , சல்மான் கான் , அமீர் கான் என எல்லா கான்களும் உண்மைனையான பேருடன் முன்னணியில் இருக்கிறார்கள் ...நீங்களும் உங்களின் முகமூடியை கழட்டி விட்டு முன்னே வாருங்கள் .....
லேபிள்கள்:
கமல்ஹாசன்,
திரைவிமர்சனம்
5 October 2010
எந்திரன் திரை விமர்சனம்
மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ரஜினி , ஷங்கர், ரஹ்மான் கூட்டணியில் ஒரு படம் , சன் பிச்சர்ஸ் நேரடி தயாரிப்பில் முதல் படம் , பட்ஜெட் 150 கோடி , உலகமெங்கும் மூன்று மொழிகளில் மூவாயிரம் பிரிண்ட் ரிலீஸ் , படம் வருவதற்கு முன்பே நிறைய எதிர்பார்ப்புகள் , விவாதங்கள் , விளம்பரங்கள் .......
ஒரு வழியாக படத்தை பார்த்தாகிவிட்டது ...இது ஷங்கர் பாணி படமும் அல்ல , ரஜினி பாணி படமும் அல்ல , முழுவதும் கிராபிக்ஸை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம் ....
விஞ்ஞானி வசீ ( ரஜினி ) பத்து வருட கடுமையான உழைப்பில் ஒரு ரோபோவை தயாரிக்கிறார் .... ரோபோவின் பெயர் சிட்டி ( ரஜினி ) ... அதை ராணுவத்தில் கொடுத்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது அவர் லட்சியம் ....ஆனால் இதற்கு அனுமதி அளிக்கும் பதவியில் இருக்கும் வசீயின் குருவான ப்ரோ . தோரா ( வில்லன் டானி ) பொறாமையுடன் மறுக்கிறார் .... ரோபோவிற்கு நல்லது கெட்டது தெரியாததால் நம் ராணுவதினரையே அது அழித்து விடும் அபாயம் இருக்கிறது என்று நிரூபித்து அதனை நிராகரிக்கிறார் .....வசீ சிட்டிக்கு உணர்ச்சிகளை சொல்லி கொடுக்க அது வசீயின் அழகான காதலியான சனாவையே ( ஐஸ்வர்யா ராய் ) , காதலிக்க தொடங்கி விடுகிறது......
இதில் ஆத்திரமடையும் வசீ சிட்டியை அழித்து விடுகிறார் , பின்னர் அது வில்லன் கைக்கு போய் எவரையும் அழித்து விடக்கூடிய அபாயகரமான சக்தியாக மாறி விடுகிறது.....தன்னை போல ஆயிரம் ரோபோவை அது உருவாக்கி ஐஸ்வர்யா ராயை சிறை பிடிக்கிறது ....கடைசியில் ரோபோக்களை அழித்து விட்டு வசீ ராயை எப்படி மீட்கிறார் என்பதே கிளைமாக்ஸ் ....
விஞ்ஞானி வசீ , ரோபோ சிட்டி , வில்லன் ரோபோ என மூன்று வேடங்களில் வருகிறார் ரஜினி ... எந்த வித ஒபெனிங் பில்ட் அப்பும் இல்லாமல் சாதாரணமாக அறிமுகம் ஆகிறார் சூப்பர் ஸ்டார் ...காதலியின் கையை பிடிப்பவனை ( கலபாவன் மணி ) அடிக்காமல் கண்ணில் மண்ணை தூவி விட்டு ஓடுகிறார் ... இப்படி முற்றிலும் வித்தியாசமாக வசீ கதாபாத்திரத்தில் ரஜினி ...அவரை அவ்வளவு அழகாக காட்டியிருந்தும் ஒட்டு தாடி ஏனோ ஒட்டவில்லை....கடைசியில் சிட்டியை அழிக்கும் இடத்தில மனதை தொடுகிறார் ....
வசியை விட எல்லோரையும் வசீகரித்து இருபது சிட்டி ... சந்தானம் , கருணாஸை அடிக்கும் போதும் , பார்பர் ஷாப்பில் புக்ஸ் படிக்கும் போதும் , ஹனிபாவுடன் ( இவர் உயிருடன் இல்லாதது நிச்சயம் கலை துறைக்கு பெரிய இழப்பு ) உல்டாவாக பேசும் போதும் , ஐஸ்வர்யாவிர்காக வசியுடன் சண்டை போடும் போதும் போதும், மக்னெடிக் பவர் மூலம் அடியாட்களின் பேண்டை உருவும் இடத்திலும் என எங்கு பார்த்தாலும் சிட்டியின் சாம்ராஜ்யம் ...கோர்ட் உத்தரவின் படி தன்னை தானே அழித்து கொள்ளும் இடத்தில லேசாக மனம் கனக்கிறது......
அசத்தலாக அறிமுகம் ஆகும் வில்லன் ரோபோ போக போக ஆயிரம் ரோபோக்கலாக மாறியவுடன் போரடிக்கிறார்....குரூர பார்வையுடன் ராயை அணுகும் போதும் , வில்லன் டானி யை கொல்லும் போதும் , ஸ்டைலாக சிரிக்கும் போதும் அந்த கால வில்லன் ரஜினியின் பஞ்ச் ....
பொதுவாக ரஜினி படங்களில் பாடல்களுக்கு மட்டும் வரும் ஹீரோயினாக இல்லாமல் இதில் ஐஸ்வர்யா ராய்க்கு படம் முழுவதும் வருகின்ற முக்கியமான வேடம் , நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு .... நன்றாக பயன் படுத்தி இருக்கிறார் .....சிட்டிக்கு உறவு முறை பற்றி விளக்கும் இடம் உதாரணம் ....இடைவேளை வரை சிட்டியுடன் கதையை இவரே நகர்த்துகிறார் ....பாடல்களில் நல்ல கவர்ச்சி ....
இசை , கேமரா , சண்டை , நடனம் என எல்லோரும் நன்றாக உழைத்து இருக்கிறார்கள் ..கிராபிக்ஸ் காட்சிகளை ஷங்கரே நேரடியாக மேற்பார்வை செய்து இருக்கிறார் ....
இது போன்ற மிக பெரிய பட்ஜெட் படங்களை தமிழில் ஷங்கரை தவிர யாராலும் இயக்க முடியுமா என்பது கேள்விக்குறியே ..இருப்பினும் கதையை விட கிராபிக்ஸில் தான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார் .. .பாடல் , சண்டை காட்சிகளுக்கு செய்த செலவில் கொஞ்சமாவது வசீயின் ஆராய்ச்சி கூடத்திற்கு செய்திருக்கலாம் .
பொதுவாக ஷங்கர் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது ....இருந்தும் இதில் லாஜிக் சொதப்பல் ஏராளம் .....பத்து வருடமாக கஷ்டப்பட்டு ரோபோவை தயாரித்து அதை எந்த வித எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் ஐஷ்வர்யா ராயுடன் அனுப்புகிறார் .... இதை தயாரித்தே ஏதோ எடுபிடி வேலை செய்வதற்கோ என யோசிக்கும் அளவிற்கு நிறைய காட்சிகள் .....முதலில் ரோபோ போல ஸ்டிப்பாக வரும் சிட்டி பின்னர் வில்லன் ஆக மாறியவுடன் சாதாரண மனிதன் போல நடந்து கொல்வது சுத்த பேத்தல் ...எல்லா வித ஆற்றலும் படைத்த ரோபோ தன் இடத்தில நுழைந்து விட்ட வசியை கண்டுபிடிக்க ஏனோ இத்தனை குழப்பம் ....கிளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் வசிக்கு மரண தண்டனை விதிக்கும் நீதிபதி சிட்டி ரோபோ சாட்சி சொன்னவுடன் விடுதலை செய்வது ஆண்டாண்டு கால " தமிழ்படம் " .ENTHIRAN
ஷங்கரின் ஜென்டில்மேன் , இந்தியன் , அந்நியன் , சிவாஜி என எல்லா படத்திலும் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் வேகமான திரைக்கதையும் , அழுத்தமான கதையும் அதை மறைத்து விடும் , ஆனால் இப்படத்தில் முழுவதும் கிராபிக்ஸ் ஆக்ரமித்து இருப்பதால் ரஜினி படம் என்பதை விட ஏதோ ஆங்கில படத்தின் டப்பிங் படம் பார்த்த உணர்வை தவிர்க்க முடியவில்லை . ...
ஒரே நாளில் இப்படம் பல கோடிகளை வசூலித்து விட்டது என தெரு கோடியில் நின்று கொண்டு நிறைய பேர் பேசிக்கொள்கிறார்கள் ....... ஆனால் எல்லா தரப்பு மக்களும் உடனே பார்க்க முடியாத படி எக்கச்சக்க டிக்கெட் விலை .......இதனால் நான் படம் ரிலீஸ் ஆன அடுத்த நாளே பார்த்த போதும் கூட அரங்கம் பாதி கூட நிரம்ப வில்லை ...
சன் பிச்சர்ஸ் கவனிக்குமா ? .. ...
ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார் படத்தை பார்ப்பது எப்போது ?.அரங்கத்தின் வெளியே ஒரு வெறி தனமான ரசிகனின் கேள்வி ..
லேபிள்கள்:
எந்திரன்,
சினிமா,
திரை விமர்சனம்,
திரைமணம்,
திரைவிமர்சனம்
22 September 2010
பாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்
பாஸ் ஐந்து வருடமாக ஆங்கில பரிட்சையில் அரியர் வைத்து கொண்டிருக்கும் ஹீரோ , அவருடைய ஒரே நண்பர் நல்லதம்பியாக சந்தானம்..இவர்கள் இருவரின் காமெடி கூட்டணியின் மத்தியில் கொஞ்சம் கதை....
வெட்டியாக ஊரை சுற்றி கொண்டிருக்கும் ஆர்யா நயனை சந்தித்தவுடன் காதலிக்கிறார் ...பின்னர் நயனின் அக்காவே அவருக்கு அன்னியானவுடன் நயனை பெண் கேட்கிறார்.....வேலை வெட்டி இல்லாத ஒருவருக்கு எப்படி பெண் கொடுப்பது என்று கேட்டவுடன் ஆறு மாதத்தில் தன் தங்கையை பெரிய இடத்தில மணம் முடித்து வைப்பேன் என்று சவால் விட்டு கிளம்புகிறார் ..இடைவேளைக்கு பிறகு நண்பன் சந்தானத்தின் உதவியுடன் டுடோரியல் ஆரம்பித்து வெற்றி பெறுகிறார்.......நயனை கை பிடிக்கிறார் ...
டிக்கெட் சைஸ் கதை ...ஆனால் காமெடி எக்ஸ்ப்ரஸில் பயணம்....
பரிட்சைக்காக பிட் ரெடி பண்ணும் காட்சியிலேயே ஆர்யாவின் அமர்க்களம் ஆரம்பமாகி விடுகிறது....நயனிடம் முதல் சந்திப்பிலேயே தன் பிட்டின் பெருமை பேசும் ஆர்யா பின்னர் அவரே எக்ஸாம் சூபெர்வைசெர் ஆக வரும் இடத்தில கல கல.......சிறிது நேரமே வந்தாலும் சுவாமிநாதன் சிரிக்க வைக்கிறார்......
படம் முழுவதையும் தன் கவுன்டரில் தூக்கி நிறுத்துகிறார் சந்தானம்....ஆர்யாவை கலாய்க்கும் போதும் , அவருக்கு காதல் அறிவுரை கொடுக்கும் போதும் , அவருக்காக கடன் வாங்கி கொடுத்து விட்டு கண்ணீர் விடும் இடத்திலும், கடைசியில் நயனின் அப்பா "சித்ரா லக்ஷ்மணனை "" ஓட்டும் போதும் என அவர் செய்யும் எல்லா சேட்டைகளுக்கும் அரங்கமே அதிர்கிறது......
நயன் அழகாக இருக்கிறார்....ஆனால் மிகவும் மெலிந்திருப்பது கவலை அளிக்கிறது....ஆர்யாவின் அண்ணன், அண்ணி , தங்கை , அம்மா என அனைவரும் பொருத்தமாக இருக்கிறார்கள்......
கடன் கொடுக்கும் ராஜேந்திரன் , அவர் பையன், பாடம் எடுக்கும் பார்வை இழந்த பெண் என்று எல்லோரும் படத்தின் ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்..
ஒன்றிரண்டு பாடல்கள் தவிர மற்றவை ஸ்பீட் ப்ரேக்கர்ஸ்..........
காமெடி , டுடோரியலை முன்னுக்கு கொண்டு வர அவர்கள் எடுக்கும் முயற்சி , இயல்பான காட்சிகள் என நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும் சிரிக்க மட்டும் தான் முடிந்ததே ஒழிய படம் முடிந்து வெளியே வரும் போது எதுவும் மனதில் நிற்கவில்லை ...
பாஸ் வணிக ரீதியாக பாஸ் செய்து விட்டார் ..........
லேபிள்கள்:
சினிமா,
திரை விமர்சனம்,
திரைவிமர்சனம்,
பாஸ் என்கிற பாஸ்கரன்
29 August 2010
நான் மகான் அல்ல விமர்சனம்
மூன்று வெற்றி படங்கள் கொடுத்த ஹீரோ , முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் , யுவனின் இசை , "இறகை போலே" பாடல் , தொடர்ந்து விளம்பரம் இவை எல்லாம் படத்தின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது ...எனினும் படத்தின் முடிவில் சின்ன ஏமாற்றம் .....
ஐந்து இளைஞர்கள் கஞ்சா போதையில் செய்யும் கொலையில் இருந்து தப்பிக்க அதற்கு ஒரே சாட்சியான ஹீரோவின் அப்பாவை கொன்று விடுகிறார்கள் ...ஹீரோ அவர்களை பழி தீர்க்கிறார் ...சாதாரணமான கதை ஆனால் சற்றே மாறுபட்ட திரைக்கதை....
வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றும் ஹீரோ , கால் டாக்ஸி டிரைவராக இருந்தாலும் தினமும் கை நிறைய காசு கொடுக்கும் அப்பா , ஹீரோவுடன் நான்கு நண்பர்கள் , ஹீரோ ஹீரோயினை கல்யாண மண்டபத்தில் சந்தித்து முதல் பார்வையிலேயே காதலிப்பது , மண்டபத்தில் ஒரு பாடல் என ஆரம்ப காட்சிகள் வழக்கமானதாகவே இருக்கின்றன....
கார்த்தி காதல் தோல்வி என்று சொல்லி காஜலை கவிழ்க்கிறார் ....மனதில் பட்டதை உடனே சொல்லும் கார்த்தியின் குணம் காஜலிற்கு பிடிக்கிறது ...அவர் தோழியுடன் கார்த்தியை சந்திக்கும் இடம் சிலிர்ப்பு ....சொல்லிவைத்தார் போல இருவரும் காதலிக்கிறார்கள் ...இடைவேளைக்கு பிறகு காஜல் காணாமல் போகிறார் ...இயக்குனர் அதிகம் மெனக்கெடவில்லை ....
நடிப்பில் கார்த்தி பருத்தி வீரன் ஹாங் ஓவரில் இருந்து மீண்டு இருக்கிறார் ....ஆனாலும் வன்முறை அவரை விடுவதாக இல்லை ... அப்பா சாகும் இடத்திலும் , கிளைமாக்ஸ் சண்டை காட்சியிலும் நல்ல நடிப்பு .... காதல் காட்சிகளிலும் , வேலைக்காக கஸ்டமர்கலை சந்திக்கும் போதும் நடிப்பு மிளிர்கிறது ....தன்னை மிரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடியையே தன் நண்பனாக கார்த்தி மாற்றுவது சாமர்த்தியம் .....
இயக்குனரின் முதல் படத்தில் வந்த நிறைய பேர் இதில் இருக்கிறார்கள் ...ஆனால் அதில் ஏற்படுத்திய பாதிப்பு இதில் இல்லை....கஞ்சா போதையில் கொலை செய்யும் இளைஞர்கள் நன்றாக நடித்து இருக்கிறார்கள் ...அவர்களின் பின்புலம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை ..முதல் காட்சியில் அவர்கள் தூக்கி செல்லும் பெண்ணிற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை .....
ஜெயப்ரகாஷ் எளிமையாக நடித்து இருந்தாலும் அவர் தோற்றம் அதற்கு முரண் படுகிறது ....
படத்தின் பலம் கார்த்தியின் நடிப்பு , முன்னணியில் இருக்கும் யுவனின் பின்னணி இசை , மதியின் கேமரா , சண்டை காட்சிகள் , ஹீரோவை பெரிய அடியாட்களுடன் சண்டை போட விடாமல் விடலை பயல்களுடன் மோத விட்டிருப்பது ...படத்தின் வேகமான பின்பாதி ..புதுமுகங்களின் நடிப்பு .....மற்றும் முதல் படத்தில் கிராம சூழலில் இருந்து நகர சூழலிற்கு இயக்குனர் மாறி இருப்பது ..
பலவீனம் மெதுவாக நகரும் ஆரம்ப காட்சிகள் ...வழக்கமான கதை,..இடைவேளைக்கு பிறகு காணமல் போகும் ஹீரோயின் ...என்ன தான் கஞ்சா போதை என்றாலும் எதை பற்றியும் கவலை படாமல் கொலை செய்யும் கல்லூரி மாணவர்கள் ..அப்பா அடி பட்டவுடன் பொறுப்புடன் நடக்கும் ஹீரோ அவர் இறந்த வுடன் உடனே பழி வாங்க கிளம்புவது ....சில இடங்களில் முகம் சுழிக்க வைக்கும் வன்முறை ..
இயக்குனர் " வெண்ணிலா கபடி குழு" வில் ஏற்படுத்திய பாதிப்பை இதில் ஏற்படுத்த வில்லை .....அதே நேரம் குறைகள் இருந்தாலும் இப்படத்தை முழுதாக ஒதுக்கவும் முடியவில்லை ......மிக சிறந்த படங்களின் வரிசையில் சேர்க்கவும் முடியவில்லை ......
"நான் மகான் அல்ல" - மீடியம் cinema
ஐந்து இளைஞர்கள் கஞ்சா போதையில் செய்யும் கொலையில் இருந்து தப்பிக்க அதற்கு ஒரே சாட்சியான ஹீரோவின் அப்பாவை கொன்று விடுகிறார்கள் ...ஹீரோ அவர்களை பழி தீர்க்கிறார் ...சாதாரணமான கதை ஆனால் சற்றே மாறுபட்ட திரைக்கதை....
வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றும் ஹீரோ , கால் டாக்ஸி டிரைவராக இருந்தாலும் தினமும் கை நிறைய காசு கொடுக்கும் அப்பா , ஹீரோவுடன் நான்கு நண்பர்கள் , ஹீரோ ஹீரோயினை கல்யாண மண்டபத்தில் சந்தித்து முதல் பார்வையிலேயே காதலிப்பது , மண்டபத்தில் ஒரு பாடல் என ஆரம்ப காட்சிகள் வழக்கமானதாகவே இருக்கின்றன....
கார்த்தி காதல் தோல்வி என்று சொல்லி காஜலை கவிழ்க்கிறார் ....மனதில் பட்டதை உடனே சொல்லும் கார்த்தியின் குணம் காஜலிற்கு பிடிக்கிறது ...அவர் தோழியுடன் கார்த்தியை சந்திக்கும் இடம் சிலிர்ப்பு ....சொல்லிவைத்தார் போல இருவரும் காதலிக்கிறார்கள் ...இடைவேளைக்கு பிறகு காஜல் காணாமல் போகிறார் ...இயக்குனர் அதிகம் மெனக்கெடவில்லை ....
நடிப்பில் கார்த்தி பருத்தி வீரன் ஹாங் ஓவரில் இருந்து மீண்டு இருக்கிறார் ....ஆனாலும் வன்முறை அவரை விடுவதாக இல்லை ... அப்பா சாகும் இடத்திலும் , கிளைமாக்ஸ் சண்டை காட்சியிலும் நல்ல நடிப்பு .... காதல் காட்சிகளிலும் , வேலைக்காக கஸ்டமர்கலை சந்திக்கும் போதும் நடிப்பு மிளிர்கிறது ....தன்னை மிரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடியையே தன் நண்பனாக கார்த்தி மாற்றுவது சாமர்த்தியம் .....
இயக்குனரின் முதல் படத்தில் வந்த நிறைய பேர் இதில் இருக்கிறார்கள் ...ஆனால் அதில் ஏற்படுத்திய பாதிப்பு இதில் இல்லை....கஞ்சா போதையில் கொலை செய்யும் இளைஞர்கள் நன்றாக நடித்து இருக்கிறார்கள் ...அவர்களின் பின்புலம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை ..முதல் காட்சியில் அவர்கள் தூக்கி செல்லும் பெண்ணிற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை .....
ஜெயப்ரகாஷ் எளிமையாக நடித்து இருந்தாலும் அவர் தோற்றம் அதற்கு முரண் படுகிறது ....
படத்தின் பலம் கார்த்தியின் நடிப்பு , முன்னணியில் இருக்கும் யுவனின் பின்னணி இசை , மதியின் கேமரா , சண்டை காட்சிகள் , ஹீரோவை பெரிய அடியாட்களுடன் சண்டை போட விடாமல் விடலை பயல்களுடன் மோத விட்டிருப்பது ...படத்தின் வேகமான பின்பாதி ..புதுமுகங்களின் நடிப்பு .....மற்றும் முதல் படத்தில் கிராம சூழலில் இருந்து நகர சூழலிற்கு இயக்குனர் மாறி இருப்பது ..
பலவீனம் மெதுவாக நகரும் ஆரம்ப காட்சிகள் ...வழக்கமான கதை,..இடைவேளைக்கு பிறகு காணமல் போகும் ஹீரோயின் ...என்ன தான் கஞ்சா போதை என்றாலும் எதை பற்றியும் கவலை படாமல் கொலை செய்யும் கல்லூரி மாணவர்கள் ..அப்பா அடி பட்டவுடன் பொறுப்புடன் நடக்கும் ஹீரோ அவர் இறந்த வுடன் உடனே பழி வாங்க கிளம்புவது ....சில இடங்களில் முகம் சுழிக்க வைக்கும் வன்முறை ..
இயக்குனர் " வெண்ணிலா கபடி குழு" வில் ஏற்படுத்திய பாதிப்பை இதில் ஏற்படுத்த வில்லை .....அதே நேரம் குறைகள் இருந்தாலும் இப்படத்தை முழுதாக ஒதுக்கவும் முடியவில்லை ......மிக சிறந்த படங்களின் வரிசையில் சேர்க்கவும் முடியவில்லை ......
"நான் மகான் அல்ல" - மீடியம் cinema
லேபிள்கள்:
சினிமா விமர்சனம்,
திரை விமர்சனம்,
திரைவிமர்சனம்
22 August 2010
காட் பாதர்- 1 - உலக சினிமா
"காட் பாதர்- 1 " 1972 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட் இயக்கத்தில் மர்லன் பிராண்டோ , அல் பாசினோ நடிப்பில் வெளி வந்த ஆங்கில படம்..... 'நாயகன்" இல் ஆரம்பித்து வரப்போகும் "மங்காத்தா" வரை இந்த படத்தின் பாதிப்பில்லாமல் எந்த ஒரு "தாதா" படமும் எடுக்கப்பட்டதுமில்லை , இனி மேல் எடுக்கப்போவதுமில்லை....
" காட் பாதர்- 1 " நிச்சயம் இப்படத்தை நிறைய பேர் பார்த்திருப்பார்கள் ...ஆனாலும் பார்க்காதவர்கள் ஏராளம்...அவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று...இன்று ஹீரோயிசத்தை முன்னிறுத்தி எடுக்கப்படும் எல்லா படங்களுக்கும் ஒரு முன்னோடி இப்படம் ...
இதில் டானாக நடித்த பிராண்டோ மற்றும் அல் பாசினோ நூறு பேரை அடிக்கவில்லை பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசவில்லை ..படத்தில் பெரிதாக ரத்தம் சொட்டவில்லை ..முகம் சுளிக்கும் வன்முறை இல்லை ... ஆனாலும் இதெல்லாம் ஏற்படுத்தாத சிலிர்ப்பும் பாதிப்பும் படத்தில் உண்டு .....
.
சிறு வயதில் இட்டாலியில் இருந்து ஓடி வந்து அமெரிக்காவின் பெரிய டானாக உருவாகிறார் பிராண்டோ .....முதல் காட்சியிலேயே அவரின் அரசியல் செல்வாக்கும் பலமும் , அதே நேரத்தில் அவர் நட்பிற்கும் , குடும்பத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவமும் தெளிவாக சொல்லபடுகிறது ...மூத்த பையனும் , தத்து பையன் சாமும் பிராண்டோவின் உடன் இருக்க கடைசி பையன் பாசினோ இதில் எதுவும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் ...
சூதாட்டம், கட்டை பஞ்சாயத்து இதை டான் தொழிலாக செய்தாலும் போதை பொருட்களை விற்பனை செய்ய இவரின் உதவி கேட்டு வரும் பெரிய பணக்கார குடும்பத்தை பிராண்டோ மறுக்கிறார் ..இதில் ஆத்திரம் அடையும் அவர்கள் டானை கொல்ல முயற்ச்சிக்க அதில் இருந்து உயிர் பிழைக்கிறார் .......இருந்தும் கொலை முயற்சி தொடர்கிறது ..
எதிரிகளை ஒன்றும் செய்ய முடியாது என மற்ற சகோதரர்கள் நினைக்க பாசினோ முடியும் என்கிறார் ... அவர் திட்டப்படி சமரசம் செய்ய போகும் இடத்தில் முன்பாகவே மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து எதிரிகள் இருவரையும் சுட்டு தள்ளுகிறார் பாசினோ.....
பிறகு அங்கிருந்து வெளியூர் செல்லும் பாசினோ ஒரு அழகான பெண்ணை சந்திக்கிறார் .காதல் மலர்கிறது ...திருமணமும் முடிகிறது ......இவருக்கான கொலை முயற்சியில் இவரின் மனைவியும் இறக்கிறார்...இதற்கிடையில் எதிரிகள் இவரின் அண்ணனின் கதையை முடித்து விடுகிறார்கள் ....
ஊருக்கு திரும்பிய பாசினோ பழைய காதலியை சந்திக்கிறார் ..மணம் முடிக்கிறார் ....குழந்தையும் பிறக்கிறது .... பிராண்டோவும் முழு பொறுப்பையும் பாசினோவிடம் கொடுத்து விட்டு சிறிது காலத்தில் இறந்து விடுகிறார் .
.
பாசினோ தனது தந்தை மற்றும் அண்ணன் சாவிற்கு பழி தீர்க்க எந்த சபதமும் எடுக்கவில்லை ஆனால் தனது குழந்தையின் பெயர் சூட்டும் விழா முடிவதற்குள் இதற்கு காரணம் ஆன ஐவரின் கதையையும் முடிக்கிறார் .....இதில் இவரின் சகோதரியின் கணவரும் உண்டு ....
பாசினோவை தேடி அனைவரும் வருகிறார்கள் ...இவரை டானாக முழு மனதுடன் ஏற்கிறார்கள் ...இதனால் மனைவியிடம் விரிசல் ஏற்படுகிறது .அத்துடன் படமும் முடிகிறது.........
இப்படத்தில் பிராண்டோ பேசும் ஒரு வசனம் மிக பிரபலம் ..." IAM GONNA GIVE HIM AN OFFER WHICH HE CANT REFUSE " ..பெரிய டானாக இருந்தாலும் மனைவி,மகன், பேரன்,பேத்தி என பெரிய குடும்ப சூழலில் வாழ்வது , போதை பழக்கம் இளைஞர்களிடம் பரவ கூடாது என தடுப்பது ....தனக்கு வேண்டிய ஹீரோவிற்கு சான்ஸ் தர மறுக்கும் தயாரிப்பாளரை வழிக்கு கொண்டு வர அவருக்கு பிடித்த மிக விழை உயர்ந்த குதிரையின் தலையை அவருக்கே பரிசாக கொடுப்பது , சாவதற்கு முன் பேரனுடன் கொஞ்சி விளையாடுவது என எல்லா இடங்களிலும் பிராண்டோ மனதில் நிற்கிறார் .....
யதார்த்தமான நடிப்பு என்ன என்பதை பாசினோவிடம் தான் கற்க வேண்டும் எடுத்த எடுப்பில்லேயே காதலியின் தந்தையிடம் பெண் கேட்கும் தைரியம் ,மரண படுக்கையில் இருக்கும் அப்பாவை காப்பாற்ற காட்டும் தவிப்பு ,... எதிரிகள் அனைவரையும் அழிப்பதற்கு அவர் போடும் சாமர்த்தியமான திட்டம் இப்படி நிறைய இடங்களில் அவரின் கண்களே பேசி விடுகின்றன ........
.
இப்படத்தில் இருந்து உருவி எடுக்கப்பட்ட படங்கள் ஏராளம் ..அதில் முக்கியமானவை நாயகன் மற்றும் சர்கார் ...மணி கதை கருவை அப்படியே எடுத்திருந்தாலும் சில காட்சிகள் புதுமையாக செய்திருப்பார் ..அதிலும் ஒளிப்பதிவு , இசை,வசனம்,திரைக்கதை போன்றவைகளில் இன்றும் இந்த
படம் ஒரு முன்னோடியாக இருக்கிறது ..ஆனால் சர்க்கார் அப்படியே எடுக்கப்பட்ட படம்....
போலீஸ் அதிகாரி தன் பெண் கற்பழிக்கப்பட்டதை கமலிடம் சொல்வது , வியாபார விஷயத்தில் ரெட்டி குடும்பம் நாயகனிற்கு எதிராவது , போன் பூத்தில் வைத்து நிழல்கள் ரவி கொல்லபடுவது , கமலின் மனைவி கொல்லபடுவது ( GOD FATHER2 ) , காரின் பின் சீட்டில் இருந்து எதிரியின் கழுத்தை நெரித்து கொல்வது , கமலின் நடிப்பு என நிறைய காட்சிகள் இப்படத்தின் பாதிப்பு .முன்பே சொன்னது போல சர்கார் படமே " GOD FATHER " தான் .....
இந்த இரண்டு படங்களையும் தவிர குறிப்பாக சொல்ல வேண்டிய மற்றொரு படம் தேவர் மகன்"..ஆனால் எந்த ஒரு பாதிப்பும் நேரடியாக தெரியாமல் கமல் மிக புத்திசாலித்தனமாக கதைக்களத்தையும் , சூழலையும் மாற்றியிருப்பார்.
சினிமா ஆர்வமுடைய ஒவ்வொருவருடைய வீட்டையும் அலங்கரிக்க வேண்டிய முக்கியமான டி.வி.டி தொகுப்பு காட் பாதர்.. காட் பாதர் -2 விமர்சனத்துடன் அடுத்த முறை சந்திக்கலாம்... உலக சினிமா
லேபிள்கள்:
AL PACINO,
GOD FATHER,
god father 1,
MORLON BRANDO,
உலக சினிமா,
காட் பாதர்- 1
8 August 2010
இளைஞர்களின் இயக்குனர்கள்
செல்வாவின் முதல் படம் "துள்ளுவதோ இளமை" விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டாலும் ரசிகர்களால் வசூலை குவித்தது ...நடுபக்கத்தில் ஆபாச படத்தை வெளியிட்டு விற்பனையை அதிகமாக்கிய நம்பர் ஓன் வார இதழ் கூட இப்படத்தை மோசமாக விமர்சித்தது ......ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அப்படத்தில் ஒரு உண்மை இருந்தது .....செல்வாவிடம் தைரியமும் இருந்தது ...."காதல் கொண்டேன்" காதலை மையபடுதினாலும் சிறு வயதில் ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் மன ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்பை சொல்ல தவறவில்லை.....
.7g ஒரு காதல் காவியம் ...படத்தில் ரவிக்ரிஷ்ணாவும் , சோனியாவும் தெரியவில்லை ....கதிரும் , அனிதாவும் மனதில் நின்றார்கள் ......இது இயக்குனரின் வெற்றி ...."புதுபேட்டை" வன்முறையின் புது கோணம் ..ரௌடிகள் உருவாவது உடல் பலத்தில் அல்ல .......சூழ்நிலையும் ..மன உளைட்சலுமே அதற்கு காரணம் என்பதை காட்சிகளில் தெளிவாக உணர்த்தி இருப்பார்....எதையுமே விசுவலாக சொல்லும் திறமை இவரிடம் அசாத்தியமாக இருக்கிறது ......இவரின் தெலுகுபடம் தமிழில் "யாரடி நீ மோகினி" என்று ரீ மேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது .....
"ஆயிரத்தில் ஒருவன் " பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிகபெரிய முயற்சி....முதல் பாதி ஆங்கில படங்களுக்கு இணையாக இருந்தது .....இரண்டாவது பாதியில் படம் தடம் மாறியிருந்தாலும் காட்சிகள் கண்ணில் நிற்கின்றன ......படம் குடும்பத்தோடு சென்றவர்களை முகம் சுளிக்க வைத்ததும் உண்மை .......எனினும் அப்படம் ஒரு மைல்கல் ....செல்வராகவனின் முக்கிய பலமான யுவன் இப்போது இவர் கூட்டணியில் இல்லாதது ஒரு பெரிய மைனஸ் .....
'மின்னலே" வில் ஆரம்பித்து "VTV " வரை கௌதமிற்கு காதல் கை கொடுக்கிறது .......நகர இளைஞர்களிடம் இவரின் படமும் .பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றன ......."காக்க காக்க " சூரியாவிற்கு மட்டும் திருப்புமுனையாக அல்ல ...காவல்துறை சம்பத்தப்பட்ட படங்களுக்கும் ஒரு முன்னோடி.........இப்படத்தின் வில்லன் கதாபாத்திரமும் வித்தியாசமாக இருந்தது .......
.. இதன் அடுத்த பதிப்பாக வந்த "வேட்டையாடு விளையாடு" ஒரு சூபெர்ப் CRIME THRILLER ...நீண்ட நாட்களுக்கு பிறகு கமலிற்கு அற்புதமான அறிமுக காட்சி .........இவரைப்போல ஹீரோயின்களை அவ்வளவு அழகாக யாரும் காட்டுவது இல்லை........ஆனால் சிம்புவையும் மிக அழகாக VTV யில் காட்டியிருப்பது புதுசு .........காதலின் எல்லா கோணங்களும் இதில் அற்புதம் .......இப்பட முடிவில் சிம்பு ,த்ரிஷா இருவரையும் பேசுவது போல காட்டாமல் தனி தனியாக காட்டி விசுவலாக முடித்திருக்கலாம் .......கௌதமின் பலம் உணர்ச்சிகளை துல்லியமாக எடுப்பது ....இசைக்கு அதிக கவனம் செலுத்துவது ......
செல்வராகவனை போலவே இவரும் ஹாரிசை பிரிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றம் .....செல்வராகவனை போலவே இவரும் காதலை விட்டு அடுத்த பரிணாமத்திற்கு போக வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம் ........தனுஷ் , சூர்யா இருவரும் நடிப்பில் தேறி இருப்பது இவர்களின் ஆளுமை .........நிச்சயம் இவர்களின் அடுத்த படங்களிடம் உள்ள எதிர்பார்ப்பு என்றுமே நீங்காது ..........
லேபிள்கள்:
கட்டுரை,
சினிமா,
திரை விமர்சனம்
8 July 2010
இராவணன் விமர்சனம்
இராவணன் பெயரிலியே இராமாயண கதை தான் என்றாலும் மணி படம் என்பதால் எதிர்பார்ப்புடன் சென்றேன். மகாபாரதத்தில் இருந்து தளபதி, சத்யவான் சாவித்திரியில் இருந்து ரோஜா என எடுத்திருந்தாலும் அவர் சொன்ன விதத்தில் நேர்த்தியும் , தரமும் இருக்கும் . ஆனால் மற்றபடங்களை போல இல்லாமல் இதில் நேரடியாக கதை சொல்வதில் சுவாரசியம் குறைகிறது ...
படத்தின் முதல் காட்சியிலயே தேவ் ( பிரிதிவிராஜ் ) மனைவி ராகினியை ( ஐஸ்வர்யா ராய் ) வீரா ( விக்ரம் ) கடத்தி விடுகிறார் . விறுவிறுப்பாக ஆரம்பம் ஆகும் படம் சிறிது நேரத்திலயே மந்தம் ஆகி விடுகிறது ... எஸ்பி தேவை பழி தீர்க்க அவர் மனைவியை கடத்தும் விக்ரம் அவள் அழகில் மயங்குவது அமெச்சூர் தனம்....
வழக்கம் போல விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். இருந்தும் அவர் பாத்திர படைப்பு நன்றாக இல்லை... படம் முழுவதும் ஐஸ்வர்யா ராய் குழப்பமாக இருக்கிறார் அவர் கேரக்டர் போல... நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் கச்சிதம்... பிரபு, பிரிதிவிராஜ் , ப்ரியாமணி அனைவரும் பொருத்தமாக இருக்கிறார்கள்....
படப்பிடிப்பு தளமும் அதை படம் பிடித்த விதமும் அற்புதம் . கிளைமாக்ஸ் சண்டை மனதில் நிற்கிறது.. . இசைப்புயல் பின்னணி இசையில் ஏமாற்றி விட்டார்... வசனமும் கிளைமாக்ஸ் தவிர மற்ற இடங்களில் மேம்போக்காக இருக்கிறது....
கார்த்திக்கை அனுமார் போல மரத்திற்கு மரம் தாவ விட்டதை தவிர்த்திருக்கலாம் . முன்னா விபீஷணன் போல தூது போகிறார். பிரபு கும்பகர்ணன் ப்ரியாமணி சூர்பனகை என நான் சொல்ல தேவை இல்லை...நேர்த்தியாக எடுத்திருந்தாலும் பழக்கப்பட்ட கதை என்பதால் சலிப்பு தட்டுகிறது....
வழக்கமாக மணி படத்தில் வரும் துறுதுறுப்பான காட்சிகள் இதில் இல்லாதது ஏமாற்றம். காட்சிகளில் போதுமான ஆளுமையும் , ஆழமும் இல்லை... இராமாயண கதையை புது கோணத்தில் பார்த்திருந்தாலும் புதுமையாக எடுக்காததால் படம் மனதில் பதியவில்லை...எவ்வளவு குறை இருந்தாலும் டெக்னிகல் விசயங்களில் மணி படம் ஒரு அனுபவம் என்பதை மறுப்பதற்கு இல்லை .அனந்து,ராவணன்,விக்ரம்,
லேபிள்கள்:
ravanan film review,
அனந்து,
திரைவிமர்சனம்,
ராவணன்,
விக்ரம்
29 June 2010
புதிதாய் பிறப்போம்
தொலைந்த என்னை தேடுகிறேன்
நீ கொடுத்த உன்திருமண அழைப்பிதழில்
தீண்டாமை பெருங்குற்றம்
இங்குள்ளவர்கள் தவறாக புரிந்து
கொண்டார்கள்
விளைவு aids
பிரம்மாவிற்கு ஏன்
கோவில் இல்லை என்று
வருத்தப்பட்டேன் உன்னை
பார்த்த பிறகு
காதல் ரோஜாவை பறிக்க
கைகள் நீட்டினேன்
மிஞ்சியது
முகத்தில் தாடி முட்கள்
அடுத்த பிறவியில் எனக்கு
நம்பிக்கை இல்லை
எனவே தினமும்
புதிதாய் பிறப்போம்
லேபிள்கள்:
அனந்துவின் கவிதைகள்,
ஐக்கூக்கள்,
கவிதை,
காதல்
14 June 2010
twenty20
அப்பாடா ஒரு வழியா நம்ம பசங்க ட்வென்டி ௨0 யா வின் பண்ணிட்டாங்க . ரெண்டு மட்ச்ளையும் கன்வின்சிங் விக்டரி , யூசுப் பதான் கடைசியில போன மேட்ச் நல்ல அடிச்சு MAN ஒப் தி மேட்ச் வாங்கினது சந்தோசம் ஆனாலும் இப்ப அவர் ஆசியா கப் ஓன் டே டீம்ல இல்ல .இதே போல அவர் அதிரடியா அடிச்சா டீம்ல சீக்கிரம் வந்திடுவார் .யுவராஜ் சிங்கிற்கும் இது நல்ல பிரேக் அவர் POSITIVA இருந்தா சீக்கிரம் டீம் உள்ள வந்துரல்லாம் ஏன்னா அவர் சேவை வேர்ல்ட் கப்புக்கு தேவை . ஆனா இந்த மீடியாவும் கொஞ்சம் ஓவரா தான் போறாங்க . ஆசியா கப் டீம் செலக்ட் பண்ணும் போது யுவராஜ் பேஷன் ஷோ ல இருந்தாரம் . ஏம்ம்பா டீம் செலக்ட் பண்ணும் போது இவர் ஏன்னா பண்ண என்னப்பா மட்ச்ல என்னா பண்றாருன்னு தானே பாக்கணும்
இவரு நல்ல அடுணா ஓவரா எத்தறதும் இல்லேன்னா ஒரேதடிய போட்டு தாக்கருதும் ரொம்ப ஓவர் . கொஞ்சம் அவர ப்ரீய விடுங்கப்பா .
மீடியாவுக்கு ஒன்னு குண்டு வெடிக்கனும் இல்லேன்னா யாரையவுது சிண்டு முடியனும் அவங்களுக்கும் ஏதாவது நியூஸ் வேணுமுல்ல.
அதுவும் இந்த இங்கிலீஷ் நியூஸ் சேனல்ல மொத்தமா சேந்து கதர்த எப்பதான் நிறுத்த போராங்களோ தாங்கலட சாமி
கடைசியா ஆசியா கப் வின் பண்றதுக்கு நம்ம டீம்க்கு ஒரு ஆல் தி பெஸ்ட்
இவரு நல்ல அடுணா ஓவரா எத்தறதும் இல்லேன்னா ஒரேதடிய போட்டு தாக்கருதும் ரொம்ப ஓவர் . கொஞ்சம் அவர ப்ரீய விடுங்கப்பா .
மீடியாவுக்கு ஒன்னு குண்டு வெடிக்கனும் இல்லேன்னா யாரையவுது சிண்டு முடியனும் அவங்களுக்கும் ஏதாவது நியூஸ் வேணுமுல்ல.
அதுவும் இந்த இங்கிலீஷ் நியூஸ் சேனல்ல மொத்தமா சேந்து கதர்த எப்பதான் நிறுத்த போராங்களோ தாங்கலட சாமி
கடைசியா ஆசியா கப் வின் பண்றதுக்கு நம்ம டீம்க்கு ஒரு ஆல் தி பெஸ்ட்
லேபிள்கள்:
விளையாட்டு கிரிக்கெட் டாக்
28 May 2010
கோரிபாளையம் விமர்சனம்
கோரிபாளையம் விளம்பரத பாத்து நல்ல இருக்கும்னு நம்பி போனேன் தாங்க முடியல . பத்து மெகா சீரியல் ஒன்னா patha மாதிரி ஒரே aலுவாட்சி,இன்னும் எத்தன நாளைக்குதான் மதுரைல நாலு வேலைவெட்டி இல்லாத பசங்க அவங்களுக்கு வர ப்ரட்சைனணு கதை சொல்லுவங்களோ?
நாலு பெரைபதியும் டைரக்டர் இன்றோ கொடுக்கும் போதே முடிவு பண்ணிட்டேன் இது அவரதில்லைன்னு. இவங்க பேசுற மதுரை பாசை கூட ரொம்ப sஎயயர்கைய இருக்கு.நாலு பெரும் நல்ல கஞ்ச குடிக்குரங்க, சண்ட போடுறாங்க அலுவுரங்க, சப்பூடுரங்க இதையே இன்டர்வெல் வரையும் போட்ட என்ன தான் பண்றது . அதுக்கு அப்புறம் ஒவ்வர்த்தனா சாவுரங்க வில்லன sஅகடிக்குரங்க நம்மளையும் சேர்த்து தான் .
என்னடா இதனை நேரமா கதைய பத்தி சொல்லையே நு பாக்கறிங்கள இருந்தா நாங்க சொல்ல மாட்டமா. ஓருல பெரிய மனுஷன் அதாங்க நம்ம வில்லன் அவன் தங்கச்சிக்கும் நம்ம ஹீரோவுக்கும் தொடர்பு இர்ருக்குனு நெனைச்சு நம்ம வில்லன் அவல கொன்னுர்ரன் இவனுகளுயும் கொள்ள சொல்ளிர்ரன் அதுக்கப்புறம் இவனுக மாறி மாறி சாவுறானுங்க .கடைசில படம் முடிஞ்சு வீட்டுக்கு போய் குளிச்சுட்டு தான் சாப்பிட்டேன் . அவ்வளவு எளவு , தாங்கலட சாமி
படத்துல ஒரே ஆறுதல் சிங்கம் புலியோட பேச்சு , விக்ரான்தொட வீச்சு , ஆக மொத்தம் என் நேரமும் பணமும் வீனா போச்சு .
நாலு பெரைபதியும் டைரக்டர் இன்றோ கொடுக்கும் போதே முடிவு பண்ணிட்டேன் இது அவரதில்லைன்னு. இவங்க பேசுற மதுரை பாசை கூட ரொம்ப sஎயயர்கைய இருக்கு.நாலு பெரும் நல்ல கஞ்ச குடிக்குரங்க, சண்ட போடுறாங்க அலுவுரங்க, சப்பூடுரங்க இதையே இன்டர்வெல் வரையும் போட்ட என்ன தான் பண்றது . அதுக்கு அப்புறம் ஒவ்வர்த்தனா சாவுரங்க வில்லன sஅகடிக்குரங்க நம்மளையும் சேர்த்து தான் .
என்னடா இதனை நேரமா கதைய பத்தி சொல்லையே நு பாக்கறிங்கள இருந்தா நாங்க சொல்ல மாட்டமா. ஓருல பெரிய மனுஷன் அதாங்க நம்ம வில்லன் அவன் தங்கச்சிக்கும் நம்ம ஹீரோவுக்கும் தொடர்பு இர்ருக்குனு நெனைச்சு நம்ம வில்லன் அவல கொன்னுர்ரன் இவனுகளுயும் கொள்ள சொல்ளிர்ரன் அதுக்கப்புறம் இவனுக மாறி மாறி சாவுறானுங்க .கடைசில படம் முடிஞ்சு வீட்டுக்கு போய் குளிச்சுட்டு தான் சாப்பிட்டேன் . அவ்வளவு எளவு , தாங்கலட சாமி
படத்துல ஒரே ஆறுதல் சிங்கம் புலியோட பேச்சு , விக்ரான்தொட வீச்சு , ஆக மொத்தம் என் நேரமும் பணமும் வீனா போச்சு .
Subscribe to:
Posts (Atom)