29 December 2014

மீகாமன் - MEAGHAMANN - ஒன் மேன் ஆர்மி ..


மேக்கிங் ஸ்டைலில் தனது முதல் இரண்டு படங்களையுமே கவனிக்க வைத்தவர் மகிழ்திருமேனி . அவரது பெயரைப் போலவே இந்த படத்திலும் கவித்துவமான தமிழ்தலைப்புடன் மாஸ் ஹீரோ ஆர்யாவுடன் முதன் முறையாக கை கோர்த்திருக்கிறார் . படம்  வழக்கமான அண்டர் காப் ஸ்டோரி தான் என்றாலும் திரைக்கதை மூலம் ஏன் , எதற்கு , எப்படி என்று ஆடியன்சை யோசிக்க வைத்து படத்துடன் ஒன்ற வைக்கிறார் ...

அண்டர்க்ரவுண்ட் டான் ஜோதி யை பிடிப்பதற்காக நான்கு வருடங்கள் அந்த க்ரூப்பிலேயே இருக்கிறான் சிவா ( ஆர்யா ) . இந்த ஆப்பரேஷனில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு காப் நண்பன் ( ரமணா ) கொல்லப்பட , இவனும் பிடிபட , சிவா முயற்சியை கைவிட்டானா அல்லது அதிகமாக யாரும் பார்த்திராத ஜோதியை பிடித்தானா என்பதை இடைவேளை வரை விறு விறு , பின்னர் கொஞ்சம் வழ வழ ( உபயம் ஹீரோயின் ஹன்சிகா ) என்று இழுத்து முடித்திருக்கிறார்கள் ...

ஆர்யாவுக்கு அல்டிமேட் கேரக்டர் . மனுஷன் அலட்டிக் கொள்ளாமல் ஹீரோயிசம் செய்கிறார் . படம் முழுக்க உம்மென்று இருந்தாலும் ஹன்சிகாவை ஓட்டும்  காட்சிகளில் மட்டும் சிரித்து கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார் . ஹன்சிகா படத்திற்கு தேவையில்லாதது போல பட்டாலும் அவருடைய கேரெக்டர் ஸ்கெட்ச் ரசிக்கும் படியாகவே இருக்கிறது . குறிப்பாக இவர் தோழியுடன் சண்டை போட்டுக் கொள்ளும் சீன்கள் க்யூட் . ஆனாலும் இடைவேளைக்கு பிறகு நடு நடுவே வந்து பொறுமையை சோதிக்கிறார் . ஹீரோவின் நண்பனாக வரும் ரமணா சில சீன்கள் வந்தாலும் கவனிக்க வைக்கிறார் . இவர்களை  தவிர்த்து படத்தில் வில்லன் உட்பட காஸ்டிங் சறுக்கல் . தமனின் பின்னணி இசை தனியாக தெரிகிறது . " ஏனிங்கு  வந்தாய் " பாடல் காதல் தாலாட்டு . சதிஸ் குமாரின் ஒளிப்பதிவு துல்லியம் ...


முதலில் குழப்புவது போல இருந்தாலும் மெயின் ப்ளாட் தெரிந்தவுடன் நம்மை ஐக்கியமாக்கி விடுகிறது படம் . நிறைய கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் கதை ஆர்யாவை சுற்றியே வருவது ஆறுதல் . இடைவேளைக்கு முன் வரும் ஆக்சன் சீன்கள் நிச்சயம் நீண்ட நாட்கள் பேசப்படும் . முதல் பாதியில் கிடைக்கும்  விறுவிறுப்பு , வன்முறை தூக்கலாக இருந்தாலும் உறுத்தாமல் எடுத்த விதம் , வாட் நெக்ஸ்ட் என்கிற விதத்தில் நம்மை ஒன்ற வைக்கும் திரைக்கதை , காதலுக்கு கொடுத்த ப்ராக்டிகல் டச் போன்றவற்றால் மீகாமன் மெச்சூர்டாக தெரிகிறான் ...

ஓரளவுக்கு ரியலிஷ்டிக்காக போகும் படத்தில் திருஷ்டிப் பொட்டு  போல க்ளைமேக்ஸ் சண்டை , ஆடு புலி ஆட்டத்தில் நம்மை கவராத வில்லன் , ஸ்பீட் பிரேக்கர் போல வரும் காதல் சீன்கள் போன்றவற்றால் கப்பல் தள்ளாடாமல் இருந்திருந்தால் மீகாமன் நிச்சயம் கேப்டனாக இருந்திருப்பான் . மற்றபடி மாலுமிகள்  இல்லாமல் தனியாக ஆடியிருக்கும் மீகாமன் - ஒன் மேன் ஆர்மி ..

ஸ்கோர் கார்ட் : 43 


3 December 2014

காவியத்தலைவன் - KAAVIYATHALAIVAN - கவனிக்க வைப்பான் ...


12 வருடங்களில் ஐந்தே படங்கள் மட்டுமே  ஒரு இயக்குனர் எடுத்திருக்கிறார் என்பதே ஒவ்வொரு படத்துக்கும் அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தையை சொல்லாமல் சொல்லும் . ஆனாலும் அந்த சிரத்தை மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்திவிடும் என்று சொல்வதற்கில்லை . இப்படி சில வரிகளில் வசந்தபாலன் இயக்கத்தில் வந்திருக்கும் காவியத்தலைவன் படத்தைப் பற்றி சொன்னாலும் சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்தின் நாடக  உலக மாந்தர்களை நம் கண்முன் உலவவிட்ட முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும் ...

1930 களில் தமிழகத்தின் பிரபலமான நாடக குரு சங்கரதாச சாமிகளின்  (நாசர் ) பிரதான சிஷ்யர்கள் காளியப்பா பாகவதர் ( சித்தார்த் ) மற்றும் கோமதி நாயகம் பிள்ளை ( ப்ரித்விராஜ் ) இருவருக்குமிடையேயான வாழ்க்கைப் பயணத்தை விவரிப்பதே காவியத்தலைவன் ...

சித்தார்த்திற்கு இது அதிகப்படியான கதாபாத்திரம் தான் . ஆனாலும் தனது அலட்டிக் கொள்ளாத நடிப்பால் குறைகளை மறைக்கிறார் . காதலியின் சாவுக்கு பிறகு நாசருக்கு சாபம் விடும் இடத்தில் சிலிர்க்க வைக்கிறார் . குறும்பு சித்தார்த் கவர்ந்த அளவிற்கு தேசபக்தி பேசும் சீரியஸ் சித்தார்த் கவரவில்லை . இவரை ஒருதலையாக காதலிக்கும் வடிவாம்பாள் கதாபாத்திரத்தில் வரும் வேதிகாவின் நடிப்பு யதார்த்தம் ...

காளியப்பாவை காதலித்து பின் காலாவதியாகும் இளவரசி ரங்கம்மா
( அனிக்கா ) அட போங்கப்பா ரகம் . குரு வேஷத்தில் நாசர் நச் . தம்பி ராமையா அறிமுக பாடல் காட்சியில்  ஓவர் ஆக்டிங் செய்து  பயமுறுத்தினாலும் போகப் போக பழகி விடுகிறார் . ஆள் இல்லாவிட்டால் அதட்டுவதும் , ஆளைப் பார்த்தவுடன் பம்முவதுமாக மயக்கும் மேனரிஷத்தில் மன்சூர் அலிகான் ...


தன்னை விடுத்து சித்தார்த்தை குரு பாராட்டுமிடத்தில் ஆரம்பித்து கடைசியில் நீ இல்லேன்னா தான் எனக்கு நிம்மதி என்று  சித்தார்த்திடம் பொறுமும் க்ளைமேக்ஸ் சீன் வரை இந்த ப்ரித்வி பிள்ளைவாள் நடிப்பு ராஜ்ஜியம் நடத்துகிறார் . தான் எந்த விதத்தில் அவனை விட குறைந்து விட்டோம் என்று குருவிடம் காட்டும் ஆதங்கமாகட்டும் , காதல் விவகாரத்தில் காளியப்பாவின் இமேஜை காலி செய்து விட்டு ஒன்றுமே  தெரியாத அப்பாவியாய் நிற்பதிலாகட்டும் , வடிவு தனக்கில்லை  என்று தெரிந்தவுடன் காட்டும் ஏக்கத்திலாகட்டும் , கடைசியில் சித்தார்த்த் பற்றிய உண்மை தெரியவரும் போது வந்து மறையும் குற்ற உணர்ச்சியிலாகட்டும் மனதை கிறங்கடிக்கும் இந்த  மலையாளத்தான் தான் இந்த காவியத்தின் உண்மையான தலைவன் ...

" சண்டி குதிரை " , " சொல்லி விடு " பாடல்களில் கவரும் இசைப்புயல் பின்னணி இசையில் ( காலகட்டம் கொஞ்சம் நெருடினாலும் ) பின்னியெடுக்கிறார் . குறிப்பாக நாசருக்கு முன் ப்ரித்விராஜ் , சித்தார்த் இருவரும் நடித்துக் காட்டும் இடத்தில் வசனங்களை மீறி இவரது  இசையே ஆளுமை செய்கிறது  . 30 களில் நடக்கும் கதைக்காக ஜெயமோகன் பெரிதாக எதுவும் மெனக்கெடவில்லை என்கிற குறை இருந்தாலும் சித்தார்த் - ப்ரித்விராஜ் இடையேயான க்ளைமேக்ஸ் வசனங்கள் படத்திற்கு பலம் . ஆனாலும் செலம்பாதே போன்ற வசனங்கள் என்ன சாரே ?!...


பொன்வண்ணனின் நடிப்பைப் பார்த்து விட்டு பேசிக்கொள்ளும் ஒரு சீனிலேயே காளியப்பா , கோமதி என்கிற இரு கதாபாத்திரங்களின் அவுட்லைனை விளக்கி விடுகிறார் வசந்தபாலன் . அதே போல கோமதிக்கு காளியப்பா மேல் காண்டு வளர்வதற்கு இவர் வைத்திருக்கும் சீன்களிலும் அதே சாமர்த்தியம் தொடர்கிறது . ஆனால் ப்ரித்விராஜ் மேல் சித்தார்த் வைத்திருக்கும் மதிப்பு , மரியாதையை பெரிதாக காட்சிப்படுத்தாமல் வெறும் வசனங்களை மட்டும் வசந்தபாலன் நம்பியது துரதிருஷ்டம் . அதிலும் க்ளைமேக்ஸ் சீன் ஆடுகளத்தை நினைவு படுத்துகிறது ...

கதைக்களன் நாடக காலகட்டம் என்பதால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக தனி ட்ராக் எல்லாம் போகாமல் முக்கியமான கதாபாத்திரங்களை வைத்தே அதை முடிந்த அளவு சொல்லியிருப்பது டைரக்டர் டச் . அதே சமயம் இருவரின் ஈகோ பிரச்னை தான் கதை என்னும் போது எதற்கு பீரியட் படம் என்ற கேள்வியும் எழாமல் இல்லை . நாசரிடம் அடி வாங்கி விட்டு ப்ரித்விராஜின் மடியில் சித்தார்த் சாயும் இடத்தில் இந்த பிரச்சனைக்கு மூலகாரணமான ப்ரித்விராஜுக்கு ஒரு க்ளோஸ் அப் வைத்திருந்தால் அந்த சீன்  இன்னும் நிறைவாக இருந்திருக்கும் ...

சித்தார்த்துக்கு வரும் செலெக்டிவ் தேசபக்தி , எவ்வித அழுத்தமும் இல்லாத சித்தார்த் - இளவரசி காதல் , மனதை பெரிதும் கவராத சில மேடை நாடக பாடல் காட்சிகள் போன்றவையும் காவியத்தலைவனின்  காலை வாறுகின்றன . இது போன்ற குறைகளை கொஞ்சம் தவிர்த்து விட்டு பார்த்தால்  கொரியன் படங்களை சுடாமல் , மாடர்ன் மசாலாக்களில் இருந்தும்  மாறுபட்டு நம்மை அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்ற வித்தத்தில் இந்த காவியத்தலைவன் நம்மை ஆளா விட்டாலும் கவனிக்க வைப்பான் ... 

ஸ்கோர் கார்ட் : 43

28 November 2014

மதுரை பசங்க - MADURA GUYS ...


சொந்த ஊர் மதுரைக்கு சென்று இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும் . இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லூரி நண்பன் பத்ரி வாட்ஸ் ஆப்பில் மதுரை கல்லூரி பி.காம் க்ளாஸ் மேட்ஸ் அனைவருக்காகவும் ஒரு க்ரூப்பை ஏற்படுத்தியிருந்தான் . அதில் வெட்டியாக அளவளாவிக் கொண்டிருந்த போது திடீரென ஒருநாள் அனைவரும் ஏன் மதுரையில்  மீட் செய்யக்  கூடாது என்று அவனே திரியை கிள்ளிப்போட அதுவே பற்றியெரிந்து நவம்பர் மாதம் மதுரையில் கெட் டுகெதர் என்று முடிவானது . நண்பர்கள் சிலருடன் ஏற்கனவே தொடர்பிலிருந்தாலும் பி.காம் முடித்து பதினைந்து வருடங்கள் கழித்து எங்கள் செட்டில் உள்ள அனைத்து நண்பர்களும் ஒரே இடத்தில் அதுவும் மதுரையில் மீட் செய்யப் போகிறோம் என்று நினைக்கும்போதே மனசு ஏனோ மலரும் நினைவுகளுக்குள் போனது  ...

மதுரை கல்லூரியை என்னால் மறக்கவே முடியாது.  மூன்று வருடங்கள் அங்கே படித்தேன் என்பதை விட நண்பர்களுடன் சேர்ந்து நிறைய லூட்டி அடித்தேன் என்பதே நிஜம். வேறு வேறு பள்ளிகளில்  படித்ததாலோ என்னவோ எனக்கு பள்ளி நாட்களில் பள்ளி நண்பர்களை விட ஏரியா நண்பர்களே அதிகம் . ஏரியா நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதற ஆரம்பிக்கும் போது  தான் நான் கல்லூரியில் முதல் வருடம் காலடி எடுத்து வைத்தேன் . மதுரை கல்லூரி ரெகுலரில் கண்டிப்பாக சீட் கிடைக்கும் என்று தெரிந்தும் அப்பாவுக்கு தெரியாமல் அப்ளிக்கேஷனை கிழித்துப் போட்டதற்கு காரணம் ஈவினிங் காலேஜ் கோ - எட் என்பது மட்டுமே . அதோடு அண்ணன்கள் இருவரும் ரெகுலரில் படித்திருந்தாலும்  ஈவினிங் காலேஜில் படித்துக் கொண்டிருந்த என் அத்தை பெண் ( ரெண்டு வருடம் சீனியருங்க ) காலேஜ் பற்றி கொடுத்திருந்த பில்ட் அப் மனதை பட்டாம்பூச்சி போல பறக்க வைத்திருந்தது ...

ஆண்கள் பள்ளியிலேயே படித்ததாலோ என்னவோ சில சுமாரன பெண்கள் கூட சூப்பராகவே தெரிந்தார்கள் . ஆனால் அதற்கும் இருந்த போட்டி இருக்கிறதே அடடடடா !. முதல் பெஞ்சில்  உட்காருபவனெல்லாம் மூளைக்காரன் என்று நினைப்பார்கள் என்கிற நினைப்பில் அமர்ந்திருந்த என் நம்பிக்கை வீண் போகவில்லை . யார் செட் ஆவார்கள் என்கிற டவுட்டில் இருந்த என்னிடமே சிலர் டவுட் கேட்டார்கள் . முதல் பெஞ்சை விட கடைசி  பெஞ்சே கவனிக்க வைக்கும் என எனக்கு போகப் போக புரிந்தது . கடைசி பெஞ்சில் இருந்து மொக்கை கேள்வி கேட்டால் கூட கிளாசே திரும்பிப் பார்க்கும் . முதலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆர்வமாக பதில் சொன்ன வாத்தியார்கள் எங்களின்  உள்நோக்கம் புரிந்த பிறகு நாங்கள் இருக்குமிடம் வந்தே பதில் சொன்னார்கள்...

பிறகு அதுவும் குறைந்து எங்களின் கேள்விகளுக்கு வகுப்பறைக்கு வெளியே விடை தேடிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் . அந்த டீலிங் ரொம்பவே பிடித்திருந்ததால் வெறும் அட்டன்டென்சில் சைன் செய்து விட்டு கேலரியில் எங்கள் வாழ்க்கைப் பாடத்தை படித்துக் கொண்டிருந்தோம் . ஆனாலும் கட்டடிக்கும் எங்கள் க்ரூப்பில் முக்கால் வாசி பேர் ஆங்கிலம் மற்றும் புள்ளியியல் வகுப்புகளுக்கு மட்டும் கடலோர கவிதைகள் சத்யராஜ் போல முகத்தை வைத்துக் கொண்டு ஆஜராகி விடுவோம் . அது  ஏனென்று சொல்லாமலேயே புரியும் என்று நினைக்கிறேன் . என்னைப் போலல்லாமல் கோ எட்டில் படித்திருந்த மாணவ மாணவிகளிடமுமே கூட ஒருவித இறுக்கம் இருந்தது . முதல் வருட முடிவில் அந்த இறுக்கம் தளர்ந்ததை நன்றாகவே உணர முடிந்தது ...

முதல் வருடம் நண்பன் சேஷனுக்கு அவன் ஆளை சைட் அடிக்க மாட்டேன் என்று செய்து கொடுத்திருந்த  சத்தியத்தை சாயங்கால காலேஜ் என்பதால் சில சமயங்களில் மீறியிருந்தாலும் படித்த மூன்று வருடங்களில் முடிந்தவரை காப்பாற்றினேன் என்றே சொல்லலாம். அவனுக்கு பெண்கள் மத்தியில் க்ரேஸ் இருந்தாலும் ( மச்சி இதுக்கெல்லாம் அழக் கூடாது சரியா ! ) ஏனோ ஒரே பெண்ணையே கடைசி வரை காதலித்தான் . எங்கள் செட்டை  தவிர்த்து கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்கிற ஆர்வத்தை அதிகம் கொடுத்தது கல்சுரல்ஸ் . அதற்கான தாகத்தை என்னுள் விதைத்து நண்பன் மைக் மது . பி.எஸ்.சி யில் படித்தாலும் எங்கள் பிகாம் செட்டுடனேயே அதிகம் சுற்றியவன் . ரஜினி , கமல் , ரகுவரன் என்று நிறைய குரல்களில் அசால்டாக மிமிக்ரி செய்து எல்லா போட்டிகளிலும் அப்லாசோடு சேர்த்து கப்சையும் அள்ளுபவன் . கெஸ்ட் ப்ளேயராக எங்கள் டீமில் கிரிக்கெட் ஆட வந்து எங்களையே கெஸ்ட்களாக மாற்றியவன் ,..

இரண்டாம் வருடத்திலிருந்து மதுரை மட்டுமல்லாமல் திருச்சி , பாண்டி , கோவை என எல்லா யுனிவர்சிட்டி லெவல் போட்டிகளிலும் பதக்கங்களோடு  சேர்த்து பணமும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால் நான் , சேஷன் , மது , தோசை ( மற்றொரு பி.எஸ்.சி நண்பன் ) அனைவரும் க்ளாசை மறந்து கல்சுரல் அறையிலேயே கதியென கிடப்போம் . இப்படி ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்த அந்த சின்ன  கேப்பில் நண்பன் ரம்மி ரெகுலர் காலேஜ்  பெண்ணை காதலித்து கல்யாணம் முடிக்கும் அளவிற்கு பெரிய ஆட்டமே  ஆடி முடித்திருந்தான் . வெளியில் முரட்டுத் தோற்றத்தில் இருந்தாலும் நட்புக்காக எதையும் செய்யக் கூடியவன் ரமேஷ் எ ரம்மி ...

எங்கள் கல்சுரல் செட் ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பாக  ஃபாத்திமா காலேஜ் பெண்களின் நட்பு கிடைத்த பிறகு வேறொரு உலகத்தில் பிரயாணிக்கத் தொடங்கியிருந்தோம் . நான் , மது , தோசை மூவருக்கும் ஆல் இந்தியா கல்ச்சுரல் மீட்டிற்காக டிசம்பரில் சென்ற ஹைதராபாத் பயணம் இன்று வரை மறக்க முடியாத அனுபவமாக இருக்குமென்றே நம்புகிறேன் . ஏனெனில் அப்போது தான்  ஃபாத்திமா காலேஜ் பெண்களின் நட்பு கிடைத்தது . தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த பயணம் பெண்களைப் பற்றிய சரியான புரிதலைக் கொடுத்தது . காமம் மட்டும் சார்ந்த குறுகிய வட்டத்திலிருந்து விலகி பெரிய விசாலமான பார்வையை கொடுத்தது . இன்று அதில் ஒரு பெண்ணை தவிர வேறு யாருடனும் எனக்கு தொடர்பில்லா  விட்டாலும்  உலகில் எங்கோ ஒரு மூலையில் இதே போன்றதொறு நினைவில் அவர்கள் வாழ்ந்து  கொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன் ...

கோபுவை காரணம் காட்டி நான் , ரம்மி , சேஷன் மூவரும் காலேஜுக்கு எதிராக நடத்திய  ஸ்ட்ரைக் ( இந்த விஷயத்தில் ஜூனியர்கள் கொடுத்த ஒத்துழைப்பு அபாரம்  ) , கல்சுரலுக்கு போனோமா , காசு பாத்தாமோ என்று இல்லாமல் பாண்டியில் லோக்கல் ஆட்களுடன் நாங்கள் கூட்டிய பஞ்சாயத்து , அந்த பஞ்சாயத்துக்காக பயந்து ஊருக்கு வராமல் அடுத்த நாள் " இவர்கள் சந்தித்தால் " போட்டியில் நானும் சேஷனும் ஜெயித்தது , வேலியில்  போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக லவ் லெட்டெர் எழுதிக் கொடுக்க வந்தவன் லவ்வரையே உஷார் செய்தது ( மச்சி குடும்பத்துக்குள்ள குழப்பம் வேணான்னு பேர் போடல ) , சிவகாசியில் எங்கள் கல்லூரி எல்லா கப்புகளையும் வென்றதோடு எனக்கு மேன் ஆ ஃப் தி சீரியஸ் கிடைத்தது , திருச்சி யில் கவிதைப் போட்டிக்கான முதல் பரிசை கணையாழி ஆசிரியர் ஞானக்கூத்தன் கைகளால் வாங்கியது , பத்ரி பிறந்தநாள் பார்ட்டிக்கு சரக்கடித்து விட்டு க்ளாசுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்தது என்று எல்லாமே மறக்க முடியாத நினைவுகள் . இன்று வேலை , குடும்பம் என்று எல்லோரும் பிரிந்திருந்தாலும் கல்லூரியை பற்றிய நினைவுகள் எங்களை பாலமாக இன்னும் இணைத்துக் கொண்டு தானிருக்கிறது ...

இந்த பதிவை எங்கள் கெட் டுகதெருக்கு ப்ளான் போட்டுக் கொடுத்த பத்ரி , அதற்கு செயல் வடிவம் கொடுத்த துபாய் கார்த்தி , மாப்பிளை அழைப்புக்கு கூப்புடும் பொண்ணு வீட்டுக்காரன் போல முதல் நாளே மதுரையில் டேரா போட்டு நண்பர்களுக்கு தண்ணியாக  அல்லாமல் தண்ணிக்காக மட்டும் பணத்தை செலவு செய்த கட்டிங் ( என்ன பெயர் பொருத்தம் ) ,  150 ரூபாய் ப ஃபே வில்  ஒரே ஒரு இட்லி மட்டும் தின்ற சவூதி ஷேக் சபரி , தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடாமல் காரியத்தில் மட்டும் கண்ணாயிருந்து ஆ ஃப் பாட்டிலை சைலெண்டாக காலி செய்த சேஷன் , சரக்கடிக்கா விட்டாலும் பில்லை பார்த்தாலே  போதையேறும் அளவிற்கு சைட் டிஸ்ஷை ஆர்டர் செய்யும் கோபால் , நட்பிற்காக நிறைய  வருடம் கழித்து தீர்த்தா ஸ்நானம் செய்து கொண்ட யோகி , நீங்க அடுத்து கோவாவுக்கு போவீங்களோ , குவைத்துக்கு போவீங்களோ  , யாரு ஸ்பான்சருன்னு முடிவு பண்ணிக்குங்க என்று கார்த்திக் , கட்டிங் இருவருக்கும் வயிற்றை  கழங்க வைத்த ரம்மி மற்றும் கெட் டுகதெருக்கு வந்திருந்த , வராத அனைத்து மதுரை கல்லூரி நண்பர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் ...


24 October 2014

கத்தி - KATHTHI - ஷார்ப் ...


துப்பாக்கி வெற்றியை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டுமொரு தீபாவளி ரிலீஸில் இணைந்திருக்கிறார்கள் விஜயும் , ஏஆர்.முருகதாசும் . கதைக்காக கத்தி மேலெல்லாம் நடக்காமல கல் தோன்றா மண் தோன்றா காலத்து டபுள் ஹீரோ ஆள்மாறாட்ட கத்திக்கு சோசியல்
மெஸேஜ் என்னும் சானை பிடித்து பளபளப்பாக்கியிருக்கிறார்கள் ...

கொல்கொத்தா ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கைதி கதிரேசன் (எ) கத்தி
( மேக்கப் போட்ட விஜய் ) , தன்னூத்து கிராமத்தை கார்ப்பரேட் குளிர்பான கம்பெனியின் நில ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற நினைக்கும் ஜீவானந்தம்
( மேகப்பில்லாமல் எண்ணை வழியும் முக விஜய் ) இந்த இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையில் இடம் மாறுகிறார்கள் . இட மாற்றத்தால் மனம் மாறும் கத்தி தன்னூத்து கிராமத்தை எம்.என்.சி முதலாளி ( நீல் நிதின் முகேஷ் ) யிடமிருந்து காப்பாற்றினானா என்பதை கொஞ்சம் நீட்டி முழக்கினாலும் ( ரெண்டேமுக்கா மணிநேரம் ) ஃப்ரெஸ்ஸான திரைக்கதையால் திறம்பட சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

எத்தனை வேடம் போட்டாலும் கெட்டப்பில் ரிஸ்க் எடுக்கத் தயங்கும் விஜய்க்கு ஏற்றபடியான டபுள் ஹீரோ சப்ஜெக்ட் . டான்ஸ் , ஃபைட் என்று துள்ளி விளையாடியிருக்கும் கத்தி விஜய் எமோஷனல் சீன்களில் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார் . போலீசுக்கே கைதியை பிடிக்க ஸ்கெட்ச் போட்டு கொடுப்பது , ரூபாயை சுண்டி விட்டு 50 அடியாட்களை அடிப்பது , ஏரியை அபகரித்து சென்னை மக்களை ரெண்டு நாட்கள் தண்ணியில்லாமல் தவிக்க விடுவது , ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் பிரஸ் மீட்டில் புள்ளி விவரங்களை அள்ளி தெளிப்பது என்று லாஜிக் பார்க்காமல் இருந்தால் இந்த விறு விறு விஜய்யின் மேஜிக்கை நன்றாகவே ரசிக்கலாம் . ஆனாலும் ஒரு விஜய் கண்ணை மட்டும் சிமிட்டி வித்தியாசம் காட்டியிருப்பது உலக சினிமாக்களிலேயே இது தான் முதல்முறை ...


மூணு  பாட்டுக்கு விஜய்யோடு சேர்ந்து அரைகுறை ஆடையில் ஆட ஆள் வேண்டும் . அந்த வேலைக்கு சமந்தா சரியாக பொருந்துகிறார் .( இதுக்கு எத்தன கோடியோ ! ) . அதெப்படியோ  தமிழ் சினிமாவில் ஹீரோ மட்டும் யாராக இருந்தாலும் பக்கா ப்ளான் போடும் புத்திசாலியாக இருக்கிறார்கள் . ஆனால் ஹீரோயின்கள் மட்டும் லூசு போலவே சித்தரிக்கப்படுகிறார்கள் . என்று தணியும் இந்த ஆணாதிக்க மோகம் ?! . ( ஹி ஹி கொளுத்திப் போட்டாச்சு ) . சோலோ காமெடியனாக வரும் சதீசுக்கு இந்த படம் செம ப்ரேக் . ஆல் தி பெஸ்ட் ப்ரோ . வில்லன் முகேஷ் பல்லை காட்டியெல்லாம் பயமுறுத்தாமல் கூலாக நடித்து ஸ்கோர் செய்கிறார் . இவருக்கு டப்பிங் பேசியவர் சூப்பர் தேர்வு ...

அனிருத்தின் பி.ஜி.எம் சான்சே இல்ல . சாதாரண சீன்களை கூட இவருடைய இசை பிரம்மாண்டமாக்குகிறது . அஜித் படங்கள் போல விஜய்க்கும் பின்னணி இசை பேசியிருக்கிறது . " செல்பி புள்ள " தாளம் போட வைத்தால் , யேசுதாஸ் குரலில் " யார் பெற்ற " பாடல் தழுதழுக்க வைக்கிறது . ,ஆனால் வழக்கமான விஜய்யின் மாஸ பாடல்கள் இதில் மிஸ்ஸிங் . படத்தில் சண்டைக்காட்சிகளும் பிரமாதம் ...


" ஐயாயிரம் கோடி கடன் வாங்கி திரும்ப கொடுக்காதவன் தற்கொலை பண்ணிக்கல , ஆனா அஞ்சாயிரம் வாங்கின விவசாயி வட்டி கட்ட முடியாம சாகுறான் " போன்ற வசனங்கள் படத்திற்கு பெரிய பலம் . விவசாயிகள் தற்கொலையைப் பற்றி எந்த அக்கறையும் காட்டாமல் டி.ஆர்.பி க்காக மட்டும் நியூஸ் தேடி அலையும் மீடியாக்களையும் இயக்குனரின் வசனங்கள் விட்டு வைக்கவில்லை . ஆனால் அதே சமயம் 2 ஜி உட்பட எவ்வளவோ  பெரிய ஊழல்களை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நான்காம் தூண்களின்  செயல்களை மறந்து விட்டு அவற்றை வெறும் மூன்றாம் தரமாக மட்டும் சித்தரித்திருப்பதை தவிர்த்திருக்கலாம் . இன்று சிட்டியிலிருக்கும் முக்கால் வாசி பேர் கிராமத்திலிருந்து வந்து செட்டிலானவர்கள்  என்பதை தெளிவாக விட்டு  விட்டு நகரவாசிகளை வில்லன்கள் போலவும் , கிராமத்து வாசிகளை நல்லவர்கள்  போலவும் சித்தரிக்கிறது படம் ...

டபுள் ஹீரோ ஃபார்முலா கதை , பாண்டவர் பூமி உட்பட பல படங்களில் பார்த்த விவசாயிகள் பிரசசனை போன்ற குறைகளை , சொல்ல வந்த விஷயத்திற்காக இயக்குனர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்கள் மறக்கடிக்கின்றன . சின்ன ஏ.வி என்று சொல்லிவிட்டு ஜீவானந்தத்தின் முழுக் கதையையும் காட்டுவது முதலில் நெளிய வைத்தாலும் ஆறு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி நெகிழ வைக்கிறது . மொத்தத்தில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வந்திருக்கும் இந்த கத்தி கொஞ்சம் பழசாக இருந்தாலும் சொன்ன விதத்தில் நல்ல ஷார்ப் ...

ஸ்கோர் கார்ட் : 42

( பின்குறிப்பு ) : அரசியல்வாதிகள் , காவல்துறையினர் , அரசு அதிகாரிகள் , மீடியாக்கள் , ஆசிரியர்கள் , கார்பரேட்கள் என்று எல்லோரையும்  தோலுரிக்கும் நம்மூர் சினிமாக்காரர்கள் ஏன் இதுவரை சினிமாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் , வரி ஏய்ப்புகள் , அதிகார துஷ்பிரயோகங்கள்,
ஊழல்கள் , பிரபலங்களின் இருட்டு பக்கங்கள் போன்றவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களை தைரியமாக எடுக்க முன்வரவில்லை ? அப்படி எடுத்தால் நிச்சயம் அந்த படத்தை நல்ல சினிமா ரசிகர்களுக்கு சமர்ப்பணம் என்று போடலாம )


15 October 2014

தெருக்கூத்து - 5 ...


2002 கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி மோடிக்கு விசாவை மறுத்து வந்த அமெரிக்கா இப்பொழுது இந்தியாவின் பிரதமரான பிறகு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது .  பிரதமர் சென்ற இடமெல்லாம் அவருக்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பை பார்த்து அமெரிக்காவே ஆடி விட்டது என்றே சொல்லலாம் . வெறும் சாராயத்துக்கும் , பிரியாணிக்கும் இங்கே கூடும் அரசியல் கூட்டம் போலல்லாமல் ஒரு உணர்ச்சிப் பூர்வமான சந்தோஷத்தை அமரிக்க வாழ் இந்தியர்களிடம் காண முடிந்தது . அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் போட்ட ஒப்பந்தங்கள் மூலம் சீனாவுக்கு  சின்ன செக் வைத்திருக்கிறார் மோடி . காஷ்மீர் விவாகரத்தில் தலையிட முடியாது என்று ஐ.நா சொன்னதன் மூலம் மீண்டுமொருமுறை மூக்குடை பட்டிருக்கிறது பாகிஸ்தான் . இங்கே துப்பாகியால் சுட்டு விட்டு அங்கே போய் ஒப்பாரி வைப்பார்களாம் . இது தான் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதோ ?! ...

பெரிய கட்சிகளெல்லாம் தனித்தனியாக நிற்பதன் மூலம் மகாராஷ்டிரா , ஹரியானா சட்டசபை தேர்தல்கள் நன்றாகவே சூடு பிடித்திருக்கின்றன . இடைத்தேர்தலில் கிடைத்த தோல்விகள் மூலம் மோடி யின் மேஜிக் அவ்வளவு தான் என்று மற்ற கட்சிகள் சொல்லி வரும் வேளையில்  இடைத்தேர்தலை போல அல்லாமல் இந்த முறை அதிக கூட்டங்களில் மோடி ஜி பேசி வருவது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி . அதை நிரூபிப்பது போலவே தேர்தலுக்குப் பின் நடந்த சர்வேக்கள் எல்லாமே பா.ஜ.க தனிப் பெரும் கட்சியாக ஜெயித்து ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்திருக்கின்றன . இது நடக்கும் பட்சத்தில் கூடுதலாக இரண்டு மாநிலங்களை பிடிப்பதுடன்  பா.ஜ.க  வுக்கு ராஜ்யசபாவில் அதிக எம்.பி க்கள் கிடைப்பதற்கும் ஏதுவாக அமையும் . சும்மா இருந்த சிங்கத்தை சீப்பால சீவி விட்டுட்டாங்களோ ?! ...

அடுத்தடுத்து அம்மா ப்ராண்ட் பொருட்களை மலிவு விலையில் அறிவித்துக் கொண்டிருந்தவர் மேலே யாரு கண்ணு பட்டதோ ? . 18 வருடமாக இழுத்துக் கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ உட்பட நால்வரையும்  உள்ளே வைத்து விட்டார்கள் . கர்நாடகா கோர்ட்  பெயிலை  மறுத்து விட 17 ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள் கழக கண்மணிகள் . தண்டனை அங்கேயும் உறுதி செய்யப்பட்டு  விட்டால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் முதல்வரால் தேர்தலில் நிற்க முடியாது . அப்படி நடக்கும் பட்சத்தில் கட்சிக்குள் இப்போதிருக்கும்  கட்டுப்பாடு   குலைந்து கட்சியே சிதறும் அபாயம் உள்ளது . 2 ஜி வழக்கின் தீர்ப்பு வரும் போது  இதே போன்ற நிலைமை தி.மு.க வுக்கு ஏற்படாவிட்டாலும் ஏற்கனவே சரிவிலிருக்கும் கட்சி மேலும் சிதையும் . இந்த இரண்டு பிரதான கட்சிகளின் சரிவால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இப்போதைக்கு யாருமில்லை .
ஆனால் சென்ற முறை தே.மு.தி.க , பா.ம.க , ம.தி.மு.க போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்த பா.ஜ.க சரியாக காய்களை நகர்த்தினால் அடுத்த சட்டசபை தேர்தலில் நடுநிலையாளர்களையும் , அ.தி.மு.க - பா.ஜ.க இரண்டுக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருப்பவர்களையும் தங்கள் வசம் எளிதாக இழுக்கலாம் . பா.ஜ.க பாச்சா இங்கே பலிக்குமா ?! ...

நிச்சயம் பா.ஜ.க வுக்கு ஒரு வலுவான தலை தமிழகத்தில் தேவை . அதற்காக அவர்கள் சூப்பர் ஸ்டாரை இழுப்பதாகவும் , அவரும் இதற்கு ஒரளவிற்கு சம்மதித்துவிட்டார் என்பது போலவும் செய்திகள் கசிகின்றன . யார் யாரோ அரசியலுக்கு வரும் போது தனக்கென்று ஒரு பெரிய கூட்டத்தை வைத்திருக்கும் ரஜினி வருவதில் எந்த தவறுமில்லை . ஆனா தலைவரு வராரோ இல்லையோ தன்னோட ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்னாடியும் இந்த அரசியல் படத்த தவறாம ஓட விட்டுருறாரு . புலி வருமா ?!. மெட்ராஸ் , ஜீவா மாதிரி தரமான படங்கள் ஒரே நாளில் ரிலீசானதில் சந்தோசம் . ஆனால் எந்த லாஜிக்கும் இல்லாத ஆவரேஜ் படம் அரண்மனை தான் வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது . பேயே லாஜிக் இல்ல அப்புறம் எதுக்கு பேய்ப்படத்துக்கு லாஜிக்கு ன்றீங்களா ?! ....

திரிஷ்யம் படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கிறார்கள்  . மோகன்லால் ரோலில் நடிக்கும் உலக நாயகன் படத்திற்கு நிச்சயம் ஸ்டார் வால்யூவை கொடுத்தாலும் அந்த ஜார்ஜ் குட்டி என்கிற யதார்த்த நாயகனை சாகடித்து விடுவார் . கமல் பிரபு , ராஜ்கிரண் அல்லது வேறு யாரையாவது நடிக்க வைத்துவிட்டு படத் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டிருக்கலாம் என்பது எனது அபிப்ராயம் . ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிறைய பதக்கங்களை பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் ஒரு பெரிய ஓ போடுவோம் ...

மீண்டும் .கூடுவோம் ...




29 September 2014

ஒரு கைதும் சில கேள்விகளும் ...


ற்போது தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் சம்பவம் சொத்துக்குவிப்பு வழக்கில் நூறு கோடி அபராதத்துடன் நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பது . எனக்குத் தெரிந்த சில தி.மு.க அனுதாபிகள் கூட தண்டனைக்காக வருத்தப்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வகையில் கிட்டத்தட்ட 18 வருடங்கள் வழக்கை தீர விசாரித்து கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நியாயமான முறையில் தீர்ப்பு வந்திருக்கிறது என்று புத்திக்கு தெரிந்தாலும் , 91 - 96 இல் முதல் முறை முதல்வராக இருந்த போது செய்த தவறுகளுக்கு இப்பொழுது மூன்றாவது முறை முதல்வராகி மக்கள் நலத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு கட்சியினர் செய்யும் கட்டப் பஞ்சாயத்துக்களை அறவே ஒழித்து நல்ல முறையில் ஆட்சி செய்து வரும் ஒரு நபருக்கு இப்படி தண்டனை கொடுத்து விட்டார்களே என்று படபடக்கும் மனசுக்கு தெரியவில்லை ...

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வின் அசுர வளர்ச்சிக்கு பிறகு அந்த கட்சியை எதிர்த்து அனைத்து கட்சிகளும்  ஒன்று சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த கைது அ.தி.மு.க வுக்கு பேரிடி . பா.ஜ.க வுக்கு திமுக வின் தூது , நீண்ட வருடங்கள் திமுக வை தீண்டாமலிருந்த வை.கோ கலைஞர் மேல் காட்டும் திடீர் பாசம் , பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டு விஷேசத்திற்கு கலைஞருக்கு விடப்பட்ட தனிப்பட்ட அழைப்பு , அ.தி.மு.க வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டுமென்று விஜயகாந்த் விடுத்திருக்கும் அறைகூவல் இவையெல்லாம் நடந்து வருகின்ற நேரத்தில் இந்த கைது அ.தி.மு.க வுக்கு பெரிய பின்னடைவு . தனிப்பட்ட வாக்கு வங்கியை மட்டும் வைத்துப் பார்க்கும் போது  தி.மு.க வுக்கும் , அ.தி.மு.க வுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை . ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு கட்சியை வீழ்த்துவதற்காக அடுத்த கட்சிக்கு போடப்படும் ஓட்டுக்களே வெற்றி , தோல்விக்கான வித்தியாசத்தை தீர்மானிக்கின்றன . அந்த வகையில் பார்த்தால் 2016 சட்டசபைத் தேர்தலுக்கு அ.தி.மு.க மக்களுடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டியிருக்கும் ...

எதிர்பார்த்தபடியே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஓ .பி
( பன்னீர்செல்வம் ) கடந்த முறை போல இந்த முறை பவ்யமாக மட்டுமிருந்து ஓ .பி அடிக்க முடியாது . ஏனெனில் இந்த முறை அவர் கிட்டத்தட்ட 2 வருடங்கள்  ஆள வேண்டியதோடு மக்களின் நன் மதிப்பையும் பெற்று கட்சியையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் .. ஹை கோர்ட்டுக்கு அப்பீல் செய்த போதிலும் தண்டனை குறைக்கப்படுவதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளன என்கிறார்கள் சட்ட நிபுணர்கள் . ஆனால் சீனியர் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இவருக்கு ஆதரவாக வாதாடப் போவது தண்டனையை குறைக்கும என்றும் , பெயில் கிடைக்கும் என்றும்  எதிர்பார்க்கிறார்கள் அ.தி.மு.க வினர் . ஒரு வேளை ஜெ பெயிலில் தமிழ்நாட்டுக்கு வருவது கட்சிக்கு போனசாக இருந்தாலும் முதல்வர் பதவியில் அமர்வதோ , மீண்டும் போட்டியிடுவதோ அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முடியாது ...

இப்படி ஒரு இக்கட்டான நிலை வருமென்று அம்மாவே எதிர்பார்த்திருக்க மாட்டார் . இதற்கு முந்தைய 11 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டது போல இதில் முடியாமல் போனதற்கு காரணம் வழக்கின் தன்மை . மற்ற வழக்குகளில் குற்றம் சாட்டியவர்கள் இவரது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் . ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ தனது ஆவணங்களை சரியாக காட்டி தன மேல் குற்றம் இல்லையென்று நிரூபிக்க வேண்டும் . இந்த விஷயத்தில் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம் . மேலும் வழக்கை 18 வருடங்கள் இழுத்தடித்ததும் , நீதபதி டிகுன்ஹா நேர்மையானவர் என்பதும் கூடுதல் நெருக்கடியை கொடுத்திருக்கும் . எல்லாவற்றிற்கும் அறிக்கை விடும் கலைஞர் இந்த கைதை பற்றி ஒன்றுமே சொல்லாமல் மௌனம்  காப்பது அவரது அனுபவத்தைக் காட்டுகிறது . சுப்ரமணியசாமியால் போடப்பட்ட வழக்கிற்கு கலைஞரின் கொடும்பாவியை எரித்து என்ன ஆகப் போகிறது ?...

எனக்கு தெரிந்த ஒருவரின் மாமா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே அரசியலில் பார்ட் டைமாக இருந்தார் . பிறகு வேலையை விட்டு விட்டு முழு நேர அரசியலில் இறங்கி இப்போது கவுன்சலராகி விட்டார். அவருக்கு அப்போதே 10 லட்சம் கடன் இருந்தது . ஆனால் இப்போதோ வீடு , கார் என்று கிட்டத்தட்ட 4 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக சொல்கிறார்கள்.
தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கையை இந்த தீர்ப்பு கொடுத்தாலும் , கவுன்சிலருக்கே இவ்வளவு சொத்து  என்றால் எம்.எல்.ஏ , எம்.பிககெல்லாம் ? . இது போல கணக்கில்லாமல் லஞ்சம் வாங்கிய எல்லா அரசியல்வாதிகளும் , அரசு அதிகாரிகளும் இதே போல தண்டிக்கப்படுவார்களா ?. அல்லது இதே போல விடாப்படியாக யாராவது கேசை நடத்துவார்களா ? . பிறகு ஏன் அம்மாவை மட்டும் தண்டிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே தானிருக்கின்றன ...


28 September 2014

மெட்ராஸ் - MADRAS - வசிக்கலாம் ...


முந்தைய படம் ஒடிவிட்டாலே அடுத்த படத்திற்கான பொறுப்பு இயக்குனருக்கும் , ஹீரோவுக்கும் கூடி விடுகிறது . அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் , ஹீரோ கார்த்தி இருவரும் மெட்ராஸ் படத்தில் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள் ...

வட சென்னை ஹவுசிங் போர்ட் ஏரியாவில் விளம்பர சுவரை கைப்பற்ற அடித்துக் கொள்ளும் இரண்டு அரசியல் கோஷ்டிகள் ,  ஒரு கோஷ்டியில் இருக்கும் அன்பு ( கலையரசன் ) , அவன் நண்பன் காளி ( கார்த்தி)
இருவரும் எதிர் கோஷ்டிக்கு கொடச்சலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் . ஒரு கட்டத்தில் எதிர் கோஷ்டியின் தலைவன் கண்ணனின் மகன் இவர்களால் கொல்லப்பட அடுத்து என்ன நடக்கிறது என்பதை இண்டர்வெலுக்குப் பின் கொஞ்சம் தடுமாறினாலும் மாஸ் ஹீரோ கார்த்திக்காக எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் க்ளாசாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ...

சென்னை ஸ்லாங் கொஞ்சம் இடித்தாலும் படித்த வடசென்னை வாலிபர் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாகவே இருக்கிறார் கார்த்தி . எதிர் கோஷ்டிகளுடன் மோதும் சண்டைகளோடு காதலியுடன் போடும் குட்டிச் சண்டைகளிலும் கவர்கிறார் . படித்து விட்டு வேலைக்கு போறவனுக்கு எதுக்கு சண்டை சச்சரவு என்று சுற்றியிருப்பவர்கள் தான் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்களே தவிர அதைப் பற்றி பார்ட்டி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தொகிறிக் கொண்டேயிருப்பது சறுக்கல் ...

தெலுங்கு வரவு கேத்தரின் பக்கத்து வீட்டுப் பெண் போல என்று வெறும் பேருக்கு சொல்வது போலல்லாமல் அயன் பண்ண சர்ட் போல அப்படியே இருக்கிறார் . இவரை பார்த்தவுடனே பிடிக்கவில்லை ஆனால் பார்க்க பார்க்க பிடிக்கிறது . அதிலும் கார்த்தியுடன் சண்டை போட்டுக்கொண்டே நீ தான் வேணும் என்று கொஞ்சுமிடத்தில் கூடுதல் அழகு . கார்த்தியின் நண்பனாக வரும் அன்பு , அவன் மனைவி மேரி இருவரும் படத்திற்கு பேக் போன்ஸ் . இவர்கள் இடையேயான காதல் முத்தக் காட்சிகள் கலீஜாக இல்லாமல் கேசுவலாக இருக்கின்றன . அன்புவின் மறைவுக்கு பிறகு படம் தடுமாறுவது நிஜம் . விஜி , பெருமாள்  , மாரி என்று வலம் வரும் அரை டஜன் கேரக்டர்களில் வாய்சில் புதுப்பேட்டை தனுஷை நியாபகப்படுத்தும் ஜானி லைக் அள்ளுகிறார் ...


படத்தின் மற்றொரு ஹீரோ பின்னணி இசையில் பின்னியெடுக்கும் சந்தோஷ் நாராயண் . மனுஷன் கானா வாகட்டும் , மெலடியாகட்டும் மிரட்டுகிறார் . இவர் தமிழ் இசையின் புது நம்பிக்கை . முரளியின் கேமரா ஹவுசிங் போர்ட் சந்து பொந்துகளுக்குள் புகுந்து விளையாடுகிறது . படத்தின் லைட்டிங் , பிரவீனின் எடிட்டிங் ரெண்டுமே சூப்பர் ...

அட்டக்கத்தி யில் தென்சென்னை புறநகர் வாசிகளை பதிய வைத்தது போலவே இதில் வடசென்னை வாசிகளை தனது நேர்த்தியான டீட்டைளிங்கில் மனதில் நங்கூரம் போட்டு உட்கார வைக்கிறார் ரஞ்சித் . படத்தோடு சேர்த்து சுவரையும் ஒரு கேரக்டர் போலவே உலவ விட்டிருப்பது நேர்த்தி . காதல் சீன்களை ஏதோ ஹீரோ சண்டை போட்டுவிட்டு வந்து வெறும் ரெஸ்ட் எடுப்பது மாதிரி தனி ட்ராக்காக வைக்காமல் படத்தோடு ஒன்றி வைத்திருப்பதை பாராட்டலாம் . அன்பு - காளி சம்பத்தப்பட்ட நட்புக்காட்சிகள் எல்லாமே நச் . சீன் இப்படித்தான் முடியும் என்று எதிர்பார்க்க விட்டு பிறகு எதிர்பார்க்காத நேரத்தில் வேறு மாதிரி முடித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் ...

படத்தின் நீளம் , இரண்டாம் பாதியில் தடுமாறும் திரைக்கதை ,அரசியல் ஆதாயத்துக்காக காவு வாங்கப்படும் நண்பன் , அதற்காக ஆவேசப்படும் ஹீரோ என்ற நார்மல் ப்ளாட் போன்ற குறைகளையெல்லாம் தாண்டி படத்தின் கேரக்டர்களை பதிய வைத்த விதம் , படத்தை கொண்டு சென்ற பாங்கு இவற்றிக்காக சில இடங்களில் ஸ்லோவாக இருந்தாலும் ஸ்டெடியாக செல்லும் மெட்ராஸில் வசிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 43 






24 September 2014

அரண்மனை - ARANMANAI - தங்கலாம் ...



பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ளாமல் தனக்கு தெரிந்த கமர்சியல் பார்முலாவை மட்டும் வைத்து வரும் ரசிகனை திருப்திப்படுத்தி அனுப்புவதில்  வல்லவர் சுந்தர்.சி . ஹரர் லைனை கையில் எடுத்திருந்தாலும் வழக்கமான பேய் படத்துக்கு  தன்னுடையை காமெடி பெப்பை ஏற்றி அரண்மனை யை போரடிக்காமல் பார்க்க வைக்கிறார் இயக்குனர் ...

ரொம்ப நாட்கள் பூட்டிக் கிடக்கும் தங்கள் பூர்வீக அரண்மனையை விற்க முடிவெடுக்கிறார்கள் வாரிசுகள் . அரண்மனையில் தங்கும் சில நாட்களில் 3 வேலைக்காரர்கள் மர்மமான  முறையில் சாக அங்கு பேய் இருப்பது தெரிய வருகிறது . பேய்க்கு என்ன ப்ளாஷ்பேக் ? பேய் பீடித்திருக்கும் தன் தங்கையையும் , தன்  தங்கையிடமிருந்து மற்றவர்களையும் வக்கீல் சுந்தர்.சி எப்படி காப்பாற்றுகிறார் என்கிற இந்த சந்திரமுகி கதைக்கு சந்தானத்தை வைத்து கமர்ஸியல் சந்தானம் பூசியிருக்கிறார் சுந்தர்.சி ...

நடிகனாக அடக்கி வாசித்து படம் முழுவதும் நடிகர் பட்டாளத்தையே திறம்பட சமாளிததில் இயக்குனராக பாராட்டு பெறுகிறார் சுந்தர்.சி . ஹன்சிகா , ஆண்ட்ரியா , ராய் லக்ஷ்மி என மூன்று ஹீரோயின்களுக்கும் சம விகிதத்தில் ஸ்பேஸ் கொடுத்தது ,  சந்தானம் , சரளா , மனோபாலா என எல்லோரையும் சரியான முறையில் பயன்படுத்தியது என எல்லாவற்றிலுமே இயக்குனரின் அனுபவம் அசத்துகிறது ...


மூன்று பேரில் ராய் லக்ஷ்மி ராவாக இருந்து சுண்டி இழுத்தாலும் அடாவடி  ஆண்ட்ரியாவும் , அப்பாவி ஹன்சிகா வும் மனதை தொடுகிறார்கள் . க்ளோஸ் அப் காட்சிகளில் அதீத மேக் அப்புடன் வரும் ஆண்ட்ரியா பேயை விட பயமுறுத்துகிறார் . கொடுத்த காசுக்கு ராய் லக்ஷ்மி யை குனிந்து , நிமிர விட்டு நன்றாகவே வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் . நடிப்புக்காக இல்லாமல் நிஜமாகவே அம்மணி உடற்பயிற்சி செய்வது நல்லது . மூணு , நாலு டயர் ஏறியிருக்கிறது . வினய் , நிதின் சத்யா படத்தில் இருக்கிறார்கள் .
" பெட்ரோமாஸ் " பாடலுக்கான இசையில் பரத்வாஜும் , பின்னணி இசையில் கார்த்திக் ராஜாவும் கவர்கிறார்கள் . செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் , சி.ஜி வேலைகளும் படத்திற்கு பலம் ...

படம் ஆரம்பித்தவுடனேயே நேரத்தை கடத்தாமல் அரண்மனைக்குள் நம்மை திகிலுடன் அமர வைத்து விடுகிறார்கள் . நடுநடுவே காமெடி இருந்தும் இடைவேளை வரை திரைக்கதையும்  க்ரிப்பாகவே  செல்கிறது . " மூடு வரதுக்கு முருங்கைக்காய் சாப்பிடலாம் , இங்க ஒரு முருங்கைக்காயே மூடோட சுத்துதே " என்று மனோபாலாவை சந்தானம் சத்தாய்க்கும் வசனங்கள் நச் . இடைவேளைக்கு பிறகு தான் படம்  கோவில் திருட்டு , அந்த பழியை பெண்ணின் மேல் போட்டு அவளை கொல்வது போன்ற வழக்கமான ப்ளாஷ்பேக் , பேயை விரட்ட வரும் சாமியார் என மாமூல்  பயணத்தில் தடுமாறுகிறது  ...

சந்திரமுகியில் சந்திராஷ்டம் என்றால் இதில் சூரிய கிரகணம் , ரஜினிக்கு பதில் சுந்தர்.சி , பிரபு - ஜோதிகா இடத்தில் வினய் - ஆண்டிரியா , வடிவேலுவுக்கு பதில் சந்தானம் , நயன்தாராவுக்கு பதில் ராய் லக்ஷ்மி என்று பார்க்கும் போதே நமக்கு தோன்றும் ஒப்பீடுகள் படத்தை சந்திரமுகி - 2 வோ என்று நினைக்கத் தோன்றுகின்றன . வழக்கமான  பார்முலா படங்களில் உள்ள எல்லா குறைகளும் இதில் இருந்தாலும் அதையும் மீறி படத்தை ரசிக்கும் படியாக தந்த விதத்திற்காக புதுசாக எதையும் எதிர்பார்த்து அலட்டிக் கொள்ளாமல் ஒரு முறை இந்த அரண்மனை யில் தங்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41


13 September 2014

பர்மா - BURMA - பிட்ஸ் அண்ட் பீஸ் ...


சில லோ பட்ஜெட் படங்கள் ஏதோ ஒரு காரணத்தால் நம்மை கவனிக்க வைப்பதுண்டு . அந்த  வகையில் பர்மா படத்திற்காக இயக்குனர் தரணீதரன் எடுத்துக்கொண்ட கார் சீஸிங் ( கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தாதவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்வது ) என்கிற கதைக்களன் படத்தை பார்க்க வைத்தது . ஆனால் ஒரு படம் வெற்றி பெற வெறும் கதைக்களன் மட்டும் போதாது என்பதை நிரூபிக்கிறது பர்மா ...ஸி

கார் சீசிங் கிங் குணா ( சம்பத்ராஜ் ) விடம் வேலை செய்யும் பரமானந்தம் ( எ ) பர்மா ( மைக்கேல் ) உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததால் குணா வை போலீசில் சிக்க வைத்து விட்டு அந்த இடத்திற்கு வருகிறான் . சேட்டுக்காக
( அதுல் குல்கர்னி ) சீஸ் செய்த கார்களில் ஒரு பி.எம்.டபிள்யூ மிஸ்ஸாக அதற்கு பதில் பர்மாவின் காதலியை ( ரேஷ்மி மேனன் ) சேட் பிடித்து வைத்துக் கொள்ள பர்மா காரை கொடுத்து காதலியை மீட்டானா என்கிற இந்த நீட்டான ஒன் லைனை வைத்துக் கொண்டு க்ரிப்பான திரைக்கதை அமைக்கத் தெரியாமல் தடுமாறியிருக்கிறார்கள் ...


கேரக்டருக்கு ஏற்ற தோற்றம்  இருந்தாலும் ஹீரோ மைக்கேல் கவரவில்லை . நிறைய இடங்களில் இவருடைய ரியாக்சன் மிஸ்ஸிங் . ஹீரோயின் ரேஷ்மி மேனன் ( கேரளத்திலிருந்து மற்றுமொரு புதுவரவு ) ஜம்மென்று இருக்கிறார் . ஹீரோவை கிஸ் அடிக்கும் போது ஹெராயின் போல போதை ஏற்றுகிறார் . சரியான வாய்ப்புகள் கிடைத்தால் ஒரு ரவுண்ட் வரலாம் . வா என்னைக் கடத்து என்பது போல கார் சீஸிங் செய்யும் இடத்திற்கெல்லாம் இவரும்  கூடவே அலைவது அபத்தம் . நல்ல திறமையிருந்தும் சரியான உயரத்தை தொடாதவர் சம்பத்ராஜ் . அவருக்கு இந்த படம் யானைப்பசிக்கு சோளப்பொறி . சேட் கேரக்டரில் அதுல் சரியான தேர்வு . யுவனின் ஒளிப்பதிவும் , சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் ...

நிறைய மெனக்கெடாமல் கார் சீஸிங் என்பதை கார் சீட்டிங் போல ஹீரோ வெறுமனே கள்ள சாவி போட்டு திறந்து கொண்டிருக்கிறார் . படத்திற்கு முக்கியமான உயிர்நாடியே இந்த விஷயம் தான் . அதில் இன்னும் சுவாரசியமாக டீட்டைலிங் செய்திருந்தால் படம் தேறியிருக்கும் . அதே போல பெண் தலைமையில் வரும் கடத்தல் குழுவும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை . புது கதைக்களன் , ரசிக்க வைக்கும் வசனங்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பர்மா பிட்ஸ் அண்ட் பீஸ் களாக மட்டுமே கவர்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 39

11 September 2014

தெருக்கூத்து - 4 ...


மோடி 100 என்ற தலைப்பில் எக்கச்சக்க விவாதங்கள் , கட்டுரைகள் என கடந்த ஒரு வாரமாகவே எல்லா ஊடகங்களும்  அலசி ஆராய்ந்து காயப் போட்டு விட்டதால் நாம் பெரிதாக சொல்வதற்கேதுமில்லை . ஒரு ஷோவை பார்த்து விட்டு விமர்சனம் செய்வதற்கு இது சினிமா அல்ல . ஒரு புதிய அரசாங்கத்தை சரியாக கணித்து சொல்வதற்கு 100 நாட்கள் நிச்சயம் பத்தாது . ஆனாலும் அது எந்த டைரக்சனில் செல்கிறது என்பதை வைத்து அதன் எதிர்கால செயல்பாட்டை கணிக்கலாம் . அந்த வகையில் சார்க் , ப்ரிக் நாடுகளுடனான உறவு , அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் , ஜப்பானிலிருந்து 2 லட்சம் கோடி முதலீடு . பாசிட்டிவான  சென்செக்ஸ் குறியீடு போன்றவை இந்த அரசாங்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி பயணப்படுகிறது என்பதை உணர முடிகிறது . கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்டைலில் அரசாங்க நிறுவனங்களிலும் சில ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க சொல்லி அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதும் ஆரோக்கியமான விஷயம் ...

உள்ளாட்சி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள அ.தி.மு.க வுக்கு எதிராக பா.ஜ.க மட்டும் நிற்கும் சூழல் உருவானது . ஆனால் நிறைய இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் விலகிக்கொள்ள அ.தி.மு.க அன்னபோஸ்டில் செலெக்ட் ஆகி விட்டார்கள் . ஆளுங்கட்சியின் மிரட்டல் தான் இதற்கு காரணம் என்று பா.ஜ.க குற்றம் சாட்ட , இரண்டு கட்சிகளின் கூட்டு சதி தான் இது என்று கம்யூனிஸ்ட் சொல்கிறது . எது எப்படியோ பா.ஜ.க நல்ல வாய்ப்பை இழந்து விட்டது . இதே போல 2016 இல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . இல்லையேல் கட்சியின் கனவு அம்பேல் ! ...

ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்கிற பெயரில் கொண்டாடப்படுவதற்கு பயங்கர எதிர்ப்பு ஒரு பக்கம் இருக்க பெரிய  சம்பளம் இல்லாத காரணத்தால் தன்னார்வத்துடன் பணிபுரியும் ஆசிரியர்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக  படித்த செய்தி இது போன்ற கொண்டாட்டங்களையே கேள்விக்குறியாக்கி விடுகிறது . நவாப் செரீப் பிரதமருக்கு  மாம்பழங்களை பரிசாக அனுப்பியிருக்கிறார் . " ஏண்டா காஷ்மீர்ல எங்க ஆளுகள சுட்டுட்டு இங்க மாம்பழத்த கொடுத்தா அத திங்க நாங்க என்ன மாங்கா மடையனுங்களா , அவ் " என்று விஜயகாந்த் ஸ்டைலில் மோடி சொல்லியிருக்கலாமோ ?! ...

நேற்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்னாப் தலைமையில் ஒரு விவாதம் . அதில் மீடியா வினரை கழுத்தை நெரித்து விடுவேன் , குழிக்குள் புதைத்து விடுவேன் என்றெல்லாம் மிரட்டிய தெலுங்கானா முதல்வரை ஹிட்லர் என்று வர்ணித்தர்கள் . அது சரி , ஆனால் யார் விவாதத்திற்கு வந்தாலும் பேச விடாமல் தானே மிரட்டல் தொனியில் பேசிக் கொண்டேயிருக்கும் அர்னாப் கோஸ்வாமி என்ன முசோலினியா ?! ...

ஒரு படம் ஹிட்டானால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதும் தோற்றால் தூக்கிப் போட்டு மிதிப்பதும் பலரது வாடிக்கை . அந்த வகையில் சிறந்த அரசியல் பத்திரிக்கையான துக்ளக் ஒரு கட்டுரையில் அஞ்சான் படத்தை அறுவை சிகிச்சை செய்திருக்கிறது . அந்த கட்டுரையை எழுதியவர் ஆர்வக் கோளாறில் சதுரங்க வேட்டையை இயக்கியவர் லிங்குசாமி எனவும் ( லிங்குசாமி அந்த படத்தின் தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் )  , தமிழ் தாதா வை மையப்படுத்தி வந்த படம் மும்பை எக்ஸ்ப்ரெஸ்  (அந்த படம் சென்னை எக்ஸ்ப்ரெஸ் ) எனவும் குறிப்பிட்டிருந்தார். படத்தில் தான் லாஜிக் இல்லை அதை விமர்சிக்கும் கடிதத்திலுமா ?!. இப்படி சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத பத்திரிக்கைகள் கூட படத்தை கழுவி கழுவி ஊற்ற குமுதம் மட்டும் நன்று என்று விமர்சனம் போட்டிருப்பது அடடா ஆச்சர்யக்குறி ! ...

இரண்டாவது பாதி திரைக்கதைக்காகவும் , வசனத்திற்காகவும் சலீம் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது . பெரிய ஹீரோ இல்லாமலேயே  விறுவிறு திரைக்கதை பார்ப்பவர்களை கட்டிப் போட்டாலும் விஷால் , ஆர்யா யாராவது படத்தில் நடித்திருந்தால் பெரிய கல்லா கட்டியிருக்கும்  என்பது பரவலான கருத்து  . தொடர்ந்து இரண்டு வெற்றிகளை கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்கள் . நாளை ரிலீசாகும் சிகரம் தொடு , வானவராயன் வல்லவராயன் , பர்மா ஆகிய மூன்று படங்களில் போஸ்டர்கள் பர்மா வை பார்க்க தூண்டுகிறது . கே டிவி யில் சுப்ரமணியபுரம் போட்டிருந்தார்கள் . என்ன படம் ! . ஒரு சாதாரண நடிகன் சசிகுமாருக்காக சிறந்த  இயக்குனர் சசிகுமாரை நாம் இழந்து விட்டோமோ ! ...

நொறுக்குத்தீனி :

கணவன் : நம்ம பையன நினைச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு ..

மனைவி : ஏன் உங்கள விட ரொம்ப புத்திசாலியா இருக்கானேன்னா ! ...


மீண்டும் கூடுவோம் ...




5 September 2014

இரும்புகுதிரை - IRUMBUKUTHIRAI - நோ மைலேஜ் ...


ரதேசி க்கு பிறகு அதர்வா மேலிருந்த எதிர்பார்ப்பு , கேட்சியான டைட்டில் , ரேசிங் பற்றிய கதை , எல்லாவற்றுக்கும் மேல் பிரபல பதிவர் நர்சிமின் வசனம் என எல்லாமுமாக சேர்ந்து படத்தின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன . ஆனால் இதையெல்லாம் இரும்புகுதிரை பூர்த்தி செய்ததா ?. பார்க்கலாம் ...

சி.ஏ படித்துக்கொண்டே பார்ட்டைமாக பீட்சா கடையில் வேலை பார்க்கும் ப்ரித்வி க்கு ( அதர்வா  முரளி ) வேகமாக பைக் ஒட்டுவதென்றாலே அலர்ஜி . ப்ரித்வி  பைக் ஒட்டி  பில்லியனில் உட்கார்ந்திருந்த அப்பா ஆக்சிடெண்டில் இறந்து போனதே அந்த அலர்ஜிக்கு காரணம் . கடைசியில் காதலிக்காக
( ப்ரியா ஆனந்த் ) பைக் ஓட்ட வேண்டிய கட்டாயம் வர அதுவே பெரிய பிரச்சனையில் போய் முடிகிறது . பிரச்சனைக்கு என்ன காரணம் ? அதிலிருந்து ப்ரித்வி மீண்டானா ? என்பதை குதிரை ரேஸ் வேகத்தில் சொல்லாமல் ஜானவாஷம் போல நீட்டி முழக்கியிருக்கிறார்கள் ...

அழுக்கான பரதேசிக்கு பிறகு அதர்வா விற்கு ஏற்ற நீட்டான கேரக்டர் . முந்தைய படத்தில் நிறைய நடித்துவிட்டதாலோ என்னவோ இதில் எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை . காதலியை பற்றி பேசும் போது வெட்கப்படும் இடத்தில் கவர்கிறார் . வெட்கமா அப்படின்னா என்று கேட்கும் அளவிற்கு இருக்கும் ப்ரியா ஆனந்தை பார்த்தவுடன் எல்லா ஹீரோக்களையும் போல அதர்வாவுக்கும்  லவ் வந்து விடுகிறது . ( என்னமோ தெரியல ப்ராக்டிகலா பசங்களுக்கு இந்த மாதிரி பொண்ணுங்கள பார்த்தா முதல்ல மூடு தான் வருது ) ...


ஜெகன் கொஞ்சம் கடிக்கிறார் . ராய் லக்ஷ்மி அங்கங்கே காட்டி நகம் கடிக்க வைக்கிறார் . ஜி.வி க்கு பேமன்ட் பாக்கியோ என்று எண்ணுமளவிற்கு தான் பாடல்கள் இருக்கின்றன . அதிலும் அதை நடுநடுவே சொருகியது அபத்தம் . குருதேவின் ஒளிப்பதிவு படத்திலேயே ரொம்ப பிரகாசம் . " கூட இல்லாத போது அவங்களையே நினைச்சு தேடுறது தான் லவ்" , " கோல் ல தோக்கறது தப்பில்ல , ஆனா கோலே இல்லாம இருக்கறது தான் தப்பு " போன்ற வசனங்களில் நர்சிம் தெரிகிறார் ...

மொக்கை எஸ்.எம்.எஸ் லாம் அனுப்பி ஸ்லோவா பார்க்கறவன் பொறுமையையெல்லாம் சோதிச்சு  கஷ்டப்பட்டு கரக்ட் பண்ண பொண்ண டுகாட்டி ல கூட்டிக்கிட்டு  முத முதல்ல ஈ.சி.ஆர் ல ரைட் போகும் போது  நாலஞ்சு பேரு சேர்ந்து அதர்வா வை அடிச்சுப் போட்டுட்டு பொண்ண டகால்டி பண்ணி தூக்கிட்டு போயிருறாங்க . அங்க வைக்குறோம் சார் இன்டர்வெல் ப்ளாக் என்று கதை சொல்லி இயக்குனர் ப்ரொட்யூசரை ஒ.கே செய்திருப்பார் என்று நினைக்கிறேன் . கதை சொன்ன வேகத்தில் பாதியையாவது திரைக்கதையில் காட்டியிருந்தால் கொஞ்சம் ஜெயித்திருக்கலாம் . இதே ப்ரியா ஆனந்தை கடத்தியது போல சமீபத்தில் வந்த அரிமா நம்பி அதிவேக திரைக்கதையால் ஜெயித்தது . இதில் அந்த மேஜிக்  டோட்டலி  மிஸ்ஸிங் ...

பெரிய பில்ட் அப் புடன் அறிமுகமாகும் டோனி யும் புஷ்ஷென்று போய்  விடுகிறார் .  தேவையில்லாமல் பாண்டிச்சேரி குத்துப் பாடல் வைத்திருந்தாலும் , பாண்டிச்சேரியில் நடக்கும் கதை என்பதால் குடிக்கிற சீனா வைக்காமல் விட்டதற்கு இயக்குனர் யுவராஜ் போசை பாராட்டலாம் . ஸ்லோவான முதல்பாதி , இண்டெர்வலில் கொடுக்கும் ட்விஸ்டை தக்க வைக்காமல் பின்னர் படு ஸ்லோவாக போகும் இரண்டாம் பாதி , வில்லனின் கோபத்திற்கு சொல்லப்படும் வலுவில்லாத காரணம் என எல்லாமே பார்க்க டீசண்டாக இருக்கும் இரும்புகுதிரைக்கு கொடுப்பதென்னமோ நோ மைலேஜ் ...

ஸ்கோர் கார்ட் : 38 









26 August 2014

தெருக்கூத்து - 3 ...


பா.ஜ.க வின் மாநில தலைவராக டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் . சீனியாரிட்டியை மட்டும் பார்க்காமல் சின்சியாரிட்டியை பார்த்து கட்சி இந்த பொறுப்பை கொடுத்திருக்கிறது . தொலைக்காட்சி விவாதங்கள் , இணையதளங்கள் மூலம் படித்த மக்களுக்கு நன்றாக பரிச்சியமாகியிருக்கும்  இவர் தன் உழைப்பால் கட்சி கிராமப்புறங்களிலும் நன்றாக வேரூன்ற பாடுபட வேண்டும் . ஏனெனில் படித்தவர்களில் பாதி பேர் ஓட்டுப் போட வருவதில்லை . வருபவர்களும் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதில்லை . அ.தி.மு.க , தி.மு.க இரண்டிற்கும் வலுவான மாற்றாக வரவேண்டுமென்றால் பா.ஜ.க பட்டி தொட்டிகளிலெல்லாம் வளர வேண்டியது அவசியம் . அந்தப் பணியை திறம்பட செய்ய அவருக்கு வாழ்த்துக்கள் .  அதே போல தேசிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் ஹெச்.ராஜா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ...

சுதந்திர  தின உரையின் போது  பிரதமர் மோடியின் பேச்சு வழக்கமான
சம்பிரதாய பேச்சாக   இல்லாமல் உணர்வுபூர்வமாகவும் , ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது . ஆனால் அந்த  உரையில் சொன்னதையெல்லாம் நிறைவேற்ற நிறைய கால அவகாசம் தேவை .அது வரை மக்கள் பொறுத்திருப்பார்களா ?.
ஒரு பக்கம் சமாதானம் பேசிக்கொண்டே மறுபக்கம் பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் தனது வாலை ஆட்டிக்கொண்டிருக்கிறது . இந்த அரசாவது அதை ஓட்ட நறுக்குவார்களா ? ...

சரக்கு விலையை ஏற்றி குடி மகன்களுக்கு தமிழக அரசு ஷாக் கொடுத்தால், படிப்படியாக பத்து வருடங்களில் மதுபானக் கடைகளை மூடப்போவதாக அறிவித்து கேரள அரசு குடி மகன்களின் தலையில் இடியையே இறக்கி விட்டது . என்ன இது சேர நாட்டுக்கு வந்த சோதனை ? . ஆடிப்பெருக்கு அன்று கூட காவிரியில் தண்ணி இல்லாமல் பம்பு செட்டு வைத்து ஆடிப்பெருக்கை கொண்டாடும் அவல நிலையில் இருந்த மக்களுக்கு மேட்டூர் , கபினி அணைகளிலிருந்து தண்ணீரை திறந்து விட்டு வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள் . இதற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் முதல்வருக்கு பாராட்டு விழாவும் நடத்தி விட்டார்கள் . கடமையை செய்ததற்கு ஒரு கடமைக்காக பாராட்டு விழாவா ? இல்லை மனமார்ந்த பாராட்டு விழாவா ?!...

தம்பித்துரைக்கு துணை சபாநாயகர் பதவி கொடுத்தது எதிர்பார்த்ததே . ஆனால் மைத்ரேயன் ராஜ்யசபா தலைமை பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டது சற்றும் எதிர்பார்க்காத அம்மா ட்விஸ்ட் . இந்த மாற்றங்கள் எதனாலே உருவாகுதோ ?. 23 வருடங்களாக எதிரிகளாக இருக்கும் லாலுவும் - நிதீஷும் பா.ஜ.க வின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமென்கிற ஒரே காரணத்துக்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் . அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பார்கள் . அதற்காக இப்படியா ?! ...

இங்கிலாந்தில் படு  கேவலமாக  உதை  வாங்கிய பிறகு கொஞ்சமா புத்தி வந்து பி.சி.சி.ஐ கோச் ப்லெச்சர் மற்றும் அந்நிய உதவியாளர்களை ஓரங்கட்டி ரவி சாஸ்திரியை கொண்டு  வந்திருக்கிறது . பி.சி.சி.ஐ ரவி தான் தல என்று சொல்கிறது . ரவியோ தோனி தான் கேப்டன் என்கிறார் . கேப்டனோ பெருசு ப்லெச்சர் தான்   எங்க எல்லோருக்கும் பாஸ் என்கிறார் . கேட்கும் போதே தலை சுத்துதே .  இவிங்க என்னத்த ஒன்டே ல ஆடி என்னத்த ஜெயிச்சு ! அட போங்கப்பா ...

லெட்டர் பேட் அமைப்புகள் பிரபலாமவதற்கு பிரபலங்களின் படங்களை எதிர்ப்பதை வாட்டிக்கையாக கொண்டிருக்கின்றன . துப்பாக்கி , விஸ்வரூபம் வரிசையில் லேட்டஸ்டாக அவர்களால் கையில் எடுக்கப்பட்டிருக்கும் படம் கத்தி . ராஜபக்சேவின் மைத்துனர் முக்கிய பொறுப்பிலிருக்கும் லைக்கா நிறுவனம் படத்தை தயாரிப்பதே பிரச்சனைக்கு காரணம் . இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆரோக்கியமானதல்ல . கத்தி தலைக்கு மேலேயே கத்தி . சமாளிக்குமா படக்குழு ?! ...

அஞ்சான் , க.தி.வ.இ இரண்டு படங்களில் அதீத எதிர்பார்ப்பின் காரணமாகவோ என்னவோ அஞ்சான் அமுங்கி விட , கதை விவாதத்தையே கதையாக்கி அதை சுவாரசியமான திரைக்கதையாக தந்ததால் பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார் பார்த்திபன் . வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் தான் சினிமா என்பது மாறி ரொம்ப நாட்களாகிவிட்டது . பொழுதை போக்க கையில் மொபைல் இருந்தால் போதாதா ? . அதை தவிர டி .வி , இணையதளம் என்று எவ்வளவோ இருக்கிறது. இதன் மூலம் தமிழுலக இயக்குனர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ஏதாவது புதுசா யோசிங்க , இல்லேன்னா பழசாயிடுவீங்க ...

மீண்டும் கூடுவோம் ...





21 August 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - KTVI - க்ளாப் ...


முதல் படம் புதிய பாதை க்கு பிறகு அதே போல பெரிய ஹிட் கொடுக்கா விட்டாலும்  தனது வித்தியாசமான அணுகுமுறையால் தன் ஒவ்வொரு படைப்பின் மேலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதில் வித்தகரான இராதாகிருஷ்ணன் பார்த்திபன்  க.தி.வ.இ மூலம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார் ...

எது மாதிரியும் இல்லாத புது மாதிரி படம் எடுக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் டி.வி.டி க்களை சுடாமல் தன் டீமுடன் வீட்டிலியே உட்கார்ந்து டிஸ்கசன் செய்கிறார் இயக்குனர் தமிழ் ( சந்தோஷ் ) . தமிழுக்கு கதை கிடைத்ததா ? அவருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை  விட்டுப் போகும் காதல் மனைவி ( அகிலா ) திரும்பி வந்தாளா என்பதை நிறைய சுவாரசியங்கள் , கொஞ்சம் கடி என்று தனது கலவையில் தந்திருக்கிறார் பார்த்தி ...

சந்தோஷ் - அகிலா இருவருமே கதைகேற்ற நல்ல தேர்வு . இருவர் முகத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது . நண்பர்கள் குழு வீட்டில் உட்கார்ந்து அடிக்கும் டிஸ்கஷன் கூத்தால் தனது ப்ரைவசி பாதிக்கப்படுவதை சொல்லி அழும் எக்ஸ்சென்ட்ரிக் அகிலா கதாபாத்திரம் யதார்த்தம் . இருவரின் காதல் , அன்னியோன்யம் , சண்டை எல்லாவற்றிலுமே இயக்குனர் பளிச்சிடுகிறார் . ..


தேவர் படங்களில் ஆரம்பித்து சின்னத்தம்பி , ஈ என்று சினிமா  செய்தி துணுக்குகளை அள்ளித் தெளிக்கும் அசிஸ்டன்ட் டைரக்டராக  தம்பி ராமையா . படம் முழுக்க சிரிக்க வைப்பவர் 58 வயதாகியும் தன் 28 வயதான பெண்ணிற்கு இன்னும் கல்யாணம் செய்து வைக்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் ததும்பும் தந்தை கேரக்டரில் அண்ணன் ராமையாவாக படத்தையே தூக்கி நிறுத்துகிறார் . எல்லா துறைகளிலும் எதிர்பார்த்த உயரத்தை அடைய முடியாத இது போன்ற என்சைக்லோபீடியாக்கள் நிச்சயம் இருப்பார்கள் . தம்பி ராமையா வை அடிக்கடி வாரும் உதவி இயக்குனர் சுருளி கவர்கிறார் . பவர் ஸ்டார் கெட்டப்பில் வந்து தப்பு தப்பு இங்கிலீசில் கதை சொல்லி படம் கிளைமேக்சில் முடிய வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லும் தயாரிப்பாளர் சிம்ப்ளி சூப்பர்ப் ...

" முதல் 20 நிமிடத்துக்குள் கதையை சொல்லி இடைவேளையில் ஷாக் ப்ரேக் கொடுத்து ப்ரீ க்ளைமேக்சில கொஞ்சம் நிப்பாட்டி கடைசியில படத்த முடிக்கணும்னு நாங்க ஒரு பார்மெட் வச்சிருப்போம் . அத நேத்து வந்த குறும்பட பசங்க தூக்கி எரியறதா " என்று தம்பி ராமையா வை புலம்ப விட்டு பல சீனியர் இயக்குனர்களின் ஆதங்கத்தை போட்டுடைப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . பேஸ் புக் , ட்விட்டரில் கமென்ட் போடுபவர்கள் மட்டுமல்லாமல் தண்ணி கேன் போடும் நபருக்கு கூட இருக்கும் சினிமா அறிவை அழகாக சொல்லியிருக்கிறார் பார்த்திபன் ...

பாலச்சந்தர் பட பாணியில் வரும் இரண்டாவது  ஹீரோயின் , நடுநடுவே வந்து பேசி கொஞ்சம் கடிக்கும் பார்த்திபன் , கதை விவாதத்தில் இருந்த சுவாரசியம் தமிழ் சொல்லும் உண்மைக் கதையில் இல்லாமல் போவது , கதை இல்லை என்று என்ன தான் டேக் லைன் போட்டிருந்தாலும் , திரைக்கதை , வசனம் இரண்டும் கவனிக்க  வைத்தாலும் நம்மை ஒன்ற வைக்கும் ஒன் லைன் எதுவும் இல்லாமல் வெறும் சீன்களின் கோர்வையாக படம் இருப்பது போன்றவை மைனஸ் . படம் எடுப்பதற்கு டிஸ்கசன் செய்வார்கள் , ஆனால் அந்த டிஸ்கசனையே ரசிக்கும் படியான படமாக கொடுத்து  25 வருடங்கள் கடந்தும் இன்றைய குறும்பட இயக்குனர்களுக்கு தான் எந்த விதத்திலும் சளைத்தவனில்லை என்று நிரூபிக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் வித்தியாசமான சிந்தனைக்கு ஒரு க்ளாப் ...

ஸ்கோர் கார்ட் : 43


9 August 2014

தெருக்கூத்து - 2 ...


.பி யில் வெறும் பத்து தொகுதிகளை  பெற்றிருந்த பா.ஜ.க வை கடந்த தேர்தலில் 70 க்கும் மேல் ஜெயிக்க வைத்து மோடியை பிரதமராக பதவியேற்க வைத்ததில் பெரும்பங்காற்றியவர் அமித் ஷா . ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கட்சியின் கொள்கை அடிப்படையில் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராகி விட்டதால் கட்சித் தலைவர் பதவியை அமத் ஷாவிற்கு கொடுத்திருப்பது சரியான முடிவு . உ.பி யைப் போலவே மேற்கு வங்காளம் , ஓடிஸா , தமிழ்நாடு , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கால் பதித்திருக்கும் பா.ஜ.க வை மேலும் வளர்க்க அவரின் தலைமை உதவும் ...

காந்தி குடும்பத்துக்கு நெருக்கமாயிருந்த நட்வர் சிங் தனது சுய சரிதையில் சோனியா பிரதமராகாததற்கு ராகுல் தான் காரணம் என்று சொல்லி குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் . ஏற்கனவே வரலாறு காணாத தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரசுக்கு இது வெந்த புண்ணில் வேல் . தேர்தலில் சகோதரருக்காக காம்பேரிங் சாரி , பிரச்சாரம் செய்த பிரியங்கா முழு நேர அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் . அவருக்கு பார்ட் டைம் மட்டும் தான் புடிக்குமோ ? ...

ராணுவத்தில் அந்நிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவிகிதமாக உயர்த்துவதற்கான பில்லை நாடாளுமன்றத்தில் பாஸ் செய்திருக்கிறார்கள் . அதே போல இன்சூரன்ஸ் பில்லையும்  கூடிய விரைவில் பாஸ் செய்வார்கள் என்று நம்பலாம் . பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடும் மைனர்கள் ( என்ன பொருத்தம் ) வயதை காரணம் காட்டி எஸ்கேப் ஆகி விடுவதால் வயது வரம்பை 18 இலிருந்து 16 ஆக குறைக்க வேண்டுமென்கிற மேனகா காந்தியின் ஆலோசனையை வரவேற்கலாம் . ஆனால் அரசியல் ரீதியாகவோ , சட்ட ரீதியாகவோ மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும்  இதை அணுகுவார்களா ? ....

அம்மாவின் லேட்டஸ்ட் அறிவிப்பு அம்மா அமுதம் அங்காடிகள் . எங்களிடம் சரக்குகள் மட்டுமல்ல  பலசரக்குகளும் கிடைக்கும் என்று அரசு இனி விளம்பரம் செய்யுமோ  ?. ஸ்டாலினை 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் கல்யாணசுந்தரத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கூட தூக்கி விட்டார்கள் . அண்ணனின் ஆதரவாளர்களுக்குத் தான் இந்த கதி என்று பார்த்தால் தம்பியின் கைத்தடிகளுக்குமா ? . தலைவரின் பணியில் சொல்வதென்றால் கட்சி ஜனநாயக ரீதியில் தன் கடமையை செய்யும் ...

ஆஸ்திரேலியாவில் ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே கால் மாட்டிக் கொண்ட ஒருவரை எல்லோருமாக சேர்ந்து ரயிலை தள்ளி காப்பாற்றியதை பார்த்த போது மெய் சிலிர்த்தது . ஆனால்  நம்மூர்  அடையார் பாலத்தில் பைக் ஒட்டிக் கொண்டு வந்தவர் கீழே விழுந்து மூர்ச்சையாகி விட கூடவே பைக்கில் வந்த  பெண் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல்  பைக் பார்ட்டியின் பர்சையும் , செல்லையும் லவட்டிக் கொண்டு போன செய்தியை படித்த போது கண் வேர்த்தது . Who is that lady ? ...

பத்து வருடங்கள் கழித்து 94 குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய கும்பகோணம் தீ விபத்துக்கு காரணமாவர்களுக்கு  ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வந்திருக்கிறது . காலம் கடந்த நீதி  மறுக்கப்பட்ட நீதி என்பார்கள் . நம் நாட்டில் ஒரு வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்குள் அதில் சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பதே சந்தேகம் . 2014 இல் முகலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து பலர் பலியான வழக்கிலாவது உடனடி தீர்ப்பு வருவதற்கு ஆவண செய்ய வேண்டும்  . ஆனால் 3 வருடங்களுக்கு முன்பே நீதிமன்ற அறிவுரையின்  படி சி.எம்.டி.ஏ வில் உள்ள சில அதிகாரிகளின் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இது போன்ற விபத்துக்களை ஒரு வேளை  நடக்காமல் தடுத்திருக்கலாம் . இந்நேரத்துக்கு இந்த விபத்தைப் பற்றி நிறைய பேர் மறந்திருப்பார்கள் . பிறகு வேறொரு சம்பவம் , வேறொரு வழக்கு என்று வாழ்க்கை ஓடிக்கொண்டேயிருக்கும் . ஒரு கொலைக்கே தூக்கு தண்டனை கொடுக்கலாமெனும் போது சிலரின் மெத்தனத்தாலும் , ஊழலாலும் பல உயிர்களை பலியாக்கும்  இது போன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை தான் கொடுக்கப்படுகிறது . என்ன  கொடுமை சார் இது ? ...

சென்ற பதிவில் தோனி இங்கிலாந்து சீரியசை ஜெயித்தால் பேண்டை கழட்டி சுற்றுவாரோ என்று கேட்டது இங்கிலீஸ் காரெங்க காதுல விழுந்துருச்சோ என்னவோ ?. அடுத்து நடந்த சவுத்தாம்ப்டன் டெஸ்டுல வச்சு தோனியோட பேன்ட மட்டுமல்ல டீமோட பேண்டையே மொத்தமா உருவி சூ ... சரி விடுங்க.
சம்சாரம் அது மின்சாரம் படத்துல " வாழாவெட்டியா இருந்த பொண்ணு  புருஷன் வீட்டுக்கு வாழ போனத நினைச்சு சந்தோஷப்படுறதா இல்ல இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு கோவிச்சுக்குட்டு அப்பா வீட்டுக்கு போனத நினைச்சு வருத்தப்படுறதா " என்று விசு ஒரு வசனம் பேசுவார் . அதே மாதிரி " காம்ன்வெல்த்  கேம்ல இந்தியா 64 பதக்கங்களை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்ததை நினைத்து சந்தோசப்படுவதா ? இல்லை இந்தியா இங்கிலாந்திடம் அடிமையாக இருந்ததை நினைவுபடுத்தும் காமன்வெல்த் போட்டியை நினைத்து வருத்தப்படுவதா ? ...

சும்மா சேனலை மாற்றிக் கொண்டிருந்த போது சொல்லி வைத்தார்ப் போல  எல்லா சீரியல்களிலும் ஹீரோயின்களுக்கு கரு கலைந்து விடுகிறது. பாவம் இந்த பெண்களின் சோகத்தையெல்லாம் பார்க்கும் போது ரெம்ப பீலிங்கா இருக்கு . அதே சமயம்  ஜெயா டி.வி யில்  புதுப்பேட்டை போட்டிருந்தார்கள் . எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படங்களில் அதுவும் ஒன்று . தனுஷின் நடிப்பு , செல்வாவின் மேக்கிங் , யுவனின் இசை இதோடு சேர்ந்து பாலகுமாரனின் சார்ப்பான வசனங்கள் எல்லாமே படத்திற்கு ஹைலைட்ஸ் . சோனியா எபிசோட் , நிறைவை தராத க்ளைமாக்ஸ் என்று சில குறைகள் இருந்தாலும் ஒரு ரவுடியின் வாழ்க்கையை நியாயமாக நம்பும் படி பதிய வைத்ததில் புதுப்பேட்டை எப்பவுமே தங்க வேண்டிய இடம் . தனுஷ் - செல்வா - யுவன் கூட்டணி மீண்டும் வருமா ? ...


சரபம் , ஜிகர்தண்டா இரண்டு படங்களை பற்றியும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருந்தும்  ஜிகர்தண்டா வை மட்டுமே பார்க்க முடிந்தது . முதல் பாதி சான்சே இல்ல . இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறினாலும் மொத்தத்தில் டேஸ்டாகவே இருக்கிறது .  சந்தோஷ் குமார் என்பவர் ஒரு சினிமா செய்தியுடன் ஒரு புகைப்படத்தை  எனக்கு மெயில் செய்திருந்தார் . புகைப்படத்தை பார்த்தவுடன் மிகவும்  ஆச்சர்யமாக இருந்தது . பாரதிராஜாவின் அச்சு அசல் ஜெராக்ஸாக  இருக்கும் அவருடைய தம்பி ஜெயராஜ் கத்துக்குட்டி எனும் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் . நடிகனாக வேண்டுமென்கிற ஆசையில் சென்னைக்கு வந்த அவருடைய அண்ணனின் தாகத்தை தம்பி  தீர்த்து வைக்க வாழ்த்துவோம் ...

மீண்டும் கூடுவோம் ...





8 August 2014

ஜிகர்தண்டா - JIGARTHANDA - டேஸ்டி ...


ஹீரோ சித்தார்த்துக்கும் , தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் ட்விட்டரில் லடாய் , Dark Carnival  என்கிற கொரியன் படத்தின் தழுவல்  தான் படம்  என்று செய்தி பரவ அதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் காட்டமான மறுப்பு இப்படி வருவதற்கு முன்பே ஜிகர்தண்டா கொஞ்சம் சூட்டை கிளப்பியிருந்தது. கொரியன் படத்தை பார்க்காததால் இது அப்பட்டமான தழுவலா என்பதற்கு கருத்து சொல்ல முடியாவிட்டாலும் படத்தின் லைட்டிங் , ஷாட்ஸ் , பி.ஜி எல்லாமே உலக சினிமாக்களை நியாபகப்படுத்தியதை மறுப்பதற்கில்லை ...

காட் ஃபாதர் , ஸ்கேரி ஃபேஸ் மாதிரி ஒரு டான் படத்தை எடுக்க நினைக்கிறார் புதுமுக இயக்குனர் கார்த்திக் ( சித்தார்த் ) . மதுரைக்கென்று  எவ்வளவோ பெருமைகள் இருக்க தற்போதைய தமிழ் சினிமாவின் வழக்கப்படி ஒரு ரியல் டான் சேது ( சிம்ஹா ) வின் கதையை தேடி மதுரை வருகிறார் சித்தார்த் . அவருடைய ஆசை நிறைவேறியதா என்பதை வழக்கமாக சொல்லாமல் முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் வித்தியாசமாக தந்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ் .


படத்தின் உண்மையான ஹீரோ சிம்ஹா தான் . நெரைத்த முடி  , பாக்கு கரை பல் என்று நிஜமான ரவிடியாகவே திரையில் ராவுடி செய்கிறார் . தன் படத்தை கார்ட்டூனாக  போட்டதற்காக  ரிப்போர்டரை  கொளுத்தும் அறிமுக சீனில் டெர்ரர் குறைவாக இருந்தாலும் , கூடவே இருக்கும் கறுப்பாடை ஸ்கெட்ச் போட்டு தூக்குவது , " தோள்ள கை போட்டுட்டா பயம் போயிருச்சுள்ள " என்று  சித்தார்த்தை மிரட்டுவது  , நடிப்பு பயிற்சிக்காக மாஸ்டரிடம்  அடி வாங்கி விட்டு முறைப்பது , கடைசியில்  திருந்தும் போது பாடி லேங்குவேஜில்  நடித்துக் காட்டுவது என படம் முழுவதும் சிம்ம கர்ஜனை செய்கிறார் சிம்ஹா ...

அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது அடி வாங்குவதை தவிர சித்தார்த்திற்கு  பெரிய வேலையில்லை . ஒரு வேளை க்ளைமேக்சை  நெகட்டிவாக முடித்திருந்தால் இவர் கேரக்டருக்கு வெயிட் ஏறியிருக்கும் . சித்தார்த்தை சிம்ஹாவிடம்  கோர்த்து  விடுவதை தவிர லக்ஸ்மி மேனுக்கு சொல்லிக்கொள்ளும்  படி எதுவும் படத்தில் இல்லாவிட்டாலும் அவருடைய  நல்ல ராசி இதிலும் தொடர்கிறது . கோலிவுட்டின் லேட்டஸ்ட் நண்பென்டா கருணாகரன் சின்ன சின்ன கவுன்டர்களில் நிறையவே ஸ்கோர் செய்கிறார் ...

நடிப்பு வாத்தியார் ,  அறுத்தே கொள்ளும் சங்கிலி முருகன் , சீன் படத்தை தேடி தேடி பார்க்கும் அடியாள் , உளவு சொல்லிவிட்டு உயிரை விடும் அடியாள் என சின்ன சின்னகேரக்டர்க்ளில் வருபவர்கள் கூட கவனிக்க வைக்கிறார்கள். சந்தோஷ்  நாராயணின்  இசையில் கண்ணம்மா பாடல் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது . கேம்விக் யு அரியின் ஒளிப்பவதிவு சான்ஷே இல்ல ...


படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே சூடு பிடித்து , அடுத்து என்ன என்று யோசிக்க வைத்து  , அங்கே இங்கே நகரவிடாமல் நம்மை இடைவேளை வரை கட்டிப் போடுகிறது . அதிலும் இன்டர்வெல் ப்ளாக்கிற்கு முன்னால் வரும் ட்விஸ்டுகள் அபாரம் . ஆனால் இடைவேளை முடிந்து பெரிதாக ஏதோ நடக்கும் என்று எதிர்பாத்து அமரும் நமக்கு ஏமாற்றம் தான் . அதன் பிறகு படம் முற்றிலும் வேறு ஜெநெருக்கு சென்று விடுகிறது . டெரர் ரவுடிகள் நடிப்புப் பயிற்சிக்காக செய்யும் காமெடிக் கூத்துக்கள் ரசிக்க வைத்தாலும் அ.குமார் படமெல்லாம் காதில் பூ சுத்தல் ...

இரண்டாம் பாதியில் கொஞ்சம் அப்படியிப்படி படம் அலைந்தாலும் திரும்பவும் க்ளைமேக்சுக்கு  முன் இறுகப் பிடிக்கிறது திரைக்கதை . சித்தர்த்திர்க்கு வைக்கப்பட்ட முடிவு திணிக்கப்பட்ட ஹீரோயிசம் . பீட்சா இயக்குனரின் இரண்டாம் படைப்பு இரண்டாம் பாதியின் தடம் மாற்றத்தால் தர்ஸ்டி யை முழுதாக தணிக்கா விட்டாலும் நிச்சயம் டேஸ்டியாக இருக்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 43   




29 July 2014

தெருக்கூத்து - 1 ...


சினிமா செய்திகள் மட்டுமின்றி வாராவாரம்  நாட்டு நடப்புகளை சும்மா ஒரு அலசு அலசலாம் என்று எனக்கு ஏடாகூடமாக தோன்றியதன் விளைவே இந்த தெருக்கூத்து   . இது வரை என் கிறுக்கல்களை பொறுத்துக்கொண்ட மக்கள் இனிமேலும் எதையும் தாங்கும் இதயத்தோடு அதை தொடர்வார்கள் என்கிற நம்பிக்கையில் ...

ரயில்வே பட்ஜெட்டால் நடுத்தர மக்களுக்கு ஏறியிருந்த உஷ்ணம் பொது பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வருமான வரி சலுகைகளால் தணிந்திருக்கும் என்று நம்பலாம் . புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால் சென்னையிலிருந்து மதுரைக்கு நான்கு மணி நேரத்துக்குள் செல்லலாம் என்கிறார்கள் . எல்லாம் சரி அதுலயும் வித்அவுட்ல போவ முடியுமா ? . கிறிஸ்துவம் எனது மதம் , இந்து எனது கலாச்சாரம் என்று , கிறிஸ்துவ மதம் வந்து 2000 வருடங்கள் தான் ஆகிறது ஆனால் இந்து கலாச்சாரம் இங்கே 5000 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது என்று கோவா துணை முதல் மந்திரி பேசியிருப்பது பிரச்சனையை கிளப்பியிருக்கிறது . நல்ல வேளை  இதை  சொன்னவர் ஒரு கிறிஸ்துவர் , அதுவே இந்துவாக இருந்திருந்தால் ?! ...

28 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை ஜெயித்தது போலவே லார்ட்ஸ் மைதானத்திலும் தோனி தலைமையிலான கிரிக்கெட் அணி டெஸ்ட் மேட்சை ஜெயித்திருக்கிறது . நீண்ட நாட்கள் சோபிக்காமல் இருந்த இஷாந்த் சர்மா-விக்கெட்டுகளை வீழ்த்தி மேன் ஆப் தி மேட்ச் அவார்ட் வாங்கிய  சந்தோஷம் வடிவதற்குள் அவர் இஞ்சூரி காரணமாக அடுத்த மேட்சில் ஆடவில்லை . பின்னிக்கு பதில் அஸ்வினை எடுப்பார்கள் என்று பார்த்தால் பேட்டிங்கை வலுப்படுத்த ரோஹித்தை எடுத்திருக்கிறார்கள் . கடந்த முறை ஏற்பட்ட  4-0 தோல்விக்கு பழி தீர்க்கும்  வகையில் தோனி டீம் சீரியசை  ஜெயிக்க வாழ்த்துவோம்  .  கங்குலி ஜெயித்த பிறகு சட்டையை கழட்டி சுற்றியது போல தோனி பேண்டை  கழட்டி சுத்துவாரோ ? ! ...

போன் பேசிக்கொண்டே ரயில்வே கிராசிங்கை கவனிக்காமல் ஸ்கூல் வேனை ரயிலோடு மோதியதில் அந்த முட்டாள் டிரைவர் உட்பட அனைவரும் பலியான சம்பவம் நெஞ்சை உலுக்கியது . கால் சென்டர்களில் வேலை பார்ப்பவர்களிடமிருந்தே நிர்வாகம் வேலை நேரங்களில் செல்போனை வாங்கி வைத்துக் கொள்ளும்  போது பல உயிர்களுடன் விளையாடும் இது போன்ற சம்பவங்களை தடுக்க  எல்லா டிரைவர்களிடமிருந்தும் பயண நேரங்களில் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டாலென்ன ? .ஆறு வயது சிறுமி ஸ்கூலில் வைத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது . அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரூ மக்கள் நடத்திய அமைதி போராட்டம் மனதை கவர்ந்தது . பள்ளிக்கூடங்களிலேயே இந்த நிலைமை என்றால் பிள்ளைகளை எங்கு தான் அனுப்புவது ? ...

அரசு பேருந்தில் ஊருக்கு சென்ற போது மேல்மருவத்தூரில் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்கள் வண்டி ஊர்ந்து தான் சென்றது . விசாரித்தால் ஆடி அம்மாவாசையை முன்னிட்டு கோவிலில் பயங்கர கூட்டம் என்று சொன்னார்கள்  . கோவிலுக்கு வருபவர்களுக்காக  ஏதாவது நடை மேம்பாலம் கட்டி விட்டால் பக்தர்கள் மட்டுமல்லாமல் பயணிகளும் பிழைப்பார்கள் . நிர்வாகம் கவனிக்குமா ?! . டாஸ்மாக்கை தவிர மற்ற எல்லா அரசு திட்டங்களுக்கும் அம்மா பெயரை வைத்து நன்றாகவே பிராண்டிங் செய்கிறார்கள் . அம்மா உணவகம் , குடிநீரை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரிகளை கருத்தில் கொண்டு அம்மா வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் . மற்றதைப் போலவே அதுவும் வெற்றி பெற வாழ்த்துக்கள் . அம்மான்னா சும்மா இல்லேடா! ...

வேலையில்லா பட்டதாரி என்றவுடன் தனுஷ் நியாபகத்திற்கு வருகிறார் . தான் வளர்த்து விட்ட சிவ கார்த்திகேயனுடன்  அவருக்கு ஏதோ லடாய் என்கிறார்கள் . கொடுக்கல் வாங்கலில் ஏதாவது பிரச்சனையோ ?. இருந்து விட்டுப் போகட்டும் . கூத்தாடிகள் ரெண்டுபட்டாலும் ஊருக்கு கொண்டாட்டம் தானே ! . திரைப்படமாக வி.ஐ.பி யை விட சதுரங்க வேட்டை நன்றாக இருந்தாலும் தனுஷின் மாஸ் , அணிருந்தின் இசை இரண்டுமே வி.ஐ.பி க்கு நல்ல வசூலை கொடுத்திருக்கின்றன . சதுரங்க வேட்டை நன்றாக இருந்தாலும் அதற்கு ஆனந்த விகடன் 52 மார்க்குககளை அள்ளிக்  கொடுத்திருப்பது ஆச்சர்யம் தருகிறது . ஆனால் ராஜா ராணி , கடல் , எதிர்நீச்சல் என்று தங்களால் வாங்கப்பட்ட படங்களுக்கு விஜய் டி.வி விருதுகளை அள்ளிக் கொடுத்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை . விஜய் , சூர்யா இருவரும் வந்திருக்க மேடையில் டி.டி யோ வராத அஜித்துக்கு தல , தல என்று வழிந்தது இருவருக்கும் வயிற்றெரிச்சலை கிளப்பியிருக்கும் . ரஜினிக்கு அடுத்து  சூப்பர் ஸ்டார் பட்டத்த  யாருக்கு கொடுத்தாலென்ன ! தல போல வருமா ?!...

மீண்டும் கூடுவோம் ...



22 July 2014

சதுரங்க வேட்டை - SATHURANGA VETTAI - சலிக்காத ஆட்டம் ...


ண்டமூரி வீரேந்திரநாத் மலையாளத்தில் எழுதி தமிழாக்கம் செய்யப்பட நாவல் பணம் . அதில் கதை நாயகன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் . தன் அம்மாவின் இறுதி சடங்கை செய்யக் கூட பணம் இல்லாத நிலையில் எப்படியாவது பணம் சம்பாதிக்க முடிவு செய்து எல்லா குறுக்கு வழிகளையும் கையாண்டு பெரிய பணக்காரனாகிறான் . அவன் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள் . கடைசியில் வழக்கம் போல பணம் பெரிதல்ல என உணர்ந்து திருந்துகிறான் . இந்த கதையின் நாட்டை எடுத்துக்கொண்டு ஹீரோவாக நட்டை ( நடராஜ் ) வைத்து எம்.எல்.எம் , ஈமு கோழி , ரைஸ் புல்லிங் என நாட்டு நடப்புகளையே திரைக்கதையாக்கி தொய்வில்லாத படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் வினோத் ...

பாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளரான நடராஜ் தமிழில் முதல் படமான நாளை மூலம் பேசப்பட்டாலும் அதன் பிறகு ஹீரோவாக சோபிக்கவில்லை . ப்ரேக் எடுத்து வந்திருந்தாலும் நடிகனாக இந்த படம் அவருக்கு நல்ல திருப்புமுனை. எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஏமாற்றுவது , போலீசிடமே " நான் ஏமாத்தல் அவங்க தான் ஏமாந்தாங்க "என்று மடக்குவது , மரண அடி வாங்கிய பிறகும் பணத்தை பற்றி மூச்சு விடாமல் இருப்பது என காந்தி பாபு ( சத்திய சோதனை ) வாகவே கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார் நட்டு ...


நாயகி இஷாரா நாயர் அமைதியாக வந்து மனதை அள்ளுகிறார் . ஏமாத்துறது தப்பில்லையா சார் என்று அப்பாவியாக கேட்கும் போது அட அட . பாம்புக்கு விஜய் என்று பெயரிட்டு பத்திரமாக பார்த்துக் கொள்ளும் செட்டியார் இளவரசு , தூய தமிழில் பேசும் தாதா , கர்ப்பிணியான நாயரை தூக்கிக்  கொண்டு ஓடும் வில்லனின் அடியாள் திலகா என்று சின்ன சின்ன பாத்திரங்களில் வரும் அனைவரும் கவர்கிறார்கள் . ஒளிப்பதிவு , எடிட்டிங் இரண்டுமே படத்திற்கு பக்க பலங்கள் . பாடல்கள் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லாவிட்டாலும் பி.ஜி பரவாயில்லை ...

தினசரி பத்திரிக்கைகளில் பார்த்த விஷயங்கள் தான் என்றாலும் அதை வெறும் ஹீரோவை ஏற்றி விடும் டெம்பளேட்டுகளாக எடுக்காமல் டீட்டைலிங்காக சொன்ன விதத்தில் தனித்து நிற்கிறார் இயக்குனர் .  ஏமாறுபவர்களின் பேராசை தான் ஏமாற்றுபவர்களுக்கு மூலதனம் என்பதை செவிட்டில் அடித்து சொல்கிறது படம் . அதிலும் குறிப்பாக நகைக் கடை  ஃப்ராட் படத்திற்கு ஹைலைட் ...

" மிருகம் கூட பசிச்சா தான்  சாப்பிடுது ஆனா மனுஷன் " , " சாப்பிடாம பசியோட அலஞ்சிருக்கீங்களா "  போன்ற வசனங்கள் ரொட்டீனாக இருந்தாலும்  " தன் மேல நம்பிக்கையில்லாதவன் தான நாளைய பத்தி யோசிப்பான் " , " ஏமாத்துறவங்க குரு , ஏன்னா அவங்க தான் வாழ்க்கைய கத்துத் தராங்க " மாதிரி  வசனங்கள் பளிச் .  தேவைக்கேற்ப கழட்டி விடப்பட்ட லாஜிக் , எதிர்பார்த்த க்ளைமேக்ஸ் , ஹீரோவின் மேல் பச்சாதாபம் வரவைப்பதற்காக திணிக்கப்பட்ட  ஃப்ளாஷ்பேக் இப்படி சின்ன சின்ன குறைகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் இந்த சதுரங்க வேட்டை எனும் சலிக்காத ஆட்டத்தை நிச்சயம் ரசிக்கலாம் .

ஸ்கோர் கார்ட் : 43 



20 July 2014

வேலையில்லா பட்டதாரி -VIP - வெல்வான் ...


பொதுவாகவே ஒரு படத்தின் ஆடியோ பெரிய ஹிட்டாகி பட ரிலீஸ் தள்ளிப் போனால் நம்மையறியாமலேயே  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும் . அதிலும் ஆல் இந்தியா பிரபலமாகி விட்ட நம்ம ஊரு தனுஷின் 25 வது படம் வி.ஐ.பி என்பது கூடுதல் எதிர்பார்ப்பைக் கொடுத்திருப்பதை படத்திற்கு கிடைத்த ஒப்பனிங்கை வைத்து உறுதி செய்ய முடிகிறது ...

தினமும் தண்டச்சோறு என்று திட்டும் கோபக்கார அப்பா , பாசம் காட்டும் அம்மா , மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும்  தம்பி , பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் அழகான பெண் இவர்களுக்கு மத்தியில் தான் படித்த சிவில் இன்ஜினியரிங் சம்பந்தமான வேலைக்கு மட்டுமே போவேன் என்று நான்கு வருடம் பெட்ரோமாஸ் லைட்டே தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் வேலையில்லா பட்டதாரி ரகுவரன் ( தனுஷ் ) தன் துறையில் எதிரிகளை வென்று எப்படி சாதிக்கிறார் என்பதே வி.ஐ.பி ...

தனுஷ் இது வரை நடித்த 25 இல் இது போன்ற கதைகளில் குறைந்தது பத்துக்கும் மேல் நடித்திருப்பார் . இருப்பினும் நம்மை சோர்வடைய விடாமல்
பார்த்துக் கொள்வதே தனுஷின் திறமை . மயக்கம் என்ன , மரியான் என்று ஹெவி வெயிட் படங்களுக்கு பிறகு இந்த கேசுவல் தனுஷ் அடுத்த வீட்டுப் பையனாக அதிகமாகவே கவர்கிறார் . அம்மா இறந்தவுடன் வீட்டுக்கு வருபவரிடம் அதீத பெர்ஃபார்மன்சை எதிர்பாத்தால் அடக்கி வாசித்து ஏமாற்றி விடுகிறார் . சாமான்யர்களின் கஷ்டத்தை சொல்லும் தனுஷின் லாங் டயலாக் நீண்ட நாட்கள் பேசப்படும்  . சில தோல்விகளுக்கு பிறகு தமிழில் இந்த படம் நிச்சயம் தனுஷிற்கு கமர்சியலாக கை கொடுக்கும் . ஆனால் இந்த மாதிரி படங்களை பண்ண நிறைய வி.ஐ.பி கள்  இருப்பதால் தனுஷும் தொடர்ந்து இதே பாணியில் பயணப்பட்டு விடுவாரோ என்கிற பயமும் லேசாக தொற்றிக்கொள்கிறது ...

நிச்சயமாகி விட்ட தாலோ என்னனவோ அமலா பால் அதிக அழகாக தெரிகிறார் . அந்த பெரிய கண்களை உருட்டி பேசும்  அழகு ஆஸம் . சுரபிக்கு படத்தில் பெரிய வேலை இல்லை . இண்டர்வெலுக்கு பிறகு சீரியசாக போகும் படத்தில் கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்ட விவேக் .உதவியிருக்கிறார்  .  சரண்யா , தனுஷ் என்கிற இரண்டு நேஷனல் அவார்ட் வின்னர்களின் நடிப்புக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் சமுத்திரக்கனி சரண்யா இறந்த சீனில் தனக்கும் நன்றாக நடிக்க வரும் என்று நிரூபிக்கிறார் ...


அனிருத்தின் இசையில் பாடல்கள் படத்திற்கு பெரிய பலம் . ஏ.ஆர்.ஆர் , யுவனுக்கு பிறகு இளைஞர்களை அதிகம் கவர்கிறார் அனிருத் . எஸ்,ஜானகி குரலில் " அம்மா அம்மா " பாடல் கேட்கும் அனைவரையும் அதிகம் முனுமுனுக்க வைக்கும் பாடல் . எல்லா பாடல்களையும் தனுஷ் , அனிருத் பாடியிருப்பதும் , பாடல்களின் பின்னணியை  வைத்தே பி.ஜி யை ஒப்பேற்றியிருப்பதும் குறை . வாலியின் பணியில் பொயட்டு தனுஷ் . வளர வாழ்த்துக்கள் . இயக்குனராகி விட்டதால் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பெரிதாக மிளிரவில்லை ...

தனுஷ் மற்றும் வீட்டில் நடப்பதை வைத்தே முதல் பாதியை தேற்றியிருப்பது புத்திசாலித்தனமான திரைக்கதை . அப்பாவுடன் சண்டை போடும் போது
" எனக்கு மட்டும் வில்லன் பேர் ரகுவரன் , தம்பிக்கு  ஹீரோ பேர் கார்த்திக்  " என்று தனுஷ்  ஆதங்கப்படும் இடங்களில் வசனங்கள் பளிச் . ஆனால் தன்னை இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்க்காததால் தான் வேலை கிடைக்கவில்லை என்று கூறும் தனுஷிற்கு  50000 ரூபாய்க்கு  கால் சென்டரில் வேலை கிடைத்தது எப்படியோ ? டைரக்டருக்குத் தான்  வெளிச்சம் .யாரையும் அடிக்கக்கூடாது என்று அம்மா கையில் கட்டிய காப்பால் தனுஷ் அடி வாங்குகிறார் ஒ.கே . ஆனால் அவரோடு வேலை பார்க்கும் அத்தனை பேரும் ஏதோ காப்பு கட்டியது போல வில்லனின் அடியாட்களிடம் அந்த மொத்து வாங்குவது ஏனோ ? ...

இரண்டாம் பாதியில் முன்னேறத்  துடிக்கும் ஹீரோவிற்கு முட்டுக்கட்டை போடும் வில்லன் எப்படி இருக்க வேண்டும் ?!. அவரோ அமுல் பேபி போல வந்து அடி வாங்குவதோடு சரி .  வில்லனின் அப்பாவாவது ஏதாவது புத்திசாலித்தனமாக செய்வார் என்று பார்தால்  அவர் அதை  விட மொக்கை. ஹீரோ - வில்லன் ஆட்டம்  நன்றாக இருந்திருந்தால் படம் இன்னும் சூடு பிடித்திருக்கும் . படத்தின் நீளம் , கன்டினுட்டி பார்க்க  ஆள் இருந்தாரா இல்லையா என்று நினைக்கும் அளவிற்கு  தாடி , தாடியில்லாமல் என்று மாறி மாறி வரும் தனுஷின் தோற்றம் , வேலை வெட்டியில்லாத ஹீரோ , அம்மா சென்டிமென்ட் , தடைகளை தாண்டி ஜெயிக்கும் ஹீரோ என்று வழக்கமான ஃபார்முலா இப்படி குறைகள் இருந்தாலும் சென்டிமென்ட் , ஆக்சன் , ஹீரோயிசம் என்று எதையுமே ஓவர் டோஸ் ஆக்காமல் பெர்ஃபெக்டாக கொடுத்த விதத்தில் வணிக ரீதியாக இந்த வி.ஐ.பி வெல்வான் ...

ஸ்கோர் கார்ட் : 42 



19 July 2014

சக்ர வியூகம் ...


ன் மனைவியின் சொந்த ஊரான மாயவரத்திற்கு சென்றிருந்தேன். பரபரப்பான  சென்னை வாழ்க்கையிலிருந்து இரண்டு நாட்கள் ப்ரேக் கிடைத்தது  என்பதை விட  அந்த இரண்டு நாட்களையும்  அமைதியான ஊரில் என் மகளுடன் செலவழிக்க முடிந்தததில்  இரட்டிப்பு மகிழ்ச்சி.  அந்த மகிழ்ச்சியான தருணங்கள் என்றுமே மறக்க முடியாதவை. சென்னைக்கு வந்ததிலிருந்து நீண்ட நாள் விடுப்பு முடிந்து முதல் நாள் பள்ளிக்கு செல்லும் மாணவனின் மன நிலையிலிருந்து இன்னும் என்னால் விடுபட முடியவில்லை ...

நாம் தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு நல்லவனாகவோ , கெட்டவனாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் . ஏன் சிலரை அவரவர் கணவன் , மனைவியே கூட வெறுக்கலாம் . ஆனால் எல்லோரும் தத்தம் குழந்தைகள் மீது கொண்டிருக்கும் பாசம் மட்டும் பொய்க்காது . அதிலும் குறிப்பாக குழந்தைகள் சிறுவர் ,  சிறுமியாக மாறும் வயதிற்குட்பட்ட காலம் எந்த ஒரு பெற்றோருக்கும்  பொற்காலம் . அதே நேரம் தாய் - மகன் உறவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தந்தை - மகள் உறவுக்கு கொடுக்கப்படவில்லையோ என்று எனக்கொரு ஆதங்கம் எப்பொழுதுமே உண்டு ...

ஒரு கட்டத்தில் குடும்பம் , உறவுகளை தாண்டி வெளி உலகிற்கு குழந்தைகள்  பழக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்  . அப்படிப்பட்ட சூழலுக்கு பிள்ளையார் சுழி போடுபவை பள்ளிகள் . இந்த காலத்தில் எல்.கே.ஜி யில் சேர்ப்பதற்கே நாம் லாங் க்யூவில் நிற்க வேண்டியது  அவசியம் . அதிலும் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் தான் பிள்ளையை சேர்ப்பேன் என்று அடம் பிடிக்கும் பெற்றோர்களும் இங்கே அதிகம் . மனைவி இரண்டாவது பிரசவத்திற்கு ஊருக்கு சென்றுவிட்டதால் அங்கேயே என் மகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டியதாக போய் விட்டது . ஒரே நாளில் எளிதாக வேலை முடிந்துவிட்ட சந்தோசம் இருந்தாலும் மகளை பிரிந்து ஆறு மாதங்களுக்கும் மேல் இருக்கப் போவதை நினைத்தாலே ஏக்கமும் ,சோகமும் மனதை அப்பிக் கொள்கிறது ...

அவளை கவனிக்காமல் டி .வி பார்த்துக் கொண்டிருந்தால் ஒங்கி முதுகில் அடி வைப்பதும் , சேர்ந்து விளையாடாமல் தூங்கி விட்டால் முகத்தில் தண்ணீரை விட்டு எழுப்புவதும் , வயிற்றில் ஏறி நின்று குதித்து விளையாடுவதுமென எல்லாமே கண் முன் நிற்கின்றன . சென்னையில்  இருக்கும் போது கூட நான் நிறைய நேரங்களில் புத்தகம் , டி.வி , இணையம் , மொபைல் என என் சொந்த வேலைகளில் மூழ்கி  விடுவதுண்டு . அந்த சுயநலத்திற்கு கிடைத்த சாட்டையடியே இந்த தற்காலிக பிரிவு என்று நினைக்கிறேன் . ஊரில் இருந்த  இரண்டு நாட்களும் பரபரப்பில்லாத சூழலில் என்னை முழுவதுமாக அதுல்யா மட்டுமே ஆக்ரமித்திருந்தாள் ...

தனிமை எனக்கு புதிதில்லை . சொல்லப் போனால் திருமண வாழ்க்கை நமது சுதந்திரத்திற்கு விடப்படும் சவால் என்று பேசியவன் நான். இன்றோ பொய்க் கோபம் காட்டவும் , பொய் அழுகையை வாங்கவும் ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் . வெறும் கோபக்காரராகவே அறியப்பட்ட எனது அப்பா கூட என்னை முதல் நாள் பள்ளியில் சேர்த்து விட்டு  இதே போல ஃபீல் பண்ணியிருப்பாரோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது . உடன் பிறந்த நால்வரும் சகோதரிகள் என்பதாலோ என்னவோ எனது அப்பாவிற்கு பெண்கள் என்றாலே அலர்ஜி . சகோதரிகளுடன் பிறக்காததாலோ என்னவோ எனக்கு பெண்கள் மேல் அலர்ஜியுமில்லை , அதீத அன்பும் இருந்ததில்லை .
வயது ஏற ஏற பெண்கள் பற்றிய புரிதல் வர ஆரம்பித்தது . புரிதலுக்கு பின் வரும் அன்பில் என்றுமே அடக்குகின்ற தன்மை இருப்பதில்லை . அப்படிப்பட்ட அன்பே என்றும்  நிலைக்கும் ...

பள்ளி முழுவதும் சிறிய . பெரிய வயதில் நிறைய குழந்தைகள் . சில மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே ஏதோ தண்டனைக்காக உட்கார வைக்கப்படிருக்கிறார்கள் . நான் பத்தாவது படிக்கும் வரை வகுப்பறைக்கு வெளியே உட்கார்ந்த நாட்களே அதிகம் . பாடத்தில் சுட்டி என்றாலும் ஏதாவது சேட்டை செய்து வாத்தியாரால் வெளியில் அனுப்பப்படுவது எனக்கு வாடிக்கை . மரங்களையும் ,  அதிலுள்ள பறவைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கும் போது வகுப்பறைக்குள் ஆசிரியரின் பாடத்தை கவனித்துக் கொண்டிருக்கும் அனைவரும் தண்டனைக்கைதிகள் போலவே எனக்கு காட்சியளிப்பார்கள் . இன்றும் நிச்சயம் தண்டனை அந்த மாணவனுக்கு இல்லை என்று புரிகிறது ...

அலுவலகத்தில் கட்டிய பணத்திற்கு முக்கால் சதவிகிதத்திற்கு மட்டுமே  ரசீது கொடுத்தார்கள் . மீதியை  டொனேஷன் என்றார்கள் . வகுப்பறைக்குள் சென்றவுடன் யாரோ ஒரு குட்டிப் பெண்ணுக்கு அருகில் என் மகள் உட்கார்ந்து கொண்டாள் . என்னைத் தேடுகிறாளோ பார்ப்போம் என்ற நப்பாசையில் அரைமணி நேரம் நான் வெளியில் காத்திருந்தது தான் மிச்சம் . அவள்   தன்  உலகிற்குள்  மூழ்கத் தொடங்கியிருந்தாள் . கொஞ்ச நேரம் கழித்து அவள் என்னை தேட ஆரம்பித்தது தெரிந்ததும் இன்னும் ஒழிந்து கொண்டேன் . கண்களில் கண்ணீர் கொஞ்சமாக எட்டிப்  பார்க்க ஆரம்பித்தவுடன் எனக்கு தாங்காமல் விளையாட்டை முடித்துக் கொண்டேன் . முதல் நாள் என்பதால் அவளை என்னுடன் அனுப்பி  விட்டார்கள் . அடுத்த நாளிலிருந்து பாட்டி கொண்டு வந்து விடுவார்கள் என்று சொல்லி விட்டு அதுல்யாவை தூக்கிக் கொண்டேன் ...

இன்னும் இரண்டொரு நாட்களில் பள்ளிக்கூடம் , பாட்டி வீடு எல்லாமே அவளுக்கு பழகி விடும் . நடந்த சம்பவங்களும் ஞாபகத்தில் இருக்கப் போவதில்லை . ஒரு வகையில் ஞாபக மறதி எவ்வளவு சவுகரியம். நிறைய பேருக்கு எதையும் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்வதே மன நிம்மதி போவதற்கு முக்கிய காரணம் . பிடித்ததோ , இல்லையோ கடமைக்காக  கௌரவர்களின் பக்கம் நின்றார்  பீஷ்மர் . நேற்று என் அப்பா எனக்கு செய்த கடமையை நான் என் மகளுக்கு இன்று செய்திருக்கிறேன் . அவளும் நாளை இதே போல செய்யலாம் . அங்கே சுவற்றின் மேல் சிலந்தி கொஞ்சம் கொஞ்சமாக தனது வலையை பின்னிக்கொண்டு அதனுள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தது . அதைப் பார்த்த போது சொந்த  கடமை என்றாலும் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த சக்ர வியூகத்திற்குள் என் மகளையும் கொண்டு வந்து விட்டு விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி எனக்குள் எட்டிப் பார்த்தது . அவளோ  வழக்கம் போல தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தவள் என் தோள்களின் மேல் தூங்க ஆரம்பித்திருந்தாள் ...





5 July 2014

அரையாண்டு தமிழ் சினிமா 2014 ...


டநத வருடம் போல இந்த  வருடம் இதுவரை தேசிய விருதோடு  பெரிய வெற்றி பெற்ற விஸ்வரூபம் , பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த  பரதேசி போன்ற படங்கள் வராமல் போனாலும் வீரம் , ஜில்லா போன்ற கமர்சியல் வெற்றிகளும் , தெகிடி , முண்டாசுப்பட்டி  போன்ற கவனத்தை ஈர்த்த சிறு பட்ஜெட் படங்களும் ஆறுதல் . ஆரம்பம் வெற்றியை தொடர்ந்து வீரம் வெற்றி மூலம் தனது ஆளுமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அஜித் . கோட் ,சூட் இல்லாமல் வேட்டி , சட்டையில் தல கண்களுக்கு விருந்து . ஆனால் இந்த படத்தோடு சால்ட் - பெப்பர் லுக்குக்கு கொஞ்சம் லீவு விட்டால் தேவல...

ரஜினியை போல என்றும் ட்ரிம்மாக இருக்கும் விஜய்க்கு ஜில்லா பெரிய வெற்றியாக அமையா விட்டாலும் ரசிகர்களின் ஆதரவால் விநியோகஸ்தர்கள் கையை கடிக்கவில்லை . சிறந்த படங்களின் மூலம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு ரம்மி , பண்ணையாரும் பத்மினியும் இரண்டுமே தோல்வியடைந்தது சறுக்கல் . இனிவரும் படங்களில் கதைத் தேர்வில் அதிக கவனம் செலுத்துவார் என்று நம்புவோமாக ...

க்ரைம் பின்னணியை கொண்ட தெகிடி , வாலிபால் விளையாட்டை மையமாக வைத்து வந்த வல்லினம் இரண்டுமே கவனிக்க வைத்த படங்கள் . வாயை மூடி பேசவும் மௌனமாக வந்து போய விட்டது . கேமரா மேன் விஜய் மில்டன் இயக்கத்தில் வந்த கோலி சோடா கமர்சியல்  வெற்றி , விமர்சகர்களின் பாராட்டு இரண்டையுமே பெற்ற நல்ல மிக்ஸிங்  . வடிவேலு எதிர்பார்த்த ரீ  என்ட்ரி தெனாலிராமன் கொடுக்கவில்லை ...

நெடுஞ்சாலை நெடிய பயணமாக தெரிந்தாலும் போரடிக்கவில்லை . அதன் ஹீரோ ஆரி க்கு அதிக வாய்ப்புகள் வந்திருக்கும் என்று நம்பலாம் . அதே போல பிரஷாந்த் நாராயன் , சலீம் இருவரும் தமிழுக்கு நல்ல வரவு . எழுத்தாளர் ராஜுமுருகன் இயக்கத்தில் வந்த குக்கூ மாற்றுத் திறனாளிகளின் காதலையும் , வலியையும் பாசிட்டிவாக சொன்ன விதத்தில் கலர்ஃபுல் ஹைக்கூ . சமுத்திரக்கனி - ஜெயம் ரவி கூட்டணியில் வந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு நிமிர்ந்து நிற்கவில்லை ....

மௌன குரு வில் சீரியசாக வலம் வந்த அருள்நிதி க்கு காமெடிப்படமான  ஒரு கன்னியும்  மூணு களவானிகளும் ஒரு கன்னித்திருட்டு . பாண்டியநாடு வெற்றியை தொடர்ந்து விஷால் பூசிய கமர்சியல் அரிதாரம் நான்  சிகப்பு மனிதன் .  துவரை தமிழ் ஹீரோக்களுக்கு திரை யில் நண்பனாக  இருந்து பல ஹிட்களுக்கு தோள் கொடுத்த  சந்தானம் தன் சொந்த செலவில் சோலோ ஹீரோவாக நடித்த  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்  வாய்ச்சண்டையாகிப் போனது துரதிருஷ்டமே . சசிக்குமார் நடித்த பிரம்மன் எழுதிய தலைவிதியால் தயாரிப்பாளர் நொந்தது தான் மிச்சம் ...

படத்தேர்வில் கவனம் செலுத்தும் கிருஷ்ணாவிற்கு  யாமிருக்க பயமே வின் வெற்றி பெரிய தையிரியத்தை கொடுத்திருக்கும் . டெக்னிக்கல் விஷயங்களுக்காக குறை சொல்லப்பட்டாலும் குழந்தைகளை அதிகம் கவர்ந்தான் கோச்சடையான் . சிவ கார்த்திகேயன் நடிப்பில் மான் கராத்தே மண்ணைக் கவ்வா விட்டாலும் மனதை தொடவில்லை . லிங்குசாமி தயாரிப்பில் மஞ்சப்பை கதைக்காகவும் , ராஜ்கிரண் நடிப்பிற்காகவும் அதிகம் பாராட்டப்ட்டது ...

தமிழ் சினிமாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குறும்பட இயக்குனர்களினன் தர்பாரில் லேட்டஸ்ட் வரவு இயக்குனர் ராம்குமார். வெறும் ஸ்டான்ட் அப் காமெடியாக இல்லாமல் ரசிக்க வைத்த விதத்தில் முன்னுக்கு வந்திருக்கிறது முண்டாசுப்பட்டி . முனீஷ்காந்தாக நடித்த ராமதாஸின் காமெடி ராஜ்ஜியம் வரும் படங்களிலும் தொடர்வதற்கு வாழ்த்துக்கள் . சைவம் விஜய் எடுத்த முதல் தமிழ்படம் . கார்த்திக் கின் மெட்ராஸ்  , விஜய் யின் கத்தி , சூர்யா வின் அஞ்சான் போன்றவை  அடுத்த சில  மாதங்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன . அதே போல பிரபல வலைப்பதிவர் நண்பர் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் திரைக்கு வந்து பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் ... 



18 June 2014

முண்டாசுப்பட்டி - MUNDASUPATTI - மீடியம் காரண்டீட் ...


தியேட்டரில் படம் பார்த்து ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது . இத்தனை நாள் கழித்து போகும் படம் மொக்கையாக இருந்தால் அவ்வளவு  தான் .  நல்ல வேளை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகாமல் முண்டாசுப்பட்டி  காப்பாற்றியது ...

கதை 1947 இல் ஆரம்பித்து 1982 இல் நடக்கிறது . புகைப்படம் எடுத்துக் கொண்டால் செத்து விடுவோம் என்கிற மூட நம்பிக்கையில் இருக்கும் கிராமத்திற்கு செல்லும் புகைப்படக் கலைஞன் ( விஷ்ணு விஷால் ) தன் காதலுக்காக அங்கே எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நகைச்சுவையாக சொல்லி நம்மையும் அவனோடு சேர்த்து முண்டாசுப்பட்டியிலேயே இரண்டரை மணிநேரம் தங்க வைத்து விடுகிறார் புதுமுக இயக்குனர் ராம் குமார் ...


வெண்ணிலா கபடி குழு , நீர்ப்பறவை போன்ற படங்கள் போல சீரியசாக இல்லாமல் கேசுவலாக வந்து ஸ்கோர் செய்கிறார் விஷ்ணு . காதலிக்கு முன்னால் அடி வாங்குவது போல பாவ்லா காட்டி முனீஸ்காந்தை வெளுக்கும் இடம் அருமை . நந்திதா விற்கு அழகான கிராமத்துப் பெண் வேடம் . பேமென்ட் பாக்கியோ  என்னவோ காமெடிப் படத்தில் கூட சோகமாகவே இருக்கிறார் .  ஹீரோ வின் அசிஸ்டெண்டாக வரும் காளிக்கு இந்த படம் நல்ல ப்ரேக் . ரியாக்சனே இல்லாமல் இவர் அடிக்கும் சின்ன சின்ன கமெண்டுகள் ரசிக்க வைக்கின்றன ...

கொஞ்சம் ஓவர் ஆக்ட் போல தெரிந்தாலும் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறார் முனீஸ்காந்தாக வரும் ராமதாஸ் . சொல்லப் போனால் ஸ்லோவாக நகரும் முதல்பாதி இவருடைய கிராமத்து என்ட்ரிக்கு பிறகே சூடு பிடிக்கிறது . ஜமீனாக வரும் ஆனந்தராஜ் , போலி சாமியார் இருவரும் கவர்கிறார்கள் . சீன் ரோல்டனின் இசையில் " ராசா " , " கனவே " பாடல்கள் நல்ல மெலடி . சங்கரின் ஒளிப்பதிவு , லியோ வின் எடிட்டிங் இரண்டும் படத்திற்கு பலம் ...


நாளைய இயக்குனருக்காக எடுத்த குறும்படத்தையே முழு நீள திரைப்படமாக அழகாக வடிவமைத்த இயக்குனரின் திறமை பாராட்டுக்குரியது . வெறும் வசனங்களால் மட்டும் இல்லாமல் பாத்திரங்களின் சீரியசான செயல்களால் நம்மை சிரிக்க வைக்கும் உக்தியில் வெற்றி கண்டிருக்கிறார்கள் . ஸ்டாண்ட் அப் காமெடி , கவுன்டர் காமெடி இரண்டுமே போரடித்துக் கொண்டு வரும் வேளையில் இந்த படம் தமிழுக்கு நல்ல வரவு . ஸ்லோவாக நகரும் முதல் பாதி , ரிப்பீட்டட் சீன்கள் , அனைத்து தரப்பினருக்கும் சென்றடையாத இண்டெலக்ட்சுவல் காமெடிஸ் போன்ற சில குறைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் கொடுத்த காசுக்கு நிச்சயம் முண்டாசுப்பட்டி - மீடியம் காரண்டீட் ...

ஸ்கோர் கார்ட் : 42


Related Posts Plugin for WordPress, Blogger...