சென்னையில் கடந்த ஞாயிறன்று ( 26.08.2012 ) தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடைபெற்றது ... காலையில் சி.பி , கேபிள் , பட்டிக்காட்டான் ஜெய் முன்னிலையில் பதிவர்கள் அறிமுகம் , பிறகு மதியம் 1.30க்கு லஞ்ச் , அதை தொடர்ந்து பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தலைமையில் மூத்த பதிவர்களை கெளரவப்படுத்துதல் , கவியரங்கம் , கடைசியில் பி.கே.பி யின் உரை மற்றும் மதுமதியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் சில முக்கியமான துளிகள் இதோ :
- காலை முழுவதும் பதிவர்களின் அறிமுகம் தொடர்ந்து நடைபெற்றது ... தமிழ்நாடு தவிர மும்பை , மலேசியா போன்ற இடங்களில் இருந்தும் பதிவர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது ... பதிவர்கள் அறிமுகத்தின் போது அதிக கைதட்டல் வாங்கியவர் " நாய் நக்ஸ் நக்கீரன் " ... (எல்லாருக்கும் பேமென்ட் கரக்டா போய் சேந்திருச்சா பாஸ் )
- சுரேகா அவர்களின் அறிமுகத்தின் போது கேபிள் " நீங்கள் பாடலாசிரியர் தானே , ஒரு பாட்டு பாடுங்கள் " என்று கேட்க , அதற்கு அவர் " பாட்டு எழுதறது தான் என் வேல , பாடுறது இல்ல " என்று பதிலடி கொடுத்தார் ... ( அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா )
- ஒரு பதிவர் தன் குடும்பத்தில் உள்ள ஏழு பேரும் தன் பதிவுக்கு ஒட்டு போட்டு அதை முன்னணிக்கு வர வைத்து விடுவார்கள் என்ற தகவலை சொன்னார் ... ( நல்ல விவரமான புள்ளையா தாம்பா இருக்கு ! )
- என் பதிவின் பெயரை " வாங்க ப்ளாகலாம் " என்பதற்கு பதில் " வாங்க பழகலாம் " என்றே நிறைய பேர் குறிப்பிட்டார்கள் ... ( எதுக்கு இந்த விளம்பரம் )
- எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர் ஒவ்வொரு பதிவரின் அறிமுகத்தின் போதும் அவர்களின் பெயர்களை தவறாமல் எழுதிக்கொண்டிருந்தார் ... நான் முதலில் அவரை பத்திரிக்கைக்காரர் என்று தான் நினைத்தேன் , பிறகு தான் தெரிந்தது அவர் பதிவர் ஈகைவேந்தன் என்பது ... அவர் குருநானக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருவதாகவும் , பி.ஹெச்.டி படிப்பிற்காக பதிவுலகம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிரு ப்பதாகவும் தன் அறிமுகத்தின் போது குறிப்பிட்டார்... (சொல்லவேயில்ல )
- ஜாக்கி சேகர் சிங்கிளாக தான் வந்தார் , ஆனால் அவரை சுற்றி ஒரு கூட்டமே சேர்ந்துவிட்டது ... ( இது அன்பால தானா சேர்ந்த கூட்டமோ ! )
- பதிவர் கோவை நேரம் வெள்ளை வெட்டி சட்டையில பளபளவென்று வந்திருந்தார் , கேட்டதற்கு இது தமிழ் பதிவர்கள் சந்திப்பல்லவா என்று தமிழ்ப்பற்று காட்டினார் ... ( அய்யோ நான் தமிழன் ! )
- சுரேகா நகைச்சுவை ததும்ப நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கினார் ... இவரும் , இவரின் பதிவுலக நண்பர் கேபிள் சேகரும் ( இருவரும் வைத்திருப்பது ஒரே கலர் நானோ கார் ) இணைந்து " கேட்டால் கிடைக்கும் " என்ற அமைப்பின் மூலம் இதுவரை இருபதுக்கும் மேற்ப்பட்ட நுகர்வோர் சிக்கல்களை தீர்த்து வைத்திருப்பதாக சொன்னார்.... யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால் இவர்களை அணுகலாம் ... ( பிரபா ஒய்ன்ஷாப்ப எப்போ சார் தெறப்பாங்க ! )
- ரமணி , சென்னைப்பித்தன் , வலைச்சரம் சீனா , லக்ஷ்மி உட்பட மூத்த பதிவர்கள் பலர் கௌரவிக்கப்பட்டார்கள் ... ( ஓல்ட் இஸ் கோல்ட் )
- நிகழ்ச்சி முடியும்வரை பம்பரம் போல சுற்றிக் கொண்டிருந்தார் பிலாசபி பிரபாகரன் ... ( ஹே ! நான் ரொம்ப பிஸி , ரொம்ப பிஸி ! )
- ஆரூர் மூனா செந்தில் அரையடி கிருதாவுடன் அமர்க்களமாய் இருந்தார் . ( நாங்கல்லாம் அப்பவே அந்த மாதிரி இப்போ கேட்கவா வேணும் ! )
- ஈரோடு வழக்கறிஞர் ராஜசேகர் ( நண்டு @ நொரண்டு ) மக்கள் தொலைகாட்சி பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போது என்னை அழைத்துச் சென்று பேச வைத்தார் ... ( உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு )
- தமிழ்வாசி பிரகாஷ் , ராஜ் , ரமணி , தமிழ் ராஜா ஆகியோருடன் நான் அளவளாவிக் கொண்டிருந்தேன் .. ( இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புது )
- மதியம் உணவருந்தும் போது கேபிள் சிறு முதலீட்டுப் படங்களின் தற்போதைய நிலை , சினிமா செய்திகள் , அவர் இப்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கும் படங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் என்னுடன் மனம் திறந்து பேசினார் ... அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே ஒரு பதிவுலக நண்பர் கேபிள் எழுதிய புத்தகத்தில் அவரிடமே ஆட்டோகிராப் வாங்கினார் ... ( இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் )
- உணவு இடைவெளி முடிந்த பிறகு யாரையும் தூங்க விடாமல் செய்வதற்காக கவியரங்கம் தொடங்கும் என்று சுரேகா அறிவுத்தவுடனே சிலர் எஸ்கேப் ஆகி விட்டார்கள் ... ( அப்பா ! இப்பவே கண்ண கட்டுதே !)
- மயிலன் தன் சிறு வயதில் ஆரம்பித்து நடைபெறப்போகும் கல்யாணம் வரை தன் காதல் அனுபவங்களை கவிதை மழையாய் பொழிந்தார் ... அக்டோபரில் திருமணம் செய்து கொள்ளும் அவருக்கு எல்லோர் சார்பாகவும் வாழ்த்துக்கள் ... ( நண்பா உங்க காதல் மேட்டர்லாம் உட்பிக்கு தெரியுமா ?! )
- நான் கவிதை வாசிக்க செல்லும் போதே அருகிலிருக்கும் யாரையாவது கைதட்டி விட்டு வரச் சொல்லுங்கள் என்று சுரேகா அறிவுரை செய்தார் ... நல்ல வேலை அருகிலிருப்பவர்கள் மட்டுமல்லாமல் அரங்கத்தில் நிறைய பேர் கவிதைக்காக ! கை தட்டியது என் கல்லூரி நாட்களை நினைவு படுத்தியது ... ( இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல !? )
- சி.பியுடன் பேசும் போது அவர் காபி , டீ . சிகரட் , தண்ணி , பாக்கு என்று எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர் என்று சொன்ன போது எனக்கு லேசாக நெஞ்சை அடைத்தது ... ( ஒர்த்தர் நல்லா இருந்தா உனக்கு பொறுக்காதே )
- ராஜி , கோவை சரளா போன்ற பெண் பதிவர்கள் என்னனயும் , என் ப்ளாகையும் அடையாளம் கண்டு கொண்டு பேசினார்கள் ( ஐ லேடீஸ் !)
- பி.கே.பி பேச ஆரம்பிக்கும் போது சிலர் போண்டாவை நோக்கி படையெடுப்பதை பார்த்த சுரேகா இது போல நடந்து கொள்ளக் கூடாது என்று கடிந்து கொண்டார் ... பி.கே.பி பேசி முடித்ததும் பதிவர் கிராமத்துக் காக்கையுடன் வந்திருந்த ஒரு நண்பர் சீரியசாக " இப்போ போண்டா கிடைக்குமா பாஸ் " என்று அப்பாவியாக கேட்டார் ... ( அய்யோ வடை போச்சே ! )
- பி.கே.பி அவர்கள் பதிவுலகில் இன்று வரை நடந்து வரும் சமாசாரங்களை அப்படியே சொன்ன போதே அவர் நிகழ்ச்சிக்கு வெறும் ஒப்புக்காக வரவில்லை , முழு ஆர்வத்துடன் வந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது ... பதிவர்கள் தனி மனித தாக்குதல்களையும் , ஆபாசமான , அருவருக்கத்தக்க பதிவுகளையும் தவிற்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார் ... ( சரியா சொன்னீங்க )
- நிகழ்ச்சி வலையகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது ...அதே போல மக்கள் தொலைக்காட்சியில் செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 8 மணிக்கும் ஒளிபரப்பாக போகிறது ... ( நமக்கும் பப்ளிசிட்டி வேணுமில்ல )
- இது போன்ற சந்திப்புகள் பதிவுலகத்தை நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியே ... தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு நல்ல படியாக நடப்பதற்கு காரணமாய் இருந்த அனைவருக்கும் , உறுதுணையாய் இருந்த மக்கள்சந்தை .காம் நிறுவனத்திற்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் . கருத்துக்களால் நாம் வேறுபட்டிருந்தாலும் , அனைவரும் பதிவர்களாக ஒன்றுபட்டுள்ளோம் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு காட்டுகிறது . இந்த பதிவிற்கு எல்லா தளங்களிலும் ஓட்டுக்களை போட்டு அந்த ஒற்றுமையை நாம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்வோமாக ... ( ஹி ...ஹி )