11 May 2014

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - VPA - வாய்சண்டை ...


துவரை தமிழ் ஹீரோக்களுக்கு திரையில் நண்பனாக  இருந்து பல ஹிட்களுக்கு தோள் கொடுத்த  சந்தானம் தன் சொந்த செலவில் சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் . வல்லவன் வெல்வானா ? பார்க்கலாம் ...

பூர்வீக சொத்தை விற்பதற்காக  முதன்முறை சொந்த ஊருக்கு செல்கிறான் சக்தி ( சந்தானம் ) . அங்கே பழைய பகைக்காக தன்னைக் கொல்லத் துடிக்கும் ராயர் ( நாகிநேடு ) குடும்பத்திடமே விஷயம் தெரியாமல் தஞ்சமடையும் சக்தி உயிர் பிழைத்தானா என்பதே வ.பு.ஆ ...

உடல் எடையை குறைத்து , டஃப் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் போட்டு ஹீ ரோவாக  தன்னை முன்னிறுத்த  நிறையவே மெனக்கட்டிருக்கிறார் சந்தானம் . " படிச்சவனுக்கு ஐ.டி கம்பனி , படிக்காதவனுக்கு நைட்டி கம்பனி " என்று சந்தானத்தின் ஒன் லைனர்கள் வழக்கமாக ரசிக்க வைத்தாலும் ட்ரெயினில் சந்தானம் - ராஜ் காம்பினேஷனில் வரும் லொள்ளு சபா டைப்  காமெடிகள்  கடிகளாக மாறி நமக்கு  ரத்தம் வர வைக்கின்றன . முதல்பாதியில் நிறைய நேரம் இதில் செலவிட்டதை தவிர்த்திருக்கலாம் ...


ரியா சென் சாயலில் இருக்கும் ஹீரோயின் அஷ்னா எதிர்பார்த்தது போலவே சந்தானத்தை காதலித்து , க்ளைமேக்ஸில்  அழுது புலம்பி தன் குடும்பத்தினரிடமிருந்து அவர் உயிரை காப்பாற்றுகிறார் . செந்தாமரை ஸ்டைல் கிருதா , ஜெயப்ரகாஷ் முகவெட்டுடன் வரும் நாகிநேடு தமிழுக்கு நல்ல வரவு . டாப் டக்கரு பாட்டில் மட்டும் இசையமைப்பாளர் தெரிகிறார் ...

சாங்ஸ்  ,  ஒன் லைனெர் காமெடி இப்படி ஸ்லோவாக நகரும் முதல் பாதி ராயரின் வீட்டிற்குள் சந்தானம் வந்தவுடன் சூடு பிடிக்கிறது . எதிரியாகவே இருந்தாலும் தன் வீட்டுக்குள் இருக்கும் போது விருந்தாளி , அவன் வெளியே வந்தால் தான் கொல்வோம் என்கிற நாகிநேடு குடும்பத்தின்  செண்டிமெண்டும்  , அதை பயன்படுத்தி சந்தானம் தன் உயிரை காப்பாற்ற போடும் திட்டங்களும்  மட்டுமே படத்தை தூக்கி நிறுத்துகின்றன . ஹீரோவானவுடன் சண்டையெல்லாம் போடாமல் தன் சக்திக்கேற்றபடி சந்தானம் நடித்திருப்பது ஆறுதல் ...

எஸ்.எஸ்.ராஜமௌலியின் " மரியாத ரமணா " விலிருந்து மாறாமல் ரீ மேக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் . நண்பன் யாருமில்லாமல் மொத்த காமெடி சுமையையும் சந்தானத்தின் மேலேயே சுமத்தியிருப்பது குறை . மொக்கை காமெடிகளுடன் நகரும் முதல் பாதி , எதிர்பார்த்தது போலவே வரும் அடுத்தடுத்த சீன்கள் போன்றவற்றை தவிர்த்து விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருந்தால் அனைவரின் மனதையும் வென்றிருப்பான் வல்லவன் . மற்றபடி குடும்பத்துடன் பார்ப்பதற்கு நல்லவனாக இருந்தாலும்
வல்லவன் போட்டது வாய்சண்டையே ...

ஸ்கோர் கார்ட் : 40 

Related Posts Plugin for WordPress, Blogger...