11 May 2014

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - VPA - வாய்சண்டை ...


துவரை தமிழ் ஹீரோக்களுக்கு திரையில் நண்பனாக  இருந்து பல ஹிட்களுக்கு தோள் கொடுத்த  சந்தானம் தன் சொந்த செலவில் சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் . வல்லவன் வெல்வானா ? பார்க்கலாம் ...

பூர்வீக சொத்தை விற்பதற்காக  முதன்முறை சொந்த ஊருக்கு செல்கிறான் சக்தி ( சந்தானம் ) . அங்கே பழைய பகைக்காக தன்னைக் கொல்லத் துடிக்கும் ராயர் ( நாகிநேடு ) குடும்பத்திடமே விஷயம் தெரியாமல் தஞ்சமடையும் சக்தி உயிர் பிழைத்தானா என்பதே வ.பு.ஆ ...

உடல் எடையை குறைத்து , டஃப் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் போட்டு ஹீ ரோவாக  தன்னை முன்னிறுத்த  நிறையவே மெனக்கட்டிருக்கிறார் சந்தானம் . " படிச்சவனுக்கு ஐ.டி கம்பனி , படிக்காதவனுக்கு நைட்டி கம்பனி " என்று சந்தானத்தின் ஒன் லைனர்கள் வழக்கமாக ரசிக்க வைத்தாலும் ட்ரெயினில் சந்தானம் - ராஜ் காம்பினேஷனில் வரும் லொள்ளு சபா டைப்  காமெடிகள்  கடிகளாக மாறி நமக்கு  ரத்தம் வர வைக்கின்றன . முதல்பாதியில் நிறைய நேரம் இதில் செலவிட்டதை தவிர்த்திருக்கலாம் ...


ரியா சென் சாயலில் இருக்கும் ஹீரோயின் அஷ்னா எதிர்பார்த்தது போலவே சந்தானத்தை காதலித்து , க்ளைமேக்ஸில்  அழுது புலம்பி தன் குடும்பத்தினரிடமிருந்து அவர் உயிரை காப்பாற்றுகிறார் . செந்தாமரை ஸ்டைல் கிருதா , ஜெயப்ரகாஷ் முகவெட்டுடன் வரும் நாகிநேடு தமிழுக்கு நல்ல வரவு . டாப் டக்கரு பாட்டில் மட்டும் இசையமைப்பாளர் தெரிகிறார் ...

சாங்ஸ்  ,  ஒன் லைனெர் காமெடி இப்படி ஸ்லோவாக நகரும் முதல் பாதி ராயரின் வீட்டிற்குள் சந்தானம் வந்தவுடன் சூடு பிடிக்கிறது . எதிரியாகவே இருந்தாலும் தன் வீட்டுக்குள் இருக்கும் போது விருந்தாளி , அவன் வெளியே வந்தால் தான் கொல்வோம் என்கிற நாகிநேடு குடும்பத்தின்  செண்டிமெண்டும்  , அதை பயன்படுத்தி சந்தானம் தன் உயிரை காப்பாற்ற போடும் திட்டங்களும்  மட்டுமே படத்தை தூக்கி நிறுத்துகின்றன . ஹீரோவானவுடன் சண்டையெல்லாம் போடாமல் தன் சக்திக்கேற்றபடி சந்தானம் நடித்திருப்பது ஆறுதல் ...

எஸ்.எஸ்.ராஜமௌலியின் " மரியாத ரமணா " விலிருந்து மாறாமல் ரீ மேக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் . நண்பன் யாருமில்லாமல் மொத்த காமெடி சுமையையும் சந்தானத்தின் மேலேயே சுமத்தியிருப்பது குறை . மொக்கை காமெடிகளுடன் நகரும் முதல் பாதி , எதிர்பார்த்தது போலவே வரும் அடுத்தடுத்த சீன்கள் போன்றவற்றை தவிர்த்து விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருந்தால் அனைவரின் மனதையும் வென்றிருப்பான் வல்லவன் . மற்றபடி குடும்பத்துடன் பார்ப்பதற்கு நல்லவனாக இருந்தாலும்
வல்லவன் போட்டது வாய்சண்டையே ...

ஸ்கோர் கார்ட் : 40 

2 comments:

shanuk2305 said...

Son of sardar Hindi film story

Kripa said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

நன்றிகள் பல...
நம் குரல்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...