18 February 2015

அனேகன் - ANEGAN - வேகன் ...


வி.ஐ.பி யின் வெற்றிக்கு பிறகு  அதே பாணி கமர்ஸியலோடு சேர்த்து தனுஷின் நடிப்புக்கும் தீனி போட்டிருக்கும் படம் அனேகன் . பஸ்ஸிலோ , ட்ரைனிலோ போகும் போது அநேகமாக அனைவரும் படித்திருக்கும் டைம் பாஸ் பாக்கெட் நாவல் டைப் கதை தான் அனேகன் . அதையே போரடிக்காமல் கொடுத்திருக்கிறது சுபா - கே.வி.ஆனந்த் கூட்டணி ...

ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் மது விற்கு ( அமைரா ) பல முகங்கள் , சம்பவங்கள்  முன் ஜென்ம நினைவாக வருகின்றன . முன் ஜென்ம காதலன் போலிருக்கும் அஸ்வினை ( தனுஷ் ) யும் காதலிக்கிறார் அமைரா. போன பிறவியில் தனக்கும் தன் காதலன் காளிக்கும் இழைக்கப்பட்ட அநீதியை கண்டுபிடிக்கும் அமைரா அதற்கு காரணமான வில்லனிடமிருந்து தப்பித்தாரா என்பதை லாஜிக் மீறல்கள் இருந்தாலும் க்ரிப்பான ஸ்க்ரீன்ப்ளே எனும் மேஜிக்கால் மறக்கடிக்க வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர் ...


தனுஸிற்கு வழக்கமான ஈஸி கோயிங்க் கதாபாத்திரம் தான் என்றாலும் நடிப்புக்கு தீனி போடுகிறான் காளி . 3 விதமான கெட்  அப்புகளிலும் வித்தியாசம் காட்டும் உடல்மொழி அவரின் சிறப்பு . சூனா ரூனா வுக்கு ஃபீலாகும் கூட்டம்  . டங்கா மாரிக்கு மெரசலாகிறது  . கார்த்திக்கை அஷ்வின் மிமிக் செய்யும் போது அப்ளாஸ் அள்ளுகிறது . கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது பழமொழி தனுஷிற்கு ஏகப் பொருத்தம் ...

மாஸ் ஹீரோ படத்தில் ஹீரோயினை  சுற்றி நகரும் கதை கிடைத்ததுக்கே அம்மணி அமைரா வுக்கு சுற்றிப்  போட வேண்டும் . 3 வித கெட்டப்புகளில் கொஞ்ச நேரமே வந்தாலும் நெஞ்சை நனைக்கிறார் சமுத்ரா . ஆல் த பெஸ்ட் அமைரா . பிரபு போல சேதாரத்தை அடித்தெல்லாம் நொறுக்காமல் செலெக்டிவான ரோலில் பின்னி எடுத்திருக்கிறார் கார்த்திக் . இவரது கேரக்டரை முதலில் வெறுமனே உலவ விட்டு பின் விஸ்வரூபம் எடுக்க விட்டிருப்பது சாமர்த்தியம் . கார்த்திக் தமிழில்  பேசினாலே புரிய நேரமாகும் , அவரை ஆங்கிலத்தில் ஓவராக அளவளாக விட்டிருப்பது  தான் கொஞ்சம் டப்பிங் பட ஃபீலை கொடுக்கிறது . ஆஷிஷ் வித்யார்த்தி க்கு கமிஷனராக அக்மார்க் வேஷம் . இவருக்கெல்லாம் ரிட்டையர்மெண்டே கெடையாதோ ?! . இவரது கேரக்டரில் உள்ள குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் ...



டங்கா மாரி தியேட்டரையே அதிர வைத்தாலும் ஹாரீஸ் - ஆனந்த் கூட்டணியின் முந்தைய படங்களின் மேஜிக் இதில் மிஸ்ஸிங் . விஜய் நடித்திருக்க வேண்டிய படம் அவரே தனுஷை ரெக்கமண்ட் செய்ததுக்கு முதலில் நன்றி . ஹீரோயினை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் நிச்சயம் பொருத்தமாக இருந்திருக்காது . க்ரைம் நாவல் டைப்பில் லாஜிக்கை  யோசிக்க விடாமல் நம்மை கதைக்குள் ஒன்ற வைக்கும் திரைக்கதையே படத்தின் பலம் . வில்லன் தரப்பு நியாத்துக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருப்பது ஆரோக்கியம் ...

முதல் இருபது நிமிடங்கள் வரும் பர்மா எபிசோட் படத்தின்  மெயின் கதைக்கு தேவை தானா ? ,கார்த்திக் கம்பெனியில் எல்லோரும் மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது மதுவுக்கு மட்டும் ஏன் பூர்வ ஜென்ம நினைவு வருகிறது ?தனுஷ்   மேல் மட்டும் ஆர்வம் காட்டும் அமைரா கூடவே உலா வரும் மற்ற பூர்வ ஜென்ம கேரக்டர்களை ஏன் கண்டு கொள்ளவே இல்லை ? அவ்வளவு பெரிய கம்பெனியில் திடீரென லிஃப்ட் விழுவது ஏன் ? ஆஷிஸ் வித்யார்த்தி ஏன் ஆர் வைத்த மோதிர விரலை மறைக்கிறார் ? 25 வருடங்கள் எதுவுமே ஆகாத போது ஏன் கார்த்திக் திடீரென பதறுகிறார் ? அவ்வளவு பெரிய ஆள் இந்த இரண்டு பேரின் கதையை முடிப்பதற்கு இவ்வளவு நாள் வெயிட் செய்ய வேண்டுமா ? இப்படி படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது தோன்றும்  நிறைய ஏன்களை படம் பார்க்கும் போது யோசிக்க விடாமல் வேகமாக திரைக்கதை அமைத்த விதத்தில் ஜெயிதிருக்கிறான் இந்த அனேகன் ...

ஸ்கோர் கார்ட் : 43 

2 comments:

Unknown said...

விமர்சனம் நல்லா இருக்கு....

மலர்

Anonymous said...

nalla vimarsanam boss

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...