1 March 2022

வலிமை வென்றதா ? Valaimai Tamil Movie Review


பொதுவாக மாஸ் ஹீரோ படம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும் அதுவே அந்த ஹீரோவின் படம் இரண்டு வருடங்களுக்குப் பின் அதுவும் ஹேட்ரிக் ஹிட் கொடுத்த இளம் இயக்குனரின் காம்போ வில் வந்தால் எதிர்பார்ப்பு எகிறாதா ?!  அஜித் - வினோத் காம்போ வில் அப்படி வந்திருக்கும் வலிமை வென்றதா? பார்க்கலாம் ... 

தங்கப்பதக்கத்திலிருந்து தற்போது வந்த ருத்ர தாண்டவம் வரை பார்த்துப் பழகிய நேர்மையான போலீஸ் அதிகாரி க்கும் எதிர்மறை வில்லனுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் வலிமை . அதில் நடுநடுவே மானே தேனே என்று காதல் காட்சிகளை வைக்காமல் அம்மா சென்டிமெண்டை கொட்டியிருக்கிறார் வினோத் ‌‌. அது என்னவோ ஹாலிவுட் படத்தையும் , பழைய தமிழ் படத்தையும் ரிமோட்டில் மாறி மாறி பார்த்த அனுபவத்தை கொடுப்பது தான் துரதிருஷ்டம் ...

அஜித் சட்டை யை கழட்டி வைத்து சண்டை போடவில்லை , பறக்க பறக்க பஞ்ச் டயலாக் பேசவில்லை ஆனால் பைக்கில் பறந்து பறந்து சட்டை போட்டு அதகளப்படுத்துகிறார் . வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் நடிப்பது ஆறுதல் என்றாலும் க்ளோஸ் அப் காட்சிகளில் வயது தெரிவதை தவிர்த்திருக்கலாம் . ஹீரோயின் இல்லை என்கிற குறையை ஹிமா குரேசி நீக்குகிறார் . தம்பி கேரக்டர் ட்விஸ்ட் என எதிர்பார்த்து வைத்திருந்தால் அது தான் வொர்ஸ்ட் . தெலுகு இறக்குமதி வில்லன் கார்த்திகேயன் கலக்கல் நடிப்பு ஆனால் அவர் பாத்திரப் படைப்பு அந்த அளவு கவரவில்லை ‌‌...

அஜித் , ஆக்சன் காட்சிகள் , இசை , ஒளிப்பதிவு எல்லாமே படத்திற்கு பலம் ஆனால் ஆக்சன் திரில்லர் படத்தை விறுவிறுப்பாக இரண்டு மணி நேரத்தில் முடிக்காமல் இரண்டாம் பாதியை இழுத்து அம்மா சென்டிமெண்டை கலந்தடித்தது பலவீனம் . சிலர் கழுவி ஊற்றும் அளவு படம் அவ்வளவு மோசமில்லை அதிரடி ஆக்சன்களுக்காக குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம் . மொத்தத்தில் பைக் ரேஸர்சை மையமாக வைத்து வந்திருக்கும் இந்த வலிமை பைக் புதுசு இன்ஜின் பழசு ...

ஸ்கோர் கார்ட். : 41 

ரேட்டிங்க். : 2.5 * 

இந்த படத்தின் வீடியோ விமர்சனத்தை Vanga Blogalam YouTube Channel ல் காணவும் 🙏 ...

அனந்து ...

7 November 2021

அண்ணாத்த - Annaatthe Tamil Movie Review

சூப்பர் ஸ்டார் - சிறுத்தை சிவா காம்பினேஷனில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு எந்த போட்டியுமில்லாமல் அல்லது போட்டியை ஓரங்கட்டி எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் அண்ணாத்த ‌‌. ரஜினி - நயன்தாரா ஜோடி சேர்ந்த தைரியத்தில் அதரப்பழசான அண்ணன் தங்கை பாச டெம்ப்ளேட் கதைக்கு அதை விட அதரப்பழசான திரைக்கதையுடன் அண்ணாத்த யை களமிறக்கியிருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா ...

 71 வயதிலும் இன்றைய நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் படி துடிப்பாக இருக்கிறார் ரஜினி. பச்சக்கிளி என்று அவர்  ‌‌‌சூரியை அழைப்பதே தனி ஸ்டைல் . ஸ்டேஷனில் பிரகாஸ்ராஜை கலாய்ப்பது , முறைப்பெண்கள் மீனா , குஷ்பு வை சமாளிப்பதென என எல்லாமே ரஜினி ஸ்டைல் கலகலப்பு . வக்கீல் நயன்தாரா ரஜினி யை பார்த்தவுடனே எந்த வாதமும் பண்ணாமல் விழுந்து விடுகிறார் . கீர்த்தி சுரேஷ்க்கு இயக்குனர் இது சன் டிவி யின் சீரியல்  என்று சொல்லிவிட்டார் போல படம் முழுவதும் ஒரே மாதிரியான சோக முகபாவம் . வில்லன்கள் பெரிய எதிர்ப்பு இல்லாமல் சரணடைவது சறுக்கல் ...

இமானின் இசையில் சாரக்காற்று பாடல் வருடுகிறது மற்றபடி பிண்ணனி இசை  வெறும் இரைச்சல் . ரஜினி யின் எனர்ஜி , சன் மார்க்கெட்டிங் , மெகா ரிலீஸ் எல்லாமே ப்ளஸ் மற்றவை எல்லாம் மைனஸ் தான் . மாஸ் ஹீரோ படத்தில் கதை லாஜிக் எல்லாம் பெரிதாக யோசிக்க வேண்டாம் ஆனால் திரைக்கதை என்கிற வஸ்துவையும் சிவா தீபாவளி தள்ளுபடியில் விட்டது தான் வேதனை ...

அண்ணாத்த கிராமத்தில் இருக்கும் வரை அப்படியிப்படி நம்மை சமாளித்து விடுகிறார் ஆனால் கொல்கத்தா போனவுடன் வில்லன்களோடு சேர்ந்த நம்மையும் வதம் செய்கிறார் . தீபாவளி விடுமுறையாலும் , பெரிய போட்டி இல்லாததாலும் முதல் வாரம்  அண்ணாத்த வசூல் செய்வார் . மற்றபடி சீரியலை மிஞ்சும் ஓவர் செண்டிமென்ட் , ஒட்டாத ஆக்சன் , திருப்பாச்சி கதை , வேதாளம் காட்சிகள் என கம்பீரமாக நிற்காமல் அந்தரத்தில் தொங்குகிறார் இந்த அண்ணாத்த ...

ரேட்டிங்க். : 2* 

வீடியோ விமர்சனத்தை கீழே காணவும் ...

https://youtu.be/JtQKKxypwYw














  


3 November 2021

ஜெய் பீம் - JAI BHIM Movie Review



சூரரை போற்று வெற்றியை தொடர்ந்து ஓடிடி யின் சூப்பர் ஸ்டார் சூர்யா முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்த போது காவல்துறையின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு நீதி வாங்கி கொடுத்த நிஜ சம்பவத்தை படமாக தயாரித்து நடித்திருப்பதே ஜெய் பீம் . பெயருக்கேற்றது போலவே படம் பழங்குடி மக்களுக்கான நியாயத்தை பேசுகிறது ‌‌...

சூர்யா படம் ஆரம்பத்து அரைமணி நேரத்தை நெருங்கும் போது தான் வருகிறார் . தனக்காக ஹீரோயிசம் செய்யாமல் கதையோடு இயல்பாக வருவது ஆறுதல் ‌‌. பழங்குடி தம்பதிகள் மணிகண்டன் , ஜோஸ் இருவருமே வாழ்ந்திருக்கிறார்கள் . ஸஜயன், எம்.எஸ் பாஸ்கர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள் ‌‌. அதிலும் எம்எஸ் சம்பந்தமில்லாமல் சிவாயநம என்கிறார் . பிராகாஸ் ராஜின் பங்களிப்பு அருமை ‌‌.‌கதிரின் ஒளிப்பதிவு பலம் . ஷான் ரோல்டனின் இசை சில இடங்களில் இரைச்சலாக இருந்தாலும் ரசிக்க முடிகிறது ...

உண்மை சம்பவத்தை சினிமாவுக்கேற்ற மாதிரி அழகாக வடிவமைத்திருக்கிறார்கள் .‌ விறுவிறுப்பான திரைக்கதையும் உதவியிருக்கிறது . ஹீரோவுக்கென தனி காட்சிகள் இல்லாமல் கதையோடு ஒன்றி வருவதற்கு பாராட்டுக்கள் ...

படம் விசாரணை , கர்ணன்‌ படங்கள் போல போலீஸ் வன்முறையை காட்டுகிறது ஆனால் அதிலேயே நீண்ட பயணம் செய்வது அலுப்பை தருகிறது . ஹீரோயிசம் இல்லையென்றாலும் ஹீரோ ஈஸியாக எல்லாவற்றையும் கண்டுபிடிப்பது சறுக்கல் . பலர் பாராட்டுவது போல குறிப்பாக ஆனந்தவிகடன் 57 மார்க் ! தருமளவிற்கெல்லாம் படம் வொர்த் இல்லை இருந்தாலும் உண்மை சம்பவத்தை போரடிக்காமல் சொன்ன விதத்தில் ஜெய் பீம் ஜெயம் ...

ரேட்டிங்க் - 3.50* 

வீடியோ விமர்சனத்திற்கு கீழே காணவும் .

https://youtu.be/tQ1e2DN_Ztc


31 October 2021

என்னங்க சார் உங்க சட்டம் - Yennanga Sir Unga Sattam Review


புதுமுக இயக்குனர் பிரபு  ஜெயராம் உண்மையிலேயே இது வரை தமிழ் சினிமாவில் வராத அல்லது தொடவே தயங்குகிற ஒரு கதையை படமாக்கியிருக்கியிருப்பதே என்னங்க சார் உங்க சட்டம் . இந்த படம் டூப்ளக்ஸ் வகையறா அதாவது முதல் பாதி ஒரு படம் இரண்டாவது பாதி வேறு படம் இரண்டும் க்ளைமேக்ஸில் இணையும் ...

அப்பாவின் சாதி வெறி பிடிக்காமல் எல்லா சாதி , மதத்திலும் பெண்களை காதல் பண்ணும் வழக்கமான தமிழ் சினிமாவின் லட்சிய ஹீரோவின் அட்டக்கத்தி ஜாலி  பயணம் முதல் பாதி ‌‌. ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு சாதிய அடிப்படையில் இல்லாமல் பொருளாதார , திறமை அடிப்படையில் அனைவருக்கும்  அர்ச்சகர் , அரசாங்க வேலை இரண்டுமே கிடைக்க வேண்டுமென்கிற கருத்தை எந்த காம்ப்ரமைசும் இல்லாமல் நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி சொல்லும் சீரியஸ் பயணம் இரண்டாம் பாதி ...

ஹீரோ ஆர்.எஸ்.கார்த்திக் முதலில் அட்டக்கத்தி தினேஸை நினைவு படுத்தினாலும் போகப்போக கவர்கிறார் . எல்லா சமூக பெண்களிடமும் இவர் அடிக்கும் காதல் லூட்டி கலகல ‌‌. ரோகிணி முதல் பாதியில் அப்பாவி அம்மா , இரண்டாம் பாதியில் சீரியஸ்  பத்ரகாளி என இரண்டிலுமே ஜொலிக்கிறார் . ஜுனியர் பாலையா தேர்ந்த நடிப்பில் தானொரு சீனியர் என நிரூபிக்கிறார் .‌‌‌‌‌ பாடல்கள் , பிண்ணனி இசை இரண்டுமே பலம் ...

இரண்டு படங்களை கோர்க்கும் ஐடியா நன்றாக இருந்தாலும் ஜென்டில்மேன் போல சீரியஸ் படத்தை கமர்சியல் எலிமெண்ட்ஸோடு ஒரே படமாக எடுத்திருந்தால் இன்னும் சுவாரசியமாக படத்தோடு ஒன்ற முடிந்திருக்கும் . முதல் பாதி சம்பவங்கள் நன்றாக இருந்தாலும் சம்பவமாகவே தொடர்வது பொறுமையை சோதிக்கிறது . சில குறைகளை தவிர்த்து பார்த்தால் இட ஒதுக்கீடு , அர்ச்சகர் நியமனம் உட்பட சீரியஸ் சப்ஜெக்டை தொட்ட தைரியம் , " எல்லோரும் என்ன ஏன் சாமின்னு ஒதுக்குறா? நான் மட்டும் ஏன் மாஞ்சு மாஞ்சு படிக்கணும் ? யாரோ பண்ண தப்புக்கு நான் எப்படி பொறுப்பாவேன் ? எல்லா சாதியிலும் மலம் அள்ள துடிக்குறாளா ? என்பது போன்று ஐயர் பையன் கேட்கும்  சாட்டையடி கேள்விகள் இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது படம் ஒரு உண்மையான சமூக நீதி ...

ரேட்டிங்க் : 3.25*

முழு விமர்சனத்தை கீழே உள்ள வீடியோவில் காணவும் ...

https://youtu.be/2jluAAGQ3iI


15 October 2021

வினோதய சித்தம் - Vinodhaya Sitham Movie Review ...


நீண்ட இடைவெளிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கி , தம்பி ராமையா வுடன் இணைந்து நடித்திருக்கும் படம் வினோதய சித்தம் . குரு பாலச்சந்தர் போலவே பிரபலமான நாடகத்தை படமாக்கியிருக்கிறார் சிஷ்யன் சமுத்திரக்கனி ...

பெரிய கம்பெனியில் ஏஜிஎம் ஆக இருக்கும் பரசுராம் ( தம்பி ராமையா ) குடும்பமும் , ஆஃபீசும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ,  அவரில்லாமல் எதுவும் நடக்காதெனனவும்  நினைக்கிறார் . திடீரென விபத்தில் அவர் இறந்து விட காலனிடம் ( சமுத்திரக்கனி ). கெஞ்சி தனது கடமைகளை முடிக்க மூன்று மாதம் அவகாசம் வாங்கி  மீண்டும் பூமிக்கு வருகிறார் . அவர் நினைத்து நடந்ததா என்பதை ஒன்றரை மணி நேரத்திற்கு சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்வதே வினோதய சித்தம் ...


வழக்கம் போல அறிவுரைகளை அள்ளி வழங்காமல் படத்திற்கு தேவையானதை மட்டும் தந்திருக்கும் சமுத்திரக்கனி பெரிய ஆறுதல் ‌‌. நாடகத்தை ரீமேக் செய்தாலும் முடிந்தவரை நாடக பாணியியை தவிர்த்தது நலம் . தம்பி ராமையா கேரக்டரை நமக்கு தெரிந்து இறந்த யாருடனாவது தொடர்பு படுத்தி பார்க்க வைப்பது படத்தின் பலம் ...


ஆங்காங்கே தம்பி ராமையா வின் ஓவர் ஆக்டிங் , எதிர்பார்த்தது போலவே நடக்கும் சில சீன்கள் , இந்து மத தத்துவங்களை பேசினாலும் கருப்பு சட்டையுடன் வரும் சமுத்திரக்கனி யின் முரண் இவற்றை தவிர்த்து பார்த்தால் வினோதய சித்தம் உணர வேண்டிய விசித்திர அனுபவம் ..‌‌

ரேட்டிங்க். :  3.25 * 




 

 

19 September 2021

அனெபல் சேதுபதி - ANNABELLE SETHUPATHY - ஆள விடுங்க சேதுபதி ...


விஜய் சேதுபதி - டாப்சீ பன்னு நடிப்பில் பிரபல இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி யில் நேரடியாக ரிலீஸ் ஆகியிருக்கும் படம் அனெபல் சேதுபதி . கதையை பற்றியெல்லாம் கவலைப்படாமல் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி க்கு இந்த அனபெல் ஒரு அலார்ம் பெல் ...

ஷாஜகான் மும்தாஜுக்கு தாஜ்மஹால் கட்டியது போல தன் வருங்கால பிரிட்டீஷ் மனைவி அனபெல்லுக்காக ( டாப்ஸீ ) அரண்மனை கட்டுகிறார் மன்னர் வீர சேதுபதி( விஜய் சேதுபதி )  ‌‌. அதை மற்றொரு மன்னர்  ( ஜெகபதி பாபு ) அபகரிக்க அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் என்ன ஆகிறதென்பதை ஹரர் காமெடியில் !  சொல்வதே அனெபல் சேதுபதி . 


வதவதவென்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஎஸ் இதில் நடித்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் டாப்ஸீ இந்த அதரப்பழசு கதைக்கு எப்படி ஒத்துக்கொண்டார் என தெரியவில்லை . அரண்மனை , சங்கிலி புங்கிலி கதவை திற படங்கள் மாதிரியான கதைக்கு திரைக்கதை யும் கை கொடுக்கவில்லை ...

ஹாரர் , காமெடி , காதல் மூன்றும் படத்தில் இருக்கிறது . ஆனால் எதுவும் உருப்படியாக இல்லை . படத்தில் வரும் பேயை பார்த்து பயம் வரவில்லை ஆனால் அடுத்து பார்ட் 2 வரும் என்கிறார்கள் அதை நினைத்தால் தான் பயந்து வருகிறது . யோகி பாபு , மதுமிதா , தெலுகு காமெடியன் ராஜேந்திர பிரசாத் இவர்களெல்லாம் இருந்தும் காமெடி சுத்தமாக இல்லை . அரண்மனை டிவி செட் போல இருக்கிறது . பிண்ணனி இசை ஆறுதல் . மொத்தத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓடும் இந்த அனபெல் சேதுபதி - ஆள் விடுங்க சேதுபதி ....

ரேட்டிங் : 2 * 

இந்த படத்தின் வீடியோ விமர்சனத்தை கீழே காணவும் ...


https://youtu.be/_AXyCxqlrPA






11 September 2021

தலைவி - THALAIVII - பட விமர்சனம் ...


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரை அறிமுகம் 1965 ல் இருந்து முதல்வராக அறிமுகமான 1991 வரை உள்ள காலகட்டத்தை திரை வடிவில் பதிவு செய்வதே தலைவி .‌‌ இளைய தளபதி விஜய்யுடன் கை கோர்த்தும் தலைவா வில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட இயக்குனர் விஜய் அதை கங்கனா வுடன் சேர்ந்து  தக்க வைத்துக்கொண்டாரா ? பார்க்கலாம் ....          

16 வயது முதல் 41 வயது வரையான முன்னாள் முதல்வரின் வாழ்க்கையை பல மொழிகளில் எடுக்கும் படத்திற்கு கங்கனா கரெக்டான தேர்வு ‌‌. சின்ன வயது குறும்பு , பெரிய வயது வெறுப்பு எல்லாவற்றையும் கண் முன் நிறுத்துகிறார் . தொப்பை , குண்டடிக்கு பிறகு பேச்சு இது தவிர மற்றதில் எம்ஜிஆர் ஆக மாறி நிற்கிறார் அரவிந்த்சாமி .‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ எம்ஆர்வி வேடத்தில் சமுத்திரக்கனி சரியான தேர்வு ‌...


கலை இயக்கம் , மேக்கப் , நடிக நடிகையர் நடிப்பு , ஒளிப்பதிவு என எல்லாமே படத்துக்கு பலம் ‌‌. எம்ஜிஆர்- ஜெ நட்பு காதலாவது , யாரையும் எம்ஆர்வி எம்ஜெஆர் உடன் நெருங்க விடாதது , எம்ஜெஆர் - கருணா ஈகோ என எல்லாவற்றையும் அழகாக பதிவு செய்கிறார் இயக்குனர் . சட்டசபையில் ஜெவை எதிர்க்கட்சியினர் அடித்து வெளியேற்றும் முதல் காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து அதன் பிறகு ஃப்ளாஷ்பேக்கில் இடைவேளை வரை சீராக செல்கிறது படம் ...

செட்டுக்குள் நடக்கும் காதல் காட்சிகளை தத்ரூபமாக எடுத்த இயக்குனர் நிஜத்தில் வரும் அரசியல் களத்தில் சினிமாத்தனத்தை புகுத்தி தடுமாறியிருக்கிறார் . சோ, நடராசன் இவர்களை பற்றிய எந்த சீனும் இல்லாதது இருட்டடிப்பு . சில காட்சிகளில் உள்ள செயற்க்கைத்தனம் நம்மை ஒன்ற விடாமல் தடுக்கிறது ‌‌. சில தடுமாற்றங்கள் இருந்தாலும் பல வருடங்களாக வெற்றியே இல்லாமல் தேங்கியிருக்கும் இயக்குனர் விஜய் நல்ல படி மீண்டு வந்த விதத்தில் தலைவி - தன்னம்பிக்கை ...

 ரேட்டிங்க்.     : 3 *

இந்த விமர்சனத்தை வீடியோவில் காண இங்கே சொடுக்கவும் ...


<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/0vNEYzLUY3Y" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

15 August 2021

நெற்றிக்கணஂ - NETRIKANN - மாலைக்கண் - திரை விமர்சனம் ...


நயன்தாரா நடிப்பில் அவரது காதலர் விக்னேஸ் சிவன் தயாரிப்பில் டிஸ்னி ப்ளஸ்  ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் நெற்றிக்கணஂ . இது பத்து ஆண்டுகளுக்கு முன் வந்த ப்ளைண்ட் கொரியன் படத்தின் ரீ மேக் . நெற்றிக்கண் திறந்ததா பார்க்கலாம் ...

சிபிஐ ஆபீசர் துர்கா ( நயன்தாரா ) கார் ஆக்சிடெண்டில் தன் தம்பி , வேலை , பார்வை எல்லாவற்றையும் இழந்து தடுமாரி வாழ்ந்து கொண்டிருக்கிறார் . அவர் வாழ்க்கையில் பெண்கள்  கடத்தி செக்ஸ் டார்ச்சர் செய்யும் ஒரு டாக்டர் சைக்கோ ( அஜ்மல் ) குறுக்கே  வருகிறான் . அவன் செய்கையில் சந்தேகம் கொள்ளும் துர்கா போலீசை நாடுகிறார் . போலீஸ் உதவியுடன் அவர் அந்த சைக்கோவை பிடித்தாரா என்பதே படம் ...



மாயா , அறம் வெற்றிக்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டாராக மாறியிருக்கும் நயனுக்கு இது ஏற்ற படம் . நயன் போலீசிடம் தகவல் சொல்லும் காட்சி , அஜ்மலை விசரரிக்கும் காட்சிகளில் தியெட்டரில் ரிலீஷ் அகியிருந்தால் விசில் பறந்திருக்கும் . அஜ்மலுக்கு வழக்கமான சைக்கோ கேரக்டர் அதனால் பெரிதாக எடுபடவில்லை . சப் இன்ஸ்பெக்டராக வந்து நயனுக்கு உதவி செய்யும் மனிகண்டன் ஜொலிக்கிரார் . இதுவும் கடந்து போகும் பாடல் , பின்னணி இசை இரண்டிலும் கிரிஸ் கோபாலகிருஷ்னன் ஸ்கோர் செய்கிறார் . 

படத்தின் ஆரம்ப காட்சிகளில் , இன்டர்வெல் வரை அடுத்தடுத்த நகர்வுகள் படத்துக்கு பலம் . மெட்ரோ வில் நயன் நாயுடன் போவது , எந்த செக்யூரிட்டியும் இல்லாமல் மெட்ரோ ,  மால் எல்லாம் இருப்பது, விடியோ காலில் ஸ்கிரீன் ஷாட் எடுக்காமல் நம்பியார் காலத்து பாணியில் ஸ்கெட்ச் வரைந்து குற்றவாளியை கண்டுபிடிப்பது எல்லாம் லாஜிக் சொதப்பல். சுருக்கமா சொன்னால் சின்னதம்பி கவுன்டமணிக்கு ஆறு மணி வரை ஆறு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் அண்டாவின் கரையை பார்க்கும் அளவுக்கு  கண் பார்வை இருந்தும் ஆறு மணிக்குப் பின் எதுவுமே தெரியாதது  போல இண்டர்வெல் வரை நன்றாக  போய் அதன் பிறகு தடுமாறும் நெற்றிக்கண் -  மாலைக்கண் ...   

ரேட்டிங்க் : 2.75 *  

இதன் வீடியோ விமர்சனத்தை Vanga Blogalam  யூ டியூப் சேனலில் காணவும் ...

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/jKYY7GG6GI4" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

1 August 2021

திட்டம் இரண்டு திரை விமர்சனம் | THITTAM IRANDU FILM REVIEW BY VANGA BLOGALAM ...


கனா , க.பெ.ரணசிங்கம் வெற்றியை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷை யின் மெயின்லீடாக வைத்து சீரியல் மற்றும் குறும்பட பிரபலம் விக்னேஷ் கார்த்திக் இயக்கி சோனிலிவ் ஓடிடி யில் நேரடியாக ரிலீஸ் ஆகியிருக்கும் தமிழ்ப்படம் திட்டம் இரண்டு . இவர்கள் இருவரும் இணைந்து தீட்டிய திட்டம் பலித்ததா ? பார்க்கலாம் ...

இன்ஸ்பெக்டர் அ(ஆ)திரா ( ஐஸ்வர்யா ராஜேஷ் ) வுக்கு பேருந்து பயணத்தின் சக பிரயாணி அர்ஜுனை ( சுபாஷ் செல்வம் ) பிடித்துப் போக காதலிக்க ஆயத்தமாகிறார் ‌‌இதற்கிடையில் தனது பால்ய தோழி சூர்யா காணாமல் போனதாக தகவல் வர கொஞ்சம் காதலை மறந்து விட்டு குறுக்கு விசாரணையில் இறங்குகிறார் . சூர்யா விபத்தில் இறந்ததாக அனைவரும் நம்ப அதிராவோ நம்பாமல் சூர்யாவின் கணவர் கிஷோர் , க்ளாஸ் மேட்  என அனைவரிடமும் விசாரணையை தீவிரமாக்குகிறார் . இதில் அவர் ஜெயித்தாரா ? சூர்யாவுக்கு என்ன தான் ஆனது என்பதை சாவகாசமாக அதே நேரம் க்ளைமேக்ஸில் சவுக்கடியாக சொல்வதே திட்டம் இரண்டு ...


ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு இன்ஸ்பெக்டராக பொருத்தமான வேடம் தான் ஆனால் படம் முழுவதும் ஒரே குழப்பமாகவே இருக்கிறார் ‌‌‌‌. மப்டியிலேயே பெரும்பாலும் வருவதும் எந்த ஆக்சன் சீனும் இல்லாததும் இவரை மனம்  இன்ஸ்பெக்டர் என்பதை நம்ப மறுக்கிறது ‌‌. ஆனால் சென்டிமென்ட் காட்சிகளில் ஜொலிக்கிறார் . அமைதியாகவே வந்தாலும் குரூரமாக சிரிக்கும் இடங்களில் சபாஷ் வாங்குகிறார் சுபாஷ் செல்வம் . சூர்யாவாக நடித்திருக்கும் அனன்யாவுக்கு கத்துவதை தவிர பெரிதாக வேலையில்லை இவர் கணவர் கிஷோர் கதாபாத்திரம் மெளனராகம் மோகனையே மிஞ்சும் படி இருக்கிறது ...

ஒளிப்பதிவு ,  பிண்ணனி இசை படத்திற்கு பலம் . எடிட்டிங் ஐஸ்வர்யா போலவே சம்பந்தம் இல்லாமல் ஜம்ப் ஆகிறது ‌‌. சமூக சிந்தனையுள்ள வித்தியாசமான கதை  , சின்ன பட்ஜெட்டில் சிம்பிளாக எடுத்த விதம் , ஆச்சர்யப்படுத்தும் க்ளைமேக்ஸ் எல்லாமே திட்டம் இரண்டில் பலிக்கின்றன . யார் கொலையாளி என்பதை சுத்தலில் விட்டாலும் மிகவும் சுவாரசியம் இல்லாத திரைக்கதை , பெரிதும் எடுபடாத மாற்றுத்திறனாளி ட்விஸ்ட், லாஜிக் சொதப்பல்கள் இவையெல்லாம் திட்டத்தில் பல்லிளிக்கின்றன . மொத்தத்தில் கதையாக நல்ல திட்டம் தீட்டிய இயக்குனர் திரைக்கதை வடிவத்தில் திட்டம் இரண்டை நன்றாக தீட்டாமல் விட்டு விட்டார் ...

ரேட்டிங் : 2.75 * 

இந்த விமர்சனத்தை வீடியோ வடிவில் காண கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/PNEZKk5l4YI?controls=0&amp;start=10" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

நன்றி , வணக்கம் 🙏 

வாங்க ப்ளாகளாம் அனந்து ...

திட்டம் இரண்டு , திரை விமர்சனம் ,  சினிமா









24 July 2021

சார்பட்டா பரம்பரை - SARPATTA PARAMBARAI - சக்சஸ் பரம்பரை


அட்டக்கத்தி , மெட்ராஸ் வெற்றிக்குப் பிறகு சூப்பர்ஸ்டாருடன் இணைந்து  கபாலி , காலா வில் சினிமா வெற்றியை விட தன் சித்தாந்தத்தை அதிகம் முன்னிறுத்தி தடம் மாறிய ரஞ்சித் , நான் கடவுள் படத்திற்கு பின்  தன்னை பெரிய நடிகராக நிரூபிக்க முடியாமல் தடுமாறிய ஆர்யாவும் இணைந்திருக்கும் படம் சார்பட்டா பரம்பரை . படம் வழக்கமான ஸ்போர்ட்ஸ் டெம்ப்ளேட் ட்ராமா  தான் என்றாலும் 1970களில் மெட்ராஸ் வடக்கு பகுதிகளில் பிரபலமான குத்துச்சண்டை குழுக்களை பற்றி நேர்த்தியாக எடுத்த விதத்தில் ரசிக்க வைக்கிறார் ரஞ்சித் ‌‌...

பரம்பரை என அழைக்கப்படும் குழுக்கள் பல இருந்தாலும் மிக பிரபலமான இரண்டு அணிகள் சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை . ‌‌தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சார்பட்டா பரம்பரை யின் வாத்தியார் ரங்கன்  ( பசுபதி ) வெற்றி பெற தனது மகன் வெற்றியை   ( கலையரசன் ) நம்பாமல் மற்றொரு சிஷ்யன் ராமுவை ( சந்தோஷ் ) நம்ப அவரோ குருவை நம்பாமல் வெளியூர் ஆளோடு பயிற்சியில் இறங்க கடுப்பாகிறார் கோச் ‌‌. அந்த நேரத்தில் ஏகலைவன் போல தூரமாகவே குத்துச்சண்டை யை கற்றுக்கொண்ட  குரு பக்தியுள்ள கபிலன் ( ஆர்யா ) ஆபத்பாந்தவனாக வருகிறார் . அவர் எதிரணியின் வேம்புலியை வென்று குருவின் மானத்தை காத்தாரா என்பதை விறுவிறுப்பாக இருந்தாலும் இடைவெளிக்குப்பின் கொஞ்சம் நீ...ட்டி சொல்வதே சார்பட்டா பரம்பரை....

ஆர்யா வின் கடும் உழைப்பு படத்திற்கு பெரிய பலம் . குறிப்பாக உடலை வருத்தி சிக்ஸ் ஆப்ஸோடு வருவதோடல்லாமல் குடிகாரனாகி தொப்பையோடு பழைய வெற்றியை நோக்கி ஏங்கும் இடங்களில் அதிகம் ஆச்சர்யப்படுத்துகிறார் . முதலிரவில் குத்தாட்டம் போட்டு முகம் சுளிக்க வைத்தாலும் " வாடா வந்து சோறு ஊட்டு " என்று ஆர்யாவை மிரட்டும் இடங்களில் அட போட வைக்கிறார் ஹீரோயின் துஷாரா . பசுபதி , கலையரசன்‌, சந்தோஷ் , ஜான் விஜய் எல்லோருமே கதாபாத்திரங்களாகவே  மாற்றியிருக்கிறார்கள் . அதிலும் டான்ஸிங் ரோசாக வரும் சமீர் , ஆர்யாவின் அம்மாவாக வரும் அனுபமா இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் ...                                                          

படம் முழுவதும் மிகப்பெரிய பட்டாளமே நடித்திருந்தாலும் பீடி ராயப்பா , ராமுவின் மாமா , வேம்புலியின் கோச் ‌, எம்ஜிஆர் ரசிகராக வரும் மாறன் என அனைவரையும் கவனிக்க வைக்கிறார் இயக்குனர் . செட் என்றே நம்ப முடியாத கலை இயக்கம் , சந்நதோஷ் நாராயணின் இசை என எல்லாமே அவருக்கு கை கொடுக்கின்றன . இதில் ஹீரோ வெற்றிக்கு பிறகு குடிக்கு அடிமையாகி பின் தெளிவானது போல ரஞ்சித்தும் கபாலி , காலா வுக்கு பிறகு தெளிவாகி  தனக்கான சரியான படத்தை தயாரித்து இயக்கியிருப்பதற்கு பாராட்டுக்கள் ...

கதை காலகட்டத்தின் படி எமர்ஜென்ஸி யின் போது திமுக எதிர்த்ததை பதிவு செய்த ரஞ்சித் குத்துச்சண்டை யில் ஆர்வம் கொண்டு அதை ஊக்குவித்த எம்ஜிஆர் அவர்களின் படத்தை படம் முடிவில் சின்னதாக போட்டு சுருக்கியது சீப் அரசியல் . சார்படடா பரம்பரை யில் சாதி, மதம் இல்லை என சொல்லப்பட்டாலும் இதிலும் வழக்கம் போல குறியீடுகள் மூலம் தனது சாதிப்பற்றை காட்டி சுய இன்பம் அடைந்திருக்கிறார் இயக்குனர் . ஆனால் கபாலி , காலா போல அதை ஓவர்டேக் பண்ண விடாமல் அடக்கி வாசித்ததால் நாம் பிழைத்தோம் . இன்டர்வெல் வரை வேகமாக செல்லும் படத்தை அதன் பிறகு இழுத்திருப்பதை தவிர்த்திருக்கலாம் . இது போன்ற சில குறைகளை ஒதுக்கி விட்டு பார்த்தால் நல்ல படமாகவும் , வணிக ரீதியாகவும் சார்பட்டா பரம்பரை - சக்சஸ் பரம்பரை ...

ரேட்டிங்.    : 3.5 *

இந்த படத்தின் யூடியூப் விமர்சனத்தை காண கீழே சொடுக்கவும் ‌‌. மறக்காமல் VANGA BLOGALAM  சேனலை சப்ஸ்க்ரைப் செய்யவும் .




                            நன்றி ! வணக்கம்  🙏  அனந்து ...




27 December 2020

சிறந்த தமிழ் படங்கள் 2020 | TOP 10 TAMIL MOVIES 2020




2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் படம் தர்பாருடன் அமர்க்களமாக ஆரமபித்தாலும்  கொரொனா எல்லா துறைகளையும் விட கூடுதலாகவே சினிமாவை பாதித்திருக்கிறது குறிப்பாக  தியேட்டர் ரிலீஸ் இல்லாததால் நிறைய பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஆயினும் ஒடிடி ஓரளவிற்கு ப்ரொடியூசர்களின் பாதிப்பை குறைத்திருக்கிறது என்றே சொல்லலாம் . 

இநஂத வருடம் தமிழ் சினிமா விற்கு சிறந்ததாக இல்லா விட்டாலும் ஓ மை கடவுளே , கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்கள் காசையும் , கவனத்தையும் பெறத் தவறவில்லை . 2020 ன் சிறந்த பத்து படங்களும் சில சிறந்த பங்களிப்பாளரகளின் பட்டியலும் இதோ உங்களுக்காக : 

சிறந்த 10 படங்கள்: 

1. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் .

2 . ஓ மை கடவுளே. 

3 . சைக்கோ .

4 . பாரம் .

5 . சூரரை போற்று. 

6 . அந்தகாரம். 

7 . க.பெ.ரணசிங்கம். 

8 . லாக் அப்  

9 . வானம் கொட்டட்டும் .

10. தர்பார் . 

சிறந்த நடிகர்: அர்ஜுன்தாஸ்.

( அந்தகாரம்)

சிறந்த நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ் 

( க.பெ.ரணசிங்கம்) 

சிறந்த குணச்சித்திர நடிகர் : 

விஜய் சேதுபதி ( ஓ மை கடவுளே)

சிறந்த குணச்சித்திர நடிகை :

நித்யா மேனன் ( சைக்கோ )

சிறந்த புதுமுகம் : 

ராஜ்குமார் ( சைக்கோ )

சிறந்த இயக்குனர் : 

மிஸ்கின் ( சைக்கோ ) 

சிறந்த இசையமைப்பாளர்: 

இளையராஜா ( சைக்கோ ) .

சிறந்த படம் : 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். 

சிறந்த பாடல் : 

உன்ன நினைச்சு நினைச்சு

 ( சைக்கோ).

சிறந்த பாடகர் : 

சித் ஸ்ரீராம் ( உன்ன நினைச்சு).

இந்த தொகுப்பை வீடியோவில் காண கீழே சொடுக்கவும் . 

https://youtu.be/whZS7TscEL8

அன்புடன் , 

வாங்க ப்ளாகலாம் அனந்து ...



 

16 November 2020

மூக்குத்தி அம்மன் | இந்துக்கள் மட்டும் இளிச்சவாயர்களா?!

ஆர்.ஜே.பாலாஜி தயாரித்து நடித்து என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியிருக்கும் படம் மூக்குத்தி அம்மன். இவர் முந்தைய எல்.கே.ஜி படத்தில் அரசியலை நையாண்டி செய்து வெற்றியடைந்ததைப் போல இதில் போலி சாமியார்களை கிண்டலடித்து வெற்றியடைந்தாரா? மூக்குத்தி அம்மன் ஜொலித்தாளா ?வாங்க பார்க்கலாம் ....

அப்பா ஓடிப்போனதால் மூன்று தங்கைகளையும் கரையேற்றும் பொறுப்பில் திணறிக் கொண்டிருக்காறார் பாலாஜி.  ஒரு நாள் குலதெய்வம் கோவிலில் மனமுறுகி வேண்ட நேரில் வரும் அம்மன் ( நயன்தாரா) இவரின் குறையை தீர்க்காமல் அவரின் மூலமாக ஊரையே வளைத்துப் போட நினைக்கும் போலி சாமியாரின் முகத்திரையை கிழிக்கிறார் ...

படத்திலேயே சொல்வது போல உண்மையிலேயே அழகான அம்மனாக நயன்தாரா படத்திற்கு பெரிய பலம் . ஆர்ஜே வாக இருந்து இயக்குனராக உயர்ந்திருக்கும் பாலாஜி திறமைசாலி ஆனால் ரேடியோ ஷோ போல படம் முழுவதுமே இவரே பேசிக் கொண்டிருப்பது போர் . ஊர்வசி ஓவர் ஆக்டிங்க் செய்து மேலும் வெறுப்பேற்றுகிறார் . மௌலி படத்தில் இருக்கிறார் அவ்வளவே!..

படத்தில் ஆங்காங்கே வசனங்கள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன . இடைவேளை வரை தேறும் படம் வில்லன் வந்த பிறகு படு மொக்கையாகி விடுகிறது . அதிலும் குறிப்பாக உலகமே வியக்கும் சாமியார் கதாபாத்திரத்தை படு கேவலமாகவா காட்டுவது . கவுண்டரிடம் அடி வாங்கும் செந்தில் போல ஆள் படு வீக் ...

இந்துக்கள் என்றுமே விமர்சனங்களை சகித்துக் கொள்பவர்கள் எனபதற்காக அம்மனை " உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் " என்றெல்லாம் பாடி அழைப்பது சுத்த கேப்மாரித்தனம் . மனோபாலா வை வைத்து எடுத்த பவர் பாஸ்டர் கிண்டல் சீன்களை மட்டும் நீக்கியிருக்கிறார்கள் . இந்துக்கள் மட்டும் இளிச்சவாயர்களோ?! . நடுநிலையில்லாத படத்தில் நாகர்கோவிலை மட்டும் அழகாக காட்டியிருக்கிறார்கள் . மொத்தத்தில் மொக்கை காமெடிகளின் தொகுப்பாக இருக்கும் மூக்குத்தி அம்மன் ஜொலிக்கவில்லை ....

ரேட்டிங்க் :  2.25 * 

ஸ்கோர் கார்ட் : 38  

வாங்க ப்ளாகலாம் அனந்து ...

இப்படத்தின் வீடியோ விமர்சனம் காண கீழே சொடுக்கவும் ...

https://youtu.be/iYAs7PWZyo4

15 November 2020

சூரரை போற்று | போற்றலாமா ? தூற்றலாமா ?!! I SOORARAI POTRU ...

சூர்யா தயாரிப்பு, நடிப்பில் சுதா கொங்குரா இறுதிசுற்று வெற்றிக்கு பிறகு நான்கு வருட இடைவெளியில் இயக்கியிருக்கும் படம் சூரரை போற்று . சாதாரணமான ஆட்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்கிற கனவை நிஜத்தில் நிஜமாக்கிய கேப்டன் கோபிநாத் எழுதிய அவரின் சுயசரிதை Simply fly புனைவை சினிமாவுக்காக மட்டுமில்லாமல் தனக்ககேற்றபடியும் சூர்யா - சுதா மாற்றியிருப்பதே சூரரை போற்று...

பெரியாரிய , கம்யூனிஸ சிந்தனைகளோடு வரும் சூர்யா பேசியே கொல்லப்போகிறார் என பயந்தால் நல்ல வேளை அடக்கி வாசித்திருப்பது ஆறுதல் . அதுவும் அபபாவை பார்க்கப் போக டிக்கட் காசில்லாமல் ஏர்போர்ட்டில் கெஞ்சும் இடம் அருமை.  பாரக்க ஊர்வசியின் தங்கை போலிருந்தாலும் நடிப்பிலும் , பாத்திரப் படைப்பிலும் அபர்ணா அசத்துகிறார் . பல கோடி ரூபாய் தேவைப்படும் இடத்தில் பதினோராயிரம் கொடுத்து விட்டு போதாதா என அப்பாவியாய் கேட்கும் கருணாஸ் கவனிக்க வைக்கிறார் ...

முகம் சாந்தமாய் இருந்தாலும் சகுனித்தனமான பார்வையில் வில்லத்தனத்தை காட்டத் தவறவில்லை பரேஷ் ராவத் . ஜி.வி.பிரகாஸ் குமாரின் இசையில் பின்ணணியும் , பாடல்களும் அருமை ...

சாதாரண மனிதன் பல போராட்டங்களை தாண்டி ஜெயிக்கும் தெரிந்த கதை தானென்றாலும் அதை திரைக்கதையில் சொன்ன விதத்தால் ஜெயிக்கிறார் சுதா . உண்மைக்கதையை அப்படியே எடுக்க முடியாது தான் அதற்காக அதை சொன்ன விதத்தில் கொஞ்சமாவது உண்மை வேண்டாமா ? சூர்யா அப்துல் கலாமை சந்திப்பது , ஊர் மக்கள் நிலத்தை அடமானம் வைத்து அவருக்கு பணம் அனுப்புவது , ஃப்ளைட்டை தரையிரங்க விடாமல் வில்லன் தடுப்பது என படத்தில் நிறைய பூ சுத்தல் ...

நிஜத்தில் இப்புத்தகத்தை எழுதியவர் ஐயங்கார் . ஆனால் அவர் கதாபாத்திரத்தை பிற்படுத்தப்பட்ட பெரியாரியவாதியாக காட்டுவதில் சுதா கொங்கரா , ஜுமித் மாங்கா என சாதியை பெயருடன் தாங்கியவர்களுக்கு என்ன அவசியமோ இல்லை அழுத்தமோ தெரியவில்லை . அமேசான் ப்ரைமுக்கும் , தொடர்  தோல்விகளால் தவித்த சூர்யாவுக்கும் இந்த சூரரை போற்று - சூர்யாவை தேற்று ...

ரேட்டிங்க்   : 3.25

ஸ்கோர் கார்ட்: 43

Pls Click below link to watch Video Review ...

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/1bFWGqPzCvI" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>






 



4 October 2020

அவன் - அவள்- நிலா ( 20 ) ...



கார்த்திக்கால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை . நேற்று வரை அவனிடம் உள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமா வரை பேசிக்கொண்டிருந்தவர் , எதிர்காலத்து அச்சம் , இறந்த காலத்து கசப்பு என எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டவர் , பணத்தாலும் , மனத்தாலும் நீயே ஆறுதல் என்று அங்கலாய்த்தவர் இன்று அவனிடம் சொல்லாமல் அல்லது சொல்ல வேண்டுமென்று கூட நினைக்காமல் தயாரிப்பாளரை பார்க்க தாவி ஓடியிருக்கிறார் . மனிதன் எவ்வளவு பெரிய சுயநலப்பிசாசு . அவனுக்கு துக்கத்தை பகிர்ந்து கொள்ளத்தான் ஆள் அதிகம் தேவைப்படுகிறது ...

அவரும் ராமசுப்பு போல இருப்பாரென அவன் எதிர்பார்க்கவில்லை . ராமசுப்பு அவனால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டவன் . பேசிய சிறிது நேரத்துக்குள்ளேயே அனைவரையும் கவர்ந்து விடும் வசீகரம் அவனிடம் இருந்தது . கேட்பவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் பெரும்பாலும் பேசுவான் . அவன் முகஸ்துதி செய்வதை மற்றவர்கள் அறியா வண்ணம் செய்வது அவன் தனிச்சிறப்பு . ஒருவரால் ஆவதற்கு காரியம் ஒன்றுமில்லை என தெரிந்த  பிறகு அவர்களுடன் பழகி அவன் நேரத்தை  வீணடிப்பதில்லை.
தன்னை விட மேம்பட்டவர்களிடம் சிறு வயதிலிருந்தே அவனுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது . அந்த இடத்தை அடைய வேண்டுமென்பதில் மட்டுமே முனைப்பாக இருப்பான் . அதற்கு இடையூறாக காதல் , கல்யாணம் இருக்குமென நினைத்ததால் அந்த பக்கமே அவன் இன்று வரை போகவில்லை ...

ஜானி படத்தில் வரும் தீபா கதாபாத்திரம் போல ஒன்றை விட மற்றது சிறந்ததென்றால் அதற்கு தாவும் மனநிலையில் தான் அவனிருந்தான் . அதனால் பாதிக்கப்படும் நட்புகளை அவன் பெரிதுபடுத்துவதில்லை . சினிமா என்கிற புள்ளி இணைத்ததால் தான் சென்னைக்கு வந்த புதிதில் வேலை பார்த்த ஆட் கம்பெனியில் கார்த்திக் அவனையும் சேர்த்து விட்டிருந்தான் .
சேர்ந்த சில நாட்களிலேயே அனைவருக்கும் அவனை பிடித்து விட்டது . இரவு எத்தனை மணி நேரமானாலும் கார்த்திக் வரும் வரை காத்திருந்து பேசி விட்டு செல்பவன் சிறிது காலம் கடந்தவுடன் விளம்பர ஏஜென்ஸியின்  ரெகுலர் கஸ்டமர் ரகுவுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தான் . கார்த்திக்கை விட பணத்தாலும் , பழக்கத்தாலும் சென்னையில் ரகு பெரியவனாக இருந்ததே அதற்கு முக்கிய காரணம் ...

ஒரே இடத்தில் தேங்காமல் ஆறு போல ஓடிக்கொண்டேயிருப்பதில் தவறில்லை தான் ஆனால் சுழலில் சிக்கிக் கொள்ளாமலிருக்க வேண்டும் . என்றுமே யாருடைய வளர்ச்சியையும் கண்டு கார்த்திக் கவலைப்பட்டதில்லை ஆனாலும் அந்த வளர்ச்சியில் கொஞ்சமாவது எதிக்ஸ் இருக்க வேண்டுமென்று நினைத்தான் . அதிலும் குறிப்பாக செய்நன்றி கொன்றவர்களை அவன் ஒரு போதும் மதிப்பதில்லை . சொப்பணசுந்தரியை இன்று யார் வைத்திருக்கிறார்கள்  என்பது போல நட்புகளை மாற்றி மாற்றி வளர்ந்து கொண்டே போன ராமசுப்பு இன்று ஏதோ பெரிய ப்ரொட்யூசருடன் ஒட்டிக்கொண்டிருப்பதாக கேள்வி ...

ஆனால் மகாலிங்கம் கதை வேறு என்பது போலவே அவனுக்கு பட்டது. அவருக்கு பெரிதாக சூட்சுமமெல்லாம் தெரியாது . அவர் அவனை தன்னை விட திறமைசாலி என்றே நினைத்திருந்தார் . அந்த நினைப்பே அவருக்கு ஒரு பயத்தை கொடுத்திருக்கலாம் . சினிமாத்துறையில் தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் இல்லையெனில் பிணமென நினைத்து கிடாசி விடுவார்கள் . அதீத எச்சரிக்கை உணர்வே ஒரு இனம் புரியாத பயத்தை கொடுக்கிறது . பயம் நல்லவன் யார் கெட்டவன் யாரென நம்மை யோசிக்க விடுவதில்லை . சுற்றியிருப்பவர்களை சந்தேகக் கணணோடு பார்க்க வைக்கிறது . சுந்தரி ஆண் நண்பர்களுடன் நிறைய பேசினாலும் அவன் சண்டையின் போது கிண்டல் செய்திருக்கிறானேயொழிய சந்தேகப்பட்டதில்லை . ஏனெனில் என்றுமே அவள் அவனை விட்டு விடுவாளோ என்கிற பயம் அவனுக்கில்லை . ஆனால் நாம் போடும் அதே கணக்கையே காலமும் போடுவதில்லை ...

இரவு பத்து மணிக்கு மேல் மகாலிங்கம் வந்தார் . அவர் போன காரியம் என்ன ஆனதென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கிருந்தது ஆனால் அவரே சொல்வது தான் முறையென நினைத்தான் அதுவும் அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் தான் அவர் சென்றிருக்கிறார் . அவன் மொட்டை மாடிக்கு படுக்க போய் விட்டான் . அவர் குளித்து விட்டு மேலே வந்தார்.  சிறிது நேர மௌனத்திற்கு பிறகு
 " என்ன தம்பி தூங்கியாச்சா ?" என்று அவரே ஆரம்பித்தார் . " நம்ம இவ்வளவு சீக்கிரம் எப்பண்ணே தூங்கிருக்கோம் !"  என்று பதில் சொல்லிக்கொண்டே அவர் பக்கம் திரும்பினான் கார்த்திக்...

தெரு விளக்கு வெளிச்சத்தில் அவர் முகம் பிரகாசமாக தெரிந்தது ஆனால் அவர் முகத்தில் அந்த பிரகாசம் இல்லை . " திரும்பவும் க்ளைமாக்ஸ மாத்தனுமாம் கொஞ்சம் பழசா இருக்காம் " அவர் அவனிடம் இதை சொல்லி விட்டு சட்டென முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் . அவனுக்கு அதற்கான அர்த்தம் புரிந்தது.  ஏற்கனவே க்ளைமாக்ஸில் அவனுக்கு முழு உடன்பாடு இல்லை ஆனால் அவர் தான் பிடித்த முயலுக்கு மூணு கால் போல பிடிவாதமாக இருந்தார் . அவனும் ஒரு லெவலுக்கு மேல் அதில் தலையிடுவது சரிப்படாது என்று விட்டு விட்டான் . உண்மையில் அவர் சொன்ன கதை அவனுக்கு பிடித்திருந்தது . அதில் சில சமரசங்கள் செய்து கொண்டால் வேறு லெவலில் இருக்குமென்பது அவன் கணிப்பு ...

என்ன தான் கதையை மாற்றி மாற்றி யோசித்து எழுதினாலும் கடைசியில் அதன் வெற்றி தோல்வி மக்கள் கைகளில் இருக்கிறது . எவ்வளவு தான் உழைப்பை கொட்டினாலும் அதிர்ஷ்டமும் கை கொடுக்க வேண்டும் . அதுவும் சினிமா உலகத்தில் அதிர்ஷ்டத்தின் தேவை அதிகமாகவே இருந்தது . காலையில் அவர் சொன்னாமல் போனதற்கு அவர் மேல் கோபத்தில் இருந்தான் . இரவோ அவர் நிலையை அறிந்ததும் அவருக்காக யோசிக்கத் தொடங்கி விட்டான் . அது தான் அவன் . என்றுமே அவன் யார் மேலும் வன்மமாக இருந்ததேயில்லை அந்த நேரத்தில் கோபத்தை அடக்க முடியாமல் கத்தியிருக்கிறான் ஆனால் சிலர் போல வெளியில் சிரித்து உள்ளே பகையை வளர்த்ததில்லை . அதனால் தான் அவனால் அவருடன் சேர்ந்து கதைக்கு இன்னும் பெட்டராக என்ன க்ளைமேக்ஸ் வைக்கலாம் என்று யோசிக்க முடிகிறது . அவன் அவருக்காக யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் காலம் அவனுக்கான எதிர்காலத்தை வேறு மாதிரி எழுத ஆயத்தமாகிக் கொண்டிருந்தது ...

தொடரும் ...


23 August 2020

லாக்அப் - LOCK UP - படம் எப்படி? ...

                                                                   

வெங்கட் பிரபு , வைபவ் காம்போவில் அவர்களது நண்பர் நிதின் சத்யா தயாரித்து Zee 5 ல் நேரடியாக ரிலீஸ் ஆகியிருக்கும் படம் லாக்அப் . புதுமுக இயக்குனர் சார்லஸ் இயக்கியிருக்கிறார் ...

வெங்கட் பிரபவிற்கு ஏற்ற டெய்லர் மேட் கேரக்டர் . கட்சிதமாக நடித்திருக்கிறார் . அமைதியாகவே வந்து போனாலும் தேவைப்படும் போது வில்லத்தனம் காட்டத்தவறவில்லை . வைபவ் தான் ஹீரோ என காட்டவோ என்னவோ ஒரு ஃபைட் அவர்க்கு எக்ஸட்ரா பார்ஸல் . வழக்கை விசாரிக்கும் ஈஸ்வரி ராவ் ரவுடியை அடிப்பதும் , வெங்கட் கலாய்ப்பதும் ஹைலைட் ...

இன்ஸ்பெக்டரை கொலை செய்தவனை கண்டுபிடித்து ப்ரமோசன் வாங்கலாமென நினைக்கும் வெங்கட்பிரபுக்கு அவன் கொலைகாரனல்ல என முட்டுக்கட்டை போடும் ஈஸ்வரி ராவிடமிருந்து ஆரம்பிக்கும் படம் இடைவேளை வரை விறுவிறுப்பாகவே போகிறது . வெங்கட்பிரபு _ வைபவ் இடையே நடக்கும் தில்லுமுல்லு திரைக்கதைக்கு உதவுகிறது ...

திரில்லர் படத்தில் படம் எதை நோக்கி போகுமென ஊகிக்க முடிவது சறுக்கல் . சுவாரசியத்துக்காக லாஜிக்கை கண்டுகொள்ளவில்லை . இரண்டு மணி நேரத்துக்குள் விறு விறு திரில்லராக வந்திருக்க வேண்டிய லாக்அப் சில தடுமாற்றங்களால் ஸ்டரக் அப் ஆகி நிற்கிறது ...

ரேட்டிங்க்: 2.75* / 5 * 

ஸ்கோர் கார்ட்: 41 .

இந்த விமர்சனத்தினை வீடியோவில் காண கீழே சொடுக்கவும் ...


<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/SvOu7m0MYto" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>



26 July 2020

DIL BACHERA - தில் பச்சேரா - HEART TOUCHING ...


கை போ சே ( Kai po che ) வில் அறிமுகமாகி தோணி மூலம் மிக பிரபலமாகி
சிச்சோர் ( CHICHCHORE ) வெற்றியின் மூலம் பாலிவுட்டின் கவனிக்கத்தக்க முன் வரிசை ஹீரோக்களுல் ஒருவரானவர் சுஷாந்த் சிங்க் ராஜ்புட் . ஆனால் துரதிருஷ்டவசமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார் . இவரது கடைசி படம் தில் பச்சேரா ( DIL BACHERA ) வை டிஷ்னீ + ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிட்டிருக்கிறார்கள் . அபோவ் ஆவெரேஜ் காதல் படம் ஹீரோவின் தற்கொலையால் அதிக முக்கியத்துவம் அடைந்திருக்கிறது ...

இரண்டு கேன்சர் நோயாளிகளின் காதல் கதையே தில் பச்சேரா . சாவை நினைத்து கவலைப்படும் கிஸீ பாசு ( சஞ்சனா சங்கி ) வாழ்வில் அதை துளியும் சட்டை செய்யாத இளைஞன் ராஜ்குமார் இமானுவேல் ஜுனியர் 
( சுஷாந்த் சிங்க் ராஜ்புட் ) நுழைந்த  பிறகு என்ன நடக்கிறது என்பதே படம் . 
ஹீரோயின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் கதையை சொல்வதால் என்ன நடந்திருக்கும் என்பதை முன்பே யூகிக்க முடிகிறது ...

சுஷாந்த் மணிரத்னம் பட ஹீரோ போல துறுதுறு வென இருக்கிறார். கேன்சரால் ஒரு காலை இழந்தாலும் செயற்கை காலுடன் இவர் ஆட்டம் பாட்டம் என வலம் வருவது லேசாக இடித்தாலும் தனது துள்ளலான நடிப்பால் அதை மறக்கடிக்கிறார் . இந்த படத்தை பார்க்க அவர் இல்லாதது காலக்கொடுமை . சஞ்சனா ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் ஹீரோயினாக இதுவே முதல் படம் . ஹீரோவிற்கோ இது கடைசி படம் . 
சஞ்சனா படம் நெடுக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியோடு வந்து நம்மையும் உச் கொட்ட வைக்கிறார் . ஹீரோயின் பெற்றோர்கள் இருவரும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்கள்  . அதிலும் ஹீரோயின் அம்மா அவரை விட அழகாக பெங்காலி ரசகுல்லா  போல இருக்கிறார் . கேசன்சரால் கண்ணை இழந்தாலும் நம்பிக்கை இழக்காமல் வரும் ஹீரோவின் நண்பர் கவனிக்க வைக்கிறார் ...

சைஃப் அலி கான் சின்ன ரோலில் வந்தாலும் தனக்கே உரிய பாணியில் கவர்கிறார் . அவருடைய கேரக்டர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை .  
ஆனாலும் அவர் பேசும் " LIFE itself is Incomplete " என்கிற வசனம் யோசிக்க வைக்கிறது . இந்த படம் " The Fault in our Stars " என்கிற நாவலை  எடுக்கப்பட்டிருக்கிறது , ஆனால் இதே கதையம்சம் உள்ள இதயத்தை திருடாதே என்கிற படத்தை மணிரத்னம் முப்பது வருடங்களுக்கு முன்னரே எடுத்திருப்பார் . அந்த படமும் , இசைஞானியின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் . இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நன்றாக இருந்தாலும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை ... 

இரண்டரை மணி நேரம் படத்தை  இழுக்காமல் ஒண்ணே முக்கால் மணி நேரத்தில் முடித்தது நல்லது . ஆனாலும் டீட்டைலிங் இல்லாமல் ஒரு அவசர கதியில் முடித்ததும் , முன்னரே படம் எதை நோக்கி போகும் என்பதை யூகிக்க முடிந்ததும் சறுக்கல் . சுஷாந்த் சிங்க் அண்ட் சஞ்சனா நடிப்பு , சுஷாந்தின் நிஜ மரணம் , இதில் அவர் ரஜினியின் ரசிகராக வருவது இந்த கவன ஈர்ப்புகளுக்காக கூடுதல் ரேட்டிங் வழங்கலாம் . 

DIL BACHERA - HEART TOUCHING 

RATING : 3.5 * / 5 * 

இந்த படத்தின் விமர்சனத்தை யூ டியூபில் காண கீழே சொடுக்கவும் ...


19 July 2020

1917 - FOREVER ...




1917 - இது 2019 இல் மூன்று ஆஸ்கார் விருதுகளையும் , 10 நாமினேஷன்களையும் மற்றும் பல பாஃடா விருதுகளையும் இல் தட்டிச்சென்ற ஹாலிவுட் மூவி சோனி லிவ் ( OTT ) வில் ஜுலை 17 முதல் ஒளிபரப்பாகிறது . சாம் மெண்டெஸ் இயக்கத்தில் மெக்கே , டீன் சார்லஸ் நடிப்பில் வெளிவந்த இந்த படம் இன்னும் சில ஆஸ்கார் விருதுகளையும்  மயிரிழையில் இழந்திருக்கிறது ...

1917 இல் முதல் உலகப்போரில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது . 2 ஆம் உலகப்போரை மையமாக வைத்து ஏற்கனவே வந்திருந்த சேவிங்க் ப்ரைவேட் ரியான் , டன்கிர்க் போன்ற படங்களை போலவே தரமாக வந்திருக்கும் மற்றுமொரு படம் . பிரிட்டிஷ் - ஜெர்மன் இடையே உக்கிரமாக போர் நடந்து கொண்டிருக்கும் போது பிரிட்டிஷின் ஒரு கேம்பிலிருந்து இன்னொரு கேம்பிற்கு தகவலை சொல்லும் பொறுப்பு இரண்டு வீரர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது . தாக்குதலை நிறுத்த சொல்வதற்கான இந்த தகவல் மூலம் அந்த வீரரின் சகோதரர் உட்பட 1500 வீரர்களை சேதத்திலிருந்து காப்பாற்ற முடியும் . ஜெர்மன் படைகளின் தாக்குதல்களை தாண்டி இந்த ஆபத்தான சவாலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா என்பதை விறுவிறுப்பாக சொல்வதே 1917 .

நேரத்தை வீணடிக்காமல் முதல் சீனிலேயே கதையை தொடங்கி  விடுகிறார்கள் . சகோதரருக்காக ஒரு வீரர் உடனடியாக கிளம்ப மற்றொருவர் முதலில் தயங்குகிறார் ஆனால் கடைசியில் அவரே அந்த மிஷனை முடித்து வைப்பது சிறப்பு . போர் சம்பந்தமான படமென்பதால் குன்டுகள் சத்தத்தால் காதுகளை துளைக்கமால் , தேசப்பற்று வசனங்களால் புழிந்து எடுக்காமல் காட்சிகளின் மூலம் சொல்ல வந்ததை சிம்பிளாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் சொன்ன விதத்தில் இயக்குனரின் உலகத்தரம் தெரிகிறது . போகும் வழியெல்லாம் வீரர்கள் சந்திக்கும் சடலங்களின் வாயிலாக போரின் கொடூரத்தை உணர்த்தியது இயக்குனரின் சாமர்த்தியம் ...

இரு வீரர்களும் தடைகளை தாண்டி கடப்பதை விறுவிறுப்பாக சொல்கிறது திரைக்கதை . ஒரு வீரர் மாற்றுவரின் பதக்கத்தை பற்றி ஆர்வமாக கேட்க அவரோ அதை வைத்து சரக்கடித்து விட்டேன் என்று கூலாக சொல்லும் வசனங்கள் சீரியஸான வார் படத்தின் ஹைக்கூ . நடக்கும் வழியில் ஜெர்மன் வீரரால் நேரும் கொடுமை , பாழடைந்த வீட்டில் குழந்தையோடு இருக்கும் பெண்ணிற்கு தனது உணவை கொடுக்கும் வீரரின் பரிவு என எல்லாமுமே ஓவர் டோஸாக இல்லாமல் மனத்தில் பதியும் படி இருப்பது ஹைலைட் ...

ஒளிப்பதிவு , சவுண்ட் டிசைன் , விசுவல் எஃ பெக்ட்ஸ் இதற்காக ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்ற படம் நிச்சயம் கலை , எடிட்டிங்க் , திரைக்கதைக்காகவும் விருதுகளை அள்ளியிருக்கலாம் . ஒரு வார் ஜோனுக்குள் நாம் போய் வந்த உணர்வை கொடுப்பதும் , யாரோ சிலரின் அதிகார பசிக்காக ஏன் பல லட்சம் உயிர்கள் பலியாக வேண்டுமென்கிற கேள்வி வலுவாக எழுவதும் படத்தின் மிகப்பெரிய வெற்றி .

1917 - எக்காலத்துக்கும் பொருந்தும் ...

இந்த விமர்சனத்தைய யூ டியூபில் காண கீழே சொடுக்கவும் ...









21 June 2020

PENGUIN - பெண்குயின் - பணிப்பெண் ...



கீர்த்தி சுரேஷ் நடிப்பில் , கார்த்திக் சுப்புராஜ் வெளியிட , புதுமுக இயக்குனர் ஈஸ்வர்  கார்த்திக் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் நேரடியாக வந்திருக்கும் வந்திருக்கும் படம் பெண்குயின். ஹீரோயின் ஓரியண்டட் படமென்பதால் தமிழில் பென்குயின் என்று வைக்காமல் பெண்குயின் என வைத்திருக்கிறார்கள்...

ஆறு வருடங்கள் முன் தொலைந்து போன தனது மகனை நம்பிக்கை இழக்காமல் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் ரிதத்தின் ( கீர்த்தி சுரேஷ் ) கதையே பெண்குயின். மகனை கண்டுபிடித்த  ரிதம் மகனை கடத்தியவனை கண்டுபிடித்தாரா ? என்பதை ஒரு விதமாக சொல்லி முடிக்கிறது படம் ...

சில படங்களில் ஹீரோயினாக வந்து போயிருந்தாலும் ஒரு நடிகையாக தனது திறமையை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்திய முதல் படம் நடிகையர் திலகம் . அதன் பிறகு அவரை முழமையாக நம்பி எடுக்கப்பட்டிருக்கும் பெண்குயினில் குறை வைக்காமல் குயினாகவே கடைசி வரை படத்தை தோள்களில்  சுமக்கிறார் . ஆனால் அதுக்காக கர்ப்பிணிப்பெண் உடம்பை பார்த்துக்கொள்ளாமல் சூப்பர் வுமன் போல சாகசம் செய்வதெல்லாம் ஓவர். கீர்த்தி நடிப்பு மட்டும் போதுமென்பது போல மற்ற நடிகர்கள் யாரும் பெரிதாக சோபிக்காமல் போனது துரதிருஷ்டமே ....

கீர்த்தியின் முன்னாள் , இன்னாள் கணவன்களாக இருவர் வருகிறாரகள் . விஜயசாந்தி பட ஹீரோக்கள் கூட எவ்வளவோ தேவலாம் . முன்னவர் ஓவர் ஆக்டிங்க் செய்தால் பின்னவர் நடிப்புன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பார் போல . அதிலும் அவரை ஆடியன்ஸ் சந்தேகப்படும் படியாக வைக்கப்பட்ட சில சீன்களில் மிக்ஸர் சாப்பிட்டுக் கொணடிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ் ...

கீர்த்தி சுரேஷ் நடிப்பு ,  கொடைக்கானல் லொக்கேஷன் , அதை கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டிய  கார்த்திக் பழனி யின் ஒளிப்பதிவு, படத்தின் ட்ரைலர் , இரண்டு ப்ளாட்களை இணைத்த விதம் மற்றும் ஆரம்ப காடசிகள் இவையெல்லாமே படத்துக்கு ப்ளஸ் . சந்தோஷ் நாராயணனுக்கு சம்பள பாக்கியோ என்னவோ ?!!

தொலைந்த மகனை தேடும் கர்ப்பிணித்தாயை மையமாக வைத்து ஒரு சீரியல் கில்லர் கதையை யோசித்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் . ஆனால் அது மடடும் போதுமா ? கிட்னாப் என்றொரு ஆங்கிலப் படததில் ஆறு வயது மகனை தன் கண் முன்னால் கடத்தியவிடமிருந்து காப்பாற்றும் தாயின் கதையை அவ்வளவு விறுவிறுப்பாக எடுத்திருப்பார்கள் . இதில் அது டோட்டலி  மிஸ்ஸிங் . படம் சைலனஸ் ஆஃப் த லேம்ப் , Dr.ஹனிபல் , ஃபாரன்ஸிக் போன்ற படங்களை நினைவுபடுத்துவது சறுக்கல்...

பொதுவாக பழைய தமிழ் படங்களில்  போலீஸ் கடைசியாக வருவார்கள் ஆனால் இதில் முதலிலேயே வந்து கடைசிவரை ஒன்றுமே செய்யவில்லை .
அதிலும் க்ரைம் சீனிற்குள் போய் கீர்த்தி எவிடன்ஸை எடுப்பதை கூடவா ஒரு இன்ஸபெக்டர் தடுக்காமலிருப்பார் ? எந்த வித சடலமும் கிடைக்காமல் எப்படி கீர்த்தியின் மகன்  இறந்து விட்டதாக அவர் சொல்கிறார் ? கடைசியில் கீர்த்தியின் நாய் தான் கில்லரை கண்டுபிடிக்கிறது. போலீஸ் தரப்பில் தேட ஒரு நாயை கூட கண்ணில் காட்டவில்லை . ஒரு நாய்க்கு தான் பிஸ்கட் போட பட்ஜெட் இருந்ததோ ?!

கீர்த்தி சுரேஷ் - கார்த்திக் சுப்புராஜ் காம்போவில் ஒரு திரில்லர் , அட்டகாசமான ட்ரைலர் இதெல்லாம் படத்துக்கு ஒரு பெப்பை கொடுத்தன . ஆனால் அதை படம் நெடுக இயக்குனர் கொடுக்காமல் பிட்ஸ் அண்ட் பார்ஸலாக  கொடுத்ததால் குயினாக இருந்திருக்க  வேண்டிய பெண் வெறும் பணிப்பெண்ணாகிப் போனாள் ...

ரேட்டிங்க்  : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 39 .

இந்த படத்தின் ரிவியூவை யூ டியூபில் பார்க்க கீழே சொடுக்கவும் ...




14 June 2020

அவன் - அவள் - நிலா (19) ...



சென்னைக்கு கார்த்திக் செலவில்  வந்த அந்த முன்னாள் உதவி இயக்குனர் அர் வேலைகளை பெரும்பாலும் முடித்துக்கொண்டு அவனையும் சில கம்பெனிகளுக்கு கூட்டிக்கொண்டு போய் காட்டி கடமையை முடித்ததாக நினைத்துக்கொண்டு ஒரு வழியாக மதுரைக்கு புறப்பட்டு போனார் . கார்த்திக் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் . அவர் அறிமுகப்படுத்திய ஆட்களை சென்று பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும் , அப்பொழுது தான் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என்பது அவனுக்கு தெரிந்தது . சினிமா வெற்றி பெற்றவர்களின் பக்கம் மட்டுமே நிற்கிறது . தோல்வியடைந்தவர்களுக்கு ஆறுதலும் , அனுதாபமும் கிடைக்கிறதோ இல்லையோ கேலியும் கிண்டலும் நிறையவே கிடைக்கிறது  . தெரிந்த ஆள் மூலமாக போனதால் கொஞ்ச நேர காத்திருப்பலுக்கு பின் அவனை உள்ளே அனுமதித்தார்கள் இல்லையேல் அவர்களின்  பந்தாவுக்காக அவன் வாசலிலேயே தவமிருந்திருக்க வேண்டும்..

வயது வித்தியாசம் காரணமாக அழைத்து வந்தவரின் நண்பர்களுடன் இனி தங்க முடியாது என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது . அதிலும் இனிமேலும் தொடர்ந்து அங்கே தங்கினால் அவன் கையிருப்பு அதிகமாகவே கரைந்து விடும் அபாயமும் இருந்தது . அவர்கள் நிலைமை அவனை விட இன்னும் மோசமாகவே இருந்தது . " என்ன தம்பி தூக்கம் வரலையா ? " , கேட்டுக்கொண்டே வந்து பாயை அருகில் போட்டுக்கொண்டு அமர்ந்தவாறே சிகரட்டை பற்ற வைத்துக்கொண்டார் மகாலிங்கம் . அவரை பார்த்தவுடன் படுத்தவாறே கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தவன் அதை நிறுத்தி விட்டு அமர்ந்து கொண்டான் . அங்கிருப்பவர்களிலேயே ஓரளவு சினிமா ஞானமும் அவன் எதிர்காலம் மேல் கொஞ்சம் அக்கறை கொண்டவராகவும் அவரிருந்தார் . "  இல்லேண்ணே " என்று சொல்லிக்கொண்டே சிகரெட் பாக்கெட்டை நீட்டியவரிடம் வேண்டாமென்று மறுத்தான் . அவரும் அந்த சிகெரட்டை காலைக்கடன் கழிக்கும் போது அடித்துக்கொள்ளலாம் என்கிற நினைப்பில் சட்டைப்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு விட்டு லேசாக சிரித்தார் ...

" என்னென்ணே சிரிக்கிறீங்க ?! " கார்த்திக் கேட்டவுடன் அவனை பார்த்தவர்
" ஒண்ணுமில்லை தம்பி என் வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவத்தை நினைச்சு சிரிச்சேன் " . அவன் என்ன என்பது போல் பார்க்க ஒரு இழுப்பை இழுத்து புகை விட்டுக்கொண்டே பேசத்தொடங்கினார் . " நான் அப்போ சென்னைக்கு வந்து லோல்பட்டு ஒரு வழியா ஓரளவு பிரபலமான ஒருத்தர்ட்ட அசிஸ்டெண்டா சேர்ந்தேன் . டிஸ்கசன் அப்போ டைரக்டர் கேசுவலா சிகெரெட்டை நீட்ட மத்தவங்கல கவனிக்காம நான் வாங்கி அவரோட சேர்ந்து அடிக்க ஆரம்பிச்சுட்டேன் . அடுத்த நாள் வழக்கம் போல ஷூட்டிங் போயாச்சு.
என் பேர சொல்லி டைரக்டர் கூப்பிட நான் அஸோஸியேட்ட தானே கூப்பிடுவாங்க நம்மள கூப்புடுறாரேன்னு புரியாம ஓடினேன் " . நிதானமாக தம்மை இழுத்து புகையை விட்டார் . என்கிட்டே செட் ப்ராப்பர்ட்டி பத்தி கேக்க ஆரம்பிச்சார் . நான் அது வேற ஒருத்தர் தானே பாக்குறார்ன்னு சொல்ல
" ஏன் உனக்கு தெரியாதா என்ன புடுங்குற வேலை பாக்கறியா " ன்னு டக்னு கத்திட்டாரு .  தண்டத்துக்கு வந்து சேர்ந்து என் தாலிய அறுக்குறானுங்கன்னு அவர் பாட்டுக்கு கன்னாபின்னான்னு கத்த ஆரம்பிச்சுட்டாரு . அன்னிக்கு முழுக்கவே எனக்கு நிறைய அர்ச்சனை தான் . எனக்கு ஒண்ணுமே புரியாம அன்னிக்கு நைட் சீனியர் சொல்லி தான் எல்லாம் வெளங்கிச்சு " ...

" அவர் சிகரட்டை நீட்டி நான் வாங்கினது ஒரு பெரிய கொலைக்குத்தம்  இல்ல . ஆனா இங்க நிறைய பேர் தனக்கு கீழ இருக்கறவனுக்கு இடம் கொடுத்தா  நமக்கு ஆப்பு வந்துடுமோன்னு தேவையில்லாத ஒரு பயத்துல இருக்காங்க . அதனால தான் அவனுங்க ஈகோ அதிகமாகி தான் யாருன்னு காட்டறதா நினைச்சு நம்மள நோகடிக்குறாங்க " . சினிமா பிரபலங்களின் முகத்துக்குள் இன்னொரு முகம் இருக்கிறது . " ஆனா ஒரு பியூட்டி  என்னென்னா தம்பி , ரெண்டு வாரம் முன்னாடி அவரை பார்த்தேன் . நான் சிகரெட் பாக்கட்டை நீட்ட சில வருஷம் முன்னாடி அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி அவர் உடனே வாங்கிக்கிட்டாரு . கடைசியா எடுத்த ரெண்டு ஃப்ளாப் அதிலயும் ப்ரொட்யூசரும் அவர் தான் , கேக்கவா வேணும் மனுசன்  ரொம்பவே நொடிஞ்சுட்டாரு " . சடுதியில் வெற்றியும் தோல்வியும் வந்து ஆளையே தூக்கியடிக்கும் துறை சினிமா ...

எல்லா துறைகளிலும் ஏற்றமும் , இறக்கமும்  ஒன்று தான் ஆனால் சினிமாவில் அவையிரண்டுமே அந்த  துறையை போலவே அபரிமிதமாக இருக்கின்றன . மூத்த உதவி இயக்குனர்கள் சொல்வதையெல்லாம் கேட்கும் போது இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி நம்மால் கரையேற முடியுமா என்று அவனுக்கு பல தடவை தோன்றியதுண்டு ஆனாலும் ஒரு வைராக்கியம் அவனை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தது . பாம்குரோவ் ஹோட்டலை தாண்டும் போதெல்லாம் அந்த வாசலில் தான் சூப்பர் ஸ்டார் ஒரு காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் படுத்திருப்பார் என்றெல்லாம் சொல்லி கேள்விப்படும் போது அந்த வைராக்கியம் அதிகமாகும் . அவர் மட்டுமல்ல இன்று சினிமாவில் சாதித்த பலரும் அந்த வைராக்கியத்தோடு எங்கோ இருந்து சென்னைக்கு வந்தவர்கள் தான் . அக்கடலில் நீந்தி மேலே வந்தவர்களை மட்டும் கொண்டாடுகிறோம் அதில் கரையேற முடியாமல்
மூழ்கிப் போரானவர்கள் ஏராளம் ...

" தம்பி ரொம்பெல்லாம் யோசிக்காதீங்க , மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்" அவன் முகத்தை வைத்து உள்ளே ஓடும் எண்ண ஓட்டங்களை படித்துக் கொணடிருந்தார் மகாலிங்கம் . " அப்டில்லாம் இல்லேண்ணே , எவ்வளவோ பேர் ஒண்ணுமில்லாம வந்து இங்கே எவ்ளோ பெரிய ஆளாகியிருக்காங்கன்னு யோசிச்சேன் " . அதை ஆமோதிப்பது போல அவர் தலையாட்டினார் . " ஆனா நானும் பார்த்துட்டேன் தம்பி , பெரும்பாலும் சினிமாவுல சாதிக்கணும்னா ஒன்னு எல்லா வசதியும் இருக்கறவனா இருக்கணும் , இல்லேன்னா ஒன்னுமே இல்லாதவனா  இருக்கணும் , இந்த ரெண்டுங்கட்டானா அதான் மிடில் க்ளாஸா மட்டும் இருந்தா கரையேறுரது ரொம்ப கஷ்டம் " . அவர் சொன்னதில் புதைந்து கிடைக்கும் உண்மை அவனுக்கு நன்றாகவே உரைத்தது ...

இரண்டு பேரும் சில நிமிடங்கள் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் . வாசலில் பேசிக்கொண்டிருந்த பெண்களின் குரல்கள் சீரியலின் உபயத்தால் வெகுவாகவே குறைந்திருந்தன  . விரக்தி , அச்சம் , மலைப்பு எல்லாமே ஒரு சேர வந்து ஒரு வித சோர்வை உருவாக்கி விடுகிறது . " பணம் மாதிரி தான் தம்பி படிப்பும் " , அவர் சொன்னவுடனே அவன் புரியாமல் பார்த்தான் . " படிப்பு நிறைய இருக்கிறவன் இந்த பக்கம் வர மாட்டான் , சுத்தமா படிக்காதவன் எந்த வேலையையும் ஈகோ பார்க்காம செய்வான் , ஆனா ஓரளவு டிகிரி வரை படிச்சவனுக்கு ரெண்டு பக்கமும் சாய முடியாம நடுவுல நின்னாகனும் " . அவர் சொல்வது எல்லாமே  அவனோடு சேர்த்து அவருக்கும் பொருந்துவதாகவே இருந்தது . தஞ்சாவூரில் ஒரு மிடில் கிளாசில் இருந்து டிகிரி  வரை முடித்து விட்டு சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர் . இன்று நாம் யோசிக்கும் அல்லது செய்யும் விஷயத்தையும் உலகத்தில் எவனோ செய்திருக்கிறான் , செய்து கொண்டிருக்கிறான் அல்லது இனிமேல் செய்வான் என்பது ஒரு நியதி போலும்  ...

பொதுவான சில விஷயங்களை பேசிக்கொண்டிருந்தாலும் அவர் ஏதோ ஒன்றில் அவனுடைய ஆலோசனைகளையோ அல்லது கருத்துக்களையோ கேட்பதற்காக வந்தது போலவே இருந்தது  .ஏற்கனவே அவர் சொன்ன கதையை பற்றியதாக இருக்கலாமென அவன் நினைத்தான் . அவர் ஒன் லைனர் சொன்ன போதே அவனுக்கு பிடித்திருந்தது . அதை அவர் ரெடி பண்ணி முழு கதையாக ஒன்றரை மணி நேரம் நடேசன் பூங்காவில் வைத்து சொன்னது பசுமரத்தாணி போல அவன் மனதில் இருந்தது . அதிலும் குறிப்பாக கதையில் அவன் மனதுக்கு பட்ட சில குறைகளை வெளிப்படையாக சொன்னது அவருக்கு பிடித்திருந்தது ஆனால் கூட இருந்த அல்லக்கைகளுக்கு பிடிக்கவில்லை . சினிமா பத்தி உனக்கு என்ன தெரியும் என்பது போல அவனுடன் சண்டைக்கு வந்தார்கள் . அவர் சொன்ன சில சீன்களை  அவன் நன்றாக மேம்படுத்தியது அவர்களுக்கு ஏனோ பிடிக்கவில்லை . அவர் அவனுக்கு அதிக முக்கியத்துவம் தருவது அவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது . அவர் டைரக்டரானவுடன் உடனே
அஸிஸ்டன்ட்களாக சேர்ந்து விடலாமென நினைத்தவர்களுக்கு அவன் வரவு எங்கே வேலைக்கு உலை வைத்து விடுமோ என்கிற பயத்தை தந்தது ...

அவர் நிறைய தடவை மற்றவர்களுக்கு தெரியாமல் அவனுடன் மட்டும் கதையை விவாதம் செய்திருக்கிறார் . தன்னிடம் எந்தவித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் நேர்மையாக கதை விவாதத்தில் அவன் கலந்து கொண்டது அவருக்கு பிடித்திருந்தது . அவருக்கே சில சமயம் மொக்கையாக தெரியும் சீன்களை அவனை தவிர மற்றவர்கள் புகழ்ந்த போது அவருக்கு எரிச்சலே மிஞ்சியது . அதற்காகவே அவர் அவனுடன் கதை பற்றிய விவாதத்தில் ஈடுபடுவதையே அதிகம் விரும்பினார் . ஒரு இயக்குனருக்கு முதல் படம் எடுத்து முடித்து வெற்றிகரமாக ஓட வைப்பதென்பது தலைப்பிரசவத்தை விட
அதிக சிக்கலானது என்பது அவர் அனுபவம் சொல்லித்தந்த பாடம் . இன்னும் சில நாட்களில் அவர் கதை ப்ரொட்யூசரிடம் ஓகே ஆகி அட்வான்ஸ் வாங்கக்கூடிய நிலையில் இருப்பது அவனுக்கு தெரியும் . கதைக்கான ஃபைனல் டச்சுக்காக பேசப்போகிறாரோ என அவன் எதிர்பார்த்தான் ...

சிறிது நேரத்திற்கு பிறகு அவரே மவுனத்தை கலைத்தார் . " தம்பி நாம லாஸ்ட்டா பேசினது ஃபுல்லா ஓகே தானா  இல்ல ஏதாவது மாத்தணுமா ?!"
பொதுவாக இது தான் பெஸ்ட் என்று எதையுமே சொல்லவே முடியாது யோசிக்க யோசிக்க அது மாறிக்கொண்டே வரும் ஆனாலும் பல
திருத்தங்களுக்கு பிறகு ஒன்றை செலக்ட் செய்து விட்ட பின் அதை மாற்ற வேண்டாமென்பதே அவன் யோசனையாக இருந்தது . " ம் அப்போ இத அப்படியே வச்சுக்கலாம்ன்ற " என அவர் கேட்க அவன் ஆமாம் என்பது போல தலையசைத்தான் . " ஓகே தம்பி படுக்கலாம் " அவர் சொல்லிக்கொன்டே தலையணை மேல் சாய்ந்தார் . அவனும் அப்படியே கண்ணயர்ந்தான் . காலையில் எழுந்தவனுக்கு அவர் அங்கே இல்லாதது ஆச்சர்யம் அதிலும் பாய் , தலையணை , போர்வை எல்லாவற்றையும் அவர் எடுத்துக்கொண்டு போயிருந்தது கூடுதல் வியப்பை தந்தது . கீழே ரூமிலும் ஆளில்லையே என்று ரூம் மேட்டிடம் விசாரிக்க அவர் அவனை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டே
" என்னப்பா உனக்கே தெரியாதா ?! என்று அவனை நம்பாமல் பார்த்தார் .
" சீரியஸா தெரியாதுன்னே " என்ற பின் " அவர் காலையிலேயே சீக்கிரம் கிளம்பி ப்ரொட்யூசர் கிட்ட அட்வான்ஸ் வாங்க போயிருக்கார் " என்று சொல்லி முடிப்பதற்குள் அவனுக்கு தொண்டையில் ஏதோ கனத்தது ...

தொடரும் ...











30 May 2020

பொன்மகள் வந்தாள் - PONMAGAL VANDHAL - பொருள் பாதி தந்தாள் ...


சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஃபெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா - பார்த்திபன் - பாக்யராஜ் என நட்சத்திர பாட்டாளத்துடன் லாக்டவுன் பஞ்சாயத்தால் தியேட்டரில் ரிலீசாக முடியாமல் ஓடிடி ( Over The Top ) வாயிலாக அமேசான் ப்ரைமில் நேரடியாக வந்திருக்கும் படம் பொன்மகள் வந்தாள் ...

பப்ளிசிட்டிக்காக வழக்குகள் போடும் பெட்டிஷன் பெத்துராஜ் ( பாக்யராஜ் ) 15 வருடங்களுக்கு முன் ஜோதி எனும் வட நாட்டு பெண்ணை குழந்தைகளை கடத்தி கொலை செய்ததற்காகவும், இரண்டு இளைஞர்களை சுட்டுக்கொன்றதற்காகவும் போலீசார்  என்கவுண்டர் செய்த  வழக்கை தூசி தட்டி எடுத்து தன் மகள் வெண்பா பெத்துராஜிடம்
( ஜோதிகா ) வாதாட கொடுக்கிறார் . குழந்தைகளை கொலை செய்த அந்த சைக்கோ கொலைகாரி ஜோதி யார் ? அந்த கொலைகளை அவர் தான் செய்தாரா என்பதை நீதிமன்றத்தில் வாத  பிரதி வாதங்களுடன் விளக்குவதே பொன்மகள் வந்தாள் ...

ஐந்து ரூபா கொடுத்தால் ஐநூறுக்கு நடிக்கும் ஜோதிகா இதில் அடக்கி வாசித்திருப்பது ஆறுதல் ஆனால் இவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தும் படம் முழுக்க இவரே டாமினேட் செய்வது போரிங்க் . அரசு வழக்கறிஞராக வரும் பார்த்திபன் முதலில் பிரமிக்க வைத்து பின் பம்மி  விடுகிறார் . மரியாதைக்காக மல்லாடும் பெரிய மனுஷராக தியாகராஜன் கச்சிதம் . கோர்ட்டில் பார்த்திபனையே மடக்கும் சீனில் பாக்யராஜின் சீனியாரிட்டி பளிச்சிடுகிறது . நீதிபதியாக வரும் பிரதாப் போத்தன் கேரக்டரில் தெளிவு இல்லை ...

ஒரு தாயின் சபதம் , விதி , நான் சிவப்பு மனிதன் இவையெல்லாம் கோர்ட் சீன்களுக்காகவே பேசப்பட்டு ஹிட் ஆனவை . சமீப காலத்தில் வந்த மனிதன் , நேர்கொண்ட பார்வை எல்லாம் ரீ மேக்காக இருந்தாலும் மேக்கிங்கால் வெற்றியடைந்த படங்கள் . அந்த வரிசையில் ஒரு கோர்ட் டிராமாவை தனது முதல் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் . அதிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை பற்றி பேசும் கதையை கையில் எடுத்ததற்கு கூடுதல் பாராட்டுக்கள் . சரியான நட்சத்திர தேர்வு , ஒரே லொகேஷனில் வைத்தே படத்தை சிக்கனமாக முடித்தது , லக்ஷ்மி சரவணகுமாருடன் சேர்ந்து எழுதிய கூர்மையான வசனங்கள் , படத்தை  எங்கும் அனாவசியமாக அலையவிடாமல் இரண்டு மணி நேரத்தில் முடித்தது இவையெல்லாம் இயக்குனருக்கு ப்ளஸ் ...

கோர்ட் டிராமா படம் எனும் போது  நிறைய மர்ம முடிச்சுகளை போட்டு
அவிழ்ப்பதில் தான் இருக்கிறது சூட்சுமம் ஆனால் அதை விட வெறும் வசனங்களாலேயே படத்தை ட்ராமா போல கொண்டு போனது சறுக்கல் . இயக்குனர் நல்ல சீன்களுக்காக இன்னும் மெனக்கட்டிருந்தால் கலக்கியிருக்கலாம் . ஜட்ஜாக வரும் லேடியை பெத்துராஜ் கோர்ட்டில் மாமி என்று அழைக்கிறார் . ஜட்ஜிடம் இப்படியெல்லாம் தெனாவெட்டாக பேசினால் பொத்துராஜ்  என்று வாயிலேயே போட்டு உள்ளே தள்ளி விடுவார்கள் . காமெடி என்கிற பெயரில் வைக்கப்பட்ட கேவலமான சீனுக்கு இது ஒரு உதாரணம் ...

பெண்களுக்கு ஆதரவாக ஜோதிகா பேசும் போது கோர்ட்டில் நிறைய பேர் அழுகிறார்கள் , நமக்கு தான் காட்சியில் எந்த அழுத்தமும் இல்லாததால் ஒரு எழவும் வரவில்லை . பிங்க் படத்தில் இதே போன்ற சீன்களும் , வசனங்களும் பெரும் வரவேற்பை பெற்றவை . இந்த இடத்தில் தனக்கான பெரிய வாய்ப்பை இயக்குனர் நழுவ விட்டிருக்கிறார் . அதிலும் வெண்பா என்று பெயரை வைத்துக்கொண்டு ஜோதிகா தனது மோசமான உச்சரிப்பால்  தமிழை நிறையவே துன்பா செய்கிறார் . சாட்சி , ஆதாரங்கள் எதுவும் பெரிதாக  இல்லாமல் வில்லனை வெறுப்பேற்றியே உண்மையை வரவைப்பதெல்லாம் பி.எஸ்.வீரப்பா காலத்து ஃபார்முலா .  பெண்களை டார்கெட் ஆடியன்ஸாக வைத்து வந்திருக்கும் படம் ஓடிடி யில் ரிலீசாகி இருப்பது கூடுதல் பலம் . ஏனெனில் சீரியலுக்கு இது எவ்வளவோ மேல் மற்றபடி ஒரு முழு நீள படமாக பொன்மகள் வந்தாள் பொருள் பாதி தந்தாள்  ...

ரேட்டிங்க்  : 2.75 * / 5 *   

ஸ்கோர் கார்ட் : 41

இந்த விமர்சனத்தை யூ டியூபில் காண கீழே சொடுக்கவும் ...







Related Posts Plugin for WordPress, Blogger...