30 March 2011

தேர்தல் களம் - 2011

            பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில்   அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி இருக்கிறது தி.மு.க , அ.தி.மு.க. வின் தேர்தல் வாக்குறிதிகள்...சென்ற முறை ஆட்சியை பிடித்ததற்கு தங்கள் இலவச திட்டங்களே காரணம் என்று முழுமையாக நம்பும் தி.மு.க இந்த முறையும் அதே போல செய்திருப்பதில் எந்த வித ஆச்சர்யமும் இல்லை.. இது எதிர்பார்த்த ஒன்று தான்.
..                ஆனால் கடந்த தேர்தலில் இருந்து சமீப காலம் வரை  தி.மு.க வின் இலவச திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்த அ.தி.மு.க இப்போது அதையே காப்பி அடித்து வெளியிட்டிருப்பது நடுநிலையாளர்களிடம் அதன் நம்பகத்தன்மையை குறைத்திருக்கிறது ...
                இலவசங்கள் கொடுத்தால் தான் ஒட்டு கிடைக்கும் என்று அ.தி.மு.க வும் நம்ப தொடங்கி இருப்பது காலத்தின் கொடுமை...குடும்ப அரசியல், 2 ஜி அலைவரிசை ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு   , ஊடகங்களில் ஆக்ரமிப்பு , மின் வெட்டு , மணல் கொள்ளை ,இலங்கை தமிழர் பிரச்சனை  இதையெல்லாம் இலவச திட்டங்கள் மறைத்து விடும் என தி.மு.க உறுதியாக நம்புகிறது...குறிப்பாக கிராமப்புறங்களில் தன் கட்சியின் செல்வாக்கு கூடியதற்கு இத்திட்டங்களே காரணம் என்று தி.மு.க உறுதியாக நம்புகிறது .... 
                  உண்மையான மக்கள் நலத்திட்டங்கள் என்றுமே வரவேற்கத்தக்கவை..ஆனால் இலவச டி.வி . மிக்சி , லாப்டாப் , கிரைண்டர் என இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டு கொண்டு 
அறிவித்து இருப்பது மக்களின் முன்னேற்றத்தில் எந்த வித அக்கறையும் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது ..
                2 ஜி அலைவரிசை ஊழல் நகர்ப்புறங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பயத்தால் தி.மு.க அதிக இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுத்ததாக சொல்லப்படுகிறது...ஆனால்   2 ஜி அலைவரிசை ஊழல் மற்றும் இலங்கை தமிழர்  பிரச்சனை  இவை இரண்டும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பை 
பாதிக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை ...
                ஆளுங்கட்சியின் குறைபாடுகளை மூலதனமாக்கி ஓட்டுக்களை அதிகரிப்பதற்கு
அ.தி.மு.க விற்கு நல்ல வாய்ப்பு...எனினும் இந்த சமயத்தில் வைகோ , நாஞ்சில் சம்பத் போன்ற நல்ல பேச்சாளர்கள் கூட்டணியில் இல்லாதது அ.தி.மு.க விற்கு பெரிய குறை ..
                அ.தி.மு,க இலவச திட்டங்களை முன் வைத்ததற்கு பதில் இலவச டி.வி வேண்டுமா ? இல்லை தடையில்லா மின்சாரம் வேண்டுமா ? ....
இலவச பொருட்கள் வேண்டுமா ? ஊழல் இல்லாத நிர்வாகம் வேண்டுமா ?
பணம் கொடுக்க வேண்டுமா ? பணம் சம்பாதிக்க வேலை வாய்ப்பு வேண்டுமா ?
இலவச நிலம் வேண்டுமா ? நிர்வாகம் ஒழுங்காக நடக்க வேண்டுமா ? என்று கேட்டிருக்கலாம்.......
     முதியோர்களுக்கு இலவச பேருந்து பயண வசதி கொடுப்பதை விட அவர்களுக்கு எதிராக சென்னை போன்ற மாநகரங்களில் நடக்கும் வன்முறை, கொலை,திருட்டு இவற்றிக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையை முன் வைத்திருக்கலாம் ....
       நம்மை விட பின் தங்கி இருக்கும் பீகார் மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதல்வர் ஆகி இருக்கும் நிதிஷ் எந்த விதமான இலவச திட்டங்களையும் அறிவிக்கவில்லை...மாறாக தன் செய்த வளர்ச்சி திட்டங்களையே முன் வைத்தார் ...
         மூன்றாவது முறையாக குஜராத் மாநில முதல்வராகி இருக்கும் மோடி அம்மாநிலத்தை
முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் ....இங்குள்ளவர்கள் இதையெல்லாம் பார்த்து திருந்தவில்லையே என்ற வேதனை ஒரு பக்கம் இருந்தாலும்..இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பி.ஜே.பி கூட
தமிழக சட்டசபை தேர்தலுக்காக இலவச பசு என்றெல்லாம் அறிவித்து இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது ...
           எது எப்படி  போனால் என்ன நமக்கு வரிசையாக விடுமுறை வருகிறதே என்று நினைக்காமல் தயவு செய்து அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்வது
மிக மிக முக்கியம் ...
                   

3 comments:

arunkumar said...

Nice one!!!

praveenkumar said...

in my thought the compliments given by the government is the 1ly reason for the crisis which tamilnadu facing today rich becaming rich poor becamin poor and this year election commission had threatened the politicians bt thy missed the media. politicians misusing the media and making people in illusion state. i dont know why the people are not taking step forward to book the musense case against them. let we see wht thy are going to do????

ananthu said...

இலவசங்களை கொடுத்து கொடுத்து மக்களையும் முழுமையாக லஞ்ச,லாவண்யங்களுக்கு பழக்கப்படுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் போடப்பட்டதே இந்த பதிவு ......

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...