7 October 2012

டி 20 - இறுதிப்போட்டி ...


செப் 18 இல் ஆரம்பித்த டி 20 உலககோப்பை கிரிக்கெட் தொடர்  இன்று நடைபெறும் இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டியோடு முடிவடைகிறது ... இலங்கை இறுதி வரை வரும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் மேற்கிந்திய தீவுகள் ஆஸ்திரேலியா வை மிக அபாரமாக ஜெயித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது டி 20 யில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது ...

இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் போட்டி நடப்பது சாதகமாக இருந்தாலும் , க்ரிஸ் கெயில் , பிராவோ , பொல்லார்ட் போன்ற ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய அதிரடி ஆட்டக்காரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருப்பதால் எதுவும் நடக்கலாம் ... இன்றைய ஆட்டம் மலிங்கா , மென்டிஸ் உள்ளிட்ட இலங்கை பந்து வீச்சாளர்களுக்கும் , மேற்கிந்திய தீவுகளின் மட்டையாளர்களுக்கும் இடையேயான போட்டியாகவே இருக்கும்.

2009 இல் டி 20 கோப்பையை தவறவிட்ட இலங்கை அணியும் , டி 20 இறுதி போட்டிக்கு ஒரு முறை கூட தகுதி பெற்றிராத மேற்கிந்திய தீவுகள் அணியும் இந்த முறை உலக கோப்பைக்காக மிக கடுமையாக போராடும் என்பதில் ஐயமில்லை ... ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் போனது துரதிருஷ்டமே ... ஒப்பனர்களின் ஆட்டம் , தோனியின் சில முடிவுகள் , சேவாக் - தோனி பிரச்சனை , எதிரணிகளை மிரட்டாத வேகப்பந்து வீச்சு போன்றவையும் இந்தியாவின் வெளியேற்றத்திற்கு காரணமாய் அமைந்ததையும் நாம் மறுக்க முடியாது ... டி 20 யை பொறுத்தவரை இந்தியாவிற்கு ஒரே தீர்வு இள ரத்தங்களே ...

ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் இந்தியா 2007 க்கு பிறகு நடந்த மூன்று டி 20 உலக கோப்பைகளிலும் ஒன்றில் கூட அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் போனது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம் ... தோனியை டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து தூக்க வேண்டுமென்கிற கோரிக்கையும் இப்போது வலுத்து வருகிறது ... தோனி  மட்டுமல்லாமல் ப்ளேச்சர் கோச்சாக நீடிப்பதும் தேவை தானா ? என்ற கேள்வியும் மேலோங்கி நிற்கிறது ...

நமது அணி வெற்றி பெறாத சோகத்தை ஓரங்கட்டி விட்டு இன்று இரண்டு தீவுகளுக்கிடையே நடக்கும் இறுதிப் போட்டியை பார்த்தோமானால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற வேண்டுமென்பது என் விருப்பம் ... 75 களில் கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்த அணி பல வருடங்களாக  சறுக்கலில் இருந்து விட்டு  இப்போது தான் முன்னேறி வந்திருக்கிறது ... கிரீஸ் கெயில் தன்னம்பிக்கையோடு பேசுவதை பார்க்கும் போது அந்த அணி வெற்றி பெறும் என்பது போல தோன்றினாலும் நடப்பது டி 20 என்பதால் எதையும் உறுதியாக சொல்லிவிட முடியாது ... நீங்கள் எந்த அணி வெற்றி பெறும் என நினைக்கிறீர்கள் ? உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யவும் ...


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கெயிலின் 'கையில்' உள்ளது...

யார் எப்படி ஜெயித்தார்கள் என்று-எதற்கும் நாளை ஒரு பதிவு போட்டு விடுங்கள்... இங்கு மின்சாரம் ஆறு மணி நேரம் மட்டுமே...

நன்றி...

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
கெயிலின் 'கையில்' உள்ளது...
யார் எப்படி ஜெயித்தார்கள் என்று-எதற்கும் நாளை ஒரு பதிவு போட்டு விடுங்கள்... இங்கு மின்சாரம் ஆறு மணி நேரம் மட்டுமே...
நன்றி...

நன்றி...

ananthu said...

Rathnavel Natarajan said...
அருமையான பதிவு.
நன்றி.

நன்றி...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...