27 September 2013

மோடி - MODI - மாற்றம் வருமா ? ...


டந்த மாதம் என்னுடைய பதிவில் மோடி முன்னிறுத்தப்படுவாரா ? ... என்கிற கேள்விக்கு எதிர்பார்த்தது போலவே அவரை பிரதம வேட்பாளராக பி.ஜே.பி அறிவித்ததன் மூலம் தக்க விடையளித்து பத்து நாட்கள் பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் அவரது தலைமையில் நேற்று திருச்சியில் முதல் மாநாடு பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் மத்தியில் நடந்து முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது . முதலில் முரண்டு பிடித்த அத்வானி , சுஷ்மா இருவரும் இப்பொழுது ஒத்துப்போனது கட்சிக்குள் இருந்த சிறிய சலசலப்பையும் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்று சொல்லலாம் . மற்ற கட்சிகள் போல ஒரு குடும்பத்தை மட்டும் நம்பியிருந்தால் தலைமைப் பொறுப்புக்கு ஆளை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருந்திருக்காது .என்ன செய்வது பி.ஜே.பி யில் அப்படியொரு சூழல் இல்லாமல் ஜனநாயக முறைப்படி கட்சியை நடத்துவதால் உண்டானதே இந்த சிக்கல் . இப்படி பல சிக்கல்களை கடந்து மோடி பிரதமர் மகுடம் சூட்டுவாரா ? அலசுவோம் ...

கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்ப்பட்டதன் மூலம் முதல் படியை கடந்திருக்கும் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் பல கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இரண்டாவது படியை கடக்க வேண்டும் . இப்போதைக்கு அகாலி தள் மற்றும் சிவசேனா மட்டுமே 
நேரடியாக மோடியின் தலைமைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன . ஹரியானாவில் சவுதாலா மற்றும் ஓடிஷாவில் பட்நாயக் இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியும் நடந்து கொண்டு தானிருக்கின்றன . தென் இந்தியாவை தவிர்த்து மற்ற இடங்களில் பி.ஜே.பி க்கு வலுவான கூட்டணி தானாகவே அமைந்து விடும் என்று ஓரளவு எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் 180 - 200 இடங்களை தனித்து கைப்பற்றும் கட்சி மத்தியில் பிராந்திய கட்சிகளின் துணையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சரத் பவார் சூசகமாக கருத்து தெரிவித்திருப்பது அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்று தெளிவாகவே காட்டுகிறது ...

தென் இந்தியாவியில் தனித்து ஆட்சியமைத்த கர்நாடகாவை பி.ஜே.பி இழந்ததும் , மற்ற தென் மாநிலங்களில் கட்சியை வளர்க்காததும் அதற்கு பெருத்த பின்னடைவு . எடியூரப்பா கட்சிக்குள்  மீண்டும் இணையாமல் தனித்திருந்த படியே நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருப்பது ஓட்டு வங்கியை அதிகப்படுத்துமா அல்லது மோடியின் இமேஜை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . பி.ஜே.பி தெலுங்கானாவை ஆதரித்ததால் தள்ளியிருந்த சந்திர பாபு நாயுடு இப்பொழுது நெருங்கி வருவது போல் தெரிகிறது . ஜெகன் மோகன் காங்கிரசை வீழ்த்த பி.ஜே.பி பக்கம் சாயலாம் அல்லது சி.பி.ஐ வழக்கை சமாளிக்க கைக்குள் அடங்கலாம் . தமிழ்நாட்டில் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமையும் பட்சத்தில் 40 லும் வெற்றியை எதிர்பார்க்கலாம் . ஆனால் முதல்வருக்கும் பிரதமர் கனவு இருப்பதால் அது சாத்தியமாகாதது போலவே படுகிறது . சோ வின் முயற்சி பலித்தால் ஏதாவது நல்லது நடக்கலாம் . அப்படி இல்லாத பட்சத்தில் வை.கோ , விஜயகாந்த் , ராமதாஸ் 
போன்றோர் கூட்டணிக்குள் வரும் வாய்ப்பும் பிரகாசமாகவே இருக்கிறது . கேரளாவை பொறுத்த வரை முன்னை விட கட்சி கொஞ்சம் வளர்ந்திருப்பதும்  , மோடியின் தலைமையும் மட்டுமே அதற்கு ஆறுதல் ... 

டிசம்பரில் நடக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் டில்லி  உட்பட மூன்றில் பி.ஜே.பி ஜெயிக்கும் என்று கருத்து கணிப்பு வந்திருப்பது கட்சியினருக்கு தெம்பை கொடுத்திருக்கும் . தமிழ் நாட்டில் ஜூ .வி எடுத்த சர்வேயின் படி மோடி பிரதமராவதற்கு ஆதரவாக 52 சதவீதமும் , மன்மோகன் சிங்கிற்கு 6 சதவீதமும் கிடைத்திருப்பது மக்களின் மன ஓட்டத்தை பிரதிபளிக்கிறது . படித்த இளைஞர்களிடம் மட்டுமின்றி அனைத்து தரப்பிலும் மோடிக்கு ஆதரவும் , அவர் பிரதமாராக வர வேண்டும் என்ற வேட்கையும் இருப்பதை பல இடங்களில் கண்கூடாக காண முடிகிறது . அதே போல மைனாரிட்டிக்கு அவர் எதிரானவர் என்பது போல பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களை மக்கள் நிராகரிக்க தொடங்கி விட்டார்கள் ...

ஏனெனில் எத்தனையோ முறை காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் குறிப்பாக டில்லி யில் நடந்த சீக்கியர் இனப் படுகொலை மற்றும் அஸ்ஸாம் , குஜராத் மாநிலங்களில் நடந்த இனக்கலவரங்களை பற்றியும் , கலவரங்களுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பற்றியும் அவர்கள் தெளிவாக மறந்திருக்கலாம் , ஆனால் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் . இந்த லட்சணத்தில் இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் திரும்ப திரும்ப கோத்ரா கலவரத்தைப் பற்றி பேசப் போகிறார்கள் என்பதே மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி . கடந்த ஒன்பது வருடங்களாக அவதியிலிருக்கும் மக்கள் மோடி வந்தால் மாற்றம் வரும் என்று நம்புகிறார்கள் . ஆனால் அப்படி மாற்றத்தை எதிர்பார்க்கும் அனைவரும் மோடி வருவாரா ? மாட்டாரா என்று ஆராய்வதை விட்டு விட்டு சொந்த் விருப்பு வெறுப்புகளை பார்க்காமல்அவருக்காக ஒட்டு போடுவார்களேயானால் நிச்சயம் 
மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம் ...



 

8 comments:

Aashiq Ahamed said...

சலாம் சகோ,

நேரமிருப்பின் பார்க்கவும்

குஜராத் வளர்ச்சியா? - தோலுரிக்கும் ரிசர்வ் வங்கி தலைவர்


நன்றி

Anonymous said...

aashiq,
he would have seen. But comfortably blind and ignorant.They will stick to their false propaganda.

MGSP said...

Good Article..............Gujarat's Solar Power is 2/3rd of India's total Solar Power. In his agenda for 2014 Modi is aiming to decrease import of consumer goods and to improve production in India. This import even surpassed Petroleum Oil import. Gov has taken any steps when we are considered the world's talent pool, why do we need to import such items??? These are all just examples. He can do a lot.

To Mr.Aashiq,
People who oppose Modi speak only about post-Godra riots. You must also know Godra riots. If Modi is such a communal person as he is being projected, then from 2002, there should have taken place too many clashes in Gujarat. but instead development has taken place. Pls come out of it.

Also this gov with all American agents like Manmohan, Montek Singh and this guy Raghuram Rajan, will produce any report against them. I am from trading industry. I can witness the policy level things which Modi has taken is helping even small business people like me. He has a vision and no women-addict children and foreign wife.

Thanks.

vivek kayamozhi said...

Every one expecting modi...

vivek kayamozhi said...

No other choice, only modi..

ராஜ் said...

வலுவான கூட்டணி அமைஞ்சா தான் மோடி வெற்றி பெற முடியும். சவுத்ல குறைஞ்சது 50~70 சீட்டாவது ஜெயிக்கணும். போன முறை பி.ஜே.பி தோத்ததுக்கு முக்கிய காரணம் சவுத்ல அவங்க கோட்டை விட்டது தான்.

Mr. P.Krishnakumar Assistant Professor said...

Superb Post and super explanation by MGSP..... சிபிஐ ரிப்போட்டையே மாத்தின (உழல் நிறைந்த)காங்கிரசுக்கு மோடிய பற்றி தப்பான ஆதாரங்ள் குடுப்பது மிக எளிது....

PRS said...

Good posting.

To Ashiq and anonymous, anyone can create stupid reports to satisfy prospective parties in states like Bihar. The truth is there for all to see. As Ananthu said, if people are worried about "India", then they'll vote for a Nationalist. Time will tell....

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...