9 March 2014

நிமிர்ந்து நில் - NIMIRNTHU NIL - நடுக்கம் ...


ட்பை முன்னிறுத்தி படங்கள் எடுத்தாலும்  அதில் சமூக அக்கறையையும் சேர்த்தே கொடுப்பவர் சமுத்திரக்கனி . அவர் சமூக அக்கறையை மையப்படுத்தி ஷங்கர் பாணியில் லஞ்ச ஊழலை எதிர்த்து இயக்கியிருக்கும் படம் நிமிர்ந்து நில் . படம் நிமிர்ந்து நின்றதா ? பார்க்கலாம் ...

17 வருடங்கள் குருகுலத்திலேயே  படிப்பை  முடித்து விட்டு ரொம்ப நல்லவனாக  வெளி வரும் அரவிந்த் ( ஜெயம் ரவி ) சமூக அவலங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஊழல் அதிகாரிகளிடம் சிக்கி சின்னா பின்னமாகி பின் அவர்களுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கிறார் . அதில் வெற்றி பெற்றாரா என்பதே படம் ...

ஜெயம் ரவி க்கு சொல்லிக்கொள்ளும் படியான வேடம் . அரவிந்த் , ரெட்டி என இரண்டு கேரக்டர்களிலுமே வித்தியாசம் காட்டி நன்றாக நடித்திருக்கிறார் . இரண்டு ரவி களும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சிகள் ஜெயம் . என்ன தான் குருகுலத்திலேயே படித்திருந்தாலும் ப்ராக்டிகளாக இல்லாததும் , கேரக்டர் அந்நியன்  அம்பி யை நினைவுபடுத்துவதும் நெருடல் . கோர்ட்டில் பேசும் வசனங்கள் சூப்பர் ...


அமலா பால் பாடல் காட்சிகள் தவிர அடக்கி வாசித்திருக்கிறார் . சூரி க்கு படத்தில் குணச்சித்திர வேடம் என்றாலும் சிரிக்கவும் வைக்கிறார் . வழக்கமான சமுத்திரக்கனி யின் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் இருந்தாலும் கு.ஞானசம்பந்தன் மற்றும் படவா கோபி ரசிக்க வைக்கிறார்கள்.
சரத்குமார் இன்டர்வெல் ப்ளாக்கிற்கு மட்டும் உதவியிருக்கிறார் . கோபிநாத் கேரக்டரை சரியானபடி பயன்படுத்தியிருக்கிறார்கள் ...

ஜி.வி யின் இசையில் இரண்டு மெலடிகளும் , கானா பாலாவின் பாடலும் முணுமுணுக்க வைக்கின்றன . சண்டைக்காட்சிகளை நன்றாக எடுத்திருக்கிறார்கள் . எடிட்டிங் நேர்த்தியாக இருக்கிறது ...


ஜெயம் ரவிக்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை பின்னி எடுக்கப்பட்டிருக்கும்  முதல் பாதி , சமுத்திரக்கனி யின் சமூக அக்கறை பளிச்சிடும் சாரப் வசனங்கள் , அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை கொடுக்கும் திரைக்கதை இவையெல்லாம் படத்தில் நிமிர்ந்து நிற்கின்றன ...

முதல் பாதியில் கொடுத்த டெம்போ வை தக்க வைக்க தவறியது , அந்நியன் , ரமணா , சிட்டிசன் என்று பார்த்து பழகிய கதை என்பதோடு படத்தில் வரும் சீன்களும் அந்த படங்களை நினைவு படுத்துவது , ஹீரோ வின் பெயர் அரவிந்த் , அவர் ஆரம்பிக்கும் ஏ.சி.ஐ இயக்கம் என்று நடப்பு சமாச்சாரங்களை
தொட்டிருந்தாலும் கோபிநாத் , மீடியா செய்திகள் என்று பார்ப்பது படமா இல்லை சேனலில் வரும் விவாதமா என்கிற அளவிற்கு சலிப்பை தருவது போன்றவை நிமிர்ந்து நின்று வேகமாக ஓடியிருக்க வேண்டிய படத்தை நடுங்க  வைக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 41 




8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நடுங்க வேண்டும்... நன்றி...

ananthu said...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...

வெங்கட் நாகராஜ் said...

பார்க்க நினைத்திருக்கும் படம்...... விமர்சனத்திற்கு நன்றி.

வாழ்க வளமுடன் said...

நிமிர்ந்து நில் -- நாணல்

ananthu said...

வெங்கட் நாகராஜ் said...
பார்க்க நினைத்திருக்கும் படம்...... விமர்சனத்திற்கு நன்றி.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...

ananthu said...

Rajaraman Venkataraman said...
நிமிர்ந்து நில் -- நாணல்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...

திருப்புகழ் said...

வசனங்கள் மட்டுமே படத்திற்குப்போதும் என்று சமுத்திரக்கனி நினைப்பது தவறு. அதையும் தாண்டி கதை களத்தில் ஒளிப்பதிவு பயணிக்கவேண்டும். மரத்தோடுப் பார்க்கும் பூதான் அழகு. வெறும் பூமட்டும் போதாது.

ananthu said...

RAMARAJAN MANIKKAVEL said...
வசனங்கள் மட்டுமே படத்திற்குப்போதும் என்று சமுத்திரக்கனி நினைப்பது தவறு. அதையும் தாண்டி கதை களத்தில் ஒளிப்பதிவு பயணிக்கவேண்டும். மரத்தோடுப் பார்க்கும் பூதான் அழகு. வெறும் பூமட்டும் போதாது.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...