8 July 2010

இராவணன் விமர்சனம்

                  
      இராவணன் பெயரிலியே இராமாயண கதை தான் என்றாலும் மணி படம் என்பதால் எதிர்பார்ப்புடன் சென்றேன். மகாபாரதத்தில் இருந்து தளபதி, சத்யவான் சாவித்திரியில் இருந்து ரோஜா என எடுத்திருந்தாலும் அவர் சொன்ன விதத்தில் நேர்த்தியும் , தரமும் இருக்கும் . ஆனால் மற்றபடங்களை போல இல்லாமல் இதில் நேரடியாக கதை சொல்வதில் சுவாரசியம் குறைகிறது ...

      படத்தின் முதல் காட்சியிலயே   தேவ் ( பிரிதிவிராஜ் ) மனைவி ராகினியை ( ஐஸ்வர்யா  ராய் ) வீரா ( விக்ரம் ) கடத்தி விடுகிறார் . விறுவிறுப்பாக ஆரம்பம் ஆகும் படம் சிறிது நேரத்திலயே மந்தம் ஆகி விடுகிறது ... எஸ்பி தேவை பழி தீர்க்க அவர் மனைவியை கடத்தும் விக்ரம் அவள் அழகில் மயங்குவது அமெச்சூர் தனம்....

     வழக்கம் போல விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். இருந்தும் அவர் பாத்திர படைப்பு நன்றாக இல்லை... படம் முழுவதும் ஐஸ்வர்யா   ராய் குழப்பமாக இருக்கிறார் அவர் கேரக்டர்  போல... நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் கச்சிதம்... பிரபு, பிரிதிவிராஜ் , ப்ரியாமணி அனைவரும் பொருத்தமாக இருக்கிறார்கள்....

     படப்பிடிப்பு  தளமும் அதை படம் பிடித்த விதமும் அற்புதம் . கிளைமாக்ஸ் சண்டை மனதில் நிற்கிறது.. . இசைப்புயல் பின்னணி இசையில் ஏமாற்றி விட்டார்... வசனமும் கிளைமாக்ஸ் தவிர மற்ற இடங்களில் மேம்போக்காக இருக்கிறது....

     கார்த்திக்கை அனுமார் போல மரத்திற்கு மரம் தாவ விட்டதை தவிர்த்திருக்கலாம் . முன்னா விபீஷணன் போல தூது போகிறார். பிரபு கும்பகர்ணன் ப்ரியாமணி சூர்பனகை என நான் சொல்ல தேவை இல்லை...நேர்த்தியாக எடுத்திருந்தாலும் பழக்கப்பட்ட கதை என்பதால் சலிப்பு தட்டுகிறது....

     வழக்கமாக மணி படத்தில் வரும் துறுதுறுப்பான காட்சிகள் இதில் இல்லாதது ஏமாற்றம். காட்சிகளில் போதுமான ஆளுமையும்  , ஆழமும் இல்லை... இராமாயண கதையை புது கோணத்தில் பார்த்திருந்தாலும் புதுமையாக எடுக்காததால் படம் மனதில் பதியவில்லை...எவ்வளவு குறை இருந்தாலும்    டெக்னிகல் விசயங்களில்   மணி படம் ஒரு அனுபவம் என்பதை மறுப்பதற்கு இல்லை .அனந்து,ராவணன்,விக்ரம்,

29 June 2010

புதிதாய் பிறப்போம்

தொலைந்த என்னை தேடுகிறேன்
நீ கொடுத்த உன்
திருமண அழைப்பிதழில்

தீண்டாமை பெருங்குற்றம்
இங்குள்ளவர்கள் தவறாக புரிந்து
கொண்டார்கள்
விளைவு  aids


பிரம்மாவிற்கு ஏன்
கோவில் இல்லை என்று
வருத்தப்பட்டேன்  உன்னை
பார்த்த பிறகு


காதல் ரோஜாவை பறிக்க
கைகள் நீட்டினேன்
மிஞ்சியது
முகத்தில் தாடி முட்கள்




அடுத்த பிறவியில் எனக்கு
நம்பிக்கை இல்லை
எனவே தினமும்
புதிதாய் பிறப்போம்







14 June 2010

twenty20

அப்பாடா ஒரு வழியா நம்ம பசங்க ட்வென்டி ௨0 யா வின் பண்ணிட்டாங்க . ரெண்டு மட்ச்ளையும் கன்வின்சிங் விக்டரி , யூசுப் பதான் கடைசியில போன மேட்ச் நல்ல அடிச்சு MAN ஒப் தி மேட்ச் வாங்கினது சந்தோசம் ஆனாலும் இப்ப அவர் ஆசியா கப் ஓன் டே டீம்ல இல்ல .இதே போல அவர் அதிரடியா அடிச்சா டீம்ல சீக்கிரம் வந்திடுவார் .யுவராஜ் சிங்கிற்கும் இது நல்ல பிரேக் அவர் POSITIVA இருந்தா சீக்கிரம் டீம் உள்ள வந்துரல்லாம் ஏன்னா அவர் சேவை வேர்ல்ட் கப்புக்கு தேவை . ஆனா இந்த மீடியாவும் கொஞ்சம் ஓவரா தான் போறாங்க . ஆசியா கப் டீம் செலக்ட் பண்ணும் போது யுவராஜ் பேஷன் ஷோ ல இருந்தாரம் . ஏம்ம்பா டீம் செலக்ட் பண்ணும் போது இவர் ஏன்னா பண்ண என்னப்பா மட்ச்ல என்னா பண்றாருன்னு தானே பாக்கணும்
இவரு நல்ல அடுணா ஓவரா எத்தறதும் இல்லேன்னா ஒரேதடிய போட்டு தாக்கருதும் ரொம்ப ஓவர் . கொஞ்சம் அவர ப்ரீய விடுங்கப்பா .
மீடியாவுக்கு ஒன்னு குண்டு வெடிக்கனும் இல்லேன்னா யாரையவுது சிண்டு முடியனும் அவங்களுக்கும் ஏதாவது நியூஸ் வேணுமுல்ல.
அதுவும் இந்த இங்கிலீஷ் நியூஸ் சேனல்ல மொத்தமா சேந்து கதர்த எப்பதான் நிறுத்த போராங்களோ தாங்கலட சாமி
கடைசியா ஆசியா கப் வின் பண்றதுக்கு நம்ம டீம்க்கு ஒரு ஆல் தி பெஸ்ட்

28 May 2010

கோரிபாளையம் விமர்சனம்

கோரிபாளையம் விளம்பரத பாத்து நல்ல இருக்கும்னு நம்பி போனேன் தாங்க முடியல . பத்து மெகா சீரியல் ஒன்னா patha மாதிரி ஒரே aலுவாட்சி,இன்னும் எத்தன நாளைக்குதான் மதுரைல நாலு வேலைவெட்டி இல்லாத பசங்க அவங்களுக்கு வர ப்ரட்சைனணு கதை சொல்லுவங்களோ?
நாலு பெரைபதியும் டைரக்டர் இன்றோ கொடுக்கும் போதே முடிவு பண்ணிட்டேன் இது அவரதில்லைன்னு. இவங்க பேசுற மதுரை பாசை கூட ரொம்ப sஎயயர்கைய இருக்கு.நாலு பெரும் நல்ல கஞ்ச குடிக்குரங்க, சண்ட போடுறாங்க அலுவுரங்க, சப்பூடுரங்க இதையே இன்டர்வெல் வரையும் போட்ட என்ன தான் பண்றது . அதுக்கு அப்புறம் ஒவ்வர்த்தனா சாவுரங்க வில்லன sஅகடிக்குரங்க நம்மளையும் சேர்த்து தான் .
என்னடா இதனை நேரமா கதைய பத்தி சொல்லையே நு பாக்கறிங்கள இருந்தா நாங்க சொல்ல மாட்டமா. ஓருல பெரிய மனுஷன் அதாங்க நம்ம வில்லன் அவன் தங்கச்சிக்கும் நம்ம ஹீரோவுக்கும் தொடர்பு இர்ருக்குனு நெனைச்சு நம்ம வில்லன் அவல கொன்னுர்ரன் இவனுகளுயும் கொள்ள சொல்ளிர்ரன் அதுக்கப்புறம் இவனுக மாறி மாறி சாவுறானுங்க .கடைசில படம் முடிஞ்சு வீட்டுக்கு போய் குளிச்சுட்டு தான் சாப்பிட்டேன் . அவ்வளவு எளவு , தாங்கலட சாமி
படத்துல ஒரே ஆறுதல் சிங்கம் புலியோட பேச்சு , விக்ரான்தொட வீச்சு , ஆக மொத்தம் என் நேரமும் பணமும் வீனா போச்சு .
Related Posts Plugin for WordPress, Blogger...