8 August 2010

இளைஞர்களின் இயக்குனர்கள்

                                                   
             கடந்த பத்து வருடங்களில் கவனிக்க தக்க இயக்குனர்களில் மிக முக்கியமான இருவர் செல்வராகவன் மற்றும் கௌதம்மேனன்.....இவர்கள் இருவரின் பின்னணியும் மாறுபட்டிருந்தாலும் இவர்களின் படங்கள் இளைஞர்களை கவர்வதில் மாறுபடவில்லை ...இருவரும் அதிகம் பேசுவதில்லை ஆனால் இவர்கள் படங்கள் பேசுகின்றன. .....

                செல்வாவின் முதல் படம் "துள்ளுவதோ இளமை" விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டாலும் ரசிகர்களால் வசூலை குவித்தது ...நடுபக்கத்தில் ஆபாச படத்தை வெளியிட்டு விற்பனையை அதிகமாக்கிய நம்பர் ஓன் வார இதழ் கூட இப்படத்தை மோசமாக விமர்சித்தது ......ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அப்படத்தில் ஒரு உண்மை இருந்தது .....செல்வாவிடம் தைரியமும் இருந்தது ...."காதல் கொண்டேன்" காதலை மையபடுதினாலும் சிறு வயதில் ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் மன ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்பை சொல்ல தவறவில்லை.....                    
                        .7g ஒரு காதல் காவியம் ...படத்தில் ரவிக்ரிஷ்ணாவும் , சோனியாவும் தெரியவில்லை ....கதிரும் , அனிதாவும் மனதில் நின்றார்கள் ......இது இயக்குனரின் வெற்றி ...."புதுபேட்டை" வன்முறையின் புது கோணம் ..ரௌடிகள் உருவாவது உடல் பலத்தில் அல்ல .......சூழ்நிலையும் ..மன உளைட்சலுமே அதற்கு காரணம் என்பதை காட்சிகளில் தெளிவாக உணர்த்தி இருப்பார்....எதையுமே விசுவலாக சொல்லும் திறமை இவரிடம் அசாத்தியமாக இருக்கிறது ......இவரின் தெலுகுபடம் தமிழில் "யாரடி நீ மோகினி" என்று ரீ மேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது .....              
                                    "ஆயிரத்தில் ஒருவன் " பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிகபெரிய முயற்சி....முதல் பாதி ஆங்கில படங்களுக்கு இணையாக இருந்தது .....இரண்டாவது பாதியில் படம் தடம் மாறியிருந்தாலும் காட்சிகள் கண்ணில் நிற்கின்றன ......படம் குடும்பத்தோடு சென்றவர்களை முகம் சுளிக்க வைத்ததும் உண்மை .......எனினும் அப்படம் ஒரு மைல்கல் ....செல்வராகவனின் முக்கிய பலமான யுவன் இப்போது இவர் கூட்டணியில் இல்லாதது ஒரு பெரிய மைனஸ் .....

               'மின்னலே" வில் ஆரம்பித்து "VTV " வரை கௌதமிற்கு காதல் கை கொடுக்கிறது .......நகர இளைஞர்களிடம் இவரின் படமும் .பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றன ......."காக்க காக்க " சூரியாவிற்கு மட்டும் திருப்புமுனையாக அல்ல ...காவல்துறை சம்பத்தப்பட்ட படங்களுக்கும் ஒரு முன்னோடி.........இப்படத்தின் வில்லன் கதாபாத்திரமும் வித்தியாசமாக இருந்தது .......

..               இதன் அடுத்த பதிப்பாக வந்த "வேட்டையாடு விளையாடு" ஒரு சூபெர்ப் CRIME THRILLER ...நீண்ட நாட்களுக்கு பிறகு கமலிற்கு அற்புதமான அறிமுக காட்சி .........இவரைப்போல ஹீரோயின்களை அவ்வளவு அழகாக யாரும் காட்டுவது இல்லை........ஆனால் சிம்புவையும் மிக அழகாக VTV யில் காட்டியிருப்பது புதுசு .........காதலின் எல்லா கோணங்களும் இதில் அற்புதம் .......இப்பட முடிவில் சிம்பு ,த்ரிஷா இருவரையும் பேசுவது போல காட்டாமல் தனி தனியாக காட்டி விசுவலாக முடித்திருக்கலாம் .......கௌதமின் பலம் உணர்ச்சிகளை துல்லியமாக எடுப்பது ....இசைக்கு அதிக கவனம் செலுத்துவது ......

                      செல்வராகவனை போலவே இவரும் ஹாரிசை பிரிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றம் .....செல்வராகவனை போலவே இவரும் காதலை விட்டு அடுத்த பரிணாமத்திற்கு போக வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம் ........தனுஷ் , சூர்யா இருவரும் நடிப்பில் தேறி இருப்பது இவர்களின் ஆளுமை .........நிச்சயம் இவர்களின் அடுத்த படங்களிடம் உள்ள எதிர்பார்ப்பு என்றுமே நீங்காது ..........

3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

அழகான பதிவு.வாரணம் ஆயிரம் பற்றியும் குறிப்பிட்டு இருக்கலாம்.அதே போல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பற்றியும் சிலாகித்து சொல்லி இருக்கலாம்

arunkumar said...

nice blog....Good intro of both great directors..I like the way u mixed up the director's perspective .

மு.வேலன் said...

அவர்கள் இருவருமே நல்ல படைப்பாளிகள்...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...