24 July 2011

முனி 2 - காஞ்சனா - காமெடி பீஸ்

                                    
     ராகவேந்திரா லாரன்ஸ் இயக்கிய முனி படமும் , சரத்குமார் திருநங்கையாக நடிக்கிறார் என்ற செய்தியும் தான் முனி 2 - காஞ்சனா படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பை உண்டாக்கிய விஷயங்கள் ..திகிலையும்,காமெடியையும் சக விகிதத்தில் கலந்து கொடுத்ததால் தான் முனி படம் வெற்றி பெற்றது...காஞ்சனாவில் இரண்டையும் கோட்டை விட்டு விட்டார் லாரன்ஸ்..

     பயந்தாங்குளியின் உடம்புக்குள் புகுந்து கொள்ளும் ஆவி தன் பழி கணக்கை தீர்த்து கொள்வதே கதை...இதில் ஒன்றுக்கு பதில் மூன்று ஆவிகள் புகுந்து கொள்வதும்,அதில் ஒன்று திருநங்கை என்பதுமே சற்று வித்தியாசம்..முனி படத்தில் நடித்த அம்மா-பையன் வேடத்தில் கோவை சரளா-ராகவேந்திரா லாரன்ஸ் ,கதாநாயகியாக லக்ஷ்மி ராய், அண்ணன்,அண்ணியாக ஸ்ரீமன் - தேவதர்ஷினி,வில்லனாக தேவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்....
                                
      பயந்தாங்குளி கதாபத்திரத்திலும்,பின்னர் ஆவி புகுந்த பின் பெண்தன்மை நிறைந்த கதாபத்திரத்திலும் கலக்கியிருக்கிறார் ராகவா..(படத்தில் இவர் பெயர்  இதுவே)..அண்ணன் குழந்தைகளிடம் பயத்துடன் பேய்கதை கேட்பது , அனுமார் படம் பொறித்த போர்வையை போத்திக் கொள்வது , பயந்தவுடன் ஓடி சென்று அம்மா மடியில் உட்கார்வது என முன்பாதியில் கலக்கும் ராகவா பின் ஆவி புகுந்தவுடன் செய்யும் சேட்டைகள் அமர்க்களம்.. குறிப்பாக பெண்ணைப்போல மஞ்சள் பூசிக் கொண்டதை கேள்வி கேட்கும் அண்ணன் ஸ்ரீமன் இவரிடம் அறை வாங்கும் இடத்தில் அரங்கமே கல..கல... ஓபனிங் சாங்,பைட் என வெறுப்பேற்றினாலும் பின் தன் நடிப்பால் அதை சமன் செய்கிறார் ராகவா...

      சரளா சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் ஓவரான முக பாவங்களாலும்,வடிவேலு மாதிரியான வசன உச்சரிப்புகளாலும் வெறுப்பேற்றுகிறார்..காமெடி என்ற பெயரில் இவரை கிளாமர் உடையில் எப்படி இருப்பார் என்று ராகவா நினைத்துப் பார்ப்பது அம்மா கதாபாத்திரத்தையே அவமதிப்பது போல உள்ளது..பேயை விரட்ட தேவதர்ஷினியுடன் இவர் அடிக்கும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன...
                                  
     சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று பிராமண பாஷை பேசிக்கொண்டு படம் முழுவதும் ஓவர் ஆக்டிங் செய்தே நம்மை எரிச்சலடைய வைக்கிறார் தேவதர்ஷினி..கோவை சரளா கவுண்டர் பாஷை பேசுகிறார்,தேவதர்ஷினியின் தங்கையாக வரும் லக்ஷ்மி ராய் சாதாரணமாக பேசுகிறார்..படத்தில் எல்லோருமே சாதாரணமாக பேச இவர் மட்டும் சம்பந்தமில்லாமல் பேசுவது ஏன்..? ராகவேந்திரா லாரான்சுக்கே வெளிச்சம்...
                                     
   லக்ஷ்மி ராய் கிளாமராக வந்து போவதை தவிர வேறு வேலை எதுவும் இல்லை.. அம்மணி தன் உடல் எடையை கவனித்தல் நலம்..இந்த கூட்டத்திற்கு மத்தியில் ஒரு ஆறுதல் ஸ்ரீமன்..தம்பியின் அடிக்கு பயந்து வாய் கோணி இவர் நடிக்கும் காட்சி அற்புதம்..

    "ஆணழகன்" பட்டம் பெற்ற சரத்குமாரை அரவாணியாக நடிக்க வைத்தது வித்தியாசமான சிந்தனை..சரத்குமாரின் துணிவினை பாராட்டலாம்..முடிந்த வரை முயற்சி செய்து நடித்திருக்கிறார்..சண்டைக்காட்சிகளில் இவர் சேலை கட்டிய சரத்குமாராக தெரிகிறாரே தவிர திருநங்கையாக அல்ல..பல்லை கடித்துக் கொண்டு இவர் ஓடி வரும் காட்சிகள் ஆக்ரோஷம்..குறிப்பாக திருநங்கைகள் படும் கஷ்டங்களை பற்றி இவர் மேடையில் பேசும் இடம்   நெகிழ்ச்சி..
                                               
    ராகவேந்திரா லாரன்சின் நடிப்பும்,நடனமும் ( வளைந்து வளைந்து அருமையாக ஆடுகிறார்..ஆனால் இவரின் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு பாடல்கள் வேகமாக இல்லை ) , தமனின் பின்னணி இசையும் , சரத்குமாரின் திருநங்கை வேடமும் மட்டுமே படத்தின் சில பலங்கள்...மற்றவை எல்லாம் சொதப்பல்ஸ்...
                                    
     திகில் படத்தின் பலமே அதன் நடிக,நடிகையர்கள் முகத்தில் காட்டும் பய உணர்ச்சிகள் தான்... ஆனால் இதிலோ சரளா,தேவதர்ஷினி என்று எல்லோருமே முகத்தில் அஷ்ட கோணத்தை காட்டுவதால்  திகில் காட்சிகளில் கூட சிரிப்பு வருகிறது.. ஒரு வேலை முழு நீள திகில் படமாக எடுத்தால் குடும்பத்துடன் யாரும் வரமாட்டார்கள் என லாரன்ஸ் நினைத்திருக்கலாம்..ஆனால் இது போல ரெண்டுக்கட்டான் படத்திற்கும் பெரிய வரவேற்பு இருக்காது என்பது ஏனோ லாரன்சுக்கு தெரியவில்லை..

     முதல் பாதி தான் மொக்கையாக இருக்கிறதே, அட சரத்குமார் வரும் ப்ளாஷ் பாக்கிலாவது அதிரடி முடிச்சு வைத்திருப்பார்கள் என்று பார்த்தால் அதிலும் நில அபகரிப்பு செய்யும் எம்.எல்.ஏவைக் காட்டி கொட்டாவி விட வைக்கிறார்கள்...சரத்குமார் மிகவும் கஷ்டப்பட்டு பாத்திரம் தேய்த்து ஏதொ கொஞ்சம் பணம் ( வெறும் 25 லட்சம் ) சேர்த்து ஒரு இடம் வாங்குகிறாராம்..காதுல பூ வைக்கலாம்..பூக்கடையேவா..?.

      கடைசியில் படம் முடிந்து வெளியே வரும் போது தான் எல்லோரும் பயத்துடன் வந்தார்கள் ..ராகவேந்திரா லாரன்ஸ் முனி 3 க்கு லீட் வைத்ததே அதற்கு காரணம்.. போதும் லாரன்ஸ் விடுங்க....

      ஆக மொத்தத்தில் அமெச்சூர் காமெடிகளாலும் ,கோணலான திரைக்கதையாலும் குறைந்த பட்சம் கமர்சியல் ஹிட் ஆகியிருக்க வேண்டிய காஞ்சனா - காமெடி பீசாகி விட்டது ..

ஸ்கோர் கார்ட் : 38

.

3 comments:

Reverie... said...

cool..

ஷண்முகநாதன் said...

முனி 2 - காஞ்சனா - வெற்றி பீஸ்!!

EK said...

General feedback is above avg. Seems to an entertainer - Eswaran Kandaswamy

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...