29 November 2011

குறும்பட கார்னர் - சொல்ல மறந்துட்டேன் ...

  
   காதலும் வன்முறையை போல இரு பக்கமும் கூர்மையான ஆயுதம் . அதை சரியான விதத்தில் புரிந்து கொண்டு கரையேறுபவர்களும்  உண்டு , ஆழம் தெரியாமல் காலை விட்டு அவஸ்தைப்படுபவர்களும் உண்டு ...

   " காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் " என்றான் பாரதி ... இன்றோ " காதல் காதல் காதல் போயின் காதல் காதல் காதல் பிறரோடு " என்பது வழக்கமாகிவிட்டது ... அப்படிப்பட்ட ஒரு காதல் மாயைக்குள் சிக்கிய கார்த்திக்கின் கதையே " சொல்ல மறந்துட்டேன் " குறும்படம் ...



    காதல் தோல்வியுடன் ஹளுஷினேஷனையும் , கொஞ்சம் திகிலையும் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் ... கதைக்கான கருவை தவிர டெக்னிக்கல் விஷயங்கள் பெரிதாக இல்லையென்றாலும் , ஒரே ரூமுக்குள் வைத்து படத்தை சுருக்கமாகவும் , சுவாரசியமாகவும் சொன்ன விதம்  அருமை ...

   கார்த்திக் கேரக்டரில் நடித்திருக்கும் உமாபதி நன்றாக நடித்திருந்தாலும் மற்ற மூவரின் நடிப்பு  ரொம்ப சுமார் ... பார்த்திபன் இயக்கிய " குடைக்குள் மழை " படத்தை இந்த குறும்படம் நியாபகப்படுத்தினாலும் முடிவில் வைத்த ட்விஸ்ட் அழகு ...

    " சொல்ல மறந்துட்டேன் " தலைப்பு பொருத்தமாக இருந்தாலும் அதையே இருபது தடவைக்கு மேல் சொல்ல வைத்ததை தவிர்த்திருக்கலாம் ...

இயக்கம் : கமலகண்ணன்

தயாரிப்பு : பி.கே.யு ப்ரொடக்சன்

3 comments:

ananthu said...

அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

நன்றி .

ஷைலஜா said...

பார்த்துட்டு வந்து சொல்றேன் அனந்து

ananthu said...

ஷைலஜா said...
பார்த்துட்டு வந்து சொல்றேன் அனந்து

.குறும்படத்தை இந்த பதிவிலேயே பார்க்கலாம் ஷைலஜா .நன்றி...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...