15 October 2014

தெருக்கூத்து - 5 ...


2002 கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி மோடிக்கு விசாவை மறுத்து வந்த அமெரிக்கா இப்பொழுது இந்தியாவின் பிரதமரான பிறகு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது .  பிரதமர் சென்ற இடமெல்லாம் அவருக்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பை பார்த்து அமெரிக்காவே ஆடி விட்டது என்றே சொல்லலாம் . வெறும் சாராயத்துக்கும் , பிரியாணிக்கும் இங்கே கூடும் அரசியல் கூட்டம் போலல்லாமல் ஒரு உணர்ச்சிப் பூர்வமான சந்தோஷத்தை அமரிக்க வாழ் இந்தியர்களிடம் காண முடிந்தது . அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் போட்ட ஒப்பந்தங்கள் மூலம் சீனாவுக்கு  சின்ன செக் வைத்திருக்கிறார் மோடி . காஷ்மீர் விவாகரத்தில் தலையிட முடியாது என்று ஐ.நா சொன்னதன் மூலம் மீண்டுமொருமுறை மூக்குடை பட்டிருக்கிறது பாகிஸ்தான் . இங்கே துப்பாகியால் சுட்டு விட்டு அங்கே போய் ஒப்பாரி வைப்பார்களாம் . இது தான் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதோ ?! ...

பெரிய கட்சிகளெல்லாம் தனித்தனியாக நிற்பதன் மூலம் மகாராஷ்டிரா , ஹரியானா சட்டசபை தேர்தல்கள் நன்றாகவே சூடு பிடித்திருக்கின்றன . இடைத்தேர்தலில் கிடைத்த தோல்விகள் மூலம் மோடி யின் மேஜிக் அவ்வளவு தான் என்று மற்ற கட்சிகள் சொல்லி வரும் வேளையில்  இடைத்தேர்தலை போல அல்லாமல் இந்த முறை அதிக கூட்டங்களில் மோடி ஜி பேசி வருவது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி . அதை நிரூபிப்பது போலவே தேர்தலுக்குப் பின் நடந்த சர்வேக்கள் எல்லாமே பா.ஜ.க தனிப் பெரும் கட்சியாக ஜெயித்து ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்திருக்கின்றன . இது நடக்கும் பட்சத்தில் கூடுதலாக இரண்டு மாநிலங்களை பிடிப்பதுடன்  பா.ஜ.க  வுக்கு ராஜ்யசபாவில் அதிக எம்.பி க்கள் கிடைப்பதற்கும் ஏதுவாக அமையும் . சும்மா இருந்த சிங்கத்தை சீப்பால சீவி விட்டுட்டாங்களோ ?! ...

அடுத்தடுத்து அம்மா ப்ராண்ட் பொருட்களை மலிவு விலையில் அறிவித்துக் கொண்டிருந்தவர் மேலே யாரு கண்ணு பட்டதோ ? . 18 வருடமாக இழுத்துக் கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ உட்பட நால்வரையும்  உள்ளே வைத்து விட்டார்கள் . கர்நாடகா கோர்ட்  பெயிலை  மறுத்து விட 17 ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள் கழக கண்மணிகள் . தண்டனை அங்கேயும் உறுதி செய்யப்பட்டு  விட்டால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் முதல்வரால் தேர்தலில் நிற்க முடியாது . அப்படி நடக்கும் பட்சத்தில் கட்சிக்குள் இப்போதிருக்கும்  கட்டுப்பாடு   குலைந்து கட்சியே சிதறும் அபாயம் உள்ளது . 2 ஜி வழக்கின் தீர்ப்பு வரும் போது  இதே போன்ற நிலைமை தி.மு.க வுக்கு ஏற்படாவிட்டாலும் ஏற்கனவே சரிவிலிருக்கும் கட்சி மேலும் சிதையும் . இந்த இரண்டு பிரதான கட்சிகளின் சரிவால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இப்போதைக்கு யாருமில்லை .
ஆனால் சென்ற முறை தே.மு.தி.க , பா.ம.க , ம.தி.மு.க போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்த பா.ஜ.க சரியாக காய்களை நகர்த்தினால் அடுத்த சட்டசபை தேர்தலில் நடுநிலையாளர்களையும் , அ.தி.மு.க - பா.ஜ.க இரண்டுக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருப்பவர்களையும் தங்கள் வசம் எளிதாக இழுக்கலாம் . பா.ஜ.க பாச்சா இங்கே பலிக்குமா ?! ...

நிச்சயம் பா.ஜ.க வுக்கு ஒரு வலுவான தலை தமிழகத்தில் தேவை . அதற்காக அவர்கள் சூப்பர் ஸ்டாரை இழுப்பதாகவும் , அவரும் இதற்கு ஒரளவிற்கு சம்மதித்துவிட்டார் என்பது போலவும் செய்திகள் கசிகின்றன . யார் யாரோ அரசியலுக்கு வரும் போது தனக்கென்று ஒரு பெரிய கூட்டத்தை வைத்திருக்கும் ரஜினி வருவதில் எந்த தவறுமில்லை . ஆனா தலைவரு வராரோ இல்லையோ தன்னோட ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்னாடியும் இந்த அரசியல் படத்த தவறாம ஓட விட்டுருறாரு . புலி வருமா ?!. மெட்ராஸ் , ஜீவா மாதிரி தரமான படங்கள் ஒரே நாளில் ரிலீசானதில் சந்தோசம் . ஆனால் எந்த லாஜிக்கும் இல்லாத ஆவரேஜ் படம் அரண்மனை தான் வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது . பேயே லாஜிக் இல்ல அப்புறம் எதுக்கு பேய்ப்படத்துக்கு லாஜிக்கு ன்றீங்களா ?! ....

திரிஷ்யம் படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கிறார்கள்  . மோகன்லால் ரோலில் நடிக்கும் உலக நாயகன் படத்திற்கு நிச்சயம் ஸ்டார் வால்யூவை கொடுத்தாலும் அந்த ஜார்ஜ் குட்டி என்கிற யதார்த்த நாயகனை சாகடித்து விடுவார் . கமல் பிரபு , ராஜ்கிரண் அல்லது வேறு யாரையாவது நடிக்க வைத்துவிட்டு படத் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டிருக்கலாம் என்பது எனது அபிப்ராயம் . ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிறைய பதக்கங்களை பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் ஒரு பெரிய ஓ போடுவோம் ...

மீண்டும் .கூடுவோம் ...




2 comments:

மணவை said...

அன்புள்ள திரு ஆனந்த நாரயணன் அவர்களுக்கு,

வணக்கம். தெருக்கூத்து அனைத்து அம்சங்களும் அம்சமாக அடங்கிய அருமையான பகிர்வு. மோடியின் நாடி பிடித்ததலிருந்து...ஆசிய விளையாட்டு வரை பூந்து விளையாடிவிட்டீர்கள்...படம் அருமை...கருத்துகள் அனைத்தும் பாராட்டுக்குரியன.

நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

Shankar said...

I endorse your view on casting of Papanasam.Prabhu will be apt. Even they can make in tamil the malayalam film Tanmatra with Prabhu. Then it is business and they look for star value to market . that is the bane of film world. Even they should have cast same person as the policeman rather than Kalabhan Mani(no doubt he is versatile) The character should project itself and not the actor. Search for an actor for a character rather than vice versa . regards - Sankaranarayanan

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...