14 November 2010

மைனா திரைவிமர்சனம்

              சிறு வயதில் இருந்தே மைனாவை காதலிக்கிறார் சுருளி , மைனாவிற்கும் அவள் அம்மாவிற்கும் எல்லா உதவிகளையும் செய்கிறார்...மைனா பெரியவள் ஆனவுடன் அவளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்கிறார் அவள் அம்மா ...இதனால் ஆத்திரம் அடையும் சுருளி மைனா அம்மாவை அடிக்க , கொலை முயற்சி குற்றத்தின் கீழ் போலீஸ் கைது செய்து 15 நாள் காவலில் வைக்கிறது ..மைனாவின் கல்யாண ஏற்பாட்டை தடுக்க காவலில் இருந்து தப்புகிறார் சுருளி...தலை தீபாவளிக்கு மனைவி வீட்டுக்கு கூட செல்ல முடியாமல் சுருளியை தேடி செல்கிறார் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் , அவருக்கு உதவியாக ராமையாவும்  உடன் செல்கிறார்  .   .சுருளியை போலீஸ் பிடிக்க அவர்களுடன் மைனாவும் வருகிறாள் ...இவர்கள் நால்வருடன் மலைகளுக்கு இடையில் நாமும் பயணம் ஆகிறோம் ...
         சுருளியாக விதார்த் , மைனாவாக அமலா இருவரும் கதைக்கு எளிதாக பொருந்துகிறார்கள் ..மைனாவை காதலிப்பதையே முழு நேர வேலையாக செய்யும் விதார்த் அவள் இல்லையென்று அம்மா சொன்னவுடன் ஆத்திரப்படும் இடத்திலும் , காதல் செய்வது தப்பா என்று போலீசிடம் கேட்கும் போதும் , மைனாவை தூக்கி கொண்டு காட்டுக்குள் ஓடும் போதும் கைதட்டல் வாங்குகிறார்....சில இடங்களில் பருத்திவீரனை ஞாபகபடுத்துகிறார் ...உணர்ச்சி வயப்படும் இடங்களில் யதார்த்தத்தை மீறுகிறார் ....                   அமலாவிற்கு வசனங்கள் குறைவு ..அதை கண்களிலேயே நிறைவு செய்கிறார்....கிளைமாக்ஸ் காட்சியில் மனதில் நிற்கிறார் ..இவர் சுருளியை காதலிப்பதற்கான காரணங்கள் அழுத்தமாக சொல்லப்படாதது ஒரு குறை ....
        இவர்கள் இருவரை தவிர படம் முழுவதும் நம்மை அழைத்து செல்லும் மற்ற இருவர் பாஸ்கர் மற்றும் ராமையா ...தலை தீபாவளியை கொண்டாட முடியாமல் இப்படி காட்டுக்குள் அலைய விட்டதற்காக சுருளியை கொன்று விடுவதாக மிரட்டும் பாஸ்கர் கடைசியில் அவர்களுக்காகவே தன் வாழ்கையை தொலைக்கும் போது மனதில் நிற்கிறார் ...சீரியசான கதையை ஜாலியாக எடுத்து செல்வதற்கு "தம்பி" ராமையா பெரிதும்  உதவி செய்கிறார்...ஆனாலும் ஒரே விதமான முக பாவங்களை தவிர்ப்பது நல்லது ...அவர் மனைவியாக வரும் செந்தாமரையை  நேரே காட்டா விட்டாலும் மனதில் பதிய வைத்தது இயக்குனரின் திறமை ....
               பாஸ்கரின் மனைவியாக வரும் சூசன் ஆரம்ப காட்சியிலும் , இறுதி காட்சியிலும் வந்து நம்மை அசர வைக்கிறார்....அவருடைய அண்ணன் ,அண்ணிகள்
 அனைவரும் கதாபதிரத்திற்கு ஒத்து போகிறார்கள் ... 
                  சுகுமாரின் ஒளிப்பதிவு நம்மை கதை நடக்கும் இடத்திற்கே கொண்டு செல்கிறது ...அதிலும் விபத்து காட்சியை கஷ்டப்பட்டு எடுத்து இருக்கிறார்கள் .... இமான் இதற்கு முன்னர் கிரி ,விசில் படங்களில் ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தாலும்
 இந்த படம் நல்ல திருப்புமுனை ...பின்னணி இசையில் பின்னி இருக்கிறார் ."மைனா பாடல் மனதிலயே நிற்கிறது ..... 
 ஒளிப்பதிவு,இசை இரண்டும் படத்திற்கு பெரிய பலம் ......
                  எளிமையான கதை , தெளிவான திரைகதை , யதார்த்தமான கதா பாத்திரங்கள் , மிரள வைக்கும் கிளைமாக்ஸ்,ஒரு கைதி தப்பி விட்டால் போலீஸ் காரனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஆழமாக காட்டியது  என எக்கச்சக்க பலங்கள் படத்திற்கு இருந்தாலும் , மெதுவாக நகரும் ஆரம்ப காட்சிகள் , பருத்திவீரனின் பாதிப்பு , மைனாவிற்கு சுருளி மேல் ஏற்படும் காதலை ஆழமாக காட்டாதது , சில இடங்களில் பைத்திய காரனோ என சந்தேகப்படும் அளவிற்கு சுருளியின்  காதல் என்று சில குறைகளையும் தவிர்த்திருந்தால் மைனா "பருத்திவீரன்" , "சுப்ரமணியபுரம்"  வரிசையில் மைல் கல்லாக அமைந்திருக்கும் ,,,,
            எனினும் "மைனா" மனதை உலுக்கும் படம்...
    இப்படத்தை  ரெட் ஜைன்ட் நிறுவனம் மார்கெடிங் செய்வதால் நல்ல ஒபெனிங் இருக்கிறது ...  ஒரு வகையில்இது சந்தோசமாக இருந்தாலும் சின்ன தயாரிப்பாளர்கள் நிலைமையை நினைக்கும் 
போது கவலையாக இருக்கிறது ....எந்த விதமான பின் பலமும் இல்லாமல் ரிலீஸ் ஆன "களவானி"   நல்ல பெயர் எடுத்தாலும் நான்கு மாதங்களுக்குள் டிவி யில் போட்டு விட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை ..

4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

நீட்டான விமர்சனம்.இன்னும் 2 ஸ்டில் போடுங்க

எஸ்.கே said...

நல்லாயிருக்குங்க விமர்சனம்!

மே. இசக்கிமுத்து said...

விமர்சனம் அருமை!!

Unknown said...

Super

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...