6 August 2011

தி.மு.க வினர் கைது பழியா? பாடமா?

                                           
       கடந்த இருபது ஆண்டு கால கழக ஆட்சியில் எது நடந்ததோ இல்லையோ எதிர் கட்சியினரை கைது செய்வது என்பது வழக்கமாக நடந்தேறி வருகிறது ... இருவரில் எவர் இதை முதலில் ஆரம்பித்திருந்தாலும் புரையோடிவிட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியை இனி யாரும் கலைப்பது கடினம்...

            இந்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம்,ஒழுங்கை நிலை நாட்டுவதே முதல் இலக்கு என்று சொன்ன முதல்வர் அதை செய்தும் காட்டி வருகிறார்..இது வரை 50க்கும் மேற்பட்ட தி.மு.க வினர் நில அபகரிப்பு வழக்குகளிலும்,குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்..

      சாதாரண நிர்வாகிகளில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் , அன்பழகன் போன்ற பெருந்தலைகள் வரை யாரையும் காவல் துறை விட்டு வைக்கவில்லை..தேசிய மனித உரிமை கழகத்திடம் தி,மு.க வினர் நேரில் சென்று முறையிடும் அளவிற்கு விஷயம் முற்றி விட்டது...
                                           
      சென்ற ஆட்சி காலத்தில் நில அபகரிப்புகள்,கொலை மிரட்டல்கள் இவையெல்லாம் நிறைய நடந்திருந்தும் இதில் சம்பத்தப்பட்டவர்கள் ஆளும் கட்சியினர் என்பதால் காவல் துறையினரால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை..இப்போது ஆட்சி மாற்றத்தால் சம்பத்தப்பட்டவர்கள் நேரில் வந்து கம்ப்ளைன்ட் கொடுப்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது அதி.மு.க தரப்பினரின் வாதம்...

       அரசியல் பழி வாங்கும் நோக்காத்தல் மட்டுமே இந்த கைது படலம் தொடர்கிறது என்பது தி.மு.க வினரின் வாதம்..நில அபகரிப்பு விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருந்தும் இது போன்ற நடவடிக்கைகளை ஏன் சொந்த கட்சியை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கருப்பையா போன்றவர்களின் மீது எடுக்கவில்லை என்பது தி.மு.க வினர் வைக்கும் குற்றச்சாட்டு....

        சொத்து குவிப்பு, டான்சி உட்பட இருபத்தியேழு வழக்குகள் தி.மு.க வின் ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா மீது போடப்பட்டன..ஆனால் அதில் ஒன்றை தவிர மற்ற வழக்குகளில் இருந்து கோர்ட் அவரை விடுவித்தது..இவையெல்லாம் அப்போது எந்த வித ஆதாரமும் இல்லாமல் போடப்பட்டவையா ? அப்படியென்றால் அது பழி வாங்கும் நடவடிக்கை இல்லையா ?..இந்த கேள்விகளுக்கு தி.மு.க விடம் பதில் இல்லை...

        செஸ் விளையாட்டில் முதலில் சிப்பாய்,மந்திரி,ராணி என ஒவ்வொன்றாய் அடித்து விட்டு கடைசியில் ராஜாவிற்கு வருவார்கள்..காங்கிரஸின் கைங்கைர்யத்தால் முதலில் ராஜாவே கைது செய்யப்பட்ட பிறகு கனிமொழி கைது செய்யப்பட்டார்...தி.மு.கவும் தேர்தல் கூட்டணி என்று சொல்லி சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்டது ....
                                 
      ஒரு பக்கம் எல்லோரும் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்க, மு.க.ஸ்டாலினோ "ஏய் நானும் ஜெயிலுக்கு போறேன், எல்லோரும்  நல்லா பாத்துங்குங்க,நானும் ரவுடி தான் ரவுடி தான்"  என்று "தலைநகரம்" வடிவேலு பாணியில் கலைவாணனை கைது செய்வதற்கு                       முன்னாள் தானாகவே வலிய வந்து வேனுக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார் ..

         பொதுவாக பேரணி என்றாலே சலசலக்கும் மதுரை மு.க.அழகிரியின் வலது,இடதுகளான அட்டாக் பாண்டி,பொட்டு சுரேஷ் இவர்களின் கைதால்
வெலவெலத்துப் போனது...பேரணியில் கூடிய சிலரும் காவல்துறையினரை                                                                                                                     பார்த்ததும் "ஏய் ..கை முறுக்கு, சுண்டல் " என்று கூவி விட்டு பேருந்துகளை நோக்கி விரைந்ததாக ஒரு நம்பத்தகுந்த தகவல்...
                                              
        தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த வித இரண்டாம் யோசனைக்கும் இடமே இல்லை..அதிலும் குறிப்பாக இப்போது கைது செய்யப்பட்டு வரும் பெரும்பாலானோர் மக்களுக்கு சேவைகள் மட்டுமே புரிந்த தியாகிகளும் அல்ல...

         கட்டப் பஞ்சாயத்து, காவல் துறையின் செயல்பாட்டில் தலையீடு போன்ற செயல்களில் ஈடுபடும் ஆளும்கட்சியினருக்கும்                                     முதல்வர் எச்சரிக்கை விடுத்திருப்பது ஆரோக்கியமான ஆரம்பம்..

        தி.மு.கவினர் கைது பழி வாங்கும் படலமா? பதர் அறுக்கும் வைபவமா? எதுவாக இருந்தாலும் மக்களின் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிப்பவர்களின் மீது எந்த வித கட்சி பேதமுமின்றி காவல் துறை நடவடிக்கை வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ....










5 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

Reverie said...

என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ananthu said...

Rathnavel said...
நல்ல பதிவு.

நன்றி... நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Reverie said...
என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

வசந்தி முருகன் said...

தி.மு.க வினர் கைது பழியே!!

ananthu said...

வசந்தி முருகன் said...
தி.மு.க வினர் கைது பழியே!!

நன்றி... !

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...