3 February 2012

அப்பாடா ஜெயிச்சாச்சு ...!


ரு வழியாக இன்று இந்திய கிரிக்கெட் அணி நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் தன் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது...அசால்டாக இருந்திருக்க வேண்டிய வெற்றி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ட்வென்டி - 20  உட்பட ஐந்து போட்டிகளில் மண்ணைக் கவ்விய இந்திய அணியால் அப்பாடா என்று சொல்லும்படியாகி விட்டது ... 

முதல் ட்வென்டி - 20  யில் 131 ரன்கள் மட்டுமே அடித்து 40 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை அதே 131 ரன்களுக்கு சுருட்டியது குறிப்பிடத்தக்கது ... ஸ்பின்னர் ராகுல் மற்றும் பிரவீன் குமார் நன்றாக பௌலிங் போட்டிருந்தாலும் இளம் வீரர்களின் துடிப்பான பீல்டிங்கால் நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் அவுட் ஆனதே ஆரம்பத்தில் அடித்து ஆடிய அந்த அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த காரணமாய் அமைந்தது ... 


முதல் ஆட்டத்தில் அரை சதம் அடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் வேட் இந்த மேட்சில் அதிகபட்சமாக 36  ரன்கள் அடித்தார் ... பின்னர் ஆடத்தொடங்கிய இந்திய அணிக்கு கம்பீர் மற்றும் சேவாக் நல்ல துவக்கத்தை கொடுத்தனர் ... ஸ்ட்ரைட்டில் சிக்ஸ் அடித்த சேவாக் பின் அதை தக்க வைத்துக்கொள்ளாமல் அவுட் ஆனாலும் கம்பீர் கடைசி வரை நின்று அரை சதம் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார் .... 

கோலியும் தன் பங்குக்கு கால் சதத்தை பூர்த்தி செய்து அவுட் ஆனார் ... சென்ற ட்வென்டி - 20  யில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருந்த கேப்டன் தோனி இந்த முறை அவுட்டாகாமல் கம்பிருக்கு உறுதுணையாக நின்றார் ... 

வரிசையான தோல்விகளால் துவண்டு போயிருந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த வெற்றி ஒரு சின்ன ஆறுதலை கொடுத்திருப்பதோடு அடுத்து பிப்ரவரி ஐந்தில் தொடங்கப்போகும் இந்திய - ஆஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கும்  நல்ல முன்னோட்டமாக அமைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது ...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா ஜெயிச்சாச்சு ...!
சந்தோசம் சார் ! நன்றி !

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
அப்பாடா ஜெயிச்சாச்சு ...!
சந்தோசம் சார் ! நன்றி !

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...