17 March 2013

வத்திக்குச்சி - VATHIKUCHI - பற்றி எரிந்திருக்கும் ...



ங்கேயும் எப்போதும்  வெற்றிக்குப்  பிறகு பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ -  ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்சன் இணைந்து தயாரித்த படம் என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது . முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தை கையில் எடுத்த வகையில் வெற்றி பெற்றவர்கள் அதை செயல்படுத்திய விதத்தில் பெரிய வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம்  ...

ஷேர் ஆட்டோ ஓட்டும்  சக்தி ( திலீபன் ) யை கொலை செய்வதற்கு ரவுடி பென்னி ( சம்பத் ) , சவுக்கார்பேட் சேட் ( ஜெயப்ரகாஷ் ) , இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ( ஜெகன் ) ஆகிய மூவரும் தனித்தனியே திட்டமிடுகிறார்கள் .  இதை அறியாத சக்தி ஒரே குடியிருப்பில் இருக்கும் லீனா ( அஞ்சலி ) யை டாவடிக்கிறார் . காதல் என்னானது என்பதையும் , சாதாரண ஆளுக்கு ஏன் இத்தனை பகை என்பதையும்  நம்மை கொஞ்சம் என்கேஜ் செய்தும் கொஞ்சம்  டேமேஜ் செய்தும் சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குனர் கின்ஸ்லின் ...


ஏ.ஆர்.முருகதாசின் தம்பி என்பதற்காக மட்டுமே ஹீரோ வேஷம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது  . ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரத்துக்கு ஏற்ற படியான முகமும் , ஆக்சனுக்கு ஏற்ற உடல்வாகும் மட்டுமே ஹீரோவுக்கு ப்ளஸ் . மற்றபடி திலீபன் அஞ்சலி , சம்பத் இருவருக்குமிடையே முகபாவம் ஏதுமின்றி பாவமாய் சிக்கித் தவிக்கிறார் . அதே நேரம் சண்டைக்கு முன் கை கால்களை முறுக்கிக் கொண்டு நிறுக்கும் போது கவனிக்க வைக்கிறார் ...

அஞ்சலி பெயர் வந்தவுடனே கை தட்டுகிறார்கள் . அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு இவர் விடும் அலட்டலும் , திலீபனுக்கு விடும் மிரட்டலும் ரசிக்க வைக்கின்றன . இருந்தாலும் எங்கேயும் எப்போதும் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை ...


ச்மப்த் போன்ற ஒரு நடிகருக்கு ஆரண்ய காண்டம் போல படம் மீண்டும் கிடைக்காதது துரதிருஷ்டமே . சாதாரண வில்லன் பத்திரத்தை தன் தேர்ந்த நடிப்பின் மூலம் சில படிகள் மேலே உயர்த்துகிறார் சம்பத் . குடி போதையில் ரவி மரியாவுடன் இவர் பேசும் காட்சி க்ளாஸ் . ஜெகன் வன்மமான புன்னகையால் வசீகரிக்கிறார்  , ஆனால் அதையே படம் முழுவதும் செய்து வெறுப்புமேற்றுகிறார் . இவருடைய கேரக்டரில் உள்ள குழப்பமும் , லாஜிக் மீறலும் படத்திற்கு பெரிய சறுக்கல் . ஜெயப்ரகாஷிற்கு  தாடியை சொரிந்து கொள்வதை தவிர வேறு வேலையொன்றுமில்லை . சரண்யா அன்பான தாயாக வந்து இட்லிகளை அள்ளி அள்ளி வைக்கிறார் அவ்வளவே ...

கிப்ரான் சையில் " குறு குறு " , " கண்ணா கண்ணா " பாடல்கள் முணுமுணுக்க வைத்தாலும் பின்னணி இசை தேவையில்லாமல் இறைந்து எர்ச்ச்சலை கிளப்புகிறது . பிரவீன் - ஸ்ரீகாந்த் எடிட்டிங் அங்கேயிங்கே அலைபாயும் திரைக்கதையை ஒரு நேர்கோட்டில் கொண்டு வர முயற்சித்து தோற்றிருக்கிறது . படத்தில் பாராட்டப்பட வேண்டியவர் ஸ்டண்ட் இயக்குனர் ராஜசேகர் . சாமான்யனின் சண்டையை கவனிக்க வைத்திருக்கிறார் .

சரண்யா பையனிடம் " நம்ம அப்பா ப்ரோக்கர் ஆனா அவ அப்பா கவர்மெண்ட் ஆபீஸ்ல  வாட்ச்மேன் " என்று சொல்வது , சம்பத் குடிபோதையில் " அவன் அடி வாங்கிட்டு போன பிறகு ஒரு மாசம் நல்லா ஜிம்முக்கு போயிருப்பான் இல்ல சுண்டக்கடலையை ஊற வச்சு தின்னுருப்பான்னு நினைக்கிறேன் " என்று ரவி மரியாவிடம் சொல்வது போன்ற இடங்களில் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன .

ஸ்போக்கன் இங்க்லீஷ் படிக்கும் அஞ்சலி , தன்னிடம் பணம் பறித்தவர்களை  பயிற்சி எடுத்துகொண்டு போய் அடிக்கும் திலீபன் , சாமான்யனிடம் தோற்று விட்ட வெறுப்பில் சம்பத் , குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிடும் ஜெகன் இவர்களை வைத்து முதல் பாதியை முடிந்த வரை சுவாரசியமாகவே கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் . ஆனால் முதல் பாதியில் போட்ட முடிச்சுகளை சரியாக அவிழ்க்க முடியாமல் இடைவேளைக்கு பிறகு திரைக்கதையில்  திணறியிருக்கிறார் .


வாட்டர் கேனில் சரக்கை ஊற்றி வைத்து டம்ளரில் பிடித்து குடிப்பது , காலை 9.15 மணிக்கு யாரையோ கொலை செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தவுடன் அதை சாமர்த்தியமாக ஹீரோ தடுப்பது ,  திலீபனுக்கு நேர்ந்ததை அஞ்சலி கடைசி வரை நம்ப மறுப்பது, அடியாட்களிடம் இருந்து  தப்பி வரும் வழியில் உண்டு , உறங்கி திலீபன் தன்னை தேத்திக் கொள்வது போன்ற இடங்களில் கின்ஸ்லி கவனிக்க வைக்கிறார் . சென்னை மற்றும் புற நகரங்களில் சர்வ சாதாரணமாக நடக்கும் குற்றங்களை காட்டி நம்மை மிரளவும் வைக்கிறார் ...

இரண்டாம் பாதியில் தான் திலீபனை ஆக்சன் ஹீரோவாக காட்டும் முயற்சியில் லாஜிக் என்கிற வஸ்துவை சுத்தமாக மறந்து விட்டிருக்கிறார் .  மூவரும் ஏதோ பிரதமரை கொல்வது போல ஒரு ஆட்டோ டிரைவருக்கு திட்டமிட்டுக் கொண்டே இருப்பது சுத்த பேத்தல் . அதிலும் காசுக்கு கொலை செய்யும் சம்பத் ஒரு கொலை செய்வதற்கு  இவ்வளவு யோசிப்பதும் , மாட்டிக்  கொள்ளாமல் புத்தியை பயன்படுத்தி சம்பாதிக்க நினைக்கும் ஜெகன் & கோ துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு கண்டபடி சுடுவதும் , வெறும் பதினைந்து லட்சத்திற்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பதும் கதையின் பெரிய ஓட்டைகள் . அதிலும் அரை மயக்கத்தில் இருக்கும் திலீபனை அங்கேயே போட்டுத் தள்ளாமல் ஊர் ஊராக  சுற்றிக் கொண்டிருப்பதெல்லாம் ஓவர் ...

ஹீரோவுக்கு ஏன் இப்படி நடக்கிறது எனபதை அறியும்  ஆர்வத்தை கொடுத்த இயக்குனர் அதற்கான காரணங்களிலும் , திலீபனை மாஸ் ஹீரோவாக்கும் முயற்சியிலும் தடுமாறியிருக்கிறார் . ஒரு வேளை கொஞ்சம் பிரபலமான ஹீரோ நடித்து கதையில் லாஜிக்கை யோசித்திருந்தால் வத்திக்குச்சி பற்றி எரிந்திருக்கும் ...

ஸ்கோர் கார்ட் : 41


3 comments:

ananthu said...

Tamil Kalanchiyam said...
தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாக பற்றவில்லை... ஆதலால் செல்வதாக இல்லை.... நன்றி...

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
சரியாக பற்றவில்லை... ஆதலால் செல்வதாக இல்லை.... நன்றி...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...