2010 ஆம் ஆண்டிற்கான 58 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன
.. . இந்த முறை அதிகமாக தென் இந்திய திரைப்படங்களுக்கு 18 விருதுகள் வரை வழங்கப்பட்டு
இருப்பது இதுவே முதல் முறை ...... அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டிற்கு 13 விருதுகள் கிடைத்திருப்பதும் இதன்
சிறப்பம்சம்...
அதிகப்படியாக சிறந்த நடிகர் - தனுஷ் ( இத்த விருது கேரள நடிகர் சலீம் குமாருடன் சேர்த்து வழங்கப்படுகிறது ) .....
சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கம் - வெற்றி மாறன்
சிறந்த நடனம் - தினேஷ் குமார் , சிறந்த படத்தொகுப்பு - கிஷோர்
சிறப்பு விருது - ஜெயராமன் என்று மொத்தம் ஆறு விருதுகளை
அள்ளி சென்றிருக்கிறது ஆடுகளம்...காண்க .ஆடுகளம் விமர்சனம்...
மதுரை கருப்பாகவே ஆடுகளத்தில் வாழ்ந்து காட்டிய தனுஷிற்கு இது சரியான சந்தர்ப்பத்தில் கிடைத்திருக்கும் பெரிய அங்கீகாரம்.. சிறந்த நடிகருக்கான விருதுகள் பெற்ற எம்.ஜி.ஆர்,கமல்,விக்ரம் போன்ற கதாநாயகர்கள் வரிசையில் இப்போது தனுஷும் இடம் பெற்று விட்டார் ..
( ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகர் என்ற விருதை பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்காதது விருதுக்கு கிடைத்த துரதிருஷ்டம் )....
இரண்டாவது படத்திலேயே இரண்டு தேசிய விருதுகள் பெற்று சிறந்த
இயக்குனருக்கான விருதினை பெரும் மூன்றாவது இயக்குனர் என்ற
பெருமையினை தட்டி செல்கிறார் வெற்றி மாறன்..( அகத்தியன்,பாலா இருவரும் இவ்விருதினை வாங்கிய பெருமைக்குரியவர்கள் )
இயல்பான நடிப்பால் எல்லோரையும் கவர்ந்த ஈழக் கவிஞர் ஜெயராமன்
சிறப்பு விருதினை பெற்றிருக்கிறார் .
ஆடுகளத்திற்கு அடுத்தபடியாக தென்மேற்கு பருவக்காற்று , எந்திரன் ,
நம்ம கிராமம் போன்ற படங்களும் தலா இரண்டு விருதுகளை தட்டி சென்றிருக்கின்றன...
தற்போது கிராமத்து அம்மா என்றவுடன் நினைவுக்கு வரும் சரண்யா
தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக
சிறந்த நடிகைகான விருதினை வாங்குகிறார்..(மராத்திய நடிகை மிதாலி ஜக்டப்பும் இவ்விருதினை பெறுகிறார் )..
தமிழச்சியின் தாய் பாசத்தையும்,வீரத்தையும் பறை சாற்றும் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதும் கிடைத்திருக்கிறது
ஏழாவது முறையாக சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதினை இம்முறையும் வைரமுத்து வாங்குகிறார் ..( தென்மேற்கு பருவக்காற்று )
இந்தியாவிலேயே அதிக பட்சமாக தேசிய விருதினை பெரும் தனி நபர் இவர் என்றே நினைக்கிறேன் ..( கமல் பிலிம் பேர் விருதினை வேண்டாம் என்று சொன்னது போல
இவர் சொன்னால் தான் உண்டு போல ) .
எளிமையான பாடல்களாலும் ,எதுகை மோனையாலும் எல்லோர்
மனதிலும் இடம் பிடித்த கவிஞர் வாலிக்கு ஒரு தேசிய விருது கூட
வழங்கப்படாதது மனதை பிசையும் முரண்பாடு...
சிறந்த துணை நடிகைக்கான் விருதினை சுகுமாரி பெறுகிறார்
( படம் - நம்ம கிராமம் ). சிறந்த உடை அமைப்புக்கான விருதும் பெறுகிறது ..
எந்திரன் படத்திற்காக விருது பெறுபவர்கள் .காண்க எந்திரன் திரை விமர்சனம்......
சிறந்த கலை இயக்குனர் - சாபு சிரில் மற்றும்
ஸ்பெஷல் எபக்ட்ஸ் - ஸ்ரீநிவாஸ் மோகன் ...
குறைந்த பட்சம் நான்கு விருதுகளாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட "மைனா"
திரைப்படம் ஒரே ஒரு விருதினை மட்டும் பெற்றிருப்பது ஏமாற்றமே ...
காண்க மைனா திரைவிமர்சனம் ..
நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல்
தன்னை சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நிரூபித்த "தம்பி" ராமையாவிற்கு
சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி....
இவை தவிர சிறந்த திரைப்படமாக "அடமிண்டே மகன் அபு" என்ற மலையாள படமும் , சிறந்த பொழுது போக்கு படமாக சல்மான்கான்
நடித்து சென்ற வருடம் அதிக பட்ச வசூலை அள்ளிய "தபாங்" என்ற ஹிந்தி
படமும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன....
விருது பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.....
1 comment:
>ஈழக் கவிஞர் ஜெயராமன்
சிறப்பு விருதினை பெற்றிருக்கிறார் .
அவர் "வ.ஐ.ச.ஜெயபாலன்". ஜெயராமன் அல்ல.
Post a Comment