17 October 2011

ஒண்டிக்கு ஒண்டி - உள்ளாட்சி தேர்தல் ...


           
     உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்  கட்ட வாக்குபதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் . பொதுவாக சட்டசபை மற்றும் மக்களவைக்கு நடக்கும் தேர்தலை போல உள்ளாட்சி தேர்தல் பரபரப்பாக இல்லாவிட்டாலும் இந்த முறை தே.மு.தி.க , இடது சாரிகள் தவிர மற்ற கட்சிகள் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவதும் , மாநகராட்சிக்கான மேயரை மக்களே நேரடியாக தேர்தேடுப்பதும் சுவாரசியத்தை கூட்டியிருக்கின்றன ...

    தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி வைத்து தங்கள் கொள்கைகளை ! காற்றில் பறக்கவிடுவதையே கொள்கையாக வைத்திருக்கும் கட்சிகள் வழக்கத்திற்கு மாறாக தி.மு.க , அ .தி. மு.க முதுகில் சவாரி செய்ய முடியாமல் தனித்து விடப்பட்டிருக்கின்றன ...

    சென்ற முறை அ.தி.மு.க கூட்டணியில் இருந்த தே.மு.தி.க , இடதுசாரிகள்  கூட்டணியாகவும் , தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ம.க மற்றும் காங்கிரஸ் தனித்தனியாகவும் போட்டியிடுவது யாவரும் அறிந்ததே ...

                             
    இழுபறி நிலையில் கூட்டணியில் இருந்து  கடைசியில் தே.மு.தி.க கழட்டி விடப்பட்டது சங்கடமாக இருந்தாலும் , உற்று நோக்கினால் தி.மு.க வுடன் தே.மு.தி.க வை மோத வைத்த அம்மாவின் சாமர்த்தியம் ஒளிந்திருப்பது தெரியும் ...

    இந்த முடிவு இப்போது இருக்கும் சூழ்நிழையில் இரண்டு கட்சிகளும் சேர முடியாதென்பதையும் , இருவரில் யார் ஜெயித்தாலும் அதில் தனக்கு சாதகம் இருப்பதையும் வைத்து போடப்பட்ட தெளிவான கணக்கு ... கடந்த சட்டசபை தேர்தலை புறக்கணித்து தன்மானம் காட்டிய வை.கோ இந்த முறை தே.மு.தி.க, இடது சாரி கூட்டணியில் சேர்ந்திருந்தால் ஒரு புது கணக்காவது தொடங்கியிருக்கும் ... தமிழகத்தில் தீண்டத்தகாத கட்சியென்று பி.ஜே.பி யை பழித்த காங்கிரஸ் இன்று அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது காலத்தின் கட்டாயம் ...

     இந்த தேர்தலில் தங்கள் பலத்தை கான்பிக்கப்போவதாக கட்சி தலைவர்கள் சொல்லிக்கொண்டாலும் சட்டசபை தேர்தலுக்கு கிடைத்தது போல பெருவாரியான வாக்குப்பதிவு இந்த முறை கிடைக்காது என்பதும் , இந்த தேர்தல் உயர்நீதி மன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடப்பாதலோ என்னவோ , சட்டசபை தேர்தலை போல அல்லாமல் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் கணிசமாக குறைந்திருப்பதும் , கட்சி உறுப்பினர்களின் ஒட்டுப்பதிவே பெரும்பாலும் நடக்கும் என்பதாலும் உள்ளாட்சி தேர்தலில் உண்மையான பலம் தெரியாது என்பதே உண்மை ...

             
     இருப்பினும் அன்றாட பிரச்சனைகளுக்கான தீர்வை முன் வைத்து நடத்தப்படும் இத்தேர்தலில்  அந்தந்த வார்டுகளில் நிற்கும் தனிப்பட்ட மனிதர்களின் நிறை,குறைகள் நிச்சயம் அலசப்படும் ... இது சுயேட்சைகளின் வெற்றி வாய்ப்பையும் அதிகரிக்கும் ...

       
    குறிப்பாக சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை மேயர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிடும் திரு.சுப்ரமணியன் மற்றும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் திரு,சைதை துரைசாமி இருவரின் மீதும் மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இருப்பதால் நிச்சயம் போட்டி கடுமையாக இருக்கும் ...


   இருவரில் யார் மேயரானாலும் ஏற்கனவே தொடங்கிய மெட்ரோ ரயில் உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களை பாரபட்சமின்றி தொடர்ந்து நிறைவேற்ற வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம் ...

    மக்களின் பேராதரவோடு பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சிமைத்து ஆறு மாதங்களே முடிவந்த நிலையில் அ.தி.மு.க விற்கு மக்களின் ஆதரவு பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்பதும் , அ.தி.மு.க வை தேர்ந்தெடுத்தால் தான் மின்விசிறி , லேப் டாப் உள்ளிட்ட வாக்குறுதிகள் தங்குதடையின்றி நிறைவேற்றப்படுமென்ற மக்களின் நினைப்பும் , ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களையே உள்ளாட்சி தேர்தலிலும் ஜெயிக்க வைக்கும் மக்களின் மனப்பாங்கும் அ.தி.மு.க விற்கு சாதகமாக இருந்தாலும் , சமசீர் கல்வி குளறுபடி , தி.மு.க வினரின் தொடர் கைது ஏற்படுட்ட்திய அனுதாப அலை  , பரமக்குடி  துப்பாக்கி சூடு , கூட்டணி கட்சிகளை நடத்திய விதம் போன்றவையெல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை ஏற்படுத்துமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை ...

    இது போன்ற யூகங்களுக்கெல்லாம் விடை தெரிய ஒட்டு எண்ணிக்கை நாள் வரை நாமும் பொறுத்திருப்போம் ...

பின் குறிப்பு : இந்த பதிவை படித்ததோடு நின்று விடாமல் உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்மணம் , இன்ட்லி , தமிழ் 10 , இனிய தமிழ் , உடான்ஸ் , உளவு உள்ளிட்ட அனைத்திலும் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது உங்கள் சகோதரன் , அன்புதோழன் அனந்து ... ( சாரிங்க தேர்தல் பத்தின பதிவா அதான் ... அதுக்காக நீங்க ஒட்டு போட மறந்துராதீங்க )

7 comments:

அபி said...

மிகத் தெளிவான கட்டுரை அனந்து !

ananthu said...

அபி said...
மிகத் தெளிவான கட்டுரை அனந்து !

நன்றி அபி ...

ananthu said...

Cpede News said...
தமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/

ஒ.சி ப்ரமொவோட சேத்து கொஞ்சம் கமெண்டும் போடுங்கப்பா ...

Anonymous said...

நல்லதொரு அலசல்...

ananthu said...

ரெவெரி said...
நல்லதொரு அலசல்...

நன்றி ...

Angel said...

. ( சாரிங்க தேர்தல் பத்தின பதிவா அதான் ... அதுக்காக நீங்க ஒட்டு போட மறந்துராதீங்க )//
தேர்தலில்தான் ஓட்டு போட முடியல்ல .இங்கே உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு .

ananthu said...

angelin said...
( சாரிங்க தேர்தல் பத்தின பதிவா அதான் ... அதுக்காக நீங்க ஒட்டு போட மறந்துராதீங்க )//
தேர்தலில்தான் ஓட்டு போட முடியல்ல .இங்கே உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு .

நீங்க தான் உண்மையான இந்திய குடிமகள் ... ரொம்ப நன்றிங்க ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...