21 August 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - KTVI - க்ளாப் ...


முதல் படம் புதிய பாதை க்கு பிறகு அதே போல பெரிய ஹிட் கொடுக்கா விட்டாலும்  தனது வித்தியாசமான அணுகுமுறையால் தன் ஒவ்வொரு படைப்பின் மேலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதில் வித்தகரான இராதாகிருஷ்ணன் பார்த்திபன்  க.தி.வ.இ மூலம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார் ...

எது மாதிரியும் இல்லாத புது மாதிரி படம் எடுக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் டி.வி.டி க்களை சுடாமல் தன் டீமுடன் வீட்டிலியே உட்கார்ந்து டிஸ்கசன் செய்கிறார் இயக்குனர் தமிழ் ( சந்தோஷ் ) . தமிழுக்கு கதை கிடைத்ததா ? அவருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை  விட்டுப் போகும் காதல் மனைவி ( அகிலா ) திரும்பி வந்தாளா என்பதை நிறைய சுவாரசியங்கள் , கொஞ்சம் கடி என்று தனது கலவையில் தந்திருக்கிறார் பார்த்தி ...

சந்தோஷ் - அகிலா இருவருமே கதைகேற்ற நல்ல தேர்வு . இருவர் முகத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது . நண்பர்கள் குழு வீட்டில் உட்கார்ந்து அடிக்கும் டிஸ்கஷன் கூத்தால் தனது ப்ரைவசி பாதிக்கப்படுவதை சொல்லி அழும் எக்ஸ்சென்ட்ரிக் அகிலா கதாபாத்திரம் யதார்த்தம் . இருவரின் காதல் , அன்னியோன்யம் , சண்டை எல்லாவற்றிலுமே இயக்குனர் பளிச்சிடுகிறார் . ..


தேவர் படங்களில் ஆரம்பித்து சின்னத்தம்பி , ஈ என்று சினிமா  செய்தி துணுக்குகளை அள்ளித் தெளிக்கும் அசிஸ்டன்ட் டைரக்டராக  தம்பி ராமையா . படம் முழுக்க சிரிக்க வைப்பவர் 58 வயதாகியும் தன் 28 வயதான பெண்ணிற்கு இன்னும் கல்யாணம் செய்து வைக்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் ததும்பும் தந்தை கேரக்டரில் அண்ணன் ராமையாவாக படத்தையே தூக்கி நிறுத்துகிறார் . எல்லா துறைகளிலும் எதிர்பார்த்த உயரத்தை அடைய முடியாத இது போன்ற என்சைக்லோபீடியாக்கள் நிச்சயம் இருப்பார்கள் . தம்பி ராமையா வை அடிக்கடி வாரும் உதவி இயக்குனர் சுருளி கவர்கிறார் . பவர் ஸ்டார் கெட்டப்பில் வந்து தப்பு தப்பு இங்கிலீசில் கதை சொல்லி படம் கிளைமேக்சில் முடிய வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லும் தயாரிப்பாளர் சிம்ப்ளி சூப்பர்ப் ...

" முதல் 20 நிமிடத்துக்குள் கதையை சொல்லி இடைவேளையில் ஷாக் ப்ரேக் கொடுத்து ப்ரீ க்ளைமேக்சில கொஞ்சம் நிப்பாட்டி கடைசியில படத்த முடிக்கணும்னு நாங்க ஒரு பார்மெட் வச்சிருப்போம் . அத நேத்து வந்த குறும்பட பசங்க தூக்கி எரியறதா " என்று தம்பி ராமையா வை புலம்ப விட்டு பல சீனியர் இயக்குனர்களின் ஆதங்கத்தை போட்டுடைப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . பேஸ் புக் , ட்விட்டரில் கமென்ட் போடுபவர்கள் மட்டுமல்லாமல் தண்ணி கேன் போடும் நபருக்கு கூட இருக்கும் சினிமா அறிவை அழகாக சொல்லியிருக்கிறார் பார்த்திபன் ...

பாலச்சந்தர் பட பாணியில் வரும் இரண்டாவது  ஹீரோயின் , நடுநடுவே வந்து பேசி கொஞ்சம் கடிக்கும் பார்த்திபன் , கதை விவாதத்தில் இருந்த சுவாரசியம் தமிழ் சொல்லும் உண்மைக் கதையில் இல்லாமல் போவது , கதை இல்லை என்று என்ன தான் டேக் லைன் போட்டிருந்தாலும் , திரைக்கதை , வசனம் இரண்டும் கவனிக்க  வைத்தாலும் நம்மை ஒன்ற வைக்கும் ஒன் லைன் எதுவும் இல்லாமல் வெறும் சீன்களின் கோர்வையாக படம் இருப்பது போன்றவை மைனஸ் . படம் எடுப்பதற்கு டிஸ்கசன் செய்வார்கள் , ஆனால் அந்த டிஸ்கசனையே ரசிக்கும் படியான படமாக கொடுத்து  25 வருடங்கள் கடந்தும் இன்றைய குறும்பட இயக்குனர்களுக்கு தான் எந்த விதத்திலும் சளைத்தவனில்லை என்று நிரூபிக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் வித்தியாசமான சிந்தனைக்கு ஒரு க்ளாப் ...

ஸ்கோர் கார்ட் : 43


9 August 2014

தெருக்கூத்து - 2 ...


.பி யில் வெறும் பத்து தொகுதிகளை  பெற்றிருந்த பா.ஜ.க வை கடந்த தேர்தலில் 70 க்கும் மேல் ஜெயிக்க வைத்து மோடியை பிரதமராக பதவியேற்க வைத்ததில் பெரும்பங்காற்றியவர் அமித் ஷா . ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கட்சியின் கொள்கை அடிப்படையில் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராகி விட்டதால் கட்சித் தலைவர் பதவியை அமத் ஷாவிற்கு கொடுத்திருப்பது சரியான முடிவு . உ.பி யைப் போலவே மேற்கு வங்காளம் , ஓடிஸா , தமிழ்நாடு , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கால் பதித்திருக்கும் பா.ஜ.க வை மேலும் வளர்க்க அவரின் தலைமை உதவும் ...

காந்தி குடும்பத்துக்கு நெருக்கமாயிருந்த நட்வர் சிங் தனது சுய சரிதையில் சோனியா பிரதமராகாததற்கு ராகுல் தான் காரணம் என்று சொல்லி குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் . ஏற்கனவே வரலாறு காணாத தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரசுக்கு இது வெந்த புண்ணில் வேல் . தேர்தலில் சகோதரருக்காக காம்பேரிங் சாரி , பிரச்சாரம் செய்த பிரியங்கா முழு நேர அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் . அவருக்கு பார்ட் டைம் மட்டும் தான் புடிக்குமோ ? ...

ராணுவத்தில் அந்நிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவிகிதமாக உயர்த்துவதற்கான பில்லை நாடாளுமன்றத்தில் பாஸ் செய்திருக்கிறார்கள் . அதே போல இன்சூரன்ஸ் பில்லையும்  கூடிய விரைவில் பாஸ் செய்வார்கள் என்று நம்பலாம் . பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடும் மைனர்கள் ( என்ன பொருத்தம் ) வயதை காரணம் காட்டி எஸ்கேப் ஆகி விடுவதால் வயது வரம்பை 18 இலிருந்து 16 ஆக குறைக்க வேண்டுமென்கிற மேனகா காந்தியின் ஆலோசனையை வரவேற்கலாம் . ஆனால் அரசியல் ரீதியாகவோ , சட்ட ரீதியாகவோ மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும்  இதை அணுகுவார்களா ? ....

அம்மாவின் லேட்டஸ்ட் அறிவிப்பு அம்மா அமுதம் அங்காடிகள் . எங்களிடம் சரக்குகள் மட்டுமல்ல  பலசரக்குகளும் கிடைக்கும் என்று அரசு இனி விளம்பரம் செய்யுமோ  ?. ஸ்டாலினை 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் கல்யாணசுந்தரத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கூட தூக்கி விட்டார்கள் . அண்ணனின் ஆதரவாளர்களுக்குத் தான் இந்த கதி என்று பார்த்தால் தம்பியின் கைத்தடிகளுக்குமா ? . தலைவரின் பணியில் சொல்வதென்றால் கட்சி ஜனநாயக ரீதியில் தன் கடமையை செய்யும் ...

ஆஸ்திரேலியாவில் ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே கால் மாட்டிக் கொண்ட ஒருவரை எல்லோருமாக சேர்ந்து ரயிலை தள்ளி காப்பாற்றியதை பார்த்த போது மெய் சிலிர்த்தது . ஆனால்  நம்மூர்  அடையார் பாலத்தில் பைக் ஒட்டிக் கொண்டு வந்தவர் கீழே விழுந்து மூர்ச்சையாகி விட கூடவே பைக்கில் வந்த  பெண் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல்  பைக் பார்ட்டியின் பர்சையும் , செல்லையும் லவட்டிக் கொண்டு போன செய்தியை படித்த போது கண் வேர்த்தது . Who is that lady ? ...

பத்து வருடங்கள் கழித்து 94 குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய கும்பகோணம் தீ விபத்துக்கு காரணமாவர்களுக்கு  ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வந்திருக்கிறது . காலம் கடந்த நீதி  மறுக்கப்பட்ட நீதி என்பார்கள் . நம் நாட்டில் ஒரு வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்குள் அதில் சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பதே சந்தேகம் . 2014 இல் முகலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து பலர் பலியான வழக்கிலாவது உடனடி தீர்ப்பு வருவதற்கு ஆவண செய்ய வேண்டும்  . ஆனால் 3 வருடங்களுக்கு முன்பே நீதிமன்ற அறிவுரையின்  படி சி.எம்.டி.ஏ வில் உள்ள சில அதிகாரிகளின் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இது போன்ற விபத்துக்களை ஒரு வேளை  நடக்காமல் தடுத்திருக்கலாம் . இந்நேரத்துக்கு இந்த விபத்தைப் பற்றி நிறைய பேர் மறந்திருப்பார்கள் . பிறகு வேறொரு சம்பவம் , வேறொரு வழக்கு என்று வாழ்க்கை ஓடிக்கொண்டேயிருக்கும் . ஒரு கொலைக்கே தூக்கு தண்டனை கொடுக்கலாமெனும் போது சிலரின் மெத்தனத்தாலும் , ஊழலாலும் பல உயிர்களை பலியாக்கும்  இது போன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை தான் கொடுக்கப்படுகிறது . என்ன  கொடுமை சார் இது ? ...

சென்ற பதிவில் தோனி இங்கிலாந்து சீரியசை ஜெயித்தால் பேண்டை கழட்டி சுற்றுவாரோ என்று கேட்டது இங்கிலீஸ் காரெங்க காதுல விழுந்துருச்சோ என்னவோ ?. அடுத்து நடந்த சவுத்தாம்ப்டன் டெஸ்டுல வச்சு தோனியோட பேன்ட மட்டுமல்ல டீமோட பேண்டையே மொத்தமா உருவி சூ ... சரி விடுங்க.
சம்சாரம் அது மின்சாரம் படத்துல " வாழாவெட்டியா இருந்த பொண்ணு  புருஷன் வீட்டுக்கு வாழ போனத நினைச்சு சந்தோஷப்படுறதா இல்ல இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு கோவிச்சுக்குட்டு அப்பா வீட்டுக்கு போனத நினைச்சு வருத்தப்படுறதா " என்று விசு ஒரு வசனம் பேசுவார் . அதே மாதிரி " காம்ன்வெல்த்  கேம்ல இந்தியா 64 பதக்கங்களை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்ததை நினைத்து சந்தோசப்படுவதா ? இல்லை இந்தியா இங்கிலாந்திடம் அடிமையாக இருந்ததை நினைவுபடுத்தும் காமன்வெல்த் போட்டியை நினைத்து வருத்தப்படுவதா ? ...

சும்மா சேனலை மாற்றிக் கொண்டிருந்த போது சொல்லி வைத்தார்ப் போல  எல்லா சீரியல்களிலும் ஹீரோயின்களுக்கு கரு கலைந்து விடுகிறது. பாவம் இந்த பெண்களின் சோகத்தையெல்லாம் பார்க்கும் போது ரெம்ப பீலிங்கா இருக்கு . அதே சமயம்  ஜெயா டி.வி யில்  புதுப்பேட்டை போட்டிருந்தார்கள் . எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படங்களில் அதுவும் ஒன்று . தனுஷின் நடிப்பு , செல்வாவின் மேக்கிங் , யுவனின் இசை இதோடு சேர்ந்து பாலகுமாரனின் சார்ப்பான வசனங்கள் எல்லாமே படத்திற்கு ஹைலைட்ஸ் . சோனியா எபிசோட் , நிறைவை தராத க்ளைமாக்ஸ் என்று சில குறைகள் இருந்தாலும் ஒரு ரவுடியின் வாழ்க்கையை நியாயமாக நம்பும் படி பதிய வைத்ததில் புதுப்பேட்டை எப்பவுமே தங்க வேண்டிய இடம் . தனுஷ் - செல்வா - யுவன் கூட்டணி மீண்டும் வருமா ? ...


சரபம் , ஜிகர்தண்டா இரண்டு படங்களை பற்றியும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருந்தும்  ஜிகர்தண்டா வை மட்டுமே பார்க்க முடிந்தது . முதல் பாதி சான்சே இல்ல . இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறினாலும் மொத்தத்தில் டேஸ்டாகவே இருக்கிறது .  சந்தோஷ் குமார் என்பவர் ஒரு சினிமா செய்தியுடன் ஒரு புகைப்படத்தை  எனக்கு மெயில் செய்திருந்தார் . புகைப்படத்தை பார்த்தவுடன் மிகவும்  ஆச்சர்யமாக இருந்தது . பாரதிராஜாவின் அச்சு அசல் ஜெராக்ஸாக  இருக்கும் அவருடைய தம்பி ஜெயராஜ் கத்துக்குட்டி எனும் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் . நடிகனாக வேண்டுமென்கிற ஆசையில் சென்னைக்கு வந்த அவருடைய அண்ணனின் தாகத்தை தம்பி  தீர்த்து வைக்க வாழ்த்துவோம் ...

மீண்டும் கூடுவோம் ...





8 August 2014

ஜிகர்தண்டா - JIGARTHANDA - டேஸ்டி ...


ஹீரோ சித்தார்த்துக்கும் , தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் ட்விட்டரில் லடாய் , Dark Carnival  என்கிற கொரியன் படத்தின் தழுவல்  தான் படம்  என்று செய்தி பரவ அதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் காட்டமான மறுப்பு இப்படி வருவதற்கு முன்பே ஜிகர்தண்டா கொஞ்சம் சூட்டை கிளப்பியிருந்தது. கொரியன் படத்தை பார்க்காததால் இது அப்பட்டமான தழுவலா என்பதற்கு கருத்து சொல்ல முடியாவிட்டாலும் படத்தின் லைட்டிங் , ஷாட்ஸ் , பி.ஜி எல்லாமே உலக சினிமாக்களை நியாபகப்படுத்தியதை மறுப்பதற்கில்லை ...

காட் ஃபாதர் , ஸ்கேரி ஃபேஸ் மாதிரி ஒரு டான் படத்தை எடுக்க நினைக்கிறார் புதுமுக இயக்குனர் கார்த்திக் ( சித்தார்த் ) . மதுரைக்கென்று  எவ்வளவோ பெருமைகள் இருக்க தற்போதைய தமிழ் சினிமாவின் வழக்கப்படி ஒரு ரியல் டான் சேது ( சிம்ஹா ) வின் கதையை தேடி மதுரை வருகிறார் சித்தார்த் . அவருடைய ஆசை நிறைவேறியதா என்பதை வழக்கமாக சொல்லாமல் முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் வித்தியாசமாக தந்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ் .


படத்தின் உண்மையான ஹீரோ சிம்ஹா தான் . நெரைத்த முடி  , பாக்கு கரை பல் என்று நிஜமான ரவிடியாகவே திரையில் ராவுடி செய்கிறார் . தன் படத்தை கார்ட்டூனாக  போட்டதற்காக  ரிப்போர்டரை  கொளுத்தும் அறிமுக சீனில் டெர்ரர் குறைவாக இருந்தாலும் , கூடவே இருக்கும் கறுப்பாடை ஸ்கெட்ச் போட்டு தூக்குவது , " தோள்ள கை போட்டுட்டா பயம் போயிருச்சுள்ள " என்று  சித்தார்த்தை மிரட்டுவது  , நடிப்பு பயிற்சிக்காக மாஸ்டரிடம்  அடி வாங்கி விட்டு முறைப்பது , கடைசியில்  திருந்தும் போது பாடி லேங்குவேஜில்  நடித்துக் காட்டுவது என படம் முழுவதும் சிம்ம கர்ஜனை செய்கிறார் சிம்ஹா ...

அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது அடி வாங்குவதை தவிர சித்தார்த்திற்கு  பெரிய வேலையில்லை . ஒரு வேளை க்ளைமேக்சை  நெகட்டிவாக முடித்திருந்தால் இவர் கேரக்டருக்கு வெயிட் ஏறியிருக்கும் . சித்தார்த்தை சிம்ஹாவிடம்  கோர்த்து  விடுவதை தவிர லக்ஸ்மி மேனுக்கு சொல்லிக்கொள்ளும்  படி எதுவும் படத்தில் இல்லாவிட்டாலும் அவருடைய  நல்ல ராசி இதிலும் தொடர்கிறது . கோலிவுட்டின் லேட்டஸ்ட் நண்பென்டா கருணாகரன் சின்ன சின்ன கவுன்டர்களில் நிறையவே ஸ்கோர் செய்கிறார் ...

நடிப்பு வாத்தியார் ,  அறுத்தே கொள்ளும் சங்கிலி முருகன் , சீன் படத்தை தேடி தேடி பார்க்கும் அடியாள் , உளவு சொல்லிவிட்டு உயிரை விடும் அடியாள் என சின்ன சின்னகேரக்டர்க்ளில் வருபவர்கள் கூட கவனிக்க வைக்கிறார்கள். சந்தோஷ்  நாராயணின்  இசையில் கண்ணம்மா பாடல் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது . கேம்விக் யு அரியின் ஒளிப்பவதிவு சான்ஷே இல்ல ...


படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே சூடு பிடித்து , அடுத்து என்ன என்று யோசிக்க வைத்து  , அங்கே இங்கே நகரவிடாமல் நம்மை இடைவேளை வரை கட்டிப் போடுகிறது . அதிலும் இன்டர்வெல் ப்ளாக்கிற்கு முன்னால் வரும் ட்விஸ்டுகள் அபாரம் . ஆனால் இடைவேளை முடிந்து பெரிதாக ஏதோ நடக்கும் என்று எதிர்பாத்து அமரும் நமக்கு ஏமாற்றம் தான் . அதன் பிறகு படம் முற்றிலும் வேறு ஜெநெருக்கு சென்று விடுகிறது . டெரர் ரவுடிகள் நடிப்புப் பயிற்சிக்காக செய்யும் காமெடிக் கூத்துக்கள் ரசிக்க வைத்தாலும் அ.குமார் படமெல்லாம் காதில் பூ சுத்தல் ...

இரண்டாம் பாதியில் கொஞ்சம் அப்படியிப்படி படம் அலைந்தாலும் திரும்பவும் க்ளைமேக்சுக்கு  முன் இறுகப் பிடிக்கிறது திரைக்கதை . சித்தர்த்திர்க்கு வைக்கப்பட்ட முடிவு திணிக்கப்பட்ட ஹீரோயிசம் . பீட்சா இயக்குனரின் இரண்டாம் படைப்பு இரண்டாம் பாதியின் தடம் மாற்றத்தால் தர்ஸ்டி யை முழுதாக தணிக்கா விட்டாலும் நிச்சயம் டேஸ்டியாக இருக்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 43   




29 July 2014

தெருக்கூத்து - 1 ...


சினிமா செய்திகள் மட்டுமின்றி வாராவாரம்  நாட்டு நடப்புகளை சும்மா ஒரு அலசு அலசலாம் என்று எனக்கு ஏடாகூடமாக தோன்றியதன் விளைவே இந்த தெருக்கூத்து   . இது வரை என் கிறுக்கல்களை பொறுத்துக்கொண்ட மக்கள் இனிமேலும் எதையும் தாங்கும் இதயத்தோடு அதை தொடர்வார்கள் என்கிற நம்பிக்கையில் ...

ரயில்வே பட்ஜெட்டால் நடுத்தர மக்களுக்கு ஏறியிருந்த உஷ்ணம் பொது பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வருமான வரி சலுகைகளால் தணிந்திருக்கும் என்று நம்பலாம் . புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால் சென்னையிலிருந்து மதுரைக்கு நான்கு மணி நேரத்துக்குள் செல்லலாம் என்கிறார்கள் . எல்லாம் சரி அதுலயும் வித்அவுட்ல போவ முடியுமா ? . கிறிஸ்துவம் எனது மதம் , இந்து எனது கலாச்சாரம் என்று , கிறிஸ்துவ மதம் வந்து 2000 வருடங்கள் தான் ஆகிறது ஆனால் இந்து கலாச்சாரம் இங்கே 5000 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது என்று கோவா துணை முதல் மந்திரி பேசியிருப்பது பிரச்சனையை கிளப்பியிருக்கிறது . நல்ல வேளை  இதை  சொன்னவர் ஒரு கிறிஸ்துவர் , அதுவே இந்துவாக இருந்திருந்தால் ?! ...

28 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை ஜெயித்தது போலவே லார்ட்ஸ் மைதானத்திலும் தோனி தலைமையிலான கிரிக்கெட் அணி டெஸ்ட் மேட்சை ஜெயித்திருக்கிறது . நீண்ட நாட்கள் சோபிக்காமல் இருந்த இஷாந்த் சர்மா-விக்கெட்டுகளை வீழ்த்தி மேன் ஆப் தி மேட்ச் அவார்ட் வாங்கிய  சந்தோஷம் வடிவதற்குள் அவர் இஞ்சூரி காரணமாக அடுத்த மேட்சில் ஆடவில்லை . பின்னிக்கு பதில் அஸ்வினை எடுப்பார்கள் என்று பார்த்தால் பேட்டிங்கை வலுப்படுத்த ரோஹித்தை எடுத்திருக்கிறார்கள் . கடந்த முறை ஏற்பட்ட  4-0 தோல்விக்கு பழி தீர்க்கும்  வகையில் தோனி டீம் சீரியசை  ஜெயிக்க வாழ்த்துவோம்  .  கங்குலி ஜெயித்த பிறகு சட்டையை கழட்டி சுற்றியது போல தோனி பேண்டை  கழட்டி சுத்துவாரோ ? ! ...

போன் பேசிக்கொண்டே ரயில்வே கிராசிங்கை கவனிக்காமல் ஸ்கூல் வேனை ரயிலோடு மோதியதில் அந்த முட்டாள் டிரைவர் உட்பட அனைவரும் பலியான சம்பவம் நெஞ்சை உலுக்கியது . கால் சென்டர்களில் வேலை பார்ப்பவர்களிடமிருந்தே நிர்வாகம் வேலை நேரங்களில் செல்போனை வாங்கி வைத்துக் கொள்ளும்  போது பல உயிர்களுடன் விளையாடும் இது போன்ற சம்பவங்களை தடுக்க  எல்லா டிரைவர்களிடமிருந்தும் பயண நேரங்களில் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டாலென்ன ? .ஆறு வயது சிறுமி ஸ்கூலில் வைத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது . அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரூ மக்கள் நடத்திய அமைதி போராட்டம் மனதை கவர்ந்தது . பள்ளிக்கூடங்களிலேயே இந்த நிலைமை என்றால் பிள்ளைகளை எங்கு தான் அனுப்புவது ? ...

அரசு பேருந்தில் ஊருக்கு சென்ற போது மேல்மருவத்தூரில் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்கள் வண்டி ஊர்ந்து தான் சென்றது . விசாரித்தால் ஆடி அம்மாவாசையை முன்னிட்டு கோவிலில் பயங்கர கூட்டம் என்று சொன்னார்கள்  . கோவிலுக்கு வருபவர்களுக்காக  ஏதாவது நடை மேம்பாலம் கட்டி விட்டால் பக்தர்கள் மட்டுமல்லாமல் பயணிகளும் பிழைப்பார்கள் . நிர்வாகம் கவனிக்குமா ?! . டாஸ்மாக்கை தவிர மற்ற எல்லா அரசு திட்டங்களுக்கும் அம்மா பெயரை வைத்து நன்றாகவே பிராண்டிங் செய்கிறார்கள் . அம்மா உணவகம் , குடிநீரை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரிகளை கருத்தில் கொண்டு அம்மா வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் . மற்றதைப் போலவே அதுவும் வெற்றி பெற வாழ்த்துக்கள் . அம்மான்னா சும்மா இல்லேடா! ...

வேலையில்லா பட்டதாரி என்றவுடன் தனுஷ் நியாபகத்திற்கு வருகிறார் . தான் வளர்த்து விட்ட சிவ கார்த்திகேயனுடன்  அவருக்கு ஏதோ லடாய் என்கிறார்கள் . கொடுக்கல் வாங்கலில் ஏதாவது பிரச்சனையோ ?. இருந்து விட்டுப் போகட்டும் . கூத்தாடிகள் ரெண்டுபட்டாலும் ஊருக்கு கொண்டாட்டம் தானே ! . திரைப்படமாக வி.ஐ.பி யை விட சதுரங்க வேட்டை நன்றாக இருந்தாலும் தனுஷின் மாஸ் , அணிருந்தின் இசை இரண்டுமே வி.ஐ.பி க்கு நல்ல வசூலை கொடுத்திருக்கின்றன . சதுரங்க வேட்டை நன்றாக இருந்தாலும் அதற்கு ஆனந்த விகடன் 52 மார்க்குககளை அள்ளிக்  கொடுத்திருப்பது ஆச்சர்யம் தருகிறது . ஆனால் ராஜா ராணி , கடல் , எதிர்நீச்சல் என்று தங்களால் வாங்கப்பட்ட படங்களுக்கு விஜய் டி.வி விருதுகளை அள்ளிக் கொடுத்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை . விஜய் , சூர்யா இருவரும் வந்திருக்க மேடையில் டி.டி யோ வராத அஜித்துக்கு தல , தல என்று வழிந்தது இருவருக்கும் வயிற்றெரிச்சலை கிளப்பியிருக்கும் . ரஜினிக்கு அடுத்து  சூப்பர் ஸ்டார் பட்டத்த  யாருக்கு கொடுத்தாலென்ன ! தல போல வருமா ?!...

மீண்டும் கூடுவோம் ...



22 July 2014

சதுரங்க வேட்டை - SATHURANGA VETTAI - சலிக்காத ஆட்டம் ...


ண்டமூரி வீரேந்திரநாத் மலையாளத்தில் எழுதி தமிழாக்கம் செய்யப்பட நாவல் பணம் . அதில் கதை நாயகன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் . தன் அம்மாவின் இறுதி சடங்கை செய்யக் கூட பணம் இல்லாத நிலையில் எப்படியாவது பணம் சம்பாதிக்க முடிவு செய்து எல்லா குறுக்கு வழிகளையும் கையாண்டு பெரிய பணக்காரனாகிறான் . அவன் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள் . கடைசியில் வழக்கம் போல பணம் பெரிதல்ல என உணர்ந்து திருந்துகிறான் . இந்த கதையின் நாட்டை எடுத்துக்கொண்டு ஹீரோவாக நட்டை ( நடராஜ் ) வைத்து எம்.எல்.எம் , ஈமு கோழி , ரைஸ் புல்லிங் என நாட்டு நடப்புகளையே திரைக்கதையாக்கி தொய்வில்லாத படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் வினோத் ...

பாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளரான நடராஜ் தமிழில் முதல் படமான நாளை மூலம் பேசப்பட்டாலும் அதன் பிறகு ஹீரோவாக சோபிக்கவில்லை . ப்ரேக் எடுத்து வந்திருந்தாலும் நடிகனாக இந்த படம் அவருக்கு நல்ல திருப்புமுனை. எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஏமாற்றுவது , போலீசிடமே " நான் ஏமாத்தல் அவங்க தான் ஏமாந்தாங்க "என்று மடக்குவது , மரண அடி வாங்கிய பிறகும் பணத்தை பற்றி மூச்சு விடாமல் இருப்பது என காந்தி பாபு ( சத்திய சோதனை ) வாகவே கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார் நட்டு ...


நாயகி இஷாரா நாயர் அமைதியாக வந்து மனதை அள்ளுகிறார் . ஏமாத்துறது தப்பில்லையா சார் என்று அப்பாவியாக கேட்கும் போது அட அட . பாம்புக்கு விஜய் என்று பெயரிட்டு பத்திரமாக பார்த்துக் கொள்ளும் செட்டியார் இளவரசு , தூய தமிழில் பேசும் தாதா , கர்ப்பிணியான நாயரை தூக்கிக்  கொண்டு ஓடும் வில்லனின் அடியாள் திலகா என்று சின்ன சின்ன பாத்திரங்களில் வரும் அனைவரும் கவர்கிறார்கள் . ஒளிப்பதிவு , எடிட்டிங் இரண்டுமே படத்திற்கு பக்க பலங்கள் . பாடல்கள் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லாவிட்டாலும் பி.ஜி பரவாயில்லை ...

தினசரி பத்திரிக்கைகளில் பார்த்த விஷயங்கள் தான் என்றாலும் அதை வெறும் ஹீரோவை ஏற்றி விடும் டெம்பளேட்டுகளாக எடுக்காமல் டீட்டைலிங்காக சொன்ன விதத்தில் தனித்து நிற்கிறார் இயக்குனர் .  ஏமாறுபவர்களின் பேராசை தான் ஏமாற்றுபவர்களுக்கு மூலதனம் என்பதை செவிட்டில் அடித்து சொல்கிறது படம் . அதிலும் குறிப்பாக நகைக் கடை  ஃப்ராட் படத்திற்கு ஹைலைட் ...

" மிருகம் கூட பசிச்சா தான்  சாப்பிடுது ஆனா மனுஷன் " , " சாப்பிடாம பசியோட அலஞ்சிருக்கீங்களா "  போன்ற வசனங்கள் ரொட்டீனாக இருந்தாலும்  " தன் மேல நம்பிக்கையில்லாதவன் தான நாளைய பத்தி யோசிப்பான் " , " ஏமாத்துறவங்க குரு , ஏன்னா அவங்க தான் வாழ்க்கைய கத்துத் தராங்க " மாதிரி  வசனங்கள் பளிச் .  தேவைக்கேற்ப கழட்டி விடப்பட்ட லாஜிக் , எதிர்பார்த்த க்ளைமேக்ஸ் , ஹீரோவின் மேல் பச்சாதாபம் வரவைப்பதற்காக திணிக்கப்பட்ட  ஃப்ளாஷ்பேக் இப்படி சின்ன சின்ன குறைகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் இந்த சதுரங்க வேட்டை எனும் சலிக்காத ஆட்டத்தை நிச்சயம் ரசிக்கலாம் .

ஸ்கோர் கார்ட் : 43 



20 July 2014

வேலையில்லா பட்டதாரி -VIP - வெல்வான் ...


பொதுவாகவே ஒரு படத்தின் ஆடியோ பெரிய ஹிட்டாகி பட ரிலீஸ் தள்ளிப் போனால் நம்மையறியாமலேயே  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும் . அதிலும் ஆல் இந்தியா பிரபலமாகி விட்ட நம்ம ஊரு தனுஷின் 25 வது படம் வி.ஐ.பி என்பது கூடுதல் எதிர்பார்ப்பைக் கொடுத்திருப்பதை படத்திற்கு கிடைத்த ஒப்பனிங்கை வைத்து உறுதி செய்ய முடிகிறது ...

தினமும் தண்டச்சோறு என்று திட்டும் கோபக்கார அப்பா , பாசம் காட்டும் அம்மா , மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும்  தம்பி , பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் அழகான பெண் இவர்களுக்கு மத்தியில் தான் படித்த சிவில் இன்ஜினியரிங் சம்பந்தமான வேலைக்கு மட்டுமே போவேன் என்று நான்கு வருடம் பெட்ரோமாஸ் லைட்டே தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் வேலையில்லா பட்டதாரி ரகுவரன் ( தனுஷ் ) தன் துறையில் எதிரிகளை வென்று எப்படி சாதிக்கிறார் என்பதே வி.ஐ.பி ...

தனுஷ் இது வரை நடித்த 25 இல் இது போன்ற கதைகளில் குறைந்தது பத்துக்கும் மேல் நடித்திருப்பார் . இருப்பினும் நம்மை சோர்வடைய விடாமல்
பார்த்துக் கொள்வதே தனுஷின் திறமை . மயக்கம் என்ன , மரியான் என்று ஹெவி வெயிட் படங்களுக்கு பிறகு இந்த கேசுவல் தனுஷ் அடுத்த வீட்டுப் பையனாக அதிகமாகவே கவர்கிறார் . அம்மா இறந்தவுடன் வீட்டுக்கு வருபவரிடம் அதீத பெர்ஃபார்மன்சை எதிர்பாத்தால் அடக்கி வாசித்து ஏமாற்றி விடுகிறார் . சாமான்யர்களின் கஷ்டத்தை சொல்லும் தனுஷின் லாங் டயலாக் நீண்ட நாட்கள் பேசப்படும்  . சில தோல்விகளுக்கு பிறகு தமிழில் இந்த படம் நிச்சயம் தனுஷிற்கு கமர்சியலாக கை கொடுக்கும் . ஆனால் இந்த மாதிரி படங்களை பண்ண நிறைய வி.ஐ.பி கள்  இருப்பதால் தனுஷும் தொடர்ந்து இதே பாணியில் பயணப்பட்டு விடுவாரோ என்கிற பயமும் லேசாக தொற்றிக்கொள்கிறது ...

நிச்சயமாகி விட்ட தாலோ என்னனவோ அமலா பால் அதிக அழகாக தெரிகிறார் . அந்த பெரிய கண்களை உருட்டி பேசும்  அழகு ஆஸம் . சுரபிக்கு படத்தில் பெரிய வேலை இல்லை . இண்டர்வெலுக்கு பிறகு சீரியசாக போகும் படத்தில் கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்ட விவேக் .உதவியிருக்கிறார்  .  சரண்யா , தனுஷ் என்கிற இரண்டு நேஷனல் அவார்ட் வின்னர்களின் நடிப்புக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் சமுத்திரக்கனி சரண்யா இறந்த சீனில் தனக்கும் நன்றாக நடிக்க வரும் என்று நிரூபிக்கிறார் ...


அனிருத்தின் இசையில் பாடல்கள் படத்திற்கு பெரிய பலம் . ஏ.ஆர்.ஆர் , யுவனுக்கு பிறகு இளைஞர்களை அதிகம் கவர்கிறார் அனிருத் . எஸ்,ஜானகி குரலில் " அம்மா அம்மா " பாடல் கேட்கும் அனைவரையும் அதிகம் முனுமுனுக்க வைக்கும் பாடல் . எல்லா பாடல்களையும் தனுஷ் , அனிருத் பாடியிருப்பதும் , பாடல்களின் பின்னணியை  வைத்தே பி.ஜி யை ஒப்பேற்றியிருப்பதும் குறை . வாலியின் பணியில் பொயட்டு தனுஷ் . வளர வாழ்த்துக்கள் . இயக்குனராகி விட்டதால் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பெரிதாக மிளிரவில்லை ...

தனுஷ் மற்றும் வீட்டில் நடப்பதை வைத்தே முதல் பாதியை தேற்றியிருப்பது புத்திசாலித்தனமான திரைக்கதை . அப்பாவுடன் சண்டை போடும் போது
" எனக்கு மட்டும் வில்லன் பேர் ரகுவரன் , தம்பிக்கு  ஹீரோ பேர் கார்த்திக்  " என்று தனுஷ்  ஆதங்கப்படும் இடங்களில் வசனங்கள் பளிச் . ஆனால் தன்னை இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்க்காததால் தான் வேலை கிடைக்கவில்லை என்று கூறும் தனுஷிற்கு  50000 ரூபாய்க்கு  கால் சென்டரில் வேலை கிடைத்தது எப்படியோ ? டைரக்டருக்குத் தான்  வெளிச்சம் .யாரையும் அடிக்கக்கூடாது என்று அம்மா கையில் கட்டிய காப்பால் தனுஷ் அடி வாங்குகிறார் ஒ.கே . ஆனால் அவரோடு வேலை பார்க்கும் அத்தனை பேரும் ஏதோ காப்பு கட்டியது போல வில்லனின் அடியாட்களிடம் அந்த மொத்து வாங்குவது ஏனோ ? ...

இரண்டாம் பாதியில் முன்னேறத்  துடிக்கும் ஹீரோவிற்கு முட்டுக்கட்டை போடும் வில்லன் எப்படி இருக்க வேண்டும் ?!. அவரோ அமுல் பேபி போல வந்து அடி வாங்குவதோடு சரி .  வில்லனின் அப்பாவாவது ஏதாவது புத்திசாலித்தனமாக செய்வார் என்று பார்தால்  அவர் அதை  விட மொக்கை. ஹீரோ - வில்லன் ஆட்டம்  நன்றாக இருந்திருந்தால் படம் இன்னும் சூடு பிடித்திருக்கும் . படத்தின் நீளம் , கன்டினுட்டி பார்க்க  ஆள் இருந்தாரா இல்லையா என்று நினைக்கும் அளவிற்கு  தாடி , தாடியில்லாமல் என்று மாறி மாறி வரும் தனுஷின் தோற்றம் , வேலை வெட்டியில்லாத ஹீரோ , அம்மா சென்டிமென்ட் , தடைகளை தாண்டி ஜெயிக்கும் ஹீரோ என்று வழக்கமான ஃபார்முலா இப்படி குறைகள் இருந்தாலும் சென்டிமென்ட் , ஆக்சன் , ஹீரோயிசம் என்று எதையுமே ஓவர் டோஸ் ஆக்காமல் பெர்ஃபெக்டாக கொடுத்த விதத்தில் வணிக ரீதியாக இந்த வி.ஐ.பி வெல்வான் ...

ஸ்கோர் கார்ட் : 42 



19 July 2014

சக்ர வியூகம் ...


ன் மனைவியின் சொந்த ஊரான மாயவரத்திற்கு சென்றிருந்தேன். பரபரப்பான  சென்னை வாழ்க்கையிலிருந்து இரண்டு நாட்கள் ப்ரேக் கிடைத்தது  என்பதை விட  அந்த இரண்டு நாட்களையும்  அமைதியான ஊரில் என் மகளுடன் செலவழிக்க முடிந்தததில்  இரட்டிப்பு மகிழ்ச்சி.  அந்த மகிழ்ச்சியான தருணங்கள் என்றுமே மறக்க முடியாதவை. சென்னைக்கு வந்ததிலிருந்து நீண்ட நாள் விடுப்பு முடிந்து முதல் நாள் பள்ளிக்கு செல்லும் மாணவனின் மன நிலையிலிருந்து இன்னும் என்னால் விடுபட முடியவில்லை ...

நாம் தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு நல்லவனாகவோ , கெட்டவனாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் . ஏன் சிலரை அவரவர் கணவன் , மனைவியே கூட வெறுக்கலாம் . ஆனால் எல்லோரும் தத்தம் குழந்தைகள் மீது கொண்டிருக்கும் பாசம் மட்டும் பொய்க்காது . அதிலும் குறிப்பாக குழந்தைகள் சிறுவர் ,  சிறுமியாக மாறும் வயதிற்குட்பட்ட காலம் எந்த ஒரு பெற்றோருக்கும்  பொற்காலம் . அதே நேரம் தாய் - மகன் உறவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தந்தை - மகள் உறவுக்கு கொடுக்கப்படவில்லையோ என்று எனக்கொரு ஆதங்கம் எப்பொழுதுமே உண்டு ...

ஒரு கட்டத்தில் குடும்பம் , உறவுகளை தாண்டி வெளி உலகிற்கு குழந்தைகள்  பழக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்  . அப்படிப்பட்ட சூழலுக்கு பிள்ளையார் சுழி போடுபவை பள்ளிகள் . இந்த காலத்தில் எல்.கே.ஜி யில் சேர்ப்பதற்கே நாம் லாங் க்யூவில் நிற்க வேண்டியது  அவசியம் . அதிலும் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் தான் பிள்ளையை சேர்ப்பேன் என்று அடம் பிடிக்கும் பெற்றோர்களும் இங்கே அதிகம் . மனைவி இரண்டாவது பிரசவத்திற்கு ஊருக்கு சென்றுவிட்டதால் அங்கேயே என் மகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டியதாக போய் விட்டது . ஒரே நாளில் எளிதாக வேலை முடிந்துவிட்ட சந்தோசம் இருந்தாலும் மகளை பிரிந்து ஆறு மாதங்களுக்கும் மேல் இருக்கப் போவதை நினைத்தாலே ஏக்கமும் ,சோகமும் மனதை அப்பிக் கொள்கிறது ...

அவளை கவனிக்காமல் டி .வி பார்த்துக் கொண்டிருந்தால் ஒங்கி முதுகில் அடி வைப்பதும் , சேர்ந்து விளையாடாமல் தூங்கி விட்டால் முகத்தில் தண்ணீரை விட்டு எழுப்புவதும் , வயிற்றில் ஏறி நின்று குதித்து விளையாடுவதுமென எல்லாமே கண் முன் நிற்கின்றன . சென்னையில்  இருக்கும் போது கூட நான் நிறைய நேரங்களில் புத்தகம் , டி.வி , இணையம் , மொபைல் என என் சொந்த வேலைகளில் மூழ்கி  விடுவதுண்டு . அந்த சுயநலத்திற்கு கிடைத்த சாட்டையடியே இந்த தற்காலிக பிரிவு என்று நினைக்கிறேன் . ஊரில் இருந்த  இரண்டு நாட்களும் பரபரப்பில்லாத சூழலில் என்னை முழுவதுமாக அதுல்யா மட்டுமே ஆக்ரமித்திருந்தாள் ...

தனிமை எனக்கு புதிதில்லை . சொல்லப் போனால் திருமண வாழ்க்கை நமது சுதந்திரத்திற்கு விடப்படும் சவால் என்று பேசியவன் நான். இன்றோ பொய்க் கோபம் காட்டவும் , பொய் அழுகையை வாங்கவும் ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் . வெறும் கோபக்காரராகவே அறியப்பட்ட எனது அப்பா கூட என்னை முதல் நாள் பள்ளியில் சேர்த்து விட்டு  இதே போல ஃபீல் பண்ணியிருப்பாரோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது . உடன் பிறந்த நால்வரும் சகோதரிகள் என்பதாலோ என்னவோ எனது அப்பாவிற்கு பெண்கள் என்றாலே அலர்ஜி . சகோதரிகளுடன் பிறக்காததாலோ என்னவோ எனக்கு பெண்கள் மேல் அலர்ஜியுமில்லை , அதீத அன்பும் இருந்ததில்லை .
வயது ஏற ஏற பெண்கள் பற்றிய புரிதல் வர ஆரம்பித்தது . புரிதலுக்கு பின் வரும் அன்பில் என்றுமே அடக்குகின்ற தன்மை இருப்பதில்லை . அப்படிப்பட்ட அன்பே என்றும்  நிலைக்கும் ...

பள்ளி முழுவதும் சிறிய . பெரிய வயதில் நிறைய குழந்தைகள் . சில மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே ஏதோ தண்டனைக்காக உட்கார வைக்கப்படிருக்கிறார்கள் . நான் பத்தாவது படிக்கும் வரை வகுப்பறைக்கு வெளியே உட்கார்ந்த நாட்களே அதிகம் . பாடத்தில் சுட்டி என்றாலும் ஏதாவது சேட்டை செய்து வாத்தியாரால் வெளியில் அனுப்பப்படுவது எனக்கு வாடிக்கை . மரங்களையும் ,  அதிலுள்ள பறவைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கும் போது வகுப்பறைக்குள் ஆசிரியரின் பாடத்தை கவனித்துக் கொண்டிருக்கும் அனைவரும் தண்டனைக்கைதிகள் போலவே எனக்கு காட்சியளிப்பார்கள் . இன்றும் நிச்சயம் தண்டனை அந்த மாணவனுக்கு இல்லை என்று புரிகிறது ...

அலுவலகத்தில் கட்டிய பணத்திற்கு முக்கால் சதவிகிதத்திற்கு மட்டுமே  ரசீது கொடுத்தார்கள் . மீதியை  டொனேஷன் என்றார்கள் . வகுப்பறைக்குள் சென்றவுடன் யாரோ ஒரு குட்டிப் பெண்ணுக்கு அருகில் என் மகள் உட்கார்ந்து கொண்டாள் . என்னைத் தேடுகிறாளோ பார்ப்போம் என்ற நப்பாசையில் அரைமணி நேரம் நான் வெளியில் காத்திருந்தது தான் மிச்சம் . அவள்   தன்  உலகிற்குள்  மூழ்கத் தொடங்கியிருந்தாள் . கொஞ்ச நேரம் கழித்து அவள் என்னை தேட ஆரம்பித்தது தெரிந்ததும் இன்னும் ஒழிந்து கொண்டேன் . கண்களில் கண்ணீர் கொஞ்சமாக எட்டிப்  பார்க்க ஆரம்பித்தவுடன் எனக்கு தாங்காமல் விளையாட்டை முடித்துக் கொண்டேன் . முதல் நாள் என்பதால் அவளை என்னுடன் அனுப்பி  விட்டார்கள் . அடுத்த நாளிலிருந்து பாட்டி கொண்டு வந்து விடுவார்கள் என்று சொல்லி விட்டு அதுல்யாவை தூக்கிக் கொண்டேன் ...

இன்னும் இரண்டொரு நாட்களில் பள்ளிக்கூடம் , பாட்டி வீடு எல்லாமே அவளுக்கு பழகி விடும் . நடந்த சம்பவங்களும் ஞாபகத்தில் இருக்கப் போவதில்லை . ஒரு வகையில் ஞாபக மறதி எவ்வளவு சவுகரியம். நிறைய பேருக்கு எதையும் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்வதே மன நிம்மதி போவதற்கு முக்கிய காரணம் . பிடித்ததோ , இல்லையோ கடமைக்காக  கௌரவர்களின் பக்கம் நின்றார்  பீஷ்மர் . நேற்று என் அப்பா எனக்கு செய்த கடமையை நான் என் மகளுக்கு இன்று செய்திருக்கிறேன் . அவளும் நாளை இதே போல செய்யலாம் . அங்கே சுவற்றின் மேல் சிலந்தி கொஞ்சம் கொஞ்சமாக தனது வலையை பின்னிக்கொண்டு அதனுள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தது . அதைப் பார்த்த போது சொந்த  கடமை என்றாலும் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த சக்ர வியூகத்திற்குள் என் மகளையும் கொண்டு வந்து விட்டு விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி எனக்குள் எட்டிப் பார்த்தது . அவளோ  வழக்கம் போல தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தவள் என் தோள்களின் மேல் தூங்க ஆரம்பித்திருந்தாள் ...





5 July 2014

அரையாண்டு தமிழ் சினிமா 2014 ...


டநத வருடம் போல இந்த  வருடம் இதுவரை தேசிய விருதோடு  பெரிய வெற்றி பெற்ற விஸ்வரூபம் , பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த  பரதேசி போன்ற படங்கள் வராமல் போனாலும் வீரம் , ஜில்லா போன்ற கமர்சியல் வெற்றிகளும் , தெகிடி , முண்டாசுப்பட்டி  போன்ற கவனத்தை ஈர்த்த சிறு பட்ஜெட் படங்களும் ஆறுதல் . ஆரம்பம் வெற்றியை தொடர்ந்து வீரம் வெற்றி மூலம் தனது ஆளுமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அஜித் . கோட் ,சூட் இல்லாமல் வேட்டி , சட்டையில் தல கண்களுக்கு விருந்து . ஆனால் இந்த படத்தோடு சால்ட் - பெப்பர் லுக்குக்கு கொஞ்சம் லீவு விட்டால் தேவல...

ரஜினியை போல என்றும் ட்ரிம்மாக இருக்கும் விஜய்க்கு ஜில்லா பெரிய வெற்றியாக அமையா விட்டாலும் ரசிகர்களின் ஆதரவால் விநியோகஸ்தர்கள் கையை கடிக்கவில்லை . சிறந்த படங்களின் மூலம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு ரம்மி , பண்ணையாரும் பத்மினியும் இரண்டுமே தோல்வியடைந்தது சறுக்கல் . இனிவரும் படங்களில் கதைத் தேர்வில் அதிக கவனம் செலுத்துவார் என்று நம்புவோமாக ...

க்ரைம் பின்னணியை கொண்ட தெகிடி , வாலிபால் விளையாட்டை மையமாக வைத்து வந்த வல்லினம் இரண்டுமே கவனிக்க வைத்த படங்கள் . வாயை மூடி பேசவும் மௌனமாக வந்து போய விட்டது . கேமரா மேன் விஜய் மில்டன் இயக்கத்தில் வந்த கோலி சோடா கமர்சியல்  வெற்றி , விமர்சகர்களின் பாராட்டு இரண்டையுமே பெற்ற நல்ல மிக்ஸிங்  . வடிவேலு எதிர்பார்த்த ரீ  என்ட்ரி தெனாலிராமன் கொடுக்கவில்லை ...

நெடுஞ்சாலை நெடிய பயணமாக தெரிந்தாலும் போரடிக்கவில்லை . அதன் ஹீரோ ஆரி க்கு அதிக வாய்ப்புகள் வந்திருக்கும் என்று நம்பலாம் . அதே போல பிரஷாந்த் நாராயன் , சலீம் இருவரும் தமிழுக்கு நல்ல வரவு . எழுத்தாளர் ராஜுமுருகன் இயக்கத்தில் வந்த குக்கூ மாற்றுத் திறனாளிகளின் காதலையும் , வலியையும் பாசிட்டிவாக சொன்ன விதத்தில் கலர்ஃபுல் ஹைக்கூ . சமுத்திரக்கனி - ஜெயம் ரவி கூட்டணியில் வந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு நிமிர்ந்து நிற்கவில்லை ....

மௌன குரு வில் சீரியசாக வலம் வந்த அருள்நிதி க்கு காமெடிப்படமான  ஒரு கன்னியும்  மூணு களவானிகளும் ஒரு கன்னித்திருட்டு . பாண்டியநாடு வெற்றியை தொடர்ந்து விஷால் பூசிய கமர்சியல் அரிதாரம் நான்  சிகப்பு மனிதன் .  துவரை தமிழ் ஹீரோக்களுக்கு திரை யில் நண்பனாக  இருந்து பல ஹிட்களுக்கு தோள் கொடுத்த  சந்தானம் தன் சொந்த செலவில் சோலோ ஹீரோவாக நடித்த  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்  வாய்ச்சண்டையாகிப் போனது துரதிருஷ்டமே . சசிக்குமார் நடித்த பிரம்மன் எழுதிய தலைவிதியால் தயாரிப்பாளர் நொந்தது தான் மிச்சம் ...

படத்தேர்வில் கவனம் செலுத்தும் கிருஷ்ணாவிற்கு  யாமிருக்க பயமே வின் வெற்றி பெரிய தையிரியத்தை கொடுத்திருக்கும் . டெக்னிக்கல் விஷயங்களுக்காக குறை சொல்லப்பட்டாலும் குழந்தைகளை அதிகம் கவர்ந்தான் கோச்சடையான் . சிவ கார்த்திகேயன் நடிப்பில் மான் கராத்தே மண்ணைக் கவ்வா விட்டாலும் மனதை தொடவில்லை . லிங்குசாமி தயாரிப்பில் மஞ்சப்பை கதைக்காகவும் , ராஜ்கிரண் நடிப்பிற்காகவும் அதிகம் பாராட்டப்ட்டது ...

தமிழ் சினிமாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குறும்பட இயக்குனர்களினன் தர்பாரில் லேட்டஸ்ட் வரவு இயக்குனர் ராம்குமார். வெறும் ஸ்டான்ட் அப் காமெடியாக இல்லாமல் ரசிக்க வைத்த விதத்தில் முன்னுக்கு வந்திருக்கிறது முண்டாசுப்பட்டி . முனீஷ்காந்தாக நடித்த ராமதாஸின் காமெடி ராஜ்ஜியம் வரும் படங்களிலும் தொடர்வதற்கு வாழ்த்துக்கள் . சைவம் விஜய் எடுத்த முதல் தமிழ்படம் . கார்த்திக் கின் மெட்ராஸ்  , விஜய் யின் கத்தி , சூர்யா வின் அஞ்சான் போன்றவை  அடுத்த சில  மாதங்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன . அதே போல பிரபல வலைப்பதிவர் நண்பர் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் திரைக்கு வந்து பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் ... 



18 June 2014

முண்டாசுப்பட்டி - MUNDASUPATTI - மீடியம் காரண்டீட் ...


தியேட்டரில் படம் பார்த்து ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது . இத்தனை நாள் கழித்து போகும் படம் மொக்கையாக இருந்தால் அவ்வளவு  தான் .  நல்ல வேளை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகாமல் முண்டாசுப்பட்டி  காப்பாற்றியது ...

கதை 1947 இல் ஆரம்பித்து 1982 இல் நடக்கிறது . புகைப்படம் எடுத்துக் கொண்டால் செத்து விடுவோம் என்கிற மூட நம்பிக்கையில் இருக்கும் கிராமத்திற்கு செல்லும் புகைப்படக் கலைஞன் ( விஷ்ணு விஷால் ) தன் காதலுக்காக அங்கே எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நகைச்சுவையாக சொல்லி நம்மையும் அவனோடு சேர்த்து முண்டாசுப்பட்டியிலேயே இரண்டரை மணிநேரம் தங்க வைத்து விடுகிறார் புதுமுக இயக்குனர் ராம் குமார் ...


வெண்ணிலா கபடி குழு , நீர்ப்பறவை போன்ற படங்கள் போல சீரியசாக இல்லாமல் கேசுவலாக வந்து ஸ்கோர் செய்கிறார் விஷ்ணு . காதலிக்கு முன்னால் அடி வாங்குவது போல பாவ்லா காட்டி முனீஸ்காந்தை வெளுக்கும் இடம் அருமை . நந்திதா விற்கு அழகான கிராமத்துப் பெண் வேடம் . பேமென்ட் பாக்கியோ  என்னவோ காமெடிப் படத்தில் கூட சோகமாகவே இருக்கிறார் .  ஹீரோ வின் அசிஸ்டெண்டாக வரும் காளிக்கு இந்த படம் நல்ல ப்ரேக் . ரியாக்சனே இல்லாமல் இவர் அடிக்கும் சின்ன சின்ன கமெண்டுகள் ரசிக்க வைக்கின்றன ...

கொஞ்சம் ஓவர் ஆக்ட் போல தெரிந்தாலும் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறார் முனீஸ்காந்தாக வரும் ராமதாஸ் . சொல்லப் போனால் ஸ்லோவாக நகரும் முதல்பாதி இவருடைய கிராமத்து என்ட்ரிக்கு பிறகே சூடு பிடிக்கிறது . ஜமீனாக வரும் ஆனந்தராஜ் , போலி சாமியார் இருவரும் கவர்கிறார்கள் . சீன் ரோல்டனின் இசையில் " ராசா " , " கனவே " பாடல்கள் நல்ல மெலடி . சங்கரின் ஒளிப்பதிவு , லியோ வின் எடிட்டிங் இரண்டும் படத்திற்கு பலம் ...


நாளைய இயக்குனருக்காக எடுத்த குறும்படத்தையே முழு நீள திரைப்படமாக அழகாக வடிவமைத்த இயக்குனரின் திறமை பாராட்டுக்குரியது . வெறும் வசனங்களால் மட்டும் இல்லாமல் பாத்திரங்களின் சீரியசான செயல்களால் நம்மை சிரிக்க வைக்கும் உக்தியில் வெற்றி கண்டிருக்கிறார்கள் . ஸ்டாண்ட் அப் காமெடி , கவுன்டர் காமெடி இரண்டுமே போரடித்துக் கொண்டு வரும் வேளையில் இந்த படம் தமிழுக்கு நல்ல வரவு . ஸ்லோவாக நகரும் முதல் பாதி , ரிப்பீட்டட் சீன்கள் , அனைத்து தரப்பினருக்கும் சென்றடையாத இண்டெலக்ட்சுவல் காமெடிஸ் போன்ற சில குறைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் கொடுத்த காசுக்கு நிச்சயம் முண்டாசுப்பட்டி - மீடியம் காரண்டீட் ...

ஸ்கோர் கார்ட் : 42


11 May 2014

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - VPA - வாய்சண்டை ...


துவரை தமிழ் ஹீரோக்களுக்கு திரையில் நண்பனாக  இருந்து பல ஹிட்களுக்கு தோள் கொடுத்த  சந்தானம் தன் சொந்த செலவில் சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் . வல்லவன் வெல்வானா ? பார்க்கலாம் ...

பூர்வீக சொத்தை விற்பதற்காக  முதன்முறை சொந்த ஊருக்கு செல்கிறான் சக்தி ( சந்தானம் ) . அங்கே பழைய பகைக்காக தன்னைக் கொல்லத் துடிக்கும் ராயர் ( நாகிநேடு ) குடும்பத்திடமே விஷயம் தெரியாமல் தஞ்சமடையும் சக்தி உயிர் பிழைத்தானா என்பதே வ.பு.ஆ ...

உடல் எடையை குறைத்து , டஃப் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் போட்டு ஹீ ரோவாக  தன்னை முன்னிறுத்த  நிறையவே மெனக்கட்டிருக்கிறார் சந்தானம் . " படிச்சவனுக்கு ஐ.டி கம்பனி , படிக்காதவனுக்கு நைட்டி கம்பனி " என்று சந்தானத்தின் ஒன் லைனர்கள் வழக்கமாக ரசிக்க வைத்தாலும் ட்ரெயினில் சந்தானம் - ராஜ் காம்பினேஷனில் வரும் லொள்ளு சபா டைப்  காமெடிகள்  கடிகளாக மாறி நமக்கு  ரத்தம் வர வைக்கின்றன . முதல்பாதியில் நிறைய நேரம் இதில் செலவிட்டதை தவிர்த்திருக்கலாம் ...


ரியா சென் சாயலில் இருக்கும் ஹீரோயின் அஷ்னா எதிர்பார்த்தது போலவே சந்தானத்தை காதலித்து , க்ளைமேக்ஸில்  அழுது புலம்பி தன் குடும்பத்தினரிடமிருந்து அவர் உயிரை காப்பாற்றுகிறார் . செந்தாமரை ஸ்டைல் கிருதா , ஜெயப்ரகாஷ் முகவெட்டுடன் வரும் நாகிநேடு தமிழுக்கு நல்ல வரவு . டாப் டக்கரு பாட்டில் மட்டும் இசையமைப்பாளர் தெரிகிறார் ...

சாங்ஸ்  ,  ஒன் லைனெர் காமெடி இப்படி ஸ்லோவாக நகரும் முதல் பாதி ராயரின் வீட்டிற்குள் சந்தானம் வந்தவுடன் சூடு பிடிக்கிறது . எதிரியாகவே இருந்தாலும் தன் வீட்டுக்குள் இருக்கும் போது விருந்தாளி , அவன் வெளியே வந்தால் தான் கொல்வோம் என்கிற நாகிநேடு குடும்பத்தின்  செண்டிமெண்டும்  , அதை பயன்படுத்தி சந்தானம் தன் உயிரை காப்பாற்ற போடும் திட்டங்களும்  மட்டுமே படத்தை தூக்கி நிறுத்துகின்றன . ஹீரோவானவுடன் சண்டையெல்லாம் போடாமல் தன் சக்திக்கேற்றபடி சந்தானம் நடித்திருப்பது ஆறுதல் ...

எஸ்.எஸ்.ராஜமௌலியின் " மரியாத ரமணா " விலிருந்து மாறாமல் ரீ மேக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் . நண்பன் யாருமில்லாமல் மொத்த காமெடி சுமையையும் சந்தானத்தின் மேலேயே சுமத்தியிருப்பது குறை . மொக்கை காமெடிகளுடன் நகரும் முதல் பாதி , எதிர்பார்த்தது போலவே வரும் அடுத்தடுத்த சீன்கள் போன்றவற்றை தவிர்த்து விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருந்தால் அனைவரின் மனதையும் வென்றிருப்பான் வல்லவன் . மற்றபடி குடும்பத்துடன் பார்ப்பதற்கு நல்லவனாக இருந்தாலும்
வல்லவன் போட்டது வாய்சண்டையே ...

ஸ்கோர் கார்ட் : 40 

20 April 2014

மாற்றம் நம் கையில் - 2014 ELECTION ...


மிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் யாருக்கு ஒட்டு என்கிற குழப்பம் குறிப்பாக முதன்முறை ஒட்டு போடப்போகிற இளைஞர்களுக்கு மட்டுமின்றி பரவலாக நிறைய பேருக்கு  இருக்கும் என்றே நினைக்கிறேன் . ஊடகங்களில் வெளிவரும் கருத்துக் கணிப்புகளும் தமிழக வாக்காளர்களிடையே உள்ள குழப்பத்தை ஊர்ஜிதம் செய்வது போலவே இருக்கின்றன ...

நகரம் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட அடுத்த பிரதமராக யார்  வர வேண்டும் என்கிற கேள்விக்கு நரேந்திர மோடி என்கிற பதிலையே பரவலாக காண முடிகிறது .  அதே சமயம் யாருக்கு ஒட்டு போடுவீர்கள் என்கிற கேள்விக்கு அ .தி.மு.க வே முன்னணி வகிக்கிறது . பொதுவாக தமிழக மக்கள்  மாநில கட்சிகளுக்கே வாக்களிக்க முன்னுரிமை தருவார்கள் என்பது வரலாறாக இருந்தாலும் கிட்டத்தட்ட எல்லா கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் பதவிக்கு மோடியை யே மக்கள் முன்னிறுத்துவது அவர்களின் எண்ண  ஓட்டத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது . அதே சமயம் அந்த தெளிவு ஒட்டு போடும் விஷயத்தில் சிலருக்கு இல்லை என்பதும் புலனாகிறது ...

ஒரு நாள் தெரிந்த நண்பருடன் பேசும் போது காங்கிரஸ் , தி.மு.க இரண்டையும் கடுமையாக சாடினார் . மத்தியில் மோடி தான் பிரதமராக  வேண்டும் என்று உறுதியாக சொன்னார் . ஆனால் அ.தி.மு.க வுக்கே எனது ஒட்டு என்றும்  குழப்பினார் . பா.ஜ .க வுக்கு ஒட்டு போட்டு அது வீணாகி தி.மு.க வந்து விடுமோ என்கிற பயமே  அ.தி.மு.க  பக்கம் சாய காரணம் என்று விளக்கமும் தந்தார் . நான் இதே போல அ.தி.மு.க வுக்கான ஒட்டு வீணாகி அதன் மூலம் தி.மு.க வந்து விட்டால் அப்போது என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்ட பிறகு அவரிடம் கொஞ்சம் தெளிவு பிறந்தது . இந்த உரையாடல் ஒரு சோறு பதம் . நிச்சயம் அவர் அ.தி.மு.க வின் அனுதாபியாக இருந்து அதற்கு தான் எனது ஒட்டு என்று சொல்லியிருந்தால் குழப்பமே இல்லை . ஆனால் மோடி பிரதமராக வருவதற்கு அ.தி.மு.க வுக்கு ஒட்டு என்பது நான் ஏற்கனவே முகநூலில் சொன்னது போல தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்றது ...

பா.ஜ.க போட்டியிடாத தொகுதிகளில் அ.தி.மு.க வுக்கு வாக்களியுங்கள் என்று சோ தனது துக்ளக் தலையங்கத்தில் எழுதியதும் கொஞ்சம் குழப்பத்தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் உக்தி . அதே போல பா.ஜ.க - அ.தி.மு.க இரண்டிற்கும் ரகசிய உடன்பாடு இருப்பது போல ஒரு வதந்தி தி.மு.க , காங்கிரஸ் போன்றவற்றால் பரப்பப்பட்டு வருவதும் , தேர்தலுக்கு பின் நிச்சயம் அ.தி.மு.க - பா.ஜ.க சேர்ந்து விடும் என்பது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் . ஆனால் இது போன்ற ஹேஷ்யங்களின் அடிப்படையில் நிச்சயம் ஒட்டு  போட முடியாது . ஏற்கனவே 13 மாதங்களில் அ.தி.மு.க வால் வாஜ்பாய்  அரசு கவிழ்ந்ததையும் யாரும்  மறந்திருக்கவும்  முடியாது ...

இப்போது மற்றவர்களின் தூண்டுதலினாலோ என்னவோ முதலில் காவிரி பிரச்சனையை வைத்து முதல்வர் பா.ஜ.க வை சாட பிறகு மோடி அ.தி.மு.க வும் , தி.மு.க வும் தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு வழி செய்யாமல் மாறி மாறி பழி வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று சாடினார் . ஜெ பா.ஜ .க வை திடீரென திட்டுவதற்கு சிறுபான்மையினர் ஒட்டு வங்கியோ , நிர்பந்தமோ மட்டும் காரணம் அல்ல . முதலில் நாற்பதும் நமதே என்கிற நினைப்பில் பா.ஜ க அணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டவருக்கு  நிறைய தொகுதிகளில் தி.மு.க வை விட பா.ஜ .க வே தனக்கு சவாலாக இருக்கும் என்கிற தகவல்கள்  வர ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட மாற்றமே இது.
என்ன நடந்தாலும் இந்த கட்சிக்கு தான் ஒட்டு போடுவேன் என்று சொல்லும் சொல்லும் தீவிர அனுதாபிகள் கூடுதலோ குறைவோ எல்லா  கட்சிகளுக்கும் உண்டு . ஆனால் அவர்கள் மட்டும் தேர்தல் முடிவுகளை தீர்மானித்து விட முடியாது .  சூழ்நிலைக்கேற்ப  தங்கள் முடிவுகளை எடுக்கும் நடுநிலையாளர்களும் அரசியல்  மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக இருக்கிறார்கள்...

ஒரு பக்கம் மோடி பிரதமராக வர அ.தி.மு.க வுக்கு ஒட்டு போடுங்கள் என்று அவர்கள் ரகசிய பிரச்சாரம் செய்வதாக செய்திகள் கசிய , இன்னொரு பக்கம் 15 வருடங்களாக மாறி மாறி  மத்தியில் நடைபெற்ற ஆட்சியில் அங்கம் வகித்து விட்டு 10 வருடங்களாக நடந்த அவலங்களுக்கும் தனக்கும்   சம்பந்தம் இல்லாதது போல பால் விலை  ஏறிப் போச்சு , பவர் கட் ஆகிப் போச்சு என்று பிரச்சாரங்களிலும் , விளம்பரங்களிலும் அ.தி.மு.க  வை மட்டும் குறை கூறி கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் தி.மு.க வினர் மக்களின் ஞாபக மறதியின் மேல் நம்பிக்கை வைத்து ஒட்டு கேட்க , மற்றொரு பக்கமோ கை கொடுக்க யாருமின்றி  திரும்ப திரும்ப மோடி மதவாதி என்று சொல்லிக்கொண்டே முஸ்லீம் மதத் தலைவர் புஹாரியிடம் ஆதரவை பெற்றுக் கொண்டு மக்களை முன்னேற்றுவதற்கு வகை செய்யாமல் போலி மதவாதத்தை மட்டுமே நம்பி காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் இந்த தருணத்தில் மத்தியில் நிலையான , வலுவான அரசாங்கம் அமைவதற்கு மோடியின் தலைமையிலான பா.ஜ.க வை அரியணையில் ஏற்றுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் ...

இது இப்பொழுதிருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவேயொழிய நிரந்தரமான முடிவல்ல . ஒரு வேளை நாம் எதிர்பார்த்தது போல தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்படாத பட்சத்தில் அடுத்த தேர்தலில் அதனை ஜனநாயக ரீதியில் மாற்றுவதற்கான அதிகாரம் நம் கையில் இருக்கிறது . ஏனெனில் எப்பொழுதுமே மாற்றம் நம் கையில் ...

14 April 2014

நான் சிகப்பு மனிதன் - NAAN SIGAPPU MANITHAN - அரிதாரம் ...


பாண்டிய நாடு ஹிட் டான மகிழ்ச்சியில்  அடுத்ததிலும் பழி வாங்கும் கதைக்கு ஓகே சொல்லி தனது ஃபேவரட் இயக்குனர் திருவின் இயக்கத்தில் தயாரித்து நடித்திருக்கிறார் விஷால் . படம் பாண்டியநாடு அளவிற்கு இல்லாவிட்டாலும் போரடிக்காமல் இருக்கிறது ...

ஹீரோ இந்திரனுக்கு உணர்ச்சிவசப்பட்டால் தூங்கி விடுகிற நார்கோலெப்சி  எனும் வியாதி .  தூங்கினாலும் அவரால் மற்றவர்கள் பேசுவதை  உணர முடியும் . இந்த வியாதியால் கண்ணெதிரிலேயே காதலி கற்பழிக்கப்பட்டும் கண்களில் கண்ணீரோடு தூங்கிக் கொண்டிருக்கிறார் விஷால் . பின்னர் முகம் தெரியாத அந்த நான்கு பேரையும் தன் நினைவுகளின் உதவி கொண்டு எப்படி பழி வாங்குகிறார் என்பதே கதை ...


புரட்சி தளபதி என்கிற டைட்டிலை விட்டதிலிருந்து உருப்படியான படங்களில் நடித்து விருகிறார் விஷால் . படம் பார்ப்பவர்களையும் தனது நடிப்பால் கேரக்டருடன் சேர்ந்து பயணப்பட வைக்கிறார் . ஒரே ஒரு சண்டைக்காட்சி  அதிலும் க்ளைமேக்ஸில் மட்டும் வருவது பொருத்தம் . விஷாலுடன் லிப்லாக் , குளியல் காட்சி என்று போல்டான கேரக்டரில் லக்ஷ்மி மேனன் .  பக்கத்து வீட்டுப் பெண் போலிருப்பவரை பென்ஸ் காரில் வரும் பெண்ணாக மாற்றுவதற்கு மேக்கப் மேன் மெனக்கட்டிருப்பது தெரிகிறது . விஷாலுடன் ஷகிலா படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ போவது , கல்யாணத்திற்கு  முன்னே கர்ப்பமாவது போன்றவற்றால் கற்பழிக்கப்படும் போது இந்த கேரக்டரின் மேல் ஏற்ப்படவேண்டிய பரிதாபம் மிஸ்ஸாகி விடுகிறது ...

சின்ன சின்ன ஒன் லைனரால் கிச்சு கிச்சு மூட்டுகிறார் ஜெகன் . சரண்யா , ஜெயப்ரகாஷ் இருவரும் இயல்பான நடிப்பால் கவர்கிறார்கள் . சுந்தர் ராமு வின் நடிப்பு பசிக்கு படம் நல்ல தீனி . இனியா இடைவேளைக்கு பின் வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிகிறார் . ஜி.வி யின் இசையில் லவ்லி லேடீஸ் , பெண்ணே பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன . பின்னணி இசை வசனங்களை மீறி வருவதை தவிர்த்திருக்கலாம் ...


விஷாலின் குறைபாட்டை தெளிவாக  புரிய வைத்து அதனையொட்டி பின்னப்பட்ட முதல் பாதி திரைக்கதை சில இடங்களில் நம்மை தூங்க வைத்தாலும் வேகமாகவே போகிறது . கதைப் பின்னணி கஜினி போல இருந்தாலும் காதல் காட்சிகள் முன்னதைப் போல நம்மை கவராமல் போவது குறை . இடைவேளைக்குப் பின் கதை நம்மை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றாலும் இனியா - சுந்தர் ராமு சம்பந்தப்பட்ட காட்சிகள் தையிரியமாக படமாக்கப்பட்டதற்கு பாராட்டுக்கள் ...

திரு தனது முந்தைய  படங்களை போலவே இந்த  படத்திலும் ஒரு மெகா கமர்சியல் வெற்றியை நழுவ விட்டிருக்கிறார் . உணர்ச்சிவசப்பட்டால் தூங்கி விடும் ஹீரோ தேவைப்படும் சில  இடங்களில் தூங்காமலிருக்கும் லாஜிக் சொதப்பல் , வழக்கமான பழி வாங்கும் கதை போன்ற குறைகள் இருந்தாலும் நார்கோலெப்சி  என்னும் புது அரிதாரத்தைப் பூசி நாம் சிகப்பு மனிதனை கவனிக்க வைத்திருக்கிறார்கள் ...

ஸ்கோர் கார்ட் : 41


10 April 2014

ஒரு கன்னியும் மூணு களவானிகளும் - OKMK - கன்னித் திருட்டு ...




மௌன குரு வெற்றிக்குப் பிறகு அவசரப்படாமல் கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் அருள்நிதி ஃபேண்டசி டைப் இயக்குனர் சிம்புதேவனுடன் கை கோர்த்திருக்கும் படம் ஒ.க.மூ.க . முந்தைய படம் பெரிய அளவில் போகாததால் வெற்றிக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் அருள்நிதி க்கு இப்படம் கை கொடுத்ததா ? பார்க்கலாம் ...

காதலியின் திருமணத்தை முறியடித்து அவளை சர்ச்சிலிருந்து தன் சகாக்கள் உதவியுடன் கடத்த திட்டமிடுகிறார் தமிழ் ( அருள்நிதி ) . இந்த சிம்பிளான கதையின் முடிவு ஒரு நிமிட  தாமதத்தால் எப்படி மாறுகிறது என்பதை மூன்று கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு மூன்று  விதமான பின்னணியில் 12பி பட பாணியில் சொல்வதே படம் ...

ஆறடி உயரம் என்றவுடன் ஆக்ஷன் அவதாரமெல்லாம் எடுக்காமல் வித்தியாசமான காமெடி படத்தை தேர்ந்தெடுத்தமைக்கு அருள்நிதி க்கு பாராட்டுக்கள் . பெரிதாய் ரியாக்ஷன் எதுவும் கொடுக்காமல் அண்டர்ப்ளே செய்தாலும் சின்ன சின்ன வசன உச்சரிப்புகளில் ரசிக்க வைக்கிறார் . " எதுக்கு சார் என்ன போய்  கடத்த சொன்னீங்க , போக வர கன்வேயன்ஸ் கொடுத்தா நானே வந்துடப் போறேன் " என்று நாசரிடம் அப்பாவியாய் சொல்லுமிடம் நைஸ் ...


பிந்துமாதவி படம் நெடுக பனியனை போட்டுக்கொண்டு நடித் ... சாரி ஓடியிருக்கிறார் . பெரிய கண்களை உருட்டிக் கொண்டு அவர் ஓடும் போது நமக்கு தான் கொஞ்சம் பி.பி ஏறுகிறது  . " இவரும் பார்ட்னரா " என்று படம் நெடுக பதட்டப்படும் பகவதிபெருமாள் தான் படத்திற்கு பெரிய ப்ளஸ் . அருள்தாஸ் , நரேன் உட்பட  படத்தில் வரும் எல்லா கேரக்டர்களும் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார்கள் . நாசர் , எம்.எஸ்.பாஸ்கர் இருவரையும் இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம் ...

பிரம்மா , நாரதர் என்று நாடக பாணியில்  கதை ஆரம்பித்தாலும் அருள்நிதி கடத்தல் ப்ளானை சொல்ல ஆரம்பிக்கும் போதே டேக் ஆஃப் ஆகி முதல் எபிசோட் வரை படு ஸ்பீடாக போகிறது . அதன் பிறகு அடுத்தடுத்த எபிசோட்கள் என்ன தான் சுவாரசியமாக இருந்தாலும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வதால் வரும் சலிப்பை தவிர்க்க முடியவில்லை . அதே சமயம் ஒரே ஆர்டிஸ்டுகளை வைத்துக்கொண்டு வேறு வேறு விதமாக கதை சொல்வது அவ்வளவு எளிதல்ல . ஆனால் வசனங்களிலும் , காட்சியமைப்புகளிலும் நல்ல வேறுபாடுகள் காட்டி திரைக்கதையை திறம்பட செதுக்கியிருக்கிறார் சிம்புதேவன் . குறிப்பாக நடுநடுவே வரும் அருள்நிதி - ஹர்ஷிதா ரெட்டி காதல் காட்சிகள் ரசிக்க வைக்கும் ஹைக்கூஸ் ...



தர்பூசிணி கடை வைத்திருக்கும் பெண் , கேக்குடன் ஊர்ந்து செல்லும் எறும்புகள் , ஃபோன் பேசும் பெண் என்று சின்ன சின்ன விஷயங்களிலும் கண்டினுட்டி மிஸ் ஆகாமல் உழைத்திருப்பவர்கள்  பெரிய பில்டப்புடன் ஒலிம்பிக்கில் ஓடுவது போல ஃபிளாட்டில் இருந்தே ஓட ஆரம்பிப்பவர்களை அதன் பிறகு வழி மறிப்பவர்களுடன் எல்லாம் சாகவாசமாக பேச வைப்பது பேத்தல் ...

முக்கியமாக மூன்றாவது எபிசோட  வரும் போதே நாம் பொறுமையை  இழக்க தொடங்கி விடுகிறோம் . இயக்குனருக்கும் இந்த எண்ணம் தோன்றியதலோ என்னவோ வி.எஸ்.ராகவனை " இவுங்கள நாம சேத்து வக்கலேனா அடுத்த கதைய ஆரம்பிச்சுருவாங்க " என்று சொல்ல வைத்து சமாளித்திருக்கிறார் . இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருந்தால் ந.கொ ப.கா அளவிற்கு  ஹிட் ஆகியிருக்க வேண்டிய வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார்கள் . படு ஸ்லோவான ப்ரொமோ , " ரன் லோ ரன் " படத்தை தழுவிய  கதை போன்ற சில குறைகள் இருந்தாலும் இரண்டரை மணி நேரம் நல்ல விதத்தில் நம் பொழுதைக் கடத்திய மூணு களவானிகளின் கன்னித் திருட்டை ரசிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 42 

30 March 2014

நெடுஞ்சாலை - NEDUNCHAALAI - நெடும்பயணம் ...


முதல் படத்தில் சில்லுனு  ஒரு காதலை  கொடுத்து விட்டு நீண்ட இடைவெளிக்குப் பின் கரடுமுரடான காதலுடன் நெடுஞ்சாலை யில் பயணப்பட்டிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா . மேக்கிங்கில் முதல் படத்திலிருந்து நிறைய வித்தியாசம் காட்டியிருப்பது தெரிகிறது ...

80 களின் மத்தியில் தேனியில் , ஓடும் லாரிகளிலிருந்து  பொருட்களை லாவகமாக கொள்ளையடிக்கும் தார்ப்பாய் முருகன் ( ஆரி ) , அவன்  காதலி மங்கா ( சிவதா), அவர்கள் காதலுக்கு இடையூறு செய்யும் இன்ஸ்பெக்டர் மாசானி  முத்து ( பிரஷாந்த் நாராயன் ) இவர்களின் கதையை முருகனின் கூட்டாளி ஃப்ளாஷ்பேக்கில் விவரிப்பதே படம் ...


பருத்திவீரன் கார்த்தியை நினைவு படுத்தினாலும் முரட்டு உடம்பு , தாடி , மீசையுடன் அந்த அராக்கு கேரக்டருக்கு நன்றாகவே பொருந்துகிறார் ஆரி . மங்காவை பழி வாங்குவார்  என்று நினைக்கும் போது அவளுக்கு ஆதரவாக கோர்ட்டில் சாட்சி சொல்லி இன்ஸ்பெக்டர் முகத்தில் கரியை பூசுவது க்ளாஸ் . சாந்தமான முகம் , பாவாடை சட்டையுடன் வந்து சிலிர்க்க வைக்கிறார் சிவதா . " ஒரு பொம்பளை தனியா தொழில் பண்ணா என்ன தேவிடியா வா ? " என்று சொல்லி தையிரியமாக இன்ஸ்பெக்டர் காலை உடைக்கும் போது நிமிர்ந்து நிற்கும் இவர் கேரக்டர் ஆரியை காபாற்றுவதற்காக ரூமிற்குள் நிர்வாணமாக நிற்கும் போது சரிந்து விடுகிறது ...

டேனியல் பாலாஜி சாயலில் இருக்கும் கஞ்சா குடுக்கி இன்ஸ்பெக்டரும் , மாட்டு சேகரும் ( சலீம் ) கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தாலும் படம் சோர்வடையாமல் பயணப்பட உதவியிருக்கிறார்கள் . அதிலும் இன்ஸ்பெக்டர் " இதுக்கு முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர எப்படியா சரிக்கட்டின " என்று கேட்க மாட்டு சேகர்" நான் எங்க சாரே , என் பொண்டாட்டி தான் சரிக்கட்டினா " என்று சொல்வதும் ,  மனைவியின் ரூமிலிருந்து வரும் வேலைக்காரன் கூலாக " எதுக்கு அவசரமா கூப்புட்டீங்க " என்று சேகரிடம் கோபப்படுவதும் ரசிக்க வைக்கும் இடங்கள் ...


சத்யாவின் இசையில் பாடல்கள் , பின்னணி இசை இரண்டுமே பலம்  . ஆனால் சில பாடல்கள் தேவையில்லாமல் திணிக்கப்பட்டது போலிருப்பது பலவீனம் . படத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிறைய ஷாட்கள் ஒளிப்பதிவாளர் ராஜவேலின் உழைப்பை காட்டுகின்றன .  கரண்ட் , ஃப்ளாஷ்பேக் என்று மாறி வரும் காட்சிகளில் கிஷோர் கொஞ்சம் கரண்ட் காட்சிகளை கட் செய்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் ...

நெடுஞ்சாலைகளில் நடந்த கொள்ளைகளை மையப்படுத்திய கதைக்களம் , கதாபாத்திரங்களை வைத்து கதையை நகர்த்திய நேர்த்தி , வசனங்கள் , ட்விஸ் டுடன் நகரும் திரைக்கதை போன்றவை படத்தை கவனிக்க வைக்கின்றன ... பெரிய இம்பேக்டை கொடுக்காத ஆரி - மங்கா காதல் , தொய்வைடைய வைக்கும் சில ரிப்பீட்டட் சீன்கள் , ட்விஸ்ட் இருந்தாலும் எதிர்பார்த்தபடி அமையும் க்ளைமேக்ஸ் , நடந்ததை கூட்டாளி சொல்லி முடித்து விட்டு லாரியில் இருந்து இறங்கி நடக்கும் போதே படத்தை முடிக்காமல் கொஞ்சம் இழுத்தது போன்றவை சார்ட் அன்ட் கிரிஸ்ப்பாக இருந்திருக்க வேண்டிய நெடுஞ்சாலை பயணத்தை நெடும்பயணமாக மாற்றுகின்றன ...

ஸ்கோர் கார்ட் : 41


23 March 2014

குக்கூ - CUCKOO - கலர்ஃபுல் ஹைக்கூ ...


த்திரிக்கையாளர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வந்திருக்கும் படம் குக்கூ . இந்த இருவரின் கூட்டணி லோ பட்ஜெட் ரியலிஸ்டிக் மூவிக்கு நல்ல ஒப்பனிங் கிடைக்க காரணமாக அமைந்திருக்கிறது ...

மோதலுக்குப்  பின் காதலிக்கும் இருவர் , காதலியின் அண்ணன் எதிர்ப்பால் பிரிகிறார்கள் . கடைசியில் சேர்ந்தார்களா என்பதே கதை . இந்த சாதாரண காதல் கதையை அசாதாரணமாக மாற்றுவது சம்பந்தப்பட்ட இருவரும் மாற்றுத்திறனாளிகள் என்பதும் , அதை உணர்வுப்பூர்வமாக படமாக்கிய இயக்குனரின் திறமையும் ...

அட்டக்கத்தி தினேஷ் கண் பார்வை இழந்தவராக  அட்டகாசமாக நடித்... சாரி வாழ்ந்திருக்கிறார் . காதலியை பிரிந்த பின்  அவளை தேடி அலையும் போது நம்மையும் சேர்த்து பரிதவிக்க வைக்கும்  அந்த நடிப்பு ஆஸம் . கண் விழிகளை உருட்டிக் கொண்டும்  , விரல்களை பின்னிக் கொண்டும்  தன் உடல் மொழியால் நம்மை கட்டிப்போடும்  மாளவிகா  தமிழுக்கு நல்ல வரவு . காதல் தோல்வியில் துவழும் போதும் , காதலனுடன் சண்டை போடும் போதும் இந்த சுதந்திரக்கொடி நடிப்பால் உயரே பறக்கிறார் . தமிழ் - சுதந்திரக்கொடி இருவருமே நீண்ட காலம் பேசப்படுவார்கள் ...


தினேஷின் நண்பனாக வரும் இளங்கோ , எம்.ஜி.ஆர், சந்திரபாபு, விஜய், அஜித் கெட்  அப்புகளில் வலம் வரும்  நட்சத்திரங்கள் , கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் கதையோடு  ஒன்றி வரும் முருகதாஸ் இவர்கள் எல்லோருமே  படத்திற்கு  பலம் சேர்க்கிறார்கள் . இவர்களோடு சேர்ந்து பார்வையற்றவர்களை இணைக்கும் பாலமாக இசைஞானியின் பாடல்களும் நடித்திருக்கிறது ...

மூர் மார்க்கெட் , ரயில்வே ஸ்டேஷன் என்று பி.கே.வர்மா வின் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது . படத்தின் தன்மைக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் லைட்டிங் அருமை . சந்தோஷ் நாராயண் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டிருக்கிறார் . இந்த படத்திலும் பாடல்கள் , குறிப்பாக  பின்னணி இசை பிரமாதம் . எடிட்டிங் சொதப்பலை சில இடங்களில் காண முடிகிறது ...

தொடுதலின் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது  , ஒரு இடத்திலும் தங்கள் குறைகளை பற்றி புலம்பாமல் தன்னம்பிக்கையோடு வாழ்வது , கேலி, நையாண்டி என்று இருட்டு வாழ்க்கையில் உள்ள வெளிச்சத்தை காட்டுவது இப்படி பார்வையிழந்தவர்களின் உலகத்திற்குள் நம்மை கொண்டு சென்று வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் ...


குடும்பத்துக்காக  உழைக்கிறேன் என்று சொல்லி கர்ப்பமான மனைவியின் வயிற்றை தடவும் அண்ணன் , பணம் கேட்டவுடன் தன் கழுத்தில் இருக்கும் செயினை அவுத்துத்தரும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரம் , உதவி செய்வது போல செய்து ஒரு லட்சத்தை அபேஸ் செய்யும் போலீஸ்காரர் , பழைய துணிகளை தானம் செய்வதை ஃபேஸ் புக்கில் அப்டேட் செய்யத் துடிக்கும் பெண் , எல்லோருக்கும் மார்க் போடும் பிச்சைக்கார தாத்தா , இடியே விழுந்தாலும் அசராத அய்யர் இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் கவனிக்க வைக்கிறது திரைக்கதை ...

சாதாரண கதை , படத்தின் நீளம் , ஸ்லோவான காட்சிகள் போன்ற சில குறைகள் இருந்தாலும் விளிம்பு  நிலை மனிதர்களின் கதை என்றவுடன் சோகத்தை பிழிந்து நம்மை வாட்டி எடுக்காமல் இயல்பான ஆனால் அதே நேரம் உணர்வுப் பூர்வமான படத்தை கொடுத்ததன் மூலம் வட்டியும் முதலுமாக நம்  மனதை அள்ளுகிறார் ராஜுமுருகன் . மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தி இதுவரை வந்த படங்களில் நிச்சயம் தனித்து நிற்கும் இந்த கலர்ஃபுல் ஹைக்கூ ...

ஸ்கோர் கார்ட் : 48 

21 March 2014

பா.ஜ.க கூட்டணி -BJP- வெற்றிக்கான முதல்படி ...

 

2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் ? ! ... என்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு  நான் எழுதிய பதிவில் தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் தே.மு.தி.க , ம.தி.மு.க மற்றும் பா.ம.க ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பதற்கான சூழலையும் , அவசியத்தையும் உணர்த்தியிருந்தேன் . ஒரு வழியாக  ஏகப்பட்ட இழுபறிக்குப் பின் பாரம்பரிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேசிய கட்சியின்

தலைமையில் அப்படியொரு கூட்டணி தமிழகத்தில் 50 வருடங்களுக்கு பிறகு அமைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதோடு  மட்டுமல்லாமல் நல்ல மாற்றத்திற்கு வடிகாலாகவும்  இருக்கும் என்றும் நம்புகிறேன் ... 

 

இப்படியொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணிக்கு வித்திட்டவர் எழுத்தாளர் தமிழருவி மணியன் என்பது குறிப்பிடத்தக்கது . எந்தவொரு குறைந்த பட்ச செயல்திட்டமும் இல்லாமல் வெறும் பதவி ஆசைக்காக ஐந்தாறு கட்சிகள் சேர்த்து அமைத்திருக்கும் கூட்டணி தானே என்று சிலர் சாடினாலும் அரசியல் ரீதியாக இந்த கூட்டணியை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விட முடியாது . இதுவரை அமைந்த அல்லது அமையப்போகிற எந்த கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும் . அதில் அதிகம் ஆராய்ந்தால் எந்தவொரு கூட்டணியும் அமைந்திருக்காது அல்லது அமையாது என்பதே நிதர்சனம்  ... 

 

அ.தி.மு.க விடம்  2 சீட்களுக்காக  கையேந்தி நின்ற கம்யூனிஸ்டுகளுக்கும் , கடைசி வரை அவர்களை என்னத்த கண்ணையா போல குழம்ப வைத்து கழட்டி விட்ட அ.தி.மு.க விற்கும் , பா.ஜ.க விற்கு கல்லெறிந்து பார்த்து விட்டு எதுவும் நடக்காது என்றவுடன் மதசார்பற்ற அணிகளுடனே எங்கள் கூட்டணி  என்று சொல்லி விட்டு முஸ்லீம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி போன்றவற்றுடன் கூட்டு சேர்ந்திருக்கும் தி.மு.க விற்கும் இந்த கூட்டணி பற்றி விமர்சனம் செய்ய எந்தவித தார்மீக உரிமையும் இல்லையென்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்து ... 

 

அ.தி.மு.க வால் தாங்கள் கழுத்தறுக்கப்பட்ட கோபத்தை அங்கே காட்டாமல் பா.ஜ.க வை தோற்கடிப்பதே எங்கள் இலக்கு என்று அறைகூவல் விடுக்கும் கம்யூனிஸ்டுகளைப் பார்க்கும் போது காமெடி கலந்த வேதனையாய் இருக்கிறது . 2009 இல் காங்கிரசை வரவிடாமல் தடுத்ததில் இவர்கள் செய்த முயற்சி பலித்ததைப் போல இம்முறையும் நடக்கக்கடவது... 

 

முதலில் மோடி அலையே இல்லை என்று சொன்ன காங்கிரஸ்காரர்கள் பிறகு பா.ஜ.க அணியின் தொகுதிப் பங்கீட்டில் உள்ள சிக்கலை காட்டி  கேலி செய்கிறார்கள். பா.ஜ.க அணியிலாவது தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில் தான் பிரச்சனை . அதாவது ஒரு தொகுதிக்கு நிறைய பேர் போட்டி போடுகிறார்கள் . ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு சுளையாக 39 தொகுதிகள் இருந்தும் நிற்பதற்கு யாரும் முன் வரவில்லை என்கிற பரிதாப நிலையிலும்

பா.ஜ.க வை எந்த முகத்தை வைத்துக் கொண்டு குற்றம் சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம் ...

 

இப்படி முதலில் பா.ஜ.க தலைமையில் கூட்டணி என்றவுடன் நிறைய பேர் ஏளனம் செய்தார்கள் , பின் இது முரண்பட்ட கூட்டணி என்று எதிர்த்தார்கள் , கடைசியில் கூட்டணி அமைந்து வெற்றியும் பெற்றவுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவோமாக . இந்த கூட்டணி அனைத்து  தொகுதிகளிலும் வெற்றி பெறுமென்று யாரும் சொல்லவில்லை . அதே நேரம் சுத்தமாக தோல்வியை தழுவவும் வாய்ப்பில்லை . கூட்டணி கட்சியிலுள்ளவர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து  ஒற்றுமையாக பணியாற்றினால் குறைந்தது 8 - 12  தொகுதிகளில் வெற்றி பெறவும் , நிறைய தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கவும்  வாய்ப்புள்ளது.

உண்மையில் வெற்றி , தோல்விகளை தாண்டி தி.மு.க , அ.தி.மு.க இரண்டையும் தவிர்த்து தமிழகத்தில் இப்படியொரு கூட்டணி அமைந்ததே வெற்றிக்கான முதல்படி ...


9 March 2014

நிமிர்ந்து நில் - NIMIRNTHU NIL - நடுக்கம் ...


ட்பை முன்னிறுத்தி படங்கள் எடுத்தாலும்  அதில் சமூக அக்கறையையும் சேர்த்தே கொடுப்பவர் சமுத்திரக்கனி . அவர் சமூக அக்கறையை மையப்படுத்தி ஷங்கர் பாணியில் லஞ்ச ஊழலை எதிர்த்து இயக்கியிருக்கும் படம் நிமிர்ந்து நில் . படம் நிமிர்ந்து நின்றதா ? பார்க்கலாம் ...

17 வருடங்கள் குருகுலத்திலேயே  படிப்பை  முடித்து விட்டு ரொம்ப நல்லவனாக  வெளி வரும் அரவிந்த் ( ஜெயம் ரவி ) சமூக அவலங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஊழல் அதிகாரிகளிடம் சிக்கி சின்னா பின்னமாகி பின் அவர்களுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கிறார் . அதில் வெற்றி பெற்றாரா என்பதே படம் ...

ஜெயம் ரவி க்கு சொல்லிக்கொள்ளும் படியான வேடம் . அரவிந்த் , ரெட்டி என இரண்டு கேரக்டர்களிலுமே வித்தியாசம் காட்டி நன்றாக நடித்திருக்கிறார் . இரண்டு ரவி களும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சிகள் ஜெயம் . என்ன தான் குருகுலத்திலேயே படித்திருந்தாலும் ப்ராக்டிகளாக இல்லாததும் , கேரக்டர் அந்நியன்  அம்பி யை நினைவுபடுத்துவதும் நெருடல் . கோர்ட்டில் பேசும் வசனங்கள் சூப்பர் ...


அமலா பால் பாடல் காட்சிகள் தவிர அடக்கி வாசித்திருக்கிறார் . சூரி க்கு படத்தில் குணச்சித்திர வேடம் என்றாலும் சிரிக்கவும் வைக்கிறார் . வழக்கமான சமுத்திரக்கனி யின் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் இருந்தாலும் கு.ஞானசம்பந்தன் மற்றும் படவா கோபி ரசிக்க வைக்கிறார்கள்.
சரத்குமார் இன்டர்வெல் ப்ளாக்கிற்கு மட்டும் உதவியிருக்கிறார் . கோபிநாத் கேரக்டரை சரியானபடி பயன்படுத்தியிருக்கிறார்கள் ...

ஜி.வி யின் இசையில் இரண்டு மெலடிகளும் , கானா பாலாவின் பாடலும் முணுமுணுக்க வைக்கின்றன . சண்டைக்காட்சிகளை நன்றாக எடுத்திருக்கிறார்கள் . எடிட்டிங் நேர்த்தியாக இருக்கிறது ...


ஜெயம் ரவிக்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை பின்னி எடுக்கப்பட்டிருக்கும்  முதல் பாதி , சமுத்திரக்கனி யின் சமூக அக்கறை பளிச்சிடும் சாரப் வசனங்கள் , அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை கொடுக்கும் திரைக்கதை இவையெல்லாம் படத்தில் நிமிர்ந்து நிற்கின்றன ...

முதல் பாதியில் கொடுத்த டெம்போ வை தக்க வைக்க தவறியது , அந்நியன் , ரமணா , சிட்டிசன் என்று பார்த்து பழகிய கதை என்பதோடு படத்தில் வரும் சீன்களும் அந்த படங்களை நினைவு படுத்துவது , ஹீரோ வின் பெயர் அரவிந்த் , அவர் ஆரம்பிக்கும் ஏ.சி.ஐ இயக்கம் என்று நடப்பு சமாச்சாரங்களை
தொட்டிருந்தாலும் கோபிநாத் , மீடியா செய்திகள் என்று பார்ப்பது படமா இல்லை சேனலில் வரும் விவாதமா என்கிற அளவிற்கு சலிப்பை தருவது போன்றவை நிமிர்ந்து நின்று வேகமாக ஓடியிருக்க வேண்டிய படத்தை நடுங்க  வைக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 41 




பதிவு போடலையோ பதிவு ! ...


திவெழுதி ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது . உடல் நிலை சரியில்லையா அல்லது சினிமா பார்ப்பதை விட்டு விட்டீர்களா என்றெல்லாம் கேள்விகள்  வர ஆரம்பித்த பிறகு தான் இந்த இடைவெளியின் நீளம் நன்றாக உறைக்கிறது.
எனக்கு அம்மை போட்டதன் காரணமாக இதே போன்றதொரு இடைவெளி சென்ற வருடம் இதே நேரம் ஏற்பட்டது . அப்பொழுது கூட விஸ்வரூபம் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் வீட்டிலிருப்பவர்கள் திட்டையும் பொருட்படுத்தாமல் எழுத  ஆரம்பித்து விட்டேன் ...

மற்றபடி எழுதாமல் இருப்பதற்கு கணினியில்  கோளாறோ அல்லது இணையத்தில் தடையோ தான் பொதுவாக காரணமாக இருக்கும் . ஆனால் இந்த முறை அப்படி எந்தவித தடையும் இல்லாமல் நான் பதிவு போடாதது  மட்டுமல்ல இணையத்திலேயே உலவாமல் போனதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை .  அதே நேரம் திடீரென ஒரு நாள் ஷஹி மூலம்  மூன்றாம் கோணம் இணைய தள நிறுவனரும் , நண்பருமான அபி கார் விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி வேறெதையும் பற்றி சிந்திக்க விடாமல் சில நாட்கள் என்னை கட்டிப்போட்டதும் உண்மை ...

படங்கள் ரிலீசானவுடன் பார்க்காமல் போனது விமர்சனங்கள் எழுதாததற்கு காரணாமாக இருந்தாலும் அப்படி பார்க்காமல்  போனது ஏனென்று யோசித்தால் அதற்கும் விடையில்லை . ஆனால் ஒரு விஷயம் நமக்கு பிடித்திருந்தாலும் அதையே திரும்ப திரும்ப செய்யும் போது  ஏற்படும் அயர்ச்சி தான் இதற்க்கெல்லாம் அடித்தளமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .  கணவன் மனைவிக்குள் என்ன தான் பிடித்தம் இருந்தாலும்
ஒரு இடைவெளி ஏற்படும் போது பிறக்கும்  சுதந்திரத்தை எல்லாரோலும் உணர முடியும் . பிரிவிற்கு பிறகு இணையும் போது உறவு இன்னும் வலுப்படும் . ஒரு மாத இடைவெளிக்கு ஓவர் பில்ட் அப் கொடுக்கிறேனோ . சரி விடுங்க மேட்டருக்கு வருவோம் ...

கடைசியாக விமர்சனம் எழுதிய படம் ரம்மி . ஒரு வேளை அது தான் அடுத்து படங்களை ரிலீசானவுடன் பார்க்காதற்கு  காரணமோ என்றெல்லாம் யோசித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை . வீரம் , ஜில்லா என்று கமர்சியல் அதிரடியில் ஆரம்பித்த 2014 பிறகு கொஞ்சம்  தொங்க ஆரம்பித்து விட்டது . விஜய் சேதுபதியின் ரம்மி , பண்ணையாரும் பத்மினியும் இரண்டுமே சரியாக போகவில்லை . பார்ட்டி உஷாராக வேண்டிய நேரமிது . கதையை  தேர்ந்தெடுப்பதில்  கவனம் செலுத்தாவிடில் காணாமல் போய்  விடும் அபாயம் உள்ளது ...

இங்க என்ன சொல்லுது , இது கதிர்வேலன் காதல் இரண்டுமே காமெடி என்ற பெயரில் வந்த மொக்கைகள் தான் என்றாலும் இரண்டாவது கொஞ்சம் பரவாயில்லை . சின்ன பட்ஜெட்டில் வந்த  கோலி சோடா பாராட்டுக்களோடு பைசாவையும் அள்ளியது சந்தோசம் . படம் பிடித்திருந்தாலும் எனக்கென்னமோ ரேணிகுண்டாவில் நடித்தது போன்ற பையன்கள் நடித்திருந்தால் படம் இன்னும்  பிக் அப் ஆகியிருக்கும் . ஏனா பசங்க ரொம்ப பால்வாடி யா இருக்காங்க . வல்லினம் , தெகிடி இரண்டுமே நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள் . இன்னும் பார்க்கவில்லை . நிமிர்ந்து நில் ரிலீசாகி இருக்கிறது . பார்த்தவுடன் பதிவு போடலாம் என்றிருக்கிறேன் ...

நாடாளுமன்ற தேர்தலுக்கு தேதியையே அறிவித்தாகி விட்டது . அரசியலை தொடாமல் போனால் நன்றாக இருக்குமா ? . நான் எனது முந்தைய பதிவுகளில் சொன்னது போல எதிர்பார்த்த படி பி.ஜே.பி - ம.தி.மு.க - பா.ம.க - தே.மு.தி.க கூட்டணி அமையவிருப்பது இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல அடுத்த சட்டசபை தேர்தலுக்கும் தி.மு.க , அ.தி.மு.க விற்கு நல்ல மாற்றாக இருக்கும் என நம்பலாம் . கம்யூனிஸ்டுக்களை கழட்டி விட்டதிலிருந்து அ.தி.மு.க அதீத நம்பிக்கையிலிருப்பது தெரிகிறது . தோழர்களுக்கு தோள் கொடுக்க மு.க காத்திருக்கிறார் . அவர்கள் செவி சாய்ப்பார்களா தெரியவில்லை . நான் பல முறை சொன்னது போல காங்கிரஸ் தனித்து விடப்பட்டிருக்கிறது . இப்படி பல்முனை போட்டி நடப்பது குழப்பத்தை கொடுத்தாலும் அந்தந்த கட்சிகளின் பலத்தை நிரூபிப்பதற்கு ஏதுவாக இருக்கும் ...

வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்கும் வழக்கம்  இருந்தாலும் நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதையும் , மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டுமென்பதையும் மறக்காமல்மக்கள்  வாக்களிப்பார்கள் என்று நம்பலாம் . ஏனெனில் டில்லியில் ஆம் ஆத்மி அடித்த 48 நாள் கூத்தை யாராவது மறக்க முடியுமா ? சொன்ன வாக்குறுதிகளை  நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தவுடன் அரவிந்த் அடித்த அந்தர் பல்டி பழுத்த அரசியல்வாதிகளையும் மிஞ்சி விட்டது . மத்தியிலும் இது போன்றதொரு நிலை ஏற்படாமல் இருக்க மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும் ...

2 February 2014

ரம்மி - RUMMY - ராங் டிக் ...


ரிசையாக வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, தனிப்பட்ட முறையில் பரிச்சயமாயிருந்த இனிகோ பிரபாகர் இந்த இருவருமே ரம்மி யின் மேல் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்கள் .  இவர்கள் ஏமாற்றவில்லையென்றாலும் இயக்குனர் பாலகிருஷ்ணன் சுவாரசியமில்லாத ரம்மி யை ஆடி நம்மை படுத்தி விட்டார் ...

87 இல் கதை நடக்கிறது . விடுதியில் தங்கி கல்லூரியில் ஒன்றாக படிக்கும் சக்தி ( இனிகோ ) , ஜோசப் ( விஜய் சேதுபதி ) இருவருக்கும் அந்த ஊர் பெண்களிடம் ( காயத்ரி ,ஐஸ்வர்யா ) ஏற்படும் காதலும் , அதனால் வரும் பிரச்சனைகளும் என்கிற அதரபழசான ஒன்லைன் தான் கதை . 80 களின் பின்னணியில் கதை நடக்கிறது என்பதற்காக 80 களிலேயே பார்த்து புளித்துப்போன திரைக்கதையையேவா எடுக்க வேண்டும் ?! ...

அழகர் சாமியின் குதிரை , சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் முக்கியமான கதா பாத்திரங்களில் வந்த இனிகோ விற்கு இந்த படத்தில் முழு நீள கதாநாயகன் வேடம் . சில க்ளோஸ் அப் காட்சிகளில் நடிப்பில் நெருடினாலும் மொத்தத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இனிகோ . நிறைய வாய்ப்புகள் கிடைத்து மேலும் வளர வாழ்த்துக்கள் ...


முன்னதாகவே புக் செய்யப்பட்டு விட்டதால் வேறு  எந்த ஒரு நடிகரும் செய்திருக்கக் கூடிய சாதாரண வேடத்தில் விஜய் சேதுபதி . பார்ட்டியை கல்லூரி மாணவன் என்று கற்பூரம் அனைத்து சத்தியம் செய்தாலும் நம்ப முடியவில்லை . வெகுஜன நாயகன்  ( ஓசியா டைட்டில் கொடுத்தாச்சு ) விஜய் சேதுபதிக்கு இந்த படம் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவும் ...

வடிவேல் பாணியில் வளம் வரும் சூரி கல்லூரியில் செய்யும் சில சேட்டைகளை ரசிக்கலாம் . ஆனால்  அவர் சீரியசாக நட்பை பற்றி இனிகோவிடம் பேசும் போது சிரிப்பு வருகிறது . இனிகோ விற்கு ஜோடியாக சுமார் மூஞ்சி காயத்ரியும் , விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரொம்ப சுமார் மூஞ்சி ஐஸ்வர்யா வும் ( பேரையாவது மாத்தலாம் ) கிராமத்து பெண்கள் வேடத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள் ...


யதார்த்தமான கதாபாத்திரங்கள் , இடைவேளைக்கு பிறகு  கொஞ்சம் சூடு பிடிக்கும் திரைக்கதை , மலரும் நினைவுகளை கொடுக்கும் டூரிங் டாக்கீஸ் காட்சிகள் , லொக்கேஷன் , ஒளிப்பதிவு போன்றவை ரம்மியை கவனிக்க வைக்கின்றன . இமானின் பின்னணி இசை எஸ்.ஏ ராஜ்குமாரை நினைவு படுத்தினாலும் பாடல்கள் படத்திற்கு பலம் மட்டுமல்ல ஆறுதலும் கூட ...

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று முடிவெடுக்கும் போதே அவரவர் மனதில் ஒரு ஓன்லைன் உதயமாகும் . ஆனால் பல வருடங்களுக்கு பிறகு இயக்குனராகும் வாய்ப்பு கிடைக்கும் போது காலத்திற்கேற்றார்ப் போல கதை , திரைக்கதை யை செப்பனிடா விட்டால் கையை கடித்து விடும் . அந்த வரிசையில் இயக்குனருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ரம்மி - ராங் டிக் ...

ஸ்கோர் கார்ட் : 38


Related Posts Plugin for WordPress, Blogger...